இந்து ராஷ்டிரத்தின் சோதனைக்கூடமாக மாறியுள்ள உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது. காஸியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலில் தாகத்துக்கு தண்ணீர் குடிப்பதற்காக நுழைந்த ஒரு முசுலீம் சிறுவனை அடித்து துன்புறுத்தி அதை வீடியோவாக சமூக ஊடகங்களில் குதூகலத்துடன் பகிர்ந்துள்ளது இந்துத்துவ வெறி கும்பல்.
2021 மார்ச் 12-ம் தேதி நடந்துள்ள இந்த கொடூர நிகழ்வு குறித்த வீடியோவில், இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையில், தான் செய்த ‘குற்றம்’ என்ன என்பதைக்கூட அறியாமல் விழிக்கும் அந்த சிறுவனை, அடித்து கீழே தள்ளி மிதிக்கிறான் ஒருவன். இந்து ஏக்தா சங்கம் என பெயரிடப்பட்ட இந்துத்துவ வெறுப்புக் குற்றங்களை நடைமுறைப்படுத்தும் ஓர் அமைப்பைச் சேர்ந்த சிருங்கி யாதவ் என்பனின் டிவிட்டர் கணக்கில் பெருமிதத்தோடு, இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலானது.
படிக்க :
♦ காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !
♦ கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !
ஒரு சிறுவனை தாக்குவதை ‘வீரச்செயல்’ என குறிப்பிட்டு பகிர்ந்துள்ள சிருங்கி யாதவ், சிறுவனின் பிறப்புறுப்பில் தாக்குவதை, ‘ஒரு முசுலீம் ஆண், “ஆண்மை நீக்கம்” செய்யப்பட்டான்’ எனக் கூறியுள்ளதாக த வயர் இணையதளம் கூறுகிறது. இதே நபர், மற்றொரு வீடியோ ஒன்றில் , கத்தி முனையில் ஒரு முசுலீம் சிறுவனிடம் ‘இந்துக்களின் வாழ்வை அழிக்க வங்கதேசத்திலிருந்து வந்தவன்’ எனக் கூறுவதையும் இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.
#Islamophobia Kiya Ab Pani Ke Liye Bhi Dharam Dekha Jaega. Kiya Yahi New India @PMOIndia
According to a instagram acount (hinduektasanghh), A muslim kid was mercilessly beaten for drinking water in a temple @ndtvindia @asadowaisi @ghaziabadpolice @Uppolice pic.twitter.com/J68leKgES3— Shakil Shah (@ShakilS26963172) March 12, 2021
வெறுப்பை பரப்பும் இந்த வீடியோவுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், இந்த கணக்கு நீக்கப்பட்டிருக்கிறது. உத்தரபிரதேச போலீசிடம் நடவடிக்கை கோரி பலரும் முறையிட்ட நிலையில், சிருங்கி யாதவ் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
மீண்டும் தலை தூக்கியிருக்கும் வெறுப்பு குற்றங்களில் சமீபத்திய ஒன்றாக இது கடந்துபோகக்கூடும். ஆனால், இதுபோன்ற வெறுப்பு குற்றங்களின் பின்னணியை, தொடர்புடைய வன்முறையாளர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வறிந்து கூறியுள்ளது த வயர் இணையதளம்.
நீக்கப்பட்ட சிருங்கி யாதவின் கணக்கில் முசுலீம் சமூகத்துக்கு எதிரான குற்றங்கள் புகழ்ந்து பகிரப்பட்டுள்ளன. ஒரு பதிவில் ‘எதிரிகளின் ரத்த ஆறு’ என குறிப்பிடப்பட்டு நரசிங் ஆனந்த் சரஸ்வதி, முசுலீம்கள் தீவிரவாதிகள், இந்து ராஷ்டிரம் வாழ்க என்ற ஹேஷ்டேக்-உடன் பகிரப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், விருப்பமுள்ள இந்து சகோதரர்களுக்கு ஆயுதமளிக்க தயார் என அறைகூவல் விடுக்கிறார். ‘நாம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடக்கூட முடியவில்லை. முசுலீம்கள் உயிரோடு எரிக்கப்படும்வரை இது நடக்காது’ என அந்தப் பதிவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் த வயர் கூறுகிறது.

முசுலீம்களுக்கு எதிரான கொலை குற்றத்தை தூண்டும் இத்தகைய பதிவுகளோடு, நரசிங் ஆனந்த் சரஸ்வதி என்ற மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கொலைவெறி சாமியார் ஒருவரின் படங்கள், வீடியோ பதிவுகள் போன்றவற்றையும் சிருங்கி பகிர்ந்துள்ளான். சிருங்கி போன்ற இந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதில் நரசிங் ஆனந்த் சரஸ்வதி போன்றோரின் பங்கு முக்கியமானது. முசுலீம்களுக்கு எதிரான பல கலவரங்களுக்கு பின்னணியாக இருந்த கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களுடன் நரசிங் ஆனந்த சரஸ்வதி நெருக்கமாக உள்ளவர்.
கோயிலுக்கு நுழைந்த காரணத்தால் சிறுவன் அடித்து துன்புறுத்தப்பட்ட அதே கோயில், நரசிங் ஆனந்த சரஸ்வதி தலைமை பூசாரியாக உள்ளார். முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில், பல மதக் கலவரங்களை உருவாக்கியதில் இழிபுகழ் பெற்றது. இந்த நபர்தான் சிருங்கி போன்ற இந்துத்துவ அடியாட்களால் குரு என விளிக்கப்படுகிறார்.

டெல்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரங்கேறிய கலவரத்தில் முசுலீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குத் தொடர்ச்சியாக நரசிங் ஆனந்த் அழைப்பு விடுத்தை த வயர் உள்ளிட்ட இணையதளங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன. நரசிங் ஆனந்தின் அழைப்பை ஏற்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அந்த இணையதளம் ஆதாரத்தோடு கூறுகிறது.
டிசம்பர் 25, 2019-ம் ஆண்டு ஜந்தர் மந்தரின் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் முசுலீம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுங்கள் என நரசிங் ஆனந்த அழைப்பு விடுக்கிறார். இந்த வீடியோவை டெல்லி கலவரத்தில் தொடர்புடைய அங்கித் திவாரி என்ற ஆர். எஸ். எஸ்-ஐச் சேர்ந்த நபர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதுபோல, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளிலும் கல் வீசி எறிந்த வைரலான வீடியோ ஒன்றிலும் உள்ள ராகினி திவாரி, தனது குரு என நரசிங் ஆனந்தை குறிப்பிடுகிறார்.
வெறுப்பு கக்கும் இந்த நரசிங் ஆனந்தின் பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் பரவி உள்ளன. மேலும் நியூஸ் நேஷன், சுதர்ஷன் டிவி, ஆஜ் தக் போன்ற இந்துத்துவ ஆதரவு ஊடகங்களில் தொடர்ச்சியாக இவருடைய வெறுப்பு பேச்சுகள் ‘விவாதம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகின்றன. இவருடைய பேச்சுக்களை வெட்டி, ஒட்டி பல லட்சம் பேருக்கு பரப்பும் பணியை பல இந்துத்துவ வெறும் குழுக்கள் யூ ட்யூப்பில் செய்து வருகின்றன.
பாஜகவால் பதவியில் அமரவைக்கப்பட்ட அப்துல்கலாமைக் கூட இந்த நபர் ஜிகாதிகள் என்கிறார். அனைத்து முசுலீம்களும் இவருக்கு ஜிகாதிகள் தானாம். சமீபத்திய நியூஸ் ஸ்டேட் டிவி ஒன்றின் விவாத்தின் போது ‘இறைதூதர் முகமதுவை முதல் முசுலீம் தீவிரவாதி’ எனக் குறிப்பிட்டு இந்த நபர் பேசியதாக த வயர் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
டெல்லி கலவரத்தின் பின்னணியை த வயர் இணையதளம் வெளிக்கொண்டுவந்தபோது, நரசிங் ஆனந்த், த வயர் பணியாளர்களை ஜிகாதிகள் எனவும் வளைகுடா நாடுகளால் இணையதளத்துக்கு நிதி கிடைப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதுபோன்ற முசுலீம்களுக்கு எதிரான இனப் படுகொலையை வெறுப்பை கக்கும் நபர்களை ஒளிபரப்பக்கூடாது என மத்திய தகவல் தொழிற்நுட்ப அமைச்சகத்துக்கும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகத்துக்கும் நீதி மற்றும் அமைதிக்காக குடிமக்கள் அமைப்பு எழுதியிருந்தது.
படிக்க :
♦ உபி கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
♦ ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்
ஆனால், நரசிங் ஆனந்த், சிருங்கி யாதவ் போன்றோரின் வெறுப்பு குற்றங்களால் ஆட்சிக்கு வந்திருக்கும் மத்தியில் ஆளும் அரசு அவற்றுக்கு எதிரான ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கப்போவதில்லை. இந்து ராஷ்டிரத்தின் சோதனைக் கூடமாக பாஜக ஏக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து மாறவில்லை. அதற்கான களம் பல பத்தாண்டுகளாக தயார் செய்யப்பட்டு வந்தது.
இப்போது, தங்களுடைய காலம் வந்தபின் இந்துத்துவ இனப் படுகொலையாளர்கள் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நிச்சயம், இன்னொரு தேர்தல் வெற்றி, ஆழமாக வேரூன்றி இருக்கும் இவர்களை அகற்றிவிடாது.
அனிதா
நன்றி : The Wire
வெலக்கமாறு சரஸ்வதி என்னும் இவனை கூர்ந்து கவனித்தால் அமித்ஷா வின் ரத்த உறவு போன்ற தோற்றத்தில் உள்ளான்!!!