PP Letter head07.01.2022
ஆன்லைன் சூதாட்டம் :
கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்
பத்திரிகை செய்தி
ன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த திருவான்மியூர் இரயில்வே நிலையத்தில் டிக்கெட் விற்பனையாளராக இருக்கும் டீக்காரம் என்ற ஊழியர் பணிபுரியும் இடத்தில் பணத்தை திருடி விட்டு கொள்ளை போனதாக நடித்து மனைவியுடன் சிறைக்கு சென்றுள்ளார்.
அவருடைய குழந்தைகள் மூவரும் தற்போது பரிதாப நிலையில் நிற்கின்றனர்.
தனியார் வங்கியில் வருடம் ரூ.38 இலட்சம் சம்பாதிக்கக் கூடிய  ஒருவர் ரூ.75 இலட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனைவிக்கு விஷயம் தெரிந்தவுடன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார்.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசியிலும் தொலைக்காட்சிகளிலும் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் சம்பாதிக்க வைப்பது. அவர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான பிறகு பணத்தை இழந்தாலும் பரவாயில்லை என்று விளையாடும் அளவிற்கு அடிமைகளாக தள்ளப்படுகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதால்  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சட்டம் பிறப்பித்து அதன்மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. அதற்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. தனிமனித உரிமை என இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்படுகின்ற அடிப்படை உரிமையை, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பறித்துள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து, அந்த தடைச் சட்டத்தை ரத்து செய்தது.
உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட மேற்கண்ட தனிமனித உரிமை, மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களுக்கு ஒருபோதும் துணைக்கு வருவதில்லை. ஆக இந்த ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் ஏகாதிபத்திய நுகர்வு பண்பாடு, அரசு, நீதித்துறை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதே.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மனிதனை அடிமையாக்கி தன்னையே விற்பனைப் பொருளாக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டி உழைக்கும் மக்களின் பண்பாட்டை மக்களிடம் கொண்டு செல்வதில் முன்னெப்போதையும் விட தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
தோழமையுடன்,

தோழர் அமிர்தா,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க