பத்திரிகை செய்தி

09.03.2022

இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லையில் இருப்பது தமிழ்நாடா? அதற்குள் ஒரு தனி நாடா?
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் சிறப்பு சட்டம் இயற்று !

என்ற தலைப்பின் கீழ் 09.03.2022 புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில் நெல்லை செய்துங்கநல்லூர், பெருமாள்புரம், பாளையங்கோட்டை காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. கடைசியாக வண்ணாரப்பேட்டையில் ஐனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் சார்பாக ஐனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு வரும்போது போலீசுத்துறை “மக்கள் அதிகாரம் ” தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதை மீறி ஆர்ப்பாட்ட இடத்தில் நின்றால் கூட கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளது போலீசு.

தமிழன் கட்டிய கோயிலில் தமிழனும், தமிழும் போக முடியவில்லை. அதை எதிர்த்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை தடுத்து மக்கள் அதிகாரம் தோழர்களையும் மற்றும் இதர ஜனநாயக அமைப்பு தோழர்களையும் கைது செய்தது.

தில்லை என்பது மக்கள் சொத்து !
தீட்சத பார்ப்பனக் கும்பலை கைது செய் ! கைது செய் !
ஆடை என்பது எங்கள் உரிமை !
பார்ப்பனியத்தை விரட்ட பெரியாரின் தடியை கையிலெடு! என தோழர்கள் முழங்கினர்.

தி..மு.க திராவிட மாடல் தான் இந்த அடக்குமுறை ! திமுக பெரியார் மண்! சமூக நீதி! என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது. ஆனால் தில்லைக் கோயிலில் தமிழர்கள் போனால் தீட்சித பார்ப்பன ரவுடி கும்பல் அடிக்கிறது.

தில்லைக் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடக்குமுறை செய்கிறது போலீசுத்துறை. நெல்லையில் BJP, RSS கும்பலுக்கு எதிராக பேசினால் தடை. இதுதான் அறிவிக்க படாத சட்டமாக இருக்கிறது . உழைக்கும் மக்களுக்கு எதிராக “காவி-கார்ப்பரேட்” பாசிச கும்பலுக்கு எதிராக ஐனநாயக அமைப்புகள், விவாசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து களத்தில் முறியடிப்போம்!

தோழமையுடன்
செ.செல்வம்
நெல்லை மண்டல செயலாளர்
மக்கள் அதிகாரம்
தொடர்பு : 9385353605

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க