பெட்ரோல் விலை உயர்வை குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரை கடுமையாக மிரட்டியுள்ளார் பாபா ராம்தேவ்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜகவிற்கு ஆதாரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பெட்ரோல் விலையை ரூ.40க்கு கொண்டுவரும் கட்சிக்குதான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார் கார்ப்பரேட் சாமியார் ராம்தாவ்.
அதை தொடர்ந்து 2018-ல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணக்காரர்களுக்கு வரிவிதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். “அரசு, வரியை சற்று குறைத்து எனக்கு பெட்ரோல் விற்பனைக்கு அனுமதி வழங்கினால் நான் இந்தியாவிற்கு பெட்ரோல், டீசலை லிட்டருக்கு 35-45 ரூபாய்க்கு தர முடியும். மக்களின் பாக்கெட் காலியாகி வருவதால் பெட்ரோல், டீசலை ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி என்ற 28 சதவீத வரியின்கீழ் கொண்டுவரக்கூடாது.” பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க அரசு தயக்கம் காட்டுவது குறித்து கேள்வியெழுப்பிய ராம்தேவ், “வருவாய் இழப்பு ஏற்பட்டால் இந்தியா செயல்படுவதை நிறுத்தாது, பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பதன்மூலம் இழப்பை மீட்டெடுக்க முடியும்” என்றார்.
படிக்க :
‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !
மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?
தற்போது 2022 மார்ச் 31 அன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டு கடந்த ஒன்பது நாட்களில் மொத்த விலையும் லிட்டருக்கு ரூ.5.60 உயர்ந்துள்ளது. இதைபற்றி, அரியானா மாநிலம் கர்னாலில் நடந்த நிகழ்ச்சியின்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.40-க்கும் சமையல் எரிவாயு லிட்டருக்கு ரூ.300-க்கும் வழங்குவதை உறுதி செய்யும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராம்தேவ் கூறிய பழைய கருத்தை மீண்டும் கூறி கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர், தற்போதைய ஏரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலையை பற்றி ராம்தேவிடம் கருத்து கேட்டார்.

இந்த கேள்விக்கு கோவமடைந்த ராம்தேவ், பத்திரிகையாளர் கேட்டதற்கு பதிலளிக்காமல், “ஆம், நான் சொன்னேன்; நீங்கள் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்காதீர்கள்; உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க நான் என்ன உங்களின் தேகேதாரா (ஒப்பந்ததாரரா)?” என்றார். பத்திரிகையாளர் மீண்டும் அதே கேள்வியை கேட்டதும், “சும்மா வாயை மூடு; திரும்பவும் இதே கேள்வியை கேட்டால் நல்ல இருக்காது பாத்துக்கோ; நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இப்படி பேசக்கூடாது” என்று கடுமையாக மிரட்டியுள்ளார்.
“எரிபொருள் விலை குறைந்தால் அரசுக்கு வரி கிடைக்காது; பிறகு எப்படி நாட்டை நிர்வகிப்பார்கள், சம்பளம் கொடுப்பார்கள், சாலைகள் அமைப்பார்கள்? ஆம் பணவீக்கம் குறைய வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பணவீக்கத்தை குறைக்க மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் கூட அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை வேலை செய்கிறேன்” என்று ராம்தேவ் கூறினார்.
காவிகளையும் கார்ப்பரேடுக்களையும் கேள்விக்கேட்பவர்கள் விமர்சிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள்; தேசத்துரோகிகள்; நகர்புற நக்சல்கள் என்ற தொனியில் பேசியுள்ளார் காவிகளின் கைக்கூலியான ராம்தேவ்.
மக்கள் வரி பணத்தை பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகையாகவும் வாராக் கடனாகவும் வாரியிறைத்து வருகிறது. இந்நிலையில் மக்களை உழைத்து அரசுக்கு மேலும் மேலும் வரி பணத்தை வாரியிறைக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும் என்று மக்களை வெளிப்படையாகவே மிரட்டுகிறார் பாசிச மோடி அரசின் கைக்கூலி ராம்தேவ்.
பாசிச மோடி அரசின் ஆதரவுடன் பதஞ்சலி நிறுவனம் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டிவரும் பாபா ராம்தேவ் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து ஹேர்கட் என்ற பெயரில் வாராக்கடன் பட்டியலில் தப்பித்துக்கொள்வதற்கே வாங்கிய காசுக்குமேல் கூவுகிறார்.

சந்துரு
செய்தி ஆதாரம் : ndtv, indianexpress

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க