ளர்ச்சி என்ற முழக்கத்தை பிரச்சாரம் செய்து, குஜாராத் மாடல் வளர்ச்சியை முன்னிறுத்தி, 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. அடுத்து நடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போதும் பா.ஜ.க வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. மோடி பொறுப்பேற்று கொண்ட 8 ஆண்டு காலம் நிறைவை ஒட்டி, நாடு முழுவதும் சாதனைகளை பட்டியலிட்டு பா.ஜ.க.வினரும், ஊடகங்களும் தொடர்ச்சியாக பிராச்சாரம் செய்து வருகின்றனர்.
000
5 டிரில்லியன் பொருளாதரத்தை எட்டி பிடிப்பதாக கூறியது மோடி அரசு; அதனை நிறைவேற்றியதா? இந்த ஆண்டு ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மைநிலை என்ன? 2019-ம் நிதியாண்டில் ரூ.147.36 இலட்சம் கோடி, 2020-ம் நிதி ஆண்டில் ரூ.135.58 இலட்சம் கோடி. 2021-ம் நிதி ஆண்டில் ரூ.145.16 இலட்சம் கோடி ஆகும். சென்ற ஆண்டு 2019-ல் ஜி.டி.பி வளர்ச்சி மைனஸ் -6.6 சதவீதம் ஆகும். இந்த வீழ்ச்சி அடைந்த அடித்தளத்தோடு, 2020-2021 ஆண்டு வளர்ச்சியை கணக்கிட்டால் உண்மையான வளர்ச்சி என்பது ரூ.2.2 இலட்சம் கோடி. அதாவது உண்மையான வளர்ச்சி விகிதம் 1.52 சதவீதம் மட்டுமே.
படிக்க :
♦ சிலிண்டர் விலை உயர்வு : உழைக்கும் மக்களின் அடுப்பை அணைக்கும் மோடி அரசு | கேலிச்சித்திரம்
♦ எல்.ஐ.சி.யின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் மோடி அரசு !
மோடி அரசின் 8 ஆண்டுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் ஜி.டி.பி சராசரி வளர்ச்சி என்பது 7.5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 5 டிரில்லியன் பொருளாதாரம் சாதிப்போம் என்று கூறிய மோடி அரசு 3 டிரில்லியன் கூட எட்டவில்லை என்பதுதான் உண்மை. இந்த புள்ளிவிவரங்களில் நாம் உண்மையான வளர்ச்சியை காண முடியாது. மாறாக, நாட்டில் பட்டினிக் கிடப்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து இருப்பதாகதான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் சுமையை அதிகப்படுத்தும் விலைவாசி உயர்வு :
அன்றாடம் மக்கள் உட்கொள்ளும் உணவு பொருள்களின் விலை, கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்துகொண்டு வருகிறது. உருளைகிழங்கு 65 சதவீதம், வெங்காயம் 69 சதவீதம், பால் 25 சதவீதம், உப்பு 28 சதவீதம், தக்காளி 155 சதவீதம், சமையல் எண்ணெய் 23 சதவீதம் என உணவு பொருள்களின் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் விலைவாசி உயரும் என ஆர்.பி.ஐ கவர்னர் அறிவிப்பு செய்துள்ளார்.
பெட்ரோலிய வரிகள் மூலம் மட்டுமே, கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.க அரசாங்கம் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த தொகை ரூ.18.23 இலட்சம் கோடி. உணவு தானியங்களின் உற்பத்தி 22 சதவீதமும், பருப்பு வகைகள் உற்பத்தி 49 சதவீதமும் அதிகரித்துள்ளன. உற்பத்தி அதிகரித்த போதிலும், பொருள்களை வாங்கி நுகரும் வகையில் மக்கள் கையில் பணம் இல்லை என்பதுதான் உண்மைநிலை.
மக்களின் வருமானம் அனைத்தும் வரி என்ற பெயரில் மோடி அரசு கஜானாவிற்கு சென்றுவிடுகிறது. விலைவாசி ஆண்டுதோறும் கடுமையாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. தொழிலாளர்களின், விவசாயிகளின் வருமானம் தேக்க நிலையில் உள்ளது அல்லது வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.
தொழிலாளர்களின் வருமானம் கடந்த இரு ஆண்டுகளில் 0.3 சதவீதம் மற்றும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. விவசாயம் சாராத கிராமப்புற தொழிலாளர்கள் ஊதியம் 1 சதவீதம் அதிகரித்து, பின்னர் 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
000
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் என பிராச்சாரம் செய்தது பா.ஜ.க.
புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவில்லை என்பது மட்டும் அல்ல, ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்புகளையும் ஒழித்து கட்டியுள்ளது மோடி அரசு. கடந்த 5 ஆண்டுகளில் 40.9 கோடியாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 40.3 கோடியாக குறைந்துள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், எட்டாயிரம் ரயில்வே பணிகளுக்கு 1.25 கோடி பேர் விண்ணபித்துள்ளனர். நகர்புறத்தில் 9 கோடி (23 சதவீதம்) பேருக்கு வேலையில்லை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2019-ம் ஆண்டு 7.8 கோடி பேர் இணைந்துள்ளனர். தற்போது இத்திட்டத்தில் 10.62 கோடி வேலையாட்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உயர்கல்வி படித்த இளைஞர்கள் பலர் பதிவு செய்யும் நிலைமை அதிகரித்து உள்ளது. ஒரு நாள் ஊதியம் 209, அதுவும் ஆண்டுக்கு 50 நாட்கள் மட்டுமே முழுமையான வேலைகள் கிடக்கிறது. சமீபத்தில், படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்று படித்த கல்லூரி வாசலில் டீக்கடை நடத்தும் அவலநிலைதான் மோடி ஆட்சியில் உள்ளது.
000
“என் வாழ்க்கையில் எல்லாமே 130 கோடி மக்கள்தான். என்னுடைய வாழ்வு என்பது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு. எனது எட்டு ஆண்டு ஆட்சி நிறைவு செய்கிற இந்த தருணத்தில் ஏழைகளுடைய கவுரவத்திற்காகவும், மரியாதைக்காகவும் தொடர்ந்து இந்த வாழ்வு அர்ப்பணிக்கப்படும்” என்று மோடி கூறியுள்ளார்.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன? கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசின் சாதனைகள் இந்துத்துவா கருத்தியல் சித்தாந்தத்தை வேகமாக அமல்படுத்தும் வகையில், ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது, குடியுரிமை சட்டத்திருத்தம், முத்தாலாக் தடைச்சட்டம், காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது இந்துத்துவா கொள்கைகளை வேகமாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.
மறுபுறம், கார்ப்பரேட்களுக்கு பல்வேறு சலுகைகளை வார் வழங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை பணமாக்கல் திட்டத்தின் மூலம் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் கார்ப்பரேட்களுக்கு ரூ.13 இலட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளது. ரூ.6.5 இலட்சம் கோடி வரி சலுகைகள் அளித்துள்ளது. அதானி, அம்பானி, டாடா போன்ற பெரும் முதலாளிகளுக்கு, சுரங்கம், தொலைத்தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து போன்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
படிக்க :
♦ மோடிக்கு எதிரான கருத்து கொண்ட மாணவர்களை சல்லடைபோட்டு தேடும் ஐ.எஸ்.பி நிர்வாகம் !
♦ புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட பாசிச மோடி அரசு !
மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ச்சி அடைந்துள்ளனர். மோடியின் பொருளாதர கொள்கையின் தோல்விகளை மறைப்பதற்கும், கார்ப்பரேட்கள் மக்கள் சொத்தை கொள்ளையடிப்பதற்கும் வழிவகை செய்வதற்கு, தினந்தோறும் இந்துத்துவ கருத்துகளை பிரச்சாரம் செய்து, திட்டமிட்ட இந்துமதவெறி கலவரங்களை நடத்தி வருகின்றனர்.
காவி – கார்ப்பரேட் இரண்டையும் ஒழித்து கட்டாமல் மக்களுக்கான வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. அதிகரித்து வரும் மோடி அரசின் பொருளாதர தாக்குதல்களையும், காவி பாசிச தாக்குதல்களையும் மோதி வீழ்த்த தாயாராவோம்.
தங்கபாலு