முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !

‘புல்டோசர் நீதி’ என்பது முஸ்லீம் மக்களை இந்நாட்டில் எதிர்ப்பு குரலெழுப்பக் கூடாது என்ற ஓர் பாசிச நடவடிக்கை.

0
ஜூன் 21 அன்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம், ‘புல்டோசர் நீதி’-க்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கடிதம் எழுதியுள்ளனர்.
அரசியலமைப்பு நடத்தைக் குழுவின், 90 முன்னாள் அரசு ஊழியர்கள் உத்தரப்பிரதேசத்தில் “சட்டவிரோதமாக காவலில் வைத்தல், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்தல் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான போலீசின் வன்முறை” ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அக்கடித்தத்தில் கூறியுள்ளனர்.
“எந்தவொரு எதிர்ப்பையும் மிருகத்தனமாக அடக்குவதற்கு” தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980, உத்தரப்பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1986 ஆகியவற்றை செயல்படுத்த “வெளிப்படையான வழிகாட்டுதல்கள்” உள்ளன என்று முன்னாள் அரசு ஊழியர்கள் கூறினர்.
“இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது. உள்ளூர் மட்ட அதிகாரிகள், போலீசுகாரகள் இந்த அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்றாலும், உண்மையான குற்றம் அரசியல் நிர்வாகத்தின் உயர் மட்டங்களில் உள்ளது” என்று கடிதம் கூறுகிறது.
“மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், சட்டப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது அரசாங்கத்தை விமர்சிக்கவோ அல்லது சட்டப்பூர்வ வழிமுறைகளை பயன்படுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தவோ துணிந்த குடிமக்களுக்கு மிருகத்தனமான தண்டனையை வழங்குகிறது இந்த ‘புல்டோசர் நீதி’. தற்போது பல இந்திய மாநிலங்கள் விதிவிலக்காக இல்லாமல் புல்டோசர் நீதி வழக்கங்கப்பட்டு வருகிறது” என்று கூறுகிறது.
படிக்க :
♦ காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள் அதிகாரம்
♦ ‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!
பிரச்சினை இனி உள்ளூர் மட்டத்தில் போலீசுத்துறை, நிர்வாகத்தின் ‘அதிகப்படியான செயல்கள்’ அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சி, ‘முறையான செயல்முறை’, ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்று கருதப்பட வேண்டும் என்பதே உண்மை. இந்து தற்போது தலைகீழாக மாற்றப்படுகிறது” என்கின்றனர்.
“பிரயாக்ராஜ், கான்பூரில், சஹாரன்பூர் மற்றும் கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட பல நகரங்களில் ஒரு மாதிரியைப் பின்பற்றுகிறது. அரசியல் ரீதியாக வழிநடத்தப்படுகிறது” என்று அவர்கள் கூறினர்.
இக்கடித்தத்தில் கையெழுத்திட்டவர்களில் முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, முன்னாள் வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், முன்னாள் இந்தியக் போலீசுத்துறை (ஐ.பி.எஸ்) அதிகாரிகள் ஜூலியோ ரிபெய்ரோ, அவினாஷ் மோகனானி, மேக்ஸ்வெல் பெரேரா மற்றும் ஏ.கே. சமந்தா மற்றும் முன்னாள் சமூக நீதித்துறை செயலாளர் அனிதா அக்னிஹோத்ரி உள்ளிட்ட 90 பேர் இதில் அடங்குவர்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் மற்றும் முன்னணி வழக்கறிஞர்கள் சிலர் ஜூன் 14 அன்று தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனுவை முன்னாள் அரசு ஊழியர்கள் ஆதரித்தனர். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்திய செயல்களை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பினால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடித்ததை எதிர்த்து நீதிபதிகள் போபண்ணா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் “எல்லாம் நியாயமாக இருக்க வேண்டும்” என்றும், சட்டத்தின் கீழ் உரிய நடைமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.
“இந்த பிரச்சினையில் உயர் மட்டத்தில் உள்ள நீதித்துறை தலையிடாவிட்டால், கடந்த எழுபத்திரண்டு ஆண்டுகளாக மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் கட்டப்பட்ட அரசியலமைப்பு நிர்வாகத்தின் முழு கட்டிடமும் இடிந்து விழும்” என்று கூறினார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் குறைந்த பட்ச ஜனநாயக விழுமியங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமே எதிரானது. ‘புல்டோசர் நீதி’ என்பது முஸ்லீம் மக்களை இந்நாட்டில் எதிர்ப்பு குரலெழுப்பக் கூடாது என்ற ஓர் பாசிச நடவடிக்கை. அமைதியாய் இரு! அடிமையாய் இரு! அதைத்தாண்டி உரிமை என்று பேசினால் ஒடுக்கப்படுவாய்! நசுக்கப்படுவாய்! உன் வீடுகள் இடிக்கப்பட்டு சொந்த நாட்டிற்குளேயே அகதிகளாக்கப்படுவாய்! என்பதே யோகி அரசு நமக்கு கூறும் ‘புல்டோசர் நீதி’யின் சாரம்.
இது ஏதோ முஸ்லீம் மக்களுக்கு மட்டும் நடைபெறுகிறது என்று கண்டுகொள்ளாமல் விட்டால், நாளை காவி – கார்ப்பரேட் பாசிசம் கோலோச்சும் போது ‘காவி புல்டோசர்கள்’ நம் வீட்டு கதவுகளையும் தட்டும்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க