13.06.2022
இன்று இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசர்;
நாளை மக்கள் அனைவரின் வாழ்வையும் நொறுக்கும்!
காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம்!
பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் கொடுப்போம்!
பத்திரிகை செய்தி
முகமது நபி மீதான நச்சுக் கருத்தை கூறியதன் மூலம் முஸ்லீம் மக்களை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 10) அன்று இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் போராடினார்கள்.
சட்டம் ஒழுங்கிற்கு சீர்குலைவை ஏற்படுத்திய பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்படவில்லை. ஆனால், அவரை கைது செய்ய வேண்டும் என்று போராடிய மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது பா.ஜ.க மாநில அரசுகள். ஜார்க்கண்டில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் போராடிய முஸ்லீம் மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ள யோகியின் போலீசு. ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவரான அஃப்ரின் பாத்திமா உள்ளிட்டோரின் வீடுகள் இடிக்கப்பட உள்ளதாக அரசு அறிவிதுள்ளது. பலரின் வீடுகளும் இடிக்கப்பட்டிருக்கின்றன.
ஆதரவற்ற மக்களின் கடைசி புகலிடம் சட்டம், நீதிமன்றம் என்பார்கள். அந்த சட்டத்தின் பெயராலேயே இஸ்லாமிய மக்களின் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
ஊடகங்களோ “வன்முறையை தூண்டியவரின் வீடு இடிக்கப்பட்டது; வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவர் வீடுகள் இடிக்கப்படுகின்றன” என்றெல்லாம் பேசி இஸ்லாமிய மக்களின் மீதான இந்த அநியாய தாக்குதலை நியாயப்படுத்துகின்றன.
இஸ்லாமிய வீடுகளை நொறுக்கிக் கொண்டிருக்கும் புல்டோசர் நாளை மோடிக்கு எதிராக கேள்வி கேட்கும் அனைவரின் வீடுகளையும் நொறுக்கும். இஸ்லாமியர்களின் வாழ்வு அழித்தது போலவே மற்றவர்களது வாழ்வையும் அழிக்கும்.
காவி –  கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம் !
காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் !
பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் கொடுப்போம்!

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க