மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பாதிக்கப்பட்ட, வன்கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி மத வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்வோம்! என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

27.01.2023

காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர்
தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பத்திரிகை செய்தி

னவரி 15, 2023 தேதியும், தை 1-ஆம் நாளான தமிழ் நாட்டு மக்களின் திருவிழாவான பொங்கல் தினத்தன்று, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வட்டம் விவசாய கல்லூரி அருகில் உள்ள சிறு கிராமமான காயாம்பட்டியில், பட்டியல் (பறையர்) இனத்தைச் சார்ந்த கண்ணன் என்பவர், தனது தாய், தந்தையரை பார்க்க தனது மனைவி சரண்யா மற்றும் தன் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு அருகில் பூலாம்பட்டியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் கொட்டாங்குளம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்த பொழுது ஆதிக்க சாதியை சார்ந்த ராமர் ,லட்சுமணன், சுதாகர்,மாரீஸ்வரன், பாக்யராஜ், தினேஷ், பிரதீஷா மற்றும் சில நபர்கள் ஏன் வேகமாகப் போகிறாய் என்றும் வேண்டுமென்றே வம்பிழுக்கும் நோக்கத்தில் இடை மறித்துள்ளார்கள். அதற்கு அவர் “நான் குடும்பத்துடன் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறேன்; நான் எவ்வாறு வேகமாக வர முடியும்” என்று கேட்டும் மேற்சொன்ன ஆதிக்க சாதி வெறியர்கள் அவரை சாதியைச் சொல்லி இழிவாக திட்டியும் கைலி அவிழ்த்து விட்டு நிர்வாணப்படுத்தியும் தரையில் போட்டு அடித்து, இழுத்து சட்டையை கிழித்தும், தடுக்கச் சென்ற மேற்படி நபரின் மனைவியை சேலையை அணிந்திருந்த தங்கச் செயினுடன் பிடித்து இழுத்து அடித்துள்ளனர்.

இவ்வாறு ஆதிக்க சாதி வெறி வன்மத்துடன் நடந்து கொண்ட மேற்படி நபர்கள் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் அன்றே (15/01/2023) மாலை 5.00 மணியளவில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின கண்ணன் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இரவு 10.30 மணிக்கு குற்ற வழக்கு எண்:17/2023 ஒத்தக்கடை காவல் சார்பு ஆய்வாளர் ஜெ.சூர்யா என்பவர் மேற்சொன்ன ஏழு நபர்களையும் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவில்லை.


படிக்க: மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ


இந்நிலையில் கைதுக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தி பணிய வைக்கவும் புகாரை நீர்த்துப் போகச் செய்வதற்கு 16.01.2023 அன்று மதியம்1.00 மணி அளவில் மேற்படி ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் பிரதீபா க/பெ. ராஜீ என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒத்தக்கடை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெ. சூர்யா சாதிய வன்கொடுமைக்கு உள்ளான கண்ணன் மற்றும் 25 நபர்கள் மீது பொய் வழக்கு எண்:18/2023 பதிவு செய்து, கைது செய்யும் நோக்குடன் ஒத்தக்கடை காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.

மேற்படி கிராமத்தில் அங்குள்ள அனைத்து பிரிவு மக்களும் தாய் – பிள்ளையாக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு நீண்ட ஆண்டு காலமாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் வருடம-ஆம் ஆண்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி அன்று சில ஆதிக்க சாதி நபர்கள், பிரவீன் த/பெ.முருகன், ஆர்.எஸ்.எஸ் – பஜக கருத்து உடையவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறை செலுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் 2022-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்றும் இதேபோன்று இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவர் ஒருவரை ஏன் வேகமாக வந்தாய் என்று கேட்டு தாக்கியுள்ளார்கள். அதனால் அதை கேட்க சென்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அங்குள்ள ஆதிக்க சாதியினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆகி அன்றும் SC/ST வன்கொடுமை வழக்கு பதிவு செய்தும்,ஆதிக்க சாதியினரை கைது ஏதும் செய்யாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை கைது செய்து சிறையில் அடைத்தது ஒத்தக்கடை காவல் துறை.

அதன் தொடர்ச்சியாகவே மேற்படி பிரச்சினையும் அதேபோன்று நடந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க இந்த அரசு நிர்வாகமும், காவல்துறையும் சாதி வெறியர்களால் நிரப்பப்பட்டுள்ளது தான் காரணம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் ஏதுமின்றி அவர்களை மேலும் ஒடுக்கும் வண்ணமத்துடன் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவது என்ற அராஜக வேலைகளில் இந்த அரசும் அரசு எந்திரமும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல உழைக்கும் மக்களும் ஏற்றத்தாழ்வு பாகுபாடு இன்றி கண்ணியத்துடன் வாழ வழி செய்வதற்கும், ஆதிக்க சாதி வெறி பிடித்த நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


படிக்க: குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு !


மேற்படி பாதிக்கப்பட்ட, வன்கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி மத வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்வோம்! என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் தோழமை அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்று தங்கள் கண்டன உரையை பதிவு செய்ய உள்ளனர்.

இப்படிக்கு,
தி.வி.க, ம.க.இ.க, தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள்
தொடர்புக்கு
97916 53200, 73055 38966

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க