01.04.2023

நேற்று ஐஐடி! இன்று காலாஷேத்ரா!
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே!

தமிழ்நாடு அரசே!

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வா!
பார்ப்பன பாலியல் குற்றவாளிகளையும் துணை போன கலாஷேத்ரா நிர்வாக அதிகாரிகள்,
தேசிய மகளிர் ஆணைய நிர்வாகிகளை கைது செய்!

கண்டன அறிக்கை

த்தாண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை, நிறப்பாகுபாடு, உடல் பாகுபாடு போன்ற மனிதவிரோத குற்றங்களை செய்து வந்த காலாஷேத்ராவின் பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் மேற்கொண்ட போராட்டம் நேற்று (31.03.2023) இரவு தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் குற்றம் சாட்டப்பட்ட பொறுக்கிகள் பணிகள் நீடித்திருக்கிறார்கள்.

தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நான்கு பேராசிரியர்கள் மீது மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். அந்தப் புகார்களில் உண்மை எதுவுமில்லை என்றும் போலீசு தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்து கலாஷேத்ரா நிர்வாகமும்  தேசிய மகளிர் ஆணையமும் பாலியல் குற்றவாளிகளுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். இந்த கொடுமைகளுக்கு எதிராக தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்து மாணவிகள் செய்த போராட்டத்தின் விளைவாக பிரச்சினை வெளியே வந்துள்ளது.

மாணவியரால் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் தொடர்ச்சியாக பணியில் இருக்கும் பொழுது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்று போராடி இருக்கிறார்கள் மாணவர்கள். பிரச்சினை இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்த பிறகும் பாலியல் குற்றவாளிகளான பார்ப்பன பேராசிரியர்களை அந்த நிர்வாகமும் ஒன்றிய அரசும் காப்பாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. தற்பொழுது முன்னாள் மாணவி ஒருவரிடம் இருந்து புகார் பெறப்பட்டு ஒரு ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாணவியிடமிருந்து புகார் பெறப்பட்ட அடுத்த நிமிடமே குற்றவாளி ஆசிரியரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த குற்றவாளி ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட கலாஷேத்ரா நிர்வாகி ரேவதியும் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்.


படிக்க: ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்


சிறுபான்மை மக்களுக்கு எதிரான,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து ஊடகங்களும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரபலங்களும் இப்பிரச்சினையில் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர்.

ஐஐடியில் நடைபெறும் தீண்டாமை குற்றங்கள், ஊழல்கள், கிரிமினல் தனங்கள் ஆகியவற்றிலிருந்து பார்ப்பன கிரிமினல்களை காப்பாற்றும் ஒன்றிய அரசு கலாஷேத்ராவிலேயும் தன்னுடைய வேலையை காட்டுகிறது.

ஆகவே மாணவிகளால் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள்,  பாலியல் பொறுக்கிகளை காப்பாற்றிய தேசிய மகளிர் ஆணைய நிர்வாகி, கலாஷேத்ராவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் புகார்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய இடங்களை  திரும்பப் பெற வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க