டந்த அக்டோபர் 7 சனிக்கிழமையன்று, மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், சிகிச்சை அளிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொடர் நிலநடுக்கங்களால் 10,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 2000-க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தின் ஜெண்டா ஜான் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடும் ஆண்கள்.
ஆப்கனில் உள்ள ஹெராட்டில், நிலநடுக்கத்தில் இடிந்த வீடுகளின் எச்சங்களிலிருந்து உறவினர்களின் உடல்கள் மற்றும் உடமைகளை தோண்டி எடுப்பதற்காக கூடிய ஆப்கானிய மக்கள்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன தனது குழந்தையை தேடும் ஆப்கானியர்.
ஆப்கானிஸ்தானின் ஜிந்தாஜன் மாவட்டத்தின் சர்புலாண்ட் கிராமத்தில் நிலநடுக்கத்திற்கு பின்னர் சேதமடைந்த வீட்டில் அமர்ந்துள்ள ஆப்கானிஸ்தானியர்கள்.
நிலநடுக்கத்தில் இறந்த உறவினரை ஆப்கானியர் ஒருவர் அடக்கம் செய்யும் காட்சி.
பக்திகா மாகாணம் ஷரானாவில் உள்ள மருத்துவமனையில், தனது இரண்டு குழந்தைகளைத் தவிர மொத்த குடும்பத்தையும் இழந்த ஹாவா என்ற பெண்.
நிலநடுக்கத்தில் இறந்தவர்களை புதைப்பதற்காக தோண்டப்படும் நீண்ட குழிகள்.
நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த ஒரு குடும்பத்தினர் வெளிப்புறத்தில் தீமூட்டி குளிர் காயும் காட்சி.
கெயான் மாவட்டத்தில் உள்ள அஸோர் கலாய் கிராமத்தில் வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தின் ஸ்பெரா மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் இடிந்த வீடுகளின் இடிபாடுகளின் மேல் அமர்ந்துள்ள குழந்தைகள்.


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க