மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்!

ம்புத்தீவு
பிரகடனம் மீண்டும் உயிர்த்தெழுகிறது

வரலாறு
மருது
உயிர்த்தெழக் கோருகிறது

மருது உயிர்த்தெழும்போது கூடவே
தொண்டைமான்களும் உயிர்த்தெழுகிறார்கள்

இப்போது சற்று அமைதியாக இருப்போம்

ஊமைத்துரைக்கு அடைக்கலம்
கொடுக்க வேண்டாம்

அன்றும் சாத்தியமானவைகளை பற்றி
பேசாமலா இருப்பர்?

மருதிருவர் சாத்தியமானவையை அல்ல;
சரியைப் பேச வேண்டும் என்றார்கள்

ஈன ஐரோப்பியரை அழித்து ஒழிக்காமல் வாழ்வில்லை என்றான் சின்ன மருது

அதிகாரப் பீடத்தை நத்திப் பிழைப்போர் தலையில் இடியாய்
இறங்கியது மருதுவின் குரல்

இரத்த சொந்தங்கள் 500 பேருடன்
திருப்பத்தூர் கோட்டையில் குரல்வளை நொறுங்கும்போதும்
மரணம் நெருங்கும் போதும்
மருதுவின்
விடுதலைக் குரல் ஒருபோதும்
இறங்கவும் இல்லை இரங்கவுமில்லை

அன்று பரங்கியரின் வேட்டைக்காடு
இன்று அதானி அம்பானிகளுக்கு
நாடே சுடுகாடு

அன்று ஒரு தொண்டைமான்
இன்று பல்லாயிரம் தொண்டைமான்கள்
அத்தனை பேரும் ஒரே கட்சி – பிஜேபி

வரலாறு
மருதிருவரை
கோருகிறது
கூடவே
திப்பு சுல்தானையும் கட்டபொம்மனையும் ஊமைத்துரையையும் வேலு நாச்சியாரையும் குயிலியையும் தான்

நாம் தயாரா?

ஐயோ படிப்பு என்னாவது?
குடும்பம் என்ன ஆவது? குழந்தைகள் என்னாவது?

இப்படி யோசிக்கும் யாருக்கும்
மருதுவைப் பற்றி நினைக்கவும் தகுதி இல்லை

வரலாறு
எப்போதும்
இப்போதும்
மருதுவை தேடிக் கொண்டிருக்கிறது

முடிவு நம் கையில்!


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க