மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்!
கோவையில் அதிகரித்து வரும் பி.ஜே.பி குண்டர்படையின் அடாவடித்தனம்!

கோவை மக்கள் அதிகாரம் கண்டனம்!

29.03.2024

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் நேசனல் ஜனசக்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் “NO MODI, NO GUARANTEE” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த, சுவரொட்டியில் பாசிச மோடி மற்றும் பி.ஜே.பி-க்கு எதிராகவும், இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றும் எழுதப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு (27-03-2024), அக்கட்சியின் தலைவரான ரஹ்மான் கே மூப்பனார் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்த போது, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி.ஜே.பியின் குண்டர்படையினர் அவரை சுற்றிவளைத்து மிரட்டியுள்ளனர். மேலும், சுவரொட்டி ஒட்ட வைத்திருந்தப் பசையை அவர் மீது ஊற்றியும், “யாரு டா நீ தீவிரவாதியா உன்ன எவன்டா போஸ்டர் ஒட்டச் சொன்னது அவன இங்க வர சொல்லு இல்ல உனக்கு அவ்வளவு தான்” என்றும் மிரட்டினர், அவர்தான் அக்கட்சியின் தலைவர் என்று கூறியுள்ளார். எனினும், அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட பி.ஜே.பி குண்டர்படையினர் அவரை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதோடு, பி.ஜே.பி குண்டர்படையினர் ஒருவர் பின் ஒருவராக வந்து மிரட்டுவதும் தாக்குவதுமாக நடந்து கொண்டனர். பின்னர், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


படிக்க: பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்


எந்தவொரு கட்சியையும் விமர்சித்து சுவரொட்டி ஒட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமையுண்டு. எனினும், தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பின் ஒருவர் சுவரொட்டி ஒட்டுவது சாதாரணமான நிகழ்வு தான். ஆனால், கோவையிலுள்ள பி.ஜே.பி குண்டர்படையினர் மோடிக்கும், பி.ஜே.பிக்கும் எதிராக ஏதேனும் சுவரொட்டி இருந்தால் கிழிப்பது, சுவரெழுத்தை அழிப்பது, ஒட்டுபவரை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாசிச பி.ஜே.பி கும்பலுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

கோவையில், இனிவரும் காலங்களில் மோடிக்கு எதிராக பொதுவெளியில் பேசவும், பிரச்சாரம் செய்யவும் முடியாத நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முயற்சித்து வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி குண்டர்படையினருக்கு எதிரான களப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சுவரொட்டி ஒட்டிய நபரை மனிதாபிமானமற்ற நடத்தியதோடு தாக்குதல் நடத்திய பி.ஜே.பி குண்டர்படையின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு இச்சம்பவத்தை விசாரணை செய்து, உடனடியாக பி.ஜே.பி குண்டர்படையினரை கைது செய்ய வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் இனிவரும் காலங்களில் உத்தரப்பிரதேசம், குஜராத், திரிபுரா போன்ற நிலை கோவைக்கும் வர நேரிடும்.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க