09.01.2025
மதுரை வேதாந்தா டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கெதிரான மக்கள் போராட்டம் வெல்க!
தமிழ்நாடு அரசே!
மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறு!
பத்திரிகை செய்தி
மதுரை மாவட்டம் மேலூர் நாயக்கர்பட்டியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு பாசிச மோடி அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்ற பேரணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கார்ப்பரேட்டுக்கு எதிரான மிகப்பெரிய முதல் போராட்டத்தை துவங்கி இருக்கிறது மதுரை. ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வரையில் பாசிச பாஜகவுக்கு எதிராக ஒருமுகமாக இருந்த தமிழ்நாடு, மீண்டும் எழுந்து நின்று இருக்கிறது.
டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்திற்கு இதுவரை அனுமதி இல்லை என்ற அறிவிப்பை பாசிச பாஜக அரசு கொடுக்கவில்லை. மாறாக அதன் வழித்தடத்தை மாற்றுகிறோம் என்று நாடகமாடி வருகிறது.
டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாசிச பாஜக-வின் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதன் மூலமாக தான் பாசிச பாஜகவுக்கு எதிரான தடையரணாகத் தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
அதனை மழுங்கடிக்கும் வகையிலேயே தமிழ்நாடு போலீஸ் செயல்பட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram