Thursday, July 30, 2026

ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்

இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்காசி நான்கு வழிச் சாலை: அ.தி.மு.க., தி.மு.க. வழியில் த.வெ.க.!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நில எடுப்பு அறிவிப்புகளை இரத்து செய்து 79,000 மரங்களை வெட்டுவதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிலங்களை தங்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் “நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்ற அமைப்பு சங்க” விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்: மாநிலம் தழுவிய விவசாயிகளின் நீண்ட பேரணி – போராட்டம்

மின்சார பரிமாற்ற கட்டமைப்புகளுக்காக, விவசாய நிலங்கள் உரிய ஆலோசனையோ அல்லது போதுமான இழப்பீடோ இன்றி கையகப்படுத்தப்பட்டும், மின்கம்பங்கள் அமைக்கப்படும்போது சேதமடையும் விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் வருவதை எதிர்த்து இப்பேரணி - போராட்டமானது நடந்துள்ளது.

பஞ்சாப்: அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!

பாசிச மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானது என்று தெரிவித்த விவசாயிகள், ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தியப் பிரதமர் பாசிஸ்ட் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் உருவ பொம்மைகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஜவ்வாது மலையை அச்சுறுத்தும் அதானியின் நீரேற்றுப் புனல்மின் நிலையத் திட்டம்

வறட்சி அதிகமுள்ள, அதிகளவில் வெப்பநிலை பதிவாகக் கூடிய இடத்தில் நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பது சரியான முடிவில்லை. மேலும் அரிய வகையான அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்கள் வாழும் காட்டுக்குள் 228 எக்டேரை அழிப்பது ஏற்புடையதல்ல. இக்காடுகளை அழிப்பதால் கானுயிர்களின் வாழிடம் அழிவதோடு வெப்பம் அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். தமிழ் நாடு அரசு உடனடியாக அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

2
“சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர்.”

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகட்ட நிலத்தை இழந்த விவசாயிகள் – 75 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத அவலம்

தற்போது 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விசயத்தில், தொடர்புடைய வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால், ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.

பருத்தி இறக்குமதி வரி ரத்து: விவசாயிகளைப் பலிகொடுக்கும் அமெரிக்க அடிமை மோடி அரசு!

2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.

சேலம் – வாழப்பாடி: மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருக!

சின்ன கிருஷ்ணாபுரத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைப்பதன் மூலம், விவசாயிகளுக்குப் பலனும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது வாழப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் | ம.அ.க

மக்களுக்கு அதீத பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். “எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கிருஷ்ணகிரி: டாடா நிறுவனத்தின் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்

டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மாசுபடுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. அப்போதே நடவடிக்கை எடுக்காமல், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மக்கள் அதிகாரக் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒழித்துக்கட்டப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டம்!

பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கோழிப் பண்ணை விவசாயிகள்: அரசியல் மற்றும் தீர்வுக்கான திசைவழி | பாகம் 3

கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினையாகும். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.

கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பாசிச மோடி அரசு!

10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.

கோழிப்பண்ணை விவசாயிகள் | போராட்ட வரலாறு | பகுதி 2

விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, விவசாயிகளுக்கு ஒரு மாற்று என்ற வகையில் கோழிப் பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மானியம் கொடுத்து விவசாயிகளை இழுத்து வந்ததே அரசுதான். ஆனால், இன்று தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடும் போது இதில் அரசாங்கம் தலையிட முடியாது என்று அரசு முழுவதுமாக கைகழுவியுள்ளது.

அண்மை பதிவுகள்