Sunday, June 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 477

பிரச்சாரம் செய்த ‘குற்றத்திற்காக’ தருமபுரி புமாஇமு தோழர்கள் கைது !

1

ருமபுரி அரசு கலை (ம) அறிவியல் கல்லூரியில் பு. மா. இ.மு. தோழர்கள், கடந்த 04/10/2017 அன்று மாலை 3.00 மணியளவில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரச்சாரமும், பு.மா.இ.மு. உறுப்பினர் சேர்க்கையும் செய்து கொண்டிருந்தனர். தோழர்கள் சத்தியநாதன், அன்பு, மலர்கொடி ஆகியோரை தருமபுரி கியூ பிரிவு போலீசு வலுக்கட்டாயமாக  கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தோழர்களை B1 காவல் நிலையத்தில் அடைத்துவைத்தனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள்

கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்க்க வழக்கறிஞர்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர். இது சட்டவிரோதமானது எனக் கூறிய போது, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர்  ”யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ, நான் அப்படி தான்” என சர்வசக்தி படைத்தவர் போல் பேசியிருக்கிறார்.

பின்னர் தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இது புதிதல்ல இதற்கு முன்னால் தமிழகமே நீட் எதிர்ப்புப் போரட்டத்தில் இருந்தபோது இந்த அரசுக்கு எதிராக இதே கல்லூரியை சார்ந்த மாணவர்களை போராட தூண்டியதாக அதியமான்கோட்டை போலீசரால் ஒரு முறையும், பென்னாகரம் அரசு ஆண்கள் (ம) பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகளிடம் நீட் தேர்வையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை வியக்கியானம் செய்ததாகக் கூறி கியூ பிரிவு தூண்டுதலின் விளைவாக பென்னாகரம் டவுன் போலீசரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தற்போது மூன்றாவது முறையாக கைது நடவடிக்கை, இவர்கள் மீது நடந்துள்ளது. அரசின் அயோக்கியதனத்தை யாராவது தோலுரித்து காட்டினால் அவர்களைக் கைது செய்வது, குண்டாஸ் போடுவது என இது போன்ற நடவடிக்கைகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. கைதுக்கும், சிறைக்கும் அஞ்சுபவர்கள் மாணவர்களாகிய நாங்கள் அல்ல.

இனி வருகின்ற ஒவ்வொரு நாளும் இந்த அரசையும், அதிகாரத் திமிரையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வீதியில் ஓடவிடுவதே மாணவர்களாகிய எங்களின் முதல் கடமை.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
தருமபுரி .

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் !

2

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 2

முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், யூடியூப் போன்ற காணொளி அலைபரப்பும் தளங்களும், இவற்றையொத்த சேவைகளை வழங்கும் இணையதளங்கள் அனைத்தும் மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் இயங்கும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட சமூகவலைத்தள ஊடகத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் தனக்கே உரித்தான தனிப்பட்ட அனுபவத்தை (Personalised experience) அடைவதை இத்தொழில்நுட்பம் உத்திரவாதப்படுத்துகின்றது. சமூக வலைத்தள கார்ப்பரேட்டுகளின் வருமானமே பயனர்கள் அடையும் “தனிப்பட்ட அனுபவத்தை”த்தான் அச்சாணியாகக் கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டணம் இல்லை. தங்களது வருமானத்திற்கு இந்த நிறுவனங்கள் விளம்பரங்களையே நம்பியிருக்கின்றன. சாதாரண விளம்பரங்களுக்கும் சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் விளம்பரங்களும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொலைக்காட்சி அல்லது பத்திரிகைகளில் வருவதைப் போல இணையத்தில் பயனர்கள் அனைவருக்கும் பொதுவான விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளம்பரங்கள் தெரிகின்றன. ஒரு குறிப்பிட்ட பயனரின் விருப்பம் என்ன, அவரது செலவழிக்கும் ஆற்றல் என்ன. எந்த பொருளை என்ன விலையில் எப்போது வாங்குவார் என்பது வரை துல்லியமாக மதிப்பிட்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

உதாரணமாக, ஒருவர் யூடியூபில் நவீன கார்கள் குறித்த வீடியோ ஒன்றைக் கண்டு விட்டு அடுத்ததாக தனது முகநூல் கணக்கில் நுழைந்தால் தானாகவே கார்கள் குறித்த விளம்பரங்களையும் கார் கடன் குறித்த விளம்பரங்களையும் காண்பார். இணைய உலாவிகள் (Browsers) ஒருவர் பார்க்கும் இணையதளங்கள் குறித்த தகவல்களை குக்கீஸ்களாக (Cookie) சேமித்து வைக்கும்.

பின்னர் அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் உள்நுழையும் போது, குக்கீஸ்களை சேகரித்துப் பரிசீலிப்பதன் மூலம் கடந்த சில நாட்களில் அல்லது வாரங்களில் அவர் எந்தெந்த தளங்களுக்குச் சென்றுள்ளார், என்ன விவரங்களைத் தேடியுள்ளார் என்கிற விவரங்களையும் அறிந்து கொள்ளும். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர், உடனே கார் வாங்கும் மனநிலையில் இருக்கிறாரா அல்லது வெறுமனே அது தொடர்பான தகவல்களை நேரப் போக்கிற்காக மேய்ந்து கொண்டிருக்கிறாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

சமூக வலைத்தளங்கள் செய்யும் “விளம்பரம்” என்பது, “1431 பயோரியா பல்பொடி” விளம்பரத்தைப் போல் பொதுவானதல்ல – மாறாக குறிப்பானது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் அதற்கு கிடைக்கக் கூடிய வரவேற்பு மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளை சமூக வலைத்தளங்களிடம் இருந்து பெறும் தரவுகளின் அடிப்படையில் மதிப்பிட்டுக் கொள்கின்றது.

ஒருவர் இணையத்தில் செலவழிக்கும் நேரம் – அந்த நேரத்தில் அவர் பார்க்கும், கேட்கும், படிக்கும் விசயங்கள் – அந்த விசயங்களின் அரசியல், சமூக மற்றும் வணிக மதிப்பு உள்ளிட்டவைகளை செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் மிகத் துல்லியமாக கணிக்கின்றன. கூடுதலாக, ஒரு நபர் ஓய்வில் செலவழிக்கும் நேரத்தையும், அந்த நேரத்தை எதற்காக செலவழிக்கிறார் என்பதையும் கொண்டு அந்த நபரின் ஆளுமையையும் துல்லியமாக கணிக்க முடியும்.

வேறு விதமாகச் சொன்னால், தனது வாழ்நாள் முழுவதும் விகடன், குமுதம், குங்குமம், முத்தாரம் போன்ற பத்திரிகைகளை மட்டுமே ‘வாசிக்கும்’ பழக்கம் கொண்ட ஒருவர் அரசியல் மொக்கையாக இருப்பார் என்பதை கணிப்பது எளிமையானது தானே?

செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் பயனர் ஒருவரின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து அவரது ஆளுமை குறித்த ஒரு மதிப்பீட்டுக்கு வருகின்றன. பிறகு அவரது ஆளுமையில் சிறு பகுதியாக இருக்கக் கூடிய, நுகர்பொருள் மோகம் அல்லது பாலியல் சார்ந்த பலவீனம் போன்ற ஏதோவொன்றை மென்மேலும் தூண்டி வளர்க்கின்றன. இதன் மூலம் வணிக நோக்கத்தை மட்டுமின்றி அரசியல் பண்பாட்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். மதப் பற்றை மதவெறியாகவும், மொழிப்பற்றை இனவெறியாகவும் மடை மாற்றிவிட முடியும்.

ஒரு குறிப்பிட்ட பயனரின் கண்ணில் எவையெல்லாம் விழ வேண்டும் என்கிற முடிவை அவரிடம் இருந்து பெறப்பட்ட மின் தரவுகளை மட்டும் ஆய்வு செய்து சமூக வலைத்தளங்கள் கண்டுபிடிப்பதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட சமூகவலைத்தள பயனர் சார்ந்துள்ள நாடு, பிரதேசம், மொழி, கலாச்சாரம், மதம் உள்ளிட்ட மக்கள் தொகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் அந்த செயல்பாடுகளின் திசைவழி ஆகியவற்றை மின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த பின்னரே அவரது கண்கள் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

***

மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு சதாகாலமும் இணையத்தின் மூலமாகவே அரசியல் ‘பேசும்’ நபர் விரைவில் ஒரு நச்சுவட்டத்துக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்

ஒருவேளை சமூக வலைத்தளங்களின் மூலம் ஒருவர் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். அல்லது முற்போக்கு அரசியல் தொடர்பான செய்திகளையே பின் தொடர்கிறார் என்றால், அந்த நபர் எந்த குறிப்பான அரசியல் கருத்தை தொடர்ந்து கவனிக்கிறாரோ, அந்தக் கருத்துக்கள் மட்டுமே ஒரு கட்டத்திற்கு மேல் அவரது முகநூல் பக்கம் முழுவதையும் அடைத்துக் கொள்ளும்.

தமிழனவாதம் என்றால் முழுவதும் தமிழினவாதம். இடதுசாரிக் கருத்துக்கள் என்றால், முழுவதும் இடதுசாரிக் கருத்துக்கள். இப்போக்கின் விளைவாக, ஒரு கட்டத்திற்கு மேல் இணையத்தில் மட்டுமே இயங்குகின்றவர்கள் ஒற்றைப்படையான கருத்தியல் நிலைக்கு வந்து சேர்கின்றனர்.

எந்த ஒரு அரசியல் கோட்பாடாக இருந்தாலும் அதனைச் சமூக நடைமுறையுடன் இணைந்து கற்றுக் கொள்ளும் போது தான் அதனை சரியான பொருளில் உள்வாங்கிக் கொள்ள முடியும். அதன் குறை நிறைகளை புரிந்து கொள்ளவும் முடியும். மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு சதாகாலமும் இணையத்தின் மூலமாகவே அரசியல் ‘பேசும்’ நபர் விரைவில் ஒரு நச்சுவட்டத்துக்குள் அகப்பட்டுக் கொள்கிறார். முகநூல் ஒரு பயனரின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு தொடர்ந்து அதே போன்ற ஒற்றைப் பரிமாண நிலைத்தகவல்களை அவரது பக்கத்தில் காட்சிப்படுத்தும் – சமூக வலைத்தளங்களின் பின்னே உள்ள செயற்கை நுண்ணறி நிரலி இவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் மேற்படியான வடிவமைப்பு, இத்தளங்களில் தொடர்ந்து இயங்கும் பயனர்களை சில மாதங்களிலேயே மேலும் மேலும் தீவிரமாகவும், வறட்டுத்தனமாகவும், மொக்கையாகவும், (முக்கியமாக முட்டாள்தனமாகவும்) சிந்திக்கச் செய்கின்றது. இந்த வகையில் பெரும் தொகுதியான மக்களின் கருத்துக்களை வடிவமைப்பதிலும் குறிப்பான திசைகளில் செலுத்துவதிலும் ஆளும் வர்க்கங்களின் கைகளில் சமூக வலைத்தளங்கள் ஆயுதமாகின்றன. வண்ணப்புரட்சிகளுக்கு மக்களைத் தயார்படுத்துவதில் சமூக வலைத்தளங்களே முதன்மைக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.

அரசியல் ‘செயல்பாட்டாளார்கள்’ உள்ளிட்ட சமூக வலைத்தள பயனர்கள், இணையத்தில் செலவிடும் நேரமும், அந்த நேரத்தில் அவர்களது “அரசியல் செயல்பாட்டிற்கு” இடையே காணும் விளம்பரங்களும் – அதனால் கிடைக்கும் நேரடி வருவாயும். அவரைக் குறித்த தரவுகளும் சமூக வலைத்தள நிறுவனத்திற்கு நேரடியாக ஆதாயம் அளிக்க கூடியவை.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாடு என்கிற மாநிலத்தில் சென்னை என்கிற அதன் தலைநகரில் உள்ள மக்களில் எத்தனை சதவீதம் பேர் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு ஆட்பட்டவர்கள், பொதுவான அரசியல் மனநிலை என்ன, என்ன பொருட்களை வாங்குவர், என்ன மாதிரியான கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றுவர், என ஒரு சமூகத்தைப் பற்றிய நுணுக்கமான தகவல்களை செயற்கை நுண்ணறி இயந்திரம் அறிந்து கொள்கின்றது.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றவர்கள் ஒருவித போதைக்கு ஆட்பட்டதைப் போல் மேலும் மேலும் அதனுள்ளேயே தங்களது நடவடிக்கைகளைச் சுருக்கிக் கொண்டு ஏறக்குறைய ஒரு நச்சு வளையத்துக்குள் தங்களையே சிக்க வைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே சமீப ஆண்டுகளில் சமூகவலைத்தள கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ளது.

***

சமீபத்தில் வெளியான புள்ளி விவரக் கணக்கு இது – இன்றைய தேதியில் உலகளவில் சுமார் 187 கோடி பேர் முகநூலில் கணக்கு வைத்துள்ளனர். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசஞ்சர், வீ -சாட் உள்ளிட்ட அரட்டையடிக்கும் தளங்களில் சுமார் 310 கோடி பேர் கணக்கு வைத்துள்ளனர். ட்விட்டரில் சுமார் 31 கோடி பேர் கணக்கு வைத்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் ட்விட்டர், கூகுள் பிளஸ் தவிர்த்து ஒவ்வொரு சமூக வலைத்தள கார்ப்பரேட்டுகளும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

சமூக வலைத்தளங்களைக் கொண்டு மக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய முடியும் என்றும், இன மத மொழி ரீதியில் மக்களைப் பிளவு படுத்த முடியும் என்றும், இதன் மூலம் தேர்தல் ஆதாயங்களை அடைய முடியும் என்றும், குறிப்பிட்ட ஒரு நபரின் மேல் மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மாற்றியமைக்க அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதையும் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா நிரூபித்துக் காட்டியது.

சமூக வலைத்தளங்களைக் கொண்டேமக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய முடியும்.

2013-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தளங்களின் போக்கை நினைவு கூர்ந்து பாருங்கள். ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண எதிர்ப்பு, லோக்பால், காங்கிரசின் செயலின்மை ஒருபுறமும், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் சீன பேருந்து நிலையம், குஜராத் காந்திநகரில் அமைந்துள்ள நியூயார்க் தெரு போன்ற புகைப்படங்களும், மோடியின் பராக்கிரமங்கள் குறித்த கதைகளும் (17 இன்னோவாவில் பல்லாயிரக்கணக்கான குஜராத்திகளை உத்தராகண்ட் நிலச்சரிவில் இருந்து மோடியே முன்னின்று மீட்ட கதை மறக்குமா என்ன?) அப்போது சமூக வலைத்தளங்களை நிறைத்தன.

இவ்வளவும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோ, பாரதிய ஜனதா ஆதரவாளர்களோ செய்யவில்லை. ஆப்கோ என்கிற அமெரிக்க நிறுவனம் மோடியின் பிரச்சாரங்களையும் அவரது பிம்ப மேலாண்மையையும் கையாண்டது. மேலும், இந்தியாவிலேயே செயல்படும் நிழல் பிம்ப மேலாண்மை நிறுவனங்களையும் கூலிக்கு அமர்த்தினர். ஆயிரக்கணக்கான போலியான சமூக வலைத்தள கணக்குகளுடன் களமிறங்கிய இந்த கூலிக் கும்பல், மோடிக்கு ஆதரவாக நாடெங்கும் ஒரு பேரெழுச்சி இருப்பதாக போலியான தோற்றத்தை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்து பயனர்கள் குறித்த மின் தரவுகளைப் பெற்ற பிம்ப மேலாண்மை நிறுவனங்கள், அந்த மின் தரவுகளைச் சலித்தெடுத்து, மாநில வாரியாக, மாவட்ட வாரியாக, தாலுகா வாரியாக விரிவான திட்டமிடலைச் செய்தனர். நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களைக் குறிவைத்து மோடியை சந்தைப் படுத்தினர். தேர்தல் வெற்றிக்காக சமூகத்தை மதரீதியில் பிளவுபடுத்தும் வேலைகளையும் எவ்வாறு திட்டமிட்டு இந்தக் குழு செய்தது என்பதை 2013-ம் ஆண்டில் “கோப்ராபோஸ்ட்” இணையதளம் மேற்கொண்ட இரகசியப் புலனாய்வு (Sting operation) அம்பலப்படுத்தியது.

***

தொகுப்பாகப் பார்த்தால், சமூக வலைத்தள செயல்பாடுகள் அனைத்தும் மின் தரவுகளுக்கான மூலங்களாக இருக்கின்றன; சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் வழி சேகரிக்கப்படும் தரவுகளே மீப்பெரும் மின் தரவுக்கான கச்சாப் பொருளாக உள்ளன; மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்குகின்றது. சமூக வலைத்தளங்களைத் தவிர, பொருட்களின் இணையம் (IOT) என்று சொல்லப்படும் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களும் மின் தரவுகளுக்கான மூலங்களாக இருக்கின்றன.

குறிப்பிட்ட தனிநபர் ஒருவரின் ஆளுமையை சமூக வலைத்தளங்கள் வடிவமைப்பதும், தொடர்ந்து போதைப் பழக்கத்தைப் போன்று அடிமையாக்குவதும் எவ்வாறு நடக்கின்றது என்பதைப் பார்த்தோம். இனி இதன் பின்னுள்ள செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் இயங்கும் விதம் குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

_____________

இதனை முழுமையான மின்னூலாக வாங்க

20.00Read more

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

அகதிகளா தலித் மக்கள் ?- புதிய கலாச்சாரம் மின்னூல்

2

“கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும் போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.” – தற்கொலை என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹைதராபாத் பல்கலை நிர்வாகத்தால் கொலை செய்யப்பட்ட ரோகித் வெமுலாவின் வார்த்தைகள் இவை.

தலித் மக்கள் மீதான அடக்குமுறை இல்லாத மாநிலமோ வருடமோ இந்தியாவில் இல்லை. இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே இன்றும் தலித் மக்களுக்கு தனித் தேநீர்க் குவளைதான். கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம், நத்தம் காலனி இளவரசன், கடைசியாக திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ். கொல்லப்பட்டவர்களுக்கும், கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் முடிவில்லை.

மராட்டியத்தின் “கயர்லாஞ்சி படுகொலை”யில் போட்மாங்கே என்ற தலித்தின் மனைவியையும், மகளையும் வன்புணர்ச்சி செய்து கொன்று, மகன்கள் இருவரையும் கொலை செய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

இராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரிதேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.

பா.ஜ.க ஆட்சியில் முசுலீம்கள் மற்றும் தலித்துக்களை கொல்வதற்கு போட்டியே நடக்கிறது. பார்ப்பனியமும், பாராளுமன்றமும் தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளை வளர்க்கிறது. நீதிமன்ற – போலிஸ் கூட்டணியோ சாதி வெறியர்களை விடுதலை செய்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.

அகதிகளா தலித் மக்கள் ?

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • ரோகித் வெமுலா கொலை – பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி
  • தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
  • கோலாரில் சாகக் கோருகிறது ஒரு தலித் குடும்பம்
  • தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
  • கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்!!
  • கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா?
  • கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!
  • பொறியியல் கல்லூரி தலித் மாணவிகள்– புள்ளிவிவர மயக்கம் !
  • பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!
  • ஊராட்சியில் சேரிக்கு இடமில்லை!
  • சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
  • தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
  • தீண்டாமை இல்லையென்றால் பரிசு! இருந்தால் தண்டனை இல்லை!!
  • வன்கொடுமைகள்தான் இந்தியாவின் வளர்ச்சி!
  • சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர், பெரியாருக்குத் தடை !

பதினைந்து கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

தொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் !

0

செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், நிரந்தர வாகன ஓட்டுநர்  பணியை சட்டவிரோதமாக பர்வீன் டிராவல்ஸ் -இடம் ஒப்பந்தமுறைக்கு விட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். இத்னால் இங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ள ஒரு பணியில் ஒப்பந்தமுறையைக் கொண்டுவரும் போது அதற்கு உரியமுறையில் தொழிலாளர் துறையில் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு எந்த உரிமமும் பெறாமல் கல்லூரி நிர்வாகம் ஓட்டுநர் பணிகளில் ஒப்பந்தமுறையை தன்னிச்சையாக அமல்படுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து அக்கல்லூரியில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் தொழிலாளர் நலத்துறையில் புகாரளிக்கப்பட்டு அது சம்பந்தமான தாவா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகமானது தொடர்ந்து தொழிலாளர்களை அவர்களது பணியைச் செய்யவிடாமல் தடுத்துவருகிறது. சட்டவிரோதமான ஒப்பந்த முறையை அமல்படுத்துவதுடன் தொழிலாளிகளை ’செட்டில்மெண்ட்’ வாங்கிக் கொண்டு பணியைவிட்டு விலகுமாறு நிர்பந்தம் கொடுத்துவருகிறது.

அதுமட்டுமில்லாமல் தொழிலாளிகளின் வங்கிக் கணக்கில் ’செட்டில்மெண்ட்’ தொகையை கடந்த 15.09.2017 அன்று செலுத்தியது நிர்வாகம். இதனை சங்கப் பொதுக்குழு கூடி ஏற்க மறுத்ததுடன் தொழிலாளர்கள் அனைவரும் அப்பணத்தை ஏற்க மறுத்து கடிதம் அனுப்பினர்.

இவ்வாறு நிரத்தரத் தொழிலாளிகளின் இடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி தொழிலாளிகளிடையே பிளவு ஏற்படுத்தி நேரடிப் பிரச்சினையை ஏற்படுத்த முயன்று வருகிறது. திட்டமிட்டே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

அதனால் தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த 20.09.2017 அன்று சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றனர். அங்கு இருந்த ஆய்வாளர் திரு.சுந்தர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் திரு.வசந்தராஜா ஆகியோர் உதவி ஆணையர் திரு.ஐயப்பன் அவர்களிடம் புகாரை கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதனடிப்படையில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான FIR நகலை தராமல் மழுப்பியது காவல்துறை.

அதன் பின்னர் 21.08.2017-ல் பேருந்தை எடுத்து வந்த எமது தொழிலாளர்களிடம் மாணவர்களை கல்லூரிக்குள் இறக்கி விட்டுவிட்டு பேருந்தை வெளியே வேறிடத்தில் கொண்டு போய் நிறுத்த சொன்னது நிர்வாகம். ஏன் என கேட்ட போது, ”இனி பர்வீன் டிராவல்ஸ் தான் பேருந்தை இயக்குவார்கள்” என்றது நிர்வாகம்.

இதன் மீது நடந்த பேச்சுவார்த்தையில் நாங்களே பேருந்தை இயக்குவது என முடிவானது. 22.08.2017 அன்று வழக்கம் போல் கல்லூரிக்குள் பேருந்தை எடுத்து வந்தோம் காலை 11:00 மணிக்கு கல்லூரிக்கு விடுப்பு எனவும் சங்கத்தின் நிர்வாகிகள் எட்டு பேரை வேலை நீக்கம் செய்யப்படுவதாக வாய்வழியாக அறிவித்தது நிர்வாகம். பிறகு அவர்கள் வீட்டிற்கு தபால் மூலம் வேலை நீக்க உத்தரவு அனுப்பபட்டு இருந்தது.

22.08.2017 முதல் 27.08.2017 வரை உங்கள் அனைவருக்கும் விடுமுறை என அறிவித்துவிட்டது நிர்வாகம். பிறகு  28.08.2017 அன்று முதல் உங்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்கிறோம். பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்தம் செய்து விட்டோம். நீங்கள் செட்டில்மெண்ட் பெற்றுக்கொள்ளுங்கள் என தொழிலாளர்களின் வீடுகளுக்கு கடிதம் அனுப்பியது நிர்வாகம்.

28.08.2017 அன்று பர்வீன் டிராவல்ஸ் மூலம் பேருந்தை இயக்கியது நிர்வாகம். நாங்கள் தான் இயக்குவோம் என பேச்சு வார்த்தை நடத்தி எங்கள்  உரிமையை நிலை நாட்டினோம். மேற்கண்ட அனைத்து வகையிலும் பின்னடைவு கண்ட நிர்வாகம் 21.08.2017 தேதியிட்ட கடிதத்தில் 30 நாட்கள் கால அவகாசம் என 18.08.2017 முதல் 17.09.2017 வரை முன் தேதியிட்டு அறிவிப்பு வெளியிட்டது நிர்வாகம். இதன் மூலம் எமது நிரந்தர பணியை ஒழித்து கட்ட சட்ட விரோதமான வழிமுறைகளை கையாண்டது நிர்வாகம்.

அதன்  தொழிற்சங்க முன்னனியாளர்கள் எட்டு பேர் மீது பொய் புகார் கூறி, 22.08.2017 அன்று நள்ளிரவு 11:30 மணிக்கு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்தது கல்லூரி நிர்வாகம்.

20.08.2017-ல் புகார் செய்த எமது சங்கத்தின் புகாருக்குக்கான நகலை வழங்காமல் மழுப்பிய போலிசு அதிகாரிகள் ஏ.சி. திரு.ஐயப்பன், இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் திரு.வசந்தராஜன் ஆகியோர் 22.08.2017 அன்று நள்ளிரவில் புகார் செய்த நிர்வாகத்திற்கு அப்போதே அதற்கான நகலை வழங்கி தமது காவல் துறை ‘மாண்பை’ காட்டியுள்ளனர்.

தொழிலாளிகளை மிரட்டும் அடியாட்களாக செயல்படும் போலீசு

இந்நிலையில் மீண்டும் கடந்த 22.09.2017 அன்று மாலை கல்லூரி வாகனங்கள் மாணவர்களை ஏற்றி செல்வதற்கு முன்பாக போலீசார் உளவுபிரிவு போலீசார் திரு.பாபு தலைமையில் வந்தனர். அவருடன் சில சீருடை அணியாத போலீஸ்காரர்கள் எனப்படுபவர்கள் வந்தார்கள். பிறகு  திரு.ஐயப்பன் அவர்களின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசு தடியுடன் வேனில் வந்து இறங்கியது.

பிறகு செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் மேலும் சில காவலர்கள் வந்தனர். போராட்டகாரர்களை கைதுசெய்ய பயன்படுத்தபடும் வண்டி வந்தது ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தை பெரும் கலவரம் நடக்கப்போகும் இடமாக மாற்றினர் ‘கண்ணியமிகு’ காவல் துறையினர்.

20.09.2017-ல் நடந்த பேச்சு வார்த்தையில் 25.09.2017 அன்று காலை 11:30 தொடங்கபடும் எனவும், நிர்வாக தரப்பில் மேற்படி நிர்வாகத்தில் செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாக அதிகாரியை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும்படி தொழிலாளர் நல உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் தொழிலாளர் தரப்பில் இருந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், இப்பிரச்சினைகள் குறித்து போலீசாரிடம் உரிய முறையில் புகாரளித்துள்ளது தொழிற்சங்கம்.

இவ்வாறு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தங்களது உரிமைகளுக்காக தொழிலாளர் ஆணையத்தில் புகாரளித்து அதற்கான தாவா நடந்து வருகிறது.

ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவாக போலீசு நடந்துவருகிறது. அதனடிப்படையில் தான் கவசவாகனங்கள், குண்டாந்தடிகள், போலீசு பட்டாளம் என தொழிலாளிகளை மிரட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் திட்டமிட்டே சட்ட-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது அதனை சாக்காக வைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்து அவர்களின் போராட்டங்களை முடக்குவது என நடந்து கொள்கிறது போலீசு.

கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து சட்டவிரோதமாகவே செயல்பட்டு வருகிறது.

  • நிர்வாகம் இந்திய அரசின் தொழில் தகராறுகள் சட்டத்தை எதையும் மதிக்காமல் சட்ட விரோதமாக செயல்படுகிறது
  • நிரந்திர தொழிலாளர்களின் இடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி நேருக்கு நேராக அவர்களை மோதவிடும் வகையில்  சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முற்படுகிறது.

ஒரு நிர்வாகம் ஒரு தொழில் ஒப்பந்த முறையை செயல்படுத்த வேண்டுமானால் அது சம்மந்தமான உத்தரவை தமிழ்நாடு அரசு தொழிலாளர் அதிகாரியுடன் மனு செய்து உரிய உரிமம் பெறாமல் ஒப்பந்தப் பணி நிர்வாக முறைக்கு பயன்படுத்த முடியாது.

அப்படி ஒரு உரிமத்தைப் பெறாமலே பர்வீன் டிராவல்ஸ் நிர்வாகத்திடம் ஒப்பந்தம் விட்டு நிரந்திர தொழிலாளர்களை ஒழித்து கட்டும் நிர்வாகத்தின் சட்ட விரோத செயலுக்கு துணை நிற்கும் போலீசு அதிகாரிகள் திரு.ஐயப்பன், இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா மற்றும்  உளவுபிரிவு இன்ஸ்பெக்டர் திரு.பாபு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், மேலும் தொழிற்தகராறு சட்டம் 1947 –ன் கீழ் கூறப்பட்டுள்ள சட்டபடியான தொழிலாளர் உரிமைகளை உத்தரவாதப்படுத்த ஆவண செய்யும் படி கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் – வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகரகாவல் ஆணையர், தொழிலாளர் நல ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அக்கல்லூரியில் 16 ஆண்டுகளாக பணிபுரிபவரும் திரு.பச்சைமுத்து என்பவரது மகன் பரத் அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு M.E. படித்துவருகிறார்.

மாணவர் பரத்

அவரது தந்தை  திரு.பச்சைமுத்து தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அவரை வேலையைவிட்டு விலகும்படி கல்லூரியின் நிர்வாகி திரு அபிலாஷ் மற்றும் திருமதி ரெஜினா ஆகியோர் மிரட்டியுளனர். மேலும் அவரது மகன் பரத் -தை கடந்த 26.09.2017 அன்று நடந்த தேர்வை எழுதவிடாமல் தடுத்துள்ளனர்.

இதனை அறிந்த தொழிலாளர்கள் அனவரும் திரு.பச்சைமுத்து -உடன் நேரடியாக அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சென்று புகாரளித்தனர். இதனடிப்படையில் அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமானது மாணவரைத் தேர்வு எழுத அனுமதியளித்து எழுத்துபூர்வமாக உத்திரவளித்தது.

ஒருபக்கம் தொழிலாளிகளை போலீசு அதிகாரத்தைக் கொண்டும் மற்றொரு பக்கம் ஜேப்பியாருக்கே உரிய ரவுடிபாணியில் மிரட்டுகிறது நிர்வாகம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி உறுதியாகப் போராடி வருகின்றனர் தொழிலாளிகள்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 94871 51165.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கொலைகார கோலாக்கள் ! – புதிய கலாச்சாரம் மின்னூல்

0

நீரின்றி அமையாது உலகு” என்பது குறள். உயிரின் ஆதாரமான நீரை லாபத்தின் ஊற்றாக கருதுகிறது உலக முதலாளித்துவம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மண் தனியார்மயமாகிவிட்டது. இது மழை தனியார்மயமாகி வரும் காலம்.

தமிழகத்துக்கு உரிமையான காவிரி நீரை கர்நாடகம் மறுப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் விளைவாக தஞ்சை பாலைவனமாகி வருவதும் தெரியும். தஞ்சை மட்டுமல்ல, தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. கிருஷ்ணா நீருக்காக ஆந்திரத்திடம் கெஞ்சுகிறது தமிழக அரசு. கடல் நீரைக் குடிநீராக்குகிறது. குவாரிகளில் தேங்கியிருக்கும் நீரை குடிநீராக்குகிறது. அடுத்து சாக்கடைத் தண்ணீரைக் குடிநீராக்க முடியுமா என்று யோசிக்க வேண்டிய நிலையில் தவிக்கிறது தமிழகம்.

இப்படிப்பட்ட சூழலிலும், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்க அனுமதிக்கிறது தமிழக அரசு. தமிழகத்தின் இளைஞர் சமூகமும், வணிகர் சமூகமும் கோக் பெப்சிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகின்றன. இந்த சூழலில் மோடியை சென்று சந்திக்கிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவர். கோக் பெப்சி நிறுவனத்து தண்ணீரை உறிஞ்சி விற்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

தண்ணீரைப் பண்டமாக்கி விற்பவர்கள் மனித குலத்தின் எதிரிகள், கொடிய பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளுக்குத் துணை நிற்பவைதான் மத்திய மாநில அரசுகளும் நீதிமன்றமும் என்ற உண்மையை, காலிக் குடங்களுடன் சாலைகளை மறிக்கும் பெண்களுக்குச் சொல்லுங்கள்.

20.00Read more

கோக்-பெப்சி : கொலைகார கோலாக்கள் !

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தண்ணீர் தனியார்மயம் : பேரழிவின் தொடக்கம் !
  • அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர் !
  • உலக வங்கி – சர்வதேச நாணயநிதியம் : பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் !
  • ராஜஸ்தான் : கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்
  • குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில் ! – சாய்நாத்
  • பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
  • கோக் எதிர்ப்பு : பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி !
  • மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !
  • காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
  • கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
  • நெல்லையைக் குலுக்கிய கோக் எதிர்ப்புப் போராட்டம்
  • கோக் – பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?

பன்னிரெண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஓசூர் : “விவசாயியை வாழவிடு !” மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

0

க்கள் அதிகாரத்தின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 5, 2017 அன்று தஞ்சையில் நடத்தப்பட்ட “விவசாயியை வாழவிடு !” மாநாட்டின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் 24.09.2017 அன்று மாலை 4:00 மணியளவில் ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கிள் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சூடாபுரம் கேபிள் ஆபரேட்டர் திரு முருகேசன், சேவகானப்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு கோவிந்தராஜ், பாகலூரை சேர்ந்த விவசாயி திரு. செயராமன், பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ரவிச்சந்திரன், மக்கள் அதிகாரத்தின் தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், பு.ஜ.தொ.மு -வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சிறப்புரையாற்றினார். இறுதியாக, பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ராமசாமி நன்றியுரையாற்றினார்.

தோழர் நாகராஜ் தனது தலைமை உரையில், தஞ்சை மாநாட்டிற்கு அரசு கொடுத்த பல்வேறு தடைகளையும் அவைகளை கடந்து மாநாடு நடத்தப்பட்ட அனுபவங்களையும் விளக்கி பேசினார்.

அதன் பின் பேசிய சூடாபுரம் கேபிள் ஆபரேட்டர் திரு முருகேசன் தனது உரையில் இங்கு இயங்கிவரும் ஆலைகளின் கழிவுகள் மற்றும் பெங்களூரின் கழிவுகள் தென்பெண்ணையாற்றில் கலக்கப்படுகிறது. அதனால் ஆறு அதன் தன்மை இழந்து நிலத்தடி நீர் மாசடைந்து குடிக்க இலாயக்கற்றதாகியுள்ளது. மேலும், ஏற்கனவே, செய்துவரும் அரைகுறை விவசாயம் கூட தொடர்ந்து செய்யமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்ற யதார்த்த நிலையை அம்பலப்படுத்திப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ரவிச்சந்திரன் தனது உரையில், இன்றைக்கு விவசாயத்தில் மரபணுமாற்றப்பட்ட விதைகளை  பயன்படுத்துவதால் மண்ணே மலடாக்கப்படுகிறது. மேலும், விதைகளை எடுத்து விவசாயி அதனை  பாதுகாத்தால் அவனை குற்றவாளியாக சித்தரிக்கிறது இந்த அரசு என்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

விவசாயிகள் தாங்களே ஒரே வழியை தேடிக் கண்டு, விவசாயம் செய்தபோதும், விளைபொருளுக்குரிய விலை கிடைக்காமல் போண்டியாகி கடனாளியாக்கப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படும் அவல நிலையை விளக்கிப் பேசினார்.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியரும் விவசாயியுமான திரு கோவிந்தராஜ், அவரது உரையை அவரின் தாய் மொழியான தெலுங்கில்; விவசாயிகளுக்கே உரிய பாணியில் ஒரு கதையை சொல்லி தொடங்கினார். “ஒரு பள்ளியில் அன்றாடம் வேப்பம் எண்ணையில் மதிய உணவு சமைத்துப் போட்டார்கள். அந்த உணவு கசப்பாக இருந்தாலும் மாணவர்கள் அதனை தட்டிக்கேட்காமல் சகித்துக்கொண்டு சாப்பிட்டு வந்தார்கள்.

சிறிது காலம் சென்றபின்பு கசப்பான அந்த உணவை தொடர்ந்து சாப்பிட முடியாததால் எதிர்த்து குரலெழுப்பினர்.  அதன் பின்னர் நல்ல எண்ணெயில் சமைத்துப் போட்டார்கள். இதுபோல கசப்பான பல சம்பவங்கள் இந்த சமுதாயத்தில் நடக்கிறது. இதனை அகற்றவேண்டுமெனில் நாம் போராடவேண்டும். நான் விவசாயி என்பதால் விவசாயத்தால் நான் மட்டும் பயன் அடைவதில்லை, மனித இனங்களோடு சேர்த்து மற்ற உயிரினங்களும் பயனடைகின்றன.

சின்ன வயதிலிருந்து எதை சாப்பிட்டாலும் அனைவருக்கும் பகிர்ந்து தான் சாப்பிடுவேன் என் அம்மா சின்ன வயதில் சொல்லிக்கொடுத்தது. அதுபோல விவசாயத்தின் பயன்களை நான் மட்டும் அனுபவிக்காமல் எல்லா மக்களுக்கும் கொடுக்கிறேன். இந்த சமுதாயத்தில் விவசாயம் என்பதை அழிக்க பார்க்கிறார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். வேறு வழியில்லை” என விளக்கிப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து திரு ஜெயராமன் தனது உரையில்; “விவசாயிகள் இல்லையென்றால் சாப்பாடு இல்லை. கடன், மானியம், விதை உரம் எதையும் அரசு கொடுப்பதில்லை. விளைந்த பொருட்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது அரசுதான், அவர்களை பாதுகாக்கத் தவறுகிறது. இந்நிலையில் தான் நாம் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கிப் பேசினார்.

அதன் பின்னர் பேசிய தோழர் முத்துக்குமார் தனது உரையில், நீட் தேர்வைக்கொண்டு வந்து அனிதாவை படுகொலை செய்த இந்த அரசுதான் விவசாயிகளையும் வாழவிடாமல் அவர்களின் வாழ்வைப் பறித்து தற்கொலைக்குத் தள்ளி கொன்றுகுவித்து வருகிறது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்திப் பேசினார்.

தோழர் பரசுராமன் தனது உரையில் இந்த அரசுக்கட்டமைப்பு தொழிலாளர்கள், தற்போது போராடிவரும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும், அவர்கள் ஏற்கனவே போராடி பெற்ற உரிமைகளையும் பறித்து அவர்களை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கி வருகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்லி தொழிலாளர்களின் பொது எதிரியாக இருக்கக்கூடிய கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகதான் விவசாயத்தை அழித்துவருகிறது இந்த அரசு என்பதை விளக்கிப் பேசினார்.

பொதுக்கூட்டத்தின் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தனது சிறப்புரையில், விவசாயிகளின் உழைப்பு என்பது அளவிட முடியாதது. அதனை இந்த அரசு அங்கீகரித்திருந்தால் விவசாயிகளின் தற்கொலை இங்கே நடந்திருக்க முடியாது. ஆனால் நமது அரசு அவ்வாறில்லை. தமிழகத்தில் விவசாயிகள் 400 பேர் இறந்த செய்தியை நாம் ஊடகங்களில் பார்த்திருப்போம். ஆனால் அரசால் பதிவுசெய்யப்பட்டது வெறும் 17 பேர்தான். இந்த அரசின் யோக்கியதையே இதுதான்.

விவசாயத்துறையை சேர்ந்த அமைச்சர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விவசாயிகளின் தற்கொலையை காதல் தோல்வியால் இறந்தான், குடும்பப் பிரச்சினையால் இறந்தான் என்று சொல்லி அவர்களது இறப்பையும் அவமானப்படுத்துகின்றனர்.

தொழிலாளர்களுக்கு கூட அவர்களை பாதுகாக்க பெயரளவிலான தொழிற்சங்க சட்டங்கள் இருக்கிறது. இதை இந்த அரசே அமுல்படுத்தவில்லை என்பது வேறு விவகாரம். ஆனால் அந்தளவுக்கு பெயரளவிலான சட்டப்புத்தகங்களில்கூட விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை. இந்த விவசாயிகளை விவசாயத்தையே செய்யாமல் விவசாயத்தை விட்டே விரட்டியடித்து அவர்களை கார்ப்பரேட்டுகளின் நேரடி கொத்தடிமைகளாக்குவதை கொள்கையாக கொண்டிருக்கிறது இந்த அரசு என்பதை பல்வேறு விவரங்களுடன் தொகுத்து அம்பலப்படுத்திப் பேசினார்.

இறுதியாக, விவசாயிகள் மட்டுமின்றி, தொழிலாளர்கள், சிறுமுதலாளிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினர்களும் இந்த அரசுக்கட்டமைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஆளத்தகுதியற்ற இந்த அரசுக்கட்டமைப்பை வீழ்த்தி மக்கள் அதிகாரம் படைப்பது ஒன்றே இவை அனைத்திற்கும் தீர்வாக முடியும் என்று சொல்லி. அத்தகையதொரு போராட்டத்திற்கு அணியமாவோம், மக்கள் அதிகாரம் படைப்போம் என்ற வகையில் அறைகூவி பேசினார்.

கூட்டத்தின் இறுதியாக, பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் இராமசாமி நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தை இறுதிவரை கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! – மின்னூல்

27

காந்தியை பற்றி பாடப்புத்தகங்களிலும் பொதுவிலும் ஆளும்வர்க்க அடிபொடிகளால் சொல்லப்படும் கருத்துக்கள் தான் பொதுவெளியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. காந்தி உண்ணாவிரதமிருந்தார், ராட்டை சுற்றினார் என்று மாணவர்களுக்கு, அஹிம்சை போதித்தார், சத்யாகிரகம் செய்தார், உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் வகுப்பெடுக்கப்படுகின்றது.

உண்ணாவிரதமிருந்தார் தான் ஆனால் யாருடைய நலனுக்காக? காந்தி போராடினாரா? போராட்டத்தை காட்டிக்கொடுத்தாரா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்காக அம்பேத்கரை எதிர்த்து ஏன் உண்ணாவிரதமிருந்தார்? சாதி பற்றிய காந்தியின் கருத்து என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.

காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உண்மையானதா? என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தலைவர்களின் எழுத்திலும் பேச்சிலும் பார்க்கலாம். குறிப்பாக பார்ப்பன இந்துமதத்தின் சாதிமுறைக்கு எதிராக இறுதிவரை போராடிய பெரியார், அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமிருக்கின்றன.

காந்தி யாருக்கான தலைவர்?

பிரிட்டிஷாரை எதிர்த்த காந்தியின் போராட்ட நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார் பெரியார். ராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் போராட்டத்தை கட்டியமைத்தவர் தான் காந்தி. பொதுவுடைமை கொள்கை செல்வாக்கு பெறாமல் இருப்பதற்காக காந்தியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய தேவை ஆங்கில அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும், பார்ப்பன ஆதிக்க சாதிகளுக்கும் இருந்தது. அந்த புரவலர்களின் உதவியால் காந்தி மக்களை கட்டி போட்டதையும் முக்கியமாக அவரே இதை ஒப்புக்கொண்டதையும் அம்பலப்படுத்துகிறார் பெரியார்.

 

மகாத்மா காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
  • ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
  • வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !
  • அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

நான்கு கட்டுரைகள் – 96 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 

அம்பானியின் ஜியோவுக்கு பின்னிருக்கும் ரகசியம் : நான்காம் தொழிற்புரட்சி !

19

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 1

ம்பானி நட்டமடைந்து விட்டார் என மெல்லப் புலம்புகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடி லாபம் ஈட்டாததோடு கடந்த 2017, மார்ச் மாதக் கணக்கின் படி சுமார் 22.50 ஆயிரம் கோடி நட்டத்தை சம்பாதித்துள்ளது என்கின்றன ஊடகங்கள். தொலைத் தொடர்புத் துறையின் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொள்ள வேண்டும் என்கிற அம்பானியின் கனவு மெல்லக் கலைந்து வருவதாக சில பொருளாதார ஆய்வாளர்கள் ஆருடம் கூறத் துவங்கி விட்டனர்.

எனினும் முகேஷ் அம்பானி தனது இலவசங்களை நிறுத்தவில்லை; தொடர்ந்து இலவச டேட்டாக்களை அள்ளி வீசி வருகிறார். இந்தக் காலாண்டின் துவக்கத்திலிருந்து தனது சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதாக சொல்லிக் கொண்டாலும்,”கட்டணம்” என்ற பெயரில் சோளப் பொரியை வாங்கிக் கொண்டு யானை மந்தையையே கொடுக்கிறார் அம்பானி. ரிலையன்ஸ் நட்டமடைந்திருப்பதாக ஊடகங்கள் சொன்னாலும், ஏர்டெல் வோடஃபோன் போன்ற போட்டியாளர்களின் பீதி குறையவில்லை – ரிலையன்ஸ் ஜியோவுக்கு சற்றும் குறையாத அளவில் டேட்டாக்களை வாரி வழங்கி வருகின்றனர்.

அவர்களிடம் இருக்கிறது கொடுக்கிறார்கள்; சும்மா கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு; அம்பானியிடம் இல்லாத காசு பணமா, அவருக்கெல்லாம் லாபம் ஒரு பொருட்டா – என சிலிர்ப்பவர்களின் வியப்பு இன்னும் குறையவில்லை. அம்பானி எதற்கும் அசராமல் இலவசங்களையும் மலிவு விலை இணையத் தொடர்பையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

***

யன் ராண்டின் “பௌண்டெய்ன் ஹெட் (Fountainhead)” நாவலில் வரும் ‘இலட்சிய’ முதலாளியான கெய்ல் வைனாண்டின் இந்திய வடிவமா அம்பானி? அள்ளித் தெளிக்கப்படும் இலவசங்களின் நோக்கம் தான் என்ன?

அம்பானியின் வாயிலிருந்தே கேட்போம் :

“நான்காம் தொழிற்புரட்சியின் எரிபொருளாக மின் தரவுகளே (data) இருக்கப் போகின்றது” எனக் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உரையாற்றிய அம்பானி, “மின் தரவுகள் எண்ணெய் என்றால், நுண்ணுணர் மின் தரவுகள் (intelligent data) பெட்ரோலாகும்” என்றார்.

ஓராண்டுக்குப் பின் பெரும் நட்டத்தைச் சந்தித்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மறுபுறம் இணையப் பரவலை (internet penetration) பொருத்தவரை பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியுள்ளதை வியப்புடன் பார்க்கிறார்கள் முதலாளிய பொருளாதார வல்லுனர்கள். தகவல் தொடர்பைப் பொருத்தவரை வர்த்தக ரீதியில் ரிலையன்ஸ் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இணையப் பரவலில் வெற்றிகளைச் சந்தித்துள்ளது. இந்த வெற்றி உடனடியாக லாபத்தை வழங்கி விடவில்லை என்பது உண்மை தான்.

ஆனால் உடனடி லாபம் கிட்டாதெனினும், எதிர்காலத்தில் முதலாளியச் சந்தையின் ஆட்ட விதிகளைத் தீர்மானிக்கவிருப்பது இணையப் பரவலும் அதனால் குவியவிருக்கும் மின் தரவுகளும் தான். குரல் அழைப்புகள் மெல்ல மெல்ல மின் தரவுப் பொதிகளின் பரிமாற்றங்களாக மாறி வருகின்றது. மேலும் தொலைபேசி மட்டுமின்றி தொலைகாட்சிப் பெட்டி மற்றும் வீடுகளில் உள்ள மின்னணுவியல் சாதனங்கள் அனைத்தும் திறன் சாதனங்களாக (Smart Devices) மாறுவதும், அவையனைத்தும் இணையத்தின் மூலம் இணைக்கப்படுவதுமான ஒரு நிலையை நோக்கி தொழில்நுட்பங்கள் முன்னேறிச் செல்கின்றன.

இணையப் பரவலும், இணையத்தின் மூலம் இணைக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க, மின் தரவுகள் மலையாகக் குவியும் போக்கும் அதிகரிக்கும். மின் தரவுகளைக் கட்டுப்படுத்துவதும், அதனைப் பகுப்பாய்வதன் அடிப்படையிலான தொழில் நடவடிக்கைகளுமே நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கவிருக்கின்றன என்பதை அம்பானி முன்கூட்டியே உணர்ந்துள்ளார்.

அது என்ன நான்காம் தொழிற்புரட்சி? அம்பானி சொல்லும் நுண்ணுணர் மின் தரவுகள் (Intelligent Data) என்பது என்ன? நான்காம் தொழிற்புரட்சிக்கும் மின் தரவுகளுக்கும் என்ன தொடர்பு?

***

ரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக் காலம் அறிவியல் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை உந்தித்தள்ளியது. மறுமலர்ச்சிக் காலகட்டத்தைத் தொடர்ந்து சுமார் 1780-ல் இருந்து 1840 வரையிலான காலப் பகுதியில் கைவினைப் பட்டறைகளின் இடத்தை ஒருங்கிணைந்த பெரிய ஆலைகள் பிடித்தன. நீராவியின் ஆற்றல் தொழிற்துறையில் மலைக்கத்தக்க வளர்ச்சியைத் தூண்டியது. உலோகவியல், வேதியியல், இயற்பியல், இயந்திரவியல் போன்ற துறைகளில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் வளர்ந்து வந்த ஆலைத் தொழில் உற்பத்திக்குத் தேவையான புதிய இயந்திரங்களை படைத்தளித்தன.

1870-ல் இருந்து 1915 வரையிலான காலகட்டத்தில் தொழிற்துறையில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியும், மிகப் பெருமளவில் எஃகு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் இரண்டாம் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன. குறிப்பாக பெரும் ஆலைகளின் பொருத்தும் வரிசை இயந்திரமயமானதும் (Mechanised Assembly line) இப்போக்கை உந்தித்தள்ளியது.  இதே காலகட்டத்தில் மின்சாரத்தின் பயன்பாடு பரவலாகி அதன் பங்குக்கு தொழிற்துறை உற்பத்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டம் வரையில் தொலைபேசி வலைப்பின்னல் பரவலாகத் துவங்கியது. இந்தப் போக்கின் விளைவாக உலகளாவிய அளவில் சந்தையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஏகபோக மூலதனம் பெற்றது.

1960 மற்றும் 1970-களில் ஆய்வுக்கட்டத்தில் இருந்து, பின்னர் 1980-களில் பரவலான மின்னணுவியல் தொழில்நுட்பம் மூன்றாம் தொழிற்புரட்சிக்கு கட்டியம் கூறியது. இந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து தொழிற்துறை அதிவேகமாக கணினிமயமாகியது. இதன் தொடர்ச்சியாக ஆலை உற்பத்தி மற்றும் சந்தை ஆகியவற்றைக் கையாள்வதில் இணையத் தொழில்நுட்பம் பெரும் பாத்திரமாற்றத் தொடங்கியது. பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளை மொய்த்துக் கொண்ட நிதிமூலதனச் சூதாடிகள், உலகின் மறுகோடிக்கு கண் சிமிட்டும் நேரத்தில் தமது மூலதனத்தை அப்படியே பெயர்த்து எடுத்துச் செல்வதை இணையம் எளிமையாக்கிக் கொடுத்தது.

உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் மூலம் மேலிருந்து அதிகாரம் செலுத்தி, தேசிய எல்லைகளைத் தகர்த்து தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம், தகவல் தொழில்நுட்பம் வழங்கிய மேற்கண்ட சாத்தியங்களின் மூலம் தேசியத்தின் வேர்களை கீழிருந்தும் அரித்து அறுத்தது.

***

மூன்றாம் தொழிற்புரட்சியின் நீட்சியாக நான்காம் தொழிற்புரட்சி  வருகின்றது. இணையத்தின் பரவலால் உற்பத்தியாகும் அபரிமிதமான மின் தரவுகளே இப்புதிய போக்கை தனித்து அடையாளம் காட்டுகின்றன. மேலும், கணினித் துறையிலும், ஆலை உற்பத்தித் துறையிலும் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிகள் இணைய தொழில்நுட்பத்தின் மூலம் மையப்பட்ட ரீதியில் இணைக்கப்பட்டுள்ளன. பொருட்களின் இணையம் (Internet of Things – IOT) என அழைக்கப்படும் இப்புதிய போக்கு, மலை மலையாக மின் தரவுகளை உற்பத்தி செய்து குவிக்கின்றது.

இவ்வாறு குவியும் மின் தரவுகள் மீப்பெரும் மின் தரவுகள் (Big Data) என்று அழைக்கப்படுகின்றது. இந்த மீப்பெரும் மின் தரவுக் குவியலை பகுப்பாய்வு செய்வது சந்தையைப் ‘புரிந்து கொள்வதற்கும்’ நடப்பில் இருக்கும் தொழில்நுட்பங்களின் துல்லியத்தை அதிகரிப்பதற்கும் உதவும் என்பதை கூகுள், ஐ.பி.எம், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் புரிந்து கொண்டன. இதே காலகட்டத்தில் உருவான மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு (Big Data & Analytics) தொழில்நுட்பம், நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் முக்கியமான நிகழ்வாகும். பின்வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இக்காலகட்டத்தின் தனித்த அடையாளங்களாகும்.

ரோபோட்டிக்ஸ் எனப்படும் தானியங்கிப் பொறி பல்வேறு உற்பத்தித் தொழில்களில் தானியங்கல் (Automation) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மீநுண் தொழில்நுட்பம் (Nano Technology) எனப்படும் அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழிற்கலை, அணு மற்றும் மூலக்கூறியல் விஞ்ஞானத்தில் பெரும் பாய்ச்சலான வளர்ச்சியை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இவ்வறிவியல் ஆய்வுக் கட்டத்தில் உள்ளது.

அதே போல் ஆய்வுக் கட்டத்தில் உள்ள குவையக் கணியத் தொழில்நுட்பம் (Quantum computing) கணினிகளின் செயற்திறனை நடப்பில் உள்ளதை விடப் பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் (3D Printing) மற்றும் உயிரித் தொழில்நுட்பமும் தற்போது ஆய்வுக் கட்டத்தில் உள்ளன.

நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு ஆற்றியுள்ள பங்கும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ள மின் தரவுகளின் குவிதல் சமீபத்திய ஆண்டுகளில் வியப்பூட்டும் அளவுகளை எட்டியுள்ளது.

***

தொன்னூறுகளின் துவக்கத்தில் உலகளாவிய இணைய வலைப்பின்னலின் மூலம் ஒவ்வொரு நொடியிலும் சுமார் 100 ஜி.பி அளவுக்கான மின் தரவுகளே உற்பத்தியாயின. இன்றோ ஒவ்வொரு நொடியும் ஐம்பதாயிரம் ஜி.பி டேட்டா உற்பத்தியாவதாக கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. உலகம் முழுவதும் ஒரு நாளில் உற்பத்தியாகும் மின் தரவுகளை டி.வி.டி தட்டில் எழுதி அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது நான்கு ஈஃபில் டவர்களின் உயரத்துக்கு வரும் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் 2015-ல் வெளியான ஒரு கட்டுரை. இன்று அதன் அளவு ஐந்து ஈஃபில் டவர்களின் உயரத்தையும் விஞ்சக் கூடும்.

ஜி.பி கணக்குகள் கொஞ்சம் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும்; நாம் பின்வருமாறு புரிந்து கொள்வோம். அதாவது ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் மின் தரவுகளின் அளவு என்பது 53 லட்சம் கோடிப் பாடல்களின் அளவுக்கு ஈடானது. அல்லது அவை வீடியோக்களாக இருந்து அவற்றை ஓடவிட்டால், சுமார் 90 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடும். நினைவில் கொள்ளுங்கள் – இவை ஒரே ஒரு நாளில் உற்பத்தியாகும் மின் தரவுகளின் கணக்கு மட்டுமே. இந்த மொத்த மின் தரவில் 90% சதவீதம் கட்டமைவற்ற மின் தரவுகள் (Unstructured Data) என்று வகைப்படுத்தப்படுகின்றன.

கட்டமைவற்ற மின் தரவுகள் எனப்படுபவை யாவை? முகநூல், டிவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், நிலைத்தகவல்கள் துவங்கி, நாம் குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களில் எதைப் பார்க்கிறோம், எதற்கு விருப்பம் தெரிவிக்கிறோம், யாரையெல்லாம் பின் தொடர்கிறோம் என்பவை உள்ளிட்டு – எப்போது எங்கே பயணிக்கிறோம் என்கிற விவரங்கள் வரை மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன. இது தவிர, இணையத்தில் பொருட்கள் வாங்குவது, அல்லது இணையம் மூலம் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, யூடியூபில் வீடியோக்கள் பார்ப்பது உள்ளிட்ட நமது நடவடிக்கைகள் பற்றிய அனைத்து விவரங்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன.

உதாரணமாக யூடியூபில் ஒருவர் எவ்வளவு நேரம் காணொளிகள் பார்க்க செலவிடுகிறார், எந்த மாதிரியான காணொளிகளைப் பார்க்கிறார், எந்த வரிசையில் பார்க்கிறார், எவற்றுக்கெல்லாம் விருப்பம் தெரிவிக்கிறார், எவற்றைப் பகிர்கிறார் போன்ற விவரங்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன.

இணையமே பயன்படுத்தாத, வெறும் கருப்பு வெள்ளை கைப்பேசி மட்டுமே பயன்படுத்துகின்றவராக இருந்தாலும் கூட, அந்தக் கைப்பேசி ஒவ்வொரு சில நொடிகளுக்கும் அருகில் இருக்கும் செல்பேசி கோபுரத்துடனான தனது தொடர்பை உறுதி செய்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு செல்பேசி கோபுரத்துக்கு அனுப்பப்படும் சிக்னல்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றது.

மேலும், இணையத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், சென்சார் பொருத்தப்பட்ட வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் திறன் தொலைக்காட்சிப் பெட்டி (Smart TV) உள்ளிட்ட திறன் சாதனங்கள் என இணையத்தால் இணைக்கப்பட்ட பொருட்கள் (Internet of Things) அனைத்தும் மின் தரவுகளை உற்பத்தி செய்கின்றன. சமூக வலைத்தள நடவடிக்கைகள் – படங்கள், காணொளிகள் பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது, இணைய உரையாடல், யூடியூப் போன்ற தளங்களில் காணொளிகள் பார்ப்பது குறித்த விவரங்கள் போன்றவை அனைத்தும் உலகளவில் குவிந்து வரும் மின் தரவுகளுக்கான மிக முக்கியமான மூலங்களாக உள்ளன.

மேலே பட்டியலிடப்பட்ட வழிகளில் உற்பத்தியாகி பின்னர் சேமிக்கப்படும் மின் தரவுகள் அனைத்தும் “கட்டமைவற்ற மின் தரவுகள்” என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது இவையனைத்தும் முன்தீர்மானிக்கப்பட்ட கட்டமைவு ஏதுமில்லாத மின் தரவுகள். அதே நேரத்தில், கணினிகளில் நிறுவப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் வேர்ட், எக்செல் போன்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட மென்பொருளை இயக்கியதன் மூலமோ, மின்னஞ்சல்களின் வழியாகவோ உருவாகும் மின் தரவுகளின் உட்கட்டமைப்பு முன்தீர்மானிக்கப்பட்டது. இவை கட்டமைவான மின் தரவுகள் (Structured Data) என வகைப்படுத்தப்படுகின்றன.

***

ட்டமைவற்ற மின்தரவுகளை எதற்காக சேமிக்க வேண்டும்? சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ”அதிகமாக இருப்பதும் ஒன்றுமில்லாதிருப்பதும் வேறுவேறல்ல” என்கிற கண்ணோட்டமே இது விசயத்தில் நிலவி வந்தது. அதாவது, கைநிறைய அள்ளிய கழுதை விட்டையைப் போல், அன்றாடம் வந்து குவியும் மின் தரவுகளை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றும், அது ஒரு சுமையாகவுமே கருதப்பட்டது.

ஏனெனில், மிகப் பெரிய அளவில் குவியும் கட்டமைவற்ற மின் தரவுகளைப் பகுப்பாய்வுக்கு (data analytics) உட்படுத்த அப்போதிருந்த தொழில்நுட்பங்கள் போதுமானதாக இல்லை. அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த மின் தரவுப் பகுப்பாய்வு மென்பொருட்கள், கட்டமைவான மின் தரவுகளைக் கையாள்வதற்கு ஏற்பத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், தேவைப்படாத மின் தரவுகளைச் சேமித்து வைப்பதும் தொழில் நுட்பரீதியில் மிகவும் செலவு பிடிக்கத்தக்கதாக இருந்தது.

கட்டமைவற்ற மின் தரவுகளை பகுத்தாயும் திறன் கொண்ட தொழில்நுட்பம் சுதந்திர மென்பொருள் (Open Source) குழுக்களால் உருவாக்கப்பட்டன. குறிப்பாக ஓப்பன் சோர்ஸ் நிறுவனமான அப்பாச்சே உருவாக்கிய ஹடூப் (Apache Hadoop) எனும் மென்பொருள் கட்டமைவற்ற மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வுக்கு இருந்த தடைகளை உடைத்தது. இன்று சந்தையில் பிரபலமாக உள்ள பெரும்பாலான மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு மென்பொருட்கள், அப்பாச்சே ஹடூப்பின் செயல் அடிப்படைகளை உட்செரித்துக் கொண்டே உருவாக்கப்பட்டன. மீப்பெரும் மின் தரவுகளைப் பகுத்தாயும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு புதிய வேகத்தில் வளரத் துவங்கியது.

இனி, மீப்பெரும் மின் தரவுக் குவியலில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள கட்டமைவற்ற மின் தரவுகளில் மிக முக்கிய பங்காற்றும் சமூக வலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் முறை குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் !

0

துரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் ஆ.மேலப்பட்டியில் சென்ற 05.09.2017- அன்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பால்  உயிரிழந்த மக்கள்  அதிகாரம் அமைப்பின் உசிலம்பட்டி கிளை ஒருங்கிணைப்பாளர்  தோழர் அ.சந்திரபோஸ் அவர்களுக்கு உசிலம்பட்டியில் கடந்த 28.09.2017 அன்று மாலை 6  மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி  தலைமையில் நடந்த இந்த நினைவஞ்சலி பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன்,  மக்கள் அதிகாரம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்,  மக்கள் அதிகாரம் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன், செக்காணூரனி மக்கள் அதிகாரம் அமைப்பு  தோழர்  ஆசை,  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர் வழக்கறிஞர் பா.நடராஜன்,   பு.மா.இ.மு. தோழர் ராஜ்குமார், மற்றும் 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் திரு.பெருமாள்,  உசிலம்பட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர் திரு இ.சுதந்தரம் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். தேவாரம் பகுதி தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினர்.

தோழர் குருசாமி  தனது தலைமை உரையில்  “சிறு வயதில் தன்னை அமைப்பில் இணைத்துக் கொண்டு, தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் அமைப்பை உயர்த்திப் பிடித்து  செயல்பட்டு மறைந்த தோழர் சந்தரபோஸ்,  அமைப்பு போராட்டங்கள் அனைத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இன்றுவரை விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி  வந்தார். இந்த அரசு அனைத்து போரட்டங்களையும் ஹிட்லர் போல ஒடுக்கி வரும்  இந்த சூழ்நிலையில் தோழர் சந்திரபோஸ் அவர்விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த உறுதி ஏற்போம்!” என்று கூறினார்.

இரங்கல் உரை நிகழ்த்திய தோழர் ஆசை தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் உடன் நான் நெருக்கமாக இருந்தவன். அவர்  நினைவுகளைப் பற்றி பேச ஒரு நாள் போதாது. உசிலை பகுதியில் இவரை தெரியாதவர்கள் இல்லை. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழுவில் 1000 பேருக்கு மேல் உறுப்பினர் சேர்த்துள்ளார். இவருடைய முழக்கங்கள் தீப்பொறி போல இருக்கும்.  தவறு செய்யும் போது கடுமையாகக் கடிந்து கொள்வார், மாலையில் தட்டிக்கொடுத்து தவறுகளை திருத்துவார். சிறுவர்களிடம் அன்பாய் பழகுவார்.  பகத்சிங் பிறந்தநாளில் அவரது நினைவஞ்சலி கூட்டம் நடந்தது சிறப்பு.” என்று கூறினார்

58 கிராம கால்வாய் பாசன செயலாளர் ஐயா பெருமாள் தனது உரையில் “தோழர் சந்திரபோஸ் இந்த பகுதிக்கு சோசலிச டிரான்ஸ்பார்மராக செயல்பட்டு வந்தார். தோழரது ஊக்கமும் ஆக்கமும் எங்களை தொடர்ந்து போராட தூண்டும் விதமாக இருக்கும். நக்சல்பாரிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்” என்று கூறினார்.

பு.மா.இ.மு. மதுரை தோழர் ராஜ்குமார்  தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் இறந்த செய்தி எங்கள் பகுதிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எங்களால் நம்ப முடியவில்லை. போராட்ட தருணங்கள்தான் மகிழ்ச்சி என்று மார்க்ஸ் கூறுவதுபோல் தோழர் போராட்டங்களோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மறைந்துவிட்டார்.  தோழரின்  அர்ப்பணிப்பு  குணங்களை நெஞ்சிலேந்துவோம்” என்று கூறினார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை வழக்கறிஞர் நடராஜன் தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் 15 வயதில் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக மாற்றத்திலும், குடும்பத்தை அரசியல்படுத்துவதிலும்  முழுமையாக செயல்பட்டு வந்தவர். அவருடைய இந்த மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறினார்

தி.மு.க. உசிலை ஒன்றிய செயலாளர் திரு இ.சுதந்தரம் தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் எனக்கு தோழராகவும் உறவினராகவும் நெருக்கமாக இருந்தவர். ஒவ்வொரு போராட்டத்திலும் அவருடைய துடிப்பான செயல்பாட்டை என்னால் மறக்க முடியாது.    நகராட்சி ஆணையாளரிடம், ’நாங்கள் முதலாளி, நீ வேலைக்காரன், பதில்சொல்’ என்று சமசரமின்றி துணிச்சலாக பேசுவார்  அவருடைய மறைவு உசிலை பகுதிக்கு பெரும் இழப்பாக உள்ளது” என்று கூறினார்.

சிவகங்கை தோழர் நாகராஜ் தனது இரங்கல் உரையில் “தோழர் சந்திரபோஸ் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாக பம்பரமாக செயல்படுபவர். முல்லை பெரியாறு பிரச்சனையில் நான் இந்தப் பகுதிகளில் 3 நாள் பிரச்சாரத்தில்  இருந்தபோது நேரடியாக பார்த்து பழகிய அனுபவம் உள்ளது. வாழ்க்கை என்பது  உயிரோடு இருத்தல்,  மக்களுக்காக வாழ்தல் இந்த மக்கள் நாம் இறந்த பின்பும் நம்மைப் பற்றி பேசவேண்டும், சமூக மாற்றத்திற்காக நம்முடைய அர்ப்பணிப்பு தியாகம் இருக்க வேண்டும். குடும்ப பிரச்சனைகள் இருந்தும் பகுதி பிரச்சனையில் தன்னை    ஈடுபடுத்தி  வாழ்ந்தவர். போராட்டத் தருணங்களில் அவர் நம்முடன் எப்போதும் இருப்பார்” என்று கூறினார்.

தோழர் கதிரவன் தனது  உரையில் “போஸ் சாகவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கு இந்த அரசும் ஆளும் வர்க்கமும்தான் காரணம். போஸ் ஒரு போர்வீரன் போல செயல்பட்டவர். சுகாதாரத்தைப் பற்றி பேசும் மோடி ஒரு செப்டிக் டேங்க்,  அவனை பி.ஜே.பி தூக்கி சுமந்து கொண்டிருக்கிறது முதலில் மோடியை சுத்தம் செய்யுங்கள்,  மோடியை அம்பலப்படுத்திய போஸ் காட்டிய வழியில் நடப்போம்” என்று கூறினார்.

தோழர் மோகன் தனது உரையில் தோழர் சந்திரபோஸ் தனக்காக வாழவில்லை.    நல்ல பண்புகளோடு வாழ்வது உலகத்திலேயே பெருமையானது.  பொது வாழ்க்கையில் ஈடுபடுவதே  சந்திரபோஸ் சிறப்பு. எப்போதும் நாட்டைப் பற்றி சிந்திப்பது அவரது பண்பு. ஒரு தோழருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்துவது நமது கடமை அந்த அடிப்படையில் நாம் இங்கு தோழர் சந்திரபோஸ் -க்கு கூட்டம் நடத்துகிறோம்.

போஸ் இறந்தவுடன் அவருக்கு இறுணி சடங்கு நடத்த வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தபோது தோழர் சந்திரபோஸ் மனைவி துணிச்சலோடு   அவருக்கு  இறுதிச்சடங்கு செய்ய வேண்டாம் அவர் சார்ந்த அமைப்பு விதிகளின்படிதான் அவரை அடக்கம் செய்ய வேண்டும். அதுதான்  என் கணவரின் விருப்பம் என்று கூறும் அளவுக்கு தனது மனைவியை  அரசியல் கண்ணோட்டத்தில் வளர்த்துள்ளார் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. தோழர் சாகவில்லை அவரின் நினைவுகளை நமது இதயத்தில் வைத்து தொடர்ந்து போராடுவோம், அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோம்” என்று கூறினார்.

வழக்கறிஞர் தோழர் ராஜூ தனது இரங்கல் உரையில் “புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் சென்று போராடிய   நம் தோழர் சந்திரபோஸ் இறந்து தியாகி ஆனார். அவர் தனக்கு இப்படி ஒரு  வியாதி  இருக்கிறது என்று தெரிந்திருக்கலாம், நோயை குணப்படுத்த  மருத்துவ கொள்ளைக்குப் பயந்து நோயை மறைத்திருக்கலாம்.  மக்கள் அதிகார  அமைப்பிற்கு தெரிந்திருந்தால் அவரது நோயைக் குணப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஒவ்வொரு தோழரும் அமைப்பில் வந்து செயல்பட நீண்ட காலம் தேவைப்படுகிறது. வளர்ந்த தோழரை இழக்கும் போது அது அவர் குடும்பத்திற்கு மட்டுமன்றி இந்த பகுதிக்கு மட்டுமன்றி இந்த நாட்டிற்கே மிகுந்த இழப்பாகிறது. இறந்த தோழர் சந்திரபோஸ் அவர்களின் குடும்பத்தை எங்கள் அமைப்பு பார்த்துக் கொள்ளும்” என்று பேசினார். அது மறைந்த தோழர் சந்திரபோஸ் அவர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

ஒவ்வொரு தோழரும் வைரம் போன்று உறுதியானவர்கள் அவர்களை  பட்டை தீட்டி  மேலும் உறுதியானவர்களாக  வளர்ப்பது நமது அமைப்பு. உசிலை பகுதியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டார் போஸ் அதை நிரப்ப இன்னொருத்தர் வருவார். இருந்தபோதிலும் தோழர் சந்திரபோஸ் நம்மை விட்டுச் சென்றதற்கு யார் காரணம்?.  இந்த அரசுதான்.   போஸ் இறப்பில் நாம் சபதம் ஏற்போம் மருத்துவ சிகிச்சை இல்லாமல் இனிமேல் ஒரு தொழிலாளி கூட சாகக்கூடாது என்று.

அரசு மருத்துவமனைகளுக்கு  நூறு பேரைத் திரட்டி  மொத்தமாகச் சென்று நவீன மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் கொண்டு வந்தால்தான்  நாங்கள் இங்கிருந்து செல்வோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தால்  இந்த அரசு உடனே பணியும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பார்த்து  நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், நீட் தேர்வில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. வட மாநிலத்தைச் சேர்ந்த மேட்டுக்குடி வர்க்கம்  தமிழகத்திற்குச் சொந்தமான  அனைத்து மருத்துவ சீட்களையும் அள்ளிக்கொண்டு  நமது வரிப்பணத்தில் படித்துவிட்டு யாருக்கு சேவை செய்யப்போகிறார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளையும் மூடிவிட்டு  தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் கையில் மருத்துவத்துறையை ஒப்படைக்கும் நோக்கம் தான் இந்த நீட் தேர்வு.

அனைத்து இடங்களிலும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது, அனைத்து தொழிலாளிகளும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் மத்திய அரசு இதை கண்டுகொள்ளாமல் போராட்டத்தை ஒடுக்கும் யுத்திகளை மேற்கொண்டு வருகிறது. தோழர் சந்திரபோஸ் போன்ற தோழர்கள் இந்த மண்ணில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் தோழர் சந்திரபோஸ் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோம்.

இறுதியாக தேவாரம் பகுதி தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினார்கள்.

தோழர் சந்திரபோஸ்-க்கு செவ்வணக்கம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலம்பட்டி.

—————————————————————
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

லென்ஸ் – புரியாத புதிர் – திரை விமர்சனம் : அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி ?

7

மூணாறு அருகே அமைதியாக வாழும் யோகன் பேச இயலாத ஏஞ்சலை திருமணம் செய்கிறான். அந்த தம்பதியினர் உறவு கொள்வதை திருட்டுத்தனமாக படம் பிடிக்கும் ஒரு “பிளம்பர்” அந்தக் காட்சி அடங்கிய பென் டிரைவை தொலைத்து விடுகிறான். அந்தப் பென் டிரைவை எடுக்கும் அரவிந்த் இணையத்தில் பதிவேற்றம் செய்கிறான்.

அந்தரங்கம் வெளியான அதிர்ச்சியில் ஏஞ்சல் தற்கொலை செய்கிறாள். யோகனோ மனைவியின் மரணத்துக்கு பழிவாங்கும் பொருட்டு பிளம்பரைக் கொல்வதோடு, அரவிந்தை பொறி வைத்து பிடிக்கிறான். கூடவே அவன் வாயாலே குற்றத்தை வரவழைத்து அனைத்தையும் பதிவு செய்து இணையத்தில் வெளியிடுகிறான். இறுதியில் தற்கொலை செய்கிறான்.

இணையத்தை வக்கிரமாக பயன்படுத்துவோரால் பாதிக்கப்படும் ஒருவனின் பழிவாங்கல் கதை என்றாலும் தனது முதல் படத்தில் இத்தகைய அழுத்தமான சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொண்ட இயக்குநரை ஊடகங்கள் ஒருமித்த குரலில் பாராட்டுகின்றன.

ஆனால் மற்றவரது அந்தரங்கத்தை பகிரங்கமாக ரசிக்க கற்றுக் கொடுக்கும் ஊடகங்கள் பாராட்டுவதிலேயே இந்தப் படத்தின் போதாமை வெளிப்பட்டு விடுகிறது. மெரினா போராட்டத்திற்கு பிறகு தமிழ் மக்கள் செய்தி தொலைக்காட்சிகளை அதிகம் பார்க்க ஆரம்பத்திருக்கிறார்கள். அந்த செய்திகளில் அதிகம் கொண்டு சேர்க்கப்படுவது எது?

முன்னணியில் இருக்கும் பாலிமர் தொலைக்காட்சியில் கணிசமான அளவிற்கு குற்றச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. தினத்தந்தி – தினமலர் பாணியில் கள்ளக்காதல் செய்திகளே அன்றாடம் அணிவகுக்கின்றன. அர்த்தமுள்ள விவாதங்கள், ஆழ்ந்த பார்வைகளை விட விரைவுச் செய்திகள் எனும் பிரிவையே தொலைக்காட்சி நிர்வாகங்கள் அதிகம் இறக்குகின்றன. அதில் செலிபிரிட்டி, உலகம், இயற்கை, சினிமா, குற்றம் என்று கலந்து தயாரிக்கப்படும் தொகுப்பில பார்ப்போர் பெறுவது என்ன?

பாலியல் தடுமாற்றங்களும், குற்றங்களும் கொண்ட செய்திகள் அதிவேகத்தில் மனிதர்களிடத்தில் இறங்குகின்றன. குறுஞ்செய்திகளில் பாலியல் குற்றச் செய்திகள் 20 விநாடி வந்தாலும் மனதில் தங்குகின்றன. தங்கியவை விழிப்புணர்வை ஊட்டுவதற்கு பதில் ஏக்கத்தையும், அந்த ஏக்கம் தோற்றுவிக்கும் கற்பனை பரவசத்தையும் ஒருங்கே அலைக்கழிக்கின்றன.

லென்ஸ் திரைப்படத்தில் வரும் அரவிந்த் ஒரு  ஐ.டி ஊழியராக, மனைவி, குழந்தை, லேப்டாப் சகிதம் சராசரியாகவும் கிரீன் டீ குடிப்பவனாக கொஞ்சம் அ-சராசரியாகவும் வாழ்கிறான். இரவிலோ அவனது சராசரி உலகம் முடிவுக்கு வருகிறது. மூடிய அறையில் லேப்டாப்பில் வேட்டைக்கு கிளம்புகிறான். ஃபேஸ்புக்கில் கிடைக்கும் பெண்களோடு கடலை போட்டு இறுதியில் ஸ்கைப்பில் வீடியோ சாட் செய்கிறான். அதன் உச்சமாக இடுப்பாடைகளை களைந்து சுய இன்பம் செய்வது!

நீ மட்டும் நேரில் இருந்தால்….? என்று ஒரு பெண்ணிடம் பேசும் அரவிந்த் அதை உண்மையில் செய்யுமளவு ‘தைரியம்’ உடையவன் அல்ல. அவனது நோக்கில் சொன்னால் அத்தகைய ‘வாய்ப்புகள்’ – அதிர்ஷ்டம் அவனுக்கு இல்லையாம்!

ஆரம்பத்தில் இந்தக் காட்சி வரும் போது பார்வையாளர்கள் அதிர்ச்சியோடு ஒரு இருண்ட உலகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த அதிர்ச்சியின் உளவியல் என்ன? மற்றவரோடு சேர்ந்து இத்தகைய அந்தரங்க அழுக்குகளை பார்ப்பது குறித்த வெட்கமா? இல்லை தன்னை நினைவுபடுத்தும் குற்ற உணர்வா? இல்லை இப்படி ஒரு குற்றம் உலகத்தை கண்ட அதிர்ச்சியா, இல்லை இவையெல்லாம் கலந்து ஏற்படுத்தும் குழப்ப நிலையா?

இருவருக்கிடையில் நடக்கும் பாலியல் உறவு என்பது அந்தரங்கமானதுதான். அந்த அந்தரங்கத்தை மற்றவர் மதிப்பதே கண்ணியமானது. ஆனால் அந்த உறவின் அங்கீகாரம் குறித்த வெளிப்படைத் தன்மையும், அந்த உறவின் சரி தவறுகளை தீர்மானிக்கின்ற ஜனநாயக உணர்வும் அந்தரங்கமானது அல்ல. பாலியல் பிரச்சினைகளின் அந்தரங்க தன்மையை மட்டும் கிளுகிளுப்புடன் பொதுவெளியில் வைக்கும் ஊடகங்கள் அதன் சமூகப் பரிமாணங்களை நிதானத்துடன் ஒருபோதும் பேசுவதில்லை.

இதன்படி லென்ஸ் படம் இப்பிரச்சினையை எப்படி அணுகுகிறது?

நிக்கி என்ற பெண் பெயரில் அரவிந்தோடு தொடர்பு கொள்ளும் யோகன் வீடியோ சாட்டிற்கு அழைக்கிறான். சல்மான்கானின் முகமூடியோடு அரவிந்தும் அரட்டையை ஆரம்பிக்கிறான். இந்த முகமறைப்பு என்பது தனது ஒழுக்கத்தை – அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.

அதே நேரம் இப்படி தற்காப்பிலேயே காலந் தள்ளினால் புளித்த ஆப்பிளை சுவைக்க முடியாது. ஏற்கனவே இப்படி பலரைப் பார்த்திருப்பவன் என்பதால் எதிரே முகமூடியோடு இருக்கும் நிக்கி கேட்டுக் கொண்டதன் பேரில் உடன் சல்மானை அகற்றி அரவிந்தாக தரிசனம் தருகிறான். எதிரில் இருப்பது மொட்டைத் தலையுடன் ஒரு ஆண் எனத் தெரிய வந்ததும் அரவிந்துக்கு ஏற்படுவது அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அல்ல. அது ஒரு எரிச்சல்.

பாலியல் – பாலினம் சார்ந்த பிரச்சினைகளின் பொருட்டு இணையத்தில் பாலினத்தை மாற்றி உலவுவது வழமையானதுதான். ஆகவே அரவிந்த் அந்த அரட்டையை நிறுத்தி விட்டு அடுத்த வேட்டைக்கு தயாராக நினைக்கிறான். ஆனால் அவனது முந்தையை வேட்டையில் சிக்கிய பெண் கூட யோகனால் வாடகைக்கு நியமித்து அரவிந்திற்காக விரிக்கப்பட்ட வலை என்பது தெரிய வரும் போது தான் குற்றமிழைத்தவன் என்பதை மறைக்க தானே பாதிக்கப்பட்டவனாக அவன் நியாயம் பேசுகிறான்.

தனிமனித உரிமை, அந்தரங்க விசயங்களை பொதுவில் பேசக்கூடாது, ஒரு ஆணும் பெண்ணும் முடிவு செய்து ஈடுபடும் உறவில் அது ஏற்கப்பட்டதோ இல்லை விலக்கப்பட்டதோ எதுவாயினும் மற்றவர் அதில் நியாயம் பேசுவது தவறு என்பதாக ஆரம்பிக்கிறது அரவிந்தின் தர்க்கம். பிறகு யோகனது மனைவியான ஏஞ்செலுக்கும் அதே உரிமைகள் கிடையாதா என்று யோகன் கேட்கும் போது அரவிந்தின் உலகளாவிய தர்க்கம் தன்னலத்தின் தர்க்கமாக மாறுகிறது. அரவிந்தின் மனைவியை துகிலுறிவதாக யோகன் சித்தரிக்கும் காட்சியால் அவன் முன்னர் பேசியதற்கு எதிராக தனது மனைவியை விட்டுவிடு என்று வாதங்களை மாற்றி போட்டு கெஞ்சுகிறான். நியாயங்கள் அநியாயங்களாகவும், அநீதிகள் நீதியாகவும் உருமாறுகின்றன.

இந்த முரணை இயக்குநர் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் என்றாலும் இதுவே இந்தப் பிரச்சினையின் மையமல்ல. கூடுதலாக பேசவேண்டிய தீவிரத்தை ஒதுக்கிவிட்டு பார்ப்போரை இரண்டு விதத்தில் இப்படம் அசைபோட வைக்கிறது. ஒன்று ஏஞ்சலாவுக்கு நடந்தது போல நமது அந்தரங்கம் இப்படி வெளியே வந்தால் எப்படி இருக்கும் என்ற சுய அதிர்ச்சி. இரண்டாவது, பார்ப்போரின் குற்ற நடவடிக்கைகள் பாதுகாப்பற்றது என்பதோடு அவர்களை ‘ஒழுக்கவாதத்திற்குள்’ தள்ளிவிட்டு அச்சுறுத்தும் ‘ஒழுக்க’ அதிர்ச்சி.

இணைய வக்கிரங்கள் என்றல்ல, பத்திரிகைகளில் வரும் குற்றச் செய்திகள் கூட ஒரு கணத்தில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அதாவது ஒரு கொலையோ அல்லது ஒரு சிறுமி மீதான பாலியல் வன்முறையோ நமது குழந்தைகளை ஒப்பிட்டு மனம் கலக்கமடையும். ஒரு தனிநபநருக்கு சமூகரீதியான பாதுகாப்பு எந்த அளவுக்கு கிடைப்பதில்லையோ அந்த அளவுக்கு இந்தக் கலக்கம் நம்மை வாட்டும்.

பாலியல் பிரச்சினைகளில் வரும் செய்திகள் வேறு விதமான ஒப்பிடலையும் நம்மிடம் தோற்றுவிக்கும். குறிப்பாக கள்ளக்காதல் தொடர்பான செய்திகளைப் படிக்கும் போது அது ஒரு சமூக அதிர்ச்சி அளிப்பதோடு கூட ஆண்களிடம் (குறைவாக பெண்களிடமும்) மெல்லிய அளவிலான ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறது. அவர்கள் கள்ளக்காதல் கொலைகளையோ குற்றங்களையோ ஆதரிக்கவில்லை. எனினும் அப்படிப்பட்ட பெண்கள்(ஆண்கள்) தமது சுற்றத்தில் இல்லையே அல்லது நாம் அவ்வளவு தைரியமற்று இருக்கிறோமே என்றெல்லாம் கொஞ்சம் இழுத்துச் செல்லும்.

ஆனால் இந்த இழுப்பு தேவைப்படாத அளவுக்கு ‘தெளிவாக’ இருப்போரும் உண்டு. இந்த இரண்டு முனைகளுக்கு இடையே அலைபாயும் மாந்தர் மனநிலையை லென்ஸ் படம் எப்படி பாதிக்கிறது?

ஏஞ்சலாவின் அந்தரங்கத்தை பொதுவெளியில் ஏற்றும் அரவிந்த் அவனது மனைவியை அப்படி காட்டும் போதுதான் கொஞ்சம் கலங்குகிறான். இப்படி ஊரில் ஒரு பெண்ணுக்கு ஒரு அநீதி இழைக்கப்டும் போது உனது அக்கா தங்கச்சிக்கு நேர்ந்தால் நீ சும்மா இருப்பியா என்ற வழமையான கேள்வியை கேட்டிருப்போம். இந்த அணுகுமுறை குறிப்பிட்ட குற்றத்தை அதே குற்றம் உனக்கு நடந்தால் எப்படி என்று மாற்றிப் போட்டு கேட்கிறது. லென்ஸ் படத்தின் அடிநாதமான பார்வையும் இதுதான். அதன்படி பார்வையாளர்கள் ஒரு வித ‘ஒழுக்கவாத’த்திற்குள் தள்ளிவிட்டு அச்சுறுத்துவதால் என்ன பயன்?

ஒழுக்கம் வேறு, ஒழுக்கவாதம் வேறு. மனித குலத்தின் நாகரீக வளர்ச்சிக்கான அடிப்படை சமுதாயக் கூட்டுழைப்பில் கட்டப்பட்டது. சேர்ந்து போனால்தான் வேட்டையில் விலங்கு கிடைக்கும்; இயற்கை பேரழிவுகளில் இருந்து தப்பித்து உயிர் வாழ முடியும். பின்பு சமூகத்தின் உற்பத்தி வளர வளர இந்த கூட்டு உழைப்பின் உறவுகள் நெறிமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றை சொத்துடமை சார்ந்த பொருளாதார உறவுகள் மக்களை ஒரு சமூகமாக ஒரு மீப்பெரும் மனிதனாக பயணிக்க வைக்கிறது.

விலங்கு நிலையில் இருக்கும் பாலியல் உணர்ச்சி இத்தகைய சமூக நியிதிகளினால் பண்படுவதோடு சேர்ந்து புண்படவும் ஆரம்பிக்கிறது. பண்படுவது காதல் என்றால் புண்படுவது அந்த காதலுக்கு உருவாக்கப்பட்ட பொருளியல் தடைகள். பண்படுவதற்கு பௌதீக அடிப்படையாக சமூக உறவும் புண்படுவதற்கு பௌதீக அடிப்படையாக விலங்கியல் உணர்ச்சியும் முரண்படுகிறது.

ஆகவே சமூகவியல் வரலாற்றில் காதல் என்பதே இன்றைக்கு அழைக்கப்படும் ‘கள்ளக் காதலில்தான்’ தோன்றியது. அதாவது விரும்பியவரை மணமுடிப்பதற்கு ஏற்படும் தடைகளே கள்ளத்தனமாக காதலிப்பதை தோற்றுவித்தது. இவ் வரலாற்றின் படி இன்றைய காதலும் கூட அன்றைய ஒழுக்கவாதத்தை மீறிப் பிறந்த ஒரு புதிய ஒழுக்கம். ஒழுக்கவாதம் என்பது நேற்றைய நியதிகளின் படி இன்றைக்கு தேவைப்படும் மாற்றத்தை அல்லது புதிய ஒழுக்கத்தை எதிர்க்கும் ஒரு சமூக அதிகாரம்.

வாய்மை எனப்படுவது ஒழுக்கமென்றாலும் பிறர் நலன் பயக்க அதை மீறலாம். ஒழுக்கம் என்றால் என்ன?  (Communist morality is that which serves this struggle and unites the working people against all exploitation, against all petty private property; for petty property puts into the hands of one person that which has been created by the labour of the whole of society. In our country the land is common property”) “புரட்சிக்கு எவையெல்லாம் நன்மை பயக்குமோ அவையெல்லாம் ஒழுக்கம்” என்றார் லெனின். தற்கொலைப் போராளியை கோட்பாட்டு ரீதியில் மறுக்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி கூட தேவையையொட்டி அதை மீறலாம்.

ஆகவேதான் ஒழுக்கத்தை ஒழுக்கவாதமாக பார்ப்பதும் பரிசீலிப்பதும் ஊறு விளைவிக்கும். சில அறிஞர்கள் கருதுவது போல இத்தகைய பண்பாட்டு மாற்றங்கள் சில அசாதாரணமான தனிநபர்களின் சிந்தனையிலிருந்தோ இல்லை முசுலீம் – இந்து மதவெறியர்கள் முன்வைக்கும் புனித நூல்களிலோ உருவாகுவதில்லை. மக்களின் வாழ்க்கைப் போராட்டமே புதிய விழுமியங்களை உருவாக்குகின்றது. இவை நமது தன்னுணர்வுக்கு அப்பாற்பட்டு புறத்தே நம்மை அறியாமல் உருவாகின்றன. அறியாமல் நடக்கும் இப்போராட்டத்தை அறியும் வரை அறிந்ததாக நாம் நினைக்கும் நேற்றைய ஒழுக்கங்களும், மீறலும் நம்மை நிலைகுலையவைக்கும் அறியாமையில் மீள முடியாமல் ஆழ்த்துகின்றன.

லென்ஸ் – திரைப்படம் இணையத்தில் பாலுறவு சார்ந்து சிக்கிக் கொண்டிருப்போரை பழைய வகை வில்லன் நம்பியார் போல மிரட்டுகிறது. மற்றவர் அந்தரங்கத்தை பார்க்கும் நீ அதே போல உனது அந்தரங்கத்தை மற்றவர் பார்த்தால் என்ன செய்வாய் என்று ஒரே அடியாக வீழ்த்துகிறது. இத்தகைய கிளீன் போல்டு சமாச்சாரங்கள் எவையும் ஃபோர்னோவில் தடுமாற்றத்துடன் சிக்கியிருக்கும் மனங்களை மீட்பதற்கு உதவாது.

ஏனெனில் மற்றவர் நமது அந்தரங்கத்தை பார்க்க கூடாது என்பது உடலளவில் மட்டுமே சரி. உள்ளத்தளவில் மற்றவர்களின் பார்வையில் நமது அந்தரங்கம் படாதவரை அதாவது குறிப்பிட்ட பாலுறவு குறித்து மனந்திறந்து பேசாத வரை குறிப்பிட்ட நபர் ஏன் ‘கள்ளத்தனம்’ செய்கிறான்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போவது மட்டுமல்ல, அவனை வெளிப்படையாக முரணற்ற வகையில் செயல்பட வைக்கவும் முடியாது.

சமூக வாழ்க்கையில் இணக்கமாக இருக்க வேண்டிய தேவை கட்டயாத்தில் இருப்பினும் அது இயல்பாகவும் இருக்க வேண்டும். விவாகரத்து உரிமை இருக்கும் வரைதான் மண உறவும் காதலோடு இயல்பாக நீடிக்க முடியும். இந்தக் கட்டாயம் – இயல்பு என்பது அம்மா குழந்தையை முத்தவிடுவதும், தேவை இருப்பின் ‘கண்டிப்பதும்’ போல. பாலியல் பிரச்சினைகளில் நாம் சமூக அம்மாவின் அருமையை மறந்து கண் காணாத இடத்திற்கு ஓடிப் போகிறோம். நாம் ஏன் அந்த மீப்பெரும் அம்மாவிடம் பேச மறுக்கிறோம்?

படத்தில் யோகனின் மனைவி ஏஞ்சல் ஏன் தற்கொலை செய்கிறாள்?

தனது படுக்கை அறையையே கேமரா ஊடுறுவி விட்டது என்பதறியும் அந்தப் பேதைப் பெண் பிறகு வீடு முழுக்க ஒரு எலி – கொசு கூட நுழைய முடியாதபடி சன்னல், துவாரங்கள் அனைத்தையும் மூடுகிறாள். குளிக்கும் போது மொத்த ஆடையோடு கூட காலுறையும் அணிகிறாள்.

பித்துப் பிடித்தவள் போல அவள் செய்யும் இந்த ரணமான பாதுகாப்பு எதை உணர்த்துகின்றது? எல்லா இடத்திலும் ஏதோ ஒரு கண் தனது அந்தரங்கத்தை பார்க்கிறது என அவள் பயந்து கற்பித்துக் கொள்கிறாள். கணவனோடு தனது உறவு இணையவெளிக்கு வந்த பிறகு இருட்டு அறையில் புர்கா போட்ட பிறகும் தனது உடலை ‘அக் கண்கள்’ வெறியோடு ஊடுறுவிப் பார்ப்பதாக அஞ்சுகிறாள். எனில் இங்கே எதுவும் பாதுகாப்பானது இல்லை.

ஆகவே இந்த யதார்த்தம் சுட்டும் புனைவு உலகிலிருந்து அவள் தற்கொலை மூலம் விடைபெறுகிறாள். இது சமூகத்தின் அநாகரீகத்தை அம்மணமாக்கும் ஒரு வேதனையான கலகம். அதே நேரம் சமூகத்தின் அநாகரிக மிரட்டலை எதிர் கொள்வது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த “புரியா புதிர்” படத்தின் களமும் இதுதான்.

இசைக் கருவிகளை விற்கும் கடைக்கு வரும் மீராவைக் காதலிக்க ஆரம்பிக்கிறான் கதிர் (சேதுபதி). கண்ணியமாக காதல் வளரும் போதே சில மர்மமான துன்பங்கள் செல்பேசியின் வீடியோ செய்திகளாக தாக்க ஆரம்பிக்கின்றன. மீரா உடை மாற்றுவது, குளிப்பது அனைத்தும் ஒரு அனாமதேய எண்ணில் இருந்து வருகின்றன. கள்ள உறவுகளை வைத்திருப்பதும், போதை பொருட்களை பயன்படுத்துவதும் இன்றைய உலகின் நாகரீகங்களாக அங்கீகரிக்கும் இரண்டு நண்பர்கள் கதிருக்கு உண்டு. அவர்களை அவன் செல்லமாக கண்டித்தாலும் அது நட்பை துண்டிக்கும் அளவுக்கு இல்லை.

காதலி மீராவின் காட்சிகள் வருவதைத் தடுக்க நினைப்பவனுக்கு போலீசு உதவும் விதத்தில் இல்லை. இடையில் அலுவலக மேலாளரது மனைவியோடு உறவு வைத்திருக்கும் படம் வெளியான அவமானத்தில் கதிரின் நண்பன் தற்கொலை செய்ய, பாரில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்படுகிறான். மீராவின் படங்களை அனுப்பி துன்புறுத்துவது யார்? என்று ரசிகர்கள் இருக்கை முனையில் ஆராயும் பொருட்டு சில பல திசை திருப்பல்களை செய்து விட்டு இறுதியில் உண்மையைச் சொல்கிறார் இயக்குநர்.

கல்லூரி ஒன்றின் கலை நிகழ்ச்சியில் கதிரைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறாள் மீரா. அவளது தோழி மிருதுளா அந்தக் காதலை ஏற்றி விடுகிறாள். காதலை எப்படி சொல்வது என அவள் குளியல் உடையோடு அபிநயிக்கும் காட்சியை படம்பிடிக்கும் மீராவின் செல்பேசியை கதிரின் நண்பர்கள் எடுத்து காட்சியை பொதுவெளிக்கு கொண்டு வருகின்றனர். அப்போது கதிரின் கவனத்தில் மீரா என்ற பெண் இல்லை.

பிறகு மிருதுளாவை கண்டிக்கிறது கல்லூரி நிர்வாகம். அப்பாவோ ருத்ரதாண்டவம் ஆடுகிறார். யாரோ ஒரு ஆணோடு சல்லாபம் செய்கிறாள் மிருதுளா என மொத்தக் கல்லூரியும் ரசிக்கிறது. அவமானம் தாங்க முடியாமல் மிருதுளா கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறாள். இந்த வலியை உணர்த்தும் பொருட்டே மீராவும் கதிரை காதலிக்கிறாள். அவளது காட்சிகளை அவளே எடுத்து அனுப்பி  கதிரை கலங்க வைக்கிறாள்.

கடைசியில் இக்கதையினை ஒரு டைரியில் எழுதி வைத்து விட்டு அவளும் தற்கொலை செய்கிறாள். கடைசிக் காட்சியில் நான் எந்த தப்பும் செய்யவில்லையே என கதிர் கதறும் போது அவனது நண்பர்களை கதிர் கண்டிக்கவில்லையே என கூறும் மீரா, தன்னைச் சேர்ந்தவர்கள் இறக்கும் போது ஏற்படும் வலியை கதிரும் உணரவேண்டும் என காதலுடன் விடைபெறுகிறாள்.

இந்தப் படமும் லென்ஸ் படம் போல அதே கருத்தையே பிரதிபலிக்கிறது. மேலாளரின் மனைவியோடு இருக்கும் படம் வெளியான விவகாரத்தில் அது நான் இல்லை என வாதிடும் கதிரின் நண்பன், பிறகு அது தனது தனிப்பட்ட விசயம் எனவும் அதற்காக தன்னை வேலை நீக்கம் செய்ய முடியாது என்கிறான். மிருதுளா, மீராவுக்கு ஏற்பட்ட அவமான அதிர்ச்சி அவனுக்கு ஆரம்பத்தில் ஏற்படவில்லை. வேலை போன பிறகே அவன் தற்கொலை செய்கிறான்.

மற்றவரின் அந்தரங்கத்தை ரசிப்போர் தமது அல்லது தன்னைச் சேர்ந்தோரது அந்தரங்கத்தை ரசிப்பார்களா என்று படம் கேள்வி எழுப்புகிறது. நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கவில்லையா என்ற அதே கேள்வி. இயக்குநர் அவர்களே, இந்த கேள்வியின் நியாயம் இறந்து நாட்கள் பலவாகிவிட்டது. இப்போது நாம் கடந்து போக வேண்டியது இந்த பிரச்சினையை ஒரு பெண் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதே!

சிதம்பரத்தில் பத்மினியின் கணவனை அடித்துக் கொன்ற போலீசு மிருகங்கள் பத்மினையையும் குதறித் தீர்த்தன. அந்த வழக்கை பொதுவெளியில் எதிர்கொண்டு அந்த மிருகங்களுக்கு தண்டனை வாங்கித் தந்தார் பத்மினி. இங்கே பத்மினி தைரியமாக போராடியது போலீசு – அதிகார வர்க்கத்தை எதிர்த்து மட்டுமல்ல. ஒரு பெண்ணின் உடலை வைத்து பின்னப்பட்ட புனித அடிமைத்தனத்தை உதறியதில்தான் பத்மினியின் வீரத்தைக் காண்கிறோம். இந்திய ராணுவத்தை எதிர்த்து ஆடைகளை துறந்து போராடிய மணிப்பூர் பெண்களின் அம்மணம், சீருடை தரித்து யோக்கிய வேசம் போடும் இராணுவத்தின் வக்கிரத்தை தோலுரித்துக் காட்டியது.

மக்கள் அதிகாரம் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களின் போதும் போராட வந்த பெண் தோழர்களிடம் போலீசு இப்படித்தான் செயல்பட்டது. கைது செய்வதின் பேரில் அவர்களது பெண்ணுறுப்புகளை தொட்டு, தடவி, தாக்கி அச்சுறுத்தியது. அதனால் அடுத்த போராட்டத்திற்கு அப்பெண்கள் வரத் தயங்குவார்கள் என்பது போலீசின் திட்டம். ஆனால் இப்பிரச்சினையை அஞ்சாமல் அப்பெண் தோழர்கள் பேசி அதை எதிர்கொள்ள முடிவெடுத்து தொடர்ந்து போராடுகிறார்கள்.

இங்கே இரண்டு படங்களும் பெண்களின் புனிதத்திற்கு ஏற்படும் இழுக்கை வைத்தே பார்வையாளர்களிடம் மிரட்டி போதிக்கின்றன. இந்த மிரட்டலால் பெரிய பலனில்லை என்பதே நமது விமரிசனம்.

கள்ளக்காதல் காட்சிகளை இணையத்தில் கொட்டும் ஆண்களுக்கு அது அவர்களது ஆண்குறிகளது கம்பீரத்தை காட்டுவதாக நம்புவதால் பெருமையடைகிறார்கள். பெண்களுக்கோ ஊரார் மேய காத்திருக்கும் வேசிப்பட்டம் கிடைப்பதால் முடங்கிப் போகிறார்கள். இல்லையெனில் கொலை அல்லது தற்கொலை மூலம் மரித்துப் போகிறார்கள்.

பெண்களின் குளியலறை காட்சிகளை படம்பிடிக்கும் ஆண்கள் போர்னோ உலகிற்கு தமது டெக்னாலஜியின் பங்களிப்புகளாக மதிப்பெண் போட்டுக் கொள்கிறார்கள். சிலர் பழிவாங்குவதற்கும் செய்கிறார்கள். அக்காட்சிகள் வெளியானதும் தன்னை சமூகம் இனி ஏற்காது என முடிவெடுத்து அப்பெண்கள் உடைந்து போகிறார்கள் – தற்கொலை செய்கிறார்கள்.

காதலின் ஜனநாயகப்படுத்தலை பேசாமல் கள்ளக் காதலின் அதிர்ச்சி ஏற்படுத்தும் வன்முறைகளை பேசிப் பயனில்லை. பெண்ணின் உடல் புனிதத்தை களையாமல் நமது வீட்டுப் பெண்களுக்கு மட்டும் அது நடக்க கூடாது என்று நினைப்பதால் பயனில்லை.

ஆகவே இப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் போராடும் விதத்தை கதையாக எடுத்திருக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. இப்பிரச்சினைகளின் வலியும், விளைவும், பல்வேறு சமூகப்பரிமாணங்களோடு உணர்த்த வேண்டும் என்கிறோம். நம்பியார் துகிலுறியும் போது எம்ஜிஆர் வந்து காப்பாற்றுவதற்கு கை தட்டுவதும், அதே துகிலுறிதல் ஆப்பிள் செல்பேசியால் பொதுவெளிக்கு வரும்போது கண் கலங்குவதும் வேறு வேறு அல்ல.

சுருக்கமாகச் சொன்னால் ஆணாதிக்கத்தின் காம நுகர்வு வெறியால் காதலை கண்டு கொள்ளவே இயலாது. உடல் புனிதத்தால் அடிமைப்பட்டிருக்கும் பெண்ணடிமைத்தனம் ஜனநாயகமயமான காதலுக்கு போராடவே வராது.

இவற்றை எப்படி கதையாக எடுக்க முடியும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் லென்ஸ் – புரியாத புதிர் இரண்டும் தொழில்நுட்பத்தினால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பதைத் தாண்டி ‘பா’ வரிசைப் படங்களின் நிலவுடமை அடிமைத்தன உணர்ச்சிகளிலிருந்து எள்ளளவும் வேறு படவில்லை.

இன்றைய வாழ்வின் யதார்த்தத்தை அச்சு அசலாக நோக்கும் புதிய இயக்குநர் ஒருவர் இக்கட்டுரையின் பேசுபொருளை செரித்துக் கொண்டு அப்படி ஒரு படம் எடுப்பார் என நம்புகிறோம்.

_____________

அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !

3

அரசு இயந்திரத்தின் ஒத்தாசையுடன் சர்வவியாபகமாகும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடுகள்!  மீளமுடியாத நெருக்கடியில் சிக்கும் தமிழக உயர்கல்வித்துறையும் வேலை வாய்ப்புச் சந்தையும் !!

“அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள பேராசிரியர்கள் அனைவரையும் மற்ற அரசு கல்லூரிகளில் நிரப்பும் வரை புதிய ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு மாநில பல்கலைகழகங்களை கேட்டு கொண்டுள்ளதாக உயர்கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்ததாக” 25-9-2017 தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2017 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களையும் அலுவலக ஊழியர்களையும் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிநிரவல் செய்து முடிக்கும் வரை எந்த பல்கலைக்கழகமும் புதியதாக எவ்வகையான நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்துள்ளது.

முதற்கட்டமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 369 உதவிப் பேராசிரியர்கள் பல்வேறு அரசுக் கல்லூரிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.  தற்போது 545 ஆசிரியர்கள் மற்றும் 2,645 அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியிடமாற்றம் செய்யப் படுகின்றனர்.

தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் மட்டும் 45 அலுவலக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பாலிடெக்னிக்குகளில் 211 விரிவுரையாளர்கள் மற்றும் 40 உடற்கல்வி இயக்குநர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 86 உதவிப்பேராசிரியர்கள், அரசு கலைக்கல்லூரிகளில் 208 உதவிப்பேராசிரியர்களுக்கும் மாற்றல் வழங்கப்பட்டுள்ளனர்.

உதவியாளர்கள், எழுத்தர், ஓட்டுநர், மென்பொருளாளர்கள் உட்பட்ட 2,635 அலுவலகப் பணியாளர்களை தலைமைச் செயலகம் உட்பட்ட அரசுத் துறைகளில் பணியிடமாற்றம் செய்கின்றனர்.

தற்போது உயர்நீதிமன்றத்தில் 500 ஊழியர்களும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 552 பேரும், தொழிற்கல்வி இயக்குநரகத்தில் 452 பேரும், சமூகநலத்துறை இயக்குநரகத்தில் 452 பேரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை முதற்கட்டமாக பேராசிரியர்கள் உட்பட 3,170 ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1,031 பேராசிரியர்கள் (19 பேராசிரியர்கள், 12 இணை பேராசிரியர்கள், 844 உதவிப் பேராசிரியர்கள், 150 புரோகிராமர்கள் மற்றும் 6 உதவி நூலகர்கள்) உட்பட மொத்தம் 5755 ஊழியர்கள் அதிகமாக பணியாற்றுவதாக தமிழக அரசு தற்போது கண்டுபிடித்துள்ளது.

இவர்களனைவரும் அங்கிருந்து தமிழ்நாட்டு அரசின் அனைத்துப் பொதுத் துறைகளுக்கும் மாற்றப்படுவது வரை தமிழ்நாட்டில் இனி புதிய நியமனங்களோ, பதவி உயர்வுகளோ நடத்தக் கூடாது என ஒவ்வொரு துறைக்கும் சுற்றறிக்கை விடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இரண்டு கட்டமாக நூற்றுக்கணக்கான அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழியங்கும் பொறியியல் கல்லூரி கற்றல் உதவியாளர்கள் (teaching fellows) 45 பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு அரசுத் துறைகளில் குறைந்த கூலிக்கு கடினமான வேலைகளை செய்து வந்த தற்காலிக ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 37% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலுள்ளன.  இங்கு தற்காலிக விரிவுரையாளர்கள் குறைந்த கூலிக்கு (ரூ. 10,000-த்திலிருந்து ரூ. 20,000 வரை சம்பளத்தில்) பிற பணிப்பயன்களோ, பணிப்பாதுகாப்போ, கௌரவமோ இல்லாமல் மாடாக உழைக்கும் நிலைதான் இதுவரை இருந்தது.

Ph.D அல்லது NET தேர்வில் வென்றாலும் கூட TRB நியமனத்தின் போது 7.5 வருட பணிமூப்பு இருந்தால் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் வேலைக்கு தகுதியானவர் என்ற தமிழக அரசாணை நடைமுறையில் உள்ள காரணத்தால் இந்தகைய கொத்தடிமை வேலைக்கு படித்த தகுதியான இளைஞர்கள் பலரும் வேலைக்கு வருகின்றனர்.  இன்று 8 வருட பணி மூப்பு இருப்பவரைக் கூட வேலையிலிருந்து தயவு தாட்சண்யமின்றி விரட்டியடித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தைப் பற்றி

1929 –ல் அண்ணாமலைச் செட்டியாரால் தொடங்கப்பட்டது. 50 துறைகள். 12,500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள். 1979 – 80 ஆம் ஆண்டு தொலை தூர கல்வி தொடங்கப்பட்டது.  259 பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு, முதுகலைப் பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 89 கல்வி மையங்கள், 78 தகவல் மையங்கள்.

முறையற்ற நியமனம் மற்றும் நிர்வாக சீர்கேடு, நிதி சிக்கல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை. 2012 ஆம் ஆண்டு தொலைதூரக் கல்வியை தமிழக அரசு முடக்கியது. (அந்த மசோதாவை 5 ஆண்டுகளுக்குப் பின் 2017 தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது).  இதை எதிர்த்து 2012 -ல் ஆசிரியர்கள், ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றனர். சிபிஎம் மற்றும் பாமக ஆகியோர் குரல் கொடுக்கின்றனர். நிர்வாகத்தை 2013 -ல் தமிழக அரசு அரசாணை மூலம் எடுத்துக் கொள்கிறது.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனியதிகாரி சிவ்தாஸ் மீனா

தமிழக அரசு சிவ்தாஸ் மீனாவை தனியதிகாரியாக நியமிக்கிறது.  பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட முறையற்ற நியமனம், யுஜிசி விதிகளுக்கு முரணான பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் என பல்வேறு முறைகேடுகள் பற்றிய விரிவான அறிக்கையை தமிழக உயர்கல்வித் துறையிடம் அவர் சமர்ப்பிக்கிறார்.

2015 -ல் புதிய துணை வேந்தராக மணியன் நியமனம் செய்யப்படுகிறார். பதிவாளராக ஆறுமுகம் பொறுப்பேற்கிறார். தமிழக அரசு நிதி ஒதுக்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது. ஆனால் பணிப்பயன்கள், பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை.

அரசிடமிருந்து ஆண்டுதோறும் ரூ. 200 கோடிக்கு மேல் மானியம். அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் ரூ. 2,300 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. 2017 – 18 ஆம் ஆண்டில் உயர்கல்வித்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூ. 139 கோடியில் 43% அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மட்டுமே தின்று செரிக்கிறது.  இப்பல்கலைக் கழக ஊழியர்களின் சம்பளப்பணம் மட்டும் மாதாந்திரம் ரூ. 40 கோடி என்றால் இந்த வெள்ளையானையை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டி மேய்க்கும் தமிழ்நாடு அரசின் கயமையின் தீவிரத்தைப் பாருங்கள்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட 25 ஆண்டுகளிலேயே மீளமுடியாத நெருக்கடிக்குள் உயர்கல்வித்துறை சிக்கியுள்ளது. இப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோன்றியுள்ள இந்நெருக்கடியை தமிழகம் முழுக்க பரவலாக்குவதற்குப் பின்னால் ஒரு மாபெரும் ஊழல் ஒளிந்துள்ளது. இதில் அதிமுக அரசாங்கம் மட்டுமன்றி அரசு இயந்திரத்தில் பழம் தின்று கொட்டைபோட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கும், ஏன் சங்கத் தலைவர்களுக்கும் கூட பாரிய பங்குள்ளது.

குற்றங்கூட சாட்டப்படாமல் செத்துப்போன மாபெரும் ஊழல் குற்றவாளி எம்.ஏ.எம். ராமசாமி செட்டி

16,000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான எம்.ஏ.எம்.ராமசாமி தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக 2012 வரை இருந்தவர். எம்.ஏ.எம்.ராமசாமி, இந்தியாவில் உள்ள பிரபலமான தொழிலதிபர்களில், சொத்துக்களின் அடிப்படையில், 18 -வது இடத்தில் இருப்பவர். கல்வி, சிமெண்ட், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், தோட்டத் தொழில், போக்குவரத்து, கப்பல் வணிகம், கிரானைட், ஏற்றுமதி – இறக்குமதி, ஜவுளித் தொழில், நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தவர்.

எம்.ஏ.எம். ராமசாமி செட்டி

சந்தையில் பிரபலமான, ‘செட்டிநாடு சிமெண்ட்’ நிறுவனம், இவருடைய தொழில் குழுமத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது அனைத்து சொத்துக்களிலும் முதன்மையானது அண்ணாமலை பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழக நிதி மட்டும் ரூ. 10, 000 கோடியை இணை வேந்தராக இருந்த ராமசாமி சுருட்டியதாகவும் அதனை அரசு மீட்க வேண்டுமென்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் பேராசிரியர் சுப்ரமணியன் கூறுகிறார் (தி இந்து மே 10, 2017) என்றால் இவர் எவ்வளவு பெரிய முதலை என்று பாருங்கள். மேலும் இவர் விஜய் மல்லையாவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணிநியமன முறைகேடு, நிர்வாக சீர்கேடு, நிதி சிக்கல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை என்ற காரணத்தைக் கூறி அரசுடமையாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் இவ்வூழலுக்கு காரணமானவர்கள் மீது துறை சார்ந்தோ குற்றவியல் சட்டத்தின் கீழோ எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2013 வரையான காலகட்டம் ஊழல்-I  எனக் கொண்டால் 2013-ற்கு பிந்தையது ஊழல்-II.

ஊழல் – I

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், பேராசிரியர் அல்லாத இதர அலுவலர், அதிகாரி என அனைத்துப் பதவிகளும் கடந்த 25 ஆண்டுகளாக பச்சையாகவே விற்பனை செய்யப்பட்டன.

அரசு, அரசு உதவிபெறும் நிறுவனங்களில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் தங்களிடம் இருக்கின்ற காலிப்பணியிடங்கள், அதற்குத் தேவையான நபர்கள், தகுதி போன்றவை குறித்து விளம்பரம் செய்யப்படும் நடைமுறை உள்ளது.  வந்திருக்கின்ற விண்ணப்பங்களில் தகுதியான நபர்களை  எழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றை நடத்தி பணிக்கு அமர்த்தப்படுவர்.

அரசாங்கம், அரசாங்க உதவிபெறும் நிறுவனம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.  ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகம் தன்னிடம் எத்தனை காலிப்பணியிடங்கள் இருக்கின்றன என்பதை கடந்த 25 ஆண்டுகளில் விளம்பரம் செய்ததில்லை. அங்குப் பணிக்கு அமர்த்தப்பட்ட முறையானது அரசாங்கத்தின் ஒழுங்குமுறைக்கும் தனியார் நிறுவனங்களின் ஒழுங்குமுறைக்கும் உட்பட்டது அல்ல.

அது தான்தோன்றித்தனமாக பணியிடங்களை விற்பனை செய்தது. ஒவ்வொரு பதவிக்கெனவும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. உதவிப் பேராசிரியர் விலை ரூ. 10 லட்சத்தில் தொடங்கி சுமார் ரூ. 50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன.

அரசாங்கம், தனியார் நிறுவனம் ஆகியவற்றில் அந்தந்த வேலைக்குத் தகுதியான ஆட்களைத் தான் நியமிப்பார்கள். ஆனால் இங்கு திறமை தகுதி போன்றவை ’கிலோ எவ்வளவு ரூபாய்?’ எனக் கேட்குமளவிற்கு உள்ளது. யூஜிசியோ தமிழக அரசோ வகுத்துள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் எந்த பதவியும் நிரப்பபடவில்லை. பெரும்பாலானவர்கள் தொலைதூர முறையில் கல்விபயின்றதாக சான்றிதழ் வைத்துள்ளனர்.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகமோ புரோக்கர்களை உருவாக்கும் வேலையைத் தான் திறம்பட செய்தது. இது செட்டியாரின் தொழில்திறமை.

பேராசிரியர் பணிக்கு சேரவிரும்பும் ஒருவர் அங்கு ஏற்கனவே பணியிலிருக்கும் ஒருவர் மூலம்   மேற்குறிப்பிட்ட தொகையை கொடுத்து பணியில் சேர்வார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தன்னிடம் விலைகொடுத்து பதவி பெற்று பணியாற்றும் பணியாளர்களையே புரோக்கர்களாவும் நியமித்திருந்தது.

அதாவது பேராசிரியர் முதல் பியுன் வரை பாரபட்சமின்றி புரோக்கர்களாகவும் இருந்தனர். பணிநியமனம், பட்டம் அளித்தல், தேர்ச்சிபெறச் செய்தல், மாணவர் சேர்க்கை என அனைத்திற்கும் உரிய விலை நிர்ணயிக்கபட்டது. இவற்றைத் தேவையானவர்களுக்கு வாங்கிக்கொடுக்கின்ற  நபர்களுக்கு நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தொகையை புரோக்கர் கமிஷனாகக் கொடுத்துவிடும்.  இந்த வியாபாரத்தில் சிறந்த புரோக்கர்கள் முன்பணி ஆணை பெற்றிருந்தனர்.

உதாரணத்திற்கு வரலாற்றுத் துறையில் சுப்பன் என்ற நபர் தனக்கு உதவிப் பேராசிரியர் பணி வேண்டும் என்று அங்குப் பணியாற்றும் மன்னன் என்ற புரோக்கரை நாடினால் அவர் சுப்பன் பெயருக்கு பணியாணையில் நகலைத் தருவார். அப்போது அவர் அந்தப் பணிக்கான மொத்தத் தொகையில் பாதித் தொகையைக் (ரூ. 20 லட்சம்) கொடுக்க வேண்டும். மீதித் தொகையை செலுத்திய பின்னர் அந்தப் பணியின் அசல் ஆணையை மன்னன் சுப்பனிடம் கொடுப்பார்.

ஒருவேளை சுப்பனால் பணம் திரட்ட இயலாமல் தான் ஏற்கனவே செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறவிரும்பினால் மன்னன் ரூ. 20 லட்சத்தில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு மீதம் ரூ. 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுப்பார்.

சுப்பன் முழுத்தொகையும் வட்டிக்குக் கடன்பெற்று கொடுத்து அந்த வேலையை வாங்கிவிட்டால் வட்டியிலிருந்து விடுபடுவதற்கும் அவர்கள் ஒரு வழிமுறையைப் பின்பற்றினர். அங்குப் பணிக்குச் சேர்ந்த சுப்பனுக்கு அங்குச் செயல்படுகின்ற தேசிய வங்கியில் தனிநபர் கடன் விரைவாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அந்த புரோக்கர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் துணைபுரியும்.

சுப்பன் வங்கியில் தனிநபர் கடன்பெற்று வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்துவிடலாம். வேலையை விற்பது, அந்த விலையை தான் பெற்றுக்கொண்டு அதில் ஈடுபட்ட புரோக்கருக்கு உரிய கமிஷனை கொடுத்தல், வட்டிக்குப் பணம் திரட்டி வேலையை வாங்கும் நபருக்கு வட்டிக்காரனின் வட்டித் தொல்லையிலிருந்து நிவாரணம் செய்வதற்காக அங்குள்ள வங்கியில் தனிநபர் கடனுக்கு ஏற்பாடு செய்தல். என இது அங்கு ஒரு முறையான ஊழலாக நடந்து வந்தது.

இந்த வியாபரத்தில் சம்பாதித்தவர் செட்டியார் மட்டுமல்ல புரோக்கர்களான பேராசிரியர்களும் ஊழியர்களும் கூட கோடிகளில் சம்பாதித்தார்கள். புரோக்கர்கள் பலரும் கோடிஸ்வரர்களான கதைகள் நிறைய உண்டு. அவர்கள் சொத்துக்களை பாண்டிச்சேரி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் குவித்துள்ளனர்.

ஊழியர்களுக்கான ஊதியத்தை தொலைதூரக் கல்வி நிறுவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தனர். அங்கு வருமானம் கொட்டோ கொட்டென்று  கொட்டியது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கிளைகள் இந்தியாவில் பல பாகங்களிலும் இருந்ததால் கிளை நிறுவனங்களை நடத்துகின்ற நபர்கள்  பட்டங்களைத் தேவைப்படுவோர்க்கு விற்றனர்.

தேர்வு நடத்துதல், மதிப்பிடுதல் என அனைத்துமே கண்துடைப்பு வேலை. கிளை நிறுவனங்களுக்கு தலைமை நிறுவனம் பேராசிரியர்களை தேர்வு நடத்துவதற்கு அனுப்பி வைக்கும். கிளையை நடத்தும் முகவர் அந்தப் பேராசிரியர்களுக்கு உரிய கவனிப்புகளைச் செய்வார். தேர்வில் பங்கேற்ற அனைவரும் தேர்ச்சி பெறுவர்.

இதனால் அங்குப் பண மழை பொழிந்தது. இவ்வாறு வந்த பணத்தை அப்போது அரசு அங்கீகாரம் பெறாத இதர கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பாக மருத்துவக் கல்லூரிக்கு மடைமாற்றியது. பின்னர் அங்குக் கொட்டிய பணத்தை தொலைதூரக் கல்வி இயக்குநரகத்துக்கு மடைமாற்றியது. இவ்வாறு தேவைக்கு ஏற்ப பணம் மடைமாற்றுதல் நடைபெற்றது.

இதில் கிடைத்த லாபத்தில் நிர்வாகத்தில் இருந்த பலரும் சுருட்டிக்கொண்டனர். இதனால் அது பெரும் சீரழிவைச் சந்தித்தது. இந்தச் சீரழிவிற்குக்  காரணம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் மட்டுமல்ல அதில் பணியாற்றியோரும் காரணம்.

செட்டியார் வேலையை விற்றார் என்றால் அது தவறு என்று தெரிந்தே வாங்கினர் பணியாளர்கள். வேலை வாங்கிய பணியாளர்கள் குற்றம் என்றும் தெரிந்தும் வேலையையும் பட்டங்களையும் விற்பதற்கு புரோக்கர்களாகச் செயல்பட்டனர்.  செட்டியார் சீரழிவைச் செய்தார் என்றால் அந்தச் சீரழிவை சமூகமயமாக்கியவர்கள் அங்கு வேலை வாங்கியவர்கள்.

உயர்கல்வித் துறையில் மட்டுமின்றி பணிநியமன முறையில் பெரும் சீழ் பிடித்த ஊழல் முறையை தொடங்கிவைத்தவர் செட்டியார் என்றால் அதற்கு நியாயவுரிமையைப் பெற்றுக் கொடுத்து சமூகத் தூண்களாகச் செயல்பட்டது அங்குப் பணியாற்றிய பேராசிரியர்களும் பணியாளர்களும் ஆவர். எந்தவிதத்திலும் வேலைவாங்கிய பணியாளர்கள் அப்பாவிகள் அல்ல அவர்கள் குற்றவாளிகள். ஒருகட்டத்தில் இணைவேந்தரான ராமசாமியும் தரகர்களும் அடித்த கொள்ளையில் நிர்வாகம் திவால் நிலைக்கு சென்றது.

2013 ஆம் ஆண்டு கணக்குப்படி கூடுதலாக தேவையின்றி நியமிக்கப்பட்டவர்கள் 5755 பேர்.  பலகலைக்கழகத்தில் ஊதியம் வழங்கவும் இதர தேவைகளுக்காகவும் வைக்கப்பட்டிருக்கும் தொகையைக் கூட செட்டியார் தலைமையிலான குற்ற கும்பல் ஆட்டையப் போட்ட போது தான் தமிழக அரசு இப்பல்கலைக்கழகத்தை எடுத்து கொள்கிறது.  இது ஊழலின் முதலாம் பாகம்.

ஊழல் – II

தமிழக அரசு சிவ்தாஸ் மீனா வழங்கிய அறிக்கையின் கீழ் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று ராமசாமியின் பல்லாயிரம் கோடி சொத்துக்கு வளர்ப்பு மகன் முத்தையா என்ற அய்யப்பன் அதிபதியாகியுள்ளான்.

வளர்ப்பு மகனுடனான குடும்ப சண்டையின் முடிவில் ஊழல் பெருச்சாலி ராமசாமி செட்டி இயற்கை மரணமடைந்தாரே தவிர, ஒரு பெட்டி கேஸ் கூட இக்குற்றவாளி மீது இந்த அரசு போடவில்லை.  மாதந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பணம், ஊழலை சமூகமயப்படுத்திய புரோக்கர்களுக்கு சம்பளமாக வாரியிறைக்கப்படுகிறது.

எம்.ஏ.எம். ராமசாமியும் அவரது வளர்ப்பு மகனும்

இவர்கள் யார் மீதும் எந்த வழக்கும் போடப்படவில்லை என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு அரசுத்துறை செயலர்களும், பல்கலைக்கழக துணைவேந்தர்களும் இவர்களை தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களுக்கு பணிநிரவுமாறு அரசுக்கு கடிதங்கள் எழுதுகின்றனர்.  அதன் படி தான் தொடக்கத்தில் கூறியபடி உயர்நீதிமன்றம் மட்டும் 500 -க்கு மேல் ஊழியர்களை கேட்டுப் பெற்றுள்ளது.

அரசுத்துறைகளில் TRB, TNPSC போன்ற பல்வேறு வாரியங்கள் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் செய்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, முறையான குழு அமைத்து நேர்காணல் நடத்தி பணியில் அமர்த்தப்படும் முறைக்கு நேர்மாறாக உள்ளது.

தகுதியற்ற நபர்கள் முறையற்ற வகையில் பணிநியமனம் பெற்று ஊழல் முறைகேடுகளை சமூகமயப்படுத்திய குற்றவாளிகளான அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அரசுக் கல்லூரி, பல்கலைக் கழகம், அரசுத் துறைகள் ஆகியவற்றில் நியமிக்கின்றது இந்த அரசு.

சொற்ப ஊதியத்தில் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதைத் தெரிந்தே, பல்லாண்டுகாலமாக அரசாங்கத்தில் காலிப்பணியிடங்கள் வரும்போது தங்கள் வாழ்வு வளமாகும். எனக் கனவுகளோடு இருந்த பலர் வாழ்க்கையிலும் இந்த அரசு மண்ணள்ளிப் போட்டுள்ளது.

இக்குற்றவாளிகள் அரசுக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டதால் அங்குக் கெளரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்த பலர் வீதியில் வீசியெறியப்பட்டனர். இவர்கள் அரசுக் கல்லூரிகளிலும் அரசுத் துறைகளிலும் நிரவப்பட்டிருப்பதால் பல பத்தாண்டுகளுக்கு இளந்தலைமுறையினருக்கு அரசுவேலையே இல்லை என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பணியிலிருக்கும் பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பதிவியுயர்வுகளையும் சேர்த்தே காவு வாங்கியுள்ளனர். முதற்கட்டமாக பணிநிரவு செய்யப்பட்ட போது கௌரவ விரிவுரையாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் சார்பாக அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் இரு நாட்கள் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அதன் பின் அவர்கள் கள்ளமௌனம் சாதிப்பது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது.

இதில் அதிமுக அரசுக்கும், அனைத்துத் துறை உயரதிகாரிகளுக்கும் ஊழியர் சங்கத் தலைவர்களுக்கு கூட பெட்டிகள் கைமாற்றப்பட்டிருந்தால் தவிர இது நடப்பதற்கான சாத்தியமே இல்லை. இன்று பெரும்பான்மையான மக்களின் வரிப்பணம் ஊழல் குற்றவாளிகளுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.  இது ஊழலின் இரண்டாம் பாகம். வியாபத்தைப் போன்றதொரு மாபெரும் ஊழல் முறைகேடு இது.

ஒரு பக்கம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது இவ்வரசு. மிக சமீபத்திய உதாரணம் ஏர் இந்தியா.  100% அன்னிய நேரடி முதலீடு என்ற பேரில் உலகிலேயே அதிக ஊழியர்களையும் சொத்தையும் கொண்ட இரயில்வே துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிளாட் போட்டு விற்கிறது.

ஆனால் தனியார் நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளை நடத்தி திவாலாகும் போதோ அல்லது மீளமுடியாத கடனில் சிக்கும் போதோ அந்நிறுவனங்களை அரசுடமையாக்குகிறார்கள். அதாவது நஷ்டத்தை அரசுடமையாக்குதல் எனலாம்.

கிங்ஃபிஷெர் மல்லையாவின் பிற நிறுவனங்கள் குறிப்பாக யுனைடட் பிவரேஜஸ் இலாபத்தில் ஓடியும் கூட அரசு அச்சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை அடைக்க சொல்லவில்லை. இது போலத்தான் சஹாரா நிதி முறைகேட்டிலும் நடக்கிறது.

இப்பொழுது தனியார் அனல்மின் நிலையங்களின் கடனை தேசிய சொத்தாக்கும் முடிவை புதிய நிலக்கரி இணைப்புத் திட்டத்தின் (New Coal Linkage Plan) மூலம் மத்திய அரசு எடுத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் கடனைத் திருப்பி அடைக்காத போது அல்லது நிதி, நிர்வாக முறைகேடுகளால் நஷ்டமடையும் போது ஏற்பட்ட நஷ்டத்திற்கு அவர்கள் முதலீடு செய்துள்ள பிற நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதில்லை.

ஏனென்றால் அதற்கான கொள்கையோ சட்டமோ இந்நாட்டில் இல்லை என்பது மட்டுமல்ல, நஷ்டத்தை அல்லது கடனை நாட்டுடமையாக்கி மக்கள் தலையில் கட்டும் முறையைத் தான் இவ்வரசுகள் செய்கின்றன.

அண்ணாமலை விவகாரத்தில் முறைகேடு நடத்திய ராமசாமியின் ரூ. 16, 000 கோடி சொத்துக்களை அரசுடமையாக்கவில்லை. மாறாக தீர்க்கவே முடியாத நிதி நிர்வாக முறைகேட்டை நாட்டுடமையாக்கியுள்ளது. கூடுதலாக இவ்வூழல் முறைகேடுகளுக்காக அதன் இணைவேந்தர் இராமசாமி தண்டிக்கப்படாதது மட்டுமல்ல அரசனைப் போல நடத்தப்பட்டார் என்பதிலிருந்தே இவ்வரசு கட்டமைப்பே எப்படியானதொரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ராமசாமி செட்டியார் சாகும் போது அரசர் செத்தார் என்றே பத்திரிகைகள் எழுதினர். கோடி கோடியாகக் கொள்ளையடித்த இக்குற்றவாளியின் ஒரு சொத்து கூட பறிமுதல் செய்யப்படவில்லை.

கிண்டி ரேஸ் கோர்சில் பெரும்பகுதி இச்செட்டியாருடையது.  நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியைத் தாண்டும் இதை ரியல் எஸ்டேட் மதிப்புக்கு விற்றாலே இப்பல்கலைக்கழகத்தை நடத்த முடியும் என்ற நிலையில் மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து இக்குற்றவாளித் தரகுக் கும்பலைப் போற்ற வேண்டிய அவசியமென்ன?

மேலும் இந்நாட்டில் ஒரு விவசாயிக்கோ, ஒரு தொழிலாளிக்கோ அல்லது ஒரு கௌரவ விரிவுரையாளருக்கோ இல்லாத பணிப்பாதுகாப்பை இந்த குற்றவாளி புரோக்கர்களுக்கு வழங்குகிறது இவ்வரசு. எனவே கடந்த 25 ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை உரிய விசாரணைக் கமிஷன் வைத்து முறையாக விசாரித்து இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இம்மாபெரும் ஊழலில் திரட்டப்பட்ட நிதியை செட்டிநாடு அரண்மனை பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளது. அச்சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட வேண்டும். அதற்கான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும். அண்ணாமலை ஊழியர்களை அரசு துறையில் பணிநிரவல் செய்வதற்கு பின்னால் மிகப்பெரிய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை மிகப்பெரியதொரு வலைபின்னல் செயல்பட்டுள்ளது.

இதையும் சேர்த்தே விசாரணை செய்யப்பட வேண்டும்.  இவ்விசாரணை முடியும் வரை இப்பல்கலைக்கழக ஊழியர்களை பணிநிரவல் செய்யக்கூடாது. ஏற்கனவே பணிநிரவல் செய்யப்பட்டவர்கள் திருப்பியனுப்பபடவேண்டும்.  இலஞ்சம் வழங்கி வேலை வாங்கியதோடன்றி புரோக்கர்களாக செயல்பட்டு ஊழலை சமூகமயமாக்கிய ஊழியர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மாதிரியான முறைகேடுகள் மீண்டும் நடக்காமலிருக்க வேண்டுமென்றால் அதற்கு முன்னுதாரணமாக தார்மீக மற்றும் நெறிமுறை அடிப்படையில் இத்தகைய ஊழியர்களின் வேலைகள் நிரந்தரமாகப் பறிக்கப்படவேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட வேளான் அதிகாரி முத்துக்குமாரசாமி (இடது) முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

கடந்த 25 ஆண்டுகாலமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒரு போக்கை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது.  தமிழ்நாட்டில் அரசு வேலைகளுக்கு பல பத்து இலட்சங்களை இலஞ்சமாகக் கொடுப்பதை சர்வசாதாரணமாகப் பார்க்கும் போக்கு நிலவுகிறது. இதில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளிலிருந்து அரசு அதிகாரிகள் வரை கணிசமான பங்கை பெறுகின்றனர்.

‘இலஞ்சம் கொடுக்காமல் தகுதியடிப்படையில் தான் வேலைக்குப் போவேன்’ என யாராவது கூறினால் அவரை ‘பைத்தியக்காரன்’ என முகத்துக்கு நேராகவே பேசும் நிலையுள்ளது. முத்துக்குமரசாமி தற்கொலையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கின் இன்றைய நிலையும் மிகச் சிறந்த சமீபத்திய உதாரணங்கள்.

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா விவகாரம் தற்காலிகப் பணியிடங்களுக்குக் கூட வட்டச் செயலாளர் முதல் அதிகாரிகள், அமைச்சர்கள், மன்னார்குடி மாபியா வரை இலஞ்சத்தில் பங்கு கேட்கின்றனர் என்பதை வெளிக்கொணர்ந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடப்பது போன்ற ஊழல்கள் இன்று சமூகமயமாகியுள்ள நிலையில், ஏற்கனவே பதவியிலிருப்பவர்களில் பலரும் இதுபோல இலஞ்சம் பெற்று வந்தவர்களாகவே உள்ளனர்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில், உயர்கல்வி நிலையங்களை புதிது புதிதாக திறந்து வேலைவாய்ப்பு சந்தைக்கு தேவையானதை விட பல பத்து மடங்கு அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளனர்.

மறுபக்கம் இக்காலகட்டத்தில் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாலும், இவர்களின் தகுதிக்கேற்ற வேலை வழங்க போதுமான அளவு தொழிற்துறை வளராததாலும், பெரும்பான்மையான படித்த இளைஞர்கள் அரசு வேலையை மட்டுமே உத்தரவாதமானதாகக் கருதுகின்றனர்.

இது தான் பொது உளவியலும் கூட, இதை ஒட்டியே தனிநபர்களின் வாழ்க்கையும் அமைக்கப்படுகிறது.  இதைப் புரிந்து கொண்ட புதிய தரகு வர்க்கம், அரசு வேலைக்கு இலஞ்சம் வாங்குவதன் வழி தனது பையை நிரப்பிக் கொள்வதோடு, இலஞ்ச ஊழலில் புரோக்கர் முறையை வளர்த்து தன் வர்க்கத்தை பெருக்கி இலஞ்ச இலாவண்யத்தை வியாதியைப்போல சமூகத்தில் பரப்பி ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் சீரழிக்கிறார்கள்.  இது ஒரு மீளமுடியாத நெருக்கடி.  இதற்கான தீர்வு நிலவும் கட்டமைப்பு மொத்தத்தையும் மாற்றியமைப்பதன் வழி மட்டுமே சாத்தியம்

– தங்கராஜ்

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

காஞ்சா அய்லய்யாவை மிரட்டும் பார்ப்பனியம் !

0

மூத்த எழுத்தாளரும், தலித் மக்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் இலக்கியவாதியும், பேராசியருமான காஞ்சா அய்லய்யா தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் புகாரளித்துள்ளார்.

பார்ப்பனிய வருணாசிரமக் கருத்துக்களுக்கு எதிராகப் பேசி எழுதி வரும் பேரா.காஞ்சா அய்லய்யா, சமாஜிக்கா சுமக்லர்லு கொமாடொல்லு (Samajika Smugglurlu Komatollu – Vysyas as Social Smugglers என்பது இதன் ஆங்கில மொழியாக்கம்) என்ற தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்ட புத்தகத்தை செப்டம்பர் 2017 தொடக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

காஞ்சா அய்லய்யா – ”இந்து இந்தியாவிற்குப் பிறகு”

இவர் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு ஏற்கனவே 2009-ல் Post Hindu India (இந்து இந்தியாவிற்குப் பிறகு) என்ற ஆங்கிலப் புத்தகத்தின் பதிப்பில் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது. மோடியின் பொருளாதார ‘சாதனைகள்’ வேதனையாக மக்களைத் தாக்கி வரும் நேரத்தில் பண்பாட்டு தாக்குதலாக இத்தகைய விசயங்களை தேடிப்பிடித்து மதவெறி ஊட்டுகிறது பாஜக கூட்டம். இந்த மனுதர்ம ஆட்சியின்படி தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேராசிரியருக்கு எதிராக ஊளைச்சத்தம் பலமாக கேட்கின்றனது. தென்னிந்தியாவில் வைசியர்கள் எனப்படுபவர்கள் வட இந்தியாவில் பனியாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வைசியர்களைத் தாக்கிவிட்டார் பேராசிரியர் என்பதே ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அங்கே நடத்தும் பிரச்சாரத்தின் தலைப்பு.

பேராசிரியர் இது குறித்துக் கூறுகையில் ‘முதலில் இந்தப் புத்தகம் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது; எனவே கடத்தல் என்பதற்கு சட்டவிரோதமாகக் கடத்தல் தொழில் செய்வது என்பது பொருளாகாது. ஆரிய வைசியர்கள் தங்கள் தொழில் மூலம் சம்பாதிக்கும் பணத்தை சமூக வளர்ச்சிகளுக்காக ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. ஆரிய வைசியர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும் பெருமளவு செல்வங்களை வைத்திருப்பதாலும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குக் கடனுதவி செய்யும் தொழிலில் ஈடுபடுவதாலும் மேலும் தங்கள் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள மற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை வெகுவாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகத் தான் அவர்களை சமூகக் கடத்தல்காரர்கள் என்றழைப்பதாகவும், மேலும் இவர்களும் ஒரு காலத்தில் புலால் உணவு உண்டது மட்டுமன்றி விவசாயத் தொழிலிலும் ஈடுபட்டார்கள்’ என்கிறார்.

காஞ்சா அய்லய்யாவிற்கு எதிராக தெலுங்கானாவில் ஆரிய வைசியர்கள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்

இது போதாதா? உடனே வைசியர்களை இழிவுபடுத்திவிட்டார், கடத்தல் காரராக சித்தரித்து விட்டார் என்று பாஜகவும் ஆந்திர மாநிலக் கட்சிகள் பலவும் கூப்பாடு போடுகின்றன.  அவை பிறகு கொலைமிரட்டல் வரைக்கும் போய்விட்டது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஒரு படி மேலே போய்  பேரா. காஞ்சா அய்லய்யாவை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று கொக்கரித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவும் தன் பங்குக்கு இந்தப் புத்தகத்தை ஆந்திர மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

மோடியிடம் கெட்டப்பெயர் வாங்கிவிடக்கூடாதல்லவா?

இந்தப் பின்னணியில் பேராசிரியரும் அவருடைய நண்பரும் சக பேராசிரியருமான பினாவேணி ராமய்யாவும் தெலுங்கானா மாநிலத்தில் பரக்கல் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களின் கார் மீது கல் வீசித் தாக்கியுள்ளது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தப்பிப் பிழைத்த இவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து போலீசு இவர்களைப் பாதுகாப்பாக வீடு வரை அழைத்துச் சென்றுள்ளது.

தெலுங்கானா மாநில முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாஜக-வோ தன் பங்குக்கு பேராசிரியரைப் பைத்தியம் என்றும் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தி கலவரத்தைத் தூண்டப்பார்க்கிறார் என்றும் கரித்துக் கொட்டியுள்ளது. தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டேயிருப்பதால் தன் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று பேராசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேசமயம் பேராசிரியர் இவர்களுடைய மிரட்டல்களுக்குப் பயந்து தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளார். அப்படி ஒருவேளை மாற்ற வேண்டுமானால் வைசியர்கள் தங்கள் தொழிலில் 5%  சதவீத வேலை வாய்ப்புக்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மேலும் தங்கள் இலாபத்தில் குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையாக அளிக்க முன்வரும் பட்சத்தில் வேண்டுமானால் இந்தத் தலைப்பை மாற்றிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பார்ப்பன பனியா சாதிகளை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா தற்போது ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்து வருகிறது. அப்படி அவர்களது வாழ்வை ஒடுக்கிக் கொண்டே மற்றொரு புறம் வைசியர்களை பேராசிரியர் இழிவு படுத்தி விட்டார் என்று மடை மாற்றுகிறது. உண்மையில் பனியாக்கள் எனப்படுவோர் பெரு முதலாளிகளாகவும் உழைப்பே இல்லாத நிதி நடவடிக்கைகளால் வாழ்பவராக மட்டுமே அறியப்படுகிறார்கள். சிறு வணிகர்கள் தமது வைசிய அடையாளத்தை துறந்து விட்டு தமது தொழில் அடையாளத்தை வரித்துக் கொண்டால் எதிர்த்து போராடவேண்டிய குற்றவாளி மோடி அரசு என்பதை உணர்வார்கள்.

மேலும் படிக்க:
Writer Kancha Ilaiah says his car was attacked with stones in Telangana
Won’t allow Ilaiah book in AP: Naidu
BJP, TDP Back Arya Vysya Community’s Battle Against Kancha Ilaiah’s Book

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கூடலையாத்தூர் – மணல் கொள்ளையை நிறுத்து ! – பொதுக்கூட்டம்

1

ன்புடையீர் வணக்கம் !

கடலூர் மாவட்டம் வெள்ளாறு, கூடலையாத்தூர் மணல் குவாரியை மூடு என காவாலகுடி முடிகண்ட நல்லுர், ஒட்டி மேடு, பெருந்துறை, அகரம் ஆலம்பாடி, பவழங்குடி கானூர், பேரூர் என பல கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளாற்றில் முற்றுகையிட்டு கொளுத்தும் வெயிலில் போராடினார்கள். தாகத்தில் தவித்த மக்களுக்கு தண்ணீர் பாக்கெட்கூட கொடுக்கவிடாமல் போலீசார் தடுத்தனர்.

குவாரியை தற்காலிகமாக மூடுகிறோம் என மாவட்ட நிர்வாகம் நயவஞ்சகமாக பேசி போராடும் மக்களை அனுப்பி விட்டு, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுகிறது காவல் துறை. திருமுட்டம் ஆய்வாளரோ முக்கியமானவர்களை குண்டாசில் போடுவேன் என மிரட்டுகிறார். உதவிக்கு வந்த வழக்கறிஞர்களையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.

கொள்ளையடிப்பவன் “காக்கி உடையில் அதிகாரத்தில்”; மக்களுக்காக, நீராதாரத்தை காக்க போராடுபவர் குண்டர் சட்டத்தில் சிறைக்கு செல்ல வேண்டுமாம், இதுதான் இன்றைய நீதி?

பர்மிட் இல்லை, ஓவர் லோடில் மணல் கொள்ளை போகிறது என பல முறை திருமுட்டம் காவல் ஆய்வாளர் பீர்பாஷாவிடமும், பொதுப்பணித்துறை பொறியாளர் சரவணனிடமும் சொன்னதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. கூடலையாத்தூர், காவாலகுடி மக்கள் தாங்களே களத்தில் இறங்கி கடத்தல் மணல் லாரிகளை மடக்கி சிறைபிடித்து பத்திரிக்கை தொலைக்காட்சி மூலமாக ஒப்படைத்தார்கள்.

50 அடி நிலத்தடி நீர்மட் டம் இன்று 250 அடிக்குக் கீழ் செல்கிறது. வெள்ளாறு கண் முன்னே அழிவதை வேடிக்கை பார்க்க முடியுமா? நெய்வேலி சுரங்கம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பல இடங்களில் ஆழ்குழாய் போர் போடப் பட்டுள்ளது. கடலூர் ரசாயன ஆலைகளால் நீர் ஆதாரம் நஞ்சாக மாறிவருகிறது.

வெள்ளாற்றில் மணல் இல்லை என்றால் எப்படி மழை நீரை தேக்க முடியும்? நிலத்தடி நீர் குறைந்தால் கடல் நீர் உள்ளே புகும், விவசாயம் அழியும். இதை அரசு தடுக்காது. இந்த பகுதி மக்கள்தான் – விவசாயிகள்தான் மணல் கொள்ளையை தடுக்க முடியும், தடுக்க வேண்டும்.

சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் அதிகாரிகள் மயிரளவும் மதிக்காதபோது பாதிக்கப்பட்ட மக்கள் எதற்கு மதிக்க வேண் டும்?

நமது நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளைபோகுதே என்ற சமூக பற்று, மக்கள் பற்று, நாட்டுப்பற்று மக்களை மிரட்டும் அதிகாரிகளுக்கு துளியும் இல்லை. கூலிப்படையாக மாறிவிட்டார்கள். சட்டம் சொல்கிறது. ஆற்றில் மூன்றடி மட்டுமே மணல் அள்ள வேண்டும், ஆனால் 30 அடிஅள்ளுகிறார்கள்.

மணல் அள்ளும் இடத்தை சிமெண்ட் தூண் நட்டு, சிகப்பு கொடி கட்டி நான்கு பக்கம் எல்லைகளை வரையறுக்க வேண்டும். எந்த மணல் குவாரிகளில் எவன் செய்தான்? சர்வே 8-ல் 40 ஏக்கர் அளவில் 20,000 லோடு எடுக்க அனுமதி என்றால், நடப்பது என்ன? சுமார் ஒரு லட்சம் லோடுகள் எடுக்கிறார்கள்.

தினந்தோறும் பல ஆயிரம் லாரிகள் மணல் கடத்தலில் ஈடுபடுகிறது. இந்த மணல் கொள்ளைக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் துணையாக உள்ளார்கள்.

கூடலையாத்துரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏ-க்கு ஒரு குவாரி, எம்.பி-க்கு ஒரு குவாரி என பிரித்து கொடுத்துள்ளார் எடப்பாடி, குவாரியில் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் வசூலிக்கும் மாமூல் தொகை தினந்தோறும் உள்ளூர் போலீசுக்கு செல்கிறது. இதை எதிர்த்து கேட்டால் எலும்பு துண்டை வீசுவார்கள், மறுத்தால் பொய் வழக்கு படுகொலை, உள்ளூர் சாதி பிரச்சினையை போலீசே உருவாக்கும்.

தமிழகம், வழிபறி கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க வழித்தெரியாமல் தவிக்கிறது. மானபங்கபடுத்தும் காமுகனிடமே மனு கொடுத்து கெஞ்ச வேண்டிய துர்பாக்கிய நிலையில் இந்த அரசிடம் மக்கள் போராடுகிறார்கள்.

மகனை இழந்த தாய்மார்களும், கணவனை இழந்த விதவைகளும் வீதிக்கு வந்து சாராய கடை வேண்டாம் என கலெக்டரிடம் கையெடுத்து கும்பிட்டு மன்றாடுகிறார்கள், ஆத்திரத்தில் டாஸ்மாக் கடையை கடப்பாரை கொண்டு இடிக்கிறார்கள். சாராய வியாபாரியாக மாறியுள்ள மாவட்ட நிர்வாகம் போராடும் மக்கள் மீது பொய்வழக்கு போடுகிறது.

போலீசு தாய்மார்களை அடிக்கிறது. இது மக்கள் வாழும் நாடா? வளர்ச்சி, வல்லரசு என பேசுவதற்கு இந்த அரசுக்கு என்ன அருகதை இருக்கிறது? கூவத்தூரில் வழங்கிய கோடிகளும், தங்க பிஸ்கட்டுகளும், ஆர்.கே. நகரில் கரைபுரண்ட கரன்சிகளும், தற்போது குடகு மலையில் குதிரை பேரத்தில் புரளும் கோடிகளும், அனைத்தும் மனித குலத்தை தாயாக காக்கும் ஆறுகளின் ரத்தம் – சதை கொள்ளையடித்த மணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கடத்தி சம்பாதித்த கருப்புப்பணம், எந்த சட்டம், எந்த நீதிமன்றம் இவைகளை தடுத்தது?

பல நூற்றாண்டுகள் பழமையான கிரானைட் மலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சகாயம் ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் எந்த அதிகாரியும் சிறைக்கு போகவில்லை. கொள்ளைபோன கிரானைட் மலை திரும்பி வருமா? கெள்ளை போன ஆற்றுமணல் திரும்பி வருமா? கடத்தல் சிலைகளை மீட்பது போல் நாம் இயற்கையை மீட்க முடியுமா?

மக்கள் வரிப்பணத்தை தின்று கொழுக்கும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் துறை எதற்கு? கொள்ளையடிக்கவா கரும்புக்கும், நெல்லுக்கும் கட்டுப்படியான விலை கொடுக்க துப்பில்லை. கரும்பு நிலுவைத்தொகை பலகோடி நிற்கிறது. சாவின் விளிம்பில் உள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை.

மணல் கொள்ளை மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் பிரச்சினை, ரேசன் கடை மூடல், பெட்ரோல் விலை உயர்வு, நீட் அக்கிரமத்தால் எற்பட்ட அனிதா மரணம், தனியார்மயமாகும் அரசு மருத்துவமனை, கல்வி, குடிநீர், விஷம் போல் உயரும் விலைவாசி, படித்தவனுக்கு வேலை இல்லை – அனைத்திற்கும் இந்த அரசுதான் காரணம். மொத்தத்தில் எங்களை வாழவிடு என மக்கள் போராடுகிறார்கள்.

தீர்வுகான முடியாமல் அரசு முட்டுச்சந்தில் சிக்கி தவிப்பதுடன், மக்கள் விரோதமாக மாறி ஆளும் அருகதையை இழந்து நிற்கிறது. ஊழல் குற்றவாளி ஜெயா இறந்த நாள் முதல் சசிகலா, ஓ.பி.எஸ். எடப்பாடி, டிடிவி. மெரினா சமாதி, பாஜக என இன்று வரை தமிழக அரசியல் நிகழ்வை ஒரு நிமிடம் ஓட விட்டுப் பாருங்கள் புரிந்து கொள்ளமுடியும்.

இந்த அரசிடமே நம்பிக்கை வைத்து மன்றாடுவதால்தான் போராட்டம் மாதக்கணக்கில், நீடிக்கிறது. பெரும் திரள் மக்கள் போராட்டம், எழுச்சி இந்த அரசின் அதிகாரத்தை, அதன் கொள்கைகளை, கேள்வி கேட்க வேண்டும். தனித்தனி போராட்டம் தனிதனி தீர்வு இனி சாத்தியம் இல்லை. பாராளுமன்றம், சட்ட மன்றம், நீதிமன்றம் ஆகியவை கார்ப்பரேட் கம்பெனிகளின் காவல் நிலையங்களாக மாறி வருகிறது. இங்கு நமக்கு நீதி கிடைக்காது.

பல்வேறு கிராம முக்கியஸ்தர்கள், அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள், கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். சேத்தியாதோப்பு பொதுக்கூட்டத்திற்கு பெரும் திரளாக நீங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வது அவசியம். நீங்களும் வந்தால்தான் வெள்ளாற்றை காக்க முடியும், மணல் கொள்ளையைத் தடுக்க முடியும், ஊழல் அதிகாரிகளை தண்டிக்க முடியும்; நாளை வர இருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டல அழிவுத்திட்டத்தை நிறுத்த முடியும்.

மணல் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்ட ஆறுகளை மீட்பதில்தான் நமது வாழ்க்கை இருக்கிறது. வெள்ளாற்றின் விடுதலை பிற தமிழக ஆறுகளையும் விடுவிக்கும் போராட்டமாக மாறி பரவவேண்டும். அதற்கு ஒரே வழி மக்கள் அதிகாரம் தான்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம், தொடர்புக்கு – 97912 86994.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மின்னூல் !

0

தாத்ரியில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம் பெரியவரைக் கொன்றது, பகுத்தறிவாளர் தபோல்கர் – எழுத்தாளர் கல்புர்கி, பன்சாரே ஆகியோரைச் சுட்டுக் கொன்றது, சமூக வலைத்தளங்களில் எதிர்த்து எழுதுபவரை கைது செய்வது, பூனாவில் ஒரு ஐ.டி துறை முசுலீம் இளைஞரை வாட்ஸ் அப் வதந்தியைக் காட்டிக் கொன்றது, சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை, ஐதராபாத் பல்கலையில் ரோஹித் வெமுலாவைத் தூக்கிலேற்றியது, உஸ்மானியா – ஜே.என்.யூ பல்கலைகளில் அசுரர் தினம் கடைபிடிக்க தடை, பூனா திரைப்படக் கல்லூரியின் முதல்வராகத் திணிக்கப்பட்ட இந்துமதவெறிக் கோமாளியை நீக்கப் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை, கர்வாப்சி எனும் கட்டாய மதமாற்றம், ஊடகங்களில் எதிர்க்கருத்துக்களை எழுதுபவர்களை அடக்க கமிட்டிகள், தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை!

மறுகாலனியாக்கமும் பார்ப்பன பாசிசமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மையும் வாழ்வுரிமையும் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கும் மோடியின் வாய்ச்சவடால்கள் அம்பலமாகி நாறுவதை மறைத்துக் கொள்வதற்கும் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்த மின்னூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.

காவி பயங்கரவாதம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
  • ஸ்ரீராம் சேனாவின் இந்துத்துவா ÷ ரேட் அம்பலம் !
  • பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
  • மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
  • பூனா ஐ.டி இளைஞரை கொன்ற இந்து ராஷ்டிர சேனா!
  • இந்துக்களே… மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி ?
  • அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
  • பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க் காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
  • தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்
  • சர்வதேச யோகா தினம்: 64 “ஷாகா”வுக்கு ̈ பதிலாக யோகா!
  • இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

பதினோறு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !

4

(வினவு இணைய தளத்தில் வெளியான ”நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய காணொளி உரை சுருக்கமாக வெளியிடப்படுகிறது.)

ருவேளை அனிதா தற்கொலை செய்யாமல் உயிரோடு இருந்து, ஏதாவது தொலைக்காட்சி நிலையத்துக்கு விவாதத்துக்கு வந்திருந்தால், என்ன நடந்திருக்கும். ”1176 மார்க் வாங்கிய நீ, நீட் தேர்வில் பாஸ் செய்யவில்லை என்பதால், அந்த மார்க் எப்படி வாங்கினாய் என்பதே சந்தேகமாக இருக்கிறது. நீ அன்ஃபிட்” என்று பேசி இருப்பார்கள்.

இப்படிப்பட்ட கொலைகாரர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் உட்கார வைத்துத்தான் தொலைக்காட்சியில் விவாதம் நடத்துகிறார்கள். நீட் ஒரு தவிர்க்க இயலாத எதார்த்தம் என்ற கருத்தைத் திட்டமிட்டு பரப்புகிறார்கள். திணிக்கப்படுவதையெல்லாம் ஏற்றுக் கொள்வதென்றால், காவிரி முதல் இந்தி வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்று அனிதாவுக்காக வாதாடுகிறவர்கள், நிர்மலா சீதாராமன் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்கிறார்கள். முதல்முறையாகவா ஏமாற்றுகிறார்கள்? காவேரி பிரச்சனையில், பணமதிப்பழிப்பில், பாபர் மசூதி இடிப்பில், ஆதார் வழக்கில் எல்லாவற்றிலும் இதைத்தான் செய்தார்கள்.

இந்தத் தேர்வைத் திணிப்பதற்கு இவர்கள் கையாண்ட முறையே இவர்களுடைய தீய உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறது. மோடி அரசு மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் ஒரு வழிமுறையை முன்வைக்குமாறு தமிழக அரசிடம் கூறியது. ஆனால், அடுத்த விசாரணையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் சலுகை காட்டமுடியாது  என்று மாற்றிப் பேசியது. இதை, ஏன் என்று கூடக் கேட்கவில்லை எடப்பாடி அரசு. இவர்களெல்லாம் சேர்ந்துதான் அனிதாவை நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதலே இதில் நடப்பது முறைகேடு மட்டும்தான். ஐ.மு.கூ. அரசு கொண்டு வந்த நீட் தேர்வை அல் தாமஸ் கபீர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. அதை எதிர்த்த சீராய்வு மனுவை மோடி அரசு தீவிரமாக நடத்தியது. அல் தாமஸ் கபீரின் அமர்வில், நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அனில் ஆர் தவே என்ற நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு புதிதாக ஏற்படுத்தப்படுகிறது.

அந்த அமர்வு, முந்தைய தீர்ப்பு தவறானது என்றும் அதனைத் திரும்ப விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. விசாரிக்க வேண்டும் என்றாலும், அப்படி விசாரித்து முடிக்கும் வரை முந்தைய தீர்ப்புதான் அமலில் இருந்திருக்க வேண்டும். ஆனால், இடைக்காலமாக என்று சொல்லி நீட்டைத் திணிக்கிறது தவே தலைமையிலான அமர்வு.

இது அப்பட்டமான சட்டவிரோதம். பாபர் மசூதி விசயத்திலும் இப்படித்தான் நடந்தது. மசூதிக்குள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டிருந்தது. மசூதியை இடித்துச் சிலையை வைத்து ஒரு கொட்டகை போட்டு, அதுதான் கோயில் என்றார்கள். அதில் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதிக்கிறது.

பிறகு அந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்று இந்துக்கள் நம்புவதால், மசூதியில் மூன்றில் இரண்டு பங்கை இந்துக்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறுகிறது. பாபர் மசூதி இடிப்பில் இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்னவோ, அதுதான் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இழைக்கப் பட்டிருக்கிறது.

நோக்கம் கேடு, அமலாக்கம் முறைகேடு

நீட் தேர்வென்பது தவிர்க்க இயலாததென்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. நாங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து வந்திருக்கிறோம். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் கேட்டால் எங்களால் எப்படி எழுத முடியும் என்றும் அனிதாவைப் போல, அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு மதிப்பே கிடையாதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த இரண்டு கேள்விகளின் நியாயத்தையும் ஏற்றுக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம் சி.பி.எஸ்.சி.யும் மத்திய அரசும் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுகிறது. இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை கோருகிறது சி.பி.எஸ்.இ. மேற்கண்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே மதுரை நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறது உச்ச நீதிமன்றம். தடை விதித்தது மட்டுமல்ல. இனி நீட் தொடர்பாக என்னைத் தவிர யாரும் விசாரிக்கக் கூடாது என்று சட்டவிரோதமாக உத்தரவும் போடுகிறது.

நீதிமன்றத்தின் இந்த முறைகேட்டை மத்திய அரசோ, மாநில அரசோ கேள்விக்குள்ளாக்கவில்லை. இதற்கு விளக்கம் கேட்டால், இந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ”எங்களை ஏன் விமரிசிக்கிறீர்கள், உச்ச நீதிமன்றத்தை விமரிசிக்க வேண்டியதுதானே” என்கிறார்கள் பா.ஜ.க. வினர். நாம் உச்ச நீதிமன்றத்தையும்தான் விமரிசிக்கிறோம். உடனே, உச்ச நீதிமன்றத்தையே விமரிசிக்கிறான், தேசத்துரோகி என்பார்கள்.

இவர்கள் எல்லா முறைகேடுகளையும் செய்வார்கள். அந்த முறைகேடுகளைப் பற்றி கேள்வி எழுப்பினால், உடனே தேசத்துரோகி  என்பார்கள். இதுதான் காஷ்மீரில் நடந்தது. குறைந்தது 10 காஷ்மீரையாவது இந்தியாவில் உருவாக்காமல் இவர்கள் ஓயப்போவதில்லை.

நீட் எதற்காக வந்தது தெரியுமா?

அனிதாவின் மரணத்தை பற்றி பேசும் போது,  இந்த நீட் என்ற தேர்வு எதற்காக வந்தது என்ற பின்புலத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுங்காகப் படித்து மதிப்பெண் பெறாத,  தகுதி இல்லாத பணக்கார மாணவர்கள் லட்சம், கோடி என்று பணம் கொடுத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் ஆகி விடுகிறார்கள். சுயநிதிக் கல்லூரிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் மருத்துவர்களின் தரம் வீழ்கிறது. அதைக் காப்பாற்றுவதற்கு  இப்படி ஒரு தேர்வு தேவை என்று சொல்லித்தான் இது அறிமுகப் படுத்தப்பட்டது.

கொசுவை ஒழிக்க வேண்டும் என்றால், சாக்கடையை ஒழித்திருக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மெடிக்கல் சீட்டை விற்பதற்கு ஒரு தனியார் கல்லூரி இருப்பதால்தானே பணக்காரன் அதை வாங்க முடிகிறது. அதைத் தடுப்பதற்கு மருத்துவக் கல்லூரிகள் தனியாரிடம் இருக்க கூடாது என்று முடிவு எடுத்திருக்கலாமே.

தனியார்மயக் கொள்கை வந்த பிறகுதான் தனியார் மருத்துவக் கல்லூரி வந்தது. அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இருப்பதால் தகுதி இல்லாதவ மருத்துவர் கூட்டம் அதிகமாகிவிட்டது. தரமானவர்கள் வருவதற்கான வாய்ப்பை இந்தத் தனியார் கல்லூரிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லி, தரம் என்ற பெயரில்தான் தனியார் மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினார்கள். ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் யோக்கியதை என்ன?

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகள் பாழுங்கிணற்றில் செத்துக் கிடந்தார்கள். மருத்துவராகவும் நோயாளியாகவும் மாணவர்களையே நடிக்க வைத்து, அங்கீகாரம் வாங்கியிருக்கிறது அந்த கல்லூரி நிர்வாகம். எம்.ஜி.ஆர். மருத்தவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள்.

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் கேதன் தேசாயின் அறையிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் 1500 கோடி ரூபாய் பணமும் சில நூறு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. எதற்காக அந்தப் பணம் அவருக்கு கிடைத்தது? எஸ்.வி.எஸ். கல்லூரி மாதிரி இந்தியா முழுவதும் இருக்கின்ற தகுதி இல்லாத, தரம் இல்லாத, அடிப்படைக் கட்டுமானம் இல்லாத, வாத்தியார் இல்லாத, கேவலமான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கியதில்தான் அந்தக் காசு வந்தது. அவர் மீது சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது. ஆனால், என்ன நடந்தது? அவர் குஜராத் மருத்துவ கவுன்சிலின் தலைவராக, மோடி முதல்வராக இருந்த காலத்தில் 2013 – 2014 நியமிக்கப்பட்டர். பிறகு, குஜாராத் மருத்துவ கவுன்சில் அவரை அகில உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்தது.

இதுதான் இவர்களின் யோக்கியதை. இவர்கள் தரம் பற்றிப் பேசுகிறார்கள். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை கேதன் தேசாய், மோடி, கீதாலட்சுமி, விஜயபாஸ்கர் ஆகியோரை வெளியேற்றுவதிலிருந்து அல்லவா தொடங்க வேண்டும். இவர்களோ அனிதாவிற்கு மரண சீட் கொடுப்பதில் இருந்து தொடங்குகிறார்கள்.

மாணவன் தகுதியாக இல்லை என்பது பிரச்சனையே இல்லை. உங்களுடைய அமைப்பு,  அதிகாரிகள் – நீங்கள்தான் தரம் அற்றவர்கள். தகுதி அற்றவர்கள்.  எங்கள் பிள்ளைகளுக்குத் தகுதி இருக்கிறதா என்று பேசக்கூட அருகதை இல்லாதவர்கள் நீங்கள். பணக்காரர்களை ஒழுங்குபடுத்துகின்றேன் என்று தொடங்கிய இந்த சதித்திட்டம், ஏழை அனிதாக்களை வெளியேற்றுவதில் வந்து முடிந்து இருக்கிறது . காஸ் மானிய ஒழிப்பும் இப்படித்தான் நடக்கிறது. ஒப்பிட்டுப் பாருங்கள்.

தரமான மருத்துவம் – யாருக்கு?

மருத்துவத்தினுடைய தரத்தை உயர்த்த வேண்டும்  என்கிறார்கள். இது யாருடைய பிரச்சனை? நோயாளிகளின் பிரச்சனை. எங்களுக்கு நீட் தேர்வில் பாஸ் பண்ணிய தரமான மருத்துவர் வேண்டும் என்று நோயாளிகள் கேட்டார்களா?

அரசு மருத்துவமனைகளே இல்லை, இருந்தாலும் அங்கே மருத்துவர்கள் இல்லை என்பதுதான் மக்கள் சந்திக்கும் பிரச்சினை. இருக்கிற மருத்துவமனைகளையும் தனியார்மயம் ஆக்க வேண்டும் என்று கூறுகிறது மோடி அரசு. இன்சூரன்ஸ் இல்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்பது தான் இந்த அரசாங்கத்தின் கொள்கை. அப்படியானால், யாருக்காக  இவர்கள் தரமான மருத்துவர்களை உருவாக்குகிறார்கள்?

அனிதா படித்து முடித்து டாக்டரானால், தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன் உண்டு. இன்று நீட் தேர்வு எழுதி சீட் கிடைத்து இருப்பவர்களால் மக்களுக்கு என்ன பயன்? இவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு போகலாமா,  அல்லது அமெரிக்கவிற்கு விமானம் ஏறலாமா என்று பார்ப்பார்கள். இதுதான் அவர்கள் நோக்கம். மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமென்ற நோக்கம் கிடையாது. இந்த மருத்துவ அமைப்பே அப்படி இல்லை. அதனால் தரம் என்பது வெற்றுப் பேச்சு.

தரமான மருத்துவமனை என்று சொல்லப்படுகின்ற கார்ப்ரேட் மருத்துவமனைகள் எப்படி நடக்கின்றன? ஒரு மருத்துவமனையில் உள்ள நியூராலாஜி, கார்டியாலஜி போன்ற துறைகள் தனித்தனியே ஏலம் விடப்படுகின்றன. பஸ்ஸ்டாண்டு கக்கூஸ் மாதிரி இவற்றை ஏலம் எடுக்கும் டாக்டர்கள், ஏலத்தொகையை கார்ப்பரேட் மருத்துவமனைக்குக் கட்டிவிட்டு,  அதற்கு மேல் சம்பாதிப்பதற்கு நோயாளிகளிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். ஏழைகளை விடுங்கள், காசு கொடுத்தும் தரமான மருத்துவம் இல்லை என்று பணக்கார்களே புலம்பவில்லையா? ஐ.சி.யு.வில் பிணத்தை வைத்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் சந்தி சிரிக்கவில்லையா?

இவர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்பு, இவர்களுக்கே பயன்படாத அளவுக்கு, இவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இருப்பதால்தான் தரம் என்ற ஒன்று இன்னமும் இங்கே இருக்கிறது. சமூக அக்கறை உள்ள மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், இந்த நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார்கள். இந்த நீட் தேர்வுதான் விதியென்று ஆகி விட்டால், சமூக அக்கறை உள்ள மனிதர்கள் யாரும் மருத்துவத் துறையில் இருக்க மாட்டார்கள்.

அதனால்,  தர நிர்ணயம் என்பதை நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம். அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதைப் பேசும் அருகதை உனக்கு இல்லை என்று நாம் சொல்ல வேண்டும். இவர்கள் சொல்லும் வழிமுறையின் மூலமாக எந்த நாடும் மருத்துவ துறையின் உச்சத்தை எட்டியது இல்லை.

அமெரிக்காவுக்குப் பக்கத்தில இருக்கும் சின்னஞ்சிறு நாடு கியூபா. அது இன்று உலக அளவில் சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாடு.  அமெரிக்காவில் அறிவியல் முன்னேறி இருக்கலாம். ஆனால், அமெரிக்க ஏழைகள் கியுபாவில் போய் வைத்தியம் பார்த்துக் கொள்ள அலைகிறார்கள். கியூபாதான் மருத்துவத்தில் உயர்ந்து நிற்கின்றது. திறமையிலும் அதுதான் உயர்ந்து நிற்கின்றது. ஆகவே நீட் தேர்வை எதிர்க்கும் நாம் இயல்பாகவே மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.

நீதிபதிகளின் தரத்துக்கு நீட் உண்டா?

மருத்துவத்தின் தரம் பற்றி நீதிமன்றம் பெரிதும் கவலைப்படுகிற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தரம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? காட்டாமணக்கை அகற்றுவது,  திரையங்கில் ஜனகணமன பாடினால் எழுந்து நிற்பது முதல் நீட் தேர்வு வரை அனைத்தையும் முடிவு செய்யும் இவர்களுடைய தகுதி எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தேர்வு இருக்கிறது. இப்போது அந்தத் தேர்வையும் நீட் மாதிரி ஒரு தேசியத் தேர்வு ஆக்குகிறார்கள். அதில் நேர்முகத் தேர்வுக்கு 50 மதிப்பெண்ணாம். இது ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நீதிபதியாக்கும் ஏற்பாடு. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகளின் குழுவால் முடிவு செய்யப்படுகின்றர்கள்.  அவர்களுடைய  தரத்தை எங்கே விசாரிப்பது?

சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சிவில், கிரிமினல் சட்டம் தெரியாது. சர்வீஸ் லா மட்டும்தான் தெரியும் என்று அவரே சொல்லியிருக்கிறார் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் ராஜிவ் தவான் என்ற மூத்த வழக்கறிஞர். நீதிபதிகளின் திறமை, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யார் பரிசீலிப்பது? குமாரசாமி, தத்து போன்றோர் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கெஹெரின் மகன் இலஞ்சம் கேட்டதாக அருணாசால பிரதேச முதல்வர் கலிகோ புல் தனது தற்கொலை கடித்தில் எழுதி உள்ளாராம்.

இவர்களெல்லாம் சேர்ந்து அனிதாவிற்குத் தரம் நிர்ணயிக்கிறார்களா?  ம.பி. மாநிலத்தின் வியாபம் ஊழல் ஒரு பெரிய கிரிமினல் துப்பறியும் நாவல் மாதிரி போகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களெல்லாம் வரிசையாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த பா.ஜ.க. அரசு தரம் பற்றிப் பேசுவதா?

அனைத்திந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் என்பதால், அதைக் கண்காணிக்க  நீதிமன்றம் ஒரு கமிட்டி போட்டது. அதன் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா. மெடிகல் கவுன்சிலால் தரமற்றவை என்று அனுமதி மறுக்கப்பட்ட 26 மருத்துவக் கல்லூரிகளுக்கு அவர் லைசன்ஸ் கொடுக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி, துணை நடிகர்களையே டாக்டராகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து அங்கீகாரம் கேட்டது. இதை ஊழல் மருத்துவ கவுன்சிலாலேயே பொறுக்க முடியாமல் அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், இத்தகைய மோசடி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

நாமக்கல் கொள்ளைக்குப் பதில் நீட் கொள்ளை

மேற்கண்ட பிரச்சினைகளையெல்லாம் நீட் தேர்வு தீர்த்து விடுமா? நீட் தேர்வு தரத்தைக் கொண்டு வரவில்லை. கட்டணக் கொள்ளையைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கின்றது. கேரளாவில் நீட் தேர்விற்குப் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரியில் 5 லட்சம் என்பது அரசு நிர்ணயித்த கட்டணம். அதை  11 லட்சமாக ஆக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போனால், 11 லட்சம் கட்டு என்று சொல்கின்றது உச்ச நீதிமன்றம்.  நாடு முழுவதும் ஒரே தரத்தை கொண்டு வருகிறார்களாம். ஆனால், ஒரே கட்டணம் கிடையாதாம்.

தனியார் கல்லூரிகளின் கட்டணத்தில் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்பது மோடி உருவாக்கிய நிதி ஆயோக்கின் முக்கியமான பரிந்துரை. தனியார் கொள்ளைக்கு வசதி செய்து கொடுப்பதுதான் இவர்கள் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐ.ஐ.டி. யில் சேருவதற்கு இட்ஜீ (IIT – JEE) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அது ஆண்டுக்கு 24.000 கோடி புரளும் தொழில். இனி ஒவ்வொரு துறைக்கும் இவர்கள் கொண்டுவரக் கூடிய நுழைவுத் தேர்வுகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் புழங்க போகின்றது.  இது புதியதொரு தனியார் கொள்ளை.

நீட்டுக்கு முன்னால் இருந்தது நாமக்கல் கறிக்கோழிப் பள்ளி. அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தயார் செய்தார்கள். இந்த நீட் பயிற்சிப் பள்ளிகளில் ஸ்டிராய்டு ஊசி போட்டு, அதைவிடக் குறுகிய காலத்தில் பயில்வான்களைத் தயார் செய்வதாக கூறுகிறார்கள். இது நாமக்கல்லைவிட மோசமானது. நுழைவு தேர்வு என்பதே அறிவியல் பூர்வமானதல்ல.  உண்மையில் அதுதான் தரத்தை அழிக்கக்கூடியது.

மணற்கொள்ளை போல இது மருத்துவக் கொள்ளை

இவர்கள் தமிழ்நாட்டை ஏன் வட்டமிடுகிறார்கள்?  தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தவிர, அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி.  மோடியின் குஜராத்தில் மொத்தமே 6 அரசு மருத்துவக் கல்லூரிகள்தான்.  தமிழகம் போல அரசு மருத்துவக் கல்லூரிகள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.   சிறப்பு மருத்துவர்களை உருவாக்கும் உயர்கல்விக்கான இடங்களும் இங்கு தான் அதிகம் உள்ளன.  இவையனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம்.  மணல் கொள்ளையைப் போன்ற இந்த மருத்துவக் கொள்ளையை நடத்துவதற்கான கொல்லைப்புற வழிதான் நீட்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 35ஏ-வின்படி காஷ்மீரில் பிறக்காத யாரும் அங்கு சொத்து வாங்க முடியாது. இந்தத் தடையை  நீக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் சொத்து வாங்க முடியவில்லை என்பது யார் பிரச்சினை?. அதானி, அம்பானிகளின் பிரச்சினை. அதுபோலத்தான் இதுவும். தமிழ்நாட்டின் மருத்துவத் துறையைக் கொள்ளை அடிக்கத்தான் இந்த ஏற்பாடு.  எல்லா நாடுகளிலும் சொத்து வாங்குவதற்காக உலகமயம், உலகத்தரம் என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள். தமிழகம் போன்ற மாநிலங்களைக்  கொள்ளையிடுவதற்காக இவர்கள் தேசியம், தேசியத் தரம் பேசுகிறார்கள். இதுதான் நீட் ரகசியம்.

அனிதா ஏன் மருத்துவராக வேண்டும்?

மருத்துவர்களிடம் மக்களாகிய நாம்  எதிர்பார்ப்பது என்ன? தரமா?  ரஜினிகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் தரமான வைத்தியம் கிடைப்பதற்கா  நம் வரிப்பணத்தில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டிருக்கின்றன?  நமக்குத் தேவை மக்களுக்குத் தொண்டாற்றும்  மருத்துவர்கள் .

”நீட்”டுக்கு முன்னால் அரியலூர் மாவட்டத்திலிருந்து 15 பேர் மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள்,  நீட் வந்த பிறகு ஒருவர்கூட இல்லை என்கிறார் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கரன்.  நாம்  சேவையை அளவுகோலாக வைத்தால், அனிதாவைப் போல நூற்றுக்கணக்கானவர்களை மருத்துவர்களாக்கலாம்.  அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் இடம் என்று ஏன் சட்டம் இயற்றக் கூடாது? மக்கள் வரிப்பணத்தில் நாம் உருவாக்கும் டாக்டர் அமெரிக்காவுக்குப் போவதை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?

தரம் வேறு, சேவை மனப்பான்மை வேறு கிடையாது. காசு, காசு என்று அலைபவன் எந்த நாட்டிலும் சிறந்த விஞ்ஞானியாக இருந்ததில்லை.அரசு மருத்துவமனைகளில் பல அரிதான அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. பணத்தாகம் கொண்டவன் அரசு மருத்துவமனையில் அத்தனை அரிய முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு அறிவியல் தாகம் வேண்டும். சேவை மனப்பான்மை வேண்டும்.

நாம் ஏன் அனிதா மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறோம் ? அவள் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்.  மக்களின் துன்ப துயரங்களை நெருக்கமாக அனுபவித்து அறிந்தவள். அவள் மருத்துவரானால் அப்பகுதி மக்களுக்கு சேவை செய்வாள். இப்படிப்பட்டவர்கள் மருத்துவராகும்போதுதான் பின் தங்கிய மாவட்டங்களில் மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கும்.

இது மெடிக்கல் சீட் கிடைக்காத ஒரு சிறுமியின் பிரச்சினை மட்டுமல்ல.  பல கோடி மக்களின் மருத்துவம் பற்றிய பிரச்சனை. அம்மக்களை மருத்துவ  சேவையே கிடைக்காமல் வெளியேற்றுவது பற்றிய பிரச்சனை.

பணிய மறுப்போம்

அனிதாவின் தற்கொலைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த அநீதியைச் சகித்துக்கொண்டு அவளால் வாழ முடியவில்லை என்பதுதான்  அந்த அர்த்தம். சகித்துக்கொண்டு வாழ்வதற்கு சமீபத்திய உதாரணம் தேரா சச்சா சௌதா.

வல்லுறவு குற்றத்துக்காக 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ராம்ரகீம் சாமியாரைப் பற்றிய புகார் 2002-இலேயே வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சிறுமிகள் அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இரண்டே பேர்தான் தைரியமாக வெளியே சொல்வதற்கு முன்வந்தார்கள், மற்ற பெண்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாகப் பாலியல் வல்லுறவை சகித்துக் கொண்டுதான் வாழ்ந்திருக்கிறார்கள்.

நீட் என்பது அப்படி ஒரு வன்முறைதான்! பிற மாநில மக்கள் இதன் பரிமாணம் புரியாமல் இருக்கிறார்கள். பண மதிப்பழிப்பு, மாடு விற்கத்தடை, மாட்டுக்கறி உண்ணத்தடை, இந்தி திணிப்பு,  ஜி.எஸ்.டி. ஆகிய அனைத்தும்  நீட் போன்ற நடவடிக்கைகள்தான். இப்படி வன்முறை மூலம் அச்சுறுத்தி நம்மைப் பணிய வைக்க முடியும் என்று மோடி அரசு கருதுகிறது.

அந்தப் பெண்களை நினைத்தபடியெல்லாம் அடக்கியாள முடியும் என்று ராம் ரகீம் எண்ணியதைப் போலத்தான் மோடி அரசும் நம்மைப் பற்றி எண்ணுகிறது. தமிழக மக்கள் அ.தி.மு.க. வினரைப் போன்ற சுயமரியாதையற்ற புழுக்கள் அல்ல என்பதைக் காட்டவேண்டும்.

குஜராத் மாடல் என்று சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். அந்த குஜராத் மாடல் என்ன?  அரசுக் கல்வி, அரசு மருத்துவம் கிடையாது என்பதும், எல்லாம் தனியார்மயம் என்பதும் உனாவிலே தலித்துகளைப் பகிரங்கமாகக் கட்டி வைத்து அடித்த பார்ப்பன பாசிச வன்முறையும்தான் குஜராத் மாடல்.

அந்த குஜராத் மாடலுக்கு எதிரானதுதான்  தமிழ்நாட்டு மாடல். குஜராத் இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்றால், தமிழகம் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்துக்கும்  சோதனைச் சாலை.

எல்லா பாளையக்காரர்களும் அடிபணிந்த பிறகும்,  பணிய மறுத்த கட்டபொம்மனை நினைவுபடுத்துகிறாள் அனிதா.  தூக்குமேடையை நோக்கி நடந்து சென்ற கட்டபொம்மனின் கண்களில் எள்ளளவும் அச்சமில்லையென்றும், இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களை இகழ்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்தபடி அவன் நடந்து சென்றதாகவும் எழுதுகிறான்,  தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஆங்கிலேய அதிகாரி.

அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள்.  அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.

அது தூக்கு தண்டனை, இது தற்கொலை என்பது உண்மைதான். எனினும், சுயமரியாதையுள்ள இருவரும் நமக்கு விடுக்கும் செய்தியென்னவோ, ஒன்றுதான்.

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.
_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி