Monday, June 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 479

சிறப்புக் கட்டுரை : ராம் ரகீம் சிங் – வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம் !

2

மிழ்நாட்டில் கழகங்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் பேசும்போது, கழகங்கள் என்ற சொல்லை அவர்கள் உச்சரிக்கையில் அதில் பல அர்த்தங்கள் தொனிப்பதை நாம் காண முடியும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் பார்ப்பன பிரதிநிதிகள் பேசும்போது இதை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.  நாத்திகர்கள், ஊழல் பேர்வழிகள், ஒழுக்கம் கெட்டவர்கள், கீழ் மக்கள் என்று ஒரு பார்ப்பன சாதிவெறியன், சூத்திர – பஞ்சம சாதியினர் மீது வெளிப்படுத்தும் வெறுப்பும் காழ்ப்பும் அதில் பளிச்சென்று வெளிப்படும்.

கேடுகெட்ட நடவடிக்கைகள் அனைத்திலும் ஈடுபட்டுக்கொண்டே, தங்களை மேன்மக்களாகக் காட்டிக் கொள்வதுதான் பார்ப்பனக் கும்பலின் சாமர்த்தியம். ஊழல் ராணியான ஜெயலலிதாவுக்கு ராஜகுருவாக இருந்திருந்தாலும், மிடாஸ் சாராய கம்பெனியின் இயக்குநர் பதவியில் சோ அமர்ந்திருந்தாலும், செத்துப்போன ஊழல் பிராணியின் உடலில் இருந்து புழுத்து நெளியும் கும்பல்களுக்கு திருவாளர் குருமூர்த்தி அரசியல் தரகு வேலை செய்தாலும், அந்த பிராமணோத்தமர்கள் தம்மைக் கறைபடியாதவர்களாக காட்டிக்கொள்வது மட்டுமல்ல, அவ்வாறே கருதியும் கொள்கிறார்கள்.

இரவு முழுதும் விலைமாதுவின் படுக்கையில் கிடந்து விட்டு, காலையில் தெருவில் நின்று தேவுடியா என்று ஏசும் ஆண்மகன், தனது கற்பு நெறி குறித்துக் கொண்டிருக்கும் மனோபாவத்தையும், மோகனாம்பாளை மைனருக்கு செட் அப் செய்ய அரும்பாடுபடும் வைத்தி, தன்னைப் பிறன்மனை நோக்காப் பேராண்மையாளன் என்று கருதி கர்வம் கொள்வதையும் ஒத்ததே இந்த பார்ப்பன அறிவாளிகளின் கர்வம்.

இன்று எடப்பாடி, பன்னீர் கிரிமினல் கும்பலையும், நேற்று கொள்ளைக்காரி ஜெயலலிதாவையும், அதற்குமுன் கொலைகார சங்கராச்சாரியையும் காப்பாற்றுவதற்கு முன்நின்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளின் சமீபத்திய லீலை, பொறுக்கி ராம் ரகீம்சிங்குடன் அவர்கள் கொண்டிருந்த உறவு. அதாவது, வல்லுறவுக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட பொறுக்கியுடன் சங்க பரிவாரம் கொண்டிருந்த நல்லுறவு.

மாஃபியா நிறுவனமாக மதம்

குர்மீத் ராம் ரகீம் சிங், அரியானா மாநிலம், சிர்சா நகரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நகரம் போல விரிந்து கிடக்கும் தேரா சச்சா சவுதாவின் தலைவர். தேராக்களை ஒரு வகையான ஆதீனங்கள் என்று சொல்லலாம். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சிறிதும் பெரிதுமாக சில ஆயிரம் தேராக்கள் உள்ளன.

ஜாட் சாதியினரால் ஆதிக்கம் செய்யப்படும் அதிகாரபூர்வ சீக்கிய மதத்தின் மீது வெறுப்பும் அதிருப்தியும் கொண்ட ஒடுக்கப்பட்ட சாதிகள், தமக்கென உருவாக்கிக்கொண்ட தனித்தனி நிறுவனங்களாகவும், சூஃபி வழிபாட்டு முறையும் சீக்கிய நம்பிக்கையும் இணைந்த வழிபாட்டுப் பிரிவுகளாகவும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் மதமாகவும் உருவாகியிருப்பவை இந்த தேராக்கள். கத்தோலிக்க, புரோட்டஸ்டென்ட் மதப்பிரிவுகளுக்கு வெளியே, பாஸ்டர்கள் எனப்படுவோர் சுயேச்சையாக நடத்தும் கிறித்தவ சபைகளைப் போன்றவை இவை.

வளமான விளைநிலங்களையும் சொத்துக்களையும் கொண்டவையாக வளர்ந்திருக்கும் இந்த தேராக்கள் மத நிறுவனங்களுக்குரிய வரிச்சலுகையையும் பெற்றிருக்கின்றன.  சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், கட்டைப்பஞ்சாயத்து, நுகர்பொருள் வியாபாரம் ஆகியவை முதல் அரசாங்க காண்டிராக்டு, வேலைநியமனம், டிரான்ஸ்ஃபர் என்று காரியங்களையும் முடித்துத் தரும் தரகுவேலைகள் வரையிலான அனைத்தையும் செய்து கொடுப்பவர்களே இந்த தேராக்களின் ஆன்மீகத் தலைவர்கள்.

சாதிச் சங்க தலைவன், பிழைப்புவாதக் கட்சித் தலைவன், மாஃபியா கும்பல் தலைவன் ஆகியோருக்குரிய அனைத்துப் பணிகளையும் ஆன்மீகப் போர்வைக்குள்  ஒளிந்து  கொண்டு செய்பவையே இந்த தேராக்கள்.

ஜாட் சாதியில் பிறந்த, திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான குர்மீத், பதவியில் அமர்த்தப்பட்ட ஆண்டு 1990. கடந்த 27 ஆண்டு காலத்தில்தான் சிறியதொரு அமைப்பாக இருந்த இந்த தேரா, பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக விரிவடைந்திருக்கிறது.

சீக்கிய மதத்தில் நிலவிய தலித்துகளுக்கு எதிரான கடும் சாதி ஒடுக்குமுறை, அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருந்த வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சீக்கிய மதத்துக்கு வெளியே சுயேச்சையான ஒரு மதக்குழுவாக அம்மக்களைத் தன் பின்னே திரட்டிக் கொண்டான் குர்மீத் சிங்.

சீக்கிய மதச் சீரழிவில் புழுத்த புழு

சாதிவெறி பிடித்த சமூகச் சூழல் என்ற பின்புலத்தில் தேரா சச்சா சவுதாவின் வளாகத்தில் சாதி வேறுபாடின்றி மக்கள் நடத்தப்பட்டதும், தேராவின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ மனைகளில் வழங்கப்பட்ட மலிவு விலை மருத்துவமும், பள்ளிகளில் கல்வி, தேரா நிறுவனம் நடத்தும் தொழில்கள் மற்றும் விவசாயத்தின் வாயிலாக சுமார் 75,000 பேருக்கு மேல் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பும் ஏராளமான தலித் மக்களை தேராவை நோக்கி ஈர்ப்பதில் பெரும்பங்காற்றின.

மிக முக்கியமாக குடி, போதைப்பழக்கம் கூடாது என்ற ராம் ரகீமின் பிரச்சாரமும் தேராவில் செயல்பட்ட போதை அடிமைகள் மறுவாழ்வு மையமும், பெண்களை ஈர்ப்பதில் பெரும் பங்காற்றியது. தேராவில் ஞானஸ்நானம் பெற்று இணைபவர்கள் மாமிசம் சாப்பிடக்கூடாது என்ற விதியும், அவ்வாறு இணைபவர்களுக்கு அவர்கள் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப்பட்டத்தை அகற்றி விட்டு, இன்சான் (மனிதன்) என்ற பட்டத்தை சேர்த்ததும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம், ஒருவிதமான மேல்நிலையாக்க மனநிலையைத் தோற்றுவித்தன. ஐயப்ப சீசனில் விரதமிருக்கும் உழைக்கும் வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் சேர்ந்த சாமிகளும் அவர்களது குடும்ப பெண்களும் ஆட்படும் மனநிலையை ஒத்தது இது.

ராம் ரகீமின் மதக்குழு என்பது சீக்கிய மதத்தின் போர்ஜரி வடிவம். பார்ப்பனியத்தையும் சாதியையும் எதிர்த்த குருநானக், தனது மார்க்கத்தில் இணைபவர்கள் ஆணாக இருந்தால் சிங் என்ற அடைமொழியையும், பெண்ணானால் கவுர் என்ற அடைமொழியையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆண்சாதி பெண்சாதி தவிர, வேறு சாதியில்லை என்றும் விதித்தார். சாதி மறுப்பு, சீக்கியத்தின் முக்கிய கொள்கை.

இருப்பினும், இன்று சாதிக்கு ஒரு குருத்துவாரா என்று சீக்கிய மதம் சீரழிந்து விட்டது. பஞ்சாப் மாநில மக்கட்தொகையில் சுமார் 30%, அரியானாவில் 20% தலித் மக்கள் என்ற போதிலும் அவர்களில் 1% மக்களிடம்கூட நிலம் இல்லை. இந்நிலையில் ஆதிக்க சாதியினரின் நிலவுடமை ஆதிக்கத்தையும் சாதி ஆதிக்கத்தையும் அரசியல் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்காமலேயே, தலித் மக்களின் அதிருப்தியைத் தந்திரமாக  அறுவடை செய்து கொண்டான் ராம் ரகீம். தனது தேராவில் இணைகின்ற மக்களின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப்பட்டத்தை நீக்கிவிட்டு, அனைவருக்கும் இன்சான் (மனிதன்) என்ற பட்டத்தை வழங்கினான்.

பஞ்சாப் மாநில மக்கட்தொகையில் சுமார் 30%, அரியானாவில் 20% தலித் மக்கள் என்பதால், அவர்களை வாக்கு வங்கியாகத் திரட்டிவைத்துக் கொண்டு, காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் விலைபேசியதுதான் ராம்ரகீமின் சாமர்த்தியம். 2009 – இல் காங்கிரசையும் அதன் பின்னர் 2012 முதல் பா.ஜ.க. வையும் ஆதரித்து, அவர்கள் துணையுடன் ஒரு மாஃபியா சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்துக் கொண்டான்.

கலவரம் – நீதிபதியை மிரட்டிய பா.ஜ.க.

ராம் ரகீம் சிங்குக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவுடன் அந்த ஊரில் நடைபெற்ற பெருந்திரள் வன்முறையைக் கண்ணுற்ற சில அறிஞர்கள், கொடிய குற்றங்களையும் தாண்டி ராம் ரகீமை மக்கள் நம்புகிறார்கள் என்றால் இதன் சமூக உளவியல் ஆய்வுக்குரியது என்றெல்லாம் இதனைச் சித்தரிக்கிறார்கள்.

குன்ஹா தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. காலிகள் அரங்கேற்றிய வன்முறைக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இங்கே வன்முறையை அரங்கேற்றியவர்கள் அ.தி.மு.க. என்ற அரசியல் மாஃபியாவின் தளபதிகள். அங்கேயும் அந்த ஆன்மீக மாஃபியாவுக்கு எண்ணற்ற தளபதிகளும் அதனை அண்டிப்பிழைக்கும் பரிதாபத்துக்குரிய மக்களும் இருந்தனர். கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி. மீதும், தாதுமணல் கொள்ளையன் வைகுந்தராசன் மீதும் நடவடிக்கை எடுத்தவுடன், அவர்களிடம் வேலை செய்தவர்கள் பொங்கி எழுந்ததற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

ஜெயலலிதா நல்லவர், எம்.ஜி.ஆர். நல்லவர் என்று நம்புகின்ற, கல்வியறிவும் ஜனநாயக உணர்வும் இல்லாத பெருந்தொகையான மக்கள், அற்ப சலுகைகளுக்காக பிழைப்புவாதிகளாக நடந்து கொள்ள தமிழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்களே, அதன் இன்னொரு வடிவமே இது.

ராம் ரகீம் தண்டனைக்கு எதிரான வன்முறையை அரியானா மாநில பா.ஜ.க. அரசு திட்டமிட்டேதான் நடத்தியது. தீர்ப்பு வழங்கப்படும் நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே அங்கு மக்கள் கூட்டம் குவிக்கப்பட்டது. ராம் ரகீமுக்குத் தண்டனை விதித்தால், அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நீதிபதியையும் சிவில் சமூகத்தையும் மிரட்டுவதே பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருந்தது.

144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பலரும் கோரியபோது, மத நம்பிக்கைக்கு எதிராக 144 பிறப்பிக்க இயலாது என்று பதிலளித்தார் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர். பிறகு வன்முறை எல்லை மீறிச் சென்றவுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.PC) கீழ் 144 தடை பிறப்பிப்பதற்குப் பதிலாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 144-வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது, கூட்டம் கூடத் தடை விதிக்கப்படவில்லை. ஆயுதங்களுடன் கூடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. இது குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, எழுத்துப்பிழை என்று நக்கலாகப் பதிலளித்தது பா.ஜ.க. மாநில அரசு.

2002 குஜராத் இனப்படுகொலையின்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளே உயிர் தப்பி ஓட வேண்டிய நிலையை உருவாக்கிய கலவர நாயகன் பிரதமராக அமர்ந்திருக்கும் நாட்டில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொல்லப்படாததுதான் அதிசயம். கலவரத்துக்கு அந்த நீதிபதிதான் பொறுப்பு என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார் அமித் ஷா.

தண்டனை விதிக்கப்பட்டதும் ராம்ரகீமைத் தப்பிக்க வைக்கும் சதி திட்டத்திற்கு போலீசாரே உதவியிருக்கின்றனர். தண்டிக்கப்பட்ட அந்தக் குற்றவாளியை அவனது வளர்ப்புமகள் என்று கூறப்படும் ஹனிபிரீத்துடன் தனி ஹெலிகாப்டரில் அனுப்பியதும், அதில் அவர்கள் சாக்லேட் பரிமாறிக் கொண்டதும், போலீசின் விருந்தினர் மாளிகையில் தனியே தங்கவைக்கப்பட்டதும் புகைப்படங்களாக வந்து சந்தி சிரிக்கின்றன. தனக்கு அன்றாடம் மசாஜ் செய்து விடுவதற்கு ஹனிபிரீத் தன்னுடன் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ராம்ரகீம் மனு செய்திருக்கிறான் என்றால், பா.ஜ.க. அரசில் அவனுடைய அதிகாரம் எப்படி இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம்.

தங்களைத் தேர்தலில் ஆதரித்தால் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதாக வாக்குறுதி அளித்த பா.ஜ.க. தலைவர்கள், தங்களை முதுகில் குத்தி விட்டதாக வெடித்தார் வளர்ப்பு மகள். மோடி சசிகலாவின் தலையைத் தடவிய கதைதான்.

வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மீகம்

குர்மீத் ராம் ரகீமின் பாலியல் வல்லுறவுக் குற்றத்தை முதன் முதலில் வெளியே கொண்டுவந்தது 2002 -இல் வெளியான ஒரு மொட்டைக் கடிதம். ஆசிரமத்தில் சிஷ்யையாக சேர்க்கப்பட்ட தன்னையும் தன்னைப் போன்ற எண்ணற்ற இளம்பெண்களையும் மிரட்டி வல்லுறவுக்கு உட்படுத்துவதாக வாஜ்பாயி, மனித உரிமைக் கமிசன் முதல் மாநில உயர் நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் வரை அனைவருக்கும் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தாள் அந்தப் பெண். யோக்கியர் வாஜ்பாயி அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இக்கடிதத்தை தைரியமாகப் பிரசுரித்த பத்திரிகையாளரும், கடிதம் எழுதிய பெண்ணின் சகோதரனும் ராம் ரகீமின் ஆட்களால் கொல்லப்பட்டனர்.

சண்டிகர் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரும்,  விசாரணையை நிறுத்துவதற்கு காங்கிரசு அமைச்சர்களும், குறிப்பாக பா.ஜ.க. -வின் பல அமைச்சர்களும் தனக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததாகச் சொல்கிறார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி.

பெற்றோரால் மிகுந்த பக்தியுடன் சிஷ்யைகளாக ஒப்படைக்கப்பட்ட, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 -க்கும் மேற்பட்ட இளம்பெண்களை தனது வைப்பாட்டிகளாகப் பயன்படுத்திவிட்டு, பின்னர் தனது சீடர்களுக்கே மணமுடித்து வைத்திருக்கிறான் ராம் ரகீம். அதே போல, சுமார் 400 ஆண் சீடர்களுக்கு ஆண்மை நீக்கமும் செய்திருக்கிறான்.

நான் கடவுளின் அவதாரம். நான் கண்ணனைப் போன்றவன், நீங்கள் கோபியரைப் போன்றவர்கள். உங்கள் உள்ளத்தை எனக்கு ஒப்படைத்திருக்கிறீர்கள். உடலையும் ஒப்படைத்தால், உங்கள் பக்தி முழுமைப்படும் என்று கூறியும், இணங்க மறுத்த பெண்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தும் அனைவரையும் வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறான் ராம்ரகீம்.

ராம் ரகீமுக்கு எதிராகச் சாட்சி சொன்னால், தம் குடும்பத்தைக் கொன்றுவிடுவான் என்றும், தற்போதைய மணவாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும் அஞ்சி, பாதிக்கப்பட்ட பெண்கள் பேசவே மறுத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் இரண்டே இரண்டு பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கே இரண்டு ஆண்டுகள் அரும்பாடு பட வேண்டியிருந்ததாகவும், பா.ஜ.க. மாநில அரசின் போலீசும், தேராவின் குண்டர்களும் தங்களை நேரடியாகவே அச்சுறுத்தியதாகவும் கூறுகிறார் சி.பி.ஐ. அதிகாரி.

இப்போது ராம்ரகீம் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டாலும், தேராவின் உள்ளே நடைபெற்ற குற்றங்கள் குறித்த உண்மை விவரங்கள் முழுமையாக வெளிவருவதை பா.ஜ.க. ஒரு போதும் அனுமதிக்காது. ஏனென்றால், அவர்கள்தான் ராம் ரகீமின் மிக முக்கியமான குற்றக் கூட்டாளிகள்

பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் தொடர்பாக 2008 -ஆம் ஆண்டிலேயே ராம்ரகீமுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டது. மொட்டைக்கடிதம் எழுதிய பெண்ணின் சகோதரன் மற்றும் அதனை வெளியிட்ட பத்திரிகையாளர் ஆகிய இருவரையும் கொலைசெய்த வழக்கும் 2002 -இலேயே பதிவு செய்யப்பட்டுவிட்டன.

விசுவாஸ் குப்தா என்ற பணக்கார பக்தருடைய மனைவியை, தனது மகளாகத் தத்து எடுத்துக் கொள்வதாக விழா நடத்தி அறிவித்து விட்டு, அவளை வைப்பாட்டியாக்கிக் கொண்டான் ராம்ரகீம். அப்பா, மகள் என்று கூறிக்கொள்ளும் இருவரும் படுக்கையில் ஒன்றாக இருப்பதைத் தன் கண்ணாலேயே பார்த்துவிட்டதால், தனது மனைவியை மீட்டுத்தருமாறு 2011-இலேயே வழக்கு போட்டிருக்கிறார் விசுவாஸ் குப்தா.

இவையில்லாமல் 400 ஆண் பக்தர்களுக்கு விரைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கொன்று இருக்கிறது. அதை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மனைவியுடன் சாமியாரைத் தரிசிக்கச் சென்ற ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தினக்கூலித் தொழிலாளி, தனது மனைவியை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரும் தூங்கிக் கொண்டிருக்கிறது.

ராம்ரகீம் காலடி மண்ணெடுத்து…

இவையெல்லாம் நாடறிந்த, ஊடகங்களில் வெளியாகிச் சந்தி சிரித்த வழக்குகள். இத்தனை வழக்குகளும் இருக்கும்போதுதான் 2012, 2017  சட்டமன்றத் தேர்தல்களிலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் ராம்ரகீமின் ஆதரவுக்காகக் காவடி எடுத்தனர் பா.ஜ.க. வின் யோக்கிய சிகாமணிகள். பா.ஜ.க. வேட்பாளர்கள் 44 பேர் ராம்ரகீமின் காலில் விழுந்தனர்.

பாபா குர்மீத் ராம்ரகீம் சிங்கின் புனிதபூமியான தேரா சச்சா சவுதா மண்ணைக் குனிந்து கும்பிட்டு வணங்குவதாக 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நெக்குருகினார் மோடி. பிறகு தனது சுவச் பாரத் திட்டத்தைச் சிறப்பாக எடுத்துச் செல்வதாக ராம்ரகீமுக்குப் பாராட்டு தெரிவித்தார். அரியானா முதல்வர் கட்டாரும், ராம் ரகீமும் துடைப்பக்கட்டையுடன் போஸ் கொடுத்தனர். பதில் மொய்யாக மாட்டுக்கறி தின்போரை வசை பாடினான் ராம்ரகீம்.

தன்னையே கதாநாயகனாகவும், தனது வளர்ப்பு மகளை இயக்குநராகவும் வைத்து ராம்ரகீம் தயாரித்த, காணச் சகிக்காத அருவெறுப்பான கேலிக்கூத்துப் படங்கள் பல வெளியிடப்பட்டன. அத்துணை படங்களுக்கும் வரிவிலக்கு அளித்து ராம் ரகீமைக் குளிப்பாட்டியது பா.ஜ.க. அரசு. அந்தப் படங்களில் இந்து தேசியம் பேசும் நாயகனாக நடித்து, பா.ஜ.க. வைப் பதிலுக்குக் குளிப்பாட்டினான் ராம்ரகீம்.

வல்லுறவு – கொலை – விரை நீக்கம் –  பிறன்மனை அபகரிப்பு நடவடிக்கைகளுக்கான குற்றவழக்குகள் பூஜ்யஸ்ரீ ராம்ரகீம் பாபாவின் மீது நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மானனீய மோகன்ஜி பகவத் முதல் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வரையிலான எல்லா ‘ஜி’க்களும் ராம்ரகீமின் தேரா சச்சா சவுதாவுக்கு விஜயம் செய்திருக்கின்றனர்.

இப்போது கேட்டால், இந்தத் தீர்ப்பு வருகின்ற வரையில் ராம் ரகீமின் லீலைகளைப் பற்றித் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும், குற்றச்சாட்டு இருக்கிறது என்ற காரணத்தினாலேயே ஒருவரைக் குற்றவாளி என்று கருத வேண்டுமா என்றும் நம்மை மடக்குவார்கள்.

டெல்லியில் நிர்பயா (ஜோதி சிங்) என்ற பெண்ணைச் சில பொறுக்கிகள் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்று போட்டபோது, சிறுவன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரையும் தூக்கில் போட்டாகவேண்டும் என்று கொந்தளித்தவர்கள் இவர்கள்தான்.

”தன்னுடைய சொந்த சீடர்களையே விட்டுவைக்காத வெறி பிடித்த மிருகம்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, ராம் ரகீமுக்குத் தண்டனையைக் குறைக்க மறுத்திருக்கிறார் விசாரணை நீதிபதி. யாரோ ஒரு பெண் சொல்வதை நம்பி தண்டனை விதிக்கும் நீதிமன்றம், வீதியில் நிற்கும் இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புறக்கணிப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகராஜ். ஹிந்து துறவிகளின் சொத்தை அபகரிக்க சர்வதேச சதி நடப்பதாக எச்சரிக்கிறார் சு.சாமி.

இவையெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.-ஐ பொருத்தவரை, ராம் ரகீமின் வாக்குவங்கி தேர்தலுக்கானது மட்டுமல்ல. அதிருப்தியுற்றிருக்கும் தலித் சீக்கியர்களை இந்து மதத்துக்கு கர்வாப்ஸி செய்வது, இவர்களைக் காட்டி, இந்து மதத்துக்குள்ளும் இந்து தேசிய அரசியலுக்குள்ளும் அடங்கிப்போகாமல் தொந்திரவு கொடுக்கும் அகாலி சீக்கியர்களைப் பணிய வைப்பது – என்பன சங்க பரிவாரத்தின் நோக்கங்கள்.

இதற்குத்  தோதான ஏவுதளமாக தேரா சச்சா சவுதா பயன்படும் என்ற காரணத்தினால்தான், ராம் – ரகீம் என்ற போலி மதச்சார்பின்மைப் பெயரை சகித்துக் கொண்டு இத்தனை காலம் அவனுக்கு சலாம் போட்டிருக்கிறது சங்க பரிவாரம். ஸ்ரீமான் சோ அவர்களும் குருமூர்த்தி அவர்களும், தேசத்தின் நலனை உத்தேசித்து, தரம் தாழ்ந்த அ.தி.மு.க. கும்பலை சகித்துக் கொள்கிறார்களே, அது போலத்தான்.

ஜெயலலிதாவும் ராம் ரகீமும்

உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேரா சச்சா சவுதாவில் நடந்து வரும் சோதனையில், உள்ளே ஒரு இரகசிய உல்லாச நகரமே இயங்கி வந்திருப்பது தெரிகிறது. தண்டனை விதிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து அணிஅணியாக மூடப்பட்ட வாகனங்களில் ஆயுதங்களும் பணமும் ஆவணங்களும் ராஜஸ்தானுக்குச் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். திருப்பூர் கன்டெயினர் விவகாரத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தற்போது தேராவில் நடந்து வரும் சோதனையில் ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. பஞ்சாப் உளவுத்துறைக்குச் சொந்தமான வாகனம் தேராவின் உள்ளே பிடிபட்டிருக்கிறது. தேரா வளாகத்திலிருந்து தப்பிச் செல்ல 5 கி.மீ. நீள சுரங்கப்பாதை உள்ளது என்பது அடுத்த செய்தி. இசட் பிளஸ் பாதுகாப்புக்கு அப்பால், பஞ்சாப் போலீசின் கமாண்டோக்கள் 9 பேரும் ராம் ரகீமின் பாதுகாப்புக்கு இருந்ததாகவும், அதில் சிலர் ராம் ரகீமைத் தப்ப வைக்க முயன்றதாகவும் அரியானா அரசு குற்றம் சாட்டுகிறது.

இரண்டு மாநில அரசுகள் மற்றும் டெல்லியின் அரசு எந்திரம் முழுவதும் ஒரு கிரிமினலின் கூலிப்படையாகவே செயல்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது – தமிழ்நாடு போலீசும் அரசு எந்திரமும் அம்மாவுக்குப் பயன்பட்டதைப் போல.

ராம் ரகீமின் குடும்பத்தினர் பா.ஜ.க. ஆட்சி செய்யும் ராஜஸ்தானுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர். சிறைக்கு அனுப்பும்வரை ராம்ரகீமுடன் இருந்த ஹனிபிரீத் நேபாளத்துக்கு தப்பியிருக்கக் கூடும் என்று கதையளக்கிறது போலீசு. சங்கரராமன் கொலை கேசில் பெரியவாள் நேபாளத்துக்குத் தப்பிக்க முயன்றதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

தேராவின் தலைவர்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறாரேயன்றி, தேரா தடை செய்யப்படவில்லை என்று பேசியிருக்கிறார் பா.ஜ.க.வின் சுகாதார அமைச்சர். அ.தி.மு.க. -வின் தலைவிதான் தண்டிக்கப்பட்டிருக்கிறார், அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது என்பது போலத்தான்.

ஜெயலலிதா செத்துவிட்டார், சசிகலா சிக்கி விட்டார் என்பது தமிழகத்தின் கதை. ராம் ரகீம் சிக்கிக் கொண்டான், ஹனிபிரீத் தப்பி விட்டாள் என்பது அரியானாவின் கதை.

ரத்த வாரிசுகளை ஆன்மீக வாரிசாக நியமிக்கக்கூடாது என்பது தேராவின் மரபாம். எனவே, ராம் ரகீமின் மகன்தான் தேராவின் சொத்துகளுக்கு வாரிசு என்று அறிவித்திருக்கிறார் ராம் ரகீமின் அம்மா. அங்கேயும் ஏதோவொரு பொதுக்குழுவைக் கூட்டித்தான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்பதுதான் நகைச்சுவை.

சிறையில் இருந்தபடி ராம்ரகீமே தேராவை இயக்குவார் என்று அறிவிப்பு வெளியிட்டார் தேராவின் மேனேஜர். அடுத்த சில நாட்களின் தேராவின் மானேஜர் கைது செய்யப்பட்டுவிட்டார். நடப்புகள் அனைத்தும் ஜெயாவின் அரசியல் வாரிசு, சொத்து வாரிசு சண்டையை அப்படியே பிரதிபலிக்கின்றன.

அ.தி.மு.க.வின் அடுத்த வாரிசு யார் என்பதைத் தீர்மானித்து, அவர்களுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பிராமணோத்தமர்கள் யார் என்பதை நாம் அறிவோம். தேரா சச்சா சவுதாவின் அடுத்த வாரிசு யார்? அந்த வாரிசை நியமிக்கும் அதிகாரத்தை சங்கபரிவாரம் எந்த பிராமணோத்தமருக்கு வழங்கியிருக்கிறது? என்பதுதான் இப்போதைக்கு நம் அறிவுக்குப் புலப்படாத பிரம்ம ரஹஸ்யம்.

தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு, உயர் குலத்தில் பிறந்த மேன்மக்கள், எத்தகைய ஒழுக்கம் கெட்ட கார்யங்களிலெல்லாம் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது!

– சூரியன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

உயிரையும் கல்வி உரிமையையும் பறிக்கும் பார்ப்பனீயம் – மதுரை ம.உ.பா. மையம் அரங்கக் கூட்டம் !

  • பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை : தோட்டக்களால் சிந்தனையை அழிக்க முடியாது ! – கண்டன அரங்கக் கூட்டம்
  • ஏழை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் நீட் ! – கலந்துரையாடல்

ன்னடப் பத்திரிக்கையாளர்  கௌரி லங்கேஷ்   படுகொலையைக் கண்டித்தும்  ஏழை மக்களின் கல்வி  உரிமையை வேட்டையாடும்  நீட்  தேர்வை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பில் 16.09.2017 அன்று மாலை 6:00 மணி அளவில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத்  தலைவர் பேராசிரியர் சீனிவாசன்  தலைமைதாங்கினார். அவர் தனது தலைமையுரையில் “கர்நாடக மாநிலத்தின்  சமூகப் போராளியும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல. சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரும்  இதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இன்று வரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை. மத்திய, மாநில  அரசின் போக்குகள்  மக்கள் விரோதப் போக்காக இருக்கிறது.

துண்டுப் பிரசுரம் கொடுத்ததற்காக மாணவி வளர்மதி குண்டாஸ் சட்டத்தில் சிறையில் போடப்பட்டார். பேராசிரியர் ஜெயராமன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி மீது வழக்கு போடப்படுகிறது. டெல்லியில் போராடும் விவசாயிக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் ஆறு வகையான கல்வி முறைகள் உள்ளன. இவற்றில் சமத்துவம் இருக்கிறதா?

சமத்துவம் இல்லாத சூழ்நிலையில் பொதுவான தேர்வு சாத்தியமா என்ற கேள்வியோடு நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராடினால்  கைது செய்யப்பட்டு சிறைக்கு தள்ளப்படுகின்றனர். மக்களது பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கக்கூட நேரமில்லாத இந்த அரசு தேவையா? நாம் ஒன்றுபட்டுப் போராடவில்லை என்றால் மிகப்பெரிய தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரமிது” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்  படுகொலை: சிந்தனையைத் தோட்டாக்களால் அழிக்க முடியாது” என்ற தலைப்பில் உரையாற்றிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயlலாளர் பேரா. இரா.முரளி தனது உரையில்:

“கௌரி லங்கேஷ் தனது லங்கேஷ் பத்திரிகையில் மதவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து எழுதினார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா குமாரையும் குஜராத்தில் (உனா) தலித் மக்களின் எழுச்சிக்குத் தலைமை ஏற்ற ஜிக்னேஷ் மேவானியையும் தனது வளர்ப்பு மகன்களாக அறிவித்தார். இந்துத்துவவாதிகளைக் கடுமையாகச் சாடியதோடு களப் போராளியாகவும் இருந்தார். இந்துத்துவ அடிப்படைவாதிகளால் தொடர்ந்து கொலை மிரட்டல்களுக்கு உள்ளானார். 10 அடி தூரத்தில் 7 தோட்டாக்களால் சுடப்பட்டிருக்கிறார். கூலிப்படையைப்  பயன்படுத்திச் சுட்டுக் கொன்றுள்ளனர். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி  வரிசையில் கௌரியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கன்னையா குமார் பெங்களூர் வந்து கௌரி லங்கேஷை சந்தித்தபோது; கிரிஷ்கர்னாடுக்கு அச்சுறுத்தல் வந்ததைப் போலவே தனக்கும் இந்து அடிப்படைவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் பெங்களூரில் “பண்பாட்டுக் காவலர்கள்” வந்துள்ளதின் விளைவாகப் பலருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தானும் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ளார். சங்கபரிவாரங்களின் கூட்டத்திலே கௌரியைக் கேவலமாகத் திட்டியதோடு தீர்த்துக்கட்டி விடுவதாகவும் முழங்கி உள்ளனர். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாதவர்கள் கொலை செய்கின்றனர்.

இந்துத்துவாதிகள் தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைத் திசைதிருப்பும் வகையில்  நக்சலைட் தீவிரவாதிகள்  தான் கொலை செய்திருப்பார்கள் என்று வதந்திகள்  பரப்பப்படுகின்றன. குறிப்பாக மாவோயிஸ்டுகள் சிலரை கௌரி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பச் செய்தது அவர்களுக்குப் பிடிக்காமல் அவரைப் பழிவாங்கும் நோக்கத்துடன்  கொலை செய்துள்ளனர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. கவுரிக்கு கருத்துரீதியான முரண்பாடு இந்து மதவெறியர்களோடுதான்.

2014 – 2015 -ம் ஆண்டின் தேசியக்குற்றப் பதிவின் புள்ளிவிவரப்படி பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 142 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 24 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் ம.பி., உ.பி., பீகார் மாநிலங்களே அதிகம். ஆனால் இந்த வழக்குகளில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றங்கள் கூட அடிப்படைவாதிகளின் வசமாக இருக்கிறது.

அரசுக்கு எதிராகச் சின்ன அசைவு ஏற்பட்டாலும் கைது, சிறை. இதற்கு நீதிமன்றமும் துணை போகின்றது, அரசுக்கு ஆதரவாகத்  தீர்ப்புச் சொன்னால் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைக்கின்றனர். போராளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்; மதுரையில் நீட்டுக்கு எதிராகப் போராடிய 85 மாணவர்கள் மீது பொய்வழக்குகள் போட்டு சிறையிலடைத்து கடுமையான நிபந்தனைகளோடு பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம். வந்தே மாதரம் பெங்காலியா? சமஸ்கிருதமா? என்று வழக்கு வந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடவேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்படுகிறது.

நமது போராட்டங்கள் நீதிமன்றங்களை நோக்கித் திரும்ப வேண்டியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரம் தமிழகத்துக்கும் வந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றிணைய  வேண்டும். பல கொள்கைகள் இருந்தாலும் ஒரு புள்ளியில் சேர வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று தனது கண்டன உரையில் வலியுறுத்தினார்.

அதன்பின் நீட் தேர்வு பற்றிய விவாதம் நடைபெற்றது. ம.உ.பா. மையத்தின் கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் விவாதத்தை ஒருங்கிணைத்தார்.

மருத்துவக் கல்வியில் நிலவிவரும் தரக்குறைவு மற்றும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை களைவதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்படுவதாக மோடி அரசு சொல்லியது. ஆனால் நீட் தேர்வு நடைபெற்ற விதம் பணக்காரர்களுக்கும், கல்விக் கொள்ளையர்களுக்கும் மட்டுமே ஆதரவாக நடத்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது.

கார்ப்பரேட்டுகளின் ஆணைப்படி அமெரிக்க நிறுவனமான புரோமெட்ரிக் தான் தேர்வை நடத்தியுள்ளது. உலக நாடுகளில் உள்ள மாணவர்களுக்கெல்லாம் இங்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிகள் வர்த்தகமாகியுள்ளது. பணம் மட்டுமே ஒரே தரம் – தகுதி. பணம் இல்லாதவர்களுக்கு எதற்குக் கல்வி! அவர்களுக்குக் குலக்கல்விதான் என்பதை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது என்று தனது தொடக்க உரையில் கூறினார்.

இளம் தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பேரா.ரபீக்ராஜா பேசும் போது “நீட்டை எதிர்ப்பது மட்டும்தான் நமது திட்டமா? பா.ஜ.க.கொண்டு வந்துள்ள எந்தத் திட்டமும் நமக்கு வேண்டாம். அனைத்தையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று கூறினார்.

நாணல் நண்பர்கள் அமைப்பை சார்ந்த திரு சரவணக்குமார் : “கவுரி லங்கேஷ் படுகொலை கருத்துரிமை மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்! அதை நாம் எதிர்த்துப்  போராட  வேண்டும்.  முத்துக்குமார், செங்கொடி, காவிரி விக்னேஷ், அனிதா ஆகியோருடைய உயிர்த் தியாகத்தை நாம் சரியாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை.”

வழக்கறிஞர் பழனியாண்டி : “தமிழ் நாடு அரசு நடத்திவந்த நுழைவுத் தேர்வு ஏன் நிறுத்தப்பட்டது? மதிப்பெண் அடிபடையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது அரசு திட்டமிட்டே கல்வியில் தனியார் ஆதிக்கத்தைக் கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளிகள் தரம் தாழ்த்தப்பட்டுவிட்டன. கல்வி தனியார் மயத்துக்கும், கொள்ளைக்கும் நீதிமன்றங்கள் துணை போகின்றன.”

சம நீதி வழக்குரைஞர்கள் சங்க வழக்கறிஞர் ராஜேந்திரன் : “நீதிமன்றங்கள் மூலமாக அரசுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஜாக்டோ – ஜியோ சட்டப்படியான போராட்டத்தை நீதிமன்றம் மிரட்டிப் பணியவைக்கிறது. அனிதாவின் மரணத்திற்கும் நீதிமன்றங்கள்தான் முக்கிய காரணம். தரத்தைப் பற்றிப் பேசும்போது பாடத் திட்டத்திற்குள் போய் விவாதிக்க வேண்டும். நீட் தேர்வு முறையால் தமிழ் நாட்டில் சமூக நீதி மறுக்கப்பட்டுவிட்டது.”

வங்கி அதிகாரி, மற்றும் சமூக சேவகர் திரு ராகவன்: “கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். அரசியல் சட்டத்தை நீதிமன்றங்கள் கடைபிடிக்கவில்லை. சிறந்த பள்ளிகள் மக்களால் உருவாக்கப்பட்டு பேணி வளர்க்கப்படுகின்றன. நீட் தேர்வு இல்லாமலே கல்வித் தரத்தை உயர்த்தலாம்.”

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் திரு அய்யனார் : “மோடி தான் அனைத்துக்கும் காரணம். தமிழ் நாட்டின் மீது அடுக்கு அடுக்காக ஏவிவிடும் நாசகரத் திட்டங்களால் உழைக்கும் மக்களை பழிவாங்கி கொண்டிருக்கிறார். மோடியின் பாசிச அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.”

மத்திய அரசு ஊழியர் திரு குணசீலன் : “தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தற்போது அதிக அளவில் வட நாட்டவர்கள்  நுழைக்கப்படுகின்றனர். இந்தி மொழியும் திணிக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அப்படித்தான் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஈபிஎஸ்- ஓபிஎஸ் கும்பல் தமிழகத்தின் நலன்களை மோடியிடம் அடகு வைத்து விட்டனர். தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும்.”

வழக்கறிஞர் நடராஜன் : “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றது போல நீட் பிரச்சினையிலும் மக்களை அணி திரட்டிப் போராடவேண்டும்.”

திரு சங்கையா : “ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் ஒரே பண்பாடு, ஒரே வரி, இந்து மதம், நீட் தேர்வு, பண மதிப்பு நீக்கம், நவோதயா பள்ளி என்று ஒவ்வொன்றாகத் திணிக்கப்படுகிறது.பா.ஜ.க. சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. காசு இல்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதே புதிய மனு நீதி, அதற்குத்தான் நீட் தேர்வு.”

பேராசிரியர் முரளி : “இந்து அடிப்படைவாதிகளின் ஆட்கள் முக்கியமான அதிகார மையங்களில் நுழைக்கப்பட்டுள்ளனர். நீதித் துறையிலும் அவர்களே கோலோச்சுகின்றனர். அரசியல் சட்டத்தை ஓரங்கட்டிவிட்டு தங்களது திட்டத்தை அமல்படுத்துகின்றனர். அனிதாவின் கல்வி உரிமையை மறுத்து அவரை சாவுக்குத் தள்ளியதில் இவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.”

மாணவர் திரு ஆனந்த் : “கல்வி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு அது வியாபாரமயமானது தான் நீட் தேர்வு வந்ததற்கான முதன்மையான காரணமாகும். தற்போது உலகமயத் திட்டத்தின் கீழ் பன்னாட்டு மாணவர்களும் இந்திய மருத்துவத் துறையைப் பங்போட்டுக்கொள்ள நீட் வழி விட்டுள்ளது.”

எஸ்.யு.சி.ஐ அமைப்பை சேர்ந்த  ஹில்டா மேரி : “நமது கல்வி முறை மற்றும் பாடத் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்கள் பாடத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். ஆனால் யாரோ தயாரிக்கிறார்கள். யாரோ முடிவு செய்கிறார்கள். எது தரமான கல்வி என்று யார் முடிவு செய்வது? அரசு நம் மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரவில்லை. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.”

இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் தொகுப்புரையில் : “மருத்துவர் ஆவதைத் தன் வாழ்வின் நோக்கமாக வரித்துக் கொண்டு கடுமையாக உழைத்து உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றும் கபடத்தனமாக வாய்ப்பு தட்டிப்பறிக்கப் பட்டதனாலேயே அனிதா தற்கொலை முடிவுக்குப் போயிருக்கிறார். நீட்டுக்குத் தயாராவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையை ஏற்றுக்கொள்ள மறுத்தே அனிதா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

எதிர்த்து நிற்கத் துணியாமல் பணிந்து போவதை ஏற்கமுடியாமல், அனைத்து நிலைகளிலும் தனக்கு நீதி மறுக்கப்பட்டதாலும் அதற்குக் காரணமானவர்களைக் காறித் துப்புகிற வகையிலே தான் அனிதா இந்த முடிவைத் தீர்க்கமாக எடுத்துள்ளார். மோடி அரசு அடுக்கடுக்காகத் தமிழ் நாட்டுக்கு இழைத்து வரும் கேடுகளை ஒட்டு மொத்தமாகத் தொகுத்தும் அதற்குப் பாய் விரித்துப் பல்லிளிக்கும் எடப்பாடி – பன்னீர் கும்பலின் துரோகத்தையும் மக்கள் மத்தியில் வீச்சாகக் கொண்டு செல்வதில் உடன்படுகிறவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்”. என அறைகூவல் விடுத்தார்.

***

கூட்டத்தின் ஊடாகப் பேராசிரியர் மு.ராமசாமி எழுதிய “ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்” என்ற நூலைப் பேராசிரியர் இரா.முரளி வெளியிட வழக்கறிஞர் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தரைத் தெரிவு செய்யும் குழு உறுப்பினராகப்  பேரா.ராமசாமி இருந்த போது, குழுவின்  கூட்டுனர்  முனைவர் முருகதாஸ் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்துப் பதவி விலகியதையும் நடத்திய சட்ட, நடைமுறைப் போராட்டத்தைப் பற்றியும் விவரிக்கிறது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் பி.பி.செல்லதுரைக்கு பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின்படி உரிய தகுதி இல்லை. அவர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது நியமனத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி ம.உ.பா.மையம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் உள்ளது.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை. தொடர்புக்கு – 94434 71003.

_____________

செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !

1

செத்தும் கெடுத்த ஜெயா !

புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது. ஜெயலலிதா அப்போலோவில் கிடந்தபோது உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதையே யாரும் அறிய முடியாமல், செயற்கை சுவாசம் உள்ளிட்ட வழிமுறைகளால் அவரை உயிருடன் வைத்திருந்ததைப் போலவே, இப்போது அ.தி.மு.க. -வை, ஐ.சி.யு. -வில் வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

அ.தி.மு.க. -வின் அழிவு தமிழகத்துக்கு நல்லதல்ல என்று கூறி, மோதிக்கொள்ளும் அ.தி.மு.க. கொள்ளையர்களிடையே பஞ்சாயத்து செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் துக்ளக் குருமூர்த்தி. ஆளுநர், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட எந்த நிறுவனத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பொய் வழக்குப் போடுவதற்கும் எள்ளளவும் கூச்சப்படாமல், அதிகார துஷ்பிரயோகத்தை நிர்வாண நடனமாக நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

வெட்கம் மானமோ, சுயமரியாதையோ இல்லாத அ.தி.மு.க. திருடர்கள், விசுவாசம் – துரோகம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் எல்லா விவாதங்களையும் அடக்குகிறார்கள். இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய முதன்மைக் குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அசிங்கம் பிடித்த பாசிச அரசியல் வரலாற்றை அம்பலப்படுத்துவதற்கு இதைவிடப் பொருத்தமான தருணம் வேறில்லை.

அத்தகைய அம்பலப்படுத்தல்தான் அ.தி.மு.க. என்ற அருவெறுக்கத்தக்க கும்பலின் அழிவைத் துரிதப்படுத்தும் என்றபோதிலும் ஊடகங்களும் அறிவுத்துறையினரும் இதற்கு எதிரான திசையில் கருத்துருவாக்கம் செய்கின்றனர். ஜெயா உயிருடன் இருந்தவரை கட்சிக்குள் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருந்ததாகவும், ஜெயலலிதாவின் உறுதியான தலைமை இல்லாத காரணத்தினால்தான் தமிழகத்தின் நலன்கள் பலியிடப்படுவதாகவும் கூறி, சர்வாதிகாரத்துக்குத் துதி பாடுகின்றனர்.

எனினும், மக்கள் போராட்டங்கள் இக்கருத்துகளை மறுதலிக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல, போலீசு, அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் மக்களிடையே மதிப்பிழந்து வருகின்றன. அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டங்கள் இதை நிரூபித்தன.

நீட் தேர்வு வழக்கை முறைகேடாகக் கையாண்டதன் மூலம் போதுமான அளவுக்கு அம்பலப்பட்டிருக்கும் நீதிமன்றங்கள், தமது அதிகார வரம்பை மீறி, வேலை நிறுத்தத்தைக் கைவிடு, வந்தேமாதரம் பாடு, நவோதயா பள்ளியைத் திற, தேசியக்கொடிக்கு சலாம் போடு என்று சர்வாதிகாரம் செலுத்துவது நீதிமன்றங்களின் மீதான மக்களின் வெறுப்பைத்தான் கூட்டியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் தத்தம் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தவில்லை. அவை இந்த அரசமைப்பின் வழியாகத் தமது உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவையாகவும், அதே நேரத்தில் அருகதையற்ற இந்த அரசமைப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பட விரும்பாதவையாகவும் இருக்கின்றன. இது மக்களின் ஜனநாயக வேட்கை வெளிப்படுகின்ற வடிவம்.

பொதுச்சொத்தைத் திருடுவதும் அரசு சன்மானங்களைப் பங்கு போடுவதும் தவிர, வேறு கொள்கை எதையும் அறியாத கிரிமினல்கள், எம்.எல்.ஏ.- க்களாக அமர்ந்திருக்கும் அரசாங்கம் இது. அடுத்த மூன்றரை ஆண்டுகளில் தாங்கள் சம்பாதிக்கக் கூடிய தொகை, ஒரே தவணையில் தமக்கு இப்போது கிடைக்கக்கூடிய விலை ஆகிய இரண்டில் எது இலாபகரமானது என்ற கணக்குத் தடுமாற்றத்தைத் தவிர, வேறெந்த கொள்கைத் தடுமாற்றமும் இல்லாத இந்தத் திருடர்கள், 114 -க்குப் பதிலாக 117 என்று தமது எண்ணிக்கைப் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் காட்டிவிட்டால்…?

அரசியல் சட்டப்படி ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு விட்டதாக ஆளும் வர்க்க அறிவுத்துறையினர் அமைதியடையலாம். அத்தகைய அமைதி உருவாவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஆன்மீக 420 -யும் அரசியல் 420 -யும் ! – செப்டம்பர் 2017 மின்னூல்

5
image description

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. செத்தும் கெடுத்த ஜெயா!

புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது.

2. ராம் ரகீம்சிங் : வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம்!

சங்க பரிவாரம், அன்று கொலைவழக்கில் சிக்கிய சங்கராச்சாரிக்குத் துணை நின்றது. இன்று வல்லுறவுக் குற்றத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருக்கும் ராம் ரகீமுக்குத் துணை நிற்கிறது.

3. ராம் ரகீம்சிங் – நரேந்திர மோடி : ஆன்மீக 420யும், அரசியல் 420யும்

4. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை! தப்பியது கருப்பு!!

மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் மோசடி என மறுக்கவியலாதபடி நிரூபணமாகிவிட்டது.

5. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !!

98.8 சதவீதம் செல்லாத நோட்டுகள் வங்கிக்குள் நுழைந்துவிட்டதை கண்டு பாஜக கும்பல் வெட்கப்படவில்லை. மாறாக அதை வெற்றி என கூசாமல் கொண்டாடுகிறார்கள்.

6. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மோடி கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி!

7. பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?

கருப்புப் பணத்தையும், இலஞ்சத்தையும், கள்ளப்பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் மந்திரக் கோலாக முன்நிறுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக் கொள்ளப்பட்ட அதன் அனைத்து நோக்கங்களிலும் தோல்வியடைந்துவிட்டது.

8. பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு: சாதி அரசியலுக்குத் தூண்டில்!

இந்து ஐக்கியம் என்கிற கிழிந்த வேட்டியை அவிழ்த்து எறிந்துள்ள பாரதிய ஜனதா, உட்சாதிப் பிரிவினை மற்றும் இடைநிலைச் சாதிகளை ஒன்றோடு ஒன்று மோதவிடும் சாதி அரசியல் என்கிற நிர்வாண நிலையை எய்தியுள்ளது.

9. நீட் தேர்வு : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !!

நீட் தேர்வை முறைகேடாகத் திணிப்பதன் நோக்கம், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல; அரசு மருத்துவமனைகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதே. அனிதாவுக்கு மருத்துவ சீட் இல்லை, அனிதாவைப் போன்ற ஏழைகளுக்கு இலவச மருத்துவம் இல்லை.

10. கவுரி லங்கேஷ் : பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து நின்ற வீராங்கனை!

11. விவசாயம்: வருமானம் இரட்டிப்பாகவில்லை ! வரி இரட்டிப்பாகிறது !!

விவசாய இடுபொருளுக்கும், உழுபடைக் கருவிகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி, விவசாயிகளின் முதலீட்டுச் செலவை அதிகரித்து, வருமானத்தை குறைத்து, கடன் சுமையைத் தீவிரப்படுத்தும்.

12. குஜராத் மசூதிகள் இடிப்பு : பா.ஜ.க.வை வழிமொழியும் உச்ச நீதிமன்றம்!

2002 இனப்படுகொலையின்போது 567 மசூதிகளை அழித்துவிட்டு, அவற்றுக்கு நிவாரணம் தருவதென்பது மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானதாகும் என்று குஜராத் பாஜக அரசு வாதாடியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

 Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

திருப்பூர்: காவிக் கூட்டத்தை பெரியாரின் தடி கொண்டு விரட்டுவோம் !

0

ந்தை பெரியாரின் 139 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு “காவிக் கூட்டத்தை பெரியாரின் தடி கொண்டு விரட்டுவோம்!” என்ற தலைப்பில் திருப்பூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர்களால் கடந்த 17.09.2017 அன்று மாலை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

தலைமை :
தோழர். பிரகாஷ்

வரவேற்புரை  :
தோழர். ஆனந்தராஜ்

பேச்சாளர்கள் :

தோழர். பேச்சிமுத்து – கல்வியில் காவி பயங்கரவாதம்
தோழர். முத்தமிழ் செல்வி – பாடல், நீட் பற்றி
தோழர். வசந்தி – கவிதை
தோழர். பிரணவ் (6 வயது சிறுவன்) – கதை
தோழர். பாண்டியன் – பெரியார் ஒரு அறிமுகம்
தோழர். ராஜமாணிக்கம் – பெரியார் ஏன் தேவை
தோழர். தருமர் – எல்லாம் காவிமயம் பெரியார் தடி கொண்டு மக்கள் அதிகாரம் படைப்போம்.

தோழர். பிரகாஷ் அவர்களது தலைமையுரையில் தமிழகம் எப்படி பெரியாரை தவிர்த்து இயங்க முடியாது என்பது பற்றியும், வடமாநிலங்களில் சாமியார்கள் போடும் கிரிமினல் ஆட்டங்கள், சிறை தண்டனை கிடைத்தால் ஏற்படும் கலவரம் பற்றியும் – தமிழகத்தில் சாமியார்கள் கைது நடக்கும் போது மக்கள் அச்சாமியார்களை எள்ளி நகையாடுவதையும் குறிப்பிட்டு பேசினார். தற்போதுள்ள சூழலில் பெரியார் விட்டுச்சென்ற கடவுள் மறுப்பு கொள்கையை அதிகமாக செயல்படுத்த வேண்டியதின் அவசியம் பற்றி பேசினார்.

தோழர். ஆனந்தராஜ் அவரது வரவேற்புரையில் பெரியார் மக்கள் பணியில் 94 வயது வரை எவ்வாறு உணர்வுபூர்வமாக ஈடுபட்டார்  என்பதையும், அதுபோல இளைஞர்கள் வரவேண்டும் என்று அறை கூவி அழைத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தோழர். பேச்சிமுத்து கல்வியில் காவிமயம் எப்படி நமது கல்வியை தரம்கெட்டுப் போகச் செய்தது என்பது பற்றியும் – குரு உத்சவ், சமஸ்கிருத வார விழா, வந்தேமாதரம், ABVP , உயர்கல்வி நிறுவனங்களிலும், எதிர் கருத்து கூறும் பத்திரிக்கையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவது, வன்முறைகள் மூலம் கல்வியை அபகரிக்கும் வேலையை எப்படி காவிக்கும்பல் செயல்படுத்துகிறது என்பதை விளக்கினார்.

அவருக்கடுத்தபடியாக பேசிய தோழர். பாண்டியன் பெரியாரின் சிறுவயது, படிப்பு, தொழில், காசி – ரஷ்யா சென்று வந்தது நாத்திகம், திராவிடம், தனித்தமிழ்நாடு கோரிக்கை என தன் வாழ்நாள் முழுவதும் செய்த பணிகளை விளக்கிக் கூறினார்.

அதன் பின்னர் பேசிய தோழர். ராஜமாணிக்கம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இறைவன் வழிகாட்டுவான், நமது பிறப்பால் உருவான சாதி இழிவு, சமூக ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் கடவுள் சித்தம் என இருக்காமல் கடவுளை மறந்து, பார்ப்பனிய இந்து மதத்தை புறக்கணிக்காமல் மக்களுக்கு விடிவு இல்லை என்பதையும். பிள்ளையார் சிலை உடைப்பு, கருவறை நுழைவுப் போராட்டம், அனைவரும் அர்ச்சகராக வரவேண்டும் என்ற கோரிக்கை என பலவகையான போராட்டங்களையும் நினைவு கூறினார்.

இறுதியாக பேசிய தோழர். தருமர், பெரியார் என்பவர் போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலம் ஆரிய, பார்பனத் திமிரை அடக்க முடியும் என்பதற்கு கண்கூடாக உள்ள ஆதாரம் எனவும், அதனைப் பின்பற்றாமல் தி.க,  தி.மு.க. – என இன்றைய அரசியல்வாதிகள் பெயரளவிலான போராட்டங்கள் மூலம் தேர்தல் ஓட்டுக்காக சமரசவாதிகளாக மாறிய போக்கையும். அதனைப் பயன்படுத்தி MGR, ஜெயலலிதா போன்ற பாசிஸ்டு கிரிமினல்கள் எப்படி ஆட்சி செய்யமுடிந்தது என்பது பற்றியும், தமிழ் தேசியவாதிகள், தலித் அரசியல் பேசும் அரசியல்வாதிகள் எப்படி பார்ப்பன அடிவருடிகளாக மாறினர் என்பது பற்றியும் பேசினார்.

தற்போதைய சூழலில் பெரியாரை நமக்கு இந்து மதவெறியர்களை எதிர்கொள்ள ஒரு உந்து சக்தியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதையும். மேலும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் இந்த மோடி அரசினை வீழ்த்தவும் மக்களே அதிகாரத்தை கையிலெடுத்துப் போராட வேண்டும் என அறைகூவும் விதமாக பேசினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

லாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு !

5
சார்லஸ் மாட்டின்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 3

வானதியின் சைலாக் ஊழல், கே.டி.ராகவனின் எட்செர்வ் ஊழல் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. தேசிய வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்து மக்கள் பணத்தை ஆட்டையைப் போடுவது, பங்குச் சந்தையில் முறைகேடுகளின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுப்பது, நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகளுக்கு இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தொடர்பு போன்ற ஒற்றுமைகள் தற்செயலானதல்ல.

வெளியான சைலாக் மற்றும் எட்செர்வ் இரண்டும் வகைமாதிரிகள் மட்டுமே. ஒவ்வொரு பா.ஜ.க -பிரமுகருக்குப் பின்னாலும் இதே பின்னணியுள்ள வெளியாகாத முறைகேடுகள் பல இருக்கும் என்பதையே இந்த ஒற்றுமைகள் காட்டுகின்றன.

ஊழல்வாதிகளையும், கருப்புப் பண முதலைகளையும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஞானஸ்நானம் செய்து வைக்கும் பா.ஜ.க-வின் கதையை இனி பார்ப்போம்.

பாரதீய ஜனதா கட்சி தேசிய அளவிலான தீவிரமான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் மூலம் பலரையும் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. அ.தி.மு.க ஊழல் மாஃபியாவின் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், A1- குற்றவாளிக்காக நீதியரசர் குன்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதிரவைத்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி ஆகியோர் பா.ஜ.க -விற்கு சமீபத்திய வரவுகள்.

நைனார் நாகேந்திரன்

அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் கோவை லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவர் 2015 -ம் ஆண்டு பா.ஜ.க கட்சியில் இணைந்ததைப் பற்றி ஏற்கனவே வினவில் எழுதியிருந்தோம். மார்ட்டின் யாரென்று தெரியாதவர்களுக்காக, அவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

சான்டியாகோ மார்ட்டின் கோவையை சேர்ந்த தொழிலதிபர். மியான்மரில் (பர்மாவில்) ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த மார்ட்டின் இந்தியா திரும்பிய பின், மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் என்ற லாட்டரி கம்பெனியை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார்.

விற்பனையாகாத லாட்டரிகளை வெற்றி பெற்றதாக அறிவிப்பதில் தொடங்கி, போலி லாட்டரிகளை அச்சடித்து விற்பது, லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பது, இரண்டு இலக்க லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என்று சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் உழைக்கும் மக்கள் பணத்தை கொள்ளையடித்தார் மார்ட்டின்.

நீதியரசர் குன்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதிரவைத்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பஞ்சாப் என பல மாநிலங்களில் தனது கள்ள லாட்டரி சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மார்ட்டின். லாட்டரியின் மூலம் ஹவாலா பணத்தையும், கருப்புப் பணத்தையும் வெள்ளையாக மாற்றுவது, வருமானவரி முறைகேடுகள் என்று சகலவிதமான பொருளாதாரக் குற்றங்களிலும் ஈடுபட்டுவந்தார் மார்ட்டின். அதற்காகவே லாட்டரி மட்டுமின்றி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களையும் தொடங்கி மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைத்து நடத்திவருகிறார். மார்ட்டினின் மனைவி லீமா ரோசின் பெயரில் கோவையில் ஒரு செவிலியர் கல்லூரியும், ஹோமியோபதி கல்லூரியும் இயங்கி வருகின்றன. மார்ட்டின் குழுமங்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ.7,000 கோடியைத் தாண்டும்.

மார்ட்டினின் லாட்டரி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்காக அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக கேரளாவில் மட்டும் 32 வழக்குகள் சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 -ம் ஆண்டு கேரளத்தில் நடந்த லாட்டரி மோசடியின் மூலம் சிக்கிம் மாநில அரசை சுமார் ரூ.4500 கோடி மோசடி செய்து ஏமாற்றியதாக மார்ட்டினின் மீது வழக்கு உள்ளது.

1990 -களில் அ.தி.மு.க. அரசுடன் இணக்கமான உறவைப் பேணி தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்ட்டின், பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். பின்னர் 2001 -ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பேரம் படியவில்லை. இதையடுத்து தான் 2003 -ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது.

லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமா மார்ட்டின்

கடந்த 2007 -ம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும், மாநில அரசின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011 -ல், நில மோசடி வழக்கு, போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்த பின், ஜாமீனில் வெளியே வந்துள்ளார் மார்ட்டின்.

2007 -ம் ஆண்டு கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான தேசாபிமானி இதழுக்கு மார்ட்டின் ரூ. 2 கோடி நன்கொடை அளித்தது வெளியாகியது. தனிநபருக்காக வாங்கவில்லை, கட்சிக்காகத்தான் வாங்கினோம் என்று சப்பைகட்டு கட்டினார்கள் மார்க்சிஸ்டுகள். 2011 -ம் ஆண்டு கருணாநிதி வசனத்தில் உருவான ‘இளைஞன்’ திரைப்படத்தை தயாரித்ததே மார்ட்டின் தான். வசனத்திற்காக கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 45 லட்சம். இவ்வாறு தொடக்கம் முதலே தனது கள்ள லாட்டரி தொழிலை நடத்த அரசியல் கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி வந்தவர் தான் மார்ட்டின்.

இந்த வகையில், தனது கல்வி வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே எஸ்.ஆர்.எம் பச்சமுத்து நடத்தி வரும் இந்திய ஜனநாயக கட்சி என்ற பெயர்ப்பலகை கட்சியில் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் இணைகிறார். சென்ற 2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி தமிழகம் வந்த போது அதே மேடையில் வாளுடன் காட்சியளித்தார் லீமா ரோஸ்.

நடுவில் இருப்பவர் சார்லஸ் மாட்டின்

பாஜகவில் சேர்ந்த மார்ட்டினின் மகனான சார்லசின் சகோதரர் டைசன், தமிழர் விடியல் கட்சி என்ற அமைப்பைத் துவங்கி, மே-17 இயக்கத்துடன் செயல்பட்டுவந்தார். தற்போது திருமுருகன் காந்தியுடன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

அப்பா முன்னர் திராவிட கட்சிகளுடன் உறவாடி தனது கள்ள லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை நடத்தியவர். அம்மா, கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் கட்சியின் உறுப்பினர். ஒரு மகன் தமிழ் தேசியவாதி, சிறையில் இருக்கிறார். இன்னொரு மகன், பா.ஜ.க உறுப்பினர். என்ன தலை சுற்றுகிறதா?

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை பா.ஜ.க-வில் இணைத்தது யார்?

இதைப்பற்றி திருச்செந்தூர் பாஜக பிரமுகர் பாலசுப்பிரமணிய ஆதித்யன் சொல்வதைப் பார்ப்போம்.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனை பாஜகவில் இணைத்தது யார்?…ஏன்?…

திருமதி வானதி சீனிவாசன் கணவர்
சு.சீனிவாசன் அவர்கள் இப்பொழுது
மத்திய அரசின் வழக்குரைஞர்.

மார்ட்டின் 1,600 கோடி சொத்து
மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையில் வேறு உள்ளது.

லாட்டரி மார்ட்டின் 1,600 கோடி சொத்துக்கு NOC வாங்கி கொடுக்க பேரமானதாக கேள்வி!!.

மத்திய மந்திரி,,வானதி இவர்களின் கடும் முயற்சியால் இந்த இணைப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது. பலரும் இதை ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதினாலும் வானதியின் முயற்சியை கண்டு பலர் முகம் சுளித்தனர்.

பாரத பிரதமர் மோடி அவர்கள் அகில இந்திய அளவில் ஊழல்வாதிகளை சாட்டை எடுத்து சுழற்றி வரும் வேளையில் தமிழகத்தையும் இப்பிரச்சனை விடாது போல தெரிகிறது.

சன்மான தொகையில் கோவை பகுதியில் பல கோடியில் வாங்கப்பட்ட பூமிகள் குறித்து விசாரணையும் நடைபெறப் போவதாகவே தகவல்கள். – பாலசுப்பிரமணிய ஆதித்யன்

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.கவில் இணைந்தது குறித்து நியூஸ் மினிட் இணையப் பத்திரிக்கை கேட்டதற்கு, ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?‘ என்று தமிழிசை சவுந்தர்ராஜன் பதிலளித்திருந்தார்.

2015 -ம் ஆண்டு சார்லஸ் பா.ஜ.கவில் இணைந்த அதே ஜூன் மாதம் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் சுமார் ரூ.80 கோடி ஹவாலா (கருப்பு) பணம் கைப்பற்றப்படுகிறது. இந்த ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தாவூத் இப்ராஹிமிற்கு இருக்கும் தொடர்பைப் பற்றியும் விசாரணைகள் நடந்தது.

இதில் நாகராஜன் என்ற மார்ட்டினின் நெருங்கிய தொழில் கூட்டாளி கைது செய்யப்படுகிறார். நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2013 -ம் ஆண்டு ஆவணங்களின் படியே நாகராஜனின் டீசெல் (Teasel) நிறுவனம் தனது பங்குகளை, மாட்டினின் மகன்கள் இருவருக்கும் தலா 1000 வீதம் கைமாற்றிக் கொடுத்துள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. மேலும், இன்று வரை சார்லஸ் மார்ட்டின், தனது தந்தையின் தொழில் குழுமங்களின் நிர்வாக இயக்குனராகவும், இயக்குனராகவும் உள்ளார்.

தமிழர் விடியல் கட்சி நடத்தும் டைசன் மார்டின்

அதாவது தனது தந்தையின் சொத்துக்களை மரபுரிமையாகப் பெற்றிருக்கும் ஒருவருக்கு தந்தையின் வழக்குகளில் இருந்து விலக்குரிமை உள்ளது என்கிறனர் பா.ஜ.க-வினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக கருதப்படும் நிறுவனங்களின் இயக்குனராக இருப்பவருக்கு அந்த வழக்குகளில் தொடர்பில்லை, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு என்று கேட்கிறார் தமிழிசை. இதே போல லாட்டரி மார்ட்டினின் இன்னொரு புத்திரனான டைசன் (அப்பாவின் கள்ளப்பணத்தை முதலீடாகக் கொண்டு) தமிழ் தேசியவாதியாக போராடுவதில் என்ன தவறு என்று தமிழினவாதிகள் கேட்கலாம்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்கப் போவதாகவும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்ப்போம் என சவடாலடித்தனர் பாஜக-வினர். இவர்கள்தான் கருப்பை வெள்ளையாக்குவதற்கு பேரம் பேசி கருப்புப் பண முதலைகளை கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். அப்படி வானதி அன்-கோவின் மூலம் பேசப்பட்ட பேரம் படிந்ததின் விளைவுதான் சார்லஸ் கட்சியில் இணைக்கப்பட்டது.

ஆடிட்டருடைய வேலை என்ன என்று நமது அண்ணாச்சி கடையிலோ, பாய் கடையிலோ கேட்டால், பணக்காரனுக்கு வரிகட்டாம அரசாங்கத்தை ஏமாத்த சொல்லித்தருவது, அவங்க கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி தருவது என்று சொல்வார்கள். குருமூர்த்தி, ஹெச்.ராஜா போன்ற பெரிய பெரிய ஆடிட்டர்கள் எல்லாம் சேர்ந்து கட்சி நடத்தினால் அந்தக் கட்சியின் வேலை என்னவாக இருக்கும்?

ஆக, எதிர்கோஷ்டியைச் சேர்ந்த வானதியும், பொன்னாரும் தான் சார்லசை டெல்லி வரை கூட்டிச் சென்று பா.ஜ.கவில் இணைத்துள்ளனர். இதற்கு பாலசுப்பிரமணிய ஆதியனின் கோஷ்டியைச் சேர்ந்த தமிழிசையும் உடந்தையாக தான் இருந்திருக்கிறார்.

இது மட்டுமின்றி கடந்த மார்ச், 2017 -ல் கோவையில் நடத்தப்பட்ட ‘தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை’-யும் மார்ட்டினின் பண உதவியுடன் தான் நடத்தப்பட்டுள்ளது.

தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரையை இயக்க பண உதவியும் மார்டின்தான். பூண்டி பிரிவில் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார். மார்ட்டின் ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரி மருத்துவ வாகனம் எல்லா நாட்களிலுமே யாத்திரைக்கு கூடவே வலம் வந்தது.  – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் மக்கள் துயருற்ற போது கருப்புப் பண முதலைகள் தான் அதை எதிர்த்துப் போராடுவதாக தொலைக்காட்சிகளில் பேசிவந்தனர் பா.ஜ.க-வினர். நாடு முழுவதும் தங்கள் கட்சியில் கருப்புப் பண முதலைகளை இணைத்துக் கொண்டதோடு, அந்த மோசடிப் பணத்தின் உதவியால் தான் தமது கட்சி இயக்கங்களையும், பொதுக் கூட்டங்களையும் நடத்திவருகிறார்கள்.

அது வேற வாய், இது நாற வாய்!

தனது எதிர் கோஷ்டியின் ஊழல்களை எல்லாம் அம்பலப்படுத்தும் பாலசுப்பிரமணிய ஆதித்யன், ஒவ்வொரு பதிவிலும் அல்லேலூயா பாணியில் மோடியை மீட்பராக முன்னிருத்துகிறார்.

சொந்த கட்சியானாலும் ஊழல் செய்தால் மண்டையை உடைத்து விடுவேன்டா படவா…ராஸ்கல் என தூள் கிளப்பும் நம் தேச பிரதமர் மோடியை பார்த்து என்ன சொல்லுவீங்களோ என் மௌன பாஜக மாப்பிள்ளைகளா?!… – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

முன்னர் ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது திறமையை உச்சிமோர்ந்த பார்ப்பனர்கள், ஊழல் என்றதும் அவை ஜெயாவுக்குத் தெரியாமல் சசிகலாவும் மன்னார்குடி கும்பலும் நடத்தியவை என்பார்கள். அதே போல, ஊழலை ஒழித்து, தேஷ வளர்ச்சியை சாதித்து அதன் மூலம் இந்து ராஷ்டிரத்தை படைப்பதற்கு ஆற்றலும் திறமையுமுள்ள, முக்காலமும் அறிந்த மோடிக்கு பா.ஜ.க-வினரின் ஊழல்கள் தெரியாது. தெரிந்ததும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்கிறார்.

வானதி மற்றும் பொன்னார் மீதான தமது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அமித் ஷாவிடம் கொடுத்துள்ளதாக பதிவிட்டிருந்தார் பாலசுப்பிரமணிய ஆதித்யன். கடந்த செப்டம்பர் 5 அன்று மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது கடும் நடவடிக்கைகள் துவங்கும் என்றும் கூறினார். நிர்மலா சீத்தாராமன், ரோகித் வெமுலா கொலை இழிபுகழ் பண்டாரு தத்தாத்ரேயா போன்றோர் பதவிவிலகிய போது நடவடிக்கையின் துவக்கமாக அதைச் சொன்னார். ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அமைச்சர் பதவியளிக்கப்பட்டதும் அருண் ஜெட்லியின் நிர்பந்தம் காரணம் என்றார். பொன்னாருக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையே கடுமையான நடவடிக்கையாக சித்தரிக்கின்றனர் பாலசுப்பிரமணிய ஆதித்யனின் நண்பர்கள்.

எது எப்படியோ இப்படி தங்கள் சொந்த கட்சியினரின் ஊழல்களை வெளியிட்டு வண்டவாளங்களை மக்கள் முன் கொட்டுகிறார்கள் இவர்கள். அதன் காரணம் உட்கட்சி கழுத்தறுப்புக்கள் என்றாலும் மற்ற கட்சிகளை விட கட்சி சார்ந்த ஊழல் இங்கே பிரம்மாண்டமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு கூட இல்லை என்றாலும் மத்தியில் ஆளும் அரசாக இருப்பதால் தமிழக பாஜக முதலைகள் ஊழலில் அடித்து விளையாடுகிறார்கள்.  இப்பேற்பட்ட முதலைகள் தற்போது அதிமுக பெருச்சாளிகளை அடிமையாக்கி வேலை செய்கின்றனர். இதன் விளைவு தமிழகத்தை நாசம் செய்யும் என்பதை விளக்க வேண்டியதில்லை அல்லவா?

மோடியின் ஆஸ்திரேலியப் பயணம் அதானியால் ஸ்பான்சர் செய்யப்பட்டது. லண்டன் வெம்ப்ளே மைதானத்தில் நடந்த மோடியின் கூட்டத்திற்கு டாடா, ஏர்டெல் மற்றும் லைக்கா மொபைல் போன்றவை ஸ்பான்சர் செய்தன. மோடி போன்ற உயர் மட்ட அளவில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ளூர், மாநில அளவில் மார்ட்டின் போன்றோர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.

இதில் ஒருவரை மீட்பராகவும், மற்றொரு தரப்பை ஊழல்வாதிகளாகவும் சித்தரிப்பதற்கு ஒருவர் காரியக் கிறுக்கனாகத் தான் இருக்க வேண்டும். அதாவது, ஒன்று கார்ப்பரேட் சேவைக்கானது, மற்றொன்று எதிர்கோஷ்டியை கழுத்தறுப்பது. அது வேற வாய், இது நாற வாய்! இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு தான் இவர்கள் ஒரே கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பது உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்துத்துவ பாசிசம்.

– முற்றும்.
– வினவு புலனாய்வுக் குழு

முந்தைய பாகத்திற்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – வானதி சீனிவாசன்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 2 – வானதி சீனிவாசன்

ஆதாரங்கள் :

_____________

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்தப் புலனாய்வுக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீட் தேர்வை ரத்து செய் ! – தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

1

நீட் தேர்வை ரத்து செய் ! அடக்குமுறைக்கு அஞ்சாது ! இது வேற தமிழ்நாடு ! தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

ன்பார்ந்த மாணவர்களே,

‘நீட்மாணவி அனிதா மரணம் தற்கொலையல்ல – படுகொலை. நம்பவைத்து கழுத்தறுத்த மோடி – எடப்பாடி அரசுகள்தான் கொலைக் குற்றவாளிகள்! சுமைதூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா மருத்துவப் படிப்பையே தனது கனவாகக் கொண்டிருந்தார். மோடி  அரசும், அடிமை எடப்பாடி கும்பலும், உச்சநீதிமன்றமும் இணைந்து ‘நீட்’ என்னும் கொள்ளி வைத்து அனிதாவின் கனவைக் கருக்கி விட்டன.

நீட் தேர்வுக்கு எதிராக அனிதா பற்றவைத்த சிறு தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத் தீயாக பற்றி எரிகிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு வீதியில் இறங்கி, சாலைமறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துகிறார்கள். நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை பள்ளி மாணவிகள் தவிடுபொடியாக்கிவிட்டனர்.

ஜல்லிக்கட்டு – மெரினா  எழுச்சியைப் போல, நீட் திணிப்புக்கு எதிரான போராட்டமும் மத்திய –  மாநில அரசுகளை அச்சுறுத்துகின்றன. பி.ஜே.பி-யின் அடிமையான எடப்பாடி கும்பல், போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது, மாணவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறது, 150 -க்கும் மேற்பட்டோரை சிறையிலடைத்துள்ளது. இதன் மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என மனக்கோட்டை கட்டுகிறது. ஆனால், நீட் தேர்வை விரட்டாமல் மாணவர் போராட்டங்கள் ஒரு போதும் ஓயாது.

நீட் : கோச்சிங் செண்டர்களின் கொள்ளைக்கு வழி!

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்விக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுதான் நீட். அதாவது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு. இதற்கான அவசியம் என்ன என்று கேட்டால்? “தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம்” என்கிறது மோடி அரசு. திறமைக்கு இவர்கள் சொல்லும் அளவுகோல் என்ன? 700 மதிப்பெண்களுக்கான ஒரு நுழைவுத்தேர்வு.

அதுவும் சி.பி.எஸ்.இ. எனும் மத்திய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் கொண்ட தேர்வு. +2 வரை படிக்கும்போது சோதிக்க முடியாத தகுதியை ஒரு நுழைவுத்தேர்வில் எப்படி சோதிக்க முடியும்? திறமையான, சீரான மருத்துவக் கல்வி, பயிற்சி மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியுமே தவிர, ஒரு நுழைவுத் தேர்வில் எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்?

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுடன் ஃபிட்ஜீ, ஆலென், பினாக்கிள் போன்ற மிகப்பெரிய நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.1.52 லட்சம் கட்டணம். இதுதான் திறமையை சோதிக்கும் லட்சனம்.

நீட் : நுழைவுத் தேர்வு – தகுதி திறமை என்பதெல்லாம் மோசடி!

நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறுகிறார்கள். ஆனால் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வு இல்லை. வெவ்வேறு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. நீட் தேர்வு நடத்தி, ரிசல்ட் அறிவிக்கும் வேலை செய்யும் புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளது.

போட்டித்தேர்வுகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் பி.ஜே.பி ஆளும் மத்தியப்பிரதேச வியாபம். கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ் மருத்துவக்கல்லூரியில் முறைகேடு மட்டுமல்ல, அதை எதிர்த்த மூன்று மாணவிகள் கொல்லப்பட்டனர். சில மாதங்கள் மூடப்பட்ட கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது.

கேதான் தேசாய் MCI சேர்மனாக இருந்தபோது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க டன் கணக்கில் தங்கமும், வெள்ளியும் லஞ்சம் பெற்று சிறை சென்றார். அவரைத்தான் மோடி அரசு சர்வதேச மருத்துவக்கவுன்சில் தலைவராக்கியுள்ளது.

எஸ்.ஆர்.எம், ராமச்சந்திரா, ஏ.சி.எஸ் போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்க விவகாரங்களில் தலையிடும்  அதிகாரம் அரசுக்கே இல்லை. இப்படி, லஞ்சமும் – ஊழலும் புழுத்து நாறும் இந்த கல்வி அமைப்பில் தகுதி, திறமையை கண்டறியத்தான் அகில இந்திய நுழைவுத்தேர்வு என்பதெல்லாம் பித்தலாட்டம்.

நீட் : தரப்படுத்தவில்லை தனியார் கல்விக் கொள்ளையை சட்டபூர்வமாக்குகிறது!

“நீட் தேர்வு தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது, கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்று அளந்துவிடுகிறார் தமிழினத்தின் எதிரி தழிழிசை. கேரளாவில் நீட் தேர்விற்குப் பிறகு தனியார் கல்லூரிகளில் 5 லட்சம் என்று இருந்த கட்டணம் 11 லட்சமாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் வழக்குப்போட்டால், நீதிமன்றம் முதலில் 11 லட்சத்தை கட்டு என்கிறது.

எஸ்.ஆர்.எம், ராமச்சந்திரா, போன்ற கொள்ளையர்களுக்கு இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்? தமிழகத்தில் மொத்தமுள்ள 3,534 இடங்களில் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் வெறும் 5 பேருக்கு மட்டுமே நீட் தேர்வின் மூலம் இடம் கிடைத்துள்ளது. மற்றவர்கள் அனைவரும் தனியார்பள்ளியில் படித்தவர்கள். பி.ஜே.பி காரர்கள் வாங்குன காசுக்குமேல் கூவுகிறார்கள்.

 நீட் : சி.பி.எஸ்.இ. எனும் சிலந்திவலையில் சிக்கவைக்கும் தந்திரம்!

“சி.பி.எஸ்.இ. தரத்திற்கு மாநில பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டும்’’ என்று நீட் ஆதரவாளர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். சி.பி.எஸ்.இ.  என்ன அவ்ளோ அப்பாடக்கர் பாடத்திட்டமா? அறிவியலாளர் அனில் குமார் மற்றும் IIS -இல் பணியாற்றிய டிபாகர் சட்டர்ஜி ஆகியோர் இந்தியாவில் உள்ள சில மாநிலக் கல்வி வாரியங்களை சி.பி.எஸ்.இ. -யோடு ஒப்பிட்டு ஒரு ஆய்வு செய்தனர்.

இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் பாடங்களிலும் மேற்கு வங்கக் கல்வி வாரிய மாணவர்களும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் ஆந்திர மாநில மாணவர்களும் சி.பி.எஸ்.இ. மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதை நிறுவினர் (ஆதாரம்;Current Science, 2009). சி.பி.எஸ்.இ. யில் படித்த மாணவர்களாக இருந்தாலும் லட்சக்கணக்கில் செலவழித்து பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாது.

நீட்டுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ. யில் இருந்து கேட்கப்படுவதால் சி.பி.எஸ்.இ.  அடிப்படையிலான தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்றாலே இனி சி.பி.எஸ்.இ.  பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு நவோதயா பள்ளிகளை கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே  மூடப்பட்டு வரும் மாநிலப்பாடத்திட்ட அரசுப்பள்ளிகளை இனி அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்கள்.

நீட் : மாநிலங்களின் உரிமையைப்பறிக்கும் சதி!

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், 3,534 இடங்கள், 192  உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் என வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத கட்டுமானம் இங்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தட்டிப்பறிக்கத்தான் நீட்-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கில்லை என்பதில் குறியாக உள்ளது மோடி அரசு.

அடுத்து, பிற மருத்துவப் படிப்புகள், பொறியியல், கலை – அறிவியல் என அனைத்து படிப்புகளுக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு வரப்போகிறது. நெருக்கடி நிலை காலத்தில் (1976 –ல்) கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என கல்வியை மையப்பட்டியலுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டுகிறார்கள்.

ஏற்கனவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என ஜி.எஸ்.டியை திணித்து மாநிலங்களின் பொருளாதார உரிமையை பறித்துவிட்டார்கள். அடுத்து ‘ஒரே நாடு ஒரே மொழி – கலாச்சாரம்’ என இந்தி – சமஸ்கிருத்தத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் ஒருபுறம், பல்தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் அதன் மொழி, கலாச்சாரம், இன அடையாளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்டகால கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவுவது. மறுபுறம், கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவேட்டைக்காக நாட்டை மறுகாலனியாக்க, மாநிலங்களின் உரிமையைப் பறித்து; அனைத்தையும் மையப்படுத்துகிறது பி.ஜே.பி கும்பல்.

நீட் : மாணவர்களின் பிரச்சனை மட்டுமல்ல மக்களின் சுகாதாரப் பிரச்சனை!

‘நீட்’ தேர்வின் மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடப்பதால், அரசு மருத்துவ சேவைக்கான உள் ஒதுக்கீடு ரத்தாகிவிடும். இதனால் அரசு மருத்துவமனைகளில் தன்னை வருத்திக்கொண்டு சேவை செய்ய யாரும் விரும்பமாட்டார்கள். அது மட்டுமல்லாமல், லட்சங்களை செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவர்கள், தாங்கள் போட்ட முதலீட்டை எடுக்க தனியார் மருத்துவமனைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வார்களே தவிர, அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு சேவை செய்ய வரமாட்டார்கள்.

ஏற்கனவே, மோடி அரசு கையெழுத்திட்டுள்ள காட்ஸ் ஒப்பந்தப்படி பொதுசுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தங்குத்தடை இல்லாமல் அந்நிய நிதியை அனுமதிக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள நமது பொது சுகாதாரத் துறையை கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் தரத்தின் பெயரால் நீட் திணிக்கப்படுகிறது. இது நடந்துவிட்டால், அரசு மருத்துவக் கல்வி மட்டுமல்ல, அரசு மருத்துவ சேவையும் இனி ஏழைகளுக்கு கிடைக்காது. பெருவாரியான மக்கள் நோய், நொடியிலேயே செத்துமடியும் அபாயத்தை உருவாகும்.

இதுவரை வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது என்று இருந்தது. இனி அவர்களும் சேரலாம் என்று MCI சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்கல்வியை தரப்படுத்துவது இவர்கள் நோக்கம் இல்லை. சிறு கூட்டமான பார்ப்பனர்கள் – பணக்காரர்களில் இருந்து ‘தரமான’ நவீன கொத்தடிமைகளை உருவாக்குவது என்ற கார்ப்பரேட் நலனையும்,  பெருவாரியான ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை மறுக்கும் பார்ப்பன – புதிய மனுநீதியையும் இணைக்கும் புள்ளிதான் நீட்.

மோடி அரசின் இந்த புதிய மனுநீதிதான் அனிதாவை தூக்கிலேற்றியது. கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, கிராமப்புற ஏழை மாணவர்களையும் தூக்கிலேற்ற துடிக்கிறது. அரச வன்முறைமூலம் தமிழகத்தை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு. இந்த வன்முறைக்கு அடங்கியாக வேண்டும் என்கிறது அடிமை எடப்பாடி அரசு. அடங்க முடியாது என்று திமிறி எழுகிறது தமிழகம்.  அனிதாவின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் அனைவரும் ஒன்றிணைவோம்!

அன்று, இந்தி திணிப்பை முறியடித்தோம்!
நேற்று
, ஜல்லிக்கட்டில் வென்றோம்!
இன்று
,எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும்,
எதிர்த்து நின்று நீட் திணிப்பை விரட்டியடிப்போம்!
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவோம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
எண்.41,பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை-95,
தொடர்புக்கு : 94451 12675

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !

2

நீங்கள் இணையத்தில் ஏதேனும் பொழுதுபோக்கு வலைத்தளங்களுக்கோ அல்லது விளையாட்டு வலைத்தளங்களுக்கோ சென்றால் உங்களை நடிகர் பிரகாஷ்ராஜும், ’பாகுபலி’ ராணாவும் ரம்மி விளையாட அழைப்பதை விளம்பர வீடியோக்களில் பார்த்திருக்கலாம். அது தவிர ”நான் இணையத்தில் ரம்மி விளையாடி ரூ.2,50,000 ஜெயித்திருக்கிறேன், நீங்களும் ரம்மி விளையாடுங்க”, ”ரம்மி விளையாடி ரூ.1500 போனஸ் தொகையை உடனடியாகப் பெறுங்கள்”, ”ரம்மி சட்டப்பூர்வமானது – உடனடியாக இணையுங்கள்” என்பது போன்ற விளம்பரங்களையும் பார்த்திருக்கலாம்.

இந்த விளம்பரத் தூண்டில்களில் சிக்கி ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கில் பணத்தை இழந்து போதை அடிமைகளாகி வருவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு கணமும் அதிகரித்து வருவதை பத்திரிக்கைகளில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக்கிற்கு நிகராக இளைஞர்களை ஆட்கொள்ளும் இந்த சூதாட்டச் சீரழிவின் பிரம்மாண்டம் பற்றித் தெரிய முதலில் இதன் ஆண்டுச் சந்தை மதிப்பை பார்ப்போம். ஆன்லைன் ரம்மியின் நடப்புச் சந்தை மதிப்பு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஆகும். இதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 50%-ஆக இருக்கிறது.

ரம்மி – சட்டவிரோதமானதல்ல – சுப்ரீம் கோர்ட்டு

இந்த பிரம்மாண்ட சந்தையின் பொருள் என்ன?

”காசு வைத்துச் சூதாடும் ‘ரம்மி’ ஆட்டம் சட்டப்பூர்வமானது தான் என இந்த ரம்மி வலைத்தளங்கள் மட்டுமல்ல, ’மாட்சிமை’ தாங்கிய உச்சநீதிமன்றமும் இது சட்டப்பூர்வமானது என்றே அறிவித்துள்ளது.

”ரம்மி , ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு;  அது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு அல்ல; ஆகவே அதில் பணம் கட்டி விளையாடுவதை சூதாட்டமாகக் கருத முடியாது” எனக் கடந்த 1967-ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இது போதாதென்று, ”இணையதளத்தில் பணம் கட்டி ’ரம்மி’ ஆடுவது சட்டவிரோதமானது அல்ல; அதுவும் சாதாரண விளையாட்டு போன்றது தான்” எனக் கடந்த 2015, ஆகஸ்ட்-13 அன்று ஓர் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தாயக்கட்டை உருட்டி, ஒரு போரையே நடத்திய புண்ணிய ‘பாரதத்தில்’  ‘நீதி’த் துறை ஒரு சூதாட்டத்தை அறிவார்ந்த விளையாட்டாக அங்கீகரித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

உண்மையில் ரம்மி அறிவார்ந்த விளையாட்டு தானா? ரம்மி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் எதனை அடிப்படையாகக் கொண்டது? நிகழ்தகவை (அதிர்ஷ்டத்தை) அடிப்படையாகக் கொண்டதா, அல்லது அறிவை அடிப்படையாகக் கொண்டதா ?

ரம்மி உள்ளிட்ட அனைத்து சீட்டாட்டங்களிலும், யாருக்கு எந்தெந்த சீட்டுக்கள் வரும் என்பது யாருக்கும் தெரியாது (போங்காட்டம் ஆடாத வரை). நமக்கு வாய்க்கப் பெற்றிருக்கும் சீட்டுக்கள், அந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறுவதற்கு உகந்த சீட்டுக்களா?, இல்லையா? என்பதைப் பொறுத்து தான் நமது வெற்றி தோல்வி பெரும்பாலும் அமைகிறது. இதில் அறிவின் பங்களிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தாக்கம் செலுத்துகிறது. ஆகவே எந்த சீட்டாட்டத்தைப் பொறுத்தவரையிலும் நிகழ்தகவின் (அதிர்ஷ்டத்தின்) அடிப்படையில் தான் நமது வெற்றி, தோல்விகள் அமைகின்றன. வரும் சீட்டுக்களின் ஒரே பூவில் அடுத்தடுத்த வரிசையில் சீட்டுக்கள் வருவதோ இல்லை ஜோக்கர் கார்டுகள் வருவதோ அறிவின் அடிப்படையில் அல்ல.

மற்றவர்கள் போடும் மற்றும் எடுக்கும் சீட்டுக்களை வைத்து அவர்கள் வைத்திருக்கும் சீட்டுக்களை ஓரளவு கணிக்க முடியுமென்றாலும் அதுவும் கூட ஆட்டத்தில் நீடிக்கலாமா, தொடர்ந்து முயலலாமா என்பற்குத்தான் உதவும்.

எதார்த்தம் இப்படி இருக்கையில் உச்சநீதிமன்றமோ, ரம்மி அறிவை அடிப்படையாகக் கொண்டு விளையாடும் விளையாட்டு என்று கூறி அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.இதே ரம்மி சீட்டு போல ஆன்லனை சூதாட்டங்கள் பல நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்,  கால்பந்து போட்டி முடிவுகள், இன்று தங்கத்தின் விலை உள்ளிட்டு தினுசு தினுசாக பல இருக்கின்றன. இவை அனைத்தும் குருட்டாம் போக்கில் கணிப்புக்களை செய்தால் பணம் வரும் என ஒரு மாய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

சட்டப்பூர்வமானது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி தான் இன்று பல நிறுவனங்கள், ரம்மி விளையாட்டை தங்கள் வலைத்தளங்களில் நடத்துகின்றன. முகம் தெரியாத பல்வேறு பயனர்கள் ஒரே ஆட்டத்திலோ தனித்தனி ஆட்டத்திலோ, பணம் கட்டி கலந்து கொள்ளும் வகையில் இந்த வலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் பணம் கட்டி விளையாடி யார் ஜெயித்தாலும், இந்த இணையதளம் தனக்கான கமிஷனை எடுத்துக் கொண்டு மீதத் தொகையை மட்டும் அவர்களிடம் கொடுக்கும்.

இது தவிர ’டோர்னமெண்டு’கள் (Tournaments), ஊக்கப்பரிசுகள் என பல்வேறு வழிவகைகளில் இணையவாசிகளை இந்த விளையாட்டில் அடிமையாகச் செய்கின்றன இந்த ’இணைய ரம்மி’ வலைத்தளங்கள். இந்நிறுவனங்களின் பெருத்த இலாபத்தைக் கண்டு பல்வேறு பன்னாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்கள் இவற்றில் தங்கள் முதலீடுகளைக் கொட்டுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கனடாவைச் சேர்ந்த க்ளைர்வெஸ்ட் (Clairvest) என்ற முதலீட்டு நிறுவனம், ஏஸ்-டூ-த்ரீ(Ace2Three) என்ற இணைய ரம்மி நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை சுமார் 474கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது போன்று பல்வேறு இணைய ரம்மி நிறுவனங்களின் மொத்த மதிப்பைக் கணக்கில் கொண்டாலே இந்த இணையச் சூதாட்டத் தொழிலின் பரிமாணம் புரியும்.

கெல்லி நீல்ட்- இணைய சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் 34இலட்ச ரூபாய் இழந்த இங்கிலாந்துப் பெண்

தமிழகத்தில் மட்டும் இணைய ரம்மி விளையாடுபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சுமார் 1 இலட்சம். இத்தகைய வலைத்தளங்களில், தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்யப்படும் புதிய பயனர் பதிவு மட்டும் சராசரியாக 15,000 என ’தி இந்து’ நாளிதழ், ஒரு பிரபல ரம்மி இணையதளம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், ஒரு குறிப்பிட்ட இணைய ரம்மி வலைத்தளத்தில், ஜூலை 2017-இல் மட்டும் சுமார் 4 இலட்சம் முறை ரம்மி விளையாடப்பட்டிருக்கிறது என்றும் இதில் 6% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ’தி ஹிந்து’ நாளிதழ் தெரிவிக்கிறது.

சூதாட்டம், அதன் இயல்பிலேயே, அதில் ஈடுபடும் நபர்கள் எத்தனை முறை தோற்றாலும், அதிர்ஷ்டத்தின் மீதான அவர்களது நம்பிக்கையின் பெயரில், அவர்களை மீண்டும் மீண்டும் சுண்டி இழுக்கும் தன்மையுடையது. தமிழகத்தில், லாட்டரிச் சீட்டு, சுரண்டல் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி, குதிரை ரேஸ் என காலங்காலமாக சூதாட்டம் பல்வேறு வடிவகளில் மக்களின் தாலியை அறுத்துள்ளது. தற்போது அது இணைய வடிவம் எடுத்துள்ளது.

ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் ஒரு முறை விளையாடி வெல்ல வேண்டும் என்ற நப்பாசையும், தோல்வியடைந்தால் ஒரு முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டுதலும் இணையப் பயனர்களை இந்தத் தூண்டிலில் சிக்க வைக்கிறது. இதில் இலட்சக் கணக்கில் பணம் இழந்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளால் மனச்சிதைவு ஏற்பட்டு, தற்கொலை வரை போக வாய்ப்புகள் உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூதாட்டங்களில் சிக்கி பொருளாதார நெருக்கடிகளுக்கும் மனச் சிதைவுகளுக்கும் ஆட்படுவதில் முதலிடம் வகிப்பது ஆஸ்திரேலியர்கள் தான் என்கிறது  ஒரு ஆய்வறிக்கை.

இதன் தாக்கத்தைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநில அரசு, இணைய ரம்மி சூதாட்டத்தை ஒரு அரசாணை வெளியிட்டு தடை செய்துள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் தொடங்கியிருக்கும் சூழலில், எடப்பாடி – ஓபிஎஸ் கும்பலோ பாஜகவின் அரசியல் சூதாட்டத்தில் தங்கள் தலைகள் வெட்டப்படாமல் தவிர்க்கவே பெருஞ்சிரத்தையோடு போராடிக் கொண்டிருக்கிறது.

ஊருக்கு உபதேசம் சொல்லும் கமலஹாசன் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இணைய ஒளிபரப்பில் கூட இந்த ரம்மி சர்க்கிள் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.

லாட்டரி, குட்கா, டாஸ்மாக் ஆகியவற்றின் வரிசையில் தற்போது மக்களைச் சீரழிக்க புதியதாக களத்தில் இறங்கியிருக்கும் இந்த சூதாட்டச் சீரழிவிலிருந்து இந்தத் தலைமுறையை மீட்கவேண்டிய கடமை அரசிற்கே உண்டு. ஆனால் அரசே, சூதாட்டத்தை முன்நின்று நடத்தும் போது நாம் என்ன செய்வது? நாம் குடியிருக்கும் பகுதியில் விபச்சாரத் தொழிலை நடத்தும் ஒரு புரோக்கரை கண்டுபிடித்தால் என்ன செய்வோமோ, அதை அரசிற்கும் செய்வது தானே முறை?

மேலும் படிக்க:

__________________________________

இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

திருச்சி பாஜக பொதுக்கூட்டம் ! – தமிழ் ஃபேஸ்புக் – ட்விட்டர் வறுவல் !

19

திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் கடந்த 09-09-2017 அன்று பாஜக -வின் நீட் ஆதரவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள், நூற்றுக்கணக்கான ஒளி விளக்குகள், பல்லாயிரக்கணக்கான நாற்காலிகள், இவற்றையெல்லாம் தாண்டி பிரம்மாண்டமான மேடை என அனைத்தும் பிரம்மாண்டமாக இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சௌந்திரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் என பாஜக -வின் ‘பெரும்’தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்டு ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டு மேடையை அலங்கரித்தனர்.

பல்லாயிரக்கணக்கான நாற்காலிகள் குவிக்கப்பட்டு இருக்கையில், பொதுக்கூட்டம் ஆரம்பித்த அரைமணி நேரத்தில் சுமார் 1000 பேர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். பொதுக்கூட்டம் ஆரம்பித்து ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கவும் பலர் வரிசையாகக் கிளம்பத் தொடங்கினர்.

வழக்கமான ஓட்டுக் கட்சிகளின் பாணியில் பணம் கொடுத்துத்தான் இந்த பொதுக் கூட்டத்துக்கும் ஆட்களை அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் குறைந்தபட்சம் என்ன கூட்டம் என்பதைக் கூட சொல்லாமல் அழைத்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் கூட போடப்பட்ட இருக்கைகள் அனைத்தும் நிறையவில்லை.

அதிலும் பலர் நீட் ஆதரவு கூட்டம் எனத் தெரிந்ததும் கிளம்ப ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கிளம்பிய ஒரு பெண்மனியிடம் அவரை அழைத்து வந்த நபர் “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா பணத்த வாங்கிகிட்டு போயிடலாம்” என்று கூறியிருக்கிறார். அவரிடம், “உன் பணமெல்லாம் வேண்டாம், ஒழுங்கா என்னை ஊருக்கு கூட்டி போய் விட்டுடு” என அந்தப் பெண்மணி கூறியிருக்கிறார்.

‘முக்கியத்’ தலைவர்களான தமிழிசை சௌந்திரராஜன், எச். ராஜா ஆகியோர் பேசும் போது படிப்படியாக கூட்டம் குறைந்து இறுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பேசும் போது வெறும் 150 பேர் மட்டுமே இருந்திருப்பார்கள். அதிலும் மைக் செட்காரர்கள், கேமெரா மேன்கள், எலக்ட்ரிசியன்கள், சுண்டல் விற்பவர்கள், டிஜிட்டல் திரைக்காரர்கள் எல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட்டம் முடியும் சமயத்தில் மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தவர்களில் அதிகபட்சம் 100 பேர் தான் பாஜக அடிபொடிகளாக இருந்திருக்க முடியும்.

அக்கூட்டத்தில் தமிழிசை பேசும்போது, தமிழகத்தில் கல்வியின் ‘தரம்’ மிகவும் கீழே இருப்பதாகவும், அதற்குக் காரணம் திமுக தான் என்றும் கூறிப் பேசியுள்ளார். என்ன இருந்தாலும் தமிழிசைக்குத் தைரியம் அதிகம் தான். ஏனெனில் ஒரு பொது இடத்தில் எச்.ராஜாவை அருகில் வைத்துக் கொண்டே, ‘தரம்’ குறித்துப் பேசி அவரையே எள்ளல் செய்யகிறார் என்றால், எவ்வளவு ‘கெத்து’ வேண்டும்?

அவரைத் தொடர்ந்து பேசிய எச்.ராஜா வழக்கம் போல தனது ‘தரத்தை’ நாலாந்தர வார்த்தைகள் மூலமும், கம்யூனிச வெறுப்புப் பேச்சு மூலமும் வெளிப்படுத்தி விட்டுப் போய் அமர்ந்தார்.

சுண்டல் விற்பவர் கூட கிளம்பியிருந்த சூழலில் கடைசியில் மைக்கைப் பிடித்த பொன்னார், பாஜக அலுவலகங்களைக் குறிவைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்பவர்கள் கடும் பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும் என்றும் மிரட்டி விட்டு, அந்தக் காலத்தில் நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடியவர்களைத் ’துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று தாம் ஓடவிட்டதாகக் கூறினார்.  கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், “வடிவேலு காமெடியப் பாக்குற மாதிரியே இருக்குய்யா” என்றார். அவர் குறிப்பிட்டது “எல்லாம் அவன் செயல்” படத்தில் வக்கீல் வண்டு முருகன் மேடையில் பேசும் காட்சியைத் தான் என்பதை பொன்னாரின் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

ஆவேசமாகப் ‘பொரி’ந்த பொன்னார்

ஒருவாறாக தமிழகத்தில் தனது ‘பலத்தை’ நிரூபித்துள்ளது பாஜக. பொதுக்கூட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் கூட, அதன் நோக்கத்தை அறிந்ததும் காறி உமிழ்ந்து விட்டுச் சென்ற பெருமை, பாஜக -வையே சேரும்.

பாஜக -விற்கு வெளியில் தான் இத்தகைய ‘தனி மரியாதை’ என்றால், முகநூலிலும், ட்விட்டரிலும் ‘வைத்துச்’ செய்திருக்கிறார்கள் இணையவாசிகள். பாஜகவின் பொதுக்கூட்டத்தின் காலி நாற்காலிகள் அணிவகுப்புப் புகைப்படத்தைப் போட்டு இணையவாசிகள் போட்டிருக்கும் பதிவுகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்

***

முகநூலில்

“திருச்சியில் நடைபெற்ற சேர் கண்காட்சியின் ஒரு பகுதி…”

மோகன்தாஸ் மருதமுத்து.

__________

பெரியோர்களே..! தாய்மார்களே…!! மற்றும்…?! இங்கு பெருந்திரளாக கூடியிருக்கும் “நாற்காலிகளே”..

ராஜ் தேவ்.

__________

பெருமதிப்பிற்குரிய நாற்காலி அவர்களே, அந்த நாற்காலியில் படிந்திருக்கும் தூசுதும்புகளே, நீட் வேண்டும் என்பதை தவறாக புரிந்து கொண்டு ஆளரவம் இல்லாமல் நீட்டாக இருக்கும் காலி மைதானம் அவர்களே!

ஆதவன் தீட்சண்யன்.

__________

கோவையில் அண்டாவக் காணோம். திருச்சியில் ஆளையே காணோம்!

வெண்புறா சரவணன்.

__________

“ஏண்டா கொடுத்த காசுக்கு கொஞ்ச நேரமாவது  உக்கார  வேணாமாடா” ( எச்* ராஜா  மைன்ட் வாய்ஸ்)

சாருவாகன்.

__________

ஏம்பா! தனியா ஒக்காந்து இருக்கியே பயமா இருக்காது?

ஏங்க மீட்டிங் முடிஞ்சா வாடகைக்கு விட்ட சேர்லாம் எடுத்துட்டு போகனுங்க.

“நீட்டுக்கு ஆதரவாக திருச்சியை மிரட்டும் பிரமாண்ட மாநாடு”.

பெரியார் குமார்.

__________

பாஜக பொதுக்கூட்டத்த பத்தி கிண்டலடிச்சி போடுற பதிவ பார்த்தா கடுப்பாருக்கு. இதுக்கு முன்னாடி இத்தனை சேர்கள் தன்னெழுச்சியா கலந்து கொண்ட கூட்டத்த எங்கயாச்சயும் பார்த்திருக்கிங்களா?

ஜெயச்சந்திர ஹஷ்மி.

__________

பொன்னாரும், தமிழிசையும் எவ்வளவு ஆக்ரோசமாக பேசினாலும் காலி சேர்களில் இருந்து கைதட்டல் வராத காரணத்தால் கோயில்களில் மின் இயந்திரத்தின் வாயிலாக மத்தள, நாதஸ்வர இசை ஒலிக்கபடுபது போல , இனி ஒவ்வொரு பாஜக கூட்டத்திலும் இயந்திரங்கள் மூலம் கைதட்டல் ஓசை ஒலிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

யுவான் சுவாங்.

__________

மூச்சு விடுவதற்கே இடமில்லாத நெரிசலில் கடும் தள்ளு முள்ளுக்கு இடையே நடந்த பாஜக மாநாடு. ஆக்சிஜனுக்கு அரை கிலோ மீட்டர் ஓடிய தொண்டர்கள்.

வாசுகி பாஸ்கர்.

__________

வாங்கியது 12000 சேர்கள்.. பயன்படுத்தியது 120 சேர்கள்.

just “00” தான் வித்தியாசம். இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா பொரி உருண்டை?

செந்தில்குமார் நாத்திகன் சீர்காழி.

__________

கட்டுக்கடங்காத இந்த கூட்டத்த வச்சி தான் அக்கா தமிழிசை கழகங்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க போறாங்களாம். ஆம்வே காரன் மீட்டிங்குக்கு கூட இதவிட அதிக கூட்டம் வருமே. காலி சேர்களுக்கு மாநாடு நடத்தி அரசியல் மாநாடுன்னு சொல்லி அரசியல் மாநாடுகளுக்கு இருக்கும் மரியாதைய கெடுக்குறாங்க. ஆனா இந்த தமிழ்நாட்டு பிஜெபி காரங்களுக்கு மோடிஜி அளவுக்கு போட்டோஷாப் நாலேட்ஜும் பத்தல. சோ… சேட்….

பிரியதர்ஷினி.

__________

தமிழக மக்களே, இன்று மாலை வீடுகள், கட்டடங்கள் லேசாகக் குலுங்கியதை உணர்ந்திருப்பீர்கள்.. பொருட்கள் ஆடியிருக்கும். ஆடு மாடுகள் அலறியிருக்கும். நிலநடுக்கமாக இருக்குமோ, சுனாமி வந்திருக்குமோ என அச்சம் கொண்டிருப்பீர்கள்.

விசாரித்ததில், நீட் தேர்வை ஆதரித்துத் திருச்சி திமிறத் திமிற, கதறக் கதற, help help என கூக்குரல் இட, கோடிக்கணக்கான தொண்டர்கள் அலை அலையாகச் சங்கமிக்க, பாஜக நடத்திய மிகப் பிரமாண்டமான மா……பெரும் கண்டன பொதுக்கூட்டம் தான் தமிழகம் முழுக்க இந்த நடுக்கத்திற்கெல்லாம் காரணம் என தெரிய வருகிறது.

ஆகவே, பதற்றம் வேண்டாம்!
இந்த நூற்றாண்டின் இணையற்ற பொருளாதார மேதை ஆர்.ஜே பாலாஜியின் விழுதுகளான நாம் அவரின் புகழ்பெற்ற வாசகமான “Don’t panic!”ஐ மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.

தாமரை மலர்ந்தே தீரும்.
ஜெய் ஹிந்த்!!

பாலா அருண்

__________

திருச்சியை திணறடித்த மாஆஆஆஆஆஆஆ பெரும் மாநாடு இல்ல பொதுக்கூட்டம், இல்ல இல்ல தெருமுனை பிரச்சாரம், இல்ல இல்ல இல்ல கலந்துரையாடல்…….. அய்யயோ… எப்படி பார்த்தாலும் நாளஞ்சு பேர வச்சு நடத்துற கூட்டத்துக்கு என்ன பேரு வச்சி கூப்பிடறதுன்னு கண்பூசனா இருக்கே…..!

பி.கு: அந்த நாளஞ்சு பேரும் சேர் வாடகைக்கு கொடுத்தவர், பந்தல் வாடகைக்கு கொடுத்தவர், மைக் செட் வாடகைக்கு கொடுத்தவர்களும் அவர்களது பணியாளும் என்று அய்யாசாமி சொல்லிங்.!

“ஏண்டா ஆளில்லனா” அதிமுக காரங்களையாச்சும் கூப்டிருக்கலாம்ல???

பார்ப்பனிய பாஜக அடிமைகள்!

ரீகன் நே.

__________

“மிஸ்டு கால் வழியாக பிஜேபியில் சேர்ந்த அந்த ஒருகோடி தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கண்கொள்ளாக் காட்சி”.

ஜோதிமணி சென்னிமலை.

__________

நீட் தேர்வினை ஆதரித்து பாஜக நீட்டி முழங்கிய திருச்சி பொதுக்கூட்டத்தில் ..? ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்…. காற்று வாங்கிய நாற்காலிகள்.

சங்கரதாஸ்

__________

“அந்த கீழ உக்காந்துருக்க  20 பேரையும் கூப்பிட்டு மேடையிலேயே உட்கார வச்சிருந்தா சேர் வாடகை மிச்சம். இத சொன்னா நம்ம ஆண்டி இன்டியன்பாங்க.

பூபதி முருகேஷ்

__________

தமிழகத்தில்
பாஜகவிற்கு #நாற்காலி ஓட்டு தான் அதிகம்

சரவணன் காந்தி

__________

மேடையில இருந்தவங்கள கீழ உக்கார வச்சிருந்தாலாவது கூட்டமிருந்ததைப் போல ஒரு சீனாவது போட்டிருக்கலாம்… மொத்தமா காலியாயிருந்தது இப்போ தெரிஞ்சிப்போயிடுச்சு எல்லோருக்கும்…

மலையமான் தே.கி.

__________

#திருச்சியை_திணறடித்த……….
பாஜக பொதுக்கூட்டம்….!!!

மைக் செட் கடைக்காரர் மருதமுத்து அவர்களே
நாற்காலி கடைக்காரர் நாகராஜ் அவர்களே
சீரியல் பல்ப் கடைக்காரர் சிங்கராஜ் அவர்களே
தேனீர் கடைக்காரர் தேவராஜ் அவர்களே
சுண்டல் கடைக்காரர் சுப்புலட்சுமி அவர்களே
சமோசா கடைக்காரர் சடையப்பன் அவர்களே

#அனைவருக்கும்_வணக்க்க்கம்…..!!!!

விடுதலை வேந்தன்

__________

நாளை திருச்சியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதால் நகரிலுள்ள அனைத்து பிரியாணி கடைகளும் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது என்று பிரியாணி உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

ரஹீம் கசாலி

ட்விட்டரில்

உயிர் இல்லா சேர்களை பிடித்து உட்கார வைத்து பொதுக்கூட்டம் போட்டதை பார்த்திருக்கியா? இதோ திருச்சி #பாஜக பொதுக்கூட்டம் @drtamilisaibjp

ஜேகே

__________

@drtamilisaibjp உலகத்திலயே ஆளுங்கட்சிய விட்டுட்டு எதிர்கட்சிக்கு எதிரா போராட்டம் நடத்துர ஒரே கோஷ்டி நம்ம பாஜக கோஷ்டி தான் #பாஜக கரகாட்டம்.

பரத்குமார்

__________

மக்களுக்கு இடையூறு இல்லாம போராட்டம் நடத்தலாம்னு #உச்சநீதிமன்றம் சொன்னத இந்தியாவிலயே ஏன் உலகத்திலயே கடைபிடிக்கற ஒரே கட்சி #பாஜக மட்டும்தான்

பயங்கர கோபக்காரன்

__________

பூத் ஏஜென்ட் கூட இல்லாத கட்சிக்கு புத்தி சொல்லி என்ன பயன்? யாரும் இல்லாத கடையில ஏன்டா டீ ஆத்துரிங்க

நவீன்

__________

”திமுக கூட்டத்திற்கு மழை வந்தது, ஆனால் எங்கள் கூட்டத்திற்கு மழை வரவில்லை”
–  தமிழிசை

”அதுவும் வரலையா….”

க்ரிஷ்

__________

பிஜேபி பொதுக்கூட்டத்துல காத்தடிக்கும்னு தெரியும், திருச்சில என்னனா புயலே அடிக்குதுபோல #BJPKilledAnitha

கார்த்தி

__________

எவ்வுளவுதான் முக்குனாலும் செல்ப் எடுக்காது பாஸ், இது திராவிட ரத்தம் ஓடுற பூமி. நுங்கம்பாக்கத்துல மாணவிகள் கூடிய கூட்டம் கூட இல்லையே #BJPFails

நவீன்

***

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கௌரி லங்கேஷ் படுகொலை : பார்ப்பன பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !

15

முற்போக்காளரும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

கடந்த 05.09.17 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 7:00 மணியளவில் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட முற்போக்காளரும், பத்திரிக்கையாளரும், களப்போராளியுமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, 10.09.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று  காலை 11:00  மணியளவில் ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புஜதொமு -வின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரை நிகழ்த்தினார். இறுதியாக, தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமையுரையாற்றிய தோழர் இரவிச்சந்திரன் தனது உரையில், “கர்நாடகாவில் முற்போக்காளர்கள் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. இது போன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முற்போக்காளர்கள், மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள், பார்ப்பன இந்து மதவெறியை எதிர்ப்பவர்கள் மீது தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல்கள் நடந்து வந்துள்ளதை பட்டியலிட்டு அம்பலப்படுத்தினார். மேலும், பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் தலித்துக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வது, கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டும் போது நரபலி கொடுப்பது, தலித்துக்களை இன்னும் தீண்டத்தகாதவர்களாக நடத்துவது போன்ற இந்து மதவெறியர்களின் சதிராட்டங்களை எல்லாம் யார் அம்பலப்படுத்துகின்றனரோ, அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது தான் கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தங்குதடையின்றி நிறைவேற்றும் திட்டங்கள்” என அம்பலப்படுத்திப் பேசினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில், “பார்ப்பன பயங்கரவாதம் என்று சொல்வதற்கே முற்போக்காளர்கள் அஞ்சும் வேளையில் பார்ப்பனியத்தை பெரியாருக்கே உரிய துணிவுடன் சொல்லி தோலுரித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி  ரெட்டி சகோதரர்களின் கனிம வளக் கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் சுற்றுசூழல் முறைகேடுகளை எல்லாம் தனது எழுத்தின் மூலமும், களத்திலும் போராடி அம்பலப்படுத்தி வந்துள்ளார்.

இவ்வாறான சமரசமற்ற இவரது போராட்டத்தின் காரணமாக  பல முறை இந்து மதவெறியர்களின் மிரட்டலுக்கு ஆளாகி வந்துள்ளார். இந்நிலையில்தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்.

இந்துமத வெறியர்களின் பொய்யுரைகள் மற்றும் அவர்களது பயங்கரவாத தாக்குதல்களை எல்லாம் நாம் தெருவில் இறங்கி நேருக்கு நேர் மோதி வீழ்த்த உறுதி எடுத்துக்கொள்வதும் அதற்காக இறுதிவரை உறுதியுடன் போராடுவதே படுகொலைசெய்யப்பட்ட கௌரி லங்கேஷுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.” என்ற வகையில் பேசினார். திரளான பொதுமக்கள், வியாபாரிகள் என  பலரும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை அச்சிட்டு விநியோகித்தும், நூற்றுக் கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டியும்,  ஆலை வாயில்களில் பிரச்சாரம் செய்தும் அதன் இறுதியாக ஆர்ப்பாட்டமும் நடத்தி கௌரி லங்கேஷின் கனவை நனவாக்கும் நோக்கில் தோழர்கள் அவரது தியாகத்தை, இந்து மதவெறியர்களின் மிரட்டலுக்கு பணியாத அவரது துணிவை, அர்ப்பணிப்பை மக்களிடையே விதைத்துள்ளனர். ஆம்! கொளரி லங்கேஷ் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்.

***

முற்போக்காளர் கௌரி லங்கேஷ் படுகொலை: பார்ப்பன இந்து மதவெறி பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்ற 5 -ஆம் தேதி மாலை 7:00 மணியளவில் பத்திரிகையாளரும் முற்போக்காளருமான கௌரிலங்கேஷ் அவரது வீட்டினருகே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தகவல் அமைதிப் பூங்கா என்று ஆளும் வர்க்கம் பீற்றிக்கொள்ளும் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில்தான் இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. காரணம் என்ன, கொன்றவர்கள் யார் என்பதை கர்நாடகப் போலீசு ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளதாம்.

முற்போக்காளர்கள் கர்நாடகாவில் சுட்டுக் கொலை செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் இது முதல்முறையல்ல. தற்போது கௌரி கொல்லப்பட்ட அதேபாணியில்தான் 2015 -ஆம் ஆண்டில் பகுத்தறிவாளரும் மூத்த பேராசிரியருமான கல்புர்கி கொல்லப்பட்டார். மைசூரு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த வரலாற்றுத்துறை பேராசிரியர் கோவிந்த் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சென்ற எடியூரப்பா ஆட்சியின் பொழுது மங்களூருவில் செயல்பட்டுவந்த மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் பத்திரிகைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதுபோன்று கர்நாடக மாநிலம் முழுவதும் பல வகைகளில் முற்போக்காளர்கள், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள், பார்ப்பன இந்து மதவெறியை எதிர்ப்பவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களை எப்படிப் புரிந்து கொள்வது, இதன் பின்னணி என்ன என்பதுதான் முதன்மையான கேள்வி. கர்நாடகாவில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் தலித்துகள் உருண்டு ‘அங்கப் பிரதட்சணம்’ செய்வது; வீடு குடிபுகுவது உள்ளிட்ட பல காரியங்களுக்கு நரபலி கொடுப்பது; தலித்துகள் இன்னும் தீண்டத்தாகதவர்களாக நடத்தப்படுவது போன்ற அநீதிகள், சாதித் தீண்டாமைக் கொடுமைகள் கொடிக்கட்டி பறக்கின்றது கர்நாடகாவில்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைமையிலான இந்து மதவெறியர்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது; விடுதலைப் போராட்ட வீரர் திப்புவை அவமானப் படுத்துவது; ஊர்வலங்கள், கலாச்சார விழாக்கள் என்ற போர்வையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் களை நடத்துவது என்பன அன்றாட வாடிக்கையாக உள்ளன.

இரும்புத்தாது கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்கள், சட்ட மன்றத்திலேயே ஆபாச படம் பார்த்த பா.ஜ.க. எம்.எல்.ஏ., மனைவி என்று சொல்லி பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்திய பா.ஜ.க. எம்.பி, பெல்லாரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை இருப்புத்தாதுக்காக ஜிண்டாலுக்கு தாரைவார்த்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா என்று பா.ஜ.க. கும்பல் ஆட்சியில் இருந்த போது அடித்த கொள்ளைகள், செய்த சமூக விரோத செயல்கள், ஊழல்கள் ஏராளம் ஏராளம்.

கர்நாடகாவில் நிலவும் இந்த மூடத்தனங்களையும் பிற்போக்கு பாசிசத்தையும் எதிர்த்து பல தளங்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு அடைக்களமாகவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மையமாகவும் தான் ‘கௌரி லங்கேஷ்’ என்ற பெயரில் பத்திரிகையை நடத்தி வந்தார் கௌரி லங்கேஷ்.

பார்ப்பன பயங்கரவாதம் என்று சொல்வதற்கே முற்போக்காளர்கள் அஞ்சும் வேளையில் பார்ப்பனியத்தை பெரியாருக்கே உரிய துணிவுடன் தோலுரித்தார். ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தினார். தனியார்மயத்தினால் ஏற்படும் அழிவுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். சிறுபான்மை, தலித் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து களத்திலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இவரது சமரசமற்ற போராட்டத்தின் எதிர்வினையாக இந்து மதவெறியர்களால் பலமுறை மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளார். இறுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!

சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புகின்றவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராக கை கோர்க்க வேண்டும். எதிரிகளான இந்து மதவெறி பயங்கரவாதிகளை மோதி வீழ்த்த வேண்டும். அந்த வகையிலான முயற்சிகள் இன்றி மென்மையான அணுகுமுறைகள் அனைத்தும் இந்து மதவெறியர்களை வளர்க்கத் தான் செய்துள்ளது என்பதற்கு மேற்குவங்கம், கேரளம் போன்ற மாநிலங்களே சாட்சி. கர்நாட காவில் கூட காங்கிரசு ஆட்சியில் இருந்தும் இந்துமதவெறியர்களின் அட்டூழியங்களை தடுக்க இயலவில்லை. கண்கண்ட இந்த உண்மையை உணர்ந்து புரட்சிகர,  மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.

கௌரி, கல்புர்கி ஆகியோருக்கு முன்பு கோவிந்த் பன்சாரே, தாபோல்கர் போன்ற முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கொலைகளையும் அழித்தொழிப்புகளையும், தீவைப்புகளையும் நிகழ்த்துவதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பாசிசத்தை நிலை நாட்டிவிடலாமென்ற இந்து மதவெறியர்களின் கனவு என்றுமே நனவாகப் போவதில்லை.

இந்தியா முழுவதும் உழைக்கும் மக்கள் மீது பணமதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்ற பல்வேறு திட்டங்களைத் திணித்துவரும் கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடியும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் -ம் மக்களைப் பிளவுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதம்தான்  பிரித்தாளும் சூழ்ச்சி – இந்து மதவெறி. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் இந்து மதவெறி பொய்யுரைகளுக்கும் பலியாகாமல் இறுதிவரை உறுதியுடன் போராட ஒன்றிணைவோம்!

  • பார்ப்பன இந்துமதவெறி பயங்கரவாதத்தையும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. -யின் சமூக விரோத நடவடிக்கைகளையும் துணிவுடன் எதிர்த்த கர்நாடக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்துமதவெறியர்களால் சுட்டுக்கொலை!
  • முற்போக்காளர்களை அழிப்பதன் மூலம் இந்துமதவெறிக்கு எதிரான உணர்வை மாய்த்துவிட முடியாது!
  • பார்ப்பன பயங்கரவாதத்தை முறியடிக்க புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784.  

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !

5

ராம் ரகீம் விவகாரத்தையொட்டி, அகில பாரத அகாரா பரிசத் என்ற இந்து சாமியார்கள் சங்கம் 14 சாமியார்களின் பெயரை வெளியிட்டு அவர்களை போலிகள் என்று அறிவித்திருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு மேலும் 28 போலி சாமியார்களின் பட்டியலை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

இந்த பட்டியலை மத்திய, மாநில அரசுகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அனுப்ப இருப்பதாகவும், இத்தகைய போலி சாமியார்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றுமாறு கோரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார் அனைத்திந்திய சாமியார் சங்க தலைவர் சுவாமி நரேந்திர கிரி.

ராம் ரகீம் விவகாரத்தால் சாமியார்கள் எந்த அளவுக்கு தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை இந்த தீர்மானங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்த சாமியார் சங்க அறிக்கையை சீரியசாக அமல்படுத்துவதற்கு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் போராடவேண்டும் என்பதே நமது விருப்பம். இருந்த போதிலும் இது தொடர்பாக சில அடிப்படையான சந்தேகங்கள் இருப்பதால் அவற்றை சாமியார் சங்கத்திடம் தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

முதலாவதாக சட்ட சிக்கல்

ராம் ரகீம் மீது விசாரணை முடிந்து “குற்றவாளி” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். எத்தனை சிறுமிகளை ரேப் செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், ஆசாராம் பாபு மீது விசாரணையே இன்னும் தொடங்கவில்லை.

அவ்வாறு இருக்கும்போது அவரைப் போலி சாமியார் என்று அறிவிப்பது நியாயமா? இது சட்டவிரோதமல்லவா? ராம் ரகீம் மீது ரேப் கேஸ்கள், கொலை கேஸ்கள் இருந்த நிலையிலும் மோடிஜி, அமித்ஷா ஜி, பகவத் ஜி போன்ற பல ஜி க்களும் அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் விவரம் தெரியாதவர்களா?
அதே நேரத்தில் நித்தியானந்தாவை போலி சாமியார் என்று அவசரப்பட்டு நீங்கள் அறிவிக்காதது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

தற்போது ராம் ரகீமுக்கு கீழ் கோர்ட் தான் தண்டனை விதித்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் ஒரு குமாரசாமி அவரை விடுதலை செய்து விட்டால், நீதிக்குத் தலை வணங்கி, ராம் ரகீம் சாமியாரை போலிகள் பட்டியலிலிருந்து எடுத்து விடுவீர்கள் அல்லவா?

இரண்டாவதாக இலக்கணச் சிக்கல்

நம் நாட்டில் இல்லறத்துக்கு இலக்கணம் உள்ளது. துறவறத்துக்குத்தான் இல்லை.

சாமியார் எனப்படுபவர் யார்? சாமியார் என்பவருக்கு மனைவி மக்கள் இருக்கலாமா? கூடாது என்பது உங்கள் கருத்தாக இருக்கும் பட்சத்தில், பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்து அமோகமாக வாழ்க்கை நடத்தி வரும், சத்குரு ஜக்கி வாசுதேவ் பெயர் உங்களுடைய போலி சாமியார் பட்டியலில் இடம் பெறவில்லையே ஏன்?

கட்டிப்புடி வைத்தியம் “ராதே மா” வை போலி என்று அறிவித்திருக்கிறீர்கள், அதே காரியத்தை செய்து வரும் அமிருதானந்த மாயியை அவ்வாறு அறிவிக்கவில்லையே ஏன்?

சாமியார் கஞ்சா குடிக்கலாமா, சரக்கடிக்கலாமா? அடிக்கலாமெனில் எந்த அளவு அடிக்கலாம்? எத்தனை வேளை சாப்பிடலாம்? ஏ.சி ரூம், ஏ.சி காருக்கு அனுமதி உண்டா? உடை உண்டா, கிடையாதா? துணி என்ன நிறம்?
முதல்வர் பதவி வகிக்கும் யோகி ஆதித்யநாத் போன்றோர் துறவிகளாகத்தான் கருதப்படுவார்களா? இதற்கெல்லாம் விளக்கம் தேவை.

மூன்றாவதாக ஒரே தேசம், ஒரே சட்டம் என்ற பிரச்சினை

சாமியார் என்ற பட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால்,இனி யார் சாமியார் ஆக விரும்பினாலும், அவரை அனைத்திந்திய அகாரா பரிசத்தின் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகுதான் சாமியார் பட்டம் வழங்கப்படவேண்டும் என்று சாமியார்கள் சங்கம் கருதுவதாக, விசுவ இந்து பரிசத்தின் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியிருக்கிறார்.

கல்வியிலாவது சி.பி.எஸ்.இ – ஸ்டேட் போர்டு என்று இரண்டு பிரிவுகள்தான் உள்ளன. அதில் நீட் கொண்டுவருவது சுலபம். ஹிந்து மதத்தைப் பொருத்தவரை பல கடவுள்கள், பல சம்பிரதாயங்கள் உள்ளன.
வைணவத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஸ்டாண்டு வைத்தவர்கள், வைக்காதவர்கள் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. ஜீயர் பதவி என்பது “போஸ்ட் ரிடையர்மென்ட் பெனிபிட்”டாக ஐயங்கார்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களெல்லாம் தேர்வை எதிர்கொள்ள வேண்டுமா?

சைவத்தை பொருத்தவரை, காஞ்சி, சிருங்கேரி, பூரி என்று பல ஜெகத்குருக்கள் இருக்கிறார்கள். இருப்பது ஒரு உலகம். இதற்கு பல ஜெகத்குருக்கள்! ரவிசங்கர்ஜியை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு ஆள், ரெண்டு ஸ்ரீ போட்டுக்கொள்கிறார். அந்த ஆள் பிராணாயாமத்துக்கு பேடன்ட் வாங்கி வைத்திருக்கிறார். ராம்தேவ் பலசரக்கு கடை நடத்துகிறார். இன்னொருத்தர் நாட்டு மருந்து விற்கிறார்.

நரமாமிசம் தின்னும் அகோரியும் சைவம், தயிர்சாத சங்கராச்சாரியாரும் சைவம், இப்படி சைவமே அசைவமாக இருக்கும் போது,  இவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவாக என்ன ’சிலபஸ்’ வைப்பது? என்ன மொழியில் கேள்வி கேட்பது? எழுதப்படிக்கவே தெரியாத சாமியார்களுக்கு எப்படி பரிட்சை வைப்பது? ஒரே குழப்பமாக இருக்கிறது.

“யூனிபார்ம் சிவில் கோடு” கொண்டுவந்து எல்லா மதத்துக் காரனுக்கும் கல்யாணம் முதல் கருமாதி வரை ஒரே சட்டம்தான் என்று சொல்லி விடலாம். பிரச்சினை வந்தாலும் அடித்து உதைத்து சமாளித்து விடலாம்.
முற்றும் துறந்தவர்கள் விசயம் அப்படிப்பட்டதல்ல. “ஒரே தேசம் – ஒரே ஹிந்து – ஒரே சாமியார்” என்று சட்டம் கொண்டு வந்தால் திரும்பிய பக்கமெல்லாம் லிங்காயத்து பிரச்சினை போல இது கிளம்பி விடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஹிந்து மதத்தின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக எடுக்கும் முயற்சியில், ஹிந்து மதமே துண்டு துண்டாக சிதறி விடும் அபாயமும் இருக்கிறது. தேசிய நீட் தேர்வு என்று அறிவித்த உடனேயே பிரச்சினை வந்து விடும் என்று பயமாக இருக்கிறது.

நான்காவதாக, சாமியார் மதிப்பு நீக்கம்

இனி புதிதாக சாமியார் ஆக விரும்புகிறவர்களுக்கு, அகில பாரத அகாரா பரிசத் நீட் தேர்வு நடத்தட்டும். இருப்பவர்களில் போலிகளை எப்படி அடையாளம் காண்பது, எப்படி களையெடுப்பது?

ஏற்கெனவே உள்ள சாமியார்களில் 14 பேரை போலிகள் என்று வெளியிட்டிருக்கிறீர்கள். தீபாவளிக்கு பிறகு ஒரு லிஸ்ட் வெளியிடுவதாக சொல்லியிருக்கிறீர்கள். இதெல்லாம் ஜுஜுபி. கும்பமேளா என்றால் பத்தாயிரக்கணக்கில் புற்றீசல் மாதிரி சாமியார் கூட்டம் வருகிறது.

இப்படி தவணை முறையில் செய்வதை விட, மோடிஜி செய்த டிமானிடைசேஷன் போல, வர இருக்கும் தீபாவளியன்றோ, விஜயதசமி அன்றோ இரவு 12 மணி முதல் தேசம் முழுவதும் உள்ள பழைய சாமியார்களெல்லாம் “செல்லாத சாமியார்கள்” என்று அறிவித்து விடலாம்.

ஒரு மாத காலத்துக்குள் அவர்களெல்லாம் அகாராவின் முன் ஆஜராக வேண்டும். தங்கள் சொத்து, மனைவி மக்கள் குறித்த விவரங்கள், நல்ல, கெட்ட பழக்கங்கள், சிஷ்யர்கள், சிஷ்யைகள் குறித்த விவரங்கள், தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் போன்ற எல்லா விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

அவற்றையெல்லாம் போலீசு – உளவுத்துறை – இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டுகள் மூலம் பரிசீலித்து கருப்பு சாமியார்களை அடையாளம் கண்டு விடலாம். அவர்கள் செய்த தப்புக்கு உரிய வரியை அகாராவுக்கு கட்டினால், அவர்களுக்கு சாமியார் லைசன்ஸ் கொடுத்து வெள்ளை சாமியார் ஆக்கி விடலாம் !

– தொரட்டி


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெரினாவின் அலைகள் ஓயாது ! – கவிதை

1

இதுதான்டா தமிழ்நாடு !

போராடு!
இது தமிழ்நாடு..
அனிதாவின் உயிர் நம்மோடு
அடங்காதே மாணவனே, போராடு!

நோட்டைத் திணித்தவன்தான்
நீட்டைத் திணிப்பதும்
மாட்டைப் பறித்தவன்தான்
நம் ஏட்டைப் பறிப்பதும்…
மண்டியிட்டு வாழ்வது அவமானம்
மாணவர் போராட்டம் தன்மானம்

குடிப்பதற்கு டாஸ்மாக்கு
அடிப்பதற்கு போலீசு
தில்லிக்கு அடிபணிய
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்.
திரும்பிய பக்கமெல்லாம்
பொய் வழக்கு, கேசு..

போராடும் மாணவர்கள் கண்ணியம் !
புடிக்க வந்த பெண் போலீசின் மேல்
ஆண் உதவி கமிசனரின் பிராக்டீசு !

அருவருப்பில் அடங்கிக்கிடக்க
அவர்களா நாம்?
அடிமைக் கருவறுக்க
களம் புகுந்த,
பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்
மருது, குயிலி, ஜான்சிராணி வாரிசு!

கல்புர்கி, தபோல்கர் வரிசையில்
கவுரி லங்கேஷ் படுகொலை …
சம்புகன், ஏகலைவன் வரிசையில்
அனிதாவும் படுகொலை…

பசுவுக்கு கோசாலை
பஞ்சமருக்கு சிறைச்சாலை
கொலைகார ஆர்.எஸ்.எஸ்.-க்கு
தேசிய நெடுஞ்சாலை…

துப்பாக்கியுடன் சங்கப் பரிவாரம்
துப்பட்டாவுடன் போராடும்
நம்மிடம் வந்து அரசு அதிகாரம்!

ராம ராஜியத்திற்கு எதிரான
ராவண காவியம் படைப்போம்!

எத்தனை படைகளைக் குவித்தாலும்
மெரினாவின் அலைகள் ஓயாது!
தமுக்கத்தின் ஈரம் காயாது!
வ.உ.சி. திடல் சாயாது!
உரிமையின் மூச்சு அடங்காது!

-துரை. சண்முகம்
_____________

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2017 மின் நூல்

0

கோபம், அன்பு, கண்ணீர், இரக்கம் – இவையெல்லாம் மனித உணர்ச்சிகள். உணர்ச்சி என்பது எந்திரங்களுக்கோ விலங்குகளுக்கோ சாத்தியமற்றது. சமூக விலங்காக மாறியதன் காரணமாக மனிதனுக்கு மட்டுமே சாத்தியமானது.

மேட்ரிக்ஸ் படத்தில் மனிதர்களின் உணர்ச்சிவயப்படுதலை முட்டாள்தனம் என்று எந்திர மனிதர்களான ரோபோக்கள் கேலி செய்யும். இன்றைக்கு நம்முடைய உணர்ச்சிகளை ஆளும் முதலாளித்துவ ஊடகங்கள், அந்த ரோபோக்களின் கூற்றை உண்மையாக்கி வருகின்றன.

ரேசன் அரிசிக்காக நடையாய் நடப்பவனை, ’கோடீஸ்வரன்’ ஆகலாம் என்று விஜய் டிவி கண் சிமிட்டி அழைக்கின்றது. பாத்ரூம் பாடகர்கள் பார் போற்றும் பாடகராகலாம் என ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி நம்மை நம்பவைக்கிறது. பக்கத்து வீட்டு படுக்கையறை விவகாரங்களை எட்டிப்பார்க்க அழைக்கிறது, ’சொல்வதெல்லாம் உண்மை’.

அமீர்கானின் ’சத்யமேவ ஜெயதே’ இந்தியாவின் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்த அரங்க நிகழ்வு என்று வாசகர் கடிதங்கள் குவிகின்றன. டி.வி சீரியல்களின் குடும்பச் சண்டைகளை ஆர்வத்துடன் பின்தொடரும் அனிச்சை விலங்குகளாக மக்களை மாற்றிவிட்டன தொலைக்காட்சிகள்.

அரசியலிலும் சமூகத்திலும் பல வில்லன்கள், வில்லிகள் நம்மை அழுத்திக் கொண் டிருக்கிறார்கள். பிக் பாஸ் ஜெயலலிதா செத்துப்போனதன் விளைவாக, அவரது வாரிசுகள் போடும் சண்டையில் நாடே நாறிக் கொண்டிருக்கிறது. இது நம்மைக் கொள்ளையிடும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் யுத்தம். அரசியல் ஈடுபாடற்ற பாமரர்கள் விஜய் டிவியின் பிக் பாஸை பார்த்துக் கொண்டிருக்க, அரசியல் ஆர்வலர்கள் எல்லா சேனல்களிலும் அன்றாடம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’யார் எந்த அணிக்கு தாவுவார்கள்’ என்ற கேவலத்தில் தம்மையும் அறியாமல் மூழ்கடிக்கப்பட்டு வருகிறார்கள்.

எதார்த்தம் சார்ந்த நிகழ்ச்சிகள் என்று அழைக்கப்படும் ரியாலிட்டி ஷோ-க்கள், நம்மை மெய்யுலகில் இருந்து துண்டிக்கின்றன. மெய்யுலகில் நடைபெறும் அ.தி.மு.க கொள்ளைக்கூட்ட மோதலோ, மெல்ல மெல்ல ஒரு ரியாலிட்டி ஷோவாக மாறிவருகிறது.

நிழலை நிஜமாகக் கருதி கண்ணீர் விடுவதற்கும், நிஜத்தை நிழலெனக் கருதி சிரிப்பதற்கும் பழக்கப்படுத்தப்படுகிறோம். மெல்ல மனிதத் தன்மையை மறந்து வருகிறோம்.

ரியாலிட்டி ஷோக்களின் உளவியலை ஆய்வு செய்து மக்களை எழுப்ப முயல்கிறது இந்த வெளியீடு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • கோடீஸ்வரன் மூளை தயார் முண்டங்கள் தயாரா?
  • ரோல்ப் ஹாரிஸ் : குழந்தைகளை சிதைத்த டிவி பிரபலம்
  • என்.டி.டிவி – ஏ.சி நீல்சன் : கல்லாப் பெட்டிச் சண்டை
  • சத்யமேவ ஜெயதே ! அமீர்கானின் SMS புரட்சி
  • டிவி சீரியல்கள் எப்படித் தயாராகின்றன?
  • சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்
  • சொல்வதெல்லாம் பொய்! செய்வதெல்லாம் ஃபிராடு!
  • பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா?
  • ஒவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச்.ராஜா !

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

20.00Read more

20.00Read more

கௌரி லங்கேஷ் படுகொலை இது காவிகளின் தேசம் ! – கருத்துப்படம்

7

தாத்ரி, உனா  – உண்ணத் தடை !
நெடுவாசல், கதிராமங்கலம் – உயிர் வாழத் தடை !
நீட்,  புதிய கல்விக் கொள்கை – படிக்கத் தடை !
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி  – சிறுதொழில் செய்யத் தடை !
எதையும் பேசாதே, எழுதாதே  தொடரும் படுகொலை !

ஓ…   இது காவிகளின் தேசம் !

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி தொடர்ந்து கௌரி லங்கேஷ்

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அனிதா : தமிழகத்தைப் பற்ற வைத்த நெருப்புத் துண்டு ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !

1

னிதாவின் மரணத்தைத் தொடர்ந்து கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் கடந்த  2017 செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள்  புமாஇமு ஒருங்கினைப்பாளர் தோழர் நடேசன் தலைமையில் போராட்டத்தைத் தொடங்கினர். தோழர் வெங்கடேசன் தலைமையில் வகுப்பைப் புறக்கணித்து சுமார் 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு அனிதாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தி, நீட்டுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

புதிய கல்விக் கொள்கையும், நீட்டும் வேறுவேறு அல்ல என்றும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்த்ப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து குலத்தொழிலைக் கொண்டு வரும் திட்டம் என்றும், ஆசிரியர் மாணவர் பெற்றோர்கள் ஒன்றிணைந்த கமிட்டியின் அதிகாரத்தை நிறுவுவதே இவற்றை ஒழிப்பதற்கான தீர்வாகும் என்றும்  முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தன்னுரிமையைப் பாதுகாக்க தமிழினமே திரண்டெழு ! என்ற புமாஇமு -வின் துண்டுப் பிரசுரங்கள் போராட்டத்தின் போது வினியோகிக்கப்பட்டன. அதை மாணவர்கள் ஆர்வமாக வாங்கிப் படித்தனர். கல்லூரி ஆசிரியர்கள் சிலர் தோழர்களின் முழக்கங்கள் அருமையாக இருக்கின்றன என்று கூறினார்கள்.

போலீசு போராட்டத்தை முடிக்கச் சொல்லி மாணவர்களைக் கலைக்க முயன்றது. அதையும் தாண்டி மாணவர்கள் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் இப்போராட்டம் நடந்தது.

மேலும் கிருஷ்ணசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாவது நாளாக இன்றும் (06.09.2017)  புமாஇமு ஒருங்கிணைப்பில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட மானவர்களைத் திரட்டி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. நிர்வாகத்தின் மிரட்டலுக்கு கொஞ்சம் கூட அடிபனியாமல் மாணவர்கள் தீரத்துடன் நின்று போராடினார்கள்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர்.

***

ருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்களை நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்காக ஒருங்கிணைக்க முயன்ற புமாஇமு தோழர்கள் அன்பு மற்றும் மலர்கொடி ஆகியோரை (05.09.2017) நேற்று காவல்துறை கைது செய்து மாலை வரை தடுத்து வைத்ததன் மூலம் நேற்றைய போராட்டத்திற்கு தடையை ஏற்படுத்தியது போலீசு.

இன்று 06.09.2017 காலை மீண்டும் புமாஇமு தோழர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முன்பு போராட்டம் தொடங்கப்பட்டது. மீண்டும் போலீசு மாணவர்களை அணி திரள விடாமல் தடுக்க முயன்றது. அதற்காக பீதியூட்டும் வேலைகளில் இறங்கியது.

புமாஇமு என்பது தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், போராட்டங்களால் உங்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறிக் கலைக்க முயற்சித்தது. கல்லூரி நிர்வாகமும் போலீசுடன் சேர்ந்து கொண்டு பிராக்டிக்கல் மார்கில் கைவைப்பேன் என மிரட்டியது. ஆனால் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தர்மபுரி.

***

ண்ருட்டி அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் நீட்டுக்கு எதிராகவும்! மாணவி அனிதாவின் படுகொலைக்கு நீதி கேட்டும் 06.09.2017 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்.

***

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் நீட்டுக்கு எதிராக வகுப்பை புறக்கணித்து, அனைத்து பள்ளி – கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தொடர்ந்து போராடிவரும் மாணவர்களுடன் நேட்டிவ் பள்ளி மாணவர்களும், நீட்டுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து சுமார் 1000 -க்கும் மேற்ப்பட்வர்கள் சாலையில், பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் கண்டு கும்பகோணம் நகரமே போராட்ட உணர்வை பெற்றது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது  வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி