Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 583

டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்! புதிய கலாச்சாரம் ஆகஸ்டு வெளியீடு

2

 புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2015 டீஸர்:

“டாஸ்மாக்கை மூடு” என்ற குரல் தமிழகம் முழுவதும் எழத் தொடங்கியவுடன், ஆங்காங்கே மக்கள் போராடத் தொடங்கியவுடன், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு, படிப்படியாக மதுவிலக்கு”என்று விதம் விதமாக எல்லோரும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

கடையை மூடுவதற்கு தேர்தல் வரை எதற்கு காத்திருக்க வேண்டும்? பல ஊர்களில் பெண்கள் திரண்டு வந்து போராடி டாஸ்மாக் கடைகளை உடைப்பதையும் பூட்டுவதையும் நாம் பார்க்கவில்லையா? லட்சக்கணக்கில் உறுப்பினர்களை வைத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகள் இப்போதே தங்கள் தொண்டர்களைத் திரட்டி கடைகளை மூடலாமே! கடைகளை மூடுவதற்கு அரசதிகாரம் எதற்கு? முதல்வர் பதவி எதற்கு?

இது போகாத ஊருக்கு வழி. இவர்களுக்கு ஓட்டுப்போட்டோ, அரசாங்கத்துக்கு மனுப்போட்டோ ஒருக்காலும் டாஸ்மாக்கை மூட முடியாது. ஏனென்றால்,டாஸ்மாக் இல்லையென்றால் அரசு கஜானாவே காலி என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டுவிட்டது. மேலிருந்து கீழ் வரை ஆளுங்கட்சியினரும், அதிகார வர்க்கத்தினரும் கூட்டு சேர்ந்து கொண்டு முறையான வரி வருவாயை சூறையாடுகிறார்கள். பாதிக்குப் பாதி லஞ்சத்தை வாங்கிக்கொண்டு வீட்டு வரி, சொத்து வரி முதல் மின் கட்டணம் வரையிலான முறையான வருவாய்களை வசூலிக்காமல் விடுகிறார்கள், அல்லது முறைகேடாகத் தள்ளுபடி செய்கிறார்கள்.

சந்தையில் ஒரு லோடு 16,000 ரூபாய்க்கு விற்கும் ஆற்று மணலை வெறும் 600 ரூபாய்க்கு விற்று விட்டு மீதியை கீழிருந்து மேல்வரை பங்கு போட்டு தின்கிறார்கள். கிரானைட், கனிம வளம், காட்டு வளம், தண்ணீர் உள்ளிட்ட எல்லா பொதுச் சொத்துகளும், போக்குவரத்து துறை உள்ளிட்ட பொதுத் துறைகளும் இப்படி சூறையாடப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்கெனவே கட்டி வந்த வரிகள் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்படுகின்றன. அவர்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. இந்த வருமானங்களை ஈடுகட்டத்தான் சாராயம் விற்கிறது அரசு.

மல்லையா போன்ற சாராய முதலாளிகளைப் போலவே, ஜெயா-சசி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்ற ஓட்டுப் பொறுக்கிகளும் சாராய முதலாளிகளாகவே இருக்கின்றனர். மாவட்ட அளவில் அ.தி.மு.க கிரிமினல் கும்பல்கள்தான் பார் நடத்தி கலப்பட சாராயம் விற்கின்றனர். இந்தக் கும்பலும் மாவட்ட நிர்வாகம், போலீசு உள்ளிட்ட ஒரு பெரிய வலைப் பின்னலும் இதன் பின்னால் இயங்குகிறது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருகின்ற வருமானத்துக்கு இணையான வருமானத்தை இந்தக் கும்பலும் சுருட்டுகின்றது. ரத்தம் சுவைத்த இந்த மிருகங்கள் மது விலக்கை அமல்படுத்தும் என்று நம்புவது மடமை.

சமூகம் நாசமாவது பற்றி இந்த அரசோ கட்சிகளோ கவலைப்படவில்லை, உண்மையில் மகிழ்ச்சியடைகின்றனர். ஏனென்றால், படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை, வேலையில் இருப்பவர்களுக்கு நியாயமான ஊதியம் இல்லை, விவசாயம் அழிந்து மக்கள் நாடோடிகளாக வேலை தேடி அலைகின்றனர். இந்தச் சூழ்நிலையில், வெறுப்பிலும் ஆத்திரத்திலும் இருக்கும் இளைஞர் சமுதாயத்திடமிருந்தும் மக்களிடமிருந்தும் இந்த அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஓட்டுப் பொறுக்கிகளையும் டாஸ்மாக் கடைதான் கவசமாக இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்த அரசிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலமோ, தேர்தலில் வாக்களிப்பதன் மூலமோ டாஸ்மாக்கை மூடிவிடலாம் என்று நம்புவதே முட்டாள்தனமானது. நம் கண் முன்னே இளைய தலைமுறை கெட்டழிவது கண்டு நெஞ்சம் நடுங்குகிறது. இனி பொறுப்பதற்கில்லை; மக்கள் இழப்பதற்கும் எதுவுமில்லை. நம்முடைய தெருவில், நம்முடைய ஊரில் சாராயக்கடை கூடாது என்றால் அதை நாம் அமல் படுத்த வேண்டும். நம்மை மீறி கடையை நடத்துவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது. பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை அமல்படுத்துவதுதான் ஜனநாயகம். அதற்கு எதிராக அரசின் எந்த அதிகாரம் வந்து நின்றாலும் அதனைத் எதிர்த்து நிற்க வேண்டும்.

இந்த வழியில் அல்லாது வேறெந்த வழியிலும் டாஸ்மாக்கை மூட முடியாது. இந்த உண்மையை இவ்வெளியீட்டில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளும், நேர்காணல்களும், கள ஆய்வுகளும் வாசகர்களுக்கு உணர்த்தும்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

Graphic1

______________________________

இதழில் இடம்பெற்றுள்ள தலைப்புகள்:

  • செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு
  • டாஸ்மாக் ஒழிப்பு – ஒரு ஒழுக்கப் பிரச்சினையல்ல!
  • குடியால் தொலைந்த குடும்பம் “வள்ளியின் கதை”
  • ஜெயா-சசி கும்பலின் ஆந்திர சாராயப் பங்காளி “ஜனநாயகப் பூங்கா – சாராயப் பூக்கள்”
  • பார்ப்பனியமும் பட்டை சாராயமும் சுரா,சோம லித்வேனிய மது, மத்ய சுவாகா….”
  • டாஸ்மாக் அருளும் இலவசங்கள்: வரமா – வக்கிரமா?
  • மதுவை ஒழிக்க முடியுமா?
  • சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்
  • பயந்து வாழும் துப்புறவு பெண் தொழிலாளிகள்
  • எனிசி கோனியாக் – பாரிசின் விலையுர்ந்த சரக்கு அம்மாவின் டாஸ்மாக்கில்
  • சூளகிரியில் மக்கள் சூறாவளி டாஸ்மாக் கடையை பூட்டிய நீண்ட போராட்டம்
  • ஊத்திக் கொடுத்த தாய்மாமனுக்கு 307 என்றால் தாய்க்கு என்ன செக்சன்?
  • குடியில் இந்தியா – நெ.1
  • உப்பு, குடிநீர், உணவகம் வரிசையில்.. அம்மா சாராயம் எப்போது?

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

மூடு டாஸ்மாக்கை….. மூடு – ம.க.இ.க-வின் புதிய பாடல்

5

 

shut tasmac 1மூடு டாஸ்மாக்கை மூடு – பாடல் வரிகள்….

வசனம்:
மூடு டாஸ்மாக்கை,
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்
கெடு விதிப்போம் ஆகஸ்டு 31

பாடல்:

மூடு டாஸ்மாக்கை மூடு
நீ….
மூடு டஸ்மாக்கை மூடு

நீ
ஓட்டுப் போட்டு மூடுவான்னு
காத்திருப்பது கேடு..

மூடு டாஸ்மாக்கை மூடு..நீ……
மூடு டாஸ்மாக்கை மூடு

shut tasmac 2இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சு சாகணும்
எத்தன தாலி அறுந்து விழணும்..
எத்தனை தாலி அறுந்து விழணும் (கோரஸ்)

எத்தன கட்சிகள் கொள்ளையடிக்கணும்
எத்தன தேர்தல் வந்து போகணும்

எத்தன தேர்தல் வந்து போகணும் (கோரஸ்)

இது தப்புன்னு நல்லா தெரிஞ்ச பின்னும்
இப்பவே மூடு ஏன் தயங்கணும்

மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு… (கோரஸ்)

கூட்டம் சேக்க சாராயம்
ஓட்டு வாங்க சாராயம்
ஓட்டு வாங்க சாராயம் (கோரஸ்)

கோஷம் போட சாராயம்
கொடி பிடிக்க சாராயம்
கொடி பிடிக்க சாராயம் (கோரஸ்)

shut tasmac 3சாராய ஊறலில்தான் கட்சி வளருது
உன்ன ஊறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது
உன்ன ஊறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது (கோரஸ்)

அட கடைய மூட எதுக்கு ஓட்டு
போடு கனமா ஒரு திண்டுக்கல் பூட்டு

மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு.. (கோரஸ்)

அப்பனும் மகனும் கடையிலே
ஆளிருந்தும் துணையில்லே
ஆளிருந்தும் துணையில்லே (கோரஸ்)

சுத்தி சுத்தி இன்னும் கடன வாங்கி
மானம் போகுது தெருவிலே
மானம் போகுது தெருவிலே (கோரஸ்)

விலையில்லா பொருளால
வாழ்க்கை விலை போனது கடையிலே
வாழ்க்கை விலை போனது கடையிலே (கோரஸ்)

விளக்கு அணைஞ்சு போச்சு வீட்டிலே….

விளங்குமா இந்த பொம்பள

மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு (கோரஸ்)

கெட்ட குடி நம்ம குடி
அறுந்த தாலி நம்ம தாலி
அறுந்த தாலி நம்ம தாலி (கோரஸ்)

பத்தியெறியது எங்க வயிறு
குடிய பாக்கு வெச்சு அழச்சதாரு
பாக்கு வெச்சு அழச்சதாரு (கோரஸ்)

shut tasmac 4அட வேணான் இது எங்க ஊரு
அதிகாரம் பண்ண கலெக்டர் யாரு?

மூடு டாஸ்மாக்கை மூடு…
மூடு டாஸ்மாக்கை மூடு (கோரஸ்)

குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே
அடிக்க வரும் போலிசுக்கு அஞ்சாதே

மூடு கடையை – அட
எவன் வருவான் பாப்போம்

நம்ம ஊரில் இனி டாஸ்மாக்கு கிடையாது
அடிச்சு தூக்கு………………..

___________________________________

பாடல்: மையக் கலைக்குழு, மக்கள் கலை இலக்கியக் கழகம்

வெளியிடுவோர்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு…
99623 66321

______________________________________________________

பால் விவசாயிகளைக் கொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

1
Exif_JPEG_420
பால் உற்பத்தியாளர்கள் 1
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் சேர்ந்து பால் உற்பத்தியாளர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மிழகத்தில் ஆவின் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி 2011-ல் ஜெயா அரசு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனே அதிரடியாக பால் விலையை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஆரோக்கியா, ஹட்சன், ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் பால் நிறுவனங்களும் பல மடங்கு விலையை உயர்த்தி கொள்ளை இலாபமடித்தனர். ஆனால், பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 மட்டுமே உயர்த்தி கொடுத்தனர். அந்த பாலை பயன்படுத்தும் பொதுமக்கள் மீது ரூ.6.25 விலை உயர்வு திணிக்கப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு அறிவித்தபடி 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால், அதை கைவிட்டு 25% பால் மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. மீதி 75% பாலை கார்ப்பரேட் பால் நிறுவனங்கள் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.

இந்த கார்ப்பரேட் பால் உற்பத்தி நிறுவனங்கள், திடீரென பாலை வாங்க மறுப்பது, குறைந்த விலைக்கு கேட்பது, வாரத்திற்கு 1, 2 நாள் விடுமுறை என்று பால் உற்பத்தியாளர்களை அலைய விடுவது, என்று பால் உற்பத்தியாளர்களை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கி வருகின்றனர்.

கிரானைட், மணல், தண்ணீர், கல்வி என எல்லாத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்தி, கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க அனுமதித்தது போல, பாலிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஜெயா அரசு துடித்து வருகிறது. அதனால், தற்போது அரசு கொள்முதல் செய்துவரும் ஆவின் பாலையும் (அதாவது 25 லட்சம் லிட்டரையும்) நிறுத்திவிடத் துடிக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் சேர்ந்து பால் உற்பத்தியாளர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பால் உறப்பத்தியாளர்கள் 2
பால் கொள்முதல் விலை குறைப்பு, பால் வாங்க மறுப்பு, பால் வாங்குவதற்கு விடுமுறை ……இவற்றினை எதிர்த்து தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பால் உற்பத்தியை முற்றிலும் ஒழித்துக் கட்டும் அரசின் முயற்சிக்கும் உணவுத் தற்சார்பை ஒழித்து முற்றிலும் கார்ப்பரேட் ஆதிக்கத்தை உருவாக்குவதோடு, குறைந்தப் பட்ச சத்துணவான பாலையும் பறிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் அமைந்துள்ளது. பால் கொள்முதல் விலை குறைப்பு, பால் வாங்க மறுப்பு, பால் வாங்குவதற்கு விடுமுறை ……இவற்றினை எதிர்த்து தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பென்னாகரம் விவசாயிகள் சிலரின் அனுபவம்:

பென்னாகரத்தில் உள்ள தாசம்பட்டி கிராமம், ஒரு காலத்தில் பார்ப்பதற்கு பசுமையாக தோற்றமளித்த இந்த பகுதி பருவ மழையின்மையால் விவசாயம் பொய்த்து போய் இன்று களையிழந்து இருக்கிறது. இதனால், விவாசாயத்தை விட்டு விட்டு கர்நாடகா, கோவை என கட்டிட வேலைக்கு சென்று எப்படியாவது குடும்பத்தை நடத்தி விடலாம் என்று போனால் அங்கேயும் 10,15 நாள் மட்டுமே வேலை இருக்கிறது, அதன் பிறகு வேலை கிடைப்பதில்லை. இந்நிலையில் தான் பால் மாடு வாங்கியாவது, வளர்த்தால் குடும்பத்தை ஓட்டிவிடலாம் என்று வளர்த்து வந்தவர்களின் எண்ணத்தில் இடியாய் இறக்குயிருக்கிறது இந்த பால் கொள்முதல் விலை குறைப்பு.

தனலட்சுமி கூறும் போது, காலையில் 4 மணிக்கு எழுந்து 6 மணிக்குள் குடும்ப வேலைகளை முடித்து, பிறகு 7 மணிக்குள் பாலை கறந்து சொசைட்டிக்கு போய் ஊற்றிய பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதன் பிறகு, மாட்டுக்கு புல் அறுத்து வரவேண்டும், தீவனம் வைக்க வேண்டும், வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி, அடுத்தடுத்து இரவு 10 மணி வரைக்கும் உழைத்து அன்றாடம் பாலை ஆரோக்கியாவுக்கு ஊற்றி வரும் தனலட்சுமி, அவருடைய ஆரோக்கியத்தை இழந்து நிற்கிறார்.

milk 4
நாங்கள் 35 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறோம். ஆனால் இந்த ஓர் ஆண்டில் மட்டும் பால் கோவா தொழிலில் நிறைய நஷ்டங்களை சந்தித்து விட்டோம். குறிப்பாக 20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுயிருக்கிறது.

மேலும் அவர் கூறும் போது, பாலுக்கு ஏற்ற விலை இல்லை, 4 வகையான தீவனம் இருக்கிறது. இதில் மாங்காய் தீவனம் போட்டால் தான் பால் கெட்டியாக, கொழுப்பும் கிடைக்கிறது. இந்த தீவணத்தை ரூ.1400க்கு வாங்கி போடுகிறேன். இதுவும் 1 மாதம் கூட வருவதில்லை. என்ன செய்வது, வேற வழியில்லாமல் இந்தத் தொழிலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஏதாவது வாரச் செலவு, கடனுக்கு சரிகட்ட முடியும் என்றுதான் வளர்த்து வருகிறேன். இதிலும் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.

வறட்சியின் பிடியால் நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியால் நகரத்திற்கு ஓடுவது, அங்கேயும் வேலை இல்லாமல் போனதால் பால் மாட்டை வாங்கியாவது பிழைப்பை நடத்தலாம் என்று நினைத்தாலும் போதிய தீவனம் இல்லை. முதலாளித்துவ நிறுவனங்கள் தீவனங்களின் விலையை, பல மடங்கு உயர்த்தி விட்டதால் அநியாய விலைக்கு வாங்கி மாடுகளை பாராமரிக்க வசதியில்லை, தீவனத்தை குறைத்தால் பாலும் குறைகிறது. ஏற்கனவே கடன் சுமையால் திக்குமுக்காடும் விவசாயிகள் ரூ.40,000க்கு வாங்கிய மாட்டை தற்போதுரூ.10,000, 8,000 என நஷ்டத்துக்கு விற்று விட்டு, கல்லுமலைக்கும், மீண்டும் நகரத்தை நோக்கி ஓடுவது என்ற நிலையில், இனி வாழவே முடியாது என்கிற நிலைமையை உருவாக்கி ஒட்டு மொத்தமாக விவசாயிகளையே, நாடோடிகளாக மாற்றி விட்டார்கள்.

பால்கோவா உற்பத்தியாளரின் அவலம்!

பென்னாகரத்தை ஒட்டி பால்கோவா தயாரிக்கும் கம்பெனிகள் இரண்டு செயல்பட்டுகின்றன. இதில் கே.எம்.எம். பால்கோவா தொழில் செய்பவர் கூறும் போது, “நாங்கள் 35 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறோம். ஆனால் இந்த ஓர் ஆண்டில் மட்டும் நிறைய நஷ்டங்களை சந்தித்து விட்டோம். குறிப்பாக 20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுயிருக்கிறது. 2, 3 வருடத்திற்கு முன்பு 15 பேர் வேலைக்கு அமர்த்தி, வேலை செய்தோம். பால் கோவாவும் நிறைய ஆர்டர் கிடைக்கும். இங்கு இருக்கும் சுற்று வட்டார மக்கள் எங்களிடம் தான் பால் எடுத்து வருவார்கள், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

milk 2
அதிக விலை கொடுத்து பால் வாங்கி பால்கோவா செய்தாலும், குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். இதனால் தயாரித்த பால்கோவா வை ஐசிலே வைத்து பாதுகாத்து கொஞ்சம், கொஞ்சமாக விற்று வருகிறோம்.

என்றைக்கு ஆரோக்கியாவும், ஹட்சனும் வந்ததோ அன்றையிலிருந்து பால் உற்பத்தியாளர்கள் அங்கு போக ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் விலையை உயர்த்தி கொடுக்கிறார்கள். அதனால் இங்கு பால் எடுத்து வந்தவர்களும் அங்கு போய்விட்டார்கள். இதனால் எங்களிடம் ஏற்கனவே பழக்கமானவர்கள் தான் பால் ஊற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஆரோக்கியாவும், ஹட்சனும், பால் கொள்முதல் செய்ய மறுத்தாலும், குறைந்த விலைக்கு கேட்பதாலும், அதிக விலைக்கு தீவனம் போட்டு குறைந்த விலைக்கு பால்கொள்முதல் செய்வதால் அவர்களிலும் பல பேர் கட்டுபடியாகமல் மாட்டையே விற்றுவிட்டு வேற வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.

அதிக விலை கொடுத்து பால் வாங்கி பால்கோவா செய்தாலும், குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். இதனால் தயாரித்த பால்கோவா வை ஐசிலே வைத்து பாதுகாத்து கொஞ்சம், கொஞ்சமாக விற்று வருகிறோம். என்ன செய்யறது, இவ்வளவு நாளா செய்து வந்துட்டோம். அதனால விடவும் முடியாமல், தொழிலை செய்யவும் முடியாமல், தவிக்கிறோம் என்று வேதனையோடு கூறினார்.

ஒட்டுமொத்தமாக பால்கோவா செய்பவர்களுக்கு தொழில் இனிப்பாக இல்லை, பாலை உற்பத்தி செய்பவர்கள் ஆரோக்கியமாக இல்லை. சொந்த மக்களையே நாடோடிகளாக்கி அலைய விடும் இந்த அரசமைப்பை மாற்றி மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்கும் வரை மக்கள் தமது நிம்மதியை பெற முடியாது.

  • புஜ செய்தியாளர், பென்னாகரம்.

கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…

279

cartoon_abdul_kalamஅழுது முடித்த கண்களுக்கு..!

றப்பின் துயரம்
புரிந்து கொள்ளக் கூடியதுதான்,
ஆனால்
சாவின் விளம்பரம்
சகிக்க முடியவில்லை.

கண்களை பிழிந்தெடுத்தன
காட்சி ஊடகங்கள்
காதுகளில்
சோகத்தை காய்ச்சி ஊற்றின
பண்பலைகள்

சீரியலுக்காக
செதுக்கப்பட்ட காட்சிகளாய்
ஒரு மரணத்தை மாற்றமுடியும்
என்று
சாதித்துக் காட்டினார்கள்
ஊடக முதலாளிகள்.

அறிவியல் எம்.ஜி. ஆரின்
இருப்பை மட்டுமல்ல
இறப்பை வழங்கும் நிகழ்ச்சியின்
இலாபமும்
உடைய வர்க்கத்துக்கே உரித்தானது.

கேள்விக்கிடமின்றி
எல்லோரும் இடறப்படும்போது
மொத்த சிந்தனையும்
கலாம் போதையால்
நிரப்பப்படும் போது
மத்த போதை எதற்கு?
மதுக்கடைகளை ஒரு நாள்
துணிந்து மூடியது அரசு.
சோகத்தின் இலக்கை
அடுத்த நாள் எட்டலாம்,
குடிப்பவன் உடம்பு ( பாடி )
(முன்னாள் ) குடியரசு தலைவருக்காக
ஒரு நாள் தாங்காதா என்ன?
சாதாரண இழப்பா இது!

அம்பானிக்கும், அதானிக்கும்
அம்பானியால் சிறுவணிகம் இழந்த
இராமேசுவரம் மளிகைக் கடைக்காரருக்கும்
அதானியால் நிலத்தை இழந்த
குஜராத் விவசாயிக்கும்,

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

அமித்ஷாவுக்கும், மோடிக்கும்
ஆர்.எஸ். எஸ். கொலைவெறி மோகன்பகவத்துக்கும்
திரிசூலத்தால் குதறப்பட்ட
அப்பாவி முஸ்லீம்களுக்கும்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்
!

மலைக்கள்வர்களுக்கும்
மணல் கொள்ளையர்க்கும்
ஏரிகளை விழுங்கிய
ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கும்
இவர்களால் வாழ்வாதாரம் இழந்து
மண்ணை விட்டு விரட்டப்படும் மக்களுக்கும்

AKALAMஎல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்
!

கண்ட கனவில்
கல்லா பிதுங்கும்
கல்விக் கொள்ளையர்க்கும்
கல்விக் கண்ணை
காசுக்கு விற்றுவிட்டு
கனவும் கானும் மாணவர்களுக்கும்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

பெருந்தகையின் கனவை உள்வாங்கி
பெருந்தொகையில் முன்னேறிய
ஜெயலலிதாவும், தளபதியும்
ஜி.கே. வாசனும், விஜயகாந்தும்
அன்புமனியும், எடியூரப்பாவும்
ஏக்கத்தில் துவள

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

மதங்களைக் கடந்த மாமனிதர்
கையில் வீணை
வாயில் கீதை
நெஞ்சில் அணுகுண்டு…
என
பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமே
மதங்களைக் கடந்த மாமனிதர்தான்!

செத்தவரெல்லாம்
உத்தமரென்றால் – அவர்
செய்தது என்ன
கேட்கலாம் தானே?

அப்துல்கலாமின் பங்களிப்பு
நாட்டைக் காப்பற்ற
அணுகுண்டு சோதனை
அடுத்தடுத்து ஏவுகணை! – என
அடுத்தவனை மிரட்டும் அறிவியலில்
அடைந்தது என்ன நாடு?

மீனவரைக் காப்பாற்ற
ஒரு ‘மிசைல்’ உண்டா?
மாணவரின் கழுத்தறுக்கும்
‘அட்மிசன்’ கொள்ளையைய் தகர்க்க
ஒரு அணுகுண்டு உண்டா?
பழங்குடிகளின் காடுகளைப் பிடுங்கும்
வேதாந்தாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ஒரு ஏவுகனை உண்டா?
‘அப்ரைசல்’ எறிகனைக்கு எதிராக
கனவு கானும்
ஐ.டி. ஊழியர்களை காப்பாற்ற
கலாமிடம் ஒரு கருவி உண்டா?

நிலங்களையும், வயல்களையும்
பிடுங்கும்
கார்ப்பரேட் எதிரிகளைத் தாக்க
ஏதேனும் உண்டா கலாமின் கண்டுபிடிப்புகளில்!
இயற்கை வளங்களை கண்டறியும்
செயற்கை கோள்களை தயாரித்து
சுரண்டும் முதலாளிக்கு வழங்கும்
நாட்டை அழிக்கும் வேலைக்கு எதிராக
நடையைக் கட்டியதுண்டா கலாமின் எளிமை!

பச்சை பிள்ளைகளிடம் போய்
மதிப்பீடுகள் பேசிய மாமனிதர்
பாராளுமன்ற உறுப்பினர்களை
கூட்டிவைத்து
‘லஞ்சம் வாங்க மாட்டோம்’ என்று
உறுதிமொழி ஏற்க வைத்ததுண்டா?

விண்ணுக்கு ஏவுகணை வீசிய
வெற்றி வீரர்
கண்ணுக்கு எதிரே இருக்கும்
ஜெயலலிதாவிடம்
கள்ளுண்ணாமை பற்றி பேசி
டாஸ்மாக்கை வீசச் சொன்ன
பேச்சு உண்டா!

தனியார் பள்ளி
மாணவர்களிடம்
உழைப்பு, நேர்மை என
வகுப்பெடுத்த அணுவாளர்
தாளாளரிடம் போய்
கட்டணக் கொள்ளைக்கு எதிராக
கொதித்தெழுந்த காலம் உண்டா!
ஏழ்மையில் பிறந்து
தமிழ்வழி பயின்று
அரசுப்பள்ளியில் படித்துவந்த
அப்துல் கலாம்,
எங்கெனும்
தாய்மொழியில் அரசுப்பள்ளி திறக்கச்சொல்லி
தப்பித்தவறி பேசியதுண்டா?

ஏழையாய் பிறந்தார்
தமிழராய் இறந்தார்
என்பதற்காய் மட்டும்
ஆளும் வர்க்க சேவை நாயகனை
ஏழை வர்க்கத்தினர் முன்னுதாரணமாக
ஏற்க முடியாது,
அவர் என்னவாய் இருந்தார்
யாருக்காய் உழைத்தார்!
என்பதிலிருந்தே அறிதல் வேண்டும்!
இருபத்தியோரு உழைப்பாளிகள்
ஆந்திரக்காட்டில் கரிக்கட்டயாய் கிடந்தபோது
ஓடி வராத கூட்டமெல்லாம்
கலாம் உடலை தேடி வந்த
வர்க்கத்திலிருந்தே
இவர் யாருக்காக வாழ்ந்தார்! புரியவேண்டும்!

உப்புக்காற்றில் பிறந்தவர்
கார்ப்பரேட் கப்புக் காற்றில் கரைந்தார்…
மீன்தோல் தழுவிய நாவினார்
பார்ப்பன பூணுலின்
மான்தோலாக மாறினார்…
ஈழப்படுகொலை, குஜராத் படுகொலை,தலித்துகள் படுகொலை,
எதர்க்கும் வாய் திறவாமல் நாறினார்
ஒடுக்கும் ஆளும் வர்க்க வீணைநரம்பின் சுரமாய் ஏறினார்!

பளிச்சென தெரியும்AbdulKalam
முதலாளி வர்க்க எதிரிகளை விடவும்,
ஆபத்தானவர்கள்
அவர்களை மூடி மறைக்கும்
அப்துல் கலாம்கள்!

புரிந்து கொள் உழைக்கும் வர்க்கமே!
எதர்க்காக உழைக்க வேண்டும்
என்பது மட்டுமல்ல
எதற்க்காக அழ வேண்டும்
என்பதும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்

கண்ணீர்
அன்பின் ஈரமாக
சுரக்க வேண்டுமே ஒழிய,
அறியாமையின்
கோரமாக வழியக் கூடாது!

துரை.சண்முகம்

கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?

9

teaநீங்கள் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை காலை, மதியம், இரவு என ஏதேனும் ஒருவேளையில் கூட குறுக்கும் நெடுக்குமாக சாலையை கடந்து, சைக்கிளில் தேநீர் கொண்டு செல்லும் கணபதியை காணலாம்! பல தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு சுடச்சுட தேநீர் தருவது தான் கணபதியின் வேலை.

வேலைச்சுமையாலும், நிதிச்சுமையாலும் வாழ்க்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு கண நேரமாவது கணபதியின் தேநீர் ஆசுவாசமளிக்கும்.

எங்கள் அலுவலகத்திற்கும் கடந்த ஆறு வருடங்களாக கணபதி தான் தேநீர் தருகிறார்.  மெலிந்த தேகம், ஐந்தே கால் அடி உயரம், நல்ல களையான முகம்.  ஜீன்ஸ் பேண்டை வெட்டி தைத்து முக்கால் காலுக்கு போட்டிருப்பார்.  நானும் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். கணபதிக்கு வயது ஏறுவதேயில்லை.

எனக்கு பால் என்றால் அலர்ஜி. அதனால் பால் கலந்த தேநீர் சாப்பிடுவதில்லை. ஆனால், கணபதி தரும் தேநீர் குடித்தால் பிரச்சனையேயில்லை. அதில் பால் பெயரளவுக்கு தான் இருக்கும்!   பால் விலை கூடினால் உங்களுக்கு பிரச்சனையே கிடையாதுல்ல! என கிண்டல் செய்வேன். ஒரு புன்னகையுடன் கடந்து போய்விடுவார். ஆனால் அவரது தேநீரில் கலந்திருந்த பாலின் பின்னே ஒரு சோகம் இருந்தது எனக்குத் தெரியாது.

ஒருமுறை வார கணக்கை முடிக்கும் பொழுது, வேறு அலுவலகங்களின் கணக்கு அட்டையை அவர் கையில் வைத்திருந்ததை வாங்கிப் பார்த்தேன். ஒரு நிறுவனத்திற்கு தேநீர் விலை 5.50, ஒரு நிறுவனத்திற்கு ரூ. 5.45 என வெவ்வேறு விலைகளில் இருந்தது.  கணபதி கொண்டு வருவது ஒரே தரமான தேநீர் தான். விலை மட்டும் எப்படி வேறுபடுகிறது என குழம்பி போனேன்.

அதற்கு கணபதி ” எந்த முதலாளி சார் நல்ல விலை கொடுத்து, தங்கள் தொழிலாளிக்கு நல்ல தேநீர் வாங்கித் தர தயாரா இருக்காங்க. தேநீர் எந்த தரத்துல இருந்தாலும் விலையை மட்டும் குறைக்கணும்னு தரை ரேட்டுக்கு இறங்கி பேரம் பேசுறாங்க. ஒப்புக்கு வாங்கி கொடுக்கிறாங்க சார்! பால், டீத்தூள், சர்க்கரை எல்லாம் அப்பப்ப விலை கூடிட்டே இருக்கு.  நானும் முடிஞ்ச வரைக்கும் நல்ல தேநீரை கொடுக்க அல்லாடுறேன் சார்’ என்றார்.

Cycle tea 2கணபதியை பற்றி பேச்சு வரும்பொழுதெல்லாம் பல ஊழியர்கள், தொழிலாளிகள், “எனக்கு அவரை 8 வருசமா தெரியும், 12 வருசமா தெரியும்” என்பார்கள். ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். “டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!” என்றார்.  ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.

ஞாயிறன்று வேலை இருந்தால் கூட கணபதி தேநீர் தருவார். ஏழுநாளும் ஓய்வில்லாத வேலை! அப்பொழுதிலிருந்து கணபதியின் கடும் உழைப்பில் உருவாகும் தேநீரில் அவரது செந்நீரும் கலந்திருப்பதாக தோன்றும்.

அப்பப்ப எங்க எம்.டியிடம் எங்கேயாவது ஒரு சின்ன இடம் இருந்தா சொல்லுங்க சார்! என சொல்லிக்கொண்டிருந்தார். ’கணபதி நிறைய பணம் சேர்த்திட்டீங்க போல! இடமெல்லாம் வாங்கி போடுறீங்க!’ என்றேன். ”எத்தனை வருசம் ராவும் பகலும் ஓடிட்டே இருக்கிறது? ஒரு நல்ல கூட்டம் கூடுற இடத்தில தேநீர் கடை ஒன்னு சொந்தமா போடணும். கையில உள்ள பணம் பத்தல! பல வருசம் உழைச்சு, சிறுக சிறுக சேர்த்தது! கையில வைச்சிருந்தா, ஏதாவது செலவு வந்துருது! ஒரு சின்ன இடத்தை வாங்கி போட்டுட்டு, பின்னாடி வித்து கடை போடலாம்னு ஒரு யோசனை” என்றார். ”விரைவில் சொந்த கடை போட வாழ்த்துக்கள்” என்றேன். முகம் மலர ’நன்றி’ என்றார்.

இன்னும் சில தொழிற்சாலைகள் கூடுதலாக கிடைக்க, வேகமாக கொண்டு செல்ல, சைக்கிளிலிருந்து டிவிஎஸ் 50க்கு மாறினார். கணபதிக்கு திருமணம் முடிந்ததை கேள்விப்பட்டு, ’ஏன் சொல்லல கணபதி? என்றேன்.  கொஞ்சம் தடுமாறி, சமாளித்தார். அவருக்கு தெரிஞ்சவுங்கள கூப்புட்டா முழு அம்பத்தூரும் கல்யாணத்துக்கு போக வேண்டியிருக்கும்.

பிறகு நான் அந்த அலுவலகத்தில் வேலையிலிருந்து நின்றுவிட்டேன். 9 மாதம் கழித்து அங்கு சென்ற பொழுது, வேறு ஒருவர் தேநீர் கொண்டு வந்து தந்தார். ” என்ன ஆச்சு? கணபதியை மாத்திட்டீங்களா? என்றேன்.

“இரண்டு மாதங்களுக்கு முன்பு மதியம் 3 மணியளவில் சாலையை கடக்கும் பொழுது, ஒரு வேன் மோதி, தலையில் அடிப்பட்டு ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார், கணபதி அண்ணன்” என்றார் தம்பி. அதிர்ச்சியில் உறைந்து போனேன். கணபதிக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று அம்மாவுடன் இனி ஆதரவின்றி காலம் தள்ள வேண்டும்.

இறந்த நாள் கூட ஒரு ஞாயிற்றுக்கிழமை தானாம்! உடல்நலம், உறவினர் திருமணம், சுற்றுலா, சொந்த ஊர் பயணமென்று நாம் அடிக்கடி விடுமுறை எடுக்கிறோம். கணபதியோ அதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. தேநீர் கொண்டு வரத் தவறினால் அவரையே தவிர்த்து விடுவார்கள். என்றாலும் அவர் விடுமுறையின்றி தேநீர் தருவதை சலிப்புடன் செய்து பார்த்ததில்லை.

tea boyபல அலுவலக ஊழியர்கள், தொழிலாளிகள் தேநீரைக் குடித்து விட்டு அவருடன் பேசுவார்கள். தான் தேநீர் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் இன்று குடிக்க முடியாதே என்று பொறுப்புணர்வோடும் அன்போடும் செய்தபடியால்தான் கணபதி அப்படி கடுமுழைப்பு செய்து வாழ முடிந்தது.

ஆனாலும் கணபதியை நினைத்துப் பார்க்காமல் அம்பத்தூர் தனது வழமையான வேலைகளுக்கு திரும்பி விட்டது. கணபதியை நினைத்துப் பார்க்க அவரொன்றும் அப்துல் கலாமில்லை.

“பிறப்பு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று உலகமெங்கும் பல்வேறு பன்ஞ் முழக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நைந்து போன வாக்கியம்தான் அப்துல் கலாம் நினைவஞ்சலி பேனரில் இடம்பெற்ற இந்த சம்பவம், சரித்திர வகையறா.

அப்துல் கலாமுக்கு அம்பத்தூர் அஞ்சலி செலுத்துவதை ஆடம்பரத்துடன் செய்து முடித்தது. விடுமுறை என்ன, மெழுகுவர்த்தி என்ன, படங்கள் என்ன, சுவரொட்டிகள் என்ன என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பலருக்கு அப்துல் கலாம் யார் என்றே தெரியாது. ஏதோ மற்றவங்க மதிக்கிறாங்க நாமும் மதிச்சு வைப்போமே என்ற போலச் செய்தல்தான்.

ஆனால் தினசரி வாழ்க்கையில் கணபதியைப் போன்றோர் வெறும் சம்பவமாகத்தான் மறைந்து போகிறார்கள். இவர்களின்றி இந்த உலகத்தின் இயக்கம் இல்லை. சாதாரண மனிதர்களின், தொழிலாளிகளின் காலம் ஒன்று வரும் போது கணபதிகள் ஹீரோக்களாக போற்றப்படுவார்கள். அந்த வரலாற்று திருப்பத்திற்காகவேணும் கணபதியை நான் நினைத்துக் கொள்கிறேன்.

கடும் உழைப்பாளியான கணபதிக்கு எனது அஞ்சலிகள்!

– சாக்ரடீஸ்

டாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா – கலந்துரையாடல் வீடியோ

17

tasmac slider vinavuமதுவிலக்கு கோரும் மாணவரின் போராட்டம் குறித்து ஒரு கலந்துரையாடல்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.

மது விலக்கு, போராட்டம், வன்முறை குறித்து விரிவான அலசல்கள். பாருங்கள், பரப்புங்கள்!

எல்லா அயோக்கியரையும் விஞ்சினார் தினமணி வைத்தி

9
dinamani 1
முறிந்த நடை, கூன் கொண்ட பார்வை, அம்மாவுக்கு அடிமைப்பட்ட கோழையின் கூற்று – தினமணி!

ரலாறு கண்ட அயோக்கியர்களை விஞ்சிவிட்டார் தினமணி வைத்தி. கொன்றவனுக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு செத்தவர் மீதே கத்தியைச் செருகும் ஆளைப் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் ( 03-08-15 ) தினமணி தலையங்கத்தில் பார்க்கலாம். ” தன்னை காந்தியவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் செல்லிடைப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும் , தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? சசிபெருமாள்… நடத்திய போராட்டம் அறப்போராட்டமும் அல்ல, காந்திய வழிமுறையும் அல்ல.. சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப்பெரிய சோகம்..” குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு ‘அகிம்சை வழியில்’ போராடிய அம்மாவின் வழிமுறையில் அமைந்த அரசு விளம்பரங்களை வாங்கிக்கொள்ளும் அப்பாடக்கர் ‘காந்தியவாதி’ வைத்தியின் வேத வாக்கியம் இது.

‘வாழும் காந்தி ‘ அம்மா இருக்கட்டும், வைத்தி வறண்டும் காந்தியே கூட அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக “இரட்டை வாக்குரிமை ” கோரிக்கையை முன்னெடுத்த போது எரவாடா சிறையில் ‘சாகும் வரை உண்ணாவிரத’மிருக்க சம்மணம் போட்டவர்தானே ! இப்படி பல ‘சாகும் வரைகளால்… ‘ பிரிட்டிஷ் அரசை வாழவைத்தவர் காந்தி. சசிபெருமாள் கையாண்ட நடைமுறை தன்னை வருத்திக்கொள்வது.

என்ன ! காந்தி உச்சியில் ஏற பிர்லாவின் உதவி கிடைத்தது, பரிதாபம்! சசிபெருமாளுக்கு ஒரே ஒரு செல்லிடப்பேசி கோபுரம்தான் கிடைத்தது. காந்தி தற்கொலைப் பாதைக்கு மிரட்டினால் அகிம்சை ! சசிபெருமாள் உயிரை பணயம் வைத்து தன்னை வருத்திக் கொண்டால் வன்முறையா? தள்ளாடும் தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னுயிர்பாராது களம் புகுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிச் சிதைக்கும் போலீசின் அத்துமீறலை அனைத்து பத்திரிகைகளும் படத்தோடு போட்டு முகத்திரையை கிழிக்கையில் ‘வன்முறை எதிர்ப்பாளர்’ வைத்தி மட்டும் செய்தியை வேண்டா வெறுப்பாய் ‘உள்’ குத்து விட்டு, காக்கிகள் செய்த கொடுமையையும் தனது அகிம்சை அடிக்கட்டில் அமுக்கி விட்டார்.

SASI_PERUMAL
காந்தியவாதி சசி பெருமாளை வன்முறையாளர் என்று சொன்ன ஒரே ஆள் தினமணி வைத்திதான்!

சசிபெருமாள் கோபுரத்தில் ஏறியதையே சகிக்க முடியாத வன்முறையாக வரையறுக்கும் இந்த வாய்ப்பாட்டுக்காரர், போராடும் மாணவக் கழுத்தில் ஏறும் போலீசின் பூட்சை மட்டும் கண்டு கொள்ளாமல் ஒன்பது துவாரங்களிலும் ஊமையாகிக் கிடக்கிறார்.

தமிழகத்தை சாகடிக்கும் மதுவை ஒழிக்கும் கருவியாக சசிபெருமாளின் உடலைப் பயன்படுத்தும் போராட்டக்காரர்களை பார்த்து மட்டும் கச்சம் வரிந்து கட்டி கருவுகிறார், “உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள், இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் என்ற பெயரில் தற்கொலை, தீக்குளிப்பது என்று எல்லோரும் தொடங்கி விட்டால் சட்டம்- ஒழுங்கு என்னவாகும்? நிர்வாகம் எப்படி நடைபெறும் ? ” ( தினமணி- தலையங்கம் ) வைத்தியின் வயித்தெரிச்சல் இது ! உலகமே குடிகார அரசுக்கு எதிராக காறித் துப்பும் வேளையில், அரசின் கருத்துக்கு ஒளியூட்ட ஜெயா டி. வி. க்கு தேடினாலும் கிடைக்காத ஒரே கொள்ளிக்கட்டை இந்தத் தலையங்கம்.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் சட்டையைக் கிழிப்பதும், கட்டையில் அடிப்பதும்தான் சட்டம்-ஒழுங்கா? வைத்தி அளந்து கொட்டும் சட்டப்படியே, கைது செய்ய பிடித்தவர்களை அடிப்பதும், ஆபாசமாய் பேசுவதும் , கல்லால் அடிப்பதும், கழுத்தை நெறிப்பதும் அகிம்சையின் அடையாளங்களா? மயக்கமடைந்த ஒரு மாணவிக்கு உதவி செய்யும் மாணவிகளையும் தடுத்து, அடித்து இழுப்பதுதான் நிர்வாக நடைமுறையா? இந்த பயங்கரவாத நிர்வாகத்துக்காகத்தான் வைத்தியின் வன்மனம் துடிக்கிறதே ஒழியே, தன்னை விட யோக்கியமாய், சமுகப் பொறுப்பாய் செயல்பட்ட மாணவர்கள் வதைபட்டற்காக ஒரு வருத்தமும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது போலீசின் கைகளில் இருந்த முழுக்கல் ‘அகிம்சாமூர்த்தி ‘ வைத்தியின் மூளை!

மதுவை ஒழிக்க பாடுபடுவர்களிடம் வந்து ஒரு ‘நூல்’ பிசகாமல் “நீ அகிம்சாவாதியா? ” என்று அளவு பார்க்கும் இந்த யோக்கியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ” அசோகர் போரை வெறுத்தது தவறு, அர்ச்சுனனுக்கு போர் உபதேசம் செய்த கிருஷ்ணனை போல வாய்ப்பில்லாமல் போயிற்று, அணுகுண்டு வேண்டும்! என்று வல்லரசு வன்முறைக்கு மனதை பிசையும் கட்டுரையை கட்டம் கட்டி பிரசுரிப்பது ஏன்? அமித்ஷாவுக்கும், மோடிக்கும் இந்த பூணூல் அளவு பொருந்துமா? அடிபட்டவனிடம் வந்து அகிம்சை உபதேசம்! அடிப்பவனிடம் போய் கீதா உபதேசம்! இதுதான் அவாளின் ‘தர்மம்’! மாக்யவல்லி, காந்தி , ராஜாஜி என்று சுற்றி வளைப்பதை விட பேசாமல் டாஸ்மாக் கடைக்கு போலீசோடு போய் காவலுக்கு உட்காரலாம் வைத்தி. பின்னே! நிர்வாகத்தை எப்படி நடத்துவது?!

editor
தலித்துக்களுக்கு உருவாக்கப்பட்ட சேரியிலேயே டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டுமாம்! – தினமணி வைத்தியின் விச யோசனை!

போராடும் மக்களிடம் வந்து வன்முறை கூடாது என்று நிபந்தனை விதிக்கும் இந்த நியாயவான், சமூக வன்முறையான மதுவை இறக்கிவிடும் அரசுக்கு மட்டும் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கும் ஆலோசனை என்ன தெரியுமா? ” இலவசத்துக்கு விடுதலை தரவேண்டும், கல்லூரி, பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் அருகிலிருக்கும் மதுக்கடைகளை அகற்றி மெல்ல, மெல்ல ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்துக்கு கடைகளை கொண்டு செல்ல வேண்டும்…”.

ஊருக்கு உள்ளே, வெளியே எங்குமே மதுக்கடைகள் வேண்டாம் என்று தமிழகம் வீறு கொண்டு போராடும் தருணத்தில், நத்தம் விசுவநாதன் பதவிக்கே ஆபத்து வரும் வகையில் அம்மாவுக்கு உடனடி ஆலோசனை வழங்குகிறார் வைத்தி.

” ஊருக்கு வெளியே.. ஒதுக்குபுறத்தில்” முன்பு தாழ்த்தப்பட்டவர்களை வைத்த வர்ண கொடூரம் இப்போது பாட்டிலை மட்டும் வைத்தால் போதும் என்கிறது. “செத்தாலும் விட மாட்டான் புரோகிதன்” என்று பெரியார் எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார். சசிபெருமாள் மரணத்தின் அரசியலை எல்லோரும் மக்களுக்காக விரிவுபடுத்தும் வேளையில், இந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ ஊருக்கு வெளியே.. ஒதுக்குப்புறத்தில்’ என்பது மீண்டும் உழைக்கும் மக்கள் , தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் போதையை ஏற்றுவதைத் தவிர வேறென்ன?

உங்களுக்கு மயிலாப்பூர் ஊர் என்றால், எங்களுக்கு மாங்கொல்லை குடிசைகள்தான் ஊர், உங்களுக்கு திருவல்லிக்கேணி ஊர் என்றால், அயோத்திகுப்பம்தான் எங்கள் ஊர்… உங்களுக்கு புரசைவாக்கம் ஊர் என்றால், எங்களுக்கு புளியந்தோப்பு ஊர்.. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுக்குப்புறத்தில், ஊருக்கு வெளியே உழைக்கும் மக்களின் வசிப்பிடங்கள்.. இதில் எந்த ஊருக்கு வெளியே வைப்பது?

கடை கூடவே கூடாது என்று மக்கள் களம் காணும் இந்தநேரத்தில் .. இப்போதைக்கு இப்படி ‘கடையை வைத்துக்கொள்ளலாம்’ என்று அம்மாவுக்கே யோசனை வழங்குவதை விட ஒரு கொடிய வன்முறை இருக்க முடியுமா? கொள்கைகள் வேறாக இருக்கலாம், ஒரு குடிகாரனின் காலைத்தொட்டு குடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அறுபது வயது சசிபொருமாளையே வன்முறையாளர் என்று வாய்கூசாமல் கூறும் வைத்தியை விட ஒரு வன்முறையாளன் உலகில் உண்டா?

  • துரை.சண்முகம்

மக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்!

1

kovai tasmac police (4)கோவை மாநகரில் சாய்பாபா காலனி மிகவும் பரபரப்பான பகுதிகளுள் ஒன்று. அதில் காலனி ரோட்டை தாண்டி சற்றே இடது புறத்தில் தான் கருணாநிதி நகர் இருக்கிறது. இஸ்லாமிய மக்களும் ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததிய சமூக மக்களும் கணிசமான அளவில் நெருங்கிய நட்போடு வாழும் பகுதிகளுள் இதுவும் ஒன்று.

இந்து மதவெறி இயக்கங்களின் முக்கியப் பகுதியாக ஒரு காலத்தில் இருந்த பகுதி. எஸ்‌டி‌பி‌ஐ போன்ற இயக்கங்களும் ஆங்காங்கே அலுவலகங்கள் திறந்துள்ளன. எனினும் இப்பகுதி மக்களின் வாழ்நிலை என்னவோ தினக்கூலிகளின் சிரமமான நிலையிலேயே இருக்கின்றது.

இந்த மக்களது அதிகாரம் தான் நிறுவப் பட வேண்டும் என்ற நியாயமான ஆசையுடன் தான் கருணாநிதி நகருக்குள் மக்கள் அதிகாரம் சார்பில் “மூடு டாஸ்மாக்கை” பிரச்சாரத்திற்கு சென்றோம்.

பகுதிக்குள் நுழைந்த இருபதாவது நிமிடம் மூன்று உளவுத் துறை போலீசார் வந்து நம்மை மறித்தனர்.

யார் நீங்க…? (தெரியாத மாதிரியே..!)

சார், நாங்க மக்கள் அதிகாரம் என்கிற அமைப்பிலிருந்து வந்திருக்கிறோம். டாஸ்மாக்கை மூட வேண்டும் என மக்களிடம் பிரச்சார இயக்கம் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த மாதிரி கொட்டு (பறை) அடிக்காரதுக்கெல்லாம் அனுமதி வாங்கணும். இது போல பிரச்சாரம் செய்வதற்கும் அனுமதி வாங்கணும், கிளம்புங்க.

சார் பிரச்சாரம் செய்வதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. நாங்க தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.

இப்போ இங்க பிரச்சாரத்துக்கு வந்துருக்கீங்கள்ல, இங்க பொறுப்பாளர் யாருன்னு சொல்லுங்க அவர் போன் நம்பர் சொல்லுங்க

‘ஏன் சார், மைக்கு வெச்சு பேசறதுக்கு தானே அனுமதி வாங்கணும் பறைக்கு வாங்க வேண்டியதில்லையே’ என ஒரு தோழர் கேட்க, ‘இல்ல தம்பி அதுக்கும் வாங்கணும் சட்டத்தில் அனுமதி இருக்கு’, ‘இது மாதிரி கேள்வியெல்லாம் கேட்க கூடாது, சரியா’

‘சரி சார் நாங்க பறை அடிக்கல’ ‘ஆனா, பிரச்சாரம் செய்வோம் அது எங்க உரிமை என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கங்க’

எனக் கூறிவிட்டு வாங்க தோழர் போலாம் என மீண்டும் பகுதிக்குள் நமது வேலையை தொடர்ந்தோம்.

அடுத்து என்ன சொல்லி நம்மை மடக்குவது எனப் புரியாமல் குழம்பியவாறு நின்று கொண்டிருந்தனர். சற்றே பணிந்தால் ஏறி மிரட்டலாம், இவனுக என்ன பேசுனாலும் எதிர்த்துப் பேசுறாங்களே என்று ரத்தினபுரி ஸ்டேசனுக்கு போன் பண்ணிவிட்டார்கள்.

நாம் அடுத்தடுத்து ஒரு நான்கைந்து வீடுகளை தாண்டுவதற்குள் அந்த குறுகலான சந்தில் பேட்ரோல் வண்டி டாடா சுமோ ஒன்றை கொண்டு வந்து நிறுத்தி நம்மைப் பின் தொடர்ந்தவாறே அங்கு பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் நம்மிடம் வந்து மேற்கொண்டு பேசுவதற்கு அவர்கள் யாரும் தயாரில்லை.

அடுத்து, நாம் மக்களிடம் பேசும் போது அருகில் ஒரு போலீஸ் வந்து நிற்பதும் நின்று கொண்டு நம்மையே உற்றுப் பார்ப்பதுமாக நடந்து கொண்டனர். பொது மக்கள் தர்ம சங்கடமான சூழ்நிலைக்குள்ளாக, நாம் பதிலுக்கு பொது மக்களிடம்,

‘பாருங்கம்மா, சாரு வந்து போலீஸ்காரரு. நாங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லி மக்கள் கிட்ட பிரச்சாரம் செய்யறோம். ஆனா, போலீஸ் வந்து எங்களை மிரட்டுது. இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்றாங்க,’ என ஆரம்பிக்க,

அடுத்த வீட்டிலிருந்து மறுபடியும் வண்டிக்கு சென்று விட்டனர்.

அடுத்து செல்லும் வீடுகளுக்கெல்லாம் இடையே இப்படியே பிரச்சாரம் செய்தோம். அடுத்து இன்னொரு ரோந்து வண்டி வந்தது. அதில் தான் யாரோ பெரிய அதிகார வரப்போகிறார் எனப் பார்த்தால், அதிலிருந்து ஒரு எஸ்‌ஐ இறங்கி வந்தார்.

அது போக இதர உளவுப் பிரிவினர் இந்த வாக்குவாதத்தை வீடியோ எடுப்பதில் முனைந்தனர். இந்த மொத்தக் கும்பலும் எங்களை சுற்றி நின்று கொண்டு வாக்கு வாதத்தை துவங்கினர்.

நீங்க மக்களை தூண்டுறீங்க, கேன்வாஸ் பண்ணுறீங்க வன்முறைய தூண்டுறீங்க – டாஸ்மாக் முன்னாடி குழி வெட்டு ஒண்ணுக்கு அடின்னு எல்லாம் போட்ருக்கீங்க

இதுல என்ன சார் வன்முறை…?

தம்பி, இது கவர்மெண்டு கொள்கை. அதனால நீங்க அங்க போயி கேளுங்க.

சார் நூறு மனுக் கொடுத்தாச்சு. நூறு போராட்டம் பண்ணியாச்சு. உயர் நீதி மன்றமே இது அரசாங்கத்தோட கொள்கை முடிவுன்னு சொல்லிருச்சு. இனி எங்க போக சொல்றீங்க…

இல்ல, நீங்க சட்டவிரோதமாக கூடியிருக்கீங்க.

எது சட்டவிரோதம்?

இவர்களிடம் எவ்வளவு நேரம் பேசுவதென்று மக்களிடம் பதில் சொல்லத் துவங்கினோம். போலிசார் நம்மிடம் இது சட்ட விரோதமான கூட்டம் எனக் கூறினால், நாம் மக்களைப் பார்த்து நீங்களே சொல்லுங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லுறது சட்ட விரோதமா…? சொல்லுங்க என பேச வீடுகளுக்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியே வந்து இதனை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டனர். தெருவே திரண்டுவிட்டது. தோழர்களின் பேச்சுக்கள் மக்களுக்கு காவல் துறையின் இயல்பை புரிய வைத்தது. காவல் துறை காமெடி துறை ஆனதை பொறுக்காது உடனே நடவடிக்கையில் இறங்கினர்.

எல்லாம் ஸ்டேசனுக்கு நடங்க, நாங்க உங்களை அரெஸ்ட் பண்றோம்.

‘எதுக்கு அரெஸ்ட் பண்றீங்க, நாங்க என்ன தப்பு பண்ணினோம் நாங்க அரெஸ்ட் ஆக முடியாது’ என்று எதிர்த்து நின்றோம்.

உடனே, நம்மை வலுக்கட்டாயமாக இழுத்து ஜீப்பில் ஏற்ற முயன்றனர். நமது தோழர்கள் உடனே கைகளைக் கோர்த்துக் கொண்டு கைதாக மாட்டோம் என நிற்க, அதே சமயம் சுற்றி நின்றிருந்த மக்களில் சிலர்

‘அந்த பசங்க என்ன தப்பா சொல்லிட்டாங்கன்னு இப்பிடி போட்டு இழுக்கறீங்க…? அவங்க சரியாதான் சொல்றாங்க இங்க டாஸ்மாக்னால நாங்க படுற கஷ்டம் உங்களுக்கென்ன தெரியும்’ எனப் பேசத் துவங்க ஒரு உளவுப் போலிசு உடனே அந்த பெண்ணிடம் சென்று, ‘ஏம்மா, உனக்கு என்னமா தெரியும் போம்மா உள்ள’ என மிரட்டத் துவங்கினார்.

அடுத்தடுத்து சில பெண்களும் நமக்கு ஆதரவாக பேசத் துவங்க, தோழர்கள் மீதிருந்து கையை எடுத்து விட்டு எஸ்‌ஐ உயரதிகாரிக்கு போன் பண்ணப் போய் விட்டார்.

பொது மக்களில் நமக்கு ஆதரவாக பேசிய சிலரிடம் சென்று, ‘அவங்க மாவோயிஸ்டு’ ‘தீவிரவாதி’ என உளவுப் போலிசு கூற நம் தோழர் சத்தமாக ‘பாருங்கம்மா, நாங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லி பிரச்சாரம் பண்றோம் இவரு ஏதோ சம்பந்தமில்லாம மாவோயிஸ்டுனு சொல்லிகிட்டு இருக்காரு’ எனக் கூற மக்களும் ஆமோதித்தனர்.

இளவயது தோழர் ஒருவரிடம் உளவுப் பிரிவு, ஏன் தம்பி படிக்கிற வயசில உனக்கு எதுக்கு இதெல்லாம் என கேட்க, நம் தோழர், ’சார், நான் சின்ன வயசுனாலும் சரி எது தப்பு எதுன்னு பகுத்துப் பார்க்க தெரியும். நான் எல்லாம் தெரிஞ்சு தான் பண்றேன். உங்க வேலை என்னவோ அதை பாருங்க’ எனக் கூறிவிட்டார். “கால் வெக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வெக்கிராணுகளே” என நினைத்து விட்டார் போலும் அந்த உளவுப் பிரிவு தனது பழைய வேலையான வீடியோ எடுக்கும் வேலைக்கே திரும்பி விட்டார்.

தேமே வென வேடிக்கை பார்க்கும் 10 போலீசார் வளைச்சு வளைச்சு வீடியோ எடுக்கும் 5 உளவுப் பிரிவு போலீசார் 2 பேட்ரோல் வண்டிகள் இன்னும் இரண்டு இருசக்கர பேட்ரோல் வண்டிகள் முன்னிலையில் அந்த தெருவே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க அந்தச் சின்ன தெருவில் நாம் மக்களை நோக்கிப் பிரச்சாரத்தை சத்தமாக செய்து கொண்டிருக்கிறோம். இடையில் எஸ்‌ஐ அருகே ஓடி வந்து,

‘இந்தாங்க இந்தாங்க ஏ‌சி சார் பேசுராரு’ என செல்போனை நீட்டினார்.

ஏ‌சி கிட்ட நீங்க பேசுங்க சார், நாங்க எதுக்கு பேசணும்..?, எனக் கேட்க மீண்டும் அவர் போய் விட்டார். அடுத்து, நமது பெண் தோழரை கைது செய்ய இன்னொரு பெண் போலீசை வரவழைத்தனர்.

அந்த பெண் போலீஸ், நம் தோழரையும் இந்த சம்பவங்களையெல்லாம் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் தினசரி நாளிதழ் பெண் நிருபரையும் துணியை பிடித்து இழுத்து மூர்க்கத்தனமாக இழுக்க ஆரம்பித்தார்.

kovai kk nagar tasmac police (4)வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் தங்கள் காம்பவுண்டுக்குள் இழுத்துக் கொண்டு, ‘ஏம்மா, இப்பிடி புடிச்சு இழுக்கறியே, உனக்கெல்லாம் அறிவில்ல நீயும் ஒரு பொம்பள தானா…’ எனக் கேட்க அந்த பெண் போலீஸ் அமைதியாக போய் ஜீப்பருகே நின்று கொண்டார்.

இறுதியாக, மூன்றாவது பேட்ரோல் வண்டியில் வந்த ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சூழலின் மனநிலை என்னவென அவதானிக்காமலே கூட்டமாக இருப்பதைப் பார்த்துவிட்டு வேனுக்குள் இருந்தவாறே மைக்கில்

‘இந்த இடத்தில் சட்டவிரோதமாக கூடியிருக்கிறீர்கள், எல்லோரும் உடனே கலைந்து போங்க’ என அறிவித்தார்.

நம் தோழர்கள் மீண்டும் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டே சத்தமாக, ‘பாருங்கம்மா, பாருங்கையா இத்தனை நாளா நீங்க நின்னுக்கிட்டும் பேசிக்கிட்டும் இருந்த உங்க வீட்டு வாசலிலே நீங்க நிற்பது சட்ட விரோதம்னு போலீஸ் சொல்லுது, ஏன் அப்பிடி சொல்லுது ஏன்னா, டாஸ்மாக்கை மூடணும்னு சொல்றது நாம தானே, அப்ப போலீஸ் யாருக்கு சப்போர்ட்டு டாஸ்மாக்குக்கா மக்களுக்கா’ எனப் பேசத் துவங்க இன்ஸ்பெக்டர் உடனே வண்டியில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.

‘நீங்க அனுமதி வாங்கிட்டு தான் இது போலச் செய்யனும் அனுமதி வாங்காமா செய்யுறீங்க‘

‘எங்க கிட்ட அனுமதி வாங்கிட்டா டாஸ்மாக் வெச்சிங்க..? இவ்வளவு நேரம் இங்க என்ன நடந்துதுன்னே தெரியாம மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கறீங்க’

‘இல்லைங்க, நீங்க எழுதிக் குடுங்க., நானே கூட இருந்து உங்களுக்கு அனுமதி வாங்கித் தரேன்’ சொல்லுங்க நாளைக்கு காலைல எப்பவாறீங்க சொல்லுங்க உங்க கூடயே ஸ்டேசனுக்கு நானும் வரேன் உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி நானே வாங்கித் தாரேன் சரியா தோழர்’ என பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்.

அதற்குள் பகுதிப் பெண்கள் சிலர் இன்ஸ்பெக்டரிடம், ‘உங்க கூட இருந்த பொம்பள போலீசு அந்த பெண்ணைப் போட்டு அப்பிடி இழுக்குது, துணியெல்லாம் வெளிய தெரிய போட்டு வெரு வெருன்னு இழுக்குது இதுக்கு அந்த பெண் போலீசு மன்னிப்பு கேட்கணும்’ எனக் கோரிக்கை வைத்தனர்.

‘எல்லார் சார்பிலேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்’ எனக் கூறி பிரச்சினையை எப்படியாவது காவல் துறைக்கு சாதகமாக மாற்ற இன்ஸ்பெக்டர் சாந்தமான முறையில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

இறுதியில் ‘பறையெல்லாம் அடிக்க வேண்டாம் சும்மாவே பேசுங்க’ என அவர் கூற, கண்டுகொள்ளாமல் பறையை முழங்க விட்டு, சத்தமாக அறிவித்தோம். பிரச்சாரம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை காவல் துறை எப்படியெல்லாம் அணுகியது காவல் துறை யாருக்கு சாதகமாக இருக்கிறது என்றும் மீண்டும் டாஸ்மாக்கை மூடும் வரை பிரச்சாரம் செய்வோம் என்றும் அறிவித்து விட்டு கலைந்தோம்.

அந்த தெரு முழுவதும் இருக்கும் மக்கள் அனைவரும் வெளியே நின்று நம்மை வழியனுப்பினர். ‘மீண்டும் கட்டாயம் வாங்க, நாளைக்கு வரும்போது பகலிலே வராதீங்க, நாங்கல்லாம் வேலைக்கு போயிருவோம். சாயங்காலமா வாங்க..!’ என மக்கள் கூறினார்கள். பகுதியில் இருந்த பல்வேறு கட்சியினரும் தோழர்களை வாழ்த்தினர்.

டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமல்ல, டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுப்பதும் போலிசின் கடமை போலிருக்கிறது. ஆனாலும் என்ன? அடுத்த நாள் காலையில் கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடை மக்கள் அதிகாரம் தோழர்களால் நொறுக்கி மூடப்பட்டது. இந்த முறை கடை நொறுக்கும் போது போலிசு இல்லை. ஆனால் போலிசு வரும் வரை தோழர்கள் இருந்தார்கள் – கைது செய்யப்படுவதற்கு!

இன்று பிரச்சாரத்தை முடக்க நினைத்த போலீசின் அடக்குமுறையை முறியடித்த மக்கள் இறுதியில் அதிகாரத்தையும் கையில் எடுப்பார்கள்.

kovai pp tasmac (7)
கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம்

போலீசின் உடம்பில் ஓடுவது சாராயம் !

5

மக்கள் அதிகாரமே வெல்லும்!

pachayappa students rsyf (6)போராடும் மாணவரை
ஒரு புழுவைப் போல் மிதிப்பதா?
தீராத புழுக்கத்தை தீர்க்க
வாராது வந்த மாணவக் காற்றை
வன் குருதியிலே நனைப்பதா!
போலீசின் அராஜகத்தை
பொது மக்கள் சகிப்பதா?

மாணவர் மேல் விழுந்த அடி
இந்த மாநிலம் மேல் விழுந்த அடி!
காவியங்கள் முடிவதில்லை…
கண்ணகி மதுரையை எரித்தது
சிலபதிகாரம் – எங்கள்
கண்மணிகள் மதுக்கடையை எரிப்பது
மக்கள் அதிகாரம்!

போராடும் தமிழகமே
நம் உதிரக்கொடியை உயர்த்திப்பிடி!

குடிமக்கள் சொல்கிறோம்pachayappa students rsyf (5)
குடி வேண்டாமென்று!
எதற்குத் திறக்கிறாய்
மதுக்கடையை?
மக்களின் கருத்தை
மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா!

பச்சையப்பன் கல்லூரி
மாணவர் உடம்பில் வழியும் ரத்தம்
உலகுக்கே உணர்த்துகிறது
இது குடியாட்சி அல்ல
பச்சையான தடியாட்சி!

ஊருக்கே தெரிந்துவிட்டது
போராடுவனின்
உடம்பில் ஓடுவது ரத்தம்.
போலீசின் உடம்பில் ஓடுவது
சாராயம்.

படிக்கும் மாணவரைப் பிடித்து
சட்டையைக் கிழிப்பதும்
துடிக்கும் இளம் மாணவனின்
குரல் வளையை நெறிப்பதும்,
கிடக்கும் மாணவியரை
பூட்ஸ் காலால் உதைப்பதும்,
வளைத்து இளம் தளிரை
முகத்தில் குத்துவதும்,
இந்த வெறியாட்டத்திற்குப் பெயர்தான்
சட்டம் – ஒழுங்கு!

pachayappa students rsyf (1)எம் செல்வங்கள்
செய்த தவறென்ன?
உயிர் குடிக்கும் பாட்டிலை
உடைப்பது வன்முறை என்றால்,
மக்கள் உயிர்காக்கும் மாணவரை
கல்லால் அடிப்பதும்
பாட்டிலால் அடிப்பதும்
பயங்கரவாதம் இல்லையா?

மயங்கி விழுந்த மாணவிக்கு
தண்ணீர் கொடுக்கும்
மாணவிகளையும் தடுத்து
அடித்து இழுப்பது
போலீசின்
மனிதாபிமான பயிற்சிக்கு
ஒரு மாதிரி!

மதுவை எதிர்க்கும்
மாணவ – இளைஞர்களை
கொலைவெறியோடு தாக்கும்
சீருடை அணிந்த சாராய ரவுடிகள்
செம்மரம் கடத்திய
டி.எஸ். பி. மீது
இவ்வளவு மும்முரம் காட்ட வில்லையே!
குற்றக் கும்பலுக்கு பாதுகாப்பு
குடியை எதிப்பவனுக்கு தடியடி….
இதுதாண்டா போலீசு – என
எடுத்துக் காட்டுகிறது அரசு!

pachayappa students rsyf (3)இங்கே மட்டுமல்ல,
குடிதண்ணிர் கேட்டால் தடியடி…
மணல் கொள்ளை தடுத்தால் தடியடி…
கல்விக் கொள்ளை தடுத்தால் தடியடி….
போலீசு ஆளும் வர்க்கத்தின் மிதியடி
புரிந்து கொள்வோம்
மக்கள் அதிகாரம் ஒன்றே பதிலடி!

துரை. சண்முகம்.  

கிளிசரின் வெட்கப்படுகிறது !

4

ழகின் உயிர்ப்பு கண் என்றால்
உணர்ச்சியின் துடிப்பு கண்ணீர்…

கண்ணீர் எனப்படுவது
இரண்டு வகைப்படும்.

செந்நீரை பறிகொடுத்தும்
கண்ணீரை பரிதவித்தும்
சோகத்தில் குடியிருக்கும் மாந்தருக்கு
காலந்தோறும் உடனோடும் ஜீவநதி
கண்ணீர்…

வேடிக்கை பார்ப்போர்
அழுதாலொழிய
வேஷம் கட்டியோருக்கு
வயிறு நிரம்பாது!
அந்தக் கூத்தாடிகள்
பிதுக்கும் கண்ணீர்
ஒரு நடிப்புக் கலை!

சினிமாவில்
கண்ணீர் அருவியை
திறக்கும்
மந்திரப் பொருள்
கிளிசரின்.

பிகினி காலத்து
மாடல் பொம்மைகளுக்கு
கிளிசரின்கள்
டன் கணக்கில் தேவைப்படும்.

கிளிசிரினுக்கு
செலவு வைக்காமல்
கண்ணை குழாயென
திறந்து விடும்
பீம்சிங் காலத்து
கதை மாந்தர்களும்
ஒரு காலத்தில் இருந்தார்கள்.

ஆனால் நண்பா,

சோகத்தோடு சங்கிலி போட்ட
உழைக்கும் மக்களின் கண்ணீரோ
வேடத்திற்காக மை போட்ட
நடிகர்களின் மேக்கப் கண்ணீரோ
மட்டும் கண்ணீர் அல்ல!

புரட்சிக்கு புது ரூட்டு போட்டு
தலைவன் ஆண்ட
தலைவி ஆளும்
மண்ணில்
மற்றுமொரு கண்ணீர் உண்டு.

இவர்கள் ஏழைகளில்லை.
ஆனால் ஏழைகள்தான் இவர்களது மூலதனம்.
இவர்கள் நடிகர்களில்லை.
ஆனால் நடிப்புதான் இவர்களது சுபாவம்.

கிளிசரின் வாங்காமலே
கூத்துப் பட்டறை பயிற்சி இல்லாமலே
கேமரா கோணம் அறியாமலே
அழுகிறார்கள்…..அழுகிறார்கள்…..அழுகிறார்கள்….

எப்படிச் சாத்தியமிது?

புரட்சித் தலைவி
வரும் பாதையில்
கட்டவுட்கள் வைத்தார்கள்.
அவை காலாவதியாகி
பிளக்ஸ் பேனர்கள் வந்தன.
பிறகு தொலைக்காட்சி விளம்பரங்கள்….

துட்டை இறைத்து
காக்காய்களை காட்சிப்படுத்தும்
இந்த ஜோடனைகளெல்லாம்
அம்மாவின் அருளை
பெற்றுத் தர போதுமானதா?

இது குறித்து அவர்களுக்கு
யாரும் பாடம் எடுக்கவில்லை.

குனிந்தார்கள், வளைந்தார்கள்,
தொழுதார்கள், வாய் மூடீனார்கள்,

ஆயினும்,

ஊழல் திருட்டுக்காக
தலைவி சிறை சென்ற போது
முதன் முறையாக
அவர்கள் அதிகம் பயன்படுத்தியிராத
அழுகைக்கு வேலை வந்தது.

கவனியுங்கள் நண்பர்களே,

குறுகிய காலத்தில்
எங்கு அழ வேண்டும்?
எப்பொழுது அழ வேண்டும்?
எத்தனை லிட்டர் அழ வேண்டும்?
அழுதார்கள்,
அழுது காட்டினார்கள்.

சேக்ஸ்பியர் நாடக மைந்தர்களோ
செவாலியர் விருதுக் கலைஞர்களோ
ஒரு போதும்
நிகழ்த்த முடியாத அழுகை இது.

இந்த அழுகையின்
இரகசியம் அடிமைத்தனம்!
இந்த அழுகையின்
வெகுமானம் அமைச்சர் பதவி!
இந்த அழுகையின்
காப்புரிமை புரட்சித் தலைவி!

JAYA-OATH-WEEPING-ALL 650 pix

– காளமேகம் அண்ணாச்சி

யார் செத்தா என்ன இது அம்மா டாஸ்மாக்குடா : கேலிச்சித்திரம்

3

amma.cartoon -vinavu 700 pix

கேலிச்சித்திரம் – ஓவியர் முகிலன்

sasi perumal plf poster

சிறுகதை : எங்கள் பிதாவே

4

“… எங்கள் பிதாவே”

“எனக்குத் தூக்கம் வருது, குளிருது.”

women-children“அட கடவுளே! எனக்குந் தான் தூக்கம் வருது. ஊம், உடை மாட்டிக்கொள். தொப்பியைப் போட்டுக்கொள். கம்பளிக் காலணிகளை அணிந்துகொள். கையுறைகள் எங்கே? அசையாமல் நில். நெளியாதே.”

பையன் உடை அணிந்துகொண்டதும், அவனது கையைப் பிடித்துக்கொண்டாள். இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பினார்கள். பையனுக்கு இன்னும் முழுவதும் விழிப்பு வரவில்லை. அவனுக்கு நான்கு வயது. நடக்கையில் நடுங்குவதும் இடறுவதுமாக இருந்தான். பொழுது அப்போதுதான் புலரத் தொடங்கியிருந்தது. கூதல் நிறைந்த வெளிர் நீல மூடுபனி வெளியில் அடர்ந்திருந்தது. தன் பையனின் கழுத்தைச் சுற்றி லேஞ்சியை இன்னும் இறுகக் கட்டி காலரை நிமிர்த்துவிட்டாள், தூங்கி வழியும், முரண்டு ததும்பும் முகத்தில் முத்தமிட்டாள்.

உடைந்த கண்ணாடிகள் கொண்ட வெளித் தாழ்வாரத்தின் மரச் சட்டங்களில் தொங்கிய காட்டு முந்திரி கொடியின் உலர்ந்த தண்டுகள் கடும் பனியின் காரணமாகச் சர்க்கரையால் ஆனவைப் போலத் தோற்றமளித்தன. குளிரோ உறை மட்டத்துக்கு இருபத்தைந்து டிகிரி கீழே இருந்தது. அவர்களது வாய்களிலிருந்து அடர் ஆவி வெளிவந்து. முற்றத்தில் கழிவு நீர் கண்ணாடியாய் உறைந்து கிடந்தது.

“அம்மா, நாம் எங்கே போறோம்?”

“அதுதான் சொன்னேனே: உலாவப் போறோம்.”

“அப்படியானால் பெட்டி எதற்கு?”

“வேண்டும், அதனால்தான். சும்மா இரு. பேசாதே. வாயை மூடிக்கொள். இல்லாவிட்டால் தடுமல் பிடித்துக் கொள்ளும். குளிர் எப்படியிருக்கிறது, பார்த்தாயா. தரையைப் பார்த்து நட. இல்லையோ, வழுக்கி விழுந்துவிடுவாய்.”

வெளி வாயிலின் அருகே காவலாளி ஆட்டுத்தோல் கோட்டும் வெள்ளை ஏப்ரனும் அணிந்து, ஏப்ரன் மார்பில் உலோகப் பட்டயம் துலங்க நின்றுகொண்டிருந்தான். அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து சென்றாள். அவர்கள் வெளியேறியதும் அவன் பக்கக்கதவை மௌனமாகச் சாத்தி, பெரிய இரும்புத் தாழ் இட்டான். அவர்கள் தெருவோடு நடந்தார்கள். தரையில் வெண்பனி இல்லை. நாற்புறமும் பனிக்கட்டியும் ஊசிமுனை பனியும் மட்டுமே இருந்தன. பனிக்கட்டியோ ஊசிமுனைப் பனியோ இல்லாத இடங்களில் மழுமழுப்பான கற்கள் அல்லது கற்கள் போன்றே மழுமழுவென்று கடினமாயிருந்த மண் தரை தென்பட்டன. இலைகள் அற்ற மொட்டைக் கருவேல மரங்களின் அடியே அவர்கள் நடந்தார்கள். கடுங்குளிரில் இழுவிசையுடன் அம்மரங்கள் சடசடத்தன.

தாயும் மகனும் அநேகமாக ஒரே மாதிரி உடை அணிந்திருந்தார்கள். ஓரளவு நல்ல, செயற்கை மென்மயிர்க் கோட்டுகளும் நமுதா காலணிகளும் பலநிறக் கம்பளிக் கையுறைகளும் அணிந்திருந்தார்கள். ஒரே வித்தியாசம், தாயார் கட்டம் போட்ட கம்பளிக் குட்டையைத் தலையில் கட்டியிருந்தாள், மகனோ காதுமூடிகள் உள்ள வட்ட மென்மயிர்த்தோல் தொப்பி அணிந்திருந்தான். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. நாற்சந்தியை அவர்கள் அடைந்ததும் அங்கு பொருத்தியிருந்த ஒலிபெருக்கி உரக்கச்சீறவே தாய் திடுக்கிட்டாள். மறு கணமே, இது வானொலியின் காலை நிகழ்ச்சித் தொடக்கம் என்று ஊகித்துக்கொண்டாள். வழக்கம் போலவே சேவலின் கூவலுடன் தொடங்கியது வானொலி நிகழ்ச்சி. சேவலின் மிக உரத்த கூவல் தெருக் கோடிவரை ஒலித்து, புது நாளின் ஆரம்பத்தை அறிவித்தது. சிறுவன் ஒலிபெருக்கிப் பெட்டியை நிமிர்ந்து நோக்கினான்.

“அம்மா, இதென்ன, சேவலா?”

“ஆமாம், குழந்தாய்.”

“சேவலுக்கு அங்கே குளிராதா, அம்மா?”

“இல்லை. கொஞ்சங்கூடக் குளிராது. இழுக்காதே, தரையைப் பார்த்து நட.”

பின்பு ஒலிபெருக்கி இன்னொரு முறை சீறியது. அதைத் தொடர்ந்து ஒரு குழந்தையின் மென் குரல், “காலை வணக்கம்! காலை வணக்கம்! காலை வணக்கம்!” என்று தெய்வீக நயத்துடன் மூன்று முறை கூறியது.

அப்புறம் அதே குரல் ருமேனிய மொழியில் நிதானமும் பயபக்தியுமாக கர்த்தரின் செபத்தைப் படித்து:

“பரமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே! தெய்விகம் பொலிக நின் திரு நாமம். நினது அரசாட்சி நிலவுவதாக. நினது சித்தமே நிறைவேறுவதாக…”

jewish-womenதெரு மூலையில் அந்தப் பெண் காற்றின் போக்கிலிருந்து திரும்பி, சிறுவனைத் தன்னோடு இழுத்துக் கொண்டு, சந்து வழியாக அநேகமாக ஓடினாள் – ஒலி பெருக்கியிலிருந்து வந்த மிகவும் உரத்த, மிக மென்மையான குரல் தன்னை விரட்டிக்கொண்டு தொடர்வது போல. விரைவில் குரல் அடங்கிவிட்டது. செபம் முடிந்து விட்டது. தெருவின் பனிப்பாதை வழியே கடற்காற்று வீசியது. முன்னே, செம் மூடுபனி சூழ்ந்த நெகிடி நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகே குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் ஜெர்மானிய ரோந்துக்காரர்கள். அதைக் கண்ட அவள் திரும்பி வேறு திசையில் நடந்தாள். கம்பளிக் காலணிகளுடன் அவள் அருகே ஓடி வந்தான் சிறுவன். அவன் கன்னங்கள் கொவ்வையாய் கன்றிச் சிவந்திருந்தன. மூக்கின் அடியில் பனியாலுறைந்த துளி ஒன்று தொங்கியது.

“அம்மா, நாம் உலாவுகிறோமா?” என வினவினான் சிறுவன்.

“ஆமாம். உலவுகிறோம்.”

“இவ்வளவு வேகமாக உலாவ எனக்குப் பிடிக்கவில்லை.”

“பொறுத்துக்கொள்.”

இரு வாயில்கள் கொண்ட முற்றம் ஒன்றினுள் புகுந்து அவர்கள் வேறொரு தெருவை அடைந்தார்கள். கிழக்கு வெளுக்கத் தொடங்கிவிட்டது. வெண் நீல மேகங்களுக்கும் குளிர்பனி மூட்டத்துக்கும் இடையே மெல்லிய ரோஜா வானம் உதய ஒளி காட்டியது. அதன் இளஞ் செந்நிறத்திலிருந்து வெளிப்பட்ட கடுங்குளிரினால் தாடைகள் ஒட்டி கொண்டன. தெருவில் ஆள் நடமாட்டம் தொடங்கி இருந்தது. எல்லாரும் ஒரே திக்கில் சென்று கொண்டிருந்தார்கள். அநேகமாக அனைவருமே சாமான்களைச் சுமந்து சென்றார்கள். சிலர் கைவண்டிகளைத் தள்ளியவாறு நடந்தர்கள். வேறு சிலர் சுமை நிறைந்த ஸ்லெட்ஜூகளை இழுத்துச் சென்றார்கள். சாலையின் பனிபடியாத இடங்களை ஸ்லெட்ஜ் அடிகள் தேய்த்தன.

அன்று காலை நகரின் எல்லா மூலைகளிலுமிருந்து மக்கள் சுமைகளுடன் ஒரே திசை நோக்கி மெல்ல ஊர்ந்த வண்ணமாயிருந்தார்கள். இவர்கள் யூதர்கள். ‘கெட்டோ’ எனப்படும் யூதர் முகாமுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். ‘கெட்டோ’ அமைக்கப்பட்டிருந்த பெரேஸீப் என்னும் இடம் நகரின் ஆளரவம் அற்ற, தாழ்நிலப் பகுதி. எரிந்து போன எண்ணெய் டாங்கிகள் கடல் மட்டத்திற்குச் சரியாக நாடோடி சர்க்கஸ் கூடாரங்களை ஒத்த தோற்றத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தன. பாசிஸ்டுகள் அழுக்கடைந்த சில பகுதிகளை வளைத்து, துருப்பிடித்த முள்கம்பிகளின் இரட்டை வரிசைகளால் வேலி போட்டு, அதில் எலிப்பொறி போன்று ஒரே வாயில் அமைத்திருந்தார்கள். யூதர்கள் இருப்புப் பாதைப் பாலங்களின் அடி வழியாகச் சென்றார்கள். பனிப்பாளம் இறைந்த நடைபாதைகளில் வழுக்கினார்கள். நடக்க மாட்டாத தொண்டு கிழவர்களும் டைபாய்டு நோய் கொண்டவர்களும் அவர்களில் இருந்தார்கள். இவர்கள் தூக்கு படுக்கைகளில் எடுத்துச் செல்லப் பட்டார்கள். சிலர் நடக்கையில் விழுந்தவர்கள், எழுந்து நடக்கத் திராணியின்றி, விளக்குக் கம்பங்களில் சாய்ந்தவாறோ, தெருவோரமாக நட்டிருந்த இரும்புக் கால்களைப் பற்றிக் கொண்டோ கிடந்தார்கள். யூதர்களுடன் யாரும் வரவில்லை. அவர்கள் காவலர் எவரும் இன்றித் தாமாகவே நடந்தார்கள். வீடுகளில் தங்கியிருப்பவர்கள் சுடப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் கிளம்பிச் சென்றார்கள்.

womenயூதர்களை மறைத்துவைப்பவர்களுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. மறைத்துவைக்கப்பட்ட ஒரு யூதனுக்காக, அந்த வீட்டில் உள்ள எல்லாரும் ஒருவர் பாக்கியில்லாமல் கொல்லப்படுவார்கள் என்பது உத்தரவு. எனவே நகரின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், இருப்புப் பாதைப் பாலங்களின் அடியேயும், கைவண்டிகளைத் தள்ளிக்கொண்டும் இறுகப் போர்த்து மூடிய குழந்தைகளைக் கைபிடித்து அழைத்துக் கொண்டும் ‘கெட்டோ’வை நோக்கி நடந்தார்கள். ஊசி போன்ற பனி மூடிய மரங்களுக்கும் வீடுகளுக்கும் இடையே அவர்கள் எறும்புகள் போன்று ஒருவர் பின் ஒருவராகச் சென்றார்கள். அவர்கள் பூட்டிய கதவுகளையும் வாயில்களையும் கடந்து, புகையும் நெகிடி நெருப்புக்களைக் கடந்து ஏகினார்கள். இந்த நெகிடிகளின் அருகே ஜெர்மானிய, ருமேனியப் படைவீரர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். யூதர்களைக் கவனிக்காமலே, கால்களைத் தொப்புத் தொப்பென்று அடிப்பதும் கையுறைகளால் காதுகளைத் தேய்த்துச் சூடேற்றிக்கொள்வதுமாகக் குளிர்காய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

பயங்கரக் குளிர். வடபகுதி நகரங்களில்கூட இத்தகைய குளிர் கடுமையானதாகவே கருதப்பட்டிருக்கும். ஒதேஸ்ஸா நகருக்கோ இது நம்ப முடியாத விந்தை நிகழ்ச்சி. இம்மாதிரிக் குளிர் ஒதேஸ்ஸாவில் முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அடிப்பது வழக்கம். வெண்ணீலமும் கருநீலமும் பசுமையுமாகக் குமைந்த ஆவிப் படலங்களின் வழியே கதிரவனின் சிறு வட்டம் மங்கலாக ஒளிர்ந்தது. பறக்கும் போதே குளிர் தாக்கியதால் இறந்த குருவிகள் பாதையில் விழுந்து கிடந்தன. தொடுவானம் வரை வெள்ளை வெளேரென்று கடல் உறைந்திருந்தது. காற்று அங்கிருந்து வீசியது.

இவளோ பார்வைக்கு ருஷ்யப் பெண் போன்று காணப்பட்டாள். சிறுவனின் தகப்பன் ருஷ்யன் போலத் தோற்றமளித்தான். சிறுவனின் தகப்பன் ருஷ்யன்தான். எனினும் இதனால் ஒன்றும் பயனில்லை. அவன் தாய் யூதப் பென். ஆகவே ‘கெட்டோ’ செல்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. சிறுவனின் தந்தை செஞ்சேனையில் அதிகாரி. இவளோ தனது பாஸ்போர்ட்டைக் கிழித்து, அன்று காலை கழிவறைக் குழாயில் எறிந்துவிட்டாள். இந்தச் சந்தடி எல்லாம் ஓய்ந்துபோகும் வரை நகரில் அலைந்து திரிவது என்ற தீர்மானத்துடன் தன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள். எப்படியாவது சமாளிக்கலாம் என்று நினைத்தாள். ‘கெட்டோ’ செல்வது அறிவீனம். அது நிச்சயமான சாவைக் குறித்தது. ஆகவே அதிக மக்கள் நடமாட்டமுள்ள வீதிகளிலிருந்து ஒதுங்கிச் செல்ல முயன்றவாறு மகனுடன் நகரில் சுற்றி அலைந்தாள். தாங்கள் உலாவுவதாக ஆரம்பத்தில் எண்ணிய சிறுவன் அமைதியாக இருந்தான். ஆனால் விரைவிலேயே அவன் முரண்டு பண்ணத் தொடங்கினான்.

“அம்மா, நாம் ஓயாமல் நடக்கிறோமே, ஏன்?”

“நாம் உலாவுகிறோம்.”

“இவ்வளவு வேகமாக நாம் ஒருபோதும் உலாவியது கிடையாதே. நான் களைத்து விட்டேன்.”

“பொறுத்துக்கொள், மகனே. நானுந்தான் களைத்துவிட்டேன். நான் முரண்டு பண்ணுகிறேனா?”

Budapest, Festnahme von Judenதான் உண்மையிலேயே மிக விரைவாக, யாரோ தன்னை விரட்டிக் கொண்டு வருவதுபோல, நடப்பதை அவள் கவனித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினாள். தாயை நிமிர்ந்து பார்த்த சிறுவன், அவள் அடையாளம் தெரியாதபடி மாறிப் போயிருப்பதைக் கண்டான். கடித்துக் கடித்தது வீங்கியிருந்த உதடுகளையும், சால்வைக்கு வெளியே அலங்கோலமாக நீட்டிக் கொண்டிருந்த, பனியால் வெளிறிய கூந்தல் புரிகளையும், கூர்த்த பாவைகள் கொண்ட அசைவற்ற கண்ணாடிக் கண்களையும் திகிலுடன் நோக்கினான். பொம்மை மிருகங்களில் இத்தகைய விழிகளை அவன் பார்த்ததுண்டு. அவள் கடிகாரத்தைப் பார்த்தாளே தவிர அவனை நோக்கவே இல்லை. குழந்தையின் சின்னக் கையை இறுகப் பிடித்துத் தன்னோடு இழுத்துச் சென்றாள். பையன் கலவரமடைந்து அழ ஆரம்பித்தான்.

“வீட்டுக்குப் போவோம். எனக்குப் பசிக்கிது…”

சிறுவனை ஓர் அருந்தகத்திற்குத் தாய் அழைத்துப் போனான். ஆனால் நாய்த்தோல் காலர்கள் வைத்த அகன்ற மேலங்கிகள் அணிந்த ருமேனிய போலீஸ்காரர்கள் அங்கே உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவளிடமோ தஸ்தாவேஜூகள் எவையும் இல்லை. ஆகவே, தன்னைக் கைது செய்து ‘கெட்டோ’வுக்கு அனுப்பிவிடுவார்களோ என்று அவள் அஞ்சினாள். ஆகவே ஏதோ தவறுதலாக நுழைந்துவிட்டது போன்று பாவனை செய்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டு, மணிகள் பூட்டிய கதவைப் படாரென அறைந்து சாத்தினாள். சிறுவன் ஒன்றுமே புரியாமல் அவள் பின்னே ஓடியவாறே அழலானான்.

அடுத்த அருந்தகத்தில் ஒருவரும் இல்லை. குதிரை லாடம் பதித்த அதன் நிலைவாயிலுக்குள் நிம்மதியுடன் புகுந்தார்கள். மகனுக்கு ஒரு புட்டி தயிரும் வட்ட ரொட்டியும் வாங்கித் தந்தாள். இறுக்கமாக உடையணிந்த சிறுவன் உயர்ந்த முக்காலியில் அமர்ந்து தனக்கு மிகப் பிடித்த தயிரைக் குடித்து ரொட்டியைத் தின்பதில் முனைந்தான். அவளோ மேற்கொண்டு என்ன செய்வது என்று பதைபதைப்புடன் யோசிக்கலானாள். எதுவுமே அவள் மூளையில் உதிக்கவில்லை. அருந்தகத்தில் இரும்புக் கணப்பு எரிந்து கொண்டிருந்தது. அதனருகே சென்று குளிர்காய வாய்ப்பாயிருந்தது. குளிர்காய்கையில் கடைக்காரி தன்னை மட்டுமீறிய கவனத்துடன் நோட்டமிடுவதாக அவளுக்குப் பட்டது. அவள் அவசர அவசரமாகக் கணக்கை முடித்தாள்.

கடைக்காரி சன்னல் வழியே கலவரத்துடன் பார்த்துவிட்டு இன்னும் சற்று நேரம் கணப்பருகே அமர்ந்து கதகதப்பு உண்டாக்கிக்கொண்டு போகும்படி அவர்களிடம் சொன்னாள். கணப்பு செஞ்சூடாகத் தகதகத்தது. கருமையோடிய கொவ்வைச் சிவப்பாக ஒளிர்ந்த அதன் மீது பொறிகள் பறந்தன. அதன் வெம்மை சிறுவனை அயர்த்தியது. அவன் கண்கள் செருகிக்கொள்ளலாயின. ஆனால் அவன் தாய்க்கு நிற்க நேரமில்லை. கடைக்காரிக்கு நன்றி தெரிவித்து, அவசரமாயிருப்பதாகச் சொன்னாள். இருந்த போதிலும் அவர்கள் அங்கே சுமார் ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தார்கள்.

வயிறார உண்டு, தூக்க மயக்கத்தில் சொக்கிய சிறுவன் நிற்க அரும்பாடுபட்டான். அவள் அவன் தோள்களைக் குலுக்கி, காலரைச் சரிப்படுத்தி இறுக்கி, வாயிற் பக்கம் மெல்லத் தள்ளினாள். பையனோ நிலையில் பதித்திருந்த குதிரை லாடத்தில் தடுக்கிக் கொண்டான். பின்பு அவன், தாயார் தன் கையைப் பிடித்துக்கொண்டு விட்டான். அவள் மீண்டும் அவனை அழைத்துக்கொண்டு தெருவில் நடந்தாள். முதிர்ந்த பிளேன் மரங்கள் சாலையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்தன. பனி படிந்த பட்டைகள் கொண்ட அவற்றின் மென்மையான அடிமரங்களின் அருகாக அவர்கள் சென்றார்கள். பனிக்கட்டிபோல் குளிர்ந்த காற்றில் உடல் நடுங்க, “எனக்குத் தூக்கம் வருது” என்றான் சிறுவன்.

அது தன் காதில் படாதது போல அவள் நடித்தாள். தங்களது நிலைமை புகலற்றது என்பதை அவள் அறிந்திருந்தாள். நகரில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அநேகமாக எவரும் இல்லை. போருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவள் இங்கு வந்தாள், வெளியேற வகையின்றி மாட்டிக்கொண்டாள். முற்றிலும் தனியளாய் இருந்தாள்.

“என் முழங்கால்கள் குளிரில் விறைத்துப் போச்சு” என்று தேம்பினான் பையன்.

அவனை ஓரமாக அழைத்துச் சென்று அவனது முழங்கால்களைத் தேய்த்துவிட்டாள். அவன் சமாதானமடைந்தான். நகரில் தனக்கு அறிமுகமான குடும்பம் ஒன்று இருப்பது சட்டென அவள் நினைவுக்கு வந்தது. நோவரஸ்ஸீய்ஸ்க்கிலிருந்து ‘கரூஸியா’ என்ற கப்பலில் ஒதேஸ்ஸாவுக்கு வருகையில் இந்தக் குடும்பத்தினர் அவர்களுக்கு அறிமுகமானார்கள். பிறகு சில தடவை அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் பாவ்லோவ்ஸ்கிய் என்ற குடும்பப் பெயர் கொண்ட புதுமணத் தம்பதிகள். கணவன் பல்மானத் தொழிற்பள்ளியில் அப்போதுதான் படிப்பை முடித்திருந்தான். அவள் பெயர் வேரா.

இரண்டு பெண்களுக்கும் ஒருவரையொருவர் மிகப் பிடித்துவிட்டது. கப்பல் நோவரஸ்ஸீய்ஸ்க்கிலிருந்து ஒதேஸ்ஸா போய்ச் சேர்வதற்குள் இருவரும் மிக நெருங்கிப் பழகிவிட்டார்கள். ஒதேஸ்ஸாவிலும் அவர்கள் இரண்டொரு முறை ஒருவர் வீட்டுக்கு மற்றவர் விருந்தினராகச் சென்று வந்திருந்தார்கள். அவர்களது கணவர்களுக்கிடையிலும் நட்பு ஏற்பட்டது. ஒரு தடவை கார்க்கவ் நகருக்கும் ஒதேஸ்ஸா நகருக்குமிடையே நடந்த காற்பந்தாட்டப் போட்டியைக் காண இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்தாற் போலச் சென்றார்கள். பாவ்லோவ்ஸ்கிய் குடும்பத்தினர் ஒதேஸ்ஸா தரப்பை ஆதரித்தார்கள். அவளும் அவளது கணவனும் கார்க்கவ் குழுவுக்கு ஆதரவாயிருந்தார்கள். முடிவில் ஒதேஸ்ஸாவே வெற்றி பெற்றது.

அடக் கடவுளே, கடலோரத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த விசாலமான புதிய விளையாட்டரங்கில் மக்கள்தான் என்னவாகக் கொந்தளித்தார்கள்! கூச்சல்கள், கத்தல்கள், புழுதிப் படலங்கள். அப்போது இரு குடும்பத்தினரும் விளையாட்டின் பொருட்டு சச்சரவு இட்டுக்கொள்ளாததுதான் குறை. இப்போதோ, அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இன்பமாயிருந்தது. பாவ்லோவ்ஸ்கிய் இப்போது ஒதேஸ்ஸாவிலேயே அகப்பட்டுக்கொண்டாள். சமீபத்தில்தான் அவள் வேராவை சந்தையில் கண்டு கொஞ்சம் உரையாடக் கூடச் செய்தாள். ஆனால் சந்தையில் நெடு நேரம் நிற்பது அபாயமானது, ஏனேனில் ஜெர்மானியர்கள் அநேகமாகத் தினந்தோறும் சோதனையிடுவதும் கைது செய்வதும் நடத்திவந்தார்கள். ஆகவே வேராவும் அவளும் ஐந்து நிமிடங்கூடப் பேசிக்கொள்ளவில்லை. பிறகு அவர்கள் சந்திக்கவில்லை.

ஆயினும் வேரா நகரில்தான் இருக்க வேண்டும். வேறு அவளுக்குப் போக்கிடம் ஏது? பாவ்லோவ்ஸ்கிய் தம்பதிகள் ருஷ்யர்கள். வேரா வீட்டில் சிறிது காலம் தங்க முயற்சி செய்யலாம். மகனை மட்டுமாவது அங்கே வைக்கலாம். பாவ்லோவ்ஸ்கிய் தம்பதிகள் வெகுதொலைவில், பிரெஞ்சு வீதியின் கோடியில் வசித்து வந்தார்கள். எனவே அவள் திரும்பினாள்.

“அம்மா, நாம் எங்கே போறோம்? வீட்டுக்கா?”

“இல்லை கண்ணே, ஒருவரைப் பார்க்கப் போறோம்.”

“யாரை?”

“வேரா அத்தையை நினைவிருக்கா உனக்கு? அவள் வீட்டுக்குத்தான் போகிறோம்.”

“சரி” என்று பையன் சமாதானமடைந்தான். மற்றவர்கள் வீட்டுக்குப் போவதில் அவனுக்கு விருப்பம். அவனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஸ்த்ரோகனொவ்ஸ்கிய் பாலத்தின் வழியாக, துறைமுகம் செல்லும் தெருவை அடைந்தார்கள். அது குவாரன்டைன் சரிவு என்று அழைக்கப்பட்டது. தெருவின் கீழ்ப்புறத்தில் சரளைக் கல்லால் கட்டப்பட்ட அழகற்ற சதுர வீடுகள் நின்றன. அவற்றில் சில வெறும் இடிபாட்டுக் குவியல்களாக ஆக்கப்பட்டிருந்தன. சில தீக்கிரையாகி இருந்தன. தெருவின் கோடியில் வேறொரு பாலத்தின் வளைந்த கமான்கள் தென்பட்டன. அந்தப் பாலத்துக்கு மறுபுறம், துறைமுகத்தின் கூர்த்த சிதைவுகள் தெரிந்தன. இன்னும் தொலைவில், எரிந்து தகர்ந்த முகடுகளுக்கு அப்பால், தொடுவானம் வரை உறைந்து கிடந்தது வெண்கடல். தொடுவான விளிம்பில் உறையா நீர் ஆழ் நீலப் பட்டை போன்று காட்சி அளித்தது. புகழ்பெற்ற ஒதேஸ்ஸாக் கலங்கரை விளக்கத்தின் வெண்ணிற இடிபாடுகளைச் சுற்றிலும் கரீயச் சாம்பல் நிறம் தீட்டிய சில ருமேனியத் துருப்புக் கப்பல்கள் நின்றன. இடப்புறம் தூரத்திலிருந்த மலையின் மேல், ரோஜா நிறமும் மென் நீல வண்ணமும் கொண்ட மூடுபனிக்கு இடையே, நகரத்தின் உயரே சங்கு போன்று கவிழ்ந்து விளங்கியது நாடக அரங்கின் கும்மட்டம். ஸ்த்ரோகனொவ்ஸ்கிய் பாலத்தின் இரும்புக் கிராதிகள் உயரமான ஈட்டி வரிசை போலக் காணப்பட்டன. அவை கருத்துக் காணப்பட்டன. கீழே, வாளிகளை ஏந்தியவாறு மக்கள் குவாரன்டைன் சரிவின் மேலே ஏறி வந்து கொண்டிருந்தார்கள். வாளிகளிலிருந்து ததும்பிய நீர் வழியிலேயே பனிக்கட்டியாய் உறைந்து, ரோஜா வெயிலின் மங்கிய ஒளியில் கண்ணாடி போலப் பளிச்சிட்டது. இவை எல்லாமே எழிலுடன் பொலிந்தன. என்ன இருந்தாலும் வேரா வீட்டில் கொஞ்ச நேரம் தங்குவது சாத்தியந்தான். அடுத்து நடப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளளலாம் என எண்ணினாள்.

அவர்கள் வெகு நேரம் நடந்தார்கள். சிறுவன் களைத்துப் போனான், எனினும் சிணுங்கவில்லை. சின்னக் கம்பளிக் காலணிகளைத் தொப்புத் தொப்பென அடித்தவாறு விரைவாக நடந்து, தாயின் பின்னே சிரமத்துடன் வந்துகொண்டிருந்தான். போக வேண்டிய வீட்டைச் சீக்கிரமாக அடை அவனுக்கும் ஆசையாய் இருந்தது. மற்றவர்களைச் சென்று காண்பதை அவன் எப்போதுமே விரும்பினான். வழியில் பல தடவை தாயார் அவனது வெளிறிய கன்னங்களைத் தேய்த்து விட்டுச் சூடேற்றினாள். வேரா வசித்துவந்த வீட்டருகே நடைபாதை மீது நெகிடித் தீ எரிந்து கொண்டிருந்தது. படைவீரர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். வீடு பெரியது, பல பகுதிகள் கொண்டது. வாயில் கதவு சங்கிலியுடன் சேர்ந்துப் பூட்டப்பட்டிருந்தது. சோதனை நடந்துகொண்டிருந்தது. உள்ளே போகிறவர்களும் வெளியவருபவர்களும் தஸ்தாவேஜூகளைக் காட்ட வேண்டியிருந்தது. இவளோ அவசரமாகச் செல்பவள் போன்ற தோற்றத்துடன் வாயிலின் அருகாக முன்னே சென்றாள். அவளை யாருமே கவனிக்கவில்லை.

பையன் மறுபடியும் முரண்டு பிடிக்க ஆரம்பிக்கவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். நடைபாதையில் பாவியிருந்த கருநீல உருக்காங்கற்கள் மீது அவளது காலணிகள் சடசடத்தன. பையன் அமைதியாக இருந்தான். அவள் மறுபடியும் நகரில் சுற்றித் திரியலானாள். தான் ஒரே இடங்களையே அடிக்கடி கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் மக்கள் தன்னைக் கூர்ந்து நோட்டமிடுவதாகவும் அவளுக்குத் தோன்றியது. சில மணி நேரத்தைத் திரையரங்கில் கழிக்கலாமே என்ற யோசனை அவள் மனத்தில் உதித்தது. மாலை எட்டு மணிக்கு மேல் தெருவில் நடமாடுவது தடுக்கப்பட்டிருந்தது. மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆகவே திரைப்படக் காட்சிகள் வெகு முன்னதாகவே ஆரம்பிக்கப் பட்டன.

அவளைப் போலவே கடுங்குளிரிலிருந்து தப்பும் பொருட்டு வந்திருந்த போர் வீரர்களாலும் வேசிகளாலும் நிறைந்திருந்த திரையரங்கில் ஒரே இறுக்கமும் நாற்றமுமாயிருந்தது. ஆகவே அவளுக்குக் குமட்டலெடுத்து, தலை சுற்றியது. எனினும் குறைந்த அளவேனும் அங்கே கதகதப்பாவது இருந்தது, உட்கார்ந்திருக்க முடிந்தது. பையனது கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்த லேஞ்சியை அவிழ்த்து விட்டாள். தாயின் முழக்கைக்கு மேல் இருகரங்களாலும் பற்றியபடி அக்கணமே பையன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

hitler-mussoliniதிரையில் நடப்பது என்னவென்று புரிந்து கொள்வதே கடினமாயிருந்தது, எனினும் அவள் தொடர்ச்சியாக இரண்டு காட்சிகள் முடியும் வரை உள்ளே உட்கார்ந்திருந்தாள். ஒருவேளை முதலில் போர் பற்றிய செய்திப்படமும் அப்புறம் வேடிக்கைப் படமோ அது போன்ற ஏதேனுமோ காட்டப்பட்டிருக்கலாம். கதை தொடர்ச்சி குழம்பியது. சில வேளைகளில் நேர்த்தியான ஒருத்தியின் தலை திரை முழுவதையும் வியாபித்துக் கொண்டிருந்தது. கொம்புகள் போலச் சிங்காரிக்கப்பட்ட வெளிர்முடியுடன் இருந்த அவள், தலையற்ற உயரமான ஆடவன் ஒருவனது தட்டை மார்பின்மீது முகத்தை வைத்து அழுத்துவதும் அவனுடன் சேர்ந்து பாட்டுப் பாடுவதுமாயிருந்தாள். பின்பு இதே பெண் தாழ்வான பந்தய மோட்டாரில் ஏறி அமர்ந்துகொண்டாள். அப்புறம் வெடிகள் கறுத்த ஊற்றுக்கள் போன்று சிதறின – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பட்டைகளாகப் – பிய்க்கப்பட்டு விட்டன போன்று தடதடவென்ற உலோகச்சத்தத்துடன் சிதறின. கரு மண்கட்டிகள் ஆலங்கட்டிகள் போல விழுந்து இரும்பு முரசு அதிர்வது போலக் கணகணத்தன. பீரங்கிக் குண்டுகளால் உழப்பட்ட தரையில், இழவுக்குறியான கருஞ் சிலுவைகளுடன் டாங்கிகள் ஊர்ந்தன. அவை கடகடத்தன, நொடிகளில் எகிறி விழுந்தன. அவற்றின் நீண்ட பீரங்கிக் குழாய்களிலிருந்து நீண்ட தீ நாக்குகளும் சுருளும் வெண்புகைப் பெருக்கும் கிளம்பின.

செப்பனிட்ட காலணிகளும், காதுமூடிகள் கொண்ட ருஷ்ய மென்மயிர்த் தொப்பியும் அணிந்திருந்த ஜெர்மானியப் படைவீரன் ஒருவன் அவளது தோள்மீது கனமாகச் சாய்ந்து, சிறுவனை எழுப்புவதற்காக அழுக்கடைந்த பெரிய விரல்களால் அவன் கழுத்தில் கிச்சுக் கிச்சு மூட்டினான். வெள்ளைப்பூண்டின் மணமும் பட்டைச் சாராய நெடியும் அவனிடமிருந்து குப்பென்று அடித்தது. அவன் ஓயாமல் சுமுகமாகச் சிரித்துக்கொண்டு, “தூங்காதே, புபே, தூங்காதே, புபே” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜெர்மன் மொழியில் புபே என்றால் பையன் என்று அர்த்தம். பையன் தலையைத் திருப்பி, தூக்கத்தில் ஏதோ முனகினானே தவிர விழித்துக்கொள்ளவில்லை. அப்போது ஜெர்மனியன் கனத்த தலையை அவளது தோள் மேல் சாத்திக்கொண்டு, அவளை ஒரு கையால் அணைத்தவாறு மற்றொரு கையால் பையனது முகத்தைப் பிசையத் தொடங்கினான். சிப்பாய் கோபித்துக் கொண்டு விடுவானோ என்ற அச்சத்தால் அவள் ஒன்றும் சொல்லவில்லை. தஸ்தாவேஜூகளைக் காட்டுமாறு அவன் கேட்டுவிடக் கூடாதே எனப் பயந்தாள். ஜெர்மானியனிடமிருந்து மற்ற நாற்றங்களுடன் கருவாட்டுக் கவிச்சும் சேர்ந்து அடித்தது. அவளுக்கு வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் சீற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க அரும்பாடு பட்டாள். பதற்றப்படாமல் சமாதானமாயிருக்கும்படி தன்னையே தேற்றிக்கொண்டாள். பார்க்கப் போனால் ஜெர்மானியன் அப்படி அதிகக் கெடுதல் எதுவும் செய்துவிடவில்லை. காட்டான், அவ்வளவுதான். ஜெர்மானியர்களுக்குள் நல்லவன் என்றே சொல்ல வேண்டும். இவனைப் பொறுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவள் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே ஜெர்மானியன் அவள் தோள்மேல் வைத்த தலையுடன் உறங்கிவிட்டான். அவள் அசையாது வீற்றிருந்தாள். ஜெர்மானியன் மிகக் கனமாயிருந்தான். நல்ல வேளை, தூங்கிப்போனான்.

கொம்பு நெளிகள் கொண்ட வெளிர் கூந்தல் அழகி திரையில் மறுபடி வளையவந்தாள். வெண்மையும் கறுப்புமான நீண்ட கதிர்க் குச்சங்கள் அவளோடு கூட அரங்க முழுவதிலும் அசைந்தாடின. கருப்பு ஊற்றுக்கள் உலோகத் தடதடப்புடன் கொங்கிச் சிதறின. டாங்கிகள் ஊர்ந்தன. ஜெர்மானியப் பட்டாளங்கள் பாலை மணலில் அணி நடை போட்டன. பாரிஸிலுள்ள ஐபல் கோபுரத்தின் உச்சியில் பெரிய பாசிஸ்ட் கொடி ஏற்றப்பட்டது. கூரிய சிறு மூக்கும் பெண்ணினது போன்ற மேவாயும் கொண்ட ஹிட்லர், பெண்ணுடையது போன்ற பின்பக்கத்தைத் துருத்தியவாறு விழிகளைச் சுழற்றுவதும் வாயை விரைவாக மூடிமூடித் திறப்பதுமாகத் திரையிலிருந்து நாயாய்க் குரைத்தான். தாடைகளை அவன் வெகு விரைவாக அசைத்தபடியால் ஒலி சற்றுப் பொறுத்தே காதில் பட்டது: வள், வள், வள், வள்… என்று.

படைவீரர்கள் இருளில் பெண்களைச் சீண்டினார்கள். பெண்கள் கீச்சிட்டார்கள். திரையரங்கில் ஒரே புழுக்கமும் இறுக்கமுமாக இருந்தது. உள்ளிப்பூண்டு, கருவாடு, பட்டைச் சாரயம், ருமேனிய ‘ஷா-நுஆர்’ அத்தர் எல்லாம் கலந்த வாடை அடித்தது. ஆயினும் வெளியே குளிரில் நடுங்குவதைவிட இங்கே இருப்பது மேலாயிருந்தது. அவளும் கொஞ்சம் களையாறினாள். சிறுவன் உறங்கிவிட்டான். ஆக, கடைசிக் காட்சியும் முடிந்தது. அவள் மீண்டும் வெளியே செல்ல வேண்டியதாயிற்று. குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டாள். இருவரும் வெளியேறினார்கள்.

நகரில் கும்மிருட்டு. குளிர்ந்த மூடுபனி மட்டுமே இருளடைந்த வீடுகளுக்கிடையே திரளாக எழுந்தது. அதனால் இமைமயிர்கள் ஒட்டிக்கொண்டன. தெருக்களில் புகை மண்ட எரிந்த நெகிடி நெருப்புக்கள் கடுங்குளிராக தழல் வீச முடியாது அநேகமாக அவிந்தன. தனித் துப்பாகிக் குண்டுகள் எங்கேயோ வெடிக்கும் ஒலி எப்போதாவது கேட்டடது. ரோந்துச் சிப்பாய்கள் தெருவழியே நடந்தார்கள். எட்டு மணி அடித்தாகி விட்டது. ரோந்துக்காரர்கள் தங்களைத் தடுக்கக்கூடும் என்ற ஒரே எண்ணத்தால் அவள் சிறுவனைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். பொதுவில் வெறுமையாக இருந்த சந்துகளாகத் தெரிந்தெடுத்து விரைந்தாள்.

churchபிளேன் மரங்களும் கருவேல மரங்களும் கண்ணாடிப் பனியால் மூடப்பட்டு, தெருவோரங்களில் பூதங்கள் போல நின்றன. நகரம் வெறிச் சோடி இர்ண்டு கிடந்தது. திடீரென்று இருளில் ஒரு வீட்டின் கதவு திறக்கும். வாயிலருகே பளிச்சிடும். விபசார விடுதிக்குள்ளிருந்து முறையிடும் பிடிலின் மோகாவேசம் தொனிக்கும் இசை அதைத் தொடர்ந்து வரும். இவ்வாறாக நடந்து அவள் ஷெவ்சேன்கோவின் பெயர் கொண்ட பூங்காவை அடைந்தாள். இந்தப் பிரமாண்டமான பூங்கா கடற்கரையோரமாக நீண்டிருக்கிறது. இங்கே ஒரே கும்மிருட்டும் நிசப்தமும் நிலவின. கீழே குத்துப் பாறைகளின் அடியில், தொடுவானம் வரை உறைந்த கடல் மீதோ, இன்னும் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது. கடலின் நிசப்தம் சுவர் போன்று பருமை கொண்டு இலகியது. சில பெரிய விணமீன்கள் மரங்களின் வெண் கிளைகளுக்கு மேல் மினுமினுத்தன. சர்ச் விளக்கின் நீலக் கதிர் தாரகைகளுக்கிடையே வழுக்கிச் சென்றது.

அகன்ற தார் சாலை வழியாக அவள் நடந்தாள். அவளது இடப்புறம் இருந்தது விளையாட்டரங்கம், ஒதேஸ்ஸா – கார்க்கவ் காற்பந்தாட்டப் போட்டியை அவர்கள் சேர்ந்து பார்த்த இடம். தகர்ந்து சிதைந்த விளையாட்டரங்கிற்கு அப்பால் இருந்தது கடல். இருளில் அது அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆயினும், அமைதியிலிருந்து அது இருக்குமிடத்தை ஊகிக்க முடிந்தது. அவளது வலப்புறம் பூங்கா இருந்தது. அகன்ற தார் சாலை நட்சத்திர வெளிச்சத்தில் உப்புத்தாள் போல பளபளத்தது. பல்வகை மரங்கள். அவற்றின் காய்க் குமிழ்கள் கயிறுகள் போன்ற நீண்ட காம்புகளில் தரை வரையில் தொங்கின. மற்ற இடங்களில் கோபுர வடிவான கருவேல மரங்கள், பிளேன் மரங்கள், காடி மரங்கள் ஆகியன இருந்தன. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து அடர்ந்த கண்ணாடிப் பனியால் மூடப்பட்டிருந்த அம்மரங்கள் மேகத்திரள்கள் போன்று தரைமீது கவிந்திருந்தன.

அவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னிலும் மெதுவாக நடந்து எல்லையற்ற நீண்ட வரிசையாக நின்ற காலி பெஞ்சுகளை ஒட்டினாற் போலச்சென்றாள். ஒரு பெஞ்சின் மீது மட்டும் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள அவள் அந்த உருவத்தின் அருகாகப் போனாள். பெஞ்சின் பின்பக்கம் தலையைச் சாய்த்தவாறு கூனி அமர்ந்திருந்த அக்கரிய உருவம் அசையவேயில்லை. அந்த ஆள் மரங்களைப் போலவே கண்ணாடிப் பனியால் பாதிவரை மூடப்படிருப்பை அவள் கவனித்தாள். பூங்காவின் வெண் மரங்களுக்கு நடுவே உயரந்து நின்ற வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கரிய கும்மட்டத்துக்கு மேலே சப்தரிஷி மண்டலத்தின் பல் கோண விண்மீன்கள் கண்சிமிட்டின. அந்த இடம் ஒரே அமைதியாக, முற்றிலும் அச்சம் விளைக்காததாக இருந்தது. அவளுக்குத் திகில் உண்டாகாதது ஒருகால் அவள் மிகவும் களைத்திருந்ததனால்தான் போலும்.

மறுநாள் புலர்காலை வேளையில், முந்திய இரவில் குளிரால் விறைத்து மடிந்தவர்களின் உடல்களைச் சேகரிப்பதற்காக லாரிகள் நகர் முழுவதிலும் சுற்றிவந்தன. அவற்றில் ஒன்று ஷெவ்சேன்கோ பூங்காச் சாலையில் மெதுவாக ஊர்ந்தது.

லாரி இரண்டு முறை நின்றது. ஒரு தடவை, குளிரில் விறைந்துப்போன கிழவன் உட்கார்ந்திருந்த பெஞ்சின் பக்கத்தில் நின்றது. இரண்டாந் தரம் அது ஒரு பெண் சிறுவனுடன் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு அருகே நின்றது. அவள் பையன் கையைப் பற்றியிருந்தாள். இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் அநேகமாக ஒரே மாதிரி உடை அணிந்திருந்தார்கள். ஓரளவு நல்ல, செயற்கை மென்மயிர்க் கோட்டுகளும், நமுதா காலணிகளையும் பலநிறக் கம்பளி கையுறைகளையும் இருவருமே அணிந்தார்கள். உயிருள்ளவர்கள் போலவே வீற்றிருந்தார்கள்.

முந்திய இரவு கண்ணாடிப் பனியால் மூடப்பட்டிருந்த அவர்களது முகங்கள் மட்டும்தாம் ஒரேயடியாக வெளிறியிருந்தன. அவர்களது கண்ணிமைகளில் உறைபனி விளிம்பு கட்டியிருந்தது. படைவீரர்கள் தூக்கிய போது இருவரது உடல்களும் நிமிரவேயில்லை. அமர்ந்த பாங்கிலிருந்த அவளது உடலைப் படைவீரர்கள் வீசியாட்டி லாரிக்குள் எறிந்தார்கள். அது கிழவனின் உடல் மீது கட்டை போலச் சொத்தென்று மோதியது. பின்பு, உட்கார்ந்த நிலையிலிருந்த சிறுவனுடைய உடலைப் படைவீரர்கள் சுலபமாக லாரியில் வீசிப் போட்டார்கள். அது அவளது உடல் மேல் கட்டை போல மோதியதுடன் கொஞ்சம் துள்ளவும் செய்தது.

லாரி புறப்பட்டதும் தெரு ஒலி பெருக்கி வழியாகச் சேவல் கூவி, புது நாள் புலர்வதை அறிவித்தது. பின்பு மென்மையான குழந்தைக் குரல், தெய்வீக நயத்துடன் மூன்று முறை பின்வருமாறு கூறியது:

“காலை வணக்கம்! காலை வணக்கம்! காலை வணக்கம்!”

அப்புறம் அதே இனிய குரல் ருமேனிய மொழியில் நிதானமும் பயபக்தியுமாகக் கர்த்தரின் செபத்தைப் படித்தது:

“பரமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே! தெய்வீகம் பொலிக நின் திரு நாமம். நினது அரசாட்சி நிலவுவதாக….”

______________________________________________

கதை : ருஷ்ய அமர இலக்கிய வரிசை – ருஷ்யச் சிறுகதைகள்
படங்கள் : இணையத்திலிருந்து

 

கருப்பாயிருப்பவர் காரோட்டினால் மரண தண்டனை

5

மெரிக்காவில் “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும்? அவரை சந்தேக கேஸ் என்று போலீஸ் தடுத்து நிறுத்தும். அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு அவரிடம் சந்தேகத்துக்குரிய வஸ்துகள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கப்படுவார். போலீசுக்கு போதுமான பணிவையும், அடிபணிதலையும் காட்டா விட்டால், அவர் கைது செய்யப்படுவார். சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டு உயிரிழப்பார்.

சாந்த்ரா பிளாண்டுக்கு “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும் என்று நன்றாக தெரியும். அவர் கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் எழுதி வந்தவர். “கருப்பர்களின் உயிருக்கும் மதிப்புண்டு” என்ற இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்.

சிக்காகோவைச் சேர்ந்த சாந்த்ரா, ஜூலை 10-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரெய்ரீ வியூ பல்கலைக் கழகத்தில் வேலை நேர்முகத்துக்காக போயிருக்கிறார். கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வெறுப்பு உணர்வும் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று டெக்சாஸ்.

காரில் போய்க் கொண்டிருக்கும் போது, அவரைப் பின்தொடர்ந்து வேகமாக ஒரு போலீஸ் கார் வருவதை கவனித்திருக்கிறார் சாந்த்ரா. அந்தக் காருக்கு வழி விட்டு ஒதுங்குவோம் என்று தான் சென்ற பாதையை விட்டு விலகியிருக்கிறார். உடனே, துரத்தி வந்த போலீஸ் காரில் இருந்த பிரையன் என்சினியா என்ற காவலர், சாந்த்ராவின் காரை நிறுத்தியிருக்கிறார்.

சாந்த்ரா பிளாண்ட்
சாந்த்ரா பிளாண்ட்

சாலையில் பாதை மாறும் போது இன்டிகேட்டர் போடவில்லை என்பதற்காக குற்றப் பதிவு செய்யப் போவதாக சாந்த்ராவிடம் கூறுகிறார் பிரையன்.

இது போன்று போக்குவரத்து காவலர்களால் தேவையின்றி நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுவது சாந்த்ராவுக்கு முதல்முறை அல்ல. போக வேண்டிய இடத்துக்கு தாமதமாகும் எரிச்சலுடன் அவர் பிரையன் தனது வேலையை முடிக்க காத்திருந்திருக்கிறார்.

பிரையனுக்கு அது வேடிக்கையாக இருந்திருக்கிறது. “என்ன ரொம்ப எரிச்சலா இருக்கறாப்ல” என்று கேட்டிருக்கிறார்.

“ஆமா, நான் உங்களுக்கு வழி விட்டு ஒதுங்கினா, அதில சிக்னல் பண்ணலன்னு நிறுத்தி வெச்சிருக்கீங்க. எப்ப என்ன போக விடுவீங்க. எவ்வளவு நேரம் நிக்கணும். அதான் எரிச்சல்” என்று விளக்கியிருக்கிறார் சாந்த்ரா.

தன்னை எதிர்த்து ஒரு கருப்பினப் பெண் பேசுவது பிரையனுக்கு கடுப்பேற்றியிருக்கிறது. சாந்த்ரா பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை அணைக்கும்படி சொல்கிறார்.

“என் காரில் நான் சிகரெட் பிடிக்கிறேன். ஏன் அணைக்கணும்” என்று கேட்கிறார் சாந்த்ரா.

“அப்படீன்னா, காரை விட்டு கீழே இறங்கு” என்று உத்தரவிட ஆரம்பித்திருக்கிறார், பிரையன்

“என்ன? லேன் மாறுவதற்கு சிக்னல் காட்டலைன்னுதானே என் தப்பு. அதுக்கான சீட்டை எழுதிக் கொடுங்க. அதுக்கு எதுக்கு நான் காரை விட்டு கீழ இறங்கணும். அப்படிச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று மறுத்திருக்கிறார், சாந்த்ரா.

“எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு. நீயா இறங்குறியா, நான் வெளியே இழுத்து போடவா” என்று காருக்குள் கையை விட்டிருக்கிறார், பிரையன்.

“என்னைத் தொட்டா நடக்கிறதே வேற.” என்று சீறியிருக்கிறார் சாந்த்ரா.

“மரியாதையா கீழே இறங்கிரு” என்று ஸ்டன் துப்பாக்கியை நீட்டியிருக்கிறார் பிரையன்.

தன்னை என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்று தெரிந்த சாந்த்ரா, காரிலிருந்து கீழே இறங்குகிறார்.

“அந்தா அங்க போய் நில்லு. ஃபோனை ஆஃப் பண்ணு” என்று உத்தரவிடுகிறார் பிரையன்.

“நான் ஃபோன்ல பேச ஒண்ணும் செய்யல, இங்க நடக்கிறத பதிவு செய்றேன். அதுக்கு எனக்கு உரிமை இருக்கு” என்று கூறிய சாந்த்ராவுக்கு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சாந்த்ரா செல்பேசியை காரின் மேல் அடித்து வைக்கிறார்.

“என்னை ஏன் கைது செய்றீங்க, அதுக்கு காரணம் என்ன” என்று கேட்கிறார் சாந்த்ரா.

அதற்கு பதில் சொல்லாமல், “நீ அந்தப் பக்கமா நில்லு, தள்ளி நில்லு” என்று அங்குமிங்கும் அலைக்கழிக்கிறார் பிரையன்.

இதுவரை நடந்தவை பிரையனது போலிஸ் காரில் இருந்த காமராவில் பதிவாகியிருக்கின்றன. அதன் பிறகு பிரையன் சாந்த்ராவை காமராவின் பார்வைக்கு வெளியே பக்கவாட்டு நடைபாதைக்கு தள்ளிச் செல்கிறார்.

“என்னை கீழே தள்ளிட்டீங்க, என் தலையை தரையில மோதுகிறீர்கள். எனக்கு தலை சுத்துது” என்று கதறுகிறார் சாந்த்ரா.

“நான் சொன்னதை கேக்கலேன்னா இப்படித்தான், மரியாதையை மண்டியிட்டு உட்காரு, கையை பின்னால கட்டு” என்று போலீஸ் அடாவடி செய்கிறார் பிரையன்.

அதைத் தொடர்ந்து இன்னொரு பெண் காவலரை ரேடியோவில் அழைக்கிறார், பிரையன். அவர் வந்த பிறகு, கைது செய்வதை தடுக்க முயற்சித்ததால்தான் சாந்த்ராவை கைது செய்ய வேண்டி வந்தது என்கிறார் பிரையன். அதாவது, கைது செய்வதை எதிர்த்த காரணத்தால் கைது செய்கிறாராம்.

சாந்த்ராவை போலீஸ் காரில் ஏற்றி விட்டு என்ன நடந்தது என்று தனது மேலதிகாரிக்கு சொல்கிறார், பிரையன். போக்குவரத்து விதியை மீறியதால் காரை நிறுத்தியதாகவும், வாக்குவாதம் ஆரம்பிக்கவே இறங்கச் சொன்னதாகவும், கைது செய்வதை தடுக்க முயற்சித்ததால், தாக்கியதாகவும், தன்னை அடிக்கவில்லை, ஆனால், தரையில் அழுத்திப் பிடித்த போது கையையும் காலையும் உதறினார் என்றும் விளக்குகிறார். இந்தக் குற்றங்களுக்காக சாந்த்ராவை கைது செய்வது என்று முடிவு செய்கிறது காவல்துறை.

டெக்சாஸ் மாநில போலீஸ் துறை சாந்த்ராவை ஜெயிலில் அடைக்க முடிவு செய்கிறது. அவரை விடுவிக்க $5,000 பிணைத் தொகை விதித்திருக்கிறது அந்த நாட்டு நீதிமன்றம். சிறையில் அடைக்கப்பட்ட சாந்த்ரா மூன்றாவது நாள் காலையில் ஒரு பிளாஸ்டிக் பையால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

சாந்த்ரா தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க நீதித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தற்கொலை அல்ல, ஒரு நிறவெறி படுகொலை என்று கொதிக்கின்றனர் கருப்பின மக்கள்.

ஆனால், அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு இருக்கும் ஜனநாயகம் இதுதான். அமெரிக்காவில் கருப்பின மக்கள் போக்குவரத்து காவலர்களால் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி நிறுத்தப்பட்ட பிறகு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் பிற போதை மருந்துகள் இருக்கிறதா என்று தேடப்படுவதும் அந்த சாக்கில் தாக்கப்படுவதும் அதிகம்.

அமெரிக்காவின் காவல்துறை அதிகாரிகள் அதிவேக காரில் கிரிமினல்களை துரத்திக் கொண்டு செல்லும் அதிரடிக் காட்சிகள் தொடராகவே தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. ஆனால் கருப்பின மக்களைப் பொறுத்த வரை இதில் திகிலோ, சாகசமோ எதுவும் இல்லை, இது வெள்ளை நிறவெறித்திமிரின் ஆயுதம்.

அமெரிக்காவில் சிக்னல் மாறிச்செல்லும் கருப்பின மக்களுக்கு மரண தண்டனை சாந்த்ராவின் சோக முடிவு உலகுக்கு அறிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி