Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 592

நீதியே உன் விலை என்ன?

3

2001-ம் ஆண்டில் ஜெயா மீண்டும் தமிழக முதல்வராக அமர்ந்தவுடன், அவருக்கு எதிராக நடந்துவந்த ஊழல் குற்ற வழக்குகள் அனைத்தையும் சட்டமன்றத் தீர்மானம் ஒன்றின் மூலம் மூட்டை கட்டிவிடலாம் என அப்பொழுது ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (சுயேட்சை) இருந்த அப்பாவு கோரிக்கை வைத்திருக்கிறார். இதனை நிராகரித்த ஜெயா, “தான் இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன்” எனத் தன்னடக்கதோடு கூறியிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, அம்மாவைச் சட்டத்திற்கும் நீதிக்கும் தலைவணங்கும் கண்ணியமிக்கவராகக் காட்டுகிறார்கள், அ.தி.மு.க.வினர். இது மட்டுமல்லாமல், உச்சநீதி மன்றம் எந்தவிதமான நிபந்தனையின்றிப் பிணை வழங்கியபோதும், தனக்குத் தானே நிபந்தனை விதித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெருந்தகையாக ஜெயாவிற்கு மகுடம் சூட்டி வருகிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெயா மீது சுமத்தப்பட்டன. “வாடா, வா, உன்னைக் கவனிச்சுக்கிறேன்” என்ற விதத்தில்தான் இந்த வழக்குகளை அவர் நீதிமன்றத்தில் சந்தித்தாரேயொழிய, சட்டப்படியெல்லாம் அவர் நடந்து கொள்ளவில்லை. “சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயா நீதிமன்றத்தில் எதிர்கொண்ட விதத்தை முழுவதுமாக விளக்கினால், அது கிரிமினல்களுக்குச் சாதகமாகப் போய்விடும் என்பதனால், அதனை நான் அதிகம் விளக்கவில்லை” என சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்று மிகையானதல்ல. ஜெயா, தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் சிலவற்றைச் சந்தித்த விதத்தை கீழே தொகுத்துக் கொடுத்துள்ளோம். கிரிமினல் கும்பலுக்குத் தலைவியாக இருக்கும் தகுதியை மட்டுமே கொண்டவர் ஜெயா என்ற உண்மையை அவை உங்களுக்குப் புரிய வைக்கும்.

ஜெயாவின் முதல் தவணை ஆட்சியின் பொழுது (1991-96) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளிலிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா – சசி கும்பல் இலஞ்சம் வாங்கியது, ஜெயா பதவியில் இருந்த பொழுதே அம்பலமாகியது. மறைந்த தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த ஊழலை விசாரிக்க தொடுத்த வழக்கில், உயர்நீதி மன்ற நீதிபதி இலட்சுமணன், நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தார்.

நீதிபதி தினகர்
டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயாவைச் சட்டத்தை வளைத்து விடுதலை செய்தார் நீதிபதி தினகர்

ஜெயா, இந்த இடைக்காலத் தடையை சட்டத்தின் பொந்துகளில் புகுந்து உடனடியாக உடைத்துவிட்டாலும், தனக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிடும் என பீதியடைந்து போயிருந்தார்; நீதிபதி இலட்சுமணன் வேறு சில வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்ததால், அவரை மிரட்டிப் பணிய வைப்பது என்ற சூழ்ச்சியை மேற்கொண்டது ஜெயா – சசி கும்பல்.

இச்சதியின்படி நீதிபதி இலட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா – கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டதாகப் பொய் வழக்கு சோடிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது பொய்வழக்கு என்பது விரைவிலேயே அம்பலமாகி, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டாலும், ஜெயா கும்பலின் நோக்கம் நிறைவேறியது. “நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் தன்னைப் பாதிப்பதாக” க் கூறி, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இலட்சுமணன் விலகிக் கொண்டார்.

  • 1996-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க., ஜெயா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. இச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஜெயா தொடர்ந்த வழக்கில் அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிபரான், “சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது சட்டப்படி செல்லும்” எனத் தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்திருந்த ஜெயா, தனது ஆதரவோடு நடந்துவந்த பா.ஜ.க. கூட்டணி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி லிபரானை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஜெயாவின் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து வந்த மற்றொரு நீதிபதி, ஜெயாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிய மறுத்ததால், அசாமுக்கு மாற்றப்பட்டார்.
  • “கொடைக்கானல் ப்ளஸண்ட் டே” விடுதி ஊழல் வழக்கில், ஜெயாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூவரும் அ.தி.மு.க. காலிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2001-ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின்பு இந்த வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது. அ.தி.மு.க. குண்டர்களின் மிரட்டலுக்குப் பயந்து, 22 அரசு சாட்சிகளும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக பல்டியடித்தனர். இதனால் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2001 இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்புகளால் ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. “இவ்வழக்கை சேலத்திற்கு மாற்றியும், சீனிவாசன் என்ற குற்றவியல் வழக்குரைஞரை அரசு வழக்குரைஞராக நியமித்தும்” சென்னை உயர்நீதிமன்றம் 22.08.03 அன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன்
சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோதமான முறையில் ஜெயாவின் பினாமி கம்பெனிகளை விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி அருணா ஜெகதீசன்.

எனினும், வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததன் மூலம், சேலம் நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற முடியாமல் முடக்கி வைத்தது, அ.தி.மு.க. அரசு. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 14 மாதங்கள் ஆன பிறகும் கூட வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்படாததை எதிர்த்து, கோகிலவாணியின் தந்தை மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின் பொழுது, மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட மூல வழக்கைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் நோக்கத்தோடு, “மூல வழக்கின் கேஸ் கட்டு காணாமல் போய்விட்டது; அதனை டிசம்பர் 2003-லிருந்து தேடிக் கொண்டிருக்கிறோம். புதிதாகக் கேஸ் கட்டுத் தயாரிக்கக் கால அவகாசம் வேண்டும்” எனக் குண்டைத் தூக்கிப் போட்டது தமிழக அரசு.

இப்படி அ.தி.மு.க.வால் அரசு அதிகாரத்தோடு உருவாக்கப்பட்ட எல்லா தடைகளையும் மீறி அக்கட்சியைச் சேர்ந்த 28 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, ஜெயா “நீதி”க்குத் தலை வணங்கவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களுக்குப் பல இலட்ச ரூபாய் கருணைத் தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம், நீதிமன்றத் தீர்ப்பை எள்ளி நகையாடி விட்டார்.

  • தமிழக முதல்வர் என்ற பதவியைப் பயன்படுத்தித் தான் அடித்தக் கொள்ளையைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளும் விதமாக, தனது “வளர்ப்புப் பிராணி” சுதாகரனின் திருமணத்தை 1995-ம் ஆண்டின் இறுதியில் நடத்தினார் ஜெயா. அந்தத் திருமணம் தொடர்பாக நடந்து வந்த அதிகார முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும்படி கோரி, பல வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணையின் பொழுது, “வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கே என்ன பாதுகாப்பு?” என நீதிபதி புலம்பியதிலிருந்தே, நீதிபதிகள் – நீதிமன்றங்கள் மீதான ஜெயாவின் ‘பாசத்தை’ப் புரிந்து கொள்ள முடியும். “அதிகார முறைகேடுகள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு முதல்வர் ஜெயா பொறுப்பல்ல” எனத் தீர்ப்பெழுதி, தனது தோலைப் பாதுகாத்துக் கொண்டார், நீதிபதி.
அருண் ஜெட்லி - ஜெயா
நிதியமைச்சர் அருண் ஜெட்லி போயசு தோட்டத்தில் ஜெயாவைச் சந்தித்த சில நாட்களிலேயே அவர் வருமான வரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
  • டான்சி நில பேர ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபொழுதே அதில் தலையிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இவ்வழக்கிலிருந்து ஜெயாவை விடுதலை செய்த உயர்நீதி மன்ற நீதிபதி தங்கராசு, “டான்சி நிலத்தை வாங்கியதில் ஜெயா எவ்வித மோசடியிலும் ஈடுபடவில்லை; மாறாக, வழக்குதான் மோசடியானது” எனப் பொருள்படும்படி தனது தீர்ப்பை அளித்தார். நீதிபதி தங்கராசு, அ.தி.மு.க.வின் மந்திரி ஒருவரின் சிபாரிசின் பின்னணியில்தான் நீதிபதி பதவியைப் பெற்றார் என்பதும்; டான்சி நிலபேர வழக்கில் தீர்ப்புக் கொடுக்கும் முன் உல்லாசச் சுற்றுலாவாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதும் பின்னர் அம்பலமாகியது.நீதிபதி தங்கராசின் தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபொழுது, “தனி நீதிமன்றத்தில் 80 சதவீத அளவு விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், அதில் உயர்நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டாம் என்று நாங்கள் கருதுகிறோம். இது எங்கள் தீர்ப்பு அல்ல; கருத்துதான். உங்கள் கட்சிக்காரர் (ஜெயா) மீண்டும் சிறப்பு நீதிமன்ற விசாரணையைச் சந்திக்க விரும்புகிறாரா?” எனக் குற்றவாளியிடமே தீர்ப்பைச் சொல்லும் உரிமையை வழங்கினார்கள் நீதிபதிகள்.டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பெற்ற ஜெயா, அத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தினகர், “டான்சி நிலம், அரசு சொத்தே அல்ல; அரசு ஊழியர், அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது நன்னடத்தைக் குறித்த விதிமுறைதானே தவிர, சட்டமல்ல” எனச் சட்டத்தையே வளைத்து, புதிய விளக்கம் கொடுத்து, ஜெயாவை வழக்கில் இருந்தும், தண்டனையிலிருந்தும் விடுதலை செய்தார். நீதிபதி தங்கராசு தீர்ப்புக்கு முன் சிங்கப்பூர் சென்று வந்தார்; நீதிபதி தினகர் தீர்ப்புக்குப் பின் ஒரு மாத ஓய்வில் போனார்.நீதிபதி தினகரின் தீர்ப்பை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையும், அதனின் தீர்ப்பும் மிகவும் விநோதமாக அமைந்தன. சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த “பந்த்”-ஐ தடை செய்து ஞாயிற்றுக்கிழமை கூடி தீர்ப்பு அளித்த உச்சநீதி மன்றம், டான்சி நில பேர வழக்கில் விசாரணை முடிந்த பிறகும், தீர்ப்பு வழங்காமல் 14 மாதங்கள் இழுத்தடித்தது. அதன்பின் வந்த தீர்ப்போ, ஜெயாவின் விடுதலையை உறுதி செய்ததோடு, அவரின் மனசாட்சியிடம் மண்டியிட்டது.

    “முதல் குற்றவாளியான ஜெயலலிதா குற்றமிழைத்திருக்கிறாரா, இல்லையா என்கிற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவர் தமது மனசாட்சிக்குப் பதில் அளிக்கும் வகையில் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுப்பதே பரிகாரமாக அமையும்.” – இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதிய வெங்கடராம ரெட்டி, ராஜேந்திரபாபு என்ற இரு நீதிபதிகளுக்கு ஜெயாவிடமிருந்து என்ன பரிகாரம் கிடைத்ததோ, அது அந்த “ராமனுக்கு”த்தான் தெரியும்!

நீதித்துறையை விலை பேசும் ஜெயா

  • சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தபோது, ஜெயா-சசி கும்பலின் லெட்டர் பேடு கம்பெனிகளை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது, ஜெயா-சசி கும்பல். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்குத் தெரியாமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்ததையும்; இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கிடையாது என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சென்னை உயர்நீதி மன்றம். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கிற்குப் பதிலாக, வேறொரு அ.தி.மு.க. கைக்கூலி வழக்குரைஞர் ஆஜரானதையும் சென்னை உயர்நீதி மன்றம் அனுமதித்தது. இப்படி சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட இவ்வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் அந்த லெட்டர் பேடு கம்பெனிகளை வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்த கேலிக்கூத்தும் அரங்கேறியது.
  • சொத்துக் குவிப்பு வழக்கைப் போலவே, வருமான வரி வழக்கிலிருந்தும் ஜெயா-சசி கும்பல் விடுவிக்கப்பட்டிருப்பது விநோதங்களும் மர்மங்களும் நிறைந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்த சமயத்தில் வருமான வரி வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். பின்னர் தேர்தல்கள் நடைபெறவிருப்பதைக் காட்டி விசாரணைக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென ஜெயா கேட்டுக் கொண்டவுடன் தனது தீர்ப்பையே மாற்றிக் கொண்டது உச்சநீதி மன்றம்.இவ்வழக்கை விசாரித்த சென்னை பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு திரும்ப திரும்ப உத்தரவிட்டதை ஜெயாவும் சசியும் ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை. ஒருபுறம் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்துவந்த ஜெயா, இன்னொருபுறம் பா.ஜ.க. அரசில் தனது நண்பரான அருண் ஜெட்லி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் இறங்கினார். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாத குற்றத்திற்கு உரிய அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக ஜெயா-சசி கும்பல் வருமான வரித் துறைக்கு மனுச் செய்ய, அந்த மனுவை ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சகம் தடாலடியாக அறிவிக்க, வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வேறுவழியின்றி வழக்கை முடித்து வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய ஜெயா-சசி கும்பல் பா.ஜ.க. அரசின் தயவால் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டுத் தப்பித்துக் கொண்டது.

***

ஜெயா வழக்கைச் சந்தித்த விதம் ஒவ்வொன்றும் சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் வரம்பு மற்றும் கையாலாகாத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அதற்கும் அப்பாற்பட்டு, இன்றைய அதிகார அமைப்பில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் உள்ளிட்டு யாரையும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியும் என்றும் அவர் எடுத்துக் காட்டிவிட்டார். ஜெயா போன்ற சாதி, பணம், அரசியல் செல்வாக்கு கொண்ட கிரிமினல்களை இன்றுள்ள சட்டம், நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டு தண்டித்துவிட முடியாது எனப் புரட்சியாளர்கள் கூறிவருவதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களைக்கூட, சட்டத்திற்கு சவால் விடும் தனது நடவடிக்கைகளின் மூலம் திணறடித்து வருகிறார், அவர். அந்த வகையில் ஜெயா புர்ரட்ச்ச்சி தலைவிதான்!

– திப்பு
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் – 2015
____________________________

அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் விருதை மாநாடு

5

விருத்தாச்சலத்தில் நடந்த கல்வி உரிமை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள் (தொடர்ச்சி)

தோழர் முருகானந்தம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாச்சலம்

privatization-of-education-cards-30 அன்று பார்ப்பானியம் ”பஞ்சமர்களும், சூத்திரர்களும் படிக்கக்கூடாது” என்றது. இன்றைய அரசும் அதையே செய்கிறது. தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக இன்று அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்படுகின்றன.

முருகானந்தம், பு.மா.இ.மு
முருகானந்தம், பு.மா.இ.மு

ஜேப்பியார் போன்ற முன்னாள் கள்ளச்சாராய ரவுடிகளும், ஜெகத்ரட்சகன், தளி ராமச்சந்திரன் போன்ற ஓட்டுக் கட்சிக்காரன்களும்தான் இன்று கல்வி வியாபாரம் செய்கின்றனர். அதனால் தான் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு என்று எந்தக் கட்சியும் வாய் திறப்பதில்லை.

தனியார் பள்ளிகளில் என்ன நடக்கிறது. பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், 12-ம் வகுப்புப் பாடத்தைப் 11-ம் வகுப்பிலும் என ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் படிக்க வைக்கின்றனர். பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கும் ரோபோட்டுகளாக, கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளைப் போல மாணவர்களை மாற்றுகின்றனர். இதன் மூலமாக தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்ட முயல்கின்றனர். ஆனால், நமது நாட்டின் அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் போன்ற எதையும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை.

privatization-of-education-cards-01‘அரசுப் பள்ளிகளில் படித்தால் அறிவு வளராது, ஆங்கிலம் தெரியாது, வேலை கிடைக்காது’ என்றும் கூறுகின்றனர். இது தவறு. கணிதமேதை இராமானுஜம், விஞ்ஞானி அப்துல் கலாம் போன்ற பல்துறை அறிவியல் மேதைகளும், இன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் அரசுப் பள்ளிகளில், தாய்மொழியில் படித்து வந்தவர்கள்தான்.

இன்று அரசுப் பள்ளிகளில் ஒருசில குறைபாடுகள் இருப்பது உண்மைதான். நமது வீட்டின் கூரை ஒழுகினால் அதை மாற்றியமைக்கிறோமே தவிர யாரும் வாடகை வீட்டிற்குச் சென்றுவிடுவதில்லை. அதைப்போல, அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைய நாம் போராட முன்வரவேண்டும். மாறாக, தனியார் பள்ளிகளில் கொண்டுபோய் நம் பிள்ளைகளைச் சேர்க்கக்கூடாது.

விருத்தாசலத்திற்கருகிலே மணற்கொள்ளை தொடர்ந்து நடந்து வந்தது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியும் மக்களுடன் இணைந்து போராடி மணற்கொள்ளையைத் தடுத்து அந்த மணல் குவாரியை மூடவைத்தன.

privatization-of-education-cards-27ஆர்.டி.ஓ “மணல் அள்ளலாம்” என்றார்; அப்பகுதி மக்கள், “மணலை அள்ள விடமாட்டோம்” என்று எதிர்த்தனர். ஆர்.டி.ஓ. பின்வாங்கிவிட்டார்.

அப்படியானால் அதிகாரம் யார் கையில் உள்ளது? போலீசு, அதிரடிப்படை என்று வைத்துள்ள அரசிடமா? அல்லது, உறுதியாகப் போராடி மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திய மக்களிடமா? சந்தேகமென்ன! உண்மையான அதிகாரம் மக்களிடம், நம்மிடம் தான் உள்ளது.

இதேபோல இந்தியா முழுவதும் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது அரசுப் பள்ளிகளை, நகராட்சிப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும்.

தோழர் ராஜு, ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Adv-Raju
வழக்குரைஞர் ராஜூ

இரண்டு விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று, அரசுப் பள்ளிகள் சரியில்லை என்று கூறுகிறார்கள்.

‘கட்டிடம், வகுப்பறை மோசமாக உள்ளது; ஒழுங்காகப் பாடம் நடத்துவதில்லை; அதனால் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடிவதில்லை; அங்கு பயிலும் மாணவர்களுடன் பழகினால் கெட்டுப்போய்விடுகிறார்கள்; இதனால் அவர்களது எதிர்காலம் பாழாகிவிடுகிறது’ என்றெல்லாம் கூறப்படுகிறது.

‘தனியார் பள்ளிகள் பளபளப்பாக உள்ளன; அங்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. எனவே, அதிக மதிப்பெண்கள் எடுத்து, நல்ல வேலைக்குச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்’ என்றும் கூறுகிறார்கள்.

privatization-of-education-cards-04தமிழகத்தில் சுமார் 18,000 தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளை நடத்தும் முதலாளிகளின் வாழ்க்கைதான் பிரகாசமாக உள்ளதே தவிர அங்கு பயிலும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றமடையும் என்பதற்கான சாத்தியம் எதுவுமில்லை. ஏனென்றால் இன்றைய சமூகச் சூழல் அப்படியுள்ளது.

தனியார் பள்ளியில் படித்து ஆங்கிலத்தில் சிறப்பான தேர்ச்சிபெற்று, 1190-க்கும் மேலே மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உறுதியாக வேலை கிடைத்துவிடும் என்று கூறமுடியுமா? முடியாது; அப்படியெல்லாம் இங்கே வேலைகள் கொட்டிக்கிடக்கவில்லை.

privatization-of-education-cards-05வெள்ளைக்காரன் வியாபாரம் செய்வதற்காக நம் நாட்டிற்கு வந்து, சூழ்ச்சியால் ஆட்சியைப்பிடித்து இங்குள்ள வளங்களையெல்லாம் சுரண்டி அவனது நாட்டிற்கு எடுத்துச் சென்றான். ஆனால் இன்றைய நமது ஆட்சியாளர்கள் நமது வளங்களையெல்லாம் சுரண்டி எடுத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வாரி வழங்குகிறார்கள். அதுதான் அவர்களது நோக்கம்; நமக்கு வேலை தருவதல்ல.

1927-ல் ஆசிரியர் மாநாடு ஒன்றில் பேசும்போது தந்தை பெரியார் ஆசிரியர்கள் சமூக சிந்தனையுடன் செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார். “ஆசிரியர்கள் நடமாடும் புத்தக அலமாரிகளாக, அதாவது துறைசார்ந்த புத்தகங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களாக மட்டுமே இருப்பதால் படிப்பைப் பற்றி மட்டுமே, பி.ஏ, எம்.ஏ என்று பட்டங்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்; அவர்கள் தமது வாழ்க்கை வளம்பெறுவதற்காக மட்டுமே மாநாடு நடத்துகின்றார்களே தவிர சமூகத்தின் படிப்பை, சிந்தனையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமின்றி இருக்கிறார்கள்” என்று அம்மாநாட்டிலேயே அவர்களைச் சாடினார். படிப்பு வேறு; அறிவு வேறு என்று அன்றே வேறுபடுத்திக் காட்டினார்.

privatization-of-education-cards-07 தாய்மொழிக் கல்விதான், தமிழ்வழிக் கல்விதான் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும். தாய்மொழியில் கல்வி கற்கும்போதுதான் குழந்தைகள் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்கின்றனர்.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும் என்பது மூடத்தனம் ஆகும். தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படித்து தமிழையும் சரியாகப் படிக்காத, ஆங்கிலத்திலும் தேர்ச்சியற்ற இரண்டுங்கெட்டான்களாக, படிப்பறிவற்ற ஆட்டுமந்தைகளாக, கூலி அடிமைகளைத்தான் இந்த அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

தனியார் பள்ளிகள் ஆண்களும், பெண்களும் இயல்பாக பேசிக்கொள்வதற்குக் கூட தடைவிதிக்கின்றன. ஆணும், பெண்ணும் இயல்பாகப் பழகி, நட்புடன் வளரும் வாய்ப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவதால் பின்னாட்களில் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் எளிய பிரச்சனைகளைக் கூட தீர்க்கும் வழிதெரியாமல் அவர்களது வாழ்க்கை சீரழிகிறது.

privatization-of-education-cards-08படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்று சேணம் பூட்டிய குதிரைகளாக வளர்த்தெடுக்கப்படும் தனியார் பள்ளி மாணவர்கள் சமூக அக்கறையற்ற சுயநலமிகளாகத்தான் சமூக வாழ்வில் வெளிப்படுகிறார்கள். பிரச்சனைகளை எதிர்கொண்டு, போராடி வெற்றிபெறும் ஆற்றலும் அவர்களுக்கு இருப்பதில்லை.

 

படிப்பு என்பது மனிதனின் சிந்தனையை, பகுத்தறிவை, தொலைநேக்குணர்வை, தொகுத்துப் பார்க்கும் அறிவை வளர்க்கவேண்டும். அவ்வாறு தொகுத்துப் பார்க்கும்போது தான் கல்வி தனியார்மயப் பிரச்சனை மட்டுமல்லாமல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது உள்ளிட்டு நாம் இன்று எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த அரசுதான் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். இந்த அரசமைப்பே நமக்கு எதிரானதாக மாறிவிட்டதை உணர்ந்துகொள்ளமுடியும். அவ்வாறு உணர்ந்துகொண்டால்தான் அதனை மாற்றுவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள முடியும்.

மக்கள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும்போதுதான் இந்த மாற்றங்களை நிகழ்த்த முடியும். அந்தப் பாதையில் மக்களைத் திரட்டுவதற்குத்தான் இம்மாநாடு நடைபெறுகிறது. மக்கள் தமது சொந்த முயற்சியில் அதிகாரத்தைக் கையிலெடுத்தால், கல்வி உரிமை மட்டுமல்லாமல் அனைத்து உரிமைகளையும் பெறமுடியும்.

திரு. செ.நல்லமுத்து, ஆசிரியர் – கோத்தகிரி.

privatization-of-education-cards-07அரசுப்பள்ளிகளைக் காக்கவேண்டியது ஆசிரியர்களாகிய எங்களது கடமை. ஆனால் நாங்கள் செய்யத் தவறிய அப்பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கும் ம.உ.பா.மையத்தைப் பாராட்டுகிறேன். இனி நாங்களும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோம்.

எனது பள்ளி மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட விருதுகளை, கோப்பைகளை வென்று வந்துள்ளனர். குறிப்பாக, கேரம் விளையாட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பல தனியார் பள்ளிகளைத் தோற்கடித்து மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளனர். இந்த ஆண்டு எனது பள்ளியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிக்கும் மாணவியர் கேரம் விளையாட்டில் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர். 20 மாணவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள். எனது பள்ளி மாணவர்களின் ஆங்கிலக் கையெழுத்து நீலகிரி மாவட்டத்திலுள்ள மற்றெந்தப் பள்ளி மாணவர்களுடையதைவிடவும் மிகவும் அழகாக இருக்கும்.

privatization-of-education-cards-08இன்று இரண்டு வயதுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். நம்பிக்கை, ஒழுக்கம், தியாகம், ஈகம், நகைச்சுவை உள்ளிட்ட நற்பண்புகளைக் கற்றுக்கொள்ளவேண்டிய வயதில் பாடப்புத்தகங்களைப் படிப்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை தனியார் பள்ளிகளில். ஆனால், அரசுப் பள்ளிகளில் இவை எல்லாமே மாணவர்களுக்குக் கிடைக்கும்.

பள்ளி மாணவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலே படிப்பு தானாகவே வந்துவிடும். எனது பள்ளியில் மாணவர்களைச் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் கற்றுக்கொடுக்கிறோம். எனது மாணவர்கள் எனது தெய்வங்கள். வகுப்பறை எப்போதும் கலகலப்புடன் இருக்கவேண்டும். ஆனால், தனியார் பள்ளிகள் மாணவர்களை சவங்களைப் போல மாற்றியுள்ளன.

privatization-of-education-cards-09 வகுப்பறைகளில் நகைச்சுவையுடன் பாடங்களைக் கற்றுக்கொடுத்தால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். குழந்தைகள் இயல்பிலேயே மிகவும் புத்திசாலிகள். அவர்களது புத்திசாலித்தனத்தை மேலும் வளர்ப்பதற்கு நல்ல கல்வி தேவை;  அப்படிப்பட்ட நல்ல, தரமான கல்வி தரும் பள்ளிகள் அரசுப் பள்ளிகளே!

தனியார் பள்ளிகளின் பகட்டுக்கு மயங்காமல் தரமான கல்வி தரும் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் பெற்றோர் சேர்க்கவேண்டும். தன் பிள்ளைகள் எந்தப் பாடத்தை ஆர்வமுடன் விரும்பிப் படிக்கின்றார்களோ அதில் மேலும் சிறப்பாக வளர்ந்திட ஊக்கப்படுத்தவேண்டும்.

privatization-of-education-cards-09

அன்புகாட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் பிறர் மீதும் அதேபோல அன்பைப் பொழியும். அரசுப் பள்ளிகள் தான் குழந்தைகளை அன்போடு வளர்க்கின்றன. அடக்கி வளர்க்கப்படும் குழந்தைகள் பிறரை அடக்கியாள நினைக்கும். தனியார் பள்ளிகளில் குழந்தைகள் அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, உங்கள் குழந்தைகள் நல்லவர்களாக, அடங்கி நடப்பவர்களாக வளர வேண்டுமென்றால் அரசுப் பள்ளிகளில் சேருங்கள்; கெட்டவர்களாக, வெடித்துக் கிளம்புவர்களாக மாறவேண்டுமென்றால் தனியார் பள்ளிகளில் சேருங்கள். எனவே, குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேருங்கள்! மகிழ்ச்சியாக வாழுங்கள்!

தாய்வழிக் கல்வியே சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும், புலவர் அ.சிவராமசேது, தலைமை ஆசிரியர்(ஓய்வு), விருத்தாசலம்.

புலவர் சிவராமசேது
புலவர் சிவராமசேது

தாய்மொழி என்பது தாய்ப்பால் போன்றது. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தான் எளிதில் சீரணம் ஆகும். அதேபோல தாய்மொழியில் படித்தால்தான் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். எளிதில் சீரணமாகாத புட்டிப்பாலைப் போல ஆங்கிலத்தில் படிப்பதும் சிரமமானதே.

ஆங்கிலக்கல்வி நெஸ்லேவின் 8 வகை நூடுல்ஸைப் போன்றது. அது எவ்வித சத்தும் இல்லை என்பதுடன் பல்வேறு நோய்களுக்கும் ஆளாக்கக்கூடியது; கெடுதலானது. அந்நிய மொழியில் புரியாமல் படிப்பவர்கள் படித்ததையே மீண்டும், மீண்டும் படித்து ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் விடையெழுதுவார்கள். அப்போது ஏதாவது மறந்துபோனால் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் தாய்மொழி மூலமாகப் புரிந்துகொண்டு படிப்பவர்களோ தமது சிந்தனைகளை விடைத்தாளில் சரளமாக எழுதுவார்கள்.

privatization-of-education-cards-10

தாய்மொழியில் படிப்பவர்கள் தமது பெற்றோர்களுடனும், உற்றோர்களுடனும், உறவினர்களுடனும் தாய்மொழியில் பேசிப்பழகி அன்பையும், நட்புறவையும் வளர்ப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இளமையிலிருந்து தம்மை ஆங்கிலப் பள்ளிக்கொட்டடிகளில் சேர்த்து வதைத்ததற்குப் பழிதீர்க்கும் விதமாக தமது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் சேர்ப்பார்கள் ஆங்கிலப் பள்ளியில் பயின்றவர்கள்.

privatization-of-education-cards-11

காந்தியடிகளும், இரவீந்திரநாத் தாகூரும் தாய்மொழிக்கல்வியைத் தான் வலியுறுத்துகிறார்கள். ரஷ்யா. ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளும் தாய்மொழியில் தான் கற்பிக்கின்றன. அறிஞர் அண்ணா முதல் அப்துல் கலாம் வரையிலும், கணிதமேதை இராமானுஜம், பெர்னார்ட்ஷா போன்றவர்களும் தாய்மொழியில் பயின்றவர்கள்தான். எனவே, நாமனைவரும் நமது தாய்மொழியில், தமிழ் மொழியில் பயிலவேண்டும். தமிழில் படித்தோருக்கு இட ஒதுக்கீடும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் தந்தால்தான் தாய்மொழிக் கல்வி வளரும். அதற்காக பெற்றோர்களும், மாணவர்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

நகர்மன்ற ஊழலை ஒழித்தால், நகராட்சிப் பள்ளிகள் சிறக்கும், மருத்துவர் மு. வள்ளுவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர், விருத்தாசலம்.

டாக்டர் வள்ளுவன்
டாக்டர் வள்ளுவன்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 529 நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் 12524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலும் 2% ஆரம்பக் கல்வி நிதிக்கு ஒதுக்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் ரூ 500 கோடி அளவுக்கு சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ளது. அதேபோல, சுமார் 5,00,000 ஏக்கர் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட வகையில் அதற்கான வரியாக ரூ 1,00,000 கோடி வசூலிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி வசூலிக்க வேண்டிய தொகை ரூ 75,000 கோடி. இதுபோல இன்னும் பல உள்ளன.

privatization-of-education-cards-23இவை அனைத்தையும் முறையாக வசூலித்திருந்தால் அந்த மொத்தத் தொகையில் 2% தொகையாக சில ஆயிரம் கோடி ரூபாய்கள் ஆரம்பக் கல்வி நிதியாக வந்திருக்கும். இதைக் கொண்டு நமது அரசுப் பள்ளிகளை சிறப்பாக நடத்தியிருக்க முடியும். ஆனால், லஞ்ச, ஊழல்களில் ஊறித் திளைக்கும் நமது அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் இதில் அக்கறையின்றி உள்ளனர். நமது வரிப்பணத்தைத் தின்று கொழுக்கும் இந்த அதிகாரிகளின் லட்சணம் இதுதான். எனவே, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சியிலும் வசிக்கின்ற மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். தத்தமது பகுதிகளில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தமது ஊராட்சி, நகராட்சி நிர்வாகத்தை செம்மைப் படுத்தவேண்டும். இவ்வாறு தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற்றால் தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தரம் உயர்ந்த பள்ளிகளாக மாற்ற முடியும்.

ஆசிரியர் செ. நல்லமுத்து, கோத்தகிரி

privatization-of-education-cards-22நான் வேலை செய்யும் கோத்தகிரி அரசுப் பள்ளியில் இதுவரை 20 சிறந்த மாணவ பேச்சாளர்களை உருவாக்கியுள்ளேன். பல விளையாட்டுகளை மாணவர்களை விளையாட உற்சாகப்படுத்தி, பயிற்சி கொடுத்ததின் மூலம் கோப்பைகளாலும், விருதுகளாலும் எங்கள் பள்ளி நிறைகிறது. பள்ளி மாணவர்களின் சேர்க்கையில் பின் தங்கியிருந்த எங்கள் பள்ளியில், இப்பொழுது மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிற்து.

வகுப்பறையில் மாணவர்களை எப்பொழுதும் கலகலப்பாக இருக்க சொல்வேன். இறுக்கமாக இருந்தால் எதுவும் மனதில் ஏறாது. வித்தியாசமான விக்குகள் வாங்கி வைத்திருக்கிறேன். அதை மாட்டிக்கொண்டு, பாடங்களை புதிய புதிய வழிகளில் நடத்தும் பொழுது, மாணவர்கள் எளிதாய் கற்றுக்கொள்கிறார்கள்.

வழக்குரைஞர் மீனாட்சி, சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

வழக்குரைஞர் மீனாட்சி
வழக்குரைஞர் மீனாட்சி

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த நீதிமன்றத்தை நாடினால், கடந்த காலத்தில் 11 பேர் கொண்ட பெஞ்ச் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது. உடனே அதைக் காண்பித்து வாதாடி, தடை வாங்கிவிடுகிறார்கள். அந்த மோசமான தீர்ப்பை உடைக்கவேண்டுமென்றால், 13 பேர் கொண்ட பெஞ்ச் தான் தீர்ப்பளிக்கவேண்டும். இப்பொழுது உள்ள தனியார்மய, உலகமய சூழலில் நடக்கிற காரியமா அது?

privatization-of-education-cards-20

தனியார் பள்ளிகளுக்கெதிராக நாம் அரசேயோ, சட்டங்களையோ, நீதிமன்றங்களையோ நம்பிப் பலனில்லை. நமக்கிருப்பது ஒரே வழிதான். அது, தனியார் பள்ளிகளைப் புறக்கணிப்பதுதான். அரசுப் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் உருவானவை; எனவே நாம்தான் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில்தான் அற்புதமான ஆசிரியர்கள் உள்ளனர். இன்று அரசுப் பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகளுக்குக் காரணம் இந்த அரசுதான். கல்விக்கென்று ஒதுக்கிய பணத்தைக் கூட முறையாகச் செலவிடாமல் அரசுப் பள்ளிகளை சீரழிவை நோக்கித் தள்ளுகிறது அரசு. எனவே, அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க அரசை நிர்ப்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுப்பதே இன்று நம்முன் உள்ள ஒரே தீர்வு ஆகும்.

தகவல்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

ஹைத்தி : ரொட்டி வழங்க கருப்பினப் பெண்களைச் சுரண்டும் ஐ.நா

1

லகின் வறுமை மிகுந்த நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிப்படை வீரர்கள் ஹைத்தி பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டியுள்ளனர்.

ஐ.நா அமைதிப்படை
ஐ.நா அமைதிப்படை

2004-ம் ஆண்டு ஹைத்தி அதிபர் அரிஸ்டைடுக்கு எதிராக ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது அந்நாட்டு ராணுவம். அரிஸ்டைட் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் அமெரிக்க ராணுவம்தான் தன்னை கடத்தியதோடு நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்ததாக அரிஸ்டைட் குற்றம் சாட்டினார்.

அப்போதிலிருந்து ஐ.நா.வின் அமைதிப்படையை ஹைத்தியில் நிறுத்திய அமெரிக்கா, தனக்கான ஒரு தலையாட்டி பொம்மையை `ஜனநாயக` முறைப்படி ஏற்படுத்தி, ஜனாதிபதி, பிரதமர், மேல் சபை, கீழ் சபை என பாரளுமன்ற கொலுவை அங்கு வைத்துள்ளது.

ஹைத்தியில் 2004-ல் இருந்து ஐ.நா.வின் அமைதிப்படையைச் (MINUSTAH-United nations stabilization mission in HAITI) சேர்ந்த சீருடைப்பணியாளர்கள் 6,806 பேரும் (ராணுவம் 4,604 பேர், போலீசு 2,202 பேர்), 1,459 பிற ஊழியர்களும் ஆக 8,394 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் இந்திய ராணுவத்தின் 426 பேரும் அடக்கம். 2014-2015 ஐ.நா.வின் நிதி நிலை அறிக்கையின் படி ஹைத்தியில் அமைதிப்படைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு $50 கோடி (சுமார் ரூ 3,198 கோடி).

ஐ.நா.வின் அமைதிப்படை என்ற உடன் ஏதோ சமணத்துறவிகள் மயிலிறகால் தரையை கூட்டிச் செல்லும் கற்பனைக் காட்சி ஏதாவது தோன்றினால் முதலில் அதை எச்சியைத் தொட்டு அழித்து விடுங்கள். நீல நிற இரும்பு தலைக்கவசமும், இயந்திரத் துப்பாக்கியும், குண்டு துளைக்கா உடையும், கையெறி குண்டுகளும் தரித்த கவச வாகனங்கள், ராணுவ டாங்கிகள் என அக்மார்க் கொலைகார ஆக்கிரமிப்பு ராணுவமே ஐ.நா.வின் அமைதிப்படை. புலிமார்க் சீகைக்காய் தூளுக்கும் புலிக்கும் இடையே என்ன சம்பந்தமோ அதே தான் ஐ.நா அமைதிப் படைக்கும் அமைதிக்கும்.

தருமி கேள்வியின் சாயலில், சேர்ந்தே இருப்பது எதுவென்றால் அன்னிய ஆக்கிரமிப்பு இராணுவங்களும், பாலியல் சுரண்டலும் எனுமளவு வரலாறு நெடுகிலுமே ஆக்கிரமிப்பு போர்களில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியே வந்திருக்கின்றனர். இந்தியாவின் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், ஈழம், ஹைத்தி எங்கும் `அமைதியை` நிலை நாட்டச் சென்றவர்கள் எல்லோருமே ஆக்கிரமிப்பு அதிகாரத்தின் காரணமாகவும், துப்பாக்கியின் பலத்தாலும் பாலியல் குற்றங்களை செய்ததே வரலாறு. அதைப் போன்ற இன்னுமொரு கேடுகெட்ட ராணுவத்தின் அத்துமீறலே ஹைத்தி பெண்களின் மீதான பாலியல் சுரண்டல்.

ஹைத்தி
மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள ஹைத்தி

ஹைத்தி இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க கைப்பாவை இராணுவ சர்வாதிகாரி ஃபிரான்கோயிஸ் டுவாலியரின் குடும்ப ஆட்சியில் சிக்கிச் சீரழிந்த நாடாகும். 1990-களில் போலி ஜனநாயக தேர்தலில் ஆட்சிக்கு வந்த அரிஸ்டைட் மற்றும் அவரது விசுவாசிகளால் ஊழல், மனிதஉரிமை மீறல், பஞ்சம் , படுகொலைகள் என சின்னாபின்னமாக்கப்பட்டது. அரிஸ்டைட் விரட்டியடிக்கப்பட்ட 2004 முதல் ஐ.நா அமைதிப்படையின் ‘பாதுகாப்பில்’ இருந்து வருகிறது. போதாக்குறைக்கு 2010-ம் ஆண்டில் 7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு ஹைத்தி பாதிக்கப்பட்டது.

ஐ.நா.வின் உள் மேற்பார்வை அலுவலகம் (office of internal oversight services) உலகின் மோசமான வாழ் நிலைகளை கொண்டுள்ள (ஐ.நா. வின் படைகள் நிலை கொண்டுள்ள 16 நாடுகள் உட்பட) 1.25 லட்சம் மக்களிடையே ஆய்வு செய்து, அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி 225 ஹைத்தியப் பெண்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவுக்காகவும், மருந்துக்காகவும், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களுக்காகவும் பாலியல் சுரண்டலுக்கு உடன்பட வேண்டி இருந்ததாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கு 18 வயதிற்கும் குறைவான குழந்தைகள்.

ஐ.நா அமைதிப்படை
பான் கீ மூனுக்கோ ஐ.நா. வின் “நேம் பேட்ஜ்” மாட்டிக்கொண்டு பாலியல் குற்றத்தை செய்வதுதான் கவலை அளிகிறது

அம்மக்களின் பசியைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் சுரண்டலைச் செய்யும் ரவுடிப் புத்தியுடைய கும்பல் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் அமைக்க பாடுபடுவதாக வாய்கிழிய பேச ஏதாவது தகுதி இருக்கிறதா? பான் கீ மூனுக்கோ ஐ.நா. வின் “நேம் பேட்ஜ்” மாட்டிக்கொண்டு பாலியல் குற்றத்தை செய்வதுதான் கவலை அளிகிறது. ‘செய்வது களவாடித்தனமானாலும் அதுல ஒரு நாயம் வேணாமாய்யா’ என சகுனியாக கவலைப்படுகிறார் இவர்.

உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய படைகள் மூலம் அமைதியை காத்து வருவதாக படம் காட்டுகிறது, ஐ.நா. தற்சமயம் காங்கோ, லைபீரியா, தெற்கு சூடான், ஹைத்தி உட்பட 16 நாடுகளில் ஆயுதம் தாங்கிய படைகளை நிறுத்தியுள்ளது ஐ.நா. அரசியல் நிலைத்தன்மை அற்ற நாடுகளில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், தேர்தல்களை நடத்துவதன் மூலம் அந்த நாடுகளில் ஜனநாயகத்தினை காத்துள்ளதாகவும் தனக்குத்தானே 12-க்கு 8 ஃபிளக்ஸ் வைத்துக் கொள்(ல்)கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த அடியாள் படையின் எண்ணிக்கை 20,000 பேரிலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது என்பது தற்செயல் நிகழ்வல்ல. உலகமயமாக்க சுரண்டலுக்காக ஏகாதிபத்தியங்கள் குறிப்பாக அமெரிக்காவை எதிர்த்து மக்கள் போராட்டங்களும், எழுச்சிகளும் உலகின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் வளத்தைச் சுரண்டவும், ஒடுக்கப்படும் நாடுகளின் மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும், `துப்பாக்கி முனையில்` வலுக்கட்டாயமாக தேர்தல்களை நடத்தி போலி ஜனநாயகத்தை நிலை நாட்டவும் போலீசு, உளவுப்படை, ராணுவம், தன்னார்வக்குழுக்கள் ஆகிய ஆட்கொல்லிகளை உள்ளிறக்கி விட்டு போராட்டத்தை மழுங்கடிக்கவும், ஜனநாயக சக்திகளை நசுக்கவும், ஒரு ஜனநாயக முகமூடி அணிந்த அமைப்பு தேவைப்படுகிறது.

ஹைத்தி நிலநடுக்கம்
2010-ம் ஆண்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹைத்தி மக்களுக்கு உதவும் கியூப மருத்துவர்கள்.

ஏகாதிபத்திய நாடுகள் சொந்த ராணுவத்தை இறக்க முடியாத நாடுகளிலும், காசை வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுக்கும் கமிசன் ஏஜண்ட் போல ஐ.நா சபையும் அமைதிப் படையை போன்ற அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகிறன. அவை நிறுவப்பட்ட காரணமும் அதுதான்.

ஐ.நா.வுக்கு என நிலையான ராணுவம் எதுவும் கிடையாது. ஏகாதிபத்திய நாடுகள் காசையும், பிற ஏழை நாடுகள் அடியாட்களையும் அமைதிப்படை பணிக்கு சப்ளை செய்கின்றன.

அமைதிப்படைக்கு மிகப்பெரிய நிதிப்பங்களிப்பு அளிக்கும் முதல் நான்கு நாடுகள் அமெரிக்கா (28.38%), ஜப்பான் (10.83%), பிரான்ஸ்(7.22%), ஜெர்மனி(7.14%). இவர்களெல்லாம் உலக அமைதியை விரும்பி, போரை வெறுத்த புத்தர்கள் அல்ல. அமைதிப்படை வீரர்கள் ஹைத்தி பெண்களுக்கு அளித்த பால் பவுடர் டப்பாவுக்கும், துண்டு ரொட்டிக்கும் பின் பாலியல் சுரண்டல் என்னும் தேவை இருந்ததைப் போல ஏகாதிபத்திய நாடுகளுக்கு வேறு வகையான சுரண்டல் நோக்கங்கள் உள்ளன.

துசா
1804-ல் ஹைத்தி விடுதலைக்கு தலைமை வகித்த துசா லூவேதியூர்

19-ம் நூற்றாண்டில் பிரான்சின் காலனிய ஆக்கிரமிப்பை முறியடித்து 1804-ம் ஆண்டு லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் முதல் குடியரசாக விடுதலை பெற்றது ஹைத்தி. முதல் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகள் ஹைத்தியில் இறங்கி அடுத்த 20 ஆண்டுகள் நேரடி ஆக்கிரமிப்பை தொடர்ந்தன. இப்போது ஹைத்தியில் அமைதியை நிலைநாட்ட பிரான்சும், அமெரிக்காவும் படைகள் ஏற்பாடு செய்கின்றன என்பதிலிருந்து ஐ.நா அமைதிப்படையின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

அமைதிப் படை பணிக்கு அடியாள் பங்களிப்பாளர்களாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பில்டிங்கும், பேஸ்மெண்ட்டும் ஒருசேர பலவீனமான நாடுகள் தான் இடம் பிடித்துள்ளன. முதல் நான்கு இடங்களில் வங்கதேசம் (9380 பேர்), பாகிஸ்தான் (8,797 பேர்), இந்தியா (8,102 பேர்), நேபாளம் (5,532பேர்) ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால், உலக நாட்டாமை அமெரிக்கா இந்த அமைதிப்படைக்கு அளித்திருக்கும் அடியாட்களின் எண்ணிக்கையோ வெறும் 80. கலவரம் செய்ய சங்க பரிவாரங்களுக்கும், `உலக அமைதியை` நிலை நாட்ட அமெரிக்காவுக்கு அவுட் சோர்சிங் தேவை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலோ வைரஸ்காய்ச்சலுக்கு அனுப்பிய மருத்துவர்களின் எண்ணிக்கையோ பத்து விரல்களுக்குள் அடங்கி விடும். ஆனால், எபோலோ வைரஸ் பரவிய மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுந்த போது அமெரிக்கா, லைபீரியாவுக்கு 3,000 ஆயுதம் தாங்கிய அடியாட்களை அனுப்பி வைத்தது. இவர்களின் பண்பு பற்றியெரியும் வீட்டில் சுருட்டு பற்ற வைக்கும் பண்ணையார்களுடையது.

இன்று உலகின் மிக மோசமான பஞ்சத்தாலும், எல்லா வகைச் சுரண்டலாலும் அடிமைப்பட்டு கிடக்கிறது ஹைத்தி. உலக நாடுகள் அனைத்தின் காலனியாக வல்லரசுகளின் சிலந்தி வலையில் ஐ.நா போன்ற கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளின் அடியாள் படையை சுமந்துகொண்டு காயும் வயிற்றுடன், பஞ்சடைத்த கண்களுடனும், எல்லா வகைச் சுரண்டல்களையும் வேதனையுடன் அனுபவித்துக் கொண்டு மற்றுமொரு விடுதலைப் போருக்காக காத்திருக்கிறது.

– எட்கர்

தொடர்பான செய்திகள்

கவிதா முத்துச்சாமியின் கேள்விக்கு என்ன பதில் ?

1

சி‌ஆர்‌ஐ தொழிலாளர் வீட்டில் நேர்காணல் – 1

தான் அடிமையென்று உணராமல் இருப்பது தான் அடிமைத்தனத்தை விட மோசமானது” என்றொரு வழக்கு உண்டு. இங்கே இந்த வகையினர் பெரும்பான்மையாக உள்ளனர்.

எனினும் அடிமைத்தனத்தை உணர்ந்து சக மனிதர்க்கும் உணர்த்தி போராடத் தூண்டும் சமூகத்தின் உயிர்ப்பான மனிதர் குழாம் மிகச் சிறுபான்மையாக இருப்பினும் இரட்டிப்பு வேகத்தில் வளரக் கூடியது.

அப்படியான ஒரு அமைப்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இருப்பதும்; அதன் நிகழ்ச்சிப் போக்கில் சமரசமற்ற போராட்டங்கள் இருப்பதும் ஆச்சரியமல்ல.

அதில் ஒரு வகைமாதிரி போராட்டமாக கோவை சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர் போராட்டம் இருப்பதும் இதனாலேயே அரசுக்கு சவாலாக மாறி கோவை பு.ஜ.தொ.மு நிர்வாகிகளின் தொடர்ச்சியான கைதும் வாசகர்களும் தோழர்களும் அறிந்ததே.

முத்துசாமி
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முத்துசாமி சி‌.ஆர்‌.ஐ யின் வளர்ச்சிக்கு உரமாக கொடுத்திருக்கும் உழைப்பு இருபது வருடங்கள்

குடும்பத்தோடு, மனைவி முதல் குழந்தைகள் ஈறாக தான் கொண்ட கொள்கையை வரிக்கச் செய்து போராட்டக் களத்துக்கு அழைத்து வருவதில் பு.ஜ.தொ.மு மற்ற தொழிற்சங்களுக்கு முன்னோடி. அப்படி களத்துக்கு வந்து கோவை மாவட்ட ஆட்சியரையும் அவருக்கு அடுத்த நிலை அதிகார மையமான தாசில்தாரின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பெண் தொழிலாளிகளின் வாழ்க்கையை நேரடியாக அறிந்து கொள்ளச் சென்றோம்.

முதலில் சி‌.ஆர்‌.ஐ தோழர் முத்துசாமி வீடு. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முத்துசாமி சி‌.ஆர்‌.ஐ யின் வளர்ச்சிக்கு உரமாக கொடுத்திருக்கும் உழைப்பு இருபது வருடங்கள். அவரது மனைவியின் பெயர் கவிதா.

இனி கவிதா முத்துசாமியின் வார்த்தைகளில்…

நீங்க தாசில்தார்கிட்ட பேசும் போது என்ன தீர்வு சொன்னாரு?

“22-ம் தேதி பேச்சு வார்த்தைல பேசிக்கலாம்”னு சொன்னாரு.

அதுக்கு, “நாங்க இங்கிருந்து ஒரு முடிவு தெரியாம போக மாட்டோம். வாடகை கொடுக்க முடியல. குழந்தைங்களோட வந்திருக்கோம். சாப்பாட்டுக்கே வழியில்லாம சிரமப்பட்டுட்டு இருக்கறோம். 90 நாளாச்சு அதுக்கான முடிவு சொல்லுங்க. நீங்க வெளியே இருந்து பணம் வாங்கிட்டு இந்த மாதிரி பண்ணுறீங்களா?” அப்டின்னு கேட்டேன்.

“இருங்கம்மா, யாராவது ரெண்டு பேர் மட்டும் பேசுங்க. இத்தான பேரு பேசுனா எப்பிடி பேசறது. மெதுவா பேசுங்கம்மா…” -னு சொல்றாரு.

“26-ம் தேதி கதவை சார்த்தீட்டாங்க… சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சோதி வந்தாரு. இன்ஸ்பெக்டர் ஆஃப் பேக்டரி ல இருந்து வந்தாங்க. இவங்க, எல்லாத்துக்கும் ஒரே பதில் ‘மேலிடத்துல இருந்து உத்தரவு, நாங்க என்ன செய்ய முடியும்’னு சொல்றாங்க.

சரி, பதினைந்து நாளுக்கு அப்புறமாவது ஏதாவது முடிவு தெரியும்னு போனோம். அப்பவும் இதே பதில் தான்.நாங்க வாடகை வீட்டுல இருக்கறம். மூவாயிரம் வாடகை. மூணு மாசமா வாடக கொடுக்க முடியல. எங்களுக்கு பதில் சொல்லுங்க” அப்டின்னு சொன்னா,

“22ஆம் தேதி பேசிக்கலாம்மா. முதலாளியே வருவாரு”-னு சொன்னாங்க.

திருமதி கவிதா முத்துசாமி
அடுத்தவங்க வயித்துல அடிச்சிட்டு நீ என்னத்த போயி சுப காரியம் பண்ற, உனக்காகத்தானே உழைச்சு கொடுத்துருக்கோம். நீ கல்யாணத்துக்கு 100 ரூவா செலவு பண்றீன்னா… தொழிலாளிகளுக்கு 10 ரூவா செய்யி

இந்தப் போராட்டம் 90 நாட்களா நடக்குது.. வருமானம் இல்லாம குடும்பத்த எப்பிடி சமாளிக்கறீங்க..?

நான் ஒரு ஆள் வேலைக்கு போறங்க. 5000 ரூவா வருது சம்பளம். அதிலயும் லீவு போட்டுட்டா 4000 தான் கெடைக்கும். அத வெச்சுதான் இருக்கறத வெச்சு ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

இந்தப் போராட்டத்தை பற்றி பக்கத்து வீடுகளில் உங்கள் சொந்தக்காரங்களில் என்ன சொல்றாங்க..?

போராடுங்க. கண்டிப்பா கிடைக்கும் அப்டின்னு ஒரு தரப்பு வாதம். இன்னொரு பக்கத்துல, இப்பிடியே போய்ட்ருந்தா என்ன பண்றது. சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. வாடகை வேற தரணும்னு.

அனைத்து வழிகளில் போராடியும் ஏ‌.சி‌.எல், டி‌.சி‌.எல் முதல் கலெக்டர் வரையிலானவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான நிலையையே எடுக்கிறார்கள். காவல் துறையும் இவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி..?

பணம் தான் மெயின் காரணமா தெரியுது. நம்ம கிட்ட அந்த இது இல்ல, தேவையுமில்ல. மக்கள் தான் நமக்காக போராடணும்.

வீட்டில இருக்கற எல்லா பொம்பளைங்களும் வரணும். எல்லாருமே போராடுனாதா ஜெயிக்க முடியும். எல்லா கட்சி மேலயும் வெறுப்பாதா இருக்கு. நாமெல்லாம் ஓட்டுப் போட்டுதான் ஜெயிக்க வைக்கறோம். எந்த ஆட்சி வந்தாலும் நமக்கு எதும் கெடையாது.

கஷ்டப்பட்டாதான் நமக்கு கூலின்னு ஆயிபோச்சு. கஷ்டப்பட்ட கூலியே கிடைக்கலேங்கற போது நாம என்னதான் பண்றது.

உங்க கணவர் சிறைக்கு போனது பற்றி உங்க கருத்து..?

தப்பான விசயத்துக்காக போகல. நல்லதுக்காக தான் போயிருக்காரு. இதுனால நாள பின்ன எதுவும் பாதிப்பு வரக்கூடாதுன்னு மட்டும் நினைக்கறேன்.

இவரு சிறைக்கு போனது பற்றி சொந்தக்காரங்க பக்கத்து வீட்டுல லாம் என்ன சொல்லுறாங்க…?

யாரும் எதுவும் சொல்லல. நல்லபடியா வந்துருவாரு. அப்டின்னு மட்டும் தைரியம் சொன்னாங்க. அவரோட அம்மா மட்டும் அழுதாங்க. “இவனுக்கு எதுக்கு அந்த வேலை, எழுதிக் கொடுத்துட்டு வந்துற வேண்டியது தானே” அப்டின்னு.

அப்புறம் பையனும் பொண்ணும்தான் ஒரே அழுக்காச்சு. பொண்ணுதான், “அப்பாவுக்கு ஏதாவது ஆயிருமா. அடிச்சிருவாங்களா” அப்டின்னு ஒரே அழுகை.

ஒரு வேளை 22-ம் தேதி பேச்சுவார்த்தைல முடிவு எதிர்மறையா வந்தா அடுத்த கட்டமா என்ன பண்ணலாம்..?

கதவை உடைக்கலாம்.

நேர்மையான வழில நம்ம போறோம். அதுக்கும் அவன் வல்லீனா, அப்புறம் ஏதாவது பண்ணிதான் ஆகணும். கதவ உடச்சு பார்ப்போம். அதுக்கு மேல அவனுக என்ன பண்ண முடியுமோ பண்ணட்டும்.

சங்கத்த பற்றி என்ன நினைக்கறீங்க..?

சங்கம் நல்ல சங்கம்தான். ஆனா இவரு வெளியே வர லேட் ஆகும் போது கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏன் லேட் ஆகுதுன்னு குழப்பமா இருந்துச்சு. அப்புறம் ஒண்ணும் இல்லை.

இந்தப் போராட்டத்துக்காக உங்க கணவர் மறுபடியும் ஜெயிலுக்கு போறத பற்றி என்ன நினைக்கறீங்க.?

நீங்கல்லாம் இருக்கீங்க, எப்டியும் வெளியே கொண்டு வந்துருவீங்க… இனிமே நாங்களும் வரோம். அவங்க ஒரு பக்கம் நாங்க ஒரு பக்கம் இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.

நான் ஆரம்பத்துல இருந்து ஆதரவு தான். குமாரவேல் அண்ணா கிட்ட கூட சொன்னேன். “அண்ணா, போராடுங்க தேவைப்பட்டா நாங்களும் வரோம். ஏதாவது முடிவு கிடைக்கட்டும். நம்ம தப்பு செயல. நம்ம தப்பு செய்யாத போது எதுக்கு அடிமையா இருக்கணும்”.

முதலாளி கல்யாணத்துல வந்து நாம இப்பிடி பாடை கட்டுவோம்னு சொன்னது சரியா..?

அவன் அந்த அளவுக்கு பண்ணியிருக்கான், நம்மளுக்கு அந்த வேதனை, அதுனால அப்பிடி பண்ணிருக்கோம்.

இல்ல, நாம ஒரு சுப காரிய

அடுத்தவங்க வயித்துல அடிச்சிட்டு நீ என்னத்த போயி சுப காரியம் பண்ற, உனக்காகத்தானே உழைச்சு கொடுத்துருக்கோம். நீ கல்யாணத்துக்கு 100 ரூவா செலவு பண்றீன்னா… தொழிலாளிகளுக்கு 10 ரூவா செய்யி. அதுக்கே இப்பிடி பண்ணும் போது நாம என்ன செய்ய முடியும்.

-தொடரும்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?

1

இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும்,

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
கட்டுரையின் 2-வது பகுதி.

ஜனநாயகத்திலிருந்து மக்களை விலக்கி வைக்கும் கோடீசுவரர்களின் ஆட்சியாக

ந்தாவதாக, இன்று எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றால் கூட, குறைந்தபட்ச தகுதி கோடீசுவரனாக இருக்க வேண்டும்; சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்க குறைந்தது 5 கோடி ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும். எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் இதை ஒரு விதியாகவே ஆக்கி விட்டன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வது, பருத்து கொழுத்த பன்னாட்டு நிறுவனங்களும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நமது நாட்டின் வளங்களையும் அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும் ஒட்டச் சுரண்டுவதற்கான முகவர்களாகச் செயல்படுவது, இந்தச் சேவைக்காக கார்ப்பரேட் முதலாளிகள் அடிக்கும் பகற்கொள்ளையில் ஒரு பங்கை பெற்றுக் கொள்வது – என்ற திருப்பணியைச் செய்வதற்காக யார் ஆட்சியில் இருப்பது என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக மட்டுமே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. மற்றபடி, வேறு எந்த கொள்கையோ, இலட்சியமோ, நாட்டுப்பற்றோ இவர்களிடம் இல்லை.

கல்விக் கொள்ளையர்களும், தொழில் அதிபர்களும்
கல்விக் கொள்ளையர்களும், தொழில் அதிபர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கப்படும் அவலம் : (இடமிருந்து) தம்பிதுரை (அ.தி.மு.க), ஜெகத்ரட்சகன் (தி.மு.க), நிதின் கட்காரி (பா.ஜ.க), நவீன் ஜிண்டால் (காங்கிரசு)

பி.ஜே.பி., ஜெயலலிதாவின் கட்சி போன்ற சில கட்சிகள் பார்ப்பனியத்தை அரியணையில் ஏற்றுவது என்ற நோக்கோடு செயல்பட்டாலும், மேலே சொன்னவாறு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிப்பதற்கோ, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதிலோ இவர்களுக்கும் பிற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) லிபரேசன், சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற ’இடதுசாரி’ கட்சிகள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கும் எதிராக எடுக்கும் நிலைப்பாடுகள் சந்தர்ப்பவாதமாக இருக்கும் அதேவேளையில், இக்கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் உட்பட அடிமட்ட ஊழியர்கள் வரை பலர் இலஞ்ச இலாவண்யம், மோசடிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு இவர்களின் தலைமையிலான அரசுகளே சேவை செய்பவையாகவும் இருக்கின்றன; மேலும், இவர்கள் ஏதாவது ஒரு ஆளும் வர்க்க / போனபார்டிஸ்ட், காரியவாத, பிழைப்புவாத கட்சிகளின் கூட்டணியில் மாறி மாறி சந்தர்ப்பவாதமாகப் பங்கேற்கின்றனர். இவர்கள் சேர்ந்துள்ள கூட்டணி பதவிக்கு வந்து, அந்த அரசுகள் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான சாதனமாகச் செயல்படும்போதும் கூட்டணியிலிருந்து விலகாமல், மென்மையான விமர்சனங்களை வைத்து விட்டு தொடர்ந்து ஆதரித்து, தங்களால் முடிந்தவரை அரசு சன்மானங்களைப் பெற்றுக் கொள்வதிலும் பதவி சுகம் காண்பதிலும் திருப்தி கொள்கிறார்கள். இவ்வாறு இவர்களும் ஆளும் வர்க்க / பிழைப்புவாத கட்சிகளின், கோடீசுவரர்களின் கையாட்களாக செயல்படுகின்றனர்.

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!கோடீசுவரர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்; நிற்க முடியும் என்பதோடு, தனியார்மய தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கம் மிகவும் கருணையுடன் பேசும் தருணங்களில் கூட ’அனைவரையும் தழுவிய வளர்ச்சி’ (Inclusive growth) என்று கூறுகிறதேயன்றி பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தல் என்பதையோ, நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் வழங்கி கைதூக்கி விடுதல் என்பதையோ பேசுவதில்லை. இத்தகைய ‘கொள்கை வழிபட்ட அரசியல்’, அனைத்தையும் ‘ஜனநாயகத்திலிருந்து’ துடைத்தெறிந்து விட்டது. இதன்மூலம் வேறுபட்ட அரசியல் கொள்கைகளுக்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பின்னால் மக்கள் அணிதிரளுதல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அதனடிப்படையில் வாக்களித்தல் என்பதற்கான சாத்தியத்தையே நாடாளுமன்ற அரசியல் அரங்கிலிருந்து புதிய தாராளவாதம் எனப்படும் மறுகாலனியாதிக்கப் போக்கு நீக்கி வருகின்றது.

தேர்தல் லஞ்சம்
கொள்கைகளைப் பேசி ஓட்டுக்களை பெறுவதற்குப் பதிலாக பணத்தையும், பொருட்களையும் இலஞ்சமாகக் கொடுத்து ஓட்டுக்களைப் பொறுக்கும் கிரிமினல் வேலையாக முதலாளித்துவ தேர்தல் முறை மாறி விட்டது.

‘சிறந்த அரசாளுமை’ (good governance) என்பதே எல்லா அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் இப்போக்கு வரையறுத்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களால் முன்தள்ளப்படும் புதிய தாராளவாத வகையிலான கட்டுமான சீர்திருத்தங்களைக் கறாராகவும் ஈவு இரக்கமின்றியும் அமுல்படுத்துவதையே சிறந்த அரசாளுமை என்று உலக முதலாளித்துவம் போற்றுகிறது. மேலும் ‘சுயமாக’ சுறுசுறுப்பாக இயங்கும் அரசு’ (Proactive state) என்பதையும் மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் ’தோல்வியுற்ற அரசாக’ (failed state) இருக்கக்கூடாது என்பதையும் முன்தள்ளுகிறது.

சிறந்த அரசாளுமை, நல்லாட்சி போன்ற முழக்கங்களையே இன்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் வரித்துக் கொண்டு விட்டன. இதற்காக உலகவங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது அரசுக்கு அளிக்கும் சான்றிதழையும் பெருமையுடன் விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. மேல்நிலை வல்லரசுகளால் திணிக்கப்பட்ட இந்த கட்டுமான சீர்திருத்தங்களின் எல்லைக்குள் நின்றுதான் நாடாளுமன்ற அரசியலில் முதலாளித்துவக் கட்சிகள் தமக்குள் மோதிக் கொள்கின்றன. இவைகளுக்கிடையில் வேறுபாடுகளே இல்லாத நிலைமையில், தேர்தல் போட்டியும் மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக இல்லை. மாறாக, தனிநபர் பற்றிய குணாதிசயங்கள், திறமைகள், அவர்கள் செய்த இலஞ்சம் மற்றும் பிற முறைகேடுகள், மோசடிகள், சேர்த்த சொத்துக்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகின்ற, நபர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியாகவே தேர்தல்கள் இருக்கின்றன.

கொள்கை வேறுபாடுகள் அற்றுப் போனதால் அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் சாபக்கேடுகளான சாதி, மதவெறி ஆகியவற்றைத் தூண்டி விட்டும், இலவசத் திட்டங்களை அறிவித்தும், நேரடியாக ஓட்டுகளுக்கு விலை பேசியும்தான் ஓட்டுகள் அறுவடை செய்யப்படுகின்றன. அரசு அதிகாரத்திலிருந்து சொல்லிக் கொள்ளப்படுகிற ஜனநாயகத்தை வெளியேற்றி விட்டு, முதலாளித்துவ வர்க்கம் அதனைக் கைப்பற்றியிருப்பது போலவே, எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் ஒழிந்து ஒரு கும்பல் அல்லது குடும்பத்தின் அதிகாரமாகச் சீரழிந்திருக்கிறது. அரசாளுமையிலிருந்து அரசியலை விலக்கிவிட்ட இந்த ஜனநாயகத்தில்தான் ‘முறையாக’ தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்திருக்கின்றன.

தேர்தல் கருப்புப் பணம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது ஓட்டுக்களைப் பெறுவதற்காகப் பல்வேறு ஓட்டுக்கட்சிகளின் வேட்பாளர்கள் பதுக்கி வைத்திருந்த 195 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அறிவித்தது, தேர்தல் கமிசன். தேர்தல் என்பது கருப்புப் பணத் திருவிழா என்பதன் சாட்சியம் இது.

இதற்கேற்ப தேர்தல் நடத்தை முறைகளையே கோடீசுவரர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாக, பரந்துபட்ட உழைக்கும் மக்களை அதிலிருந்து விலக்கி வைக்கின்ற நடத்தை முறைகளாக ஆளும் வர்க்கங்களே தேர்தல் கமிஷன்கள் மூலம் அமல் நடத்துகின்றன. சேஷன் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை சேஷனின் விசேட திறமை, தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற அவரது இலட்சியம், அதாவது ஒரு தனிநபரின் முன்முயற்சி என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. மாறாக, ஆளும் வர்க்கம் மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப அரசு, தேர்தல் முறை ஆகியவற்றில் கொண்டு வந்துள்ள பொது மாற்றங்கள் என்று இதைப் பார்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம், முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தில் சீரழிவும், ஊழல்களும், ரவுடித்தனமும், அராஜகங்களும், முறைகேடுகளும், மோசடிகளும், சந்தர்ப்பவாதங்களும், பிழைப்புவாதங்களும் மலிந்து நாறுவது என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்துடன் மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து எல்லா சமூக மதிப்பீடுகளும் அறநெறிகளும் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் ஏற்கெனவே நாறிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்திலும் ஏற்பட்டு, தேர்தல் ஜனநாயக நடைமுறைகள் மீதும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதும் மக்களிடையே வெறுப்பும் அவநம்பிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, இந்த சமூக அமைப்பு மற்றும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து புரட்சிகர இயக்கங்களின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தடுக்கும் நோக்கிலும் ஆளும் வர்க்கங்கள் தேர்தல் கமிசனைக் கொண்டு கடுமையான தேர்தல் நடத்தை விதிகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன.

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!ஆனால், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் எந்த விதத்திலும் மக்களுக்குப் பணம் கொடுத்தல், பிரியாணி, பீர் விருந்துகள், அன்பளிப்புகளை வழங்குதல், ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை வாரி வழங்குவோம் என்று கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து மக்களை ஈர்த்தல், சாதிய உணர்வுகளைத் தூண்டியும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டும் ஓட்டுப் பொறுக்குதல் போன்ற நடைமுறைகளைத் தடுக்கவில்லை; மாறாக இவை கனஜோராகவே நடந்து கொண்டிருக்கின்றன, அதிகரித்து வருகின்றன என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலும், குறிப்பாக திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நிரூபித்துள்ளன. சில கட்சி வேட்பாளர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்வதும், தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக அமைச்சர்கள் உட்பட பலபேர் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்வதும், பிறகு தேர்தல் முடிந்தவுடன் இந்த வழக்குகளை அப்படியே விட்டுவிடுவதும்தான் நடைமுறையாக உள்ளது. யாரும் தண்டிக்கப்படுவதில்லை. பதவியும் பறிக்கப்படுவதில்லை.

முன்பெல்லாம் தேர்தல் என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லா உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளும் பிரச்சார முறைகளைக் கொண்டதாக, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார முறைகள் எல்லாம் அனுமதிக்கப்பட்டு, இரவு பகலாக ஒரு இரண்டு மாத காலத்திற்கு திருவிழா போல நடைபெறும்; கட்சித் தொண்டர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்; ஆனால், மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப இன்று தேர்தல் என்பது கோடீசுவரர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார நடைமுறைகள் மட்டுமே கொண்டதாக மாற்றப்பட்டு விட்டது. தொலைக்காட்சி நிறுவனம் நடத்த, செய்திப் பத்திரிகைகள் நடத்த அல்லது அவைகளில் விளம்பரம் செய்ய, கார்களில் பவனி வர ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே, அதாவது கோடீசுவர வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வண்ணம் தேர்தல் முறைகள் மாற்றப்பட்டு விட்டன.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் என்பது குத்தாட்ட ஆபாச வக்கிரமாக மாறிப் போனது.

கொள்கை, கோட்பாடு என்று எந்த வெங்காயமுமின்றி ஓட்டுக்கட்சிகள் அனைத்தும பிழைப்புவாதக் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பிரியாணியுடன் நாள் ஒன்றுக்கு ரூ 200 கொடுத்தால்தான் வேலை செய்யும் ‘தொண்டர்களை’க் கொண்டதாகவே இவைகள் மாறிவிட்டன. பணப்பட்டுவாடா உட்பட பல முறைகேடுகளை ஒழித்து நேர்மையான தேர்தலை நடத்துவது என்ற முகாந்திரத்தில் 85 விழுக்காடு உழைக்கும் மக்கள் தேர்தலில் பங்கேற்பது உட்பட பிரச்சாரத்தில் ஈடுபடுவது வரை தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். பலாத்காரமாகத் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒரே வேலை வாக்களிப்பது மட்டுமே. அவ்வளவுதான்! அதுவும் தேர்தல் நடத்துவதற்கான காலம் குறுக்கப்பட்டு அவசரம் அவசரமாக நடத்தப்படுகின்றது. பத்து அல்லது 15 நாள் பிரச்சாரத்தில் தேர்தல் முடிந்து விடுகின்றது.

எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கவேண்டும் என்ற வெறி; ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் நாலு சீட்டாவது ஜெயித்தால்தான் கட்சியையே தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லாவிட்டால் காக்காய்கள் கூட்டத்தில் கல்லெறிந்தது போல கட்சி நிர்வாகிகள் ஓடிப் போய் விடுவார்கள் என்ற பீதி ஆகிய ‘உன்னத நோக்கங்களே’ இன்று கட்சிகளை வழிநடத்துகின்றன. இந்த நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பவாதத்திற்கும் அவமானத்திற்கும் அவமதிப்புகளுக்கும் இழிவுபடுத்தலுக்கும் எல்லாவிதமான பிழைப்புவாதங்கள், தகிடுதத்தங்களைச் செய்யவும் எல்லா தேசிய, பிராந்திய, சாதியக் கட்சிகளும் கூட்டணிகள் அமைத்துக் கொள்கின்றன. கொள்கை, இலட்சியம், தேசப்பற்று, சமூகப்பற்று போன்று எதுவும், எந்த மதிப்பீடும் அறநெறியும் இக்கட்சிகளிடம் இல்லை.

தேர்தலுக்கு முன்பு அமைக்கப்படும் கூட்டணிகள் தேர்தல் முடிந்தவுடன் கலைந்து புதிய கூட்டணிகள் அமையும்; தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகள் மாறும். அதேவேளையில், கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு சேவை செய்வதிலும் தங்களது தலைமையிலான அரசுகளை அதற்கான கருவியாகப் பயன்படுத்துவதிலும், அதன்மூலம் எல்லாவிதமான முறைகளிலும் தங்களுக்கான சொத்துக்களைக் குவித்துக் கொள்வதிலும் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆட்சி நடத்துகின்ற, அரசை இயக்குகின்ற கட்சிகளின் தன்மையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன.

இன்னுமொரு மாற்றம் என்னவென்றால், எல்லா முதலாளித்துவ தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பினாமிகளின் (சாதிக் பாட்சா, பல்வா போன்ற பினாமிகளின்) பேரில் சுயநிதிக் கல்லூரிகள் நடத்துகிறார்கள்; ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகோடியாகச் சொத்து சேர்க்கிறார்கள்; மணல் திருட்டு நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள்; கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பங்குதாரர்களாக உள்ளனர். கனிம வள சுரங்கத் தொழில் நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள். சொந்த மாநிலத்தில் தொழில் நடத்தினால் தெரிந்து விடும் என்பதால் வெளிமாநிலங்களில் தொழில் நடத்துகிறார்கள். இவ்வாறு அரசியல்வாதிகள் முதலாளிகளாக மாறியுள்ளனர்.

இதன் மறுபக்கமாக முதலாளிகள், குறிப்பாக, அவர்களின் இளைய வாரிசுகள் இன்று அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். முதலாளி வர்க்கத்திற்காக அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆள்வது மாறி, முதலாளி வர்க்கத்தினரே இன்று நேரடியாக ஆட்சி செலுத்துவதும், முதலாளிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ‘சோசலிசம்’, ‘சமூக நீதி’ போன்ற கொள்கைகளின் அடிப்படையில் வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்ற திட்டங்களைப் போட்டு அரசியல் சேவை செய்பவர்கள், தொண்டாற்றுபவர்கள் என்ற நிலைமாறி அவர்களே முதலாளிகளாக மாறி நேரடியாக சுரண்டுபவர்களாகவும் ஒடுக்குபவர்களாகவும் மாறிவிட்டனர்.

(தொடரும்)
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

கட்டுரையின் முதல் பகுதி : அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !

ரிச்சர்டு படிக்கணும்னா பவுலா வேல பாக்கணும்

13

ரிச்சர்டும் பவுலாவும் தட்டில வச்சி – படக்கதை

கொடுத்து வச்சவங்க பற்றிய ஒரு சிறுசரிதை
1-0
1-1
1-2
2-0
2-1
2-2
3-0 3-1
3-2
4-0
4-1
4-2

ஆங்கில மூலம் : The Pencilsword: On a plate
தமிழ் மொழிபெயர்ப்பு : செழியன்
தமிழ் வசனங்கள் சேர்ப்பு : ஓவியர் முகிலன்

இந்தியாவில் மாடுகள் : புனிதமா பொருளாதாரமா?

9

cowந்திய விவசாயிகளின் மாட்டுப் பிரச்சனை என்பது இந்து மதவாதிகள் கூறுவதைப் போல கோமாதா என்ற புனிதப் பிரச்சனையல்ல, மாட்டைத் தெய்வமென்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் வளர்க்கவில்லை. விவசாய வேலைகளுக்காகவும், பால் பொருள் சந்தைக்காகவும் வளர்க்கப்படும் மாடுகள் கால்நடைப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகும்.

உலகிலேயே இந்தியாவில்தான் கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். மாடு, ஆடு, குதிரை, கழுதை, ஒட்டகம் போன்ற கால்நடைகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டுகிறது. அதில் அனைத்து வகை மாடுகள் மட்டும் 28.5 கோடிக்கு அதிகமாகும். இதில் 8.3 கோடி உழவு மாடுகள் 40 கோடி ஏக்கர் நிலத்தை உழுவதற்கும், விவசாயப் பொருட்களின் போக்குவரத்திற்கும் பயன்படுகின்றன. இவற்றில் பெரும்பங்கு காளைகள், சிறுபங்கு எருமைக் கடாக்கள்.

10.2 கோடி கன்றுகள் போக மீதமிருக்கும் கறவை மாடுகள் 10 கோடி. எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் எருமைகள் குறைவாக இருந்தாலும் மொத்த பால் உற்பத்தியில் எருமைப்பால்தான் அதிகம். இந்தியாவின் தற்போதைய விவசாய, பால் தேவைக்கு மிக அதிகமாகவே மாடுகள் இருக்கின்றன. முக்கியமாக அறுபது சதவீத மாடுகளுக்குத்தான் தீவனம் அளிக்க முடியும் என்ற நிலையும் இருக்கின்றது.

30 ஆண்டுகளாக விவசாய வேலைகளுக்குப் பயன்படும் டிராக்டர்கள், பம்புசெட்டுகள், டெம்போ-லாரிகளின் எண்ணிக்கை பிரம்மாண்டமாக அதிகரித்து விட்ட நிலையில், இவ்வேலையைச் செய்து வந்த எருது, காளைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. அதேசமயம், நகர்ப்புற பால் சந்தையின் பெருக்கம், கலப்பின மாடுகளின் உருவாக்கம், பாலை பதப்படுத்தி விற்கும் முன்னேறிய தொழில்நுட்பம் ஆகிய காரணங்களால் கறவை மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருகின்றது. இருப்பினும், இந்தியாவின் மாடு வளர்ப்பு என்பது பெரும்பான்மையாக சிறு உற்பத்தியாளர்களின் தொழிலாக இருக்கிறதேயொழிய பண்ணை சார்ந்த பெரு உற்பத்தியாக இல்லை. அதிகமும் சிறு விவசாயிகளால் வளர்க்கப்படும் மாடுகள் விவசாயத்தின் அழிவையொட்டி பராமரிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

ஒரு விவசாயி தன் பொருளாதார வாழ்க்கைக்காக மாடு வளர்க்கிறாரேயன்றி ‘சொர்க்கம் கிடைக்கும், புண்ணியம் வரும்’ என்பதற்காக அல்ல. பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கி ஆட்குறைப்பு செய்து வரும் உலகமயமாக்கம், விவசாயத்தையும் தனது இலாப வேட்டைக்கேற்ப அழித்தும் மாற்றியும் வருகிறது. இறால் பண்ணைகளினால் கூலி விவசாயிகள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான காளைகளும் வேலையிழந்திருக்கின்றன.

எனவே, சினை பிடிக்காத பசு மாட்டையும், வயதான, வேலையிழந்த காளைகளையும் ஒரு விவசாயியினால் பராமரிக்கவே முடியாது. வருமானமற்ற நிலையில், வருமானம் தராத மாடுகளுக்குச் செலவு செய்து தீனி போடுவது என்பது அவரால் முடியவே முடியாத காரியம். அதனால்தான் உதவாத மாடுகளை வெட்டுக்கு விற்று, உதவுகின்ற மாடுகளையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றப் போராடுகிறார் விவசாயி.

உலக மாட்டு இருப்பில் முதலிடம் பெற்றிருக்கின்ற இந்தியாதான் உதவாக்கரை மாடுகளை வைத்திருப்பதிலும் முதலிடம் வகிக்கின்றது. எனவே, இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வெட்டப்படும் மாடுகள் அளிக்கும் வருவாய்தான் எஞ்சியிருக்கும் கால்நடைச் செல்வத்தைக் காப்பாற்றுவதற்கே ஒரு மறைமுகக் காரணமாக இருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே பசுவதைத் தடைச்சட்டம் அமலில் இருப்பதால் வெட்டுக்குச் செல்லும் மாடுகள் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றன. எப்படியாவது விற்றாக வேண்டும் என்ற விவசாயியின் நிர்ப்பந்தம் இந்த இடையூறுகளைக் கடந்து வியாபாரத்தையும், சந்தையையும் உருவாக்கியிருக்கின்றது.

மேலை நாடுகளில் கால்நடைப் பொருளாதாரத்தில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாட்டுப் பண்ணைகள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. இது இறைச்சி, மக்களின் ஆரோக்கியம், மருந்துகள், தோல் பொருட்கள் என்று பன்முகப் பயன்பாடு கொண்டதாகவும், பொருளாதார ரீதியில் பெரும் வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாகவும் இருக்கின்றது. இந்தியாவில் இப்படி ஒரு பெரும் தொழில் உருவாகமல் தடுத்த ‘புண்ணியம்’ காங்கிரசு மற்றும் இந்துமதவெறிக் கும்பலுக்கே சேரும். அதனால்தான் உதவாத மாடுகளைக் கூட வெட்டுவதற்கு உள்ள இடர்கள் விவசாயிகளையும், வியாபாரிகளையும் சினமடைய வைக்கிறது. விற்பனை செய்ய முடியாததால் பசுமாடுகள் கைவிடப்படுகின்றன. லக்னோ நகரில் மட்டும் நாளொன்றுக்கு 100 மாடுகள் பாலிதீன் பைகளைத் தின்று சாகின்றன.

இந்தி பேசும் மாநில மாடுகள் இராஜஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்கும், பீகார் வழியாக மேற்கு வங்கத்திற்கும் – வங்க தேசத்திற்கும், தென்னிந்திய மாடுகள் இறைச்சிக்காக கேரளத்திற்கும், தோலுக்காக தமிழகத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் அரசு ஏற்படுத்தியிருக்கும் தடைகள், தேவையற்ற போக்குவரத்துச் செலவு, உழைப்பு விரயம் மிக அதிகம். இந்தியா பாகிஸ்தான் எல்லையிலே ‘தீவிரவாதிகளை’ ஊடுருவாமல் கண்காணிக்கும் மத்திய அரசு இந்த மாட்டு வர்த்தகத்தை மட்டும் அனுமதிக்கின்றது. ஒருவேளை தடுக்க நினைத்தால் ‘இந்துக்களின்’ மாட்டுப்படை இராணுவத்தையே மோதி அழித்து விடும். இது கற்பனையல்ல.

உள்நாட்டில் பசுவின் புனிதம் பேசி மதவெறி அரசியல் நடத்த வேண்டும்; உதவாத மாடுகளை விற்பதற்கும் பல சுற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அவலமான, அயோக்கியத்தனமான சூழ்நிலையே இந்தியக் கால்நடைச் செல்வத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தீங்காகும். சற்று கற்பனை செய்து பாருங்கள் : இந்தியாவில் ஆங்காங்கே மாடுவெட்டும் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இருந்தால் விவசாயிகளுக்கு நன்கு பயன்படும் என்பதோடு, இறைச்சி மற்றும் தோலின் தரத்தை உயர்த்தி பல கோடி மக்களை ஒரு முறையான உற்பத்தியில் ஈடுபடச் செய்யவும் முடியும்.

தற்போது அந்த நிலைமை இல்லை. ஆனால், வெட்டுவதற்கான மாடுகள் அதிகம் இருந்தும் இங்கு வெட்டப்படும் மாடுகள் மிகவும் குறைவு. 1980-ம் ஆண்டு 1.56 கோடி மாடுகளும், 2000-ம் ஆண்டு 2.43 கோடி மாடுகளும் இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கின்றன. 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம்தான் வளர்ந்திருக்கின்றது. இதனால் பாலுக்கும், விவசாய வேலைக்கும் பயன்படுகிற மாடுகளைப் பராமரிக்கும் திறன் விவசாயிகளிடம் கடுமையாகக் குறைந்திருக்கிறது. முக்கியமாக, இறைச்சிக்காக மாடு வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இருந்தும் இந்தத் திசையில் நாம் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.

இந்தியாவில் சட்டபூர்வமாக 3,600 மாடு வெட்டும் கூடங்களும், சட்டத்திற்குத் தெரியாமல் 32,000 கூடங்களும் இருக்கின்றன. மனிதனுக்கு அளப்பரிய பயனைக் கொடுக்கும் மாட்டை வெட்டுவது என்பது கிரிமினல் நடவடிக்கையாக மாற்றப்பட்டிருப்பது எத்தகைய அநீதி!

holycowபசுவதைத் தடைச்சட்டம் காரணமாக கேரளத்துக்கும் வங்காளத்துக்கும் மாடுகளைக் குறைந்த செலவில் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கி விட்டு, வியாபாரிகளை மாடுகளை இரக்கமற்ற முறையில் கொண்டு போவதாக மிருகவதை தடுப்பு மனிதர்கள் ஊளையிடுகின்றனர். மாடுகளை வளர்க்கவும், வெட்டவும் தடையாயிருக்கின்ற இந்நிலைமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை எனலாம். இப்படி பல்வேறு தடைகளைத் தாண்டி வெட்டப்படும் மாடுகளை மட்டும் நம்பி தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 1,400-ம், தோல் பொருட்களைத் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் இலட்சக் கணக்கிலும் இங்கு இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டின் பங்கு கணிசமானது. தோல் துறையை நம்பி மட்டும் 25 இலட்சம் இந்திய மக்கள் – அதில் மூன்றிலொரு பங்கினர் பெண்கள் – பிழைக்கின்றனர்.

கச்சாத் தோல் அளிப்பில் இறைச்சிக் கூடங்களிலிருந்து 60 சதவீதமும், இறந்து போகும் கால்நடைகளிலிருந்து 30 சதவீதமும், வெளிநாட்டு இறக்குமதியில் 10 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. பசுவதைத் தடைச்சட்டம் இந்தியா முழுவதற்கும் கடுமையாக அமலுக்கு வரும் பட்சத்தில், இலட்சக்கணக்கான குடும்பங்கள் வேலையிழக்கும். வெளிநாட்டிலிருந்து தோல் இறக்குமதி கணிசமாக அதிகரிக்கும். அதன் விளைவாக அத்தியாவசியத் தோல் பொருட்களின் விலை மிகவும் உயரும். ஒரு மாட்டுத் தோல் 25 சதுர அடியும், ஒரு ஆட்டுத்தோல் 4 சதுர அடி பரப்பையும் கொண்டிருப்பதால், தோல் பொருள் தயாரிப்பில் மாட்டுத் தோலின் பங்கே முக்கியமானது.

77.6 கோடி செருப்பு ஜோடிகளும், 1.8 கோடி ஆயத்த ஆடைகளும், 6 கோடி கைப்பொருட்களும் (பை, பர்ஸ், பெல்ட் முதலியன) 5 கோடி தொழிற்சாலை கையுறைகளும் – இந்தியத் தோல்பொருள் ஏற்றுமதியில் அடக்கம். இதன் மதிப்பு 10,000 கோடி இந்திய ரூபாய்களாகும். இதில் 60 சதவீத பங்கு சிறு – குடிசைத் தொழில்கள் செய்யும் மக்களிடமிருந்து வருகிறது. எனவே, பசுவதைத் தடைச்சட்டம் வர வேண்டும் என்ற இந்து மதவெறியர்களின் விருப்பம் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டுத்தான் அமலுக்கு வரமுடியும். ஆக பார்ப்பனியத்தின் கோமாதா என்ற புனிதத்தின் உண்மைப் பொருள் மனிதவதை என்பதே.

இளநம்பி

புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2003

மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு

காக்கா முட்டை : விகடனின் விமரிசனத் தரம் என்ன?

4

விகடன் மதிப்பெண் நாற்பதுக்கு மேல் போனாலே அடுத்த நாள் அந்த சினிமா விளம்பரத்தில் அந்த மதிப்பெண் வந்துவிடும். “காக்கா முட்டை”க்கு 60 மதிப்பெண் வழங்கிய பிறகு, தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, இணையத்தின் அறிஞர் பெருமக்களும் தமது பொன் முட்டையை விகடனும் அங்கீகரித்திருப்பதை கொண்டாடினார்கள். ஒருவேளை படம் குறித்து முதல் ஐந்து நாட்களில் தமிழ் இணையம் காட்டிய நெகிழ்ச்சி அலையில் விகடன் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமே என்று சிலர் கேட்கலாம்.

காக்கா முட்டை - விகடன் விமர்சனம்
இந்தப் படத்தை உலகத்துக்கான தமிழ் சினிமா என்றே விமரிசனத்தின் முதல் பத்தியில் கூறுகிறது விகடன்.

இந்த பத்தாண்டின் தலைசிறந்த குடும்ப சித்திரம் என்ற விளம்பரம் “காக்கா முட்டை”க்கும் மட்டுமல்ல, “ஸ்லம்டாக் மில்லினியரு”க்கும் கொடுக்கப்பட்டதைப் பார்த்த போது இந்த பீட்சாவின் இரக்கம் அனைத்துத் தரப்புகளிலும் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

தமது மேலான ரசனை போலவே முக்கிய ஊடகம் ஒன்றின் ரசனையும் இருப்பதாக இணைய மக்கள் நம்புவதைப் போல அவர்களை தாங்கள் மட்டுமே பிரதபிலிப்பதாக விகடனும் அதை காட்டிக் கொள்ளலாம். பரஸ்பர ஆதாயம்.

போகட்டும். 60 மதிப்பெண் கொடுத்திருக்கும் விகடன் அதை எப்படி ‘உலகத் தரத்தில்’ எழுதியிருக்கிறது என்று பார்ப்போம். ஏனெனில் இந்தப் படத்தை உலகத்துக்கான தமிழ் சினிமா என்றே விமரிசனத்தின் முதல் பத்தியில் கூறுகிறது விகடன்.

“தடதடப்பும், படபடப்புமாக கடக்கிறது படம்”, “போகிற போக்கில் போட்டுத் தாக்குகிறது”, “கலீச் சுளீர் உரையாடல்களாகவும்”, “அட்டகாசமாக அறிமுகமாகும் ரமேஷும், அதட்டும் விக்னேஷும் அகதளம்…அமர்க்களம்!”, “சினிமா கேரியரில் ஐஸ்வர்யாவுக்கு இது அர்த்தமுள்ள அடையாளம்”, “ஒவ்வொருவருமே கச்சிதமான காஸ்ட்டிங்,” “நக்கலும் நையாண்டியுமாகக் கடக்கும் ஆனந்த் அண்ணாமலை, ஆனந்த் குமரேசன் கூட்டணியின் வசனங்கள், சிரிப்பு செருப்பு அடிகள்”, “ஹேய் சூப்பரப்பு”, “கண்களை கலங்கச் செய்யும் ஈர அத்தியாயம்”, “ஏரியாவையே பதறவைத்த ஏக களேபரங்களுக்குப் பிறகு”, “கச்சித டைமிங்கால் சீனுக்கு சீன் விறுவிறுக்க வைக்கிறது கிஷோரின் எடிட்டிங்”,…………………

இவைதான் ஒரு உலக சினிமா குறித்து ஒரு உலகத் தரத்திலான விமரிசனம் தேடிக் கண்டுபிடித்த வரிகள்! எனினும் இவர்கள்தான் டி.ராஜேந்தரின் எதுகை மோனை ஏப்பங்களை கிண்டலடிக்கிறார்கள். மேடைகளில் பேசும் அரசியல்வாதிகள், செயற்கையான நடையிலும், உணர்ச்சிகரமான நடிப்பிலும் பேசுவதாக குறைபடுவர்களும் இவர்களே.

கேட்டால் மக்கள் திரளுக்கு புரிய வைக்கும் மொழியில், இளையோரின் நவீன நடையில், சுண்டி இழுக்கும் ரசனையில் எழுதுவதால், அரசியல் சார்ந்து சிந்திப்போருக்கு அதன் அருமை புரியாது என்பார்கள். ஒரு வேளை விமரிசனம் எப்படியிருந்தால் என்ன, இதை வைத்து திரையரங்கிற்கு இன்னும் பலரை இழுத்து வரும் வேலையை இது செய்யுமையா என்று வசூலை முன்வைத்தும் சிலர் நியாயப்படுத்தலாம்.

கலீர் சுளிர், கச்சிதமான காஸ்ட்டிங் போன்ற வரிகளை படித்து விட்டு ஒருவன் “காக்கா முட்டை”யை பார்த்தால் அவனிடம் இந்தப்படம் என்னவாக இறங்கியிருக்கும்? ஏற்கனவே மல்டிபிளக்சில் பீட்சாவை சுவைத்தவாறே இந்தப்படம் ரசிக்கப்படுவதின் அபத்தத்தை சிலர் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இயக்குநர் மணிகண்டனோ, “இந்தப் படத்தைப் பார்த்து சிலர் தமது பிள்ளைகள் பீட்சாவை வேண்டாமென்று விட்டுவிட்டதாக கூறியது மனதுக்கு திருப்தியாக இருந்தது” என்றிருக்கிறார். இறுதியில் பீட்சாதான் வில்லனா?

பெப்சி-கோக், மெக்டனால்டு, கே.எஃப்.சி, லேஸ், ஹல்திராம், நெஸ்லே என்று பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் பலரும் கோலேச்சும் நுகர்வுத் துறையில் பீட்சாவை மட்டும் தவிர்ப்பதால் என்ன பயன்? படத்தில் பீட்சா ஒரு குறியீடு என்பவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? இங்கே இந்த குறியீட்டின் அரசியல் என்னவாக உணர்த்தப்பட்டிருக்கிறது அல்லது படவில்லை என்பதைப் பொறுத்தே பீட்சா புரிந்து கொள்ளப்படுகிறது. ஆகவே படத்தில் பீட்சா மட்டும் இருக்கிறது. ரசிகர்களும் பீட்சா மட்டும் வேண்டாம் என்று பர்கருக்கு மாறிக் கொள்ளலாம்.

மற்ற சினிமாக்களிலிருந்து இது வேறுபட்டிருப்பதால் உலகத்திற்கான சினிமா, சிவப்பு கம்பளம் விரித்து இயக்குநரை வரவேற்கிறான் விகடன் என்றெல்லாம் தூக்கிவிட்டு விமரிசனத்தில் அது ஏன் உலகத் தரம், எதனால் வரவேற்பு என்று கேட்டால் அது அரட்டை அரங்கின் தரத்தைத் தாண்டாது. விகடன் கருதும் தரம், உலகத்தின் அளவீடு என்ன?

விளிம்பைத் தாண்டியும் துரத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை மனம் நிறையக் கரிசனத்துடன் இப்படம் அணுகியதாக கூறும் விகடன் அதற்கான ஆதாரத்தை படத்திலிருந்த தருவது இருக்கட்டும். அந்த கரிசனம் இவர்களுக்கு தெரியுமா புரியுமா என்பதற்கு என்னய்யா ஆதாரம்?

கிச்சன் கில்லர்கள்
கி கி ஆங்கில டைட்டில் போட்டுத்தான் நூடில்ஸ் பிரச்சினையை புரியவைக்க முடியும் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு ஒரு போ போ ரைமிங் கண்டுபிடிப்பு மூலம் அதைக் காலி செய்து விட முடியும்.

வலை பாயுதே, சைபர் ஸ்பைடர் எனும் மிரட்டும் வார்த்தைகளில் டிவிட்டுகளை தொகுத்து தருகிறது விகடன். அதில் “பஸ்ல பக்கத்து ஸீட்காரன் என் மொபைலையே பார்த்துட்டிருக்கான். ஏண்டா நீயெல்லாம் நோக்கியா, சாம்சாங்கோடு பொறக்கலியா” என்றொரு டிவிட் இருக்கிறது. ‘ஸ்மார்ட் ஃபோனை எட்டிப் பார்ப்பது ஒரு அநாகரிகம்’ என்பது ஒரு திமிரான மேட்டிமைத்தனமான மொழியில் இங்கே சொல்லப்படுகிறது. இது விகடனுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் பீட்சா சாப்பிட ஆசைப்பட்ட சிறுவர்களை பிடிக்கும் என்பதை நம்ப முடியவில்லையே?

கேபினட் கேமரா, மந்திரி தந்திரி எனும் பகுதியில் அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுப்பான வரலாற்று, நிர்வாக முறைகேடுகள், ஊழல் போன்றவற்றை “நாகரிகமான” மொழியில் தொகுத்து தரும் விகடன் தொடரில் இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் முக்கூர் சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.

“சத்துணவுக் கூடங்களுக்கு காய்கள் அளித்து வந்த சிறு வியாபாரி இன்று பள்ளிகளின் விழாவில் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கும் அமைச்சராக மாறிவிட்டார்” என்று கூறுகிறது விகடன். இதையே அம்பானி, அதானி என்றால் உழைத்து முன்னுக்கு வந்த சாதனையாக காட்டுவார்கள். இங்கே சைக்கிள் ஓட்டி வியாபாரம் செஞ்வனெல்லாம் இன்று அமைச்சர் என்று மேட்டிமைத் திமிருடன் அலுத்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் பார்வையில் இது சொல்லப்படுகிறது.

மேலும் அந்த அமைச்சரது ஊழலை குத்திக் காட்டும் விகடன் அதன் கூடவே படிப்பறிவற்ற ஒருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சராகியிருக்கும் அவல நிலையாக அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறது. அந்தப் படிக்கு படிப்பறிவில்லாத காமராஜர் கூட இவர்களது  தகுதியில் தேற மாட்டாரே!

தனது டச் ஃபோனை இயக்கத் தெரியாத ஒருவர் கணினி துறைக்கு அமைச்சராகியிருக்கிறார் என்று கிண்டல் செய்கிறது விகடன். பீட்சாவின் ருசி தெரியாமல் அந்த சிறுவர்கள் அது நன்றாக இல்லை என்று புறக்கணித்தது விகடனுக்கு பிடித்திருக்கிறது. அந்தப் பிடிப்பின் அடிப்படை சாதா இரக்கமா, இல்லை நம்ம ஐட்டத்தை அதற்கு உரியவர்களல்லாத ஏழைகள் பிடிக்கவில்லை என்று சொன்னதால் ஏற்பட்ட ஸ்பெசல் இரக்கமா?

விமானத்துறை அமைச்சராக இருப்பவருக்கு ஹெலிகாப்டரை ஓட்டத் தெரியவில்லையென்று இவர்கள் எழுதுவார்களா? முக்கூர் சுப்ரமணியத்திற்கு டச் ஃபோன் இயக்கத் தெரிந்தாலோ தெரியாமல் போனாலோ என்ன பிரச்சினை? மேலும் இதுதான் பிரச்சினை என்று வைத்துக் கொண்டாலும் முக்கூர் உட்பட் பல்வேறு டுபாக்கூர்க்களை வைத்து ஆட்சி நடத்தும் பாசிச ஜெயாவின் பிரச்சினையல்லவா? அந்தப் படிக்கு டச் ஃபோன் மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்மணியை விமரிசிக்காமல் காய்கறி சப்ளை செய்தவர் என்ற பெயரில் ஏழ்மையை பரிகசிப்பதன் காரணம் என்ன?

“கூகுள், யூடியூப், வாட்ஸ் அப்…இதெல்லாம் இங்கிலீஸ் படப் பேரா?” எனக் கேட்கும் அளவுக்குத்தான் துறை நிபுணராக இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன் என்கிறது விகடன். இதையே காக்கா முட்டை மொழியில்  பெயர்த்தால் பீட்சா தெரியாதவனெல்லாம் உணவுத்துறை மந்திரியாக குப்பை கொட்டுகிறான் என்று பேஷா சொல்லலாமே?

காக்கா முட்டை - விகடன் விமர்சனம்
பெப்சி-கோக், மெக்டனால்டு, கே.எஃப்.சி, லேஸ், ஹல்திராம், நெஸ்லே என்று பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் பலரும் கோலேச்சும் நுகர்வுத் துறையில் பீட்சாவை மட்டும் தவிர்ப்பதால் என்ன பயன்?

ஒரு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தின் விவசாயம், தொழில்துறை, மீன்வளம், கால்நடை இதர துறைகளுக்கு தேவையான நுட்பங்களை தெரிந்து கொள்வதும், அதை தெரிவிப்பதற்கு தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதும்தானே தேவை? மாறாக மக்கள் யூடியூப், கூகுள் பார்த்து “காக்கா முட்டை” நடிகை ஐஸ்வர்யாவின் ப்ளோ அப் சுவரொட்டிகள் தேடுவது குறித்தா அவர் அறிந்து வைத்திருக்க வேண்டும்? ஆக முக்கூர் சுப்பிரமணியனை விடுங்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு என்ன தெரியவேண்டும் என்பது விகடன் பார்வையில் பீட்சாவை மட்டும் தெரிந்து கொள்வதாகவே இருக்கிறது. ஆக இவர்கள் கிண்டலடிப்பதில் மேட்டிமைத்தனம் இருக்கிறது என்றால் அறிவிலோ முட்டாள்தனம் கொடிகட்டிப் பறக்கிறது.

இப்படி டெக்னாலஜி அப்டேட் இருக்கட்டும், தமிழகத்தின் ஐ.டி துறையில் ஊழியர்கள் பந்தாடப்படும் நிலை குறித்து இந்த அமைச்சர் ஏதாவது பேசியிருக்கிறாரா என்றெல்லாம் விகடன் துளியளவு கூட நினைக்கவில்லை. மாறாக ஊர் ஊராக ஐ.டி பார்க் ஏன் வரவில்லை என்பதே இவர்களது கவலை. இதையும் தெருத்தெருவாக பீட்சா கடை வரவேண்டும் என்று எழுதலாம்.

பிட்ஸ் பிரேக் எனும் ஒரு மசாலா பகுதியில் இயக்குநர் மணிரத்தினம் ஆப்பிள் மேக்புக் ஏர் மடிக்கணினி வாங்கி அதை பாராட்டி தனது நண்பர்கள் இருவருக்கு பரிசளித்ததையெல்லாம் ஒரு செய்தியாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். சரி, இந்த ஆப்பிள், மேக்புக், கூகுள், வாட்ஸ் அப் போன்றவற்றில் அருகாமை பீட்சா கடை எங்கே உள்ளது, என்ன டாப்பிங்ஸ் புதிது, என்ன விலை, யாருடைய சர்வீஸுக்கு மதிப்பெண் அதிகம் இதைத்தானே அதிகம் தேடுகிறார்கள்? பிறகு ஏன் காக்கா முட்டைக்கு கண்ணீர் வடிக்கிறீர்கள்?

“இது காமடி வெடி”என்று சந்தானத்தின் புதுப்படம் குறித்த நேர்காணல் ஒன்று. “நீங்க வாழ்க்கையில என்ன வேணும்னாலும் ஆகணும்னு கனவு காணுங்க. ஆனா, இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க. அடுத்த உயரம் தொட படிப்படியா உழைப்பைக் கொட்டுங்க. இதான் மெசேஜ். ரீலையும் ரியலையும் மேட்ச் பண்ணோமா” என்று சந்தானத்தின் தத்துவ முத்து ஒன்றை போட்டே கட்டுரை ஆரம்பிக்கிறது.

இதுதான் காக்கா முட்டையின் கிளைமாக்ஸ். சிறுவர்கள் டேஸ்ட் காரணமாக அதை விலக்கினாலும் அதன் பின்னே இருப்பது எதிர்ப்புணர்வு அல்ல. சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று தானே விலக்குகிறார்கள். இதன் மூலம் ஓசியில் கிடைக்கும் பீட்சாவை அவர்கள் மறுப்பதான சுயமரியாதை ஒன்று, இரண்டாவதாக அவர்கள் பீட்சாவை போராடி மறுக்கவில்லை. இதைத்தான் நைந்து போன மொழியில் சந்தானம் கூறுகிறார். ஆகவே காக்கா முட்டையில் விகடனுக்கு பிடித்த தத்துவம் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

மாகி நூடில்ஸ் பிரச்சினையை ஒட்டிய அட்டைப்படக் கட்டுரைக்கு விகடன் வைத்திருக்கும் தலைப்பு “கிச்சன் கில்லர்கள்”. எனில் இந்த தலைப்பு திடீர் நகர், காசிமேடு சிறுவர்களோ இல்லை பெற்றோருக்கு புரியுமா? அவர்கள்தான் விகடனை படிப்பதே இல்லை எனில் பீட்சா சாப்பிடுபவர்கள்தான் வாசகர்கள். அவர்களுக்கு இந்த கி கி ஆங்கில டைட்டில் போட்டுத்தான் நூடில்ஸ் பிரச்சினையை புரியவைக்க முடியும் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு ஒரு போ போ ரைமிங் கண்டுபிடிப்பு மூலம் அதைக் காலி செய்து விட முடியும்.

ஆக, ஒரு விசயத்தை எத்தனை ஆழமாகவும், அரசியல் ரீதியாகவும் பார்க்கிறோம் என்பதே அது குறித்து எழுதவதற்கும், படிக்கப்படுவதற்கும், பயன்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. இங்கே நொறுக்குத் தீனி வாசிப்பையே மூலதனமாக வைத்திருக்கும் விகடன், அதற்குரிய படிமங்கள், காட்சிகள், களத்திலேயே சுற்றி கொண்டு விட்டு, ஒரு சேஞ்சுக்காக காக்கா முட்டையை ரசிக்கிறது. ஆனால் அந்த ரசனையில் மேற்கண்ட சுற்றி வரும் ஜாலி எப்படி தவிர்க்க முடியாமல் இணைந்திருக்கிறது என்று கண்டு கொண்டால் பிறகு நீங்கள் விகடன் விமரிசனத்தை எதிர்பார்க்க மாட்டீர்கள்.

தங்கமீன்கள் விமரிசனம் வந்த போது இயக்குநர் ராம் விகடனது சினிமா விமரிசன முறையை விமரிசித்து எழுதியிருந்தார். ஒரு படத்தை பார்த்து விட்டு உடன் ஏற்படும் உணர்ச்சியை பதிவு செய்வதை விமரிசனம் என்று எழுதுவதோ, மதிப்பெண் போடுவதோ தவறு, தனது படங்களுக்கு இத்தகைய விமரிசனங்கள் தேவையில்லை என்ற பொருளில் அவர் எழுயிருந்தார். விமரிசனம் என்பது ஒரு இயக்குநரின் படைப்பை தீவிரமாக படித்து, பார்த்து, முழுமையாக உள்வாங்கி எழுத வேண்டும், தமிழில் அத்தகைய விமரிசன மரபு இல்லை என்றும் அவர் கவலைப்பட்டிருந்தார்.

அவரைப் பொறுத்தவரை இது ஒரு டெக்னிக்கல் பிரச்சினை. அதாவது “திரைப்பட விமரிசனக் கலை எனும் துறையை இங்கே அறிந்தவர் இல்லை. அப்படி அறிந்தவர் இருந்து, ஊடகங்கள் அப்படி எழுத ஆரம்பித்தால் நல்ல விமரிசனங்கள் வரும், திரைப்படங்களுக்கு அவை நல்ல அறிமுகத்தை கொடுக்கும்” என்று அவர் எதிர்பார்க்கிறார்.

மங்காத்தா, மாஸ் போன்ற போடங்கள் அதிகம் வரும் தமிழ் சினிமாவிற்கு அந்த விமரிசனக் கலை வந்து என்ன ஆகப்போகிறது என்பது ஒருபுறமிருக்க ஒரு ஆழமான விமரிசனமோ இல்லை உடன் பார்த்து எழுதும் மொக்கைப் பதிவோ ஒருவரின் உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. அது விமரிசனத்தில் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து பார்வை, மதிப்பீடுகளிலும் அது நீக்கமற நிறைந்திருக்கும். இதன்படி விகடனின் விமரிசனப் பிரச்சினை சினிமா விமரிசனக் கலை தெரியாமல் வந்த ஒன்றல்ல. அவர்கள் இந்த உலகினை, சமூகத்தினை, அரசியலை, ஏழ்மையை, வாட்ஸ் அப்பை எப்படி பார்க்கிறார்கள் என்பதோடு தொடர்புடையது.

மற்ற துறைகளில் அவர்களது பார்வை என்ன தரிசனத்தை கொண்டிருக்கிறதோ அதுவே விமரிசனத்திலும், மதிப்பெண் போடும் முறையிலும் வெளிப்படும். ஒருவேளை சில பல சிபாரிசுகள், திரைப்பட தயாரிப்பாளர்களது தொழில் உறவுகள் காரணமாக மதிப்பெண்கள் சற்று அதிகமாகவோ குறைவாகவோ போடப்படலாம். அதனால் பார்வை மாறிவிடுவதில்லை.

ஆகவே விகடனை திருத்த வேண்டும் என்பது சினிமா விமரிசனத்தை நல்லவிதமாக எழுத வைப்பதன் மூலம் – அப்படி முடியாது என்ற போதிலும் – முடியாது. அது வெளியே நடக்கும் சமூக அரசியல் போராட்டங்களின் மூலமாகவே நடந்தேறும். முன்னர் கோலோச்சிய அக்ரஹார மொழி விகடனை விட்டு அகன்று போனதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ராம் அடிப்படையில் ஒரு சினிமாக் கலைஞர் என்பதால் அவர் சினிமாவை மட்டும் வைத்து விகடனை அளந்து பார்க்கிறார். ஆனால் சினிமாவோ, விமரிசனமோ, ஊடகங்களோ அனைத்தையும் தீர்மானித்து இயக்குவது இறுதியில் அரசியலே. அந்த அரசியலின் சரி தவறுகளில், போராட்டங்களில், மக்களின் பங்கேற்பு அதிகம் – குறைவு காரணமாகத்தான் நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான கலைச் சூழல் பிறக்கும் அல்லது போராடும்.

காக்கா முட்டை விமரிசனத்திற்கு பிறகு வந்த இதழில் இயக்குநர் மணிகண்டனை நேர்காணல் செய்திருக்கிறது விகடன். அதில் ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படத்திற்கு 60 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதிற்கு அவர் பெரும் நன்றிக்கடனை இயல்பாக செலுத்தியிருக்கிறார்.

விகடன் எழுதிய விமரிசனத்தின் தரம் என்னவென்று பார்த்து விட்டோம். அந்த தரம் மணிகண்டனுக்கு ஏன் தெரியவில்லை? கமர்சியல் படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டு தீவிர படிப்பு, நல்ல படங்களை மட்டும் பார்க்கும் அவருக்கு விகடனின் கமர்சியல் விமரிசன பாணி உறைக்கவில்லையா? இல்லை 60 மதிப்பெண் கொடுத்து விட்டால் நீயும் நண்பனே, நல்ல அறிஞனே எனும் சமரசமா?

காக்கா முட்டை படத்தின் குறியீடுகள் குறித்து கம்பராமாயணம் போல விளக்குகிறார்கள். அண்ணாவின் சந்திரமோகன் நாடக வரிகள் – மராட்டிய மன்னன் சிவாஜி தாழ்ந்த சாதி என்பதால் பார்ப்பனர்கள் மறுப்பது, கூண்டிலிருக்கும் நடுத்தர வர்க்கசிறுவன், சுதந்திரமாக அலையும் சேரி சிறுவர்கள், பாலிதீன் பையில் பிடித்து வரப்படும் நீர், உடைந்த கோக்பாட்டில், அரசியல் பேனரில் சே குவேரா படம் என்று நிறைய சொல்கிறார்கள். இந்த படம் குறித்து நமக்கு வகுப்பும் எடுக்கிறார்கள். நல்லது, இதைத்தாண்டி ஒரு குறியீடு படத்தில் உள்ளது. உண்மையைச் சொன்னால் அது குறியீடே இல்லை, வெளிப்படையான காட்சி.

“காக்கா முட்டை” படத்தில் பீட்சாக் கடைக்காரர்களால் தமது சிறுவர்கள் தாக்கப்பட்டது குறித்து திடீர் நகர் மக்களுக்கு கோபம் ஏதுமில்லை. போராட்டம் ரத்து செய்யப்பட்டதால் 100 ரூபாய் பணமும், ஒரு பிரியாணி போராட்டமும் பறிபோனதே அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. அந்தக் காட்சியில் முதலாளி வர்க்கம் ஒழிக எனும் ஒரு நைந்து போன அட்டை தெரிகிறது.

இறுதிக் காட்சியில் சிறுவர்களின் அம்மா கூட அந்தக் கோபத்தை துறந்து பிள்ளைகள் பீட்சா சாப்பிடும் காட்சியில் மெய் மறக்கிறார். பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்புகிறார்கள். விகடன் 60 மதிப்பெண் போடுகிறது.

இது உண்மையிலேயே ஃபீல் குட் மூவிதான்.

இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?

22

ல்லூரி அட்மிஷன் கனஜோராக நடக்கும் இந்த சூழலில் உலகின் உள்ள எல்லா துறைகளைப் பற்றியும், அதில் எப்படி விற்பன்னராவது என்பது பற்றியும் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றிய ஆலோசனைகள் யாராலும் தரப்படுவதில்லை.

ரங்கராஜ் பாண்டே
அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முன்னேறும் வழி தெரியாமல் ஆண்டுக் கணக்கில் சென்னை வீதிகளை ஓட்டை டூவீலரில் சுற்றி சைனஸ் வந்து அல்லலுறும் பத்திரிகையாளர்கள், வாடகை கட்டுப்படியாகாமல் வீட்டை வருடா வருடம் மாற்றிக் களைத்துப் போகும் பத்திரிகையாளர்கள் என ஒரு கூட்டம் துன்பப்படுவதைப் பார்த்து கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது. எதேச்சையாக சந்தித்த பிழைக்கத் தெரியாத ஓரிரு பத்திரிக்கையாளர்களுக்கு டீயும் பன்னும்கூட வாங்கித்தராத குற்ற உணர்வு இன்றைக்குவரை என்னை வாட்டுகிறது.

அவர்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தற்சமயத்துக்கு பைசா இருக்காது என்பதால் இந்த பயிற்சியை இலவசமாகவே தருகிறோம்.

முதலில் உறுதிமொழி,

1. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், காக்கி டவுசருக்கு எதிராக ஒரு போதும் சிந்திக்க மாட்டேன். கருப்பு சட்டைக்கு ஒரு போதும் துணைபோக மாட்டேன்.

ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், ஆர்.எஸ்.எஸ்-ன் அபான வாயுவாக மாறி எட்டுத்திசைக்கும் அதன் ’கொல்’கைகளைப் பரப்புவேன்.

2. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், சிறுபான்மை மக்களையும் தலித் மக்களையும் முடிந்தவரை இழிவுபடுத்துவேன்.

3.  ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், ஆர்.எஸ்.எஸ்-ன் அபான வாயுவாக மாறி எட்டுத்திசைக்கும் அதன் ’கொல்’கைகளைப் பரப்புவேன். தேவைப்பட்டால் ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுதமாக மாறி ஒரு தரப்பை மட்டும்கூட தாக்குவேன்.

4. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளில் அதிகாரத்தின் பக்கம் மட்டுமே நிற்பேன்.

5. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்குமான முரண்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ் பக்கம் மட்டுமே நிற்பேன்.

வளர்த்துக் கொள்ள வேண்டிய சில தகுதிகள் :

1. பா.ஜ.ககாரனிடம் பேட்டி எடுக்கையில் ஒரு பா.ஜ.க.காரனைப் போலவே பேச வேண்டும்.

2. எதிர்கட்சிகளிடம் கேள்வி கேட்கையிலும் ஒரு பா.ஜ.க.காரனைப்போலவே கேள்வி கேட்கவேண்டும், நீ மட்டும் யோக்கியமா வகை கேள்விகள் சாலச்சிறந்தது.

3. இது மிக முக்கியமானது, உடல்மொழி ஒரு ஆகப்பெரும் தகுதி. நீங்கள் உரையாடுகையில் வெறும் 7 சதவிகித செய்தியை மட்டுமே வார்த்தைகள் மூலம் புரியவைக்கிறீர்கள். மீதமுள்ள 93 சதம் செய்தியும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே எதிராளிக்கு சென்று சேர்கிறது ஆகவே பா.ஜ.க.வுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் எதிராக யார் பேசினாலும் அவர்களிடம் மிக சாதாரண கேள்விகளையும் ஒரு நக்கலான, மட்டம் தட்டும் வகையிலான உடல் மொழியில் கேட்கப் பழக வேண்டும்.

இதனால் எதிராளி உங்கள் உடல்மொழிக்கு பதிலளிக்க முயல்வார், பதற்றமடைவார்.

இதன்மூலம் விவாதத்தை திசை திருப்பலாம், பா.ஜ.க.வுக்கு எதிரான குற்றச்சாட்டை வலுவிழக்க வைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை ஒரு மேதாவியாக எல்லோரையும் மடக்கும் வாதத் திறமையுள்ளவனாக உலகம் நம்பும்.

ரங்கராஜ் பாண்டே
இந்துத்துவ பரிவாரங்கள் செய்யும் எந்த கலவரத்தையும் நினைவில் வைத்திருக்கவே கூடாது.

4.   இந்துத்துவ பரிவாரங்கள் செய்யும் எந்த கலவரத்தையும் நினைவில் வைத்திருக்கவே கூடாது. ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய இயக்கங்கள் நடத்திய தாக்குதல்களில் 5 செய்திகளையாவது தினமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை சமையல் நிகழ்ச்சி நடத்தினாலும் குறிப்பிட மறக்கக் கூடாது.

5.   மனிதாபிமானம், நியாய உணர்வு ஆகியவை அரை பர்செண்ட் கூட இருக்கக் கூடாது. இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு உங்கள் மனைவிக்கு ஒரு ஹேர்பின்கூட வாங்க முடியாது. பிறகெதற்கு இந்தக் கருமங்களை கட்டி சுமக்க வேண்டும்? (சுஷ்மா ஸ்வராஜுக்கு உள்ள மனிதாபிமானம் இந்த லிஸ்டில் வராது).

பாண்டேயாவதற்கான தொழில் நுட்பங்கள் (உதாரணங்களுடன்) :

1.  விவாதத்துக்கான தலைப்பு பிரச்சனையின் தீவிரத் தன்மையை கணிசமாக குறைப்பதாக இருக்க வேண்டும். தந்தி பேப்பரின் தலைப்புச் செய்திக்காகவா அது விற்பனையாகிறது? மூன்றாம் பக்க கள்ளக்காதல் செய்திதான் பேப்பரின் பலம். அதுபோல விவாதத்தின் தலைப்பும் செய்தியை சுட்டிக் காட்டவேண்டும், ஆனால் அதன் பொருள் எதிர்த்தரப்பை குற்றம் சாட்டுவதாக அமைய வேண்டும்.

உதாரணம். ஆர்.கே நகர் தேர்தல் விதிமீறல்கள் பற்றிய விவாதங்களின் தலைப்பு இப்படி இருக்கலாம்…

ஆர்.கே நகரில் தேர்தல் விதிமீறல் இருப்பதாக எதிர்கட்சிகள் சொல்வது, வழக்கமான அரசியலா அல்லது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டா?

ஆர்.கே நகர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணிக்கக் காரணம், தோல்வி பயமா அல்லது அக்கறையின்மையா?

ரங்கராஜ் பாண்டே
சொத்துக் குவிப்பு வழக்கு என்பதன் இடக்கரடக்கல் – பாண்டேயிசத்தின் பாடங்கள்

இத்தகைய தலைப்புக்கள் எதிர்தரப்பை பெருமளவு தடுப்பாட்டம் ஆட வைக்கும். அதன்மூலம் ஆளும் தரப்பின் வேலையை எளிதாக்கலாம்.

2. நீங்கள் ஆய் போக ஆகும் நேரம் பத்து நிமிடமாக இருக்கலாம். ஆனால் அதற்காக உங்கள் வயிறு நாளெல்லாம் உழைக்கிறது. அதுபோலவே காவி சேவைக்கான காலம் ஒன்றிரண்டு மணிநேரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக நம்  மூளை நாளெல்லாம் உழைக்கவேண்டும். ஆகவே இந்துத்துவாவை ஒரு வேலையை காப்பாற்றிக் கொள்ளும் உத்தியாக கருதாமல் ஒரு வாழ்க்கை நெறியாக கொள்ள வேண்டும். இந்துத்துவா என்றதும் ஏதோ பெரிய ஃபார்முலாவோ என நினைத்து பயப்படவேண்டாம். வலியவனின் காலை நக்கு, எளியவனை எட்டி உதை என்பதுதான் அதன் ஒட்டுமொத்த சாரம்சம். இது தெரியாமல்தான் பச்சமுத்து ஃபவுண்டேஷன் டிவி தொகுப்பாளர்கள் சிலர் மஹா சந்நிதானத்தின் சீற்றத்துக்கு ஆளானார்கள்

உதாரணம் : ஆர்.எஸ்.எஸ்சை ஏன் எதிர்க்கிறீர்கள் எனும் கேள்வியை இப்படி கேட்கலாம்,

சுப்ரீம் கோர்ட்டே ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கமல்ல என்று சொல்லிவிட்ட பிறகும் நீங்கள் ஏன் அந்த இயக்கத்தை எதிர்க்கிறீர்கள்? உங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையில்லையா? இல்லையேல் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமே?

நைஜீரியாவில் தாக்குதல் நடத்தும் போகோ ஹாரம் இயக்கத்தை எதிர்க்காத நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் என்ன?

3. ஒருத்தனையும் முழுசாக பேசவிடாதீர்கள். பாஜக ஆட்கள் முழுசாக பேசிவிட்டால் நம் கொள்கைகள் அம்பலமாகி நாறிவிடும். அந்த மேன்ஹோல்கள் முழுசாச திறக்கப்பட்டுவிட்டால் அது எந்த செண்ட்டுக்கும் அடங்கமறுக்கும். எதிர்த்தரப்பை முழுமையாக பேசவிட்டாலும் இதுதான் கதி. அவர்களும் நம் சுயரூபத்தை அம்பலப்படுத்த முனைவார்கள்.

ஒரு விவாதம் என்பது நாம் சொல்ல விரும்பிய கருத்தை மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வழியேயன்றி அரங்கத்தில் பேசுபவர்கள் கருத்தை கொண்டுசேர்க்கும் நிகழ்ச்சியல்ல..

ரங்கராஜ் பாண்டே
“அப்போ பணக்கார முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா? இவ்வளவு மனிதாபிமானம் பேசும் நீங்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கம் கிருஸ்தவர்களை கொல்லும்போது எங்கே போயிருந்தீர்கள்?” என்று கேட்கலாம்

முசாபர் நகர் கலவரத்தில் ஏழை முஸ்லீம்கள் கொல்லப்பட்டு அகதிகளாக விரட்டப்படக் காரணம் என ஒருவர் பேசும்போது இடை மறித்து,

அப்போ பணக்கார முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா? இவ்வளவு மனிதாபிமானம் பேசும் நீங்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கம் கிருஸ்தவர்களை கொல்லும்போது எங்கே போயிருந்தீர்கள்?

என கேட்கலாம்.

4.  ஓரளவுக்கு தரவுகளையும், நியாயத்தையும் முன்வைத்து பேசுவோருக்கு எதிராக கோமாளித்தனமும் திமிரும் கலந்து பேசும் ஆர்.எஸ்.எஸ் கல்யாணராமன் போன்ற சல்லி கிராக்கிகளை அமர வையுங்கள். இதன்மூலம் ஐன்ஸ்டீனையே தெருச்சண்டைக்காரனாக மாற்றிவிடமுடியும். ஒரு திமிர் பிடித்த முட்டாளுடன் யாராலும் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்த முடியாது.

மேலும் இப்படியான கோளாறான விவாத அமைப்பின் மூலம் நல்ல முறையில் விவாதம் செய்பவர்கள் எனும் பெயரைப் பெற்ற நபர்களின் நன்மதிப்பை கணிசமாக சிதைக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்கள் பா.ஜ.க கூடாரத்தில் இருக்க மாட்டார்கள் என்பதால் நம் நாக்பூர் நாதாரிகள் சங்கத்துக்கு எந்த சங்கடமும் வராது. ஆரோக்யமான விவாதத்தில் ஒரு தொகுப்பாளரால் தனது மேதாவித்தனத்தை நிரூபிக்க முடியாது, விவாதத்தில் இருக்கும் எல்லோரையும் முட்டாளாக காட்டினால்தான் தொகுப்பாளனால் புத்திசாலியாக முடியும் என்கிறது பாண்டேயிசம்.

5. விவாதம் ஒரு சரியான முடிவை நோக்கி செல்லாமலிருப்பதை உறுதி செய்யுங்கள். விவாதத்தைப் பார்க்கும் பல ஆண்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே (பெண்களுக்கு சீரியலைப் போல). அதனை கெடுக்கக்கூடாது. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவசியமில்லை, அதனை பழக்கப்படுத்தினால் போதும். முடிவற்ற விவாதங்கள் எப்போதும் மக்களை பிரச்சனைக்கு பழக்கப்படுத்தும் கருவியாக மட்டுமே இருக்கும். நாய்க்கு எதிர்ப்புணர்வு என்றால் என்னவென்று தெரியாது அதனால்தான் அது கொடுமைக்கார எஜமானனுக்கும் வாலாட்டுகிறது. மக்களையும் அப்படிப்பட்ட நாயாகத்தான் பாண்டேயாக விரும்புபவன் கருத வேண்டும்.

ரங்கராஜ் பாண்டே
விவாதத்தில் ஒரு பொதுப் பிரச்சனையை தனிப்பட்ட பிரச்சினையாகவும், தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாகவும் மாற்ற வேண்டும்.

மேலும் சரியான விவாதம் ஒரு முடிவை நோக்கி செல்லும். அந்த முடிவு செயலாக மாறும. செயல் புரட்சியை நோக்கிச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. கலாச்சாரம் பேசும் பாண்டேயிசத்தில் புரட்சி என்பது விலக்கப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் வையுங்கள்.

6. கூமுட்டைகளையும், அறிவுபூர்வமான விவாதம் எப்படியிருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளக் கூட அக்கறையற்ற ஆஃப்பாயில்களையும் ஊக்குவியுங்கள். இதன் மூலம் பா.ஜ.க கூடாரத்து நபர்களின் தாழ்வு மனப்பான்மையை நீக்க முடியும். ஆதாரங்களோடு பேசமுடியா விட்டாலும் நாமும் அறிவுஜீவியாகலாம் எனும் நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். அதனைக் கொண்டு ஒரிஜினல் அறிவுஜீவிகளுக்கு பழிப்பு காட்ட முடியும்.

7. விவாதத்தில் ஒரு பொதுப் பிரச்சனையை தனிப்பட்ட பிரச்சினையாகவும், தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாகவும் மாற்ற வேண்டும். இரண்டுக்குமான வெவ்வேறு அளவீடுகள் மக்களிடையே உண்டு. அதனால் பேசுவோரிடையே ஒரு குழப்பம் உருவாகும். அந்த கேப்பில் நான் ஒரு மீடியா டான் என பெயர் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்.

  • குஜராத் கலவரம் ஒரு பொதுப்பிரச்சினை. அதனை இரண்டு தரப்புக்கு இடையேயான கலவரமாக சித்தரித்து கேள்வி கேளுங்கள்.
  • மாட்டுக்கறி தின்பதும் திங்காததும் ஒருவனது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் மாட்டுக்கறி தின்றால் காயப்படப்போகும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு என்ன பதில் என கேட்கலாம். இதனால் இந்துன்னா மாட்டுக்கறி தின்பதை எதிர்க்க  வேண்டும் எனும் செய்தி பார்க்கும் வாசகன் மனதில் உருவாகும்.
ரங்கராஜ் பாண்டே
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தாலே அவன் பிச்சைக்காரன் என்பது தெரிந்துபோகும். ஆனாலும் அவன் அம்மா தாயே என இறைஞ்சிக் கொண்டே இருக்கிறான், ஏன்?

8. விவாதத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ் ஒரு பண்பாட்டு அமைப்பு, அதற்கும் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை, பெரும்பான்மை இந்துக்கள் கோபப்பட்டால் சிறுபான்மையோர் கதி என்னாகும் தெரியுமா, மதம் மாறிய தலித் மக்கள் இசுலாம் கிருஸ்துவ மதங்களில் மோசமாக நடத்தப்படுகிறார்கள் தெரியுமா என்பன போன்ற கருத்துக்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தாலே அவன் பிச்சைக்காரன் என்பது தெரிந்துபோகும். ஆனாலும் அவன் அம்மா தாயே என இறைஞ்சிக் கொண்டே இருக்கிறான், ஏன்? பிழைக்க வேண்டுமானால் உங்கள் இருப்பை உலகத்துக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தட்டில் தட்சணை விழும்.

9. எதிரணியானாலும் ஆள் பார்த்து பேசவேண்டும். குடியாத்தம் குமார், ஜெயராஜ் போன்ற ஆட்கள் சிக்கினால் அவர்களிடம் தி.மு.க மீதான மொத்த கடுப்பையும் இறக்கலாம். ஆனால் ஸ்டாலினிடம் பேசுகையில் அந்த சாயலே தெரியக்கூடாது.

ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவ சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது. ஆகவே தராதரம் பார்த்து வாலைக்காட்டவோ அல்லது நூலைக் காட்டவோ செய்யலாம்.

10. அனைத்துக்கும் மேலாக கர்மா என்றொன்று இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். நீங்கள் என்னதான் மல்லாக்கப் படுத்து குட்டிக்கரணம் போட்டாலும் மீடியாவில் பிராமணன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு, பிற்படுத்தப்பட்டவன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு. அவ்வாறே தாழ்த்தப்பட்டவன் அடையக் கூடிய உயரம் என்றொன்று உண்டு. அந்த விதிப்படி உங்கள் குலத்துக்கு உண்டான உயரத்துக்கு மட்டுமே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

ரங்கராஜ் பாண்டே
ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவ சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது.

இதற்கு மேலும் உங்கள் மனதில் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கில்லையா எனும் எண்ணம் எழுந்தால் உடனடியாக பயிற்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கெல்லாம் பாண்டேவின் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட கிடையாது.

பாண்டே ஒரு பொய் சொன்னா அது நூறு உண்மைகளை கொல்லணும்.

பாண்டே ஒரு உண்மையை சொன்னா அது உலகமே காறித்துப்பற மாதிரி இருக்கணும்.

பாண்டே ஒரு சேதி சொன்னா காதுல ரத்தம் வரணும்.

தென்னாட்டின் ஆர்னாப்,
முடி உள்ள துக்ளக் சோ,
சுப்ரமணியம் சாமியின் ஆல்டர் ஈகோ
பரம பூஜனிய ரங்கராஜ் பாண்டேஜிக்கு ஜே ஜே!

–  வில்லவன்.

காக்கா முட்டைக்கு கலங்கியவர்கள் அறியாத சத்துணவின் கதை

0

காக்கா முட்டை படத்தில், கோழி முட்டை வாங்க முடியாத வறுமை திரைமொழியில் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்படுவதாக பலரும் கருதுகின்றனர். உண்மை என்னவெனில் வறுமையையும் அதன் பிரச்சினைகளையும் நேரிட்டு நோக்கும் போது மனம் ஒன்றுவது கடினம். காரணம், வறுமையின் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு ஏதுமில்லை என்பதோடு தமது மனிதாபிமானத்தை உடன் காட்டுவதற்கு வழியற்ற சோகங்களை பலரும் காது கொடுத்து கேட்பதில்லை.

ஒரு சினிமா வழியில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்கும், களத்தில் நேரடியாக செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. வறுமை குறித்த உண்மையை பிரச்சாரம் இல்லாமல் படம் பேசுகிறது என்பவர்கள் வறுமை குறித்த நேரடி அரசியல் நடவடிக்கைகளை தவிர்க்கவே செய்வார்கள்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
வறுமையின் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு ஏதுமில்லை.

தமிழகத்தில் பெரும்பாலான அரசு மாணவர்களுக்கு சத்துணவு போடப்படுகிறது. அதில் புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் தற்போது வாரம் ஒரு முறை ஆக்கிவிட்டார்கள். பா.ஜ.க மாநிலங்களிலோ முட்டையை தடை செய்துவிட்டார்கள். குறிப்பாக சத்துணவு ஊழியர்களை அரசு கடுகளவு கூட மதிப்பதில்லை. முப்பது வருடங்களாக பணிபுரிந்தாலும் தொகுப்பூதியம்தான். வேறு எந்த உரிமையும் அற்ற இந்த வேலைகளை அந்த மனிதர்கள் எத்தனை நெஞ்சுரத்துடன் செய்து வருகிறார்கள் என்பதறிய நீங்கள் நேரில் சென்று ஒரு சத்துணவு மையத்தில் பார்க்க வேண்டும்.

ஓய்வு பெற்ற பிறகும், புதிய ஆள் வரவில்லை என்பதால் ஊதியமின்றி (ஊதியமென்ன ஓரிரு ஆயிரங்கள்தான்) சமையல் செய்யும் பெண்கள், வீட்டு, உடல் பிரச்சினைகளை காரணம் காட்டி விடுமுறை எடுக்காமல் பிள்ளைகளுக்கு சமையல் செய்வதை அனிச்சை செயலாக மாற்றிக் கொண்ட ஊழியர்கள், முப்பது ஆண்டுகளாக அரசை எதிர்த்து எத்தனை எத்தனை போராட்டங்கள்…….

சத்துணவு நசிந்து போன கதைகளுக்கு முடிவில்லை.

காக்கா முட்டை பார்த்ததையே செல்ஃபி எடுத்து, ரெஸ்ட்ராண்டில் விருந்து சாப்பிட்டு அதுவும் பெப்சி-கோக்கோடு கொண்டாடியவர்கள் தமது மனிதாபிமானத்தின் தகுதி என்ன என்பதறிவதற்கு இந்த கட்டுரை உதவும்.

–    வினவு
______________________________

கடந்த ஏப்ரல் மாதம் (2015) சத்துணவு ஊழியர்கள் நடத்திய மாநிலம் தழுவிய போராட்டம் குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.பழனிச்சாமி, சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் ஊழியர்கள் ஆகியோரைச் சந்தித்து பேசினோம்.

திரு பழனிச்சாமியிடம் நடத்திய நேர்காணல்

சத்துணவு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

எம்.ஜி.ஆர் 1982-ல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு என்ற திட்டத்தை ஆரம்பித்தார்.

சத்துணவு திட்டம் சுரண்டல்கள்
“சத்துணவு ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்பது ஆபத்தான ஒன்று மேலும் இந்த முறை எல்லாத் துறைகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உண்டு”

ஆரம்பத்தில் பள்ளியின் தலைமையாசிரியர்களே இந்த வேலையில் பொறுப்பாளர்களாக அமர்த்தப்பட்டனர். கூடுதல் பணிச்சுமையினால் இந்தப் பணியை அவர்களால் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ஆசிரியர் பணி பாதிப்புக்குள்ளானது. எனவே அனைத்து ஆசிரியர் சங்கங்களும் 1983-ல் ஒருங்கிணைந்து அரசுக்கெதிராகப் இருவாரமாக போராட்டம் நடத்தின. அவர்களின் முக்கியமான கோரிக்கையே ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பணியை மட்டுமே செய்யமுடியும்; வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட முடியாது என்று போராடினார். இதன் விளைவாக 1983 ஜூன் மாதத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

1980-களில் வேலை இல்லாத் திண்டாட்டத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. என்னைப் போன்ற படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாக இருந்தது. இப்படியாக அரசு வேலை என்ற அங்கீகாரம், மற்றும் வேலை நிரந்தரம் என்பதால் நாங்களும் மிகவும் நம்பிக்கையோடு சத்துணவு வேலையில் சேர்ந்தோம்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
90% ஊழியர்களுக்கு சொந்த வீடே கிடையாது, நிறைய பேர் பெண்கள், அதிலும் விதவைப் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

அந்த வேலைக்கு தொகுப்பூதியம் தருவது என்று அரசு முடிவு செய்தது. அப்போதே அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகர் எம்.ஆர்.அப்பன் அவர்கள், “சத்துணவு ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்பது ஆபத்தான ஒன்று மேலும் இந்த முறை எல்லாத் துறைகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உண்டு” என்று எச்சரித்தார். இன்றைய நிலை என்னவென்றால், அரசுத்துறையில் நிறைய பணியாளர்கள் தொகுப்பூதியம் தான் பெறுகின்றனர். 32 வருடங்களாக எங்களுடைய நிலையும் அதுதான்.

ஆரம்பத்தில் அமைப்பாளர்களுக்கு மாதம் ரூ 150, சமையலர்களுக்கு ரூ 60, உதவியாளர்களுக்கு ரூ 30 என்று சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 1,25,000 பேர் இதனடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

குறைந்த ஊதியம் தொடர்பாகவும் பிற வகைகளிலும் சத்துணவு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?

90% ஊழியர்களுக்கு சொந்த வீடே கிடையாது, நிறைய பேர் பெண்கள், அதிலும் விதவைப் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
மிகக் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவை கடுமையான சிக்கல்களை உருவாக்குகின்றன

வறுமை காரணமாக யாராவது ஒரு படி அரிசி வீட்டிற்கு எடுத்துச்  சென்று விட்டால், எல்லா செய்திகளிலும் சத்துணவு ஊழியர்கள் எல்லாரும் திருடர்கள் என்ற எழுதுகின்றனர். மிகக் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவை கடுமையான சிக்கல்களை உருவாக்குகின்றன. இதில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி பணிநீக்கம் செய்யப்பட்டால் வாழ்க்கையே இருளில் மூழ்கிவிடுகிறது.

மேலும் அரசு வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லி அரசியல்வாதிகள் ரூ 2 லட்சம் முதல் ரூ 1.5 லட்சம் வரை லஞ்சம் பெறுகின்றனர். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அரசுப்பணியில் இல்லாதவர்களுக்குத் தான் இந்த வேலை என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்றோ போலிசுக்காரன் பொண்டாட்டி, டெப்யூட்டி தாசில்தார் பொண்டாட்டி என்று எல்லோரும் அமைப்பாளர்களாக உள்ளே நுழைந்து விட்டனர்.

ஆரம்ப காலத்தில் ஆளுங்கட்சியின் அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல. அமைச்சர், வட்டம், கால் வட்டம், அரை வட்டம் என்று அவர்களின் தலையீடுகள் சத்துணவு ஊழியர்களுக்கு பெரும் குடைச்சலாக இருந்தது. யார் வேண்டுமானாலும் சமையலறைக்குள் வரலாம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக சமையல் வேலையில் ஈடுபட்ட இளம்பெண்களுக்கெதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்தன. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் நான் வேலை பார்த்த இடத்தில் இருந்த சத்துணவு உதவியாளர் ஒருவர் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இரவோடு இரவோடு சத்துணவு ஊழியர்கள் அனைவரும் மற்றும் அரசு ஊழியர் சங்கத்திலிருந்து கே.ஆர்.சங்கரனும் எங்களுடன் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு அந்த அ.தி.மு.க காலியை கைது செய்ய வைத்தோம்.

சத்துணவு ஊழியர் சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி

சவால்கள் நிறைந்த சூழல்களுக்கு மத்தியில், சத்துணவு ஊழியர்களின் பாதுகாப்பு, கோரிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சங்கத்தின் முயற்சியால் 19-05-1985-ல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் புதுக்கோட்டையில் உதயமானது. முதல் மாநாடு 1985 ஜூன் 25-ல் கோவையில் நடைபெற்றது. எங்களுடைய பிரதான கோரிக்கை என்னவெனில் “அரசு ஊழியராக்கப்பட வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியத்தைத் தரவேண்டும்”, நாங்கள் அன்று விடுத்த கோரிக்கை இன்றுவரை எந்த அரசாலும் நிறைவேற்றப்படவில்லை.

சங்கத்தின் மூலம் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்ததா?

எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சில சலுகைகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் தரப்பட்டதேயொழிய எந்த அரசாங்கமும் போராடாமல் தரவில்லை.

போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவது நாங்கள், ஆனால் சலுகைகள் அறிவிக்கப்படுவதோ வேறொரு சங்கத்தின் வழியாக, அதாவது தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவான சத்துணவு சங்கங்கள் சில உண்டு, அவை போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை, ஊழியர்கள் நலனுக்கென்று எந்தக் கூட்டமும் நடத்துவதில்லை, ஆனால், நாங்கள் அரசுக்கெதிராகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபடும் போதோ, அரசு எங்களை அழைத்துப் பேசாமல் இவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பயன்படாத சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவிப்பார்கள். இது நிறைய நேரத்தில் ஊழியர்களின் மன உறுதியைக் குலைத்திருக்கிறது.

கடந்த ஏப்ரலில் நடந்த போராட்டத்தில் இது மாதிரியான 9 லெட்டர் பேடு சங்கங்கள் முழுவதும் அம்பலப்பட்டு விட்டனர்.

2015 ஏப்ரல் மாதம் நடந்த போராட்டம் பற்றி சொல்லுங்கள்.

1991-96-ல் வேலூரில் நடந்த மாநாட்டில், “சத்துணவு ஊழியர்களின் மொத்த சம்பளம் 450-ஐ மாற்றி அதை அடிப்படைச் சம்பளமாக மாற்றித் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தோம். அந்த நேரத்தில் அலுவலக உதவியாளர்களுக்கான அடிப்படைச் சம்பளம் ரூ 610-ஆக இருந்தது. இன்று அவர்களது சம்பளம் ஏறக்குறைய ரூ 15,000 முதல் ரூ 20,000 வரை ஆகும். எங்களுக்கும் ரூ 450 அடிப்படை சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் ரூ 12,000 முதல் ரூ 15,000 வரை வாங்கியிருந்திருப்போம்.

ஆனால் இப்போது கிடைக்கும் ஊதியம் சாப்பாட்டுக்கே போதாத நிலைதான் உள்ளது.

  1. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  2. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  3. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  4. சமையலர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  5. சமையலர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  6. சமையல் உதவியாளர் 20 ஆண்டு பணி முடித்தவர்
  7. சமையல் உதவியாளர் 20 ஆண்டு பணி முடித்தவர்
விவரம் 1 2 3 4 5 6 7
1 ஊதியம் 3710 3580 3460 1520 1520 1110 1110
2 தர- ஊதியம் 500 500 500 300 300 200 200
3 ஆண்டு ஊதிய- உயர்வு 130 130 120 120 60 80 40
4 அகவிலைப்படி(113%) 4904 4757 4610 2192 2124 1571 1526
5 மொத்தம் 9244 8967 8690 4132 4004 2901 2876
6 ’வீட்டுவாடகைப்படி
7 ”நகர ஈட்டுப்படி
8 மருத்துவப்படி
9 மொத்தம்

பணி நிரந்தரம், 3,500 ரூபாய் ஓய்வூதியம் உட்பட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரலில் போராட்டம் நடத்தினோம். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் அரசே எதிர்பாராத வகையில் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளோம்; 3,2000 மையங்கள் மூடப்பட்டன, மொத்தம் 35,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் வெளியீட்டிலிருந்து

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆளுங்கட்சியினரும், காவல்துறையும் எங்களைப் பல்வேறு வகையில் ஒடுக்கினர். நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களை சமைக்க வைத்தது, ஆளுங்கட்சி ரவுடிகளின் மிரட்டல்கள், பூட்டை உடைத்து சமைக்க வைத்தது, செல்பேசியில் மிரட்டியது, தகாத வார்த்தைகளால் திட்டியது என சவால்கள் ஏராளம்.

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் உங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கிறார்களா?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
ஜெயலலிதா இம்முறை ஆட்சிக்கு வந்த போது, அம்மா உணவகத்திற்காக துவரம் பருப்பை திருப்பி விட்டதால், வாரம் முழுவதும் மாணவர்களுக்கு பருப்பு கிடைத்த நிலை மாறி வாரம் ஒரு நாள் என்று மாறிவிட்டது.

எங்களைப் பொறுத்த வரையில் இரண்டு கட்சிகளும் எங்களுக்கு அநீதி தான் இழைத்து வந்திருக்கின்றன, எங்களுடைய அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த இரண்டு கட்சிகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஏமாற்று என்று இரட்டை வேடம்தான் போட்டுக் கொண்டிருந்தனர்.

1991-96 அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், நாங்கள் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தித் தரக்கோரி வேலூரில் மாநாடு நடத்தினோம். மேலும் பல கட்ட போராட்டங்களும் நடத்தினோம். அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி எங்கள் மேல் மிகுந்த கருணை காட்டும் உள்ளத்தோடு ஒரு அறிக்கை விட்டு ஒரு திருக்குறளையும் சொன்னார்.

”சத்துணவு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாமல் கண்ணீரும் கம்பலையுமாக வீடு திரும்புகின்றனர்.

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்பதை ஆளும் அ.தி.மு.க நினைவிற்கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்கு சரியான தீர்வு வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

ஆனால், அதே கலைஞர் தான் 2011-ல் கோட்டை முற்றுகைப் போராட்டத்தின் போது எங்களைக் கடுமையாக ஒடுக்கினார். எங்களை மாவோயிஸ்டுகள் என்றெல்லாம் வர்ணித்துப் பேசினார்.

1988-ல் மூன்றாவது மாநில  மாநாடு நடந்தது. அதிமுக ஆளுங்கட்சியில் கொ.ப.செ-வாக இருந்த ஜெயலலிதா, சத்துணவு அமைப்பிற்கான உயர்மட்டக்குழுவின் தலைவர் பதவியிலும்  நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, “நீங்கள் குறைந்த சம்பளத்திற்கு மகத்தான சமையல் வேலையைச் செய்வதால் உங்களை சத்துணவு ஊழியர்கள் என்று அழைப்பதை விட “தேவதூதர்கள்” என்றே இனிமேல் அழைக்க வேண்டும்” என்றார். மேலும் “உரிய நேரத்தில் உரிய முறையில் எம்.ஜி.ஆரிடம் உங்களது கோரிக்கைகளைச் சொல்லி அவற்றை நிறைவேற்றித் தருகிறேன் ”என்று சொன்னார்.

இன்று 5-வது முறையாக முதல்வர் பதவியும் ஏற்று விட்டார், ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை. ஜெயலலிதா மக்கள் முதல்வராக இருந்த போதும், தமிழக முதல்வராக இருந்த போதும் இதே விதமான ஒடுக்கு முறைகள் தான்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு 30 ஆண்டுகளில் மேம்பட்டிருக்கிறதா?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
ஊட்டச் சத்து குன்றியிருக்கும் ஏழை மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.

ஊட்டச் சத்து குன்றியிருக்கும் ஏழை மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் இன்றைய நிலையில் அரசாங்கம் இதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.  புரதச்சத்து என்பது குழந்தைகளுக்கு, குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று; ஆனால் ஜெயலலிதா இம்முறை ஆட்சிக்கு வந்த போது, அம்மா உணவகத்திற்காக துவரம் பருப்பை திருப்பி விட்டதால், வாரம் முழுவதும் மாணவர்களுக்கு பருப்பு கிடைத்த நிலை மாறி வாரம் ஒரு நாள் என்று மாறிவிட்டது. 13 வகையான  உணவு என்ற பெயரில் சத்தான சாப்பாட்டுக்கு தடை போடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் Central Canteen என்ற ஒரு திட்டம் கர்நாடகாவில் 25,000 குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதற்காகத் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் ஆதரவு பெற்ற ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. ஆளும் அதிமுக கட்சியும் இவர்களுடன் சத்தமின்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

த்துணவு அமைப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“அரசாங்கத்த நடத்துறவங்களுக்கு புத்தியே கிடையாது, கொஞ்சம் கூட அடிப்படை அறிவும் கிடையாதுங்க!”

“சங்கத்தில் இருக்கிறீர்களா”

“இருக்கிறேன், எந்த சங்கம் என்ற போது அதெல்லாம் தெரியாது சார்! மாச மாசம் பணம் கட்டுவோம் அவ்ளோ தான், எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பாண்டியன் சார் தான்!..”

“போராட்டத்திலே கலந்து கொண்டீர்களா”

“இல்ல, ஒன்றியத்துல உத்தரவு போட்டுட்டாங்க அதனால கலந்துக்கல”

இன்னொரு அமைப்பாளர்

“பழனிச்சாமி தலைவராக இருக்குற சங்கத்துல இருக்கேன், நிறைய போராட்டங்கள்ல கைதாயிருக்கேன்! ஆனா இந்த அரசாங்கத்துல எனக்கு நம்பிக்கையில்ல.

நான் இங்க இருக்கேன், என் பொண்டாட்டி புள்ளங்கல்லாம்  என் சொந்த ஊருல இருக்காங்க! டிரான்ஸ்பர் கேட்டு பல வருசமாச்சு ஒருத்தனும் குடுக்க மாட்டேங்குறான்! ஊர்ல விவசாய நிலமெல்லாம் இருக்கு ஆனா தண்ணியில்ல! அதனால தான் நான் இங்கயே இருக்கேன்.

மூணு புள்ளங்க இருக்கு, பொம்பளப் புள்ளய இப்பத்தான் கட்டி கொடுத்திருக்கேன்!  ரெண்டு பசங்கள படிக்க வைக்கணும், என்னோட நெலம எம்புள்ளங்களுக்கு வந்துறக்கூடாதுன்னு நெனச்சேன்! அதுக்கு இந்த சம்பளத்த வச்சு ஒண்ணும் செய்ய முடியாது அதனால தான் நைட்ல செக்யூரிட்டி வேலைக்கும் போறேன்!”

“உங்களுக்கே சம்பளம் கம்மின்னு சொல்லுறீங்க, அப்படின்னா சமையலர், உதவியாளர் நிலையெல்லாம் எப்படி”

“அவுங்க நெலமையெல்லாம் வெளில சொல்ல முடியாது, அவுங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லங்க, மாசம் 3,000 ரூபா சம்பளத்த வெச்சுகிட்டு என்ன சார் பண்ணுவாங்க! வீட்டுக்கும் வேல பாக்குற இடத்துக்கும் 20, 30 கி.மீ தூரம் இருக்கும், இத வெச்சுகிட்டு அவுங்களால பஸ் செலவுக்குக் கூட சமாளிக்க முடியாது. அரசாங்கத்த நடத்துறவங்களுக்கு புத்தியே கிடையாது, கொஞ்சம் கூட அடிப்படை அறிவும் கிடையாதுங்க!

போன ஆட்சியில பென்சன் 700 ரூவா தான் கொடுத்தாங்க, அதுக்கு ஒரு போராட்டம் நடத்துனோம்! அப்பறம் தான் 1,000 ரூபா பென்சனா உயர்த்துனாரு கலைஞரு! எங்க போராட்டத்த நசுக்குனதுல கலைஞருக்கு முக்கியமான பங்கு இருக்கு, அவரு நெனச்சுருந்தா அப்பவே Pay Commission-ல சொன்னது மாதிரி பென்சன உயர்த்திக் கொடுத்திருக்கலாம், ஆனா ஒன்னுமே செய்யலிங்க!..”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
சரசுவதி அம்மாள் (நடுவில்), அவர் மருமகள் (இடது), மல்லிகா (வலது).

சென்னைப் புற நகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மல்லிகாவின் வீட்டிற்குச் சென்றபோது, பள்ளிக்குச் சென்று வேலைகளை முடித்து விட்டு தலைவலியோடு வந்திருந்த அவர், இருந்தாலும் எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் குறித்து கேட்டபோது, தான் பாலர் பள்ளியில் சமையல் வேலை செய்வதாகவும், நடுநிலைப்பள்ளியில் வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவரிடம் செல்வோம் என்று அழைத்துச் சென்றார்.

60 வயதைத் தொட்ட சரசுவதி அம்மாள் 30 வருடங்களுக்கு முன்னர் 60 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்க ஆரம்பித்தவர் இறுதியாகப் பணி ஓய்வு பெறும்போது பெற்ற சம்பளம் ரூ 3,250. ஓய்வுபெற்ற பின் முதல் வருடத்தில் பி.எப் பணம் என்பதாக 20,000 ரூபாயும், சென்ற வருடம் 8,000 ரூபாய் பென்சன் என்ற பெயரில் கொடுத்திருக்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, 1,000 ரூபாய் பென்சன் பணம் வரும் என்று பள்ளியில் சொன்னதாகவும், மேலும் எப்போது வருமென்பது பற்றி எதுவும் தெரியாது என்பதாகவும் சொல்லிவிட்டு “சார்! முதியோர் பென்சனும் 1,000 ரூவா தான், ரிடேர்மெண்ட் பென்சனும் 1,000 ரூவா தான், இத வாங்குறத வுட்டுட்டு அதையாவது வாங்கலாமான்னு கூட தோனுது சார்! கஷ்டப்பட்டு ஒழச்சாலும் அதே காசு தான், சும்மா இருந்தாலும் அதே காசு தான்னா, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்! இதெல்லாம் யாரு கேப்பா?? ” என்று மிகவும் விரக்தியாக பதிலளித்தார்

“இப்ப என்னம்மா பண்ணிகிட்டு இருக்கீங்க”

”நான் வேலையிலிருந்து ரிட்டயர் ஆன பிறகு, இன்னும் யாரையும் வேலைக்கு எடுக்கல! ஆனாலும் ஆறு மாசமா வேலைக்குப் போனேன்”

சத்துணவுத் திட்டம் - சுரண்டல்
“மழை பெஞ்சுச்சுன்னா, அடுப்ப ஊதி ஊதி சமைச்சு முடிக்குறதுக்குள்ள எத்தன செரமம் தெரியுமா?” – சத்துணவு சமைக்கும் இடம் (கிராமத்து பள்ளி ஒன்றில்)

“சரிம்மா! சம்பளம் எதும் கொடுத்தாங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், நானா வேலைக்குப் போனேன், பாவம்! புள்ளங்களுக்கு சமச்சுப் போட யாரும் இல்லன்னு நெலம வந்துறக்கூடாதுல்ல!

காலியான அந்த இடத்துல என்னோட மருமகளுக்கு இடம் தரேன்னு, ஸ்கூலுல சொல்லிருக்காங்க, புள்ளயும் எங்கேயும் வெளியில வேலைக்குப் போனதுல்ல, அதனால மருமகள சத்துணவு சமையல் வேலைக்கு அனுப்பிட்டு, நான் வீட்டு வேலைக்கு போய்ட்டு வரேங்க”

“ஏனம்மா, இப்படி நீங்க கஷ்டப்படனும்”

“சார், எம் பையன்,  ஒரு கியரு கம்பெனில வேல பாக்குறான். லோனு போட்டு வீட்ட கட்டிபுட்டான், இப்போ கடனு மேல கடனாகிப்போச்சு. அதுனால OT  பாத்தா தான் கொஞ்க காசு கூட கெடைக்கும்னு வெலையே கதின்னு கெடக்குறான். அதனால தான் நானும் என் பங்குக்கு எதாவது வேலைக்கு போனா கொஞ்கம் ஒத்தாசையா இருக்கும்ல”

“சரிங்கம்மா! சமையல் தேவைக்கான பொருளெல்லாம் யார் பொறுப்பு”

“அதெல்லாம், டீச்சர் வாங்கித் தந்துருவாங்க சார், எங்க வேல சமச்சுப்போடுறது மட்டும் தான் சார், டீச்சர் வேற ஊருலேந்து வர்றாங்க, அவுங்களுக்கு எல்லாமே தெரியும் சார்.”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
முன்னடியேல்லாம் நாங்க சோத்த தனியா வடிச்சு, சாம்பார் தனியா வச்சு கொடுப்போம். இப்பெல்லாம் இந்த அம்மா வந்ததுலேர்ந்து பருப்பு ஒரு நாளு மட்டும் தான் போடச்சொல்லி உத்தரவு”

“சத்துணவு ஊழியர்கள் நிறைய பொருட்களை எடுத்துச் சென்று விற்று விடுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே”

“ஸ்கூலுல 45 நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் எண்ணெய் எல்லாம் இருக்கும். டீச்சர் வந்து தான் எங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க! மத்தபடி 10 முட்டை மிஞ்சுனுச்சுனா கூட, அத அடுத்த நாள் கணக்குல ஏத்திடுவாங்க. இதுல எங்களுக்கு எந்த வேலயுமேயில்ல சார்! சோறு மீந்து போற மாதிரி இருந்தா அத வீட்டுக்கு எடுத்துட்டு வந்து ராத்திரிக்கு சாப்டுக்குவோம், அவ்ளோ தான் சார்!”

“சத்துணவு வேலையெல்லாம் ஒரு வேலையாகவே கருதக்கூடாது, அது என்ன ஒரு பாதி நாள்(பகுதி) வேலை மட்டும் தானே, இதுக்கு எந்தக் கல்வித் தகுதியும் தேவையில்லை தானே! என்கிறார்களே”

“சார்! அதேப்படி அது வேலையே இல்லன்னு சொல்ல முடியும், அப்போதெல்லாம் வெறும் கூரைக் கொட்டாய் தான்! மழை பெஞ்சுச்சுன்னா, அடுப்ப ஊதி ஊதி சமைச்சு முடிக்குறதுக்குள்ள எத்தன செரமம் தெரியுமா? கூரைய பொத்துகிட்டு மழை வேர சொர்ருன்னு ஊத்தி நாங்க நனைஞ்சே  போயிருவோம்! அடுப்பு வேற அணையாம பாத்துக்கணும், அப்பப்ப ஊதி விட்டுட்டு தண்ணி ஊத்தாத எடத்துல போயி நின்னுக்குவோம், இப்ப மட்டும் என்ன அதே வெறக வச்சுத்தான் சமைக்கிறோம், என்ன கட்டடத்துக்குள்ளே சமைக்கிறோம், அவ்ளோ தான்….ஆனா பாருங்க அடுப்பு புகையில நின்னு நின்னு என்னோட கண் பார்வையே மங்கிபோயி, இப்ப தான் கண் ஆபரேசன் பண்ணிருக்கோம், ஆனாலும் பழைய மாதிரி பார்வை இல்லங்க”.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்குல்ல போனா, அரிசிய கழுவி சுத்தம் செஞ்சு, பிறகு தண்ணி நெரப்பி அரிசிய ஊற போட்டுட்டு, மத்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, சரியான நேரத்துக்கு சாப்பாடு போட்டுட்டு, பாத்திரமெல்லாம் கழுவி முடிக்க மத்தியானம் 2.30 மணியாகிடும்.”

“என்ன மாதிரியான சமையல் செஞ்சு போடுவீங்க”

“புளி, எலுமிச்சை, தக்காளி, பிரிஞ்சி சாதம், நான்கு நாட்களும், வெள்ளியன்று பருப்பு சாம்பார், முட்டை தொக்கு செய்து கொடுப்போம்”

“அது சரி தெனமும் பருப்பு சேக்குறதில்லையா?”

“சார்! முன்னடியேல்லாம் நாங்க சோத்த தனியா வடிச்சு, சாம்பார் தனியா வச்சு, ரெண்டு வரிசையில புள்ளங்கல வரச்சொல்லி ஒருத்தர் சோறு, ஒருத்தர் சாம்பாருன்னு கொடுப்போம். புள்ளங்க ரெண்டு மூனு மொற கேட்டு வாங்கி சாப்புடுங்க! இப்பெல்லாம் இந்த அம்மா வந்ததுலேர்ந்து பருப்பு ஒரு நாளு மட்டும் தான் போடச்சொல்லி உத்தரவு” என்று கவலையுடன் பதிலளித்தார்.

“சத்துணவு வேலையையும் பார்த்துகிட்டு வேற வேலைக்கு போனதுண்டா?”

“ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்குல்ல போனா, அரிசிய கழுவி சுத்தம் செஞ்சு, பிறகு தண்ணி நெரப்பி அரிசிய ஊற போட்டுட்டு, மத்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, சரியான நேரத்துக்கு சாப்பாடு போட்டுட்டு, பாத்திரமெல்லாம் கழுவி முடிக்க மத்தியானம் 2.30 மணியாகிடும். அப்பறம் எங்க சார் வேற வேலைக்கெல்லாம் போக முடியும்”

லட்சுமி, கீதா என்ற இரு சத்துணவு சமையலர்களை சந்தித்தோம். லட்சுமி மிகவும் வெளிப்படையாக, தயக்கமின்றி பேசினார்.

“ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
லட்சுமி, கீதா

“சார்! நாங்க இன்னா சார் பண்றது, HM கூப்புட்டு சாப்பாடு கரெக்டான டைமுக்கு ரெடியா இருக்கனும், இல்லாவிட்டால் கலெக்டர் ஆபிசுக்கு போன் போட்ருவோம்-னு மெரட்டுராரு, அப்பால டீச்சருக எல்லாம் கலந்து பேசி போயிட்டு வாங்கன்னா, சந்தோசமா போய்ட்டு வருவோம்..ஆனா யாரும் எதுவுமே சொல்லல… நாங்க இன்னா சார் பண்றது, சமச்சுப் போடுன்னா அத செய்யனும், புள்ளங்களும் பாவம்ல….”

“முட்டையெல்லாம் பதுக்கி வெக்கிரீங்கன்னு எல்லாரும் சொல்லுராங்களே”

“சார், எங்கள நீங்க ஒண்ணும் நம்ப வேணாம்,  நாங்க தப்பு பண்ணுனா கூட மறைக்கத்தான் பார்ப்போம், நேரா இங்க உள்ள புள்ளங்ககிட்ட போயி கேளுங்க, அதுங்க பொய் சொல்லாதுங்க….ஒவ்வொரு புள்ளங்களுக்கும் முட்டை கொடுக்குறப்ப சில புள்ளங்க வேணாம்னு சொல்லும், அப்ப நான் அவுங்ககிட்ட அதெல்லாம் முடியாது சாப்புட்டு தான் ஆகணும், அப்படியும் முடியலன்னா, இத வாங்கிக்கிட்டு வேற எதாவது பண்ணிக்கோ..என்று தான் சொல்வேனே தவிர, ஒரு புள்ளக்கி ஒரு முட்ட சேர்ந்தே ஆகணும்” என்றார்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“சத்துணவு எல்லா நாளும் சாப்பிடுவேன், தேர்வு நேரங்களில் மதியம் செல்வதால் சத்துணவு காலியாகிவிடும்” – சூரியா, பிரஜீத்

சூர்யா என்ற மாணவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். 8 வயதில் தந்தையை இழந்தவர், தங்கை, தாய் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றார்.”சத்துணவு எல்லா நாளும் சாப்பிடுவேன், தேர்வு நேரங்களில் மதியம் செல்வதால் சத்துணவு காலியாகிவிடும் எனவே வீட்டில் இருப்பதை சாப்பிட்டு விட்ட போவேன். வீட்டுச் சாப்பாட்டை விட சத்துணவு நன்றாக இருக்கும்” என்றார்.

அதே பள்ளியில் படிக்கின்ற இன்னொரு மாணவன் பிரஜீத் “தந்தை வேறு ஒருவருடன் சென்று விட்டதாகவும், அம்மா வீட்டு வேலை செய்து தன்னையும், தன் தங்கையையும் பார்த்துக் கொள்கிறார். சத்துணவு சாப்பாடு தினமும் சாப்பிடுவதாகவும், வேண்டுமளவு சாப்பாடு தருவார்கள், சாப்பாடும் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

இவரைப் போன்ற மாணவர்களுக்கு இப்போதைக்கிருக்கும் ஒரே ஆரோக்கியமான ஊட்டச்சத்து வழி இந்த சத்துணவுக் கூடங்கள்தான். குடியால் வருமானத்தையும் நிம்மதியையும் இழக்கும் குடும்பத் தலைவர்கள், வேறு வழியின்றி அல்லாடும் குடும்பத் தலைவிகள், இடையில், தானே வளரும் குழந்தைகள்…. இத்தகைய சூழ்நிலையில் வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்தை கொஞ்சமாவது வழங்குகிறது இந்த அரசுத் திட்டம். ஆனால் அந்த திட்டத்தின் இதயமான சத்துணவு ஊழியர்களை இதே அரசு எப்படி கொடூரமாக நடத்துகிறது என்பதை புரிந்து கொண்டால் ஒரு கேள்வி எழுகிறது.

சத்துணவு, ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்றவை குறித்து ஐ.நா முதல் இந்திய அரசு, தன்னார்வக் குழுக்கள் முதல் காக்கா முட்டை படம் வரை பேசுகிறார்கள். எனில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கச் செய்யாமல் பறிக்கும் அந்த வில்லன்கள் யார்?

– வினவு செய்தியாளர்கள்

விருத்தாச்சலம் : 5-வது கல்வி உரிமை மாநாடு – செய்தி, படங்கள்

0

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் மத்தியில் ”கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு” குறித்து தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளையடிக்கும் தனியார்பள்ளிகளை தவிர்க்கவும், மக்கள் பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க கோரியும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஜூன் 13, 2015 (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் விருத்தாச்சலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியிலிருந்து தப்பாட்டம் முழங்க, பள்ளி மாணவர்கள் முன்வரிசையில் “ஆகா அரசுப்பள்ளி! அய்யோ தனியார்பள்ளி!” என முழக்கமிட்டு செல்ல, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க உறுப்பினர்களும், பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்களும் முழக்க அட்டைகளை கையில் உயர்த்தி பிடிக்க, ஒரு பிரமாண்டமான பேரணி துவங்கியது!

பேரணி துவங்கியது

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஓங்கி ஒலித்த தப்பாட்டமும், தப்பாட்ட கலைஞர்களின் ஆட்டமும், கல்வி தனியார்மயத்தை கண்டித்து ஒலித்த முழக்கங்களும் பொதுமக்களை நின்று கவனிக்க வைத்தன. விருத்தாச்சலத்தின் முக்கிய வீதிகளில் பேரணி பயணித்தது. மணி முக்தா ஆற்று பாலத்தை கடந்து இறுதியில் மாநாடு நடக்கும் வானொலித்திடலை அடைந்தது!

ஓங்கி ஒலித்த தப்பாட்டமும், தப்பாட்ட கலைஞர்களின் ஆட்டமும், கல்வி தனியார்மயத்தை கண்டித்து ஒலித்த முழக்கங்களும்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் மத்தியில் திறந்தவெளியில் போடப்பட்டிருந்த மேடையில் “கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு” துவங்கியது!

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான திரு வெங்கடேசன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

திரு வெங்கடேசன்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான திரு வெங்கடேசன்

“தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த மாநாட்டை விருத்தாச்சலத்தில் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறோம்.

விருத்தாச்சலத்தை சுற்றி உள்ள அரசுப் பள்ளிகளில் செஸ் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்தினோம். மாணவர்கள் தங்கள் திறமையை உற்சாகத்துடனும், நுட்பமாகவும் வெளிப்படுத்தினார்கள். இவர்களுக்கு இன்னும் முறையாக சொல்லிக்கொடுத்தால், மாநில அளவில் இடம்பிடிப்பார்கள் என்பதை அறிந்தோம். அந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

கல்வி உரிமைக்கான பெற்றோர் மாணவர் சங்கம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் முயற்சியால் 2010-ம் ஆண்டு துவங்கப்பட்டு, ம.உ.பா. மையத்தின் ஒரு துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 2011-ல் சமச்சீர் பாடத்திட்டத்தை ஆட்சியில் அமர்ந்ததும் ஜெயலலிதா ரத்து செய்தார். அதை எதிர்த்து விருத்தாச்சலத்தில் பல போராட்டங்களை முன்னெடுத்தோம்.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து பல போராட்டங்களை முன்நின்று நடத்தினோம். அரசு நியமித்த கட்டணத்தை பல பள்ளிகளில் வாங்க வைத்திருக்கிறோம். இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறது. அரசு திட்டமிட்டு அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கிறது. பெற்றோர்கள் சங்கமாக இணைந்து போராடும் பொழுது தான் நமது உரிமைகளை வெல்லமுடியும். அதனால், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள்!”

மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த தோழர் துரை சண்முகம் துவக்க உரை நிகழ்த்தினார்.

துரை சண்முகம்
மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த தோழர் துரை சண்முகம்.

“பிரேசில் கல்வியாளர் ஒருவர் கூறியதை போல ‘கல்வியை பற்றி பேசுகிறோம் என்றாலே இந்த சமூகத்தைப் பற்றி பேசுகிறோம்’ என்று அர்த்தம். பணியில் இருக்கும் பொழுது ஊரைக் கெடுத்தது மட்டுமில்லாமல், ஓய்வு பெற்ற பிறகும் கோயில் கும்பாபிசேகம் என ஊரைக் கெடுப்பவர்கள் மத்தியில், மேடையில் இருக்கும் பல ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணி அழகானது. சிறப்பானது. இந்த வட்டாரத்தையே கல்வி காசாவதை தடுக்க தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு தொழிலாளிக்கு நாம்தாம் படிக்கவில்லை. நமது பிள்ளையாவது படிக்கட்டுமே என்ற சிந்தனை இருந்தது. ஆனால், இன்று நாம்தாம் தொழிலாளி. நமது பிள்ளையாவது முதலாளியாகட்டுமே என்ற அளவில் சிந்தனை மாறியுள்ளது. பலரும் தன் பிள்ளையை கலெக்டருக்கு படிக்க வைக்கணும்னு சிந்திக்கிறான். ஆனால் கலெக்டருக்கு வேலை என்னவென்றால், டாஸ்மாக் சரக்கு எப்படி அதிகம் விற்கிறது என ஓயாமல் சிந்திப்பது தான்!

ஆங்கிலம் படிப்பதால், நம் பிள்ளைகளுக்கு அந்தஸ்து கிடைக்குமென ஊடகங்களில் திட்டமிட்டே கல்வி முதலாளிகள் பரப்புகிறார்கள். கல்வி தனியார்மயம் என்பது ஒரு மிகப்பெரிய ஆபத்து.

அரசு பள்ளிகளில் வசதியில்லை என்றால் போராடி பெறுவது தான் சரி. அதற்காக தனியார் பள்ளிகளில் சேர்ப்பது எந்தவிதத்தில் சரி? அப்பா சரியில்லையென்றால் எதிர் வீட்டுக்காரை அப்பா என சொல்லமுடியுமா? அப்பாவை சரி செய்யவேண்டியது நமது கடமை.

மோடி அரசு 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குலத் தொழிலை செய்யலாம் என சட்டமாக மாற்றுகிறான். இந்த சூழ்நிலையில் விவசாயம், தொழிற்துறை, கல்வி, மருத்துவம், அனைத்து பிரிவு மக்களையும் பாதிக்கும் தனியார்மயத்தை எதிர்ப்பது அவசியம்.”

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சார்ந்த திரு. . குணசேகரன், தஞ்சாவூர் “ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அரசுப் பள்ளிகளை முன்னேற்றும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

குணசேகரன்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சார்ந்த திரு. ந. குணசேகரன், தஞ்சாவூர்

“விருத்தாச்சலம் தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியான வேலையை செய்கிறது. குறிப்பாக ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர், கல்வித்துறை சார்ந்தவர்கள் எல்லாம் தனியார் பள்ளிக்கு வேலைக்கு போய்விடுகிறார்கள். விருத்தாச்சலத்தில் மட்டும் தான் ஓய்வு பெற்ற பல ஆசிரியர்கள் கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து சமூக தொண்டு செய்கிறார்கள். இவர்கள் தான் சுயமரியாதைமிக்கவர்கள்.

ஆசிரியர்களை குறை சொல்லுகின்றன சில ஊடகங்கள். அரசு பள்ளியில் அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்களை பட்டியலிட்டால் அது மிக நீண்டு செல்லும். கல்பனா என்ற ஆசிரியர் ஒரு அரசு பள்ளியில் சேரும் பொழுது மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 10 பேர். அவர் வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, 150 மாணவர்கள் இப்பொழுது பள்ளியில் படிக்கிறார்கள்.

கல்வி அதிகாரிகளை அவ்வப்பொழுது மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மக்கள் எந்த ரியாக்சனும் காட்டுவதில்லை. தாராபுரத்தில் ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியரை மாற்றல் செய்த பொழுது, ஊர் மக்களே ஒன்றாக கூடி, ஆசிரியரின் பணி மாற்றலை தடுத்து நிறுத்தினார்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் சங்கம் கையில் முழு அதிகாரமும் இருந்தால் கல்வி சமூகத்திற்கான கல்வியாக இருக்கும்.

தனியார் பள்ளிகளுக்கு சேவை செய்வதே அரசின் வேலை. 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் எடுத்தால் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க அரசே ரூ.30,000 தருவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் அரசு திட்டமிட்டே அரசு பள்ளிகள் தரமற்றது என்ற பிரச்சாரத்தை செய்கிறது.

ஒவ்வொரு தனியார் பள்ளியையும் நடத்துபவர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் தான். அதனால் தான் அரசோடு இணைந்து திட்டமிட்டு அரசு பள்ளிகளை முடக்க எல்லா காரியங்களையும் செய்கிறார்கள்.

தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு முன்னுரிமை என மிகப்பெரிய போராட்டம் செய்யவேண்டும்.”

திரு. கோ. சீனுவாசன், உதவித் தொடக்க அலுவலர் (ஓய்வு), விருத்தாச்சலம்

சீனுவாசன்
திரு. கோ. சீனுவாசன், உதவித் தொடக்க அலுவலர் (ஓய்வு), விருத்தாச்சலம்

“நான் உதவி தொடக்க கல்வி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவன். அரசுப் பள்ளிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் கண்காணிப்பவர்கள் உதவி தொடக்க அலுவலர்களும், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களும் தான். பள்ளிகளில் மாணவர்களை கல்வித்தரத்தை சோதிப்பது இவர்கள் தான். ஆனால், சோதிக்காமல் கையூட்டு வாங்கிக்கொண்டு வந்துவிடுகின்றனர். என் பணிக்காலம் முழுவதும் நேர்மையாக பணியாற்றினேன்.

இன்றைக்கு 2500 பள்ளிகளை மூடப்போவதாக சொல்கிறார்கள். 2 லட்சம் மாணவர்களை பள்ளிகளில் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அரசுப் பள்ளிகளையாவது கண்காணிக்க நாங்கள் இருக்கிறோம். தனியார் பள்ளிகளை கண்காணிப்பதற்கு ஆளே கிடையாது. இவற்றையெல்லாம் தடுக்கவேண்டுமென்றால், தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும். அதற்கு பெற்றோர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.

ஆசிரியர் கோ. செல்வராஜ், மாநில சிறப்புத்தலைவர், இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

ஆசிரியர் கோ. செல்வராஜ்
ஆசிரியர் கோ. செல்வராஜ், மாநில சிறப்புத்தலைவர், இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

” நான் வேலை செய்த பள்ளியில் வரலாற்றாசிரியர் இல்லை. தலைமையாசிரியர் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து எடுக்கச் சொல்லும் பொழுது, யாரும் முன்வரவில்லை. இடைநிலை ஆசிரியரான நான் எடுக்க முன்வந்தேன். ஏற்றுக்கொண்டார். இவர் தமிழாசிரியர். எப்படி வரலாற்று பாடம் எடுப்பார் என சில ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். என்மீது நம்பிக்கை வைத்து தலைமையாசிரியர் பாடம் எடுக்கசொன்னார். அந்த ஆண்டு வரலாற்று பாடத்தில் மாணவர்கள் 100% தேர்ச்சிபெற்றார்கள். அடுத்த ஆண்டு மாநில அளவில் வந்தவர்களில் என் மாணவனும் ஒருவன். தொடர்ந்து பாடம் எடுத்த சில ஆண்டுகள் வரை மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றார்கள். சில மாணவர்கள் இந்த மாநாட்டிற்கு கூட வந்திருக்கிறார்கள்.

நான் ஒரு கிராமத்து பள்ளியில் பணிபுரிந்த பொழுது, அதன் தலைமையாசிரியருடன் வேலை செய்வதில் போட்டிப்போடுவேன். அவரைவிட காலையில் சீக்கிரம் வரவேண்டும். மாலையில் அவருக்கு பிறகே கிளம்பவேண்டும் என நினைப்பேன். ஒருநாளும் நடந்ததில்லை. பள்ளிக்கு எல்லோரும் வருவதற்கு முன்பே வந்துவிடுவார். எல்லோரும் கிளம்பியபிறகு தான் பள்ளியை விட்டு கிளம்புவார்.

அவர் அறையில் அமர்ந்து பார்த்ததேயில்லை. எப்பொழுதும் பள்ளியைச் சுற்றி சுறுசுறுப்பாக கண்காணித்துக்கொண்டே இருப்பார். ஆசிரியர் யாராவது வரவில்லையென்றால் அவரே பாடமும் எடுப்பார். சில ஆண்டுகளில் அவர் மாற்றலாகி வேறு ஊருக்கு போகும் பொழுது, 57 வயதான நான், சிறந்த தலைமையாசிரியரை பள்ளி இழக்கிறதே என தேம்பி தேம்பி அழுதேன். நான் அழுவதைப் பார்த்து அவரும் கலங்கினார்.

இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்கள் இருப்பதால் தான் அரசுப் பள்ளிகள் இன்னும் உயிர் வாழ்கின்றன.”

மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கலை நிகழ்ச்சிகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேச்சாளர்கள்

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் பலத்த கைத்தட்டலுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
நாள் 13-6-2015 இடம் : விருத்தாசலம்

அமைப்பு :
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

தீர்மானங்கள் :

  1. மாணவர்களிடையே சமத்துவத்தைப் பேணும் வகையிலான ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட பொதுப்பள்ளி- அருகமைப்பள்ளி முறைக்காக அனைவரும் போராட வேண்டுமென இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.
  2. அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கவும், அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்க தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும், அரசு மாணவர் விடுதிகளில் சுத்திகரிக்கபட்ட குடிநீர், சுகாதாரமான உணவு என்பதை கண்காணித்து உத்திரவாதபடுத்தவும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு மாநில அரசு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களை நிர்ப்பந்திக்கும் வண்ணம் போராட வேண்டுமென்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெற்றோரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  3. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென இம்மாநாடு ஒரு மனதாக வலியுறுத்துகிறது.
  4. கல்வியை மட்டுமின்றி மாணவர்களையும் பண்டமாக்கும் கல்வி வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதற்கு அரசைப் பொறுப்பாக்கு வதற்கும் போராட வேண்டுமென மாநாடு அறை கூவுகிறது.
  5. ஆசிரியர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் தனியார்பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.
  6. அனைவருக்கும் கல்வியளிப்பதாக தானே ஏற்றுக்கொண்ட பொறுப்பைக் கைகழுவியது மட்டுமின்றி, தாய்மொழிக் கல்வியையும், அரசுப் பள்ளிகளையும் ஒழித்துக்கட்டுவதற்கும், தனியார் கல்விக் கொள்ளையை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கும் இந்த அரசாங்கம், அதிகாரிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட மொத்த அரசமைப்பும் முன்நின்று வேலை செய்கின்றன. இந்தஅரசு, ஆளும் தகுதியிழந்து விட்டதால், இதனிடம் மனுக்கொடுப்பதும் மன்றாடுவதும், பயனற்றது என்றும், மக்கள் தமது கல்வி உரிமையை நிலை நாட்டிக்கொள்ளும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும், பள்ளிகள் அனைத்தையும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தமது கண்காணிப்பின் கீழ்கொண்டு வரவேண்டும் என்றும் இம்மாநாடு அறைகூவுகிறது.
  7. ஆசிரியர்களை கற்றல், கற்பித்தல் அல்லாத டி.என்.பி.சி, யு.பி.எஸ்.சி,தேர்வு பணி, தேர்தல் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி, மதுவின் தீமை விளக்க பேரணி, மழை நீர் சேகரிப்பு ஊர்வலம், இது போன்ற எண்ணற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை வலியுறுத்துகிறது.
  8. அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களை அரசு நிதி உதவி கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி தரகு வேலை பார்க்கும் கல்வி துறையை, மாவட்ட நிர்வாகத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

மாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள்

வை.வெங்கடேசன்
மாநாட்டுக் குழுத் தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
தொடர்பு : 93450 67646

லலித் மோடியை குற்றம் சொல்பவன் எவனடா?

0

“அடிச்சும் பாத்தாச்சு, அவுத்தும் ஓட வெச்சாச்சு” என கட்டதுரை சலித்துக் கொண்டாலும் கைப்பிள்ளைகள் அயர்வதில்லை. அடிவாங்கினால் பயப்படுவதற்கும் ஒரு நேர்மை குறைந்த பட்சமாக இருந்தாக வேண்டும். தொழில் முறை மாமாக்களிடம் அதை எதிர்பார்க்க கூடாது.

தினமணி வைத்தி
பா.ஜ.க.வின்ன் ஊடகப் பாதுகாவலர் தினமணி வைத்தி… விருது வழங்கும் விழா ஒன்றில்.

தினமணி வைத்தி-க்கு இந்த முறை நெறிகட்டியிருப்பது, சுஸ்மா ஸ்வராஜ் செய்த ஒரு மனிதாபிமான செய்கையால்.

வெறும் வாய்; மெல்ல அவல்!” என்று தலைப்பில் சதிகார நரி எல்லாம் விதி என்று ஓதிய கதையாக லலித் மோடியின் மனிதாபிமானத்தையும், அதை ஆதரிக்கும் நரேந்திர மோடி கோஷ்டி மனிதாபிமானத்தையும் காப்பற்ற துடிக்கிறார் தினமணி ஆசிரியர்.

முதலில் வைத்தி அவர்கள் ஊதுபத்தி, சாம்பிராணி போட்டு ஆன்மீக சூழலை உருவாக்குகிறார். “ஊழல், முறைகேடு இல்லாமல் ஆட்சி நடத்தும் மோடி அரசு மீது களங்கம் கற்பிக்க” இந்த பிரச்சினை எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்திருக்கிறதாம். ஆக, “மோடின்னா ஹாமம் சோப்பு” என்று கச்சேரியை ஆரம்பிக்கிறார். நிதின் கட்காரி, எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள், அதானி என்று ஏகப்பட்ட சான்றோர்கள் இந்த வரியைப் பார்த்து வெளிப்படுத்திய வெட்கத்தை படம்பிடிக்க இந்த உலகில் கேமராவே இல்லையே, என்ன செய்வது?

அடுத்து வைத்தி அவர்கள் சுருதி சுத்தமாக பல்லவியை பாடுகிறார். ஐ.பி.எல் சூதாட்டத்தைக் கண்டுபிடித்த லலித் மோடியின் மூளை, வீரர்கள் ஏலம், பெரும் பணம் போன்ற பிரமிப்புகளை நினைவுபடுத்துகிறார். “பல கோடி ரூபாய் இருந்தால் முறைகேடு இருக்கும் என்பதால் லலித் மோடி ஒன்றும் யோக்கியமானவர் இல்லை” என்று நடுநிலைமையாகவே எழுதுகிறார் வைத்தி. “பல கோடி ரூபாய் வருமானம் இருக்கும்பட்சத்தில் அவர்கள் அம்பானியாகவோ இல்லை அதானியாகவோ இல்லை கோயங்காவாகோ இருந்தால் கூட முறைகேடு இருக்கும்” என்று வைத்தி அவர்கள் சொல்லியிருப்பது ஒரு சேம்சைடு கோலென்றாலும் நேர்மையான சேம்சைடு கோல்!

சுஷ்மா சுவராஜ் - லலித் மோடி
சுஷ்மாவின் மனிதாபிமானத்தை புரிந்து கொண்டால் லலித் மோடி தப்பியதையும் மனிதாபிமானத்தோடு ஏற்றுக் கொள்ளலாமாம்.

லலித் மோடி அயோக்கியனாக இருந்தாலும் பல கோடி புழங்கிய காரணத்தால் அவருக்கு தாவுத் இப்ராஹிம் போன்ற தாதாக்களிடமிருந்து அச்சுறுத்தல் இருந்ததாம். இந்நிலையில் முந்தைய காங்கிரசு அரசு பாதுகாப்பை விலக்கிக் கொள்ள லலித் மோடி வேறுவழியின்றி லண்டனுக்கு தப்பினாராம். இதை ஊடகங்கள் வசதியாக மறந்து விட்டதாம். சுஷ்மாவின் மனிதாபிமானத்தை புரிந்து கொண்டால் லலித் மோடி தப்பியதையும் மனிதாபிமானத்தோடு ஏற்றுக் கொள்ளலாமாம்.

அதானே, குஜராத்தில் 2000 முசுலீம்களின் படுகொலைக்கு காரணமான மோடி ஒரு அயோக்கியர் என்றாலும் அவருக்கும் பயங்கரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் வந்தபடியால், குஜராத் போலீசு என்கவுண்டர் செய்த போது போலி மோதல் கொலை என்று கத்தியவர்கள் காட்டுமிராண்டிகள்தானே? 20-ஆம் நூற்றாண்டு இந்தியாவை கலவரங்களால் நிரப்பி சாதனை படைத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் போது எதிர்ப்பவர்களும் பயங்கரவாதிகள்தானே? இந்து ஞான மரபின் மனிதாபிமானத்தை புரிந்து கொள்ளாத அற்பர்களுக்காக காந்தியவாதி லலித் மோடி உயிர் துறக்கலாமா?

என்ன செய்வது, திருவாளர் தாவுத் இப்ராஹிம் மட்டும் இந்துவாக பிறந்திருந்தால் இப்படி ஓடி ஒளிந்து கராச்சியிலோ, காட்டுக்குள்ளோ பயந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. இனி தொழில் முறை தாதாக்கள் தமது ஆபரேஷன்களுக்கு முன்னால் தாம் ஒரு சுத்தமான இந்துவாக இருப்பதை உறுதி செய்து கொண்டால் அவர்கள் மனிதாபிமானத்தோடு புரிந்து கொள்ளப்படுவார்கள். அதற்கு வைத்தி மாமா உறுதி அளிக்கிறார்.

லலித் மோடி - ராஜே
(லலித் மோடி – பா.ஜ.க வின் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே வுடன்)

அடுத்தபடியாக திருவாளர் வைத்தி அவர்கள் லலித் மோடியின் காவிய ஒழுக்கத்திற்கு ஆதரவாக சில லா பாயிண்டுகளை முக்கி முக்கி எழுதப்படும் கவிதைகள் போல முன்வைக்கிறார். கவிதையோ இல்லை களவாணித்தனமோ அது வெளிப்படும் போது முக்கல் ஏற்பாட்டால்தான் கவித்துவத்திற்கோ இல்லை களவாணித்தனத்திற்கோ கேரண்டி. அதன்படிலலித் மோடி பல வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டியவரே அன்றி, தேடப்படும் குற்றவாளி அல்லவாம். அதன்படி தலைமறைவாக வாழ்பவர் இல்லையாம். அவரது இலண்டன் முகவரி இந்திய அரசுக்கு தெரியுமாம்.

அப்படி பார்த்தால் நீங்கள் தேடப்படும் குற்றவாளியாக இல்லாமல் விசாரிக்கப்பட வேண்டியவராக மட்டும் இருந்தால் நீங்களும் நல்லவரே. இதை தாவுத் இப்ராஹிமும் பல வழக்குகளின் நிலையை வைத்து கேட்கலாம். அதைப் போல பிக்பாக்கெட் திருடர்கள் முதல் ஷேர் மார்கெட் முதலைகள் வரை பலரும் கேட்டாலும் அதற்கும் கருட புராணம் வழி வைத்திருக்கிறது.

லலித் மோடியே ஒரு குற்றவாளி என்று நீதிமன்றம் கூறிவிட்டாலும், போடப்பட்ட வழக்கு அரசியல் பழிவாங்கும் உள்நோக்கமுடையது, உயர் நீதிமன்றத்தில் விடுதலை கிடைக்கும் என்று புரட்சித் தலைவிக்கு எழுதிய படி பார்த்தால் இந்த உலகில் மோடிகளை மட்டுமல்ல, கேடிகளையும் குற்றம் சொல்ல முடியாது. அடித்தவனுக்கு அடுத்த கன்னத்தைத்தான் காட்டச் சொன்னார் ஏசுநாதர். வைத்தி நாதரோ அடுத்தவனுக்கு ஒட்டு மொத்த ஊரையே காட்டச் சொல்கிறார்.

வாறியா என்று கூப்பிடும் மாமா, வருபவன் சொறியா, எய்ட்ஸா, குடிகாரனா என்றா பார்ப்பான்? அவனது தொழில் தர்மத்தின் படி வாடிக்கையாளர்களே கடவுள்கள். இதுதானே கடவுள்களின் மனிதாபிமானம்?

“லலித் மோடியின் கடவுச் சீட்டு வழக்கில் சுஷ்மா ஸ்வராஜின் மகள் வழக்கறிஞராக வாதாடினாரே” என்று கேட்பவர்களை வைத்தி அவர்கள் சிம்பிள் சிரிப்புடன் மடக்குகிறார். என்னவென்றால் சாரதா நிதி மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆலோசகராக இருந்தார், தடை செய்யப்பட்ட ‘சிமிக்கு’ ஆதரவாக காங்கிரசின் சல்மான் குர்ஷித் வாதாடினார் என்று வரலாற்றை விரிக்கிறார்.

ப.சி மேட்டர் படி நீங்களும் திருடர்கள்தானே என்று நினைவுபடுத்துகிறார். சிமி மேட்டர் படி நாங்களாவது பொருளாதார விடயங்களில் பொறாமையால் குற்றம் சாட்டப்பட்டவர்களைத்தான் ஆதரித்தோம், நீங்கள் இசுலாமிய பயங்கரவாதிகளை அப்பட்டமாக ஆதரித்திருக்கிறீர்கள் என்று உண்மையை பயங்கரமாக எடுத்து வைக்கிறார்.

அசீமானந்தா, பிரக்யா சிங், கோட்சே போன்ற முன்கள சாதனையாளர்களும், சாவர்க்கர், கோல்வால்கர், மோடி போன்ற பின்கள சாதனையாளர்களும் பயங்கரவாதிகளில்லையா என்று கேட்டால் என்ன பதில்? ஐயா இவர்களெல்லாம் தருமத்திற்காக ஆயுதம் எடுத்து அப்பாவிகளை கொன்றவர்கள் என்பது கூட தெரியவில்லை என்றால் நீங்களும் பயங்கரவாதிகளே!

அடுத்து ராஜ்ஜிய உறவு சார்ந்த விசயத்தை சிம்பிளாக எடுத்து வைத்து அதற்கு மோடி அரசு காரணமில்லை என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் வைத்தி. போர்ச்சுகல் போவதற்கு தற்காலிக விசா வழங்க இந்தியாவின் அனுமதியே தேவையில்லையாம். என்றாலும் இந்தியாவின் உறவு பாதிக்க கூடாது என்று பிரிட்டன் தயங்குகிறதாம். அப்படி தயங்க வேண்டாம், உங்கள் நாட்டு சட்டப்படி அனுமதிக்கலாம் என்று சுஷ்மா கூறுகிறாராம். இதெல்லாம் பிரச்சினையா என்று அறச்சீற்றத்துடன் பொங்குகிறார் வைத்தி.

அதாவது ஒரு குற்றவாளிக்கு அனுமதி அளித்தால் அது இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படும் என்று பிரிட்டன் தயங்குகிறது. இல்லையில்லை அந்த குற்றவாளியை அனுமதியுங்கள், நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சுஷ்மாவும், வைத்தியும் பேசுகிறார்கள். இதன்படி இங்கிலாந்திற்கு இருக்கும் குற்றவாளி குறித்த உணர்வு கூட இந்தியாவுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, அது தவறில்லை என்று வைத்தி வாதிடுகிறார். எனினும் இதன் பின்னே உள்ள நோக்கம் மனிதாபிமானமின்றி வேறு அல்ல! இதே மனிதாபிமானம் பிரிட்டன் என்ற நாட்டிற்கு இல்லை என்பதற்கு காரணம் அது மாட்டுக்கறி சாப்பிடும் தேசம் என்பதறிக.

இறுதியாக லலித் மோடியை கைது செய்யாமல் தப்ப விட்டு, குவாத்ரோச்சி, போபால் விசவாயு ஆண்டர்சன், தாவுத் இப்ராஹிம், மேமன் சகோதரர்கள் இப்படி பல தீவிரவாத, சமூக விரோதிகளை தப்பி விட்ட காங்கிரசு இப்போது சவுண்டு விடலாமா என்று வெகுண்டெழுகிறார் வைத்தி.

காங்கிரசு மீதான குற்றத்தை அப்படியே ஏற்போம். சரி, இடையில் வாஜ்பாயி ஐந்தாண்டுகள் ஆண்டார், மோடி கூட அமெரிக்கா, அண்டார்டிகா என்று உலகை சுற்றி சுற்றி வருகிறார், ஏன் மேற்கண்ட நபர்களை கைது செய்யவில்லை? அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் படி கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டாலும் அதன் இழப்பை இந்திய அரசுதான் சுமக்க வேண்டும். இதைத்தானே போபாலிலும் காட்டினார்கள். இந்தக் கேள்விகளுக்கு வைத்தி ஐயா அளிக்கப் போகும் பதில் என்ன? நாட்டு நலனுக்காக வீட்டு நலனை தியாகம் செய்ய வேண்டும் என்று விவேகானந்தரே சொல்லியிருக்கிறாரே!

அவுத்து அடிப்பதை ஒத்துக் கொண்டு எனது உள்ளாடையை திருடி விட்டான் என்று கூப்பாடு போடுவதில் கூட ஒரு நயம் வேண்டும், அது வைத்தி சாரிடம் நிறையவே இருக்கிறது.

எப்போதோ மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதற்கு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொன்னால் அதை மோடி கேட்கமாட்டாராம். கேட்டால் பிறகு அடிக்கடி இதை எழுப்புவார்களாம். இதெல்லாம் மோடிக்கு கரெக்டாக தெரியும் என்று அகமதாபாத் ஐஐஎம் அறிஞர் போல பட்டையைக் கிளப்புகிறார் வைத்தி.

இறுதியில் லலித் மோடியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை நரேந்திர மோடிக்கு இருக்கிறது என்று தலையங்கத்தை முடிக்கிறார் வைத்தி. என்னடா இதுவரை எழுதிய கீதை வரிகளின் முதலுக்கே மோசமா என்று திகைக்கிறீர்களா? எந்த லலித் மோடியை காப்பாற்ற சுஷ்மாவும், பா.ஜ.கவும் பாடுபடுகின்றதோ அந்த மோடியை தில்லி மோடி கைது செய்வார் என்று எப்படி எழுத முடியும்? என்று லாஜிக் பார்க்கிறார்களா? மாஜிக்கல் ரியலிசத்தின் அழகை மல்லாக்கொட்டை பறிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியாது ஐயா!

அல்லது இப்படியும் சொல்லலாம்.

குடிகாரர்களிடம் நிதானத்தையும், சதிகாரர்களிடம் நேர்மையையும் எதிர்பார்க்கலாமா? அது உங்களது மனிதாபிமானத்தை பொறுத்தது. அப்படியானால் மனிதாபிமானம் என்றால் என்ன? அது வைத்தி சாரிடம் கேட்க வேண்டிய கேள்வி! – கையில் கோமாதா அருளிய சாணியுடன்!

Sushma-Support-To-Lalith-Modi

செம்மரக் கடத்தல் டி.எஸ்.பியைக் காப்பாற்றத் துடிக்கும் போலீசு !

0

வேலூர் மாவட்ட கலால் துறை டி.எஸ்.பி தங்கவேலு, செம்மரக்கடத்தல் கும்பலுடன் கூட்டு சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டது தற்செயலாக தெரிய வந்ததும் தலைமறைவானார். ‘ஸ்காட்லாந்து போலீசுக்கு போட்டியாக துப்பறிவதில் உலகப்புகழ் பெற்ற’ தமிழ்நாட்டு போலீசு பல தனிப்படைகள் போட்டு 12 நாட்கள் கழித்து காட்பாடியில் வைத்து கைது செய்தது.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
வேலூர் மாவட்டத்திலேயே ‘பதுங்கியிருந்த’ தங்கவேலை கைது செய்ய 12 நாட்கள் தேவைப்பட்ட மர்மம் என்ன?

இவ்வழக்கில் தொடர்புடைய பலர் சில நாட்களிலேயே கைது செய்யப்பட்டாலும், வேலூர் மாவட்டத்திலேயே ‘பதுங்கியிருந்த’ தங்கவேலை கைது செய்ய 12 நாட்கள் தேவைப்பட்ட மர்மம் என்ன? போலிசே அவரைக் காப்பாற்றவும், அதனூடாக பேரங்கள் பேசவும் முயன்றதாக போலீசு வட்டாரமே கூறுகிறது. இந்த வட்டாரம் போட்டி வட்டாரம் என்பதறிக.

கடத்தல் கும்பலுக்கு செம்மரங்களை பதுக்க உதவிய பா.ம.க.வைச் சேர்ந்த சின்னபையனை, வெங்கடேசன் கோஷ்டி கொலை செய்ததையும், அந்த கொலைக் குற்றவாளிகளோடு தங்கவேலு கூட்டணி வைத்ததையும் முந்தைய பதிவில் எழுதியிருந்தோம். தற்போது, “கைது செய்யப்பட்டுள்ள பிற குற்றவாளிகளையும், டி.எஸ்.பியையும் போலீசு காவலில் எடுத்து விசாரிக்கிறோம்” என்கிற பெயரில் முதன்மைக் குற்றவாளியான தங்கவேலை காப்பாற்றும் வேலையில் இறங்கியிருக்கிறது போலீசு.

தங்கவேலை தப்பிக்க வைப்பதற்கான பேரங்களை, அவரை தேடிக்கொண்டிருந்த 12 நாட்களில் போலீஸ் வட்டாரத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் பேசி முடித்துவிட்டதா ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதை போலீசே மறுக்காது என்பதற்கு அந்த 12 நாட்களே பகிரங்கமான சான்று.

கைது செய்யப்பட்டவர்களில் தங்கவேலுடன் நெருக்கமாக இருந்த நாகேந்திரன், ஜோதிலட்சுமி தம்பதிகளை முதலில் காவலில் எடுத்து விசாரிக்க நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் அனுமதியளிக்க, கணவன் மனைவி இருவரையும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
“தங்கவேலு கூறியபடி தான் செயல்பட்டோம், மரங்கள் எப்போது வரும், அவற்றை எங்கே எப்போது அனுப்ப வேண்டும் என்பதையும் அவர் கூறுவார் நாங்கள் அதை செய்து முடிப்போம்”

விசாரணையில் நாகேந்திரனும், ஜோதிலட்சுமியும், “தங்கவேலு கூறியபடி தான் செயல்பட்டோம், மரங்கள் எப்போது வரும், அவற்றை எங்கே எப்போது அனுப்ப வேண்டும் என்பதையும் அவர் கூறுவார் நாங்கள் அதை செய்து முடிப்போம்” என்றும், “இந்த வழக்கில் முதல் குற்றவாளி தங்கவேலு தான்” என்பதற்கு போதுமான ஆதாரங்களையும் தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இது உண்மை என்றாலும் பேரத்திற்கான முன் எச்சரிக்கையும் என்பதை நாம் சேர்த்து பார்க்க வேண்டும்.

தங்கவேலு கடந்த 10 -ம் தேதி காட்பாடியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக, கடத்தல் கும்பல் போதைப் பொருட்களை இடம் மாற்றி இடம் மாற்றி எடுத்துச் செல்வதை போல போலீசார் தங்கவேலை ஒவ்வொரு இடமாக மாற்றி மாற்றி அழைத்துச் சென்றனர். காட்பாடியில் கைது செய்யப்பட்டவரை முதலில் பொன்னை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். செய்தியறிந்த பத்திரிகையாளர்கள் அங்கே குவிந்து நிற்கவும் அங்கிருந்து குடியாத்தத்திற்கு அருகில் உள்ள பரதராமி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர், அங்கும் பத்திரிகையாளர்கள் வந்துவிடவே அங்கிருந்து ஆம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பத்திரிகையாளர்கள் அங்கும் வரவே, அங்கிருந்து மூன்று ஆட்டோக்களை வரவழைத்து ஒரு ஆட்டோவில் தங்கவேலுவையும் மற்ற இரு ஆட்டோக்களில் போலீசாரையும் ஏறிக்கொண்டு அங்கிருந்து நீதிபதி வீட்டிற்கு சென்றனர்.

ஆட்டோ எங்கே போகும் என்பதை அறிந்திருந்த பத்திரிகையாளர்கள் போலீசாருக்கு முன்பே அங்கு வந்துவிட்டனர். பத்திரிகையாளர்களை திசை திருப்புவதற்காக முதலில் இரண்டு ஆட்டோக்கள் நீதிபதியின் வீட்டுக்கு முன்பாக வந்து நின்றன. தங்கவேலு வந்த மூன்றாவது ஆட்டோ நீதிபதியின் வீட்டிற்கு பின்புறம் சென்றது.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
டி.எஸ்.பி தங்கவேலு கண்ணிமைப்பதற்குள் நீதிபதியின் வீட்டிற்குள் புகுந்தார். உடனே வாசலில் எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன.

ஆனால் இப்படி ஏதாவது நடக்கும் என்பதை அறிந்திருந்த பத்திரிகையாளர்கள் இரண்டு பக்கமும் பிரிந்து நின்றனர். ஆட்டோவிலிருந்து இறங்கிய டி.எஸ்.பி தங்கவேலு கண்ணிமைப்பதற்குள் நீதிபதியின் வீட்டிற்குள் புகுந்தார். உடனே வாசலில் எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன.

வீட்டிற்குள்ளிருந்து திரும்பி வரும் போது, சுற்றுச்சுவர் அருகே ஒரு கான்ஸ்டபிளை குனிய வைத்து அவர் முதுகில் ஏறி சாலையில் குதித்த தங்கவேலு அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த போலீஸ் பைக்கில் ஏறினார். பாதி வழியில் காருக்கு மாற்றப்பட்டு சொகுசாக வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாருங்கள், ஒரு குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை படம் பிடிக்கக் கூடாது என்று போலீசு எத்தனை மெனக்கெட்டிருக்கிறது.

நாகேந்திரன் ஜோதிலட்சுமியை அடுத்து தங்கவேலையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதற்காக தங்கவேலு வேலூர் சிறையிலிருந்து ஆம்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். நீதி மன்றத்திற்கு வந்த போது, குற்றம் செய்த குற்றவாளியை போல அல்லாமல் கைதிகளை அழைத்து வரும் போலீஸ் அதிகாரியை போல தோரணையுடன் நடந்து வந்தார். கைது செய்யப்பட்ட போது பத்திரிகையாளர்களுக்கு பயந்து இருட்டில் தப்பி ஓடியவர், நீதி மன்றத்திற்கு வந்த போது எப்படி வேணும்னா போட்டோ எடுத்துக்கங்க என்று பத்திரிகையாளர்களிடம் கோபத்தோடு முகத்தை காட்டினார், வேறு வழியின்றி.

போலிசு காவலில் வந்த பிறகு தங்கவேலிடம் ‘விசாரணை’ நடத்தப்பட்டது. என்ன விசாரணை நடந்திருக்கும்? ஏதாவது படம், பாட்டு போட்டு கேட்டு விட்டு டீலை முடித்திருப்பார்கள்.

செம்மரக்கடத்தல் மற்றும் சின்னபையன் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் தங்கவேலு. ஆனால் தங்கவேலிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு அவரை மூன்றாவது குற்றவாளியாக்கிவிட்டனர். ‘”தங்கவேலு கூறி தான் நாங்கள் அனைத்தையும் செய்தோம்” என்று வாக்குமூலம் அளித்திருக்கும் நாகேந்திரனும், ஜோதிலட்சுமியும் முதல் மற்றும் இரண்டாம். குற்றவாளிகளாம், அவர்களுக்கு உத்தரவிட்டு வேலை வாங்கிய தங்கவேலு மூன்றாவது குற்றவாளியாம்’. இதில் மற்ற குற்றவாளிகளின் தர வரிசை பற்றி நமக்கு தெரியாது. அது தங்கவேலுக்கும், போலீசுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
போலீசு துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளும், ஆளுங்கட்சியில் உள்ள பெரும் முதலைகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

வழக்கு இப்படி திசை மாறி பயணிப்பதற்கு காரணம், தங்கவேலு என்கிற ஒரு டி.எஸ்.பி மட்டும் இதில் சம்பந்தப்படவில்லை. போலீசு துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளும், ஆளுங்கட்சியில் உள்ள பெரும் முதலைகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அவர்களின் பெயர்களையும், விவரங்களையும் மூடி மறைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

இதை நாம் சொல்லவில்லை. வேலூரில் செய்தியாளர்களிடையே பேசிய ஒரு ஆந்திர போலீசு அதிகாரியே கூறுகிறார், கேளுங்கள்:

“டி.ஸ்.பி. தங்கவேலுவை காப்பாற்ற வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டிய தங்கவேலுவை மூன்றாவது குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இன்னும் 30 நாட்களில் தங்கவேலு ஜாமீனில் வெளியே வர வாய்ப்புள்ளது. அதன் பிறகு இவ்வழக்கு ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என தள்ளுபடி செய்யப்படும். அந்த வகையில், வழக்கு விசாரணை மோசமாக நடந்து வருகிறது.

தங்கவேலுடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற டி.எஸ்.பி.க்கள் தான் இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் இருக்கின்றனர். இந்த வழக்கில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கைமாறி இருப்பதால், அவர்கள் தங்கவேலுவைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். முதல் குற்றவாளியும், இரண்டாம் குற்றவாளியும் தங்கவேலு குறித்து விசாரணையில் கூறிய முக்கிய தகவல்களைப் பதிவு செய்யவே இல்லை. தங்கவேலு ஜாமீனில் வெளியே வந்துவிட்டால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் கொல்கத்தாவுக்கு கடத்தப்படுவது நிச்சயம். இதுகுறித்து, ஆந்திர மாநில அரசுக்கும், ஆந்திர முதல்வருக்கும் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.”

என்கிறார், ஆந்திர மாநில செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரன்.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
போலீசுக்குள்ளே இப்படி முரண்பாடு வரும்போது சில பல உண்மைகள் வெளியே வந்தே தீரும்.

என்னடா ஆந்திர போலீசு இவ்வளவு பகிரங்கமாக பேசுகிறதே என்று வியக்கிறீர்களா? தமிழக தொழிலாளிகள் 20 பேரைக் கொன்ற குற்றத்தை தணிக்க ஆந்திர போலீசு இதை பயன்படுத்திக் கொள்கிறது. மேலும் செம்மரக் கடத்தலில் தமிழக கடத்தல் கோஷ்டிகளின் பங்கை குறைப்பதன் மூலம் ஆந்திர அல்லது போட்டி கோஷ்டிகளின் செல்வாக்கை அதிகரிக்கலாம். அல்லது மீட்கப்படும் செம்மரங்கள் ஆந்திர அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை தரலாம். இப்படி பல்வேறு ஆதாயங்கள் ஆந்திர போலீசு அதிகாரியின் கூற்றில் இருக்கின்றன. மேலும் போலீசுக்குள்ளே இப்படி முரண்பாடு வரும்போது சில பல உண்மைகள் வெளியே வந்தே தீரும் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

சொத்துக் குவிப்பு வழக்கின் மூலம் பலருக்கு நீதி மன்றத்தின் மீதிருந்த மாயையை தகர்த்தார் ஜெயலலிதா. போலீசு என்றாலே பெரும்பாலான மக்கள் காறித்தான் துப்புவார்கள். எனினும், காக்க காக்க, சாமி, சிங்கம், காக்கிச்சட்டை போன்ற போலீஸ் உதார் படங்களைப் பார்த்துவிட்டு போலீசு மீது சில பல அப்பாவிகளுக்கு மதிப்பும் மரியாதையும் வந்தது.

தொப்பை இல்லாத போலிசு அதிகாரிகளெல்லாம் விகடன், குமுதம் இதழ்களில் முன்னுதாரணமான நட்சத்திரங்களாக உலா வந்தார்கள். ஆனால் இந்த ஜரிகையின் மினுக்கு சொற்ப காலம் வரைக்கும் நீடிக்காது என்பதற்கு பல சான்றுகள் உண்டு.

ஆனால் இந்த சம்பவம் வேறு மாதிரி. இதில் ஒரு போலிசு அதிகாரியே கடத்தல் கூட்டத்தின் பாஸ்-ஆக இருக்கிறார். செய்தியாளர்களிடையே கோபப்பட்ட தங்கவேலு தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்றும் இதை சுலபமாக உதறிவிட்டு வந்துவிடுவேன் என்று சவால் விட்டிருக்கிறார்.

போலிசிடம் அதிகாரத்தை விட்டுவைத்திருந்தால் என்ன நடக்கும் என்று இதற்கு மேல் சந்தேகம் இருக்கிறதா?

–    வையவன்

“மேடம் 45 பர்சென்ட்!”

0

சொத்துக்குவிப்பு வழக்கில் ‘நிரபராதி’ என்று ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் விடுதலையாகும் நேரத்தில்தான் தமிழகப் பொதுப்பணித்துறையில் நடந்துவரும் ஊழல்-கொள்ளை வெளிவந்து, தமிழகத்தில் நடப்பது அரசாங்கமல்ல, ஜெ. கும்பலின் தீவட்டிக் கொள்ளைதான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

பொதுப்பணித்துறை பேனர்
அம்மா ஆட்சியின் மகிமை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட பேனர்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பது பொதுப்பணித்துறை. இப்போது ஊழல்தான் அத்துறையின் பொதுப்பணியாகிவிட்டது. அந்தத் துறையில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 35 முதல் 45 சதவீதம் வரை கமிசனாக ஆளுங்கட்சியினரால் வசூலிக்கப்பட்டு உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பங்கு பிரிக்கப்படுவதை அம்பலப்படுத்தும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் 5 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். திருச்சி மண்டலத்திலும் இவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தொடங்கி உதவிப் பொறியாளர் வரையிலான 10 பேரின் பெயர்ப்பட்டியலைப் பகிரங்கமாக வெளியிட்ட அச்சங்கத்தினர், கடந்த மே 9 அன்று இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் இப்பட்டியலுடன் புகார் கொடுத்துள்ளனர். இது மட்டுமின்றி, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஒருவரும் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியும் கொடுக்கல்-வாங்கல் பற்றி தொலைபேசியில் நடத்திய உரையாடலும் “வாட்ஸ்-அப்” மூலம் அப்படியே வெளிவந்து இத்தீவட்டிக் கொள்ளையை தமிழகமெங்கும் நாறடித்துள்ளது. இந்த இலஞ்சப் பணத்தில் சில அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

“பொதுப்பணித்துறையில் இலஞ்சம் கொடுக்காத ஒப்பந்ததாரர்களுக்கு எந்தப் பணிகளும் வழங்கப்படுவதில்லை. முன்பு 10 முதல் 30 சதவீதம் வரை இலஞ்சமாகப் பணத்தைக் கொடுத்துத் தொலைத்தோம். இப்போது 45 சதவீத அளவுக்குக் கேட்பதால் எங்களால் கொடுக்க முடியவில்லை. எனவேதான் இந்த அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே எங்களிடம் இலஞ்சம் கேட்ட 10 பொறியாளர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டோம். ஒரு பணியில் 45 சதவீதம் இலஞ்சமாகக் கொடுத்துவிட்டு மீதமுள்ள 55 சதவீத பணத்தைக் கொண்டுதான் பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனில், பணிகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டிருக்கும் என்பதை நீங்களே ஊகிக்க முடியும்” என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணமணி.

பராமரிப்புச் செலவுக்காக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை செலவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறிய போதிலும், அந்தப் பணிகள் முறையாகவோ, முழுமையாகவோ எங்குமே நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினரே கூறுகின்றனர் என்றால், மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் ஜெ.கும்பலின் ஆட்சியில் சூறையாடப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கம்
45 சதவீத அளவுக்குக் கமிசன் கொடுக்கப்பட்டதையும், இதற்காக வசூல் வேட்டை நடத்திய 10 பொறியாளர்களின் பெயர்ப்பட்டியலையும் பகிரங்கமாக வெளியிட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள்.

“பொதுப்பணித்துறை அமைச்சருக்கு 5 சதவீதம், மற்ற துறையில் பணிகள் நடந்தால் அந்தத் துறை அமைச்சருக்கு 5 சதவீதம், கண்காணிப்புப் பொறியாளருக்கு 2 சதவீதம், செயற்பொறியாளருக்கு 7 சதவீதம், உதவிப் பொறியாளருக்கு 7 சதவீதம், பணி ஆய்வாளருக்கு (ஒர்க்கிங் இன்ஸ்பெக்டர்) 3 சதவீதம், அலுவலக ஊழியர்களுக்கு 5 சதவீதம் – என சதவீதப் பங்கு அடிப்படையில் பணம் கொடுக்க வேண்டும் என்பது இந்தத் துறையில் எழுதப்படாத விதியாக உள்ளது” என்கிறார் குணமணி. இதோடு மேலிடத்துக்கு அதாவது, எம்-க்கு (மேடத்துக்கு) தனியாக 5 சதவீதம் கொடுக்க வேண்டுமென வசூலிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பிறகும் ஆலோசகர் என்ற பதவியில் இருந்த பொறியாளர் ஒருவர், மேலிடத்துக்குப் பணத்தை வசூலித்துக் கொடுப்பதில் கில்லாடி என்று கிசுகிசு ஏடுகளே அம்பலப்படுத்துகின்றன.

இந்தச் செய்திகள் தவறாக இருந்தால் அரசு சார்பில் அப்போதே மறுத்து, இவற்றை வெளியிட்ட பத்திரிகைகள் மீது மான நட்ட வழக்கும் தொடுத்திருப்பார்கள். ஆனால், இன்றளவும் மறுக்கவில்லை. மாறாக, இந்த ஊழல் கொள்ளை ஆதாரங்களுடன் சந்தி சிரித்ததும், ஒப்பந்ததாரர்கள் வைத்த டிஜிட்டல் பேனர்கள்தான் ஊழல் கொள்ளையர்களால் உடனடியாகக் கிழித்தெறியப்பட்டன.

“இன்றைக்கு வேண்டுமானால் இந்த ஊழல் அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், வருங்காலத்தில் இவர்கள் எல்லாம் விசாரணைக் கமிசன் முன்னால் நின்று பதில் சொல்ல வேண்டிய நிலைமை நிச்சயம் உருவாகும்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்தார். “கடந்த 4 ஆண்டுகளில் 36 ஆயிரம் கோடி அளவுக்கு பொதுப்பணித்துறையில் ஊழல் நடந்துள்ளது” என்றும், “ஆளுநர் அனுமதிக்காக காத்திருக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அப்போதைய முதல்வரான ஓ.பி.எஸ். மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார் பா.ம.க.வின் ராமதாஸ். காங்கிரசு கட்சியினர் பேரணி நடத்தி, தமிழக அரசின் 25 துறைகளில் நடந்துவரும் ஊழல்கள் அடங்கிய பட்டியலை மாநில ஆளுநரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

இத்தனைக்கும் பிறகும் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராகவும் முதல்வர் பொறுப்பிலுமிருந்த ஓ.பி.யோ, ‘மக்கள் முதல்வர்’ ஜெயாவோ இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஊழல் கொள்ளையர்களின் பட்டியலைப் பகிரங்கமாக வெளியிட்டதோடு, ஒப்பந்ததாரர் சங்கத்தினர் முறைப்படி புகாராகக் கொடுத்த போதிலும் இலஞ்ச ஒழிப்புத் துறை அசைந்து கொடுக்கவில்லை. வருமான வரித்துறையினர் சோதனை நடத்த முன்வரவில்லை. தானே முன்வந்து இந்த ஊழல் கொள்ளையை பொதுநல வழக்காக எடுத்து நடத்த நீதித்துறையும் முன்வரவில்லை.

மாறாக, ஊழலை அம்பலப்படுத்தியவர்கள்தான் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தரப்பிலேயே ஒரு முக்கிய அதிகாரி சமரசப் பேச்சுவார்த்தை மூலம் நடத்திய பேரத்துக்கு ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள் இசையாததால் அடுத்த கட்டமாக, ஒப்பந்ததாரர் சங்கத்தை உடைக்கும் திருப்பணியில் ஜெ.கும்பலின் பினாமி அரசு இறங்கியது. ஜெ.கும்பலின் ஏற்பாட்டின்படி, இச்சங்கத்தின் ஒரு பிரிவினர் போட்டி பொதுக்குழுவைக் கூட்டி புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தெரிவு செய்து, ஏற்கெனவே சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுவும் போதாதென்று, இதைப்பற்றி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் எவரும் வாய் திறக்கக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில் அரசுப் பணியாளர் விதியைக் காரணம் காட்டி வாய்ப்பூட்டு போடும் புதியதொரு மிரட்டலை ஜெ. கும்பல் ஏவியுள்ளது. பொதுப்பணித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கூறும் குற்றச்சாட்டுகள் நியாயமானதென்றும், இதனால் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்குக் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளதென்றும் கருத்து தெரிவித்த குற்றத்துக்காக தேவராஜ் என்ற பொதுப்பணித்துறை நீர் ஆய்வு நிறுவன செயற்பொறியாளருக்கு அந்நிறுவனத் தலைமைப் பொறியாளர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

கொலைகார அரசு
கொலைகார அரசு : ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளைக்கு உடன்பட மறுத்து தற்கொலை செய்து கொண்ட திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர் முத்துக்கிருஷ்ணன், தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்த கோவையைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சக்திவேல்.

இத்தனைக்கும் பிறகும் நடுநிலை நாடகமாடும் ஊடகங்களோ இந்த ஊழல் கொள்ளை பற்றி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முன்வரவில்லை. பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தினர் டிஜிட்டல் பேனர் வைத்து ஊழலை அம்பலப்படுத்தியபோது பரபரப்பூட்டிய ஊடகங்கள், அதன் பிறகு இந்த விவகாரத்தைக் கைகழுவி விட்டன. ஊழல் அதிகாரிகள் – அமைச்சர்களுக்கு எதிராக அம்மா சாட்டையை சுழற்றி வருவதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக அம்மா, முதல்வர் பொறுப்பில் இல்லாத நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு நிர்வாகத் திறமை மிக்க அம்மாவை ஒரு கும்பல் ஏமாற்றுவதாகவும், அதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், நிர்வாகத்தைச் சீரமைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஒரு பொயை பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன.

ஆனால், பாசிச-கிரிமினல் ஜெ. கும்பலின் தலைமையிலான கிரிமினல் கொள்ளைக் கூட்டம், என்றைக்குமே ஒரு அரசாங்கமாக இருந்ததில்லை. அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு கட்டமைவின் துணையோடு கொள்ளையடிக்கும் அமைப்பு ரீதியில் திரண்ட கிரிமினல் குற்றக் கும்பல்தான் அது. எந்தெந்த துறைகளில் எத்தனை கோடி தேறும் என்று கணக்கு போட்டுக் கொடுப்பதுதான் அம்மாவின் அருள் பெற்ற ஆலோசகர்களின் வேலை. அதை முறைப்படி வசூலித்து கொடுப்பதுதான் அமைச்சர்களின் கடமை. அவர்கள் இட்ட பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதுதான் ஊழல் அதிகாரிகளின் அன்றாடப் பணி. எல்லாம் ஒழுங்காக நடந்தால் அவரவர்களுக்குரிய எலும்புத்துண்டு கிடைக்கும். இல்லையானால் நடப்பதே வேறு. ஜெ. கும்பலால் நிர்வகிக்கப்படும் இந்த ஆட்சியானது, மிகப்பெரிய கொள்ளைக்கூட்ட கம்பெனியாகத்தான் இயங்கி வருகிறது.

உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஊழல்கள், போக்குவரத்துத் துறை பணி நியமன ஊழல், டாஸ்மாக் ஊழல், நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல், மின் வாரிய ஊழல், பத்திரப்பதிவுத்துறை ஊழல், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல், பொதுவிநியோகத்துறை ஊழல், சத்துணவுத் திட்டத்தில் முட்டை-காய்கறி -பருப்பில் ஊழல், கனிமவளக் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை – என்று ஏற்கெனவே ஊழல்கள் அம்பலமாகி ஜெ. கும்பலின் கிரிமினல் கொள்ளைக் கூட்ட ஆட்சியின் மகிமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

அம்மா ஆட்சியில் பல நூறு கோடிக்கு ஆவின் பால் கலப்படக் கொள்ளை அம்பலமானதும், பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்து, ஜெ. கும்பல் அவரைப் பாதுகாத்தது. ஜெ. கும்பலுக்கு முறையாகக் கப்பம் கட்டிவந்த மாதவரம் மூர்த்தியின் பினாமியாகச் செயல்பட்ட ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்தி-க்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அவனுக்குப் பிணை வாங்கிக் கொடுத்து தப்பிக்க வைத்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் சுருட்டப்பட்டுள்ள தாது மணற்கொள்ளை விவகாரம் அம்பலமாகத் தொடங்கியதும், இது குறித்து விசாரணை நடத்துவதாக நாடகமாடிய ஜெ.கும்பல், ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி அளித்துள்ள விசாரணை அறிக்கையை இதுவரை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளது. பல்லாயிரம் கோடி கிரானைட் கொள்ளை குறித்து விசாரித்துவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

“இப்படித்தான் செய்வோம்; எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது” என்று கொக்கரிக்கும் ஜெ.கும்பலின் ஆட்சியில், நெல்லை வேளாண் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை மட்டுமின்றி, ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளைக்கு உடன்பட மறுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய அரசு ஊழியர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதே போல சென்னை மற்றும் திருவாரூர் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலை, திருச்சி மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி -என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

1991-96-ம் ஆண்டுகளில் நடந்த ஜெயாவின் ஆட்சி “10 சதவீத கமிசன் ஆட்சி” என்றே அழைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் ஜெயா-சசி கும்பல் வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவிற்கு (இதுவும்கூட அடித்த கொள்ளையில் சிறுதுளிதான்) சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இப்பொழுது இந்த கமிசன் 45 சதவீதமாக உயர்ந்துவிட்டதென்றால், ஜெயா-சசி கும்பலிடம் வருமானத்திற்கு அதிகமாக குவிந்துள்ள சொத்து மதிப்பு எத்தனை ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கும்? சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயா-சசி கும்பல் உச்சநீதி மன்றத்தில் பிணையைப் பெறுவதற்காக தலைமை நீதிபதி தத்துவிற்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு இலஞ்சம் கொடுத்திருக்கிறது என அம்பலமாகியிருக்கும் செய்தி, தமிழகத்தில் ஜெயா-சசி கும்பல் நடத்திவரும் ஊழல் கொள்ளையை உறுதிப்படுத்துகிறது. இந்த இலட்சணத்தில் ஜெயாவும் அவரது பினாமிகளும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது மாபெரும் கேலிக்கூத்து தவிர வேறென்ன?

– குமார்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

ஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்

1

னநாயகத்தின் நான்காவது தூண் என்று ஊடகங்களை இன்னமும் நம்பிக் கொண்டிருப்போரின் முகத்தில் காறித்துப்பியுள்ளன, நடுநிலை நாடகமாடும் தமிழக ஊடகங்கள். பாரம்பரியமிக்க தேசிய நாளேடாகவும், உண்மைகளை உரைப்பதாகவும், நடுநிலையுடன் செய்தி வெளியிடுவதாகவும் கூறிக்கொள்ளும் இந்த ஊடகங்கள், நேற்று ஜெயா தண்டிக்கப்பட்டபோது ஒப்பாரி வைத்தன; இப்போது ஜெயா கும்பல் விடுதலையானதும் தமது சொந்த விடுதலையாகக் கருதிக் கூத்தாடுகின்றன.

ஜெயாவின் ஊடக விசுவாசிகள்
ஜெயாவின் ஊடக விசுவாசிகள்: (கடிகாரச் சுற்றுப்படி) தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தி இந்து ஆசிரியர் அசோகன், எழுத்தாளர் சமஸ், புதிய தலைமுறை ஆசிரியர் மாலன்.

தனது நீண்டகால வாசகர்களேகூட முகம் சுளிக்கும் அளவுக்கு, “இது ஜெயாவின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி” என்று குதூகலிக்கும் தினமணி, “நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியையும், அரசியல்சாரா சாமானிய தமிழ் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் அளித்திருக்கிறது… ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு, மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை” என்று பார்ப்பன பாசத்துடன் துதிபாடி, “ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று சரித்திரம் படைக்க வந்துள்ளதாக” புளகாங்கிதமடைகிறது. நீதிபதி குமாரசாமி விரிவாக அலசி ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளார் என்று அ.தி.மு.க. வழக்குரைஞர்களையே விஞ்சும் வகையில் தலையங்கம் தீட்டி, தனது விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார், தினமணி ஆசிரியர் வைத்தி.

தினமணிக்குப் போட்டியாக அறிவார்ந்த முறையில் காவடி தூக்கிய “தி இந்து”வோ, குமாரசாமி தீர்ப்பு குதூகலத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, ஜெயலலிதாவின் மறுவருகை நல்லதாக அமையட்டும் என்று தலையங்கம் தீட்டியது. அதில் ஜெயாவின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக ஆரூடம் கூறும் ஆசிரியர் அசோகன், “சுணங்கி நிற்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து அடித்து ஓட்டுவது எவருக்கும் சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் மாநிலம் அதைத்தான் எதிர்பார்க்கிறது” என்கிறார்.

ஜோதிகா, மீண்டும் சினிமாவில் நடித்துள்ள 36 வயதினிலே படத்தில் வரும் “வாடி ராசாத்தி” பாடலானது எழுத்தாளர் மாலனுக்கு ஜெயாவை அழைப்பது போலத் தெரிகிறதாம். குன்ஹாவின் தீர்ப்பு அப்போதே தவறு என்று தான் தொலைநோக்குடன் கூறியது, இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் பூரித்துப் போகிறார்.

“ஜெயலலிதா வழக்கு அ.தி.மு.க.வுக்கு உயிராதாரப் பிரச்சினையாக இருப்பதன் நியாயம் புரிந்து கொள்ளக் கூடியது. ஏனைய கட்சிகளும் அதையே வரிந்து கட்டிக் கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது. அரசியல் நடத்த மக்களை அணி சேர்க்க இவர்களுக்குத் தமிழகத்தில் பிரச்சினைகளே இல்லையா என்ன?” என்று எதிர்க்கட்சிகளைச் சாடி, ஜெ.கும்பலின் ஊழல் கொள்ளை மட்டும்தான் பிரச்சினையா, வேறு பிரச்சினைகளே இல்லையா என்று தி இந்துவில் எழுதுகிறார் சமஸ். அந்த வேறு பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளை தமிழகத்தின் தலையாய பிரச்சினை அல்ல என்று மடைமாற்றும் திருப்பணியைத் திறமையாகச் செய்கிறார் சமஸ்.

நீதிபதி குமாரசாமி கணக்கில் செய்துள்ள மோசடி அம்பலமாகி நாறிக் கொண்டிருக்கும்போது, நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் சந்தாதொகையைக் கூட்டினால் இந்தக் கணக்கு நேராகிவிடும் என்று ஜெ. கும்பலுக்கு ஆறுதல் கூறும் தி இந்து, ஜெ. கும்பல் வாரியிறைத்த பல கோடி பணத்தில் நீதித்துறையின் ஒவ்வொரு படிக்கட்டையும் உரிய முறையில் கவனித்துப் பச்சையான அயோக்கியத்தனங்கள் மூலம் ஜெ. கும்பலை இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ள அ.தி.மு.க. வக்கீல்களை, சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்தவர்கள், “ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று தலைப்பிட்டு ஏதோ மாபெரும் சாதனையாளர்களாகக் காட்டுகிறது. இப்போது சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அம்மா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதும், சொத்துக் குவிப்பு வழக்கு என்ற பெரிய தடையைத் தாண்டியுள்ள அம்மா, இடைத்தேர்தல் என்ற சிறிய தடையை அலட்சியமாகத் தாண்ட ஓடோடி வருவதைப் போல கருத்துப்படம் போட்டு தனது விசுவாசத்தைப் பறைசாற்றுகிறது.

தி இந்து கருத்துப்படம்
நமது எம்.ஜி.ஆர் நாளேட்டுக்குப் போட்டியாக ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடிக் குதூகலிக்கும் தி இந்து கருத்துப்படம்.

ஊழல் கிரிமினல் பேர்வழியான ஜெயலலிதா விடுதலையானதும், இந்தத் தீர்ப்பு எவ்வளவு அயோக்கியத்தனமானது என்று ஊரே காறித் துப்பிக் கொண்டிருக்கும்போது, அனைத்து தளங்களிலும் இனி ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை பிரபலங்களிடம் கேட்டு, அதன் மூலம் மக்களின் வெறுப்பை மடைமாற்றும் வேலையைத் திறமையாகச் செய்கிறது ஆனந்த விகடன். இதில் டிராபிக் ராமசாமி மட்டுமே இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பையும் அதன் விளைவுகளையும் பற்றி கூறியிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான சந்துரு, பேரா. அ.மார்க்ஸ், பேரா. சரசுவதி, முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர் அருள்மொழி, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் – என இந்தப் பிரபலங்கள் எல்லாம் மலத்தைத் தின்னும் பன்றி, சாக்கடையைவிட்டு வெளியே வந்துவிட்டால் நன்றாக இருக்கும், அதன் மூக்கை கொஞ்சம் சரிசெய்து கொண்டால் அழகாக இருக்கும் என்றெல்லாம் கருத்து கூறுகிறார்கள்.

இத்தீர்ப்பைப் பற்றி இணையத்தின் வாயிலாகக் கருத்து கேட்டதில் பெரும்பான்மையினர் ஜெயாவை ஆதரிப்பதாகப் புள்ளிவிவர சதவீதக் கணக்குக் காட்டி சதிராடியும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்பதை நேரடி வர்ணனையுடன் ஒளிபரப்பு செய்தும் இந்த ஊடகங்கள் தமது விசுவாசத்தைப் பறைசாற்றின. அதிக முறை ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, பின்னர் நீதித்துறையை விலைக்கு வாங்கி விடுதலையாகி முதல்வராகியுள்ள ஜெயலலிதா, 5-வது முறையாக முதல்வராகப் பதவியேற்று கருணாநிதியைச் சமன் செய்துவிட்டார் என்று பூரித்துப் போகும் இந்த ஊடகங்கள், இந்துத்துவ அபாயத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றியவர், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் ஈழப் பிரச்சினையில் மைய அரசைத் துணிவுடன் எதிர்த்து நின்றவர் என்றெல்லாம் வாதங்களை அடுக்கி, ஜெ கும்பலை வெட்கமின்றி ஆதரித்து நின்றன.

துக்ளக் சோ கூட அன்றைய ஜெ. கும்பலின் ஆட்சியை ஊழல் ஆட்சியாகத்தான் இருந்தது என்று அப்போது அவரது ஏட்டிலும் பேச்சிலும் குறிப்பிட்டிருக்கிறார். இன்று ஜெ கும்பலுக்குக் காவடி தூக்கும் இந்த ஊடகங்களிடம் கடந்த கால வரலாறுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் ஆவணக் காப்பகம் போலக் கையில் உள்ளன. அதை ஒருமுறை புரட்டிப் பார்த்தாலே 1991-96-ல் ஜெயாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கான ஆதாரங்களையும், அது எப்படிப்பட்டதொரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருந்தது என்பதையும், என்ன வழிகளில் அக்கும்பல் தமிழகத்தைச் சூறையாடியது என்பதையும், அடுத்து வந்த தேர்தலில் அக்கும்பல் மக்களால் அடித்து விரட்டப்பட்டதையும் அவர்களால் தொகுத்துக் கூற முடியும். ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு ஏதோ தி.மு.க.வினர் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடுத்ததைப் போலவும், நிரபராதிகளான ஜெ. கும்பல் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டதைப் போலவும் இப்போது இந்த ஊடகங்கள் கதையளக்கின்றன என்றால், இவர்களது நேர்மையின் யோக்கியதைதான் என்ன?

2ஜி ஊழல் விவகாரத்திலும், ஆதர்ஷ், காமன்வெல்த் ஊழல் விவகாரங்களிலும் ஊழலுக்கு எதிராக கம்பு சுழற்றியவைதான் இந்த ஊடகங்கள். அன்னாஹசாராவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வரவேற்று ஆதரித்து, ஊழலற்ற இந்தியாவைப் படைக்க அறைகூவியதும் இந்த ஊடகங்கள்தான். இப்போது ஊழல் கிரிமினல் ஜெ. கும்பலை நிரபராதிகளாகச் சித்தரிப்பதும் இந்த ஊடகங்கள்தான். ஓட்டுக்கட்சிகளுக்கு எவ்வாறு அருகதையில்லாமல் போவிட்டதோ, அதேபோல ஊழலை எதிர்த்துப் பேச தகுதியிழந்து கிடப்பதும் இந்த ஊடகங்கள்தான்.

– தனபால்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________