Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 645

IT layoff and depression – Union as solution : Dr. Rudhran

4

Part 1

Part 2

Part 1

Those youth employed in IT face various psychological problems. Primarily the whole process starts not just after joining, even much before. The root of the problem, if you look at the boys and girls who join IT, they will be joining in the very early twenties. That is just after finishing their college education.

Throughout their school years, after 12th they have been mechanically studying and doing nothing else. They have no clue about the external world. Nor were they having interest in the external affairs, social political or even personal. Next phase during college, their focus again is to get good marks, get a good campus interview, get selected, join a job. This process does not allow them to think about learning new things, about social issues, personal issues, or even about their own personal likes and dislikes. They do not show any passion for other things.

dr-rudran-3Now, this boy or girl joins an IT firm, starts working. Immediately there is a pressure. He has to perform. And Unless he performs he will not be able to go abroad like his peers. And going abroad is a fantasy for every kid who joins in IT. Now when working towards that, he gets into a anxious state. He has to perform well, that pressure of performance, automatically results in a residual anxiety.

This gets heightened when he is reprimanded, if he is not producing, the way company wants him to produce. Now this would ultimately lead to a state of anxiety, and anxiety can be exhibited as a mild fear, and uneasiness a restlessness, and at times sleeplessness. Generally if someone is not sleeping well, he or she would know that something is wrong I am not able to sleep. But in these cases these boys and girls are used to spending long hours of the night without sleep, and so they will not even be able to identify that sleeplessness is a symptom of a psychological problem. Therefore they would not even know that they are getting depressed. Not only they would not know, even their family would not be able to identify that the boy is sleepless and having a problem.

The pressure comes to them in a different form also. These boys and girls at one point of time say about 5-6 years before, even 10 years earlier, they were able to wait for an opportunity to move to another company and grow further, if this company is not good enough for them. Now if this company says that you are not good, they know that they cannot move on to another group, or another company and get a better salary or even the same salary. They are living in a fear of their job.

A job cannot be enjoyed if it is approached with fear and anxiety. This would automatically reduce their performance level. When the performance comes down they face the danger of expulsion, they may loose the job. What happens when a person is suddenly is ablut to loose the job. Initially there will be extreme anxiety. This anxiety would further provoke personal discomfort. He would not even be able to interact, relate and have good inter personal relationship with his family and friends.

The next phase is the person looses the job and he goes into a depression. Depression need not be sitting in a corner and crying. Depression can be lack of energy, lack of motivation, lack of direction, sleeplessness, lack of appetite and a general apathy towards the world and disinterest in self. He would stop taking care of himself psychologically and physically. This would further worsen and in some cases causes suicidal ideas to come. All is this because they have not focused on anything else right from their school days. They do not have other avenues to enter relax and rejuvenate themselves. Moreover once upon a time in IT field there was an opportunity to move on, get another job.

Now it is not so. If you are going to loose the job you are in trouble. You wont get any other job. You wont get the same pay. And then you cant even start a business. Because already you are in a financial crunch. You have a loan for a car, for a house and for whatever, and your credit cards are maxed. You are in trouble. That cheque which is going to solve the problem is not going to come at the end of the month. This fear, this panic would tend in severe depression.

Part 2

All the IT professionals, the youngsters in the IT field, have a lot of inter personal problems, not because they are not capable of showing love and affection, primarily they do not have the time, or they think they do not have the time to show that love and affection.

dr-rudran-2In many cases it is true that they spend a lot of time in office, rather than at home. This would lead to a lack of communication, a reduction in communication, reduction in quality time being spend together. Because the guy or the girl who spends long hours in office, in the weekend would rather prefer to take rest than go out with the family and have fun time. This causes a disruption in the communication pattern in a family between husband and wife and at times in the children, who start feeling neglected.

This distancing  is not deliberate, but once the distancing sets in the person would automatically not have the same empathetic feeling towards the other member of his family, and so he would not even be able to identify that his children are feeling sad, or his wife is angry, his pre occupation would be, be in the job, do better, move to the next step in the ladder.  All these inter personal problems again gradually lead to a deterioration in self care, because the vasic unit of the person, the family, is getting disrupted, even without his knowledge. It need not disintegrate and go into a divorce. It can still be a disrupted family where the people are not close, but rather distant from each other. This would again lead to a severe depression.

These interpersonal problems would in a way reflect even in his work place. When both the husband and wife are working in an IT firm, in different IT firms, one firm might close off at 5 pm, and the other firm might even start working only at 5 pm. So the way they even see each other and spend time with each other becomes less. This is the time when they spend more time with the colleagues, sometimes whoever the partner is, the husband or wife, sees the husband or wife spending more time with the colleagues of the same sex or the opposite sex, a mild paranoia sets in and they start feeling that they are neglected, they are not given importance, the person is giving more importance to somebody in the office, and this would again lead to a disruption of marital life.

dr-rudran-4All these problems are not addressed by these people,  they are not even thinking about it, and they do not even consider this as a problem. This would affect things in the long run. Once upon a time it was in the long run, they could understand it when they are in the late forties. Now people in their late twenties and early thirties are facing this problem. Compounding this problem, is the fact that they might not be continuing in the job, or they wont be safe enough in the job, and this is not the security which they imagined.

Now would trade unions be an answer? What exactly is a trade union? It is not just a group of people waving a red flag and starting a strike. No. That is a myth. It is a myth propagated deliberately by the material world, so that the workers unity can be suppressed.

An ideal trade union would not just take care of your salary your job, and would not be simply fighting with the boss. It could take care of you. You as a person. It could start providing you enough to nurture yourself  and make yourself comfortable in your social and personal environment. That is the ideal trade union.  It is a group.

Man as a social animal is not an individual. He cannot survive alone. He needs a group. And this group, this humanity should be the focus of every trade union. Since a man is an individual, he would be some times be inside the group, or sometimes outside the group. But the basic unity which is needed, is what makes a man secure.  I am living in this street,  I belong to the street, I belong to this city, in the same way, ‘I belong to this group of people’. The sense of belonging is itself is strength. That gives a security.

And this security if excercised properly, and if used properly, if exhibited properly would definitely solve a lot of problems. In fact some people mention that there is a study which says, that those who are in a trade union suffer less depressive disorders, and face less psychological and inter personal problems, which is very much possible and true. Because in a union there is unity. It’s a society by itself. A miniscule  society which takes care of itself. And this gives a security which your fantasy employment may not be able to offer you for lifelong.

கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

16

டவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் எங்கே இருக்கிறார்? கடவுளை எப்படிப் பார்ப்பது? – சுவாரசியமான கேள்விகள் இவை. ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் மதங்களின் இருப்புக்கே ஆதாரமான இந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் வித விதமான ‘விடைகளில்’ தான் மதங்கள் உயிர் வாழ்கின்றன. இந்தக் கேள்விக்கான விடைகளைத் தேடும் ஒருவன் அவற்றை எப்படி ’அறிந்து’ கொள்ள வேண்டும் என்பதை விட எப்படி அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் மதபீடங்கள் தெளிவாக இருக்கின்றன. அந்த வகையில் உண்மை என்பது மதங்களைப் பொறுத்தவரையில் ‘தடுக்கப்பட்ட கனி’ தான்.

kadavul backஉண்மை என்கிற ’தடுக்கப்பட்ட கனியை’ அறிவியலின் துணையோடு அணுகுகிறது கீழைக்காற்று பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’ என்கிற நூல். அறிவியலைக் கற்பது, புரிந்து கொள்வது என்பதெல்லாம் மிகவும் கடினமானதென்றும் அறிவுத் தேடல் சாதாரணர்களுக்கானதல்ல என்பதுமே நாம் பழக்கப்பட்டிருக்கும் மனப்பாடக் கல்வி நமக்கு ஏற்படுத்தியிருக்கும் மனப்பதிவு. அறிவியல் என்கிற ‘டைனோசரை’ பாதுகாப்பான தூரத்தில் தள்ளி நின்று வியந்து நோக்கவே இந்தக் கல்விமுறை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

இதற்கு மாறாக, அறிவியலை எளிமையான மொழிநடையில் ஒரு சமூக கண்ணோட்டத்தோடு அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். வினவு இணையதளம் மற்றும் புதிய கலாச்சாரம் பத்திரிகையில் வெளியான அறிவியல் கட்டுரைகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ளது ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’ நூல்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளையும் இயற்கைத் தேர்வு கொள்கையையும் பள்ளிக்கூட பாடநூல்களில் வழக்கமாக நாம் எதிர்கொள்ளும் வறண்ட வரிகளில் அல்லாமல் உயிர்த்துடிப்பான வரிகளோடும் அந்தக் கோட்பாடு தோன்றியதற்கான வரலாற்றுப் பின்புலம் மற்றும் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியோடும் அறிமுகப்படுத்துகிறது முதல் கட்டுரையான ‘டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்’ என்ற கட்டுரை.

போலவே டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை வெறி கொண்டு மறுத்த திருச்சபையைத் தோலுறிக்கிறது அடுத்த கட்டுரையான ‘அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!’. நவீன அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் மூலம் பரப்பும் ’நற்செய்தியாளர்களின்’ இரட்டை நாக்கு வரலாற்றில் விஞ்ஞான உலகத்தின் மேல் கக்கிய வெறுப்பையும் அதன் வெப்பத்தில் தங்கள் உயிரையே பலிகொடுத்த விஞ்ஞானிகள் பற்றிய விவரங்களையும் இந்தக் கட்டுரை ஒரு பருந்துப் பார்வையில் அறிமுகம் செய்து வைக்கிறது.

நவீன அறிவியல் வாழ்வின் இண்டு இடுக்குகளில் இருந்தும் ‘கடவுளை’ நெட்டித் தள்ளியபின், இறுதியாக பக்தர்களின் தனிப்பட்ட அனுபவங்களிலும், படைப்பு குறித்த மருட்சி என்ற பொந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் ’கடவுளை’ புகை போட்டு வெளியே விரட்டுகிறது ‘கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்’ என்ற கட்டுரை. விஞ்ஞானம் என்ற சூரிய வெளிச்சத்தில் புரண்டு துடிக்கும் கடவுள் என்கிற புழுவின் அவஸ்தையான அசைவுகளை அந்தக் கட்டுரையின் கவித்துவமான வரிகளில் வாசிப்பது ஒரு பேரானந்தம்.

kadavul-iruttuபிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து மத நூல்களின் அம்புலிமாமா கதையாடல்களை ஊதித் தள்ளி அந்த இடத்தில் அறிவியல் ரீதியிலான விளக்கங்களை முன்வைக்கிறது ஹிக்ஸ் போசான் துகள் குறித்து வெளியாகியிருக்கும் இரண்டு முக்கியமான கட்டுரைகள். ஹிக்ஸ் போசான் துகள் பற்றிய செய்திகள் வெளியாகத் துவங்கியதும் அஞ்சி நடுங்கிய மதவாதிகள் தங்கள் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விஞ்ஞானத்திற்கு தங்கள் அஞ்ஞான விளக்கங்களால் முலாம் பூச முற்படுவதை காத்திரமான வார்த்தைகளில் சாடுகிறது “கடவுளை நொறுக்கிய துகள்” கட்டுரை.

அறிவியலால் இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்களை முன்வைத்து அவையெல்லாம் கடவுளின் இருப்புக்குச் சான்றுகளென்று அடித்து விளையாடிய கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளின் போங்காட்டத்தை இக்கட்டுரை ”பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து, கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டு பிடிக்காததெல்லாம் கடவுளுக்கு” என்று எள்ளி நகையாடுகிறது.

ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்தும் இறுதி ஆயுதம் ஒன்று உள்ளது. “எல்லாம் சரிங்க. விஞ்ஞானம் கிட்டத்தட்ட எங்க கடவுளை காலி ஆக்கிடுச்சின்னே வச்சிக்கலாம்.. ஆனா உங்கள் விஞ்ஞானத்தால் ஒரு உயிரை உண்டாக்கிக் காட்ட முடியுமா? அழிவைத் தானே உங்கள் விஞ்ஞானம் இதுவரைக்கும் சாதித்திருக்கிறது?” என்ற வாதத்தை நொறுக்கிப் போடுகிறது ‘செயற்கை உயிர்ர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?’ என்ற கட்டுரை. இக்கட்டுரை கடவுளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, அறிவின் வளர்ச்சிக்கு மத்திய கால மதபீடங்கள் தடையரணாக இருந்ததைப் போல் இன்றைக்கு முதலாளித்துவ உடைமை உறவும் அதை நிலைநாட்டும் ஏகாதிபத்திய கட்டமைப்பும் எப்படி தகர்த்தெறிய வேண்டிய தடைச்சுவராக உள்ளன என்பதையும் விளக்குகிறது.

எதிர்வரும் புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று பதிப்பகத்தாரின் கடையிலும் பிற முற்போக்கு நூல்கள் கிடைக்க கூடிய கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ள இந்நூல் அவசியம் வாங்கியே ஆகவேண்டிய நூல்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நூல் ‘கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!’. இந்நூலை நீங்கள் வாங்கிப் படிப்பதுடன், தெரிந்தவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இந்நூலை பரிசளிப்பது அறிவியலைக் கற்பது குறித்த அச்சத்திலிருந்து அவர்களை விடுவிக்கும்.

கடவுள் இருட்டு அறிவியல் வெளிச்சம்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 70

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

TCS Layoff – NDLF Combats – ஐடி ஊழியருக்கு தொழிலாளர் ஆதரவு Video

1

NDLF (New Democratic Labour Front) workers in solidarity with IT employees .TCS is in the process of laying off 25,000 employees.

On 7th of January 2015, 100s of workers belonging to New Democratic Labour Front assembled in Chennai IT Corridor to show solidarity with TCS employees. They called on IT employees going to their morning work to join Trade Union and protect their rights, by distributing thousands of pamphlets.

Police intervened and tried to prevent the workers. But, workers asserted that campaigning against the mass layoff by TCS is their democratic right and continued pamphlet distribution.

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்வது குறித்து வினவில் தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். இது தொடர்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் இணைந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இணையத்தில் தொடங்கிய பிரச்சாரம் களத்திலும் தொடர்கிறது.

வேலைநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் சங்கமாக திரண்டு தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறைகூவியும் 07.01.2015 அன்று காலை 8 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் சிக்னலில் திரண்டனர். ஐ.டி ஊழியர்களைக் காப்பாற்ற ஆலைத் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்தது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தையும், போராட்ட குணத்தையும் பறை சாற்றுவதாக இருந்தது.

இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை ஜனவரி 10, 2015 அன்று மாலை 5 மணிக்கு சிறுசேரிக்கு அருகில் உள்ள படூரில் நடைபெறவுள்ளது. அனைவரும் வாருங்கள்!

TCS Layoff - NDLF (9)

Join US…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com

Meeting at
Bharatha Mahal, Padur Bus Stop
On OMR 2 km from Siruseri towards Kelambakkam
Bus routs : 21H, 19B, 151C, 570
10.1.2015 Saturday at 5.00 pm

New Democratic Labour Front

கலந்துரையாடல் கூட்டம்

பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம்
OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
பேருந்து வழித்தடங்கள் – 21H, 19B, 151C, 570
10.1.2015 மாலை 5 மணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

மன்னார்குடி : மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழு முற்றுகைப் போராட்டம்

5

காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக

  • தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை தரிசாக்கும் மத்திய, மாநில அரசுகளே!
  • விவசாயிகளின் வாழ்வாதாரங்களை கார்ப்பரேட்டுகளுக்கு பலி கொடுக்காதே!
  • காலாவதியான மீத்தேன் – பழுப்பு நிலக்கரி எடுப்பு ஒப்பந்தங்களைக் கிழித்தெறி! ஓ.என்.ஜி.சி துரப்பணப் பணிகளைக் கைவிடு
  • காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்காதே!
  • மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்காதே
  • விவசாயிகளின் கழுத்தை நெறிக்கும் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்!
    முழு பிரீமியத் தொகையையும் அரசே செலுத்த ஏற்பாடு செய்!
  • கூலி ஏழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட சதி செய்யாதே!

ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து 03.01.2015 அன்று மன்னை தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

மன்னை தபால்நிலைய முற்றுகைப் போராட்டம்

விவசாயிகள் விடுதலை முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் கு.மா பொன்னுசாமி தலைமையில் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் புரட்சிகர அமைப்புத் தோழர்கள் மன்னை பேருந்து நிலையத்தில் அணி திரண்டனர்.

மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் குழு வலங்கைமான் அமைப்பாளர் தோழர் சின்னதுரை, விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் தோழர் கிருஷ்ணமூர்த்தி, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர் சதீஷ்குமார், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்திக் கண்டன உரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத் தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன் உரையாற்றி முற்றுகைப் பேரணியைத் தொடக்கி வைத்தார்.

மன்னை தபால்நிலைய முற்றுகைப் போராட்டம்விண்ணதிர முழக்கமிட்டபடி மன்னை தலைமை தபால் நிலையம் நோக்கித் தோழர்களும், விவசாயிகளும் முற்றுகைக்காக முன்னேறினர்.

“ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதித்தோம். கலைந்து செல்லுங்கள். கைது செய்ய நேரிடும். ரிமாண்டும் ஆகலாம்” என்று கூறி தோழர்களை அச்சுறுத்தியது காவல் துறை. எழுச்சி மிக்க முழக்கங்களுடன் காவலை மீறி பேரணி முன்னேறவே காவல்துறை பின்வாங்கியது.

“பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து செல்லுங்கள். கைதைத் தவிர்க்கலாம்” என்று வழக்கறிஞர்கள் மூலம் தூது விட்டது.

மன்னை தபால்நிலைய முற்றுகைப் போராட்டம்

அதை ஏற்க மறுத்து தலைமை தபால் நிலையம் நோக்கி முன்னேறிய பேரணியை 50 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தியது போலீஸ். அனைவரும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு அனைவரையும் கைது செய்த காவல் துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் போராட்ட நிகழ்வு விவசாயிகளை ஒடுக்குவதற்குத் தனிச்சிறப்பாக அமைக்கப்பட்ட கிசான் போலீசை எதிர்கொண்டு வரலாறு படைத்த மன்னை மண்ணின் மாண்பை மீட்டெடுக்கும் போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது.

மன்னை தபால்நிலைய முற்றுகைப் போராட்டம்

தகவல்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு
விவசாயிகள் விடுதலை முன்னணி
ம.க.இ.க பு.மா.இ.மு

சமாதி கட்ட அம்மா சிமென்ட் – கார்ட்டூன்

3

amma-cementபடம் : ஓவியர் முகிலன்

புதிய திசைகள் திறக்கின்றது !

3

நிமிர்ந்து நில்!
துணிந்து செல்!

ஐ.டி ஊழியர்கள்
படம் : நன்றி http://www.thehindubusinessline.com

கார்ப்பரேட் மூலதனத்துக்காக
எதை எதையோ கற்றோம்

வாழ்வதற்காக
போராடக் கற்போம்!

ஏ.சி. கியூபிக்கிளில்
அச்சத்தில் உறையவைக்கப்பட்ட
பனிக்கட்டிகளாய்
ஏன் இந்த அவலம்,

பக்கத்து மனிதர்களின்
மனக் கொதிப்பை
பகிர்ந்து கொள்ள மறுத்ததால்
வந்த துயரம்.

என்ன தவறு செய்தோம்?
என்ன சொன்னாலும் கேட்டோம்!
அதுதான் தவறு.
நாமும் ஒரு தொழிலாளிதான்
என்பதை
மறந்து போன துயரத்தால்
விளைந்த சோகம் இது!

இரவு, பகல் எந்த ஷிப்ட்டிலும்
இளரத்தம் சுண்டக் காய்ச்சினோம்,
இமைத் துடிப்பைத் தொலைத்து
கணினி இலக்கில்
கருவிழி பாய்ச்சினோம்.

எங்கோ இருக்கிற
அமெரிக்க ‘டீலை’
‘டேலி’ செய்தோம்,
சொந்த உடம்பில்
வைட்டமின் ‘டி’ ஐ
காலி செய்தோம்.

நிர்வாகத்தின்
டார்கெட் அழுத்தத்தில்
மவுஸ் துடித்ததை விட
நம் இதயம் துடித்தது அதிகம்!

மூலதனத்துக்கு தேவை
இதயம் அல்ல லாபம்.
நமக்குத் தேவை
தயக்கம் அல்ல இயக்கம்.

எது
கொத்து கொத்தாக விவசாயிகளை
விளை நிலத்தை விட்டு
பிடுங்கி எறிந்ததோ,

எது
லட்சக்கணக்கான தொழிலாளர்களை
திடீரென
தொழில்களை விட்டு விரட்டியதோ,

எது
மீனவரை
ஆழ்கடல் துரத்தி
அலைக்கழித்து விரட்டுகிறதோ

அதுதான்
நம்மையும்
ஒரு நொடியில்
வீதிக்கு விரட்டுகிறது!

நோக்கியாவின் கதவுகள்
சாத்தப்படுவதும்,
டி.சி.எஸ்.சின் கணினிகள்
சாத்தப்படுவதும்
வேறு வேறு அல்ல.

மொத்த தொழிலாளிகளின்
ஒரு பகுதி என
நம்மை உணர்ந்தால்
சித்தம் கலங்காது
ரத்தம் கொதிக்கும்!

லாபத்துக்கு தேவையற்றவர்களை
‘திறமையற்றவர்களாய்’ இழிவுபடுத்தும்
கார்ப்பரேட்டுகளுக்கு,
நமது திறமையை
நாம் தனி அல்ல
உழைப்பாளர் அணி என
ஓங்கி அறைந்திடுவோம் முகத்தில்!

உரிமைகளுக்கு
ஃப்ரெஷரானால்
நமக்கான வேலை
நிறைய இருக்கிறது

போராட்டம் இல்லாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது
போராடும்
ஒவ்வொரு நிமிடமும்

புதிய திசைகள் திறக்கின்றது.
அச்சம் தவிர் நண்பா!
சங்கமாய் சேர்ந்து அடி!
சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!

– துரை.சண்முகம்

நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்

1

நாம் யாரால் ஆளப்படுகிறோம்? மிக எளிமையான இந்தக் கேள்விக்கான பதில் அத்தனை எளிமையானதல்ல. ‘மோடி தான் பிரதமர், அம்மா தான் மக்கள் முதல்வர். இவர்களைத் தான் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள்’ என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “அவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் சட்டை அவர்களுடையதில்லை” என்கிறது கீழைக்காற்று பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “ஆம் ஆத்மி: பிறப்பும் வளர்ப்பும்” என்கிற சிறு வெளியீடு.

புதிய ஜனநாயகம் பத்திரிகையில் “ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியம்” என்ற தலைப்பில் நான்கு மாதத் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்தச் சிறு வெளியீடு.

aam-aadhmi-party

தொண்ணூறுகள் தொடங்கி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மாவட்ட, வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தொடங்கி மத்திய அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் வரைக்கும் எந்த திட்டங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும், எந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சகல துறைகளிலும் ஆலோசனை வழங்குவது மக்களால் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏக்களாகவும், எம்.பிக்களாகவும் உள்ள ‘மக்கள் பிரதிநிதிகள்’ அல்ல – அவை என்.ஜி.ஓக்கள் என்று அழைக்கப்படும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் தாம்.

கடந்த சில பத்தாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நலன்களை சாதித்துக் கொடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட சிந்தனைக் குழாம்களுக்கு கள ஆய்வுகளைச் செய்து கொடுப்பதையும், இவர்கள் ஏகாதிபத்திய நலன்களை நிறைவேற்ற எப்படித் தோள் சேர்கிறார்கள் என்பதை விளக்குகிறது இச்சிறு வெளியீடு. போர்டு, ராக்ஃபெல்லர், மிலிண்டா கேட்ஸ் போன்ற பல்வேறு ஏகாதிபத்திய கார்ப்பரேட் அறக்கட்டளைகளிடம் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கித் தின்னும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டதே ஆம் ஆத்மி கட்சி என்பதை நிறுவுகிறது இவ்வெளியீடு.

ஆம் ஆத்மி கட்சி என்பது அரசு சாராத் தொண்டு நிறுவனங்களின் எந்திரகதியிலான கூட்டுத் தொகை மட்டும் தானா? அதற்கும் மேல், ஆம் ஆத்மி கட்சியின் அவதாரம் நிகழ்ந்த காலகட்டத்தின் உலகப் பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி, அது உலகளாவிய அளவில் மக்களிடையே ஏற்படுத்திய அதிருப்தி, அதிகரித்து வரும் ஊழல் முறைகேடு புகார்கள், செல்வாக்கிழந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் என்ற பின்புலத்தில் நடந்த வண்ணப் புரட்சிகள், ஆட்சிக் கவிழ்ப்பு – அதிகார மாற்றங்கள், அதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு, அந்நடவடிக்கைகளில் உள்ள ஏகாதிபத்திய நலன் என இந்தச் சிறிய வெளியீடு நம்மை பரந்துபட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இந்நூல் ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியத்தை மையமாக கொண்டு நிகழ்கால அரசியலின் பல துண்டு துக்கடாவான சம்பவங்களை இணைக்கும் அடிநீரோட்டத்தை வாசகருக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

அவசியம் வாங்கிப் படிப்பதோடு நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய நூல்.

ஆம் ஆத்மி ஆத்மி கட்சி – பிறப்பும் வளர்ப்பும்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 25

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் !

16
ஐ.டி காரிடார் சாலையில் தொழிலாளர் படை அணிவகுப்பு
ஐ.டி காரிடார் சாலையில் தொழிலாளர் படை அணிவகுப்பு

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்வது குறித்து வினவில் தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். இது தொடர்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் இணைந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இணையத்தில் தொடங்கிய பிரச்சாரம் களத்திலும் தொடர்கிறது.

வேலைநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் சங்கமாக திரண்டு தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறைகூவியும் இன்று (07.01.2015) காலை 8 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் சிக்னலில் திரண்டனர். ஐ.டி ஊழியர்களைக் காப்பாற்ற ஆலைத் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்தது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தையும், போராட்ட குணத்தையும் பறை சாற்றுவதாக இருந்தது.

வந்திறங்கும் தொழிலாளர் படை
வந்திறங்கும் தொழிலாளர் படை
பிரச்சாரப் பணிகளுக்கு தயாராகும் தொழிலாளிகள்
பிரச்சாரப் பணிகளுக்கு தயாராகும் தொழிலாளிகள்

tcs-layoff-ndlf-campaign-09பணிக்கு சென்று கொண்டிருக்கும் ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்கமாக ஒன்றிணையுமாறு அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஐ.டி காரிடாரில் உள்ள டி.சி.எஸ் மற்றும் மற்ற ஐ.டி நிறுவன அலுவலகங்கள் முன்பும் சாலை சந்திப்புகளிலும் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை வினியோகிக்கின்றனர்.

அதிகாலையில் கார்ப்பரேட் நிர்வாகத்தின் லே ஆஃப் கொடுங்கனவோடு பேருந்துகளில் பயணிக்கும் ஐ.டி மற்றும் டி.சி.எஸ் ஊழியர்களை நம்பிக்கை ஊட்டும் விதமாக தொழிலாளர்களாக இருக்கும் தோழர்கள் பேசி வருகின்றனர். இது தொடர்பான ஆங்கிலம் மற்றும் தமிழ் துண்டறிக்கைகளை விநியோகித்து உரையாடுகின்றனர்.

காலையிலேயே வந்திறங்கி, பிரசுரங்களை பிரித்து மடித்து, கொடிகள், பேனர்களை உயர்த்திப்பிடித்து ஐ.டி வளாக நெடுஞ்சாலையில் நம்பிக்கையூட்டும் விதமாக அவர்கள் பிரச்சாரம் செய்வது கார்ப்பரேட் முதலாளிகளின் கண்ணை உறுத்தத்தானே செய்யும்?

உடனே அவர்கள் உத்தரவுப்படி போலீசு பெரும்படையுடன் களமிறங்கியது. தோழர்களிடம் நைசாக பேசி கலைந்து போகுமாறு கூறியது. தொழிலாளிகளோ, “துண்டறிக்கை விநியோகிப்பது அடிப்படை ஜனநாயக உரிமை, இதை நிறுத்த முடியாது” என்று பேசி தமது தலைவர்களிடம் அனுப்பினர்.

தலைவர்களை தேடி அலைந்த போலீசு இறுதியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் முகுந்தன், மாநிலப் பொதுச்செயலாளர் சுப.தங்கராசு, மாநிலப் பொருளார் விஜயகுமார் ஆகியோரை சந்தித்து பேசியது. தோழர்களும் தொழிலாளிகள் சொன்ன அதே ஜனநாயக விளக்கத்தை எடுத்தியம்பினர்.

“குறைந்த பட்சம் பேனர்கள், கொடிகளையாவது அப்புறப்படுத்துங்கள்” என்று ஆரம்பித்து “பிரசுரம் கொடுக்காதீர்கள்” என்று மிரட்டி வருகிறது போலீசு. இதற்கு அஞ்சாத தொழிலாளர் படை தனது பிரச்சாரத்தை நிறுத்தாமல் செய்து வருகின்றது. ஐ.டி ஊழியர்களை தூக்கி எறியும் டாடாவை எதிர்த்து பேசக்கூடாது என்பதே இங்குள்ள ஜனநாயகத்தின் இலட்சணம்.

 

TCS-Prasuram-tamil-1 TCS-Prasuram-tamil-2

சாலையில் தொடங்கிய இந்த பிரச்சாரம் அவர்களை தொழிற்சங்கமாக திரட்டும் வண்ணம் தொடர்கிறது.

tcs-layoff-ndlf-campaign-04இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை ஜனவரி 10, 2015 அன்று மாலை 6 மணிக்கு சிறுசேரிக்கு அருகில் உள்ள படூரில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைவரும் வாருங்கள்!

tcs-layoff-ndlf-campaign-05

இது தொடர்பாக மேலும் விபரங்களைப் பெற 9003198576 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். அல்லது combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பேஸ்புக் பக்கம் fb://VinavuCombatsLayoff

இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்த முயற்சியில் இணைய பிரச்சாரம் தொடர்பான பணிகளை வினவு தளமும், பு.ஜ.தொ.முவும் முன்னெடுத்து வருகிறது. இதற்கு வினவு வாசகர்களின் ஆதரவையும், உதவியையும் கோருகிறோம். இந்தச் செய்தியை இணையத்திலும், உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் பரவலாக கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.

tcs-layoff-ndlf-campaign-10

TCS Layoff - NDLF (2)

TCS-Prasuram-english-1 TCS-Prasuram-english-2

ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்

0

சென்னை- ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் பாக்ஸ்கான் என்ற பன்னாட்டு நிறுவனம், சட்டவிரோதமாக தனது உற்பத்தியை நிறுத்தி ஆலையை மூடிவிட்டது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணிபுரிந்த 1,700 நிரந்தர ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர். திடீர் ஆலை மூடலை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோத ஆலை மூடலுக்கு எதிராக, அரசின் தொழிலாளர் உதவி ஆணையர் பேச்சு வார்த்தைக்கு பலமுறை அழைத்தும் வராமல், தனக்கு வேலை செய்த தொழிலாளர்களை குப்பைக் காகிதங்களாக தூக்கி எறிந்தது போலவே, இந்திய தொழிலாளர் சட்டங்களையும் கழித்து வீசியிருக்கிறது ஃபாக்ஸ்கான்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் தயாரிப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் சோனி, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பொருட்களை தயாரிக்கும், உலகின் மிகப்பெரும் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளில் தொழிலாளர்களின் உழைப்பை பிழிந்து ஆலைகளில் வைத்தே அவர்களை பிணமாக்கியது பற்றிய செய்திகள் வினவில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. பாக்ஸ்கான் ஆலைகளில் தொழிலாளர்கள் ‘தற்கொலை’ செய்துகொண்ட செய்திகள், உலகத் தொழிலாளர்களை உலுக்கியது.

இப்போழுது, இந்தியாவில் அதன் கொடுங்கரத்தின் வெறிச் செயல்கள் வெளிப்படுகின்றன. இந்திய தொழிலாளர் சட்டங்களும் அதிகாரவர்க்கமும் ஓட்டுச்சீட்டு அரசியல் தொழிற்சங்கங்களும் அவற்றை முறியடிக்க வக்கற்று, சமரசம், பேச்சுவார்த்தை என்ற பெயரில் தொழிலாளர்களை காவு கேட்கும் அதன் ரத்தப்பசிக்கு தீனிபோடுகிறார்கள்.

இதோ அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களின் குரல்களை கேளுங்கள்…

ரஜினி, பாக்ஸ்கான், சிஐடியு தொழிற்சங்க தலைவர்

நோக்கியா கம்பெனிக்கு சப்ளையர் இந்த கம்பெனி. ஆனாலும் அதைவிட பெரிய கம்பெனி. நோக்கியா மூடியபிறகும் எந்த பாதிப்பும் இல்லாமல் உற்பத்தி நடந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடர்ந்தது. இந்த கம்பெனி நோக்கியாவுக்கு மட்டுமல்ல, சோனி, மோட்டரோலா கம்பெனிகளுக்கும் பாகங்களை எக்ஸ்போர்ட் பண்ணிட்டிருந்தாங்க. நோக்கியாவோட தொழிற்சாலை தமிழ்நாட்டுலயே இருந்ததாலே அதுக்கு முன்னுரிமையா செய்து கொடுத்திட்டிருந்தோம். ஒரு கட்டத்துல, இந்த கம்பெனியில, 19,000 பேர் வேலை பார்த்தாங்க.

ரஜினி
ரஜினி, பாக்ஸ்கான் சி.ஐ.டி.யு தலைவர்

தற்போது இருப்பது நிரந்தர ஊழியர்கள் 1,700 பேர் மட்டும்தான்.

9,000 பேர் டெம்பரவரியா வேலை செய்தாங்க, தங்கள் வயித்துப் பொழப்புக்காக வேற வழியில்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக, 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான சம்பளத்துக்கு எந்த வித உரிமையும் இல்லாம வாழ்க்கைய ஓட்டிக்கிட்டிருந்தாங்க. ஊழியர்கள், 280 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த பிறகு 2 நாட்கள் விடுமுறை கொடுத்துட்டு, மறுபடியும் வேலையிலே ரி-என்டிரி கொடுத்து, மீண்ட்டும் டெம்பரவரியாக சேர்த்துக் கொள்வார்கள்.

கம்பெனிக்காரனுங்க பயங்கரமா தந்திரம் தெரிஞ்சவனுங்க. அதுமட்டுமில்லாம, அவனுங்க பின்னாடி ஒருகூட்டம் லீகல் அட்வைசர்னு அலையுது. பெர்மனன்ட் ஐடியான எனக்கு ஆரம்ப சம்பளமாக ரூ 2,900 இருந்தது. 8வருடங்கள் கழித்து இப்பத்தான் சம்பளம் 15ஆயிரம்.

4 மாதங்களுக்கு முன்பு 400 பெண் ஊழியர்களுக்கு வி.ஆர்எஸ் கொடுத்து அனுப்பினாங்க.

இதுவரைக்கும் நேரடியாக மேனேஜ்மென்ட் தொழிலாளர்களிடம் ஆலையை மூடப்போவதாக எந்த முன் அறிவிப்பும் கொடுக்கல. டிவியும், பத்திரிகைகளும்தான் ஆலையை மூடப்போவதாக சொல்கிறார்கள். கவர்மென்ட் ஆபிசர்களும், கஷ்டப்படற தொழிலாளர்களிடம் எதுவும் கேட்காமல், “நீங்க என்ன நினைக்கிறீங்க?” ன்னு நிறுவனத்திடம், கேட்கிறாங்களே ஒழிய அவங்கள தண்டிக்க ஏதுவும் செய்யல.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை நடுத்தெருவுக்கு வந்துவிடுமே என்ற எண்ணம் எவனுக்கும் இல்லை. அதைவிட்டு, எரிறதுல எண்ணெய் ஊத்தி லாபம் பார்க்கிறானுங்க பத்திரிக்காரனுங்க. எத, எதல லாபம் பாக்கிறதுனு விவஸ்தல இல்லையா. செய்திகளையும் அப்படித்தான் போடுறானுங்க. 1000 பேர் போராட்டம் செய்து அரெஸ்ட் ஆனா, 512 னு போடுறானுங்க.

கவர்மெண்ட் எதுக்கு இருக்கு, மக்களுக்கு சேவை செய்ய. ஆனா, அவன் கம்பெனிக்காரனுக்குத்தான் கவலைப்படறான். நிலைமை இப்படித்தான் இருக்கு. தானாகவே ஒரு ரூமரைக் கிளப்பிவிட்டுட்டு, அதை உண்மையாக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கம் துணை நிக்குது. ஜனநாயக நாடுன்னு சொல்லிட்டு எந்த அதிகாரி ஜனநாயகத்தை மதிக்கிறான், எந்த பத்திரிகைக்காரன் உண்மைநிலையை சொல்றான்.

ஏசி (போலீசு)லயிருந்து கலெக்டரு, பத்திரிக்கைனு எவனும் ஜனங்க பிரச்சினைய பாக்குறதில்ல.

இப்படியே, நியாயமில்லாம, வேலையைவிட்டு தூக்குவது தொடர்ந்தால் ஆலையின் முன், குடும்பத்துடன் போராட வேண்டிய நிலைமைதான்வரும். அப்பறம் குடும்பத்துக்கு கம்பெனிக்காரன் சோறுப் போடுவானோ? இல்லை, போலீசுக்காரனுங்க சோறு போடுவானுங்களோ தெரியாது.

சக்திவேல், திருவொற்றியூர், 8வருடங்களாக வேலை செய்பவர்.

சக்திவேல்
சக்திவேல்

என்னுடைய வேலைய நம்பித்தான் என் குடும்பமே இருக்கு. இதைத் தவிர வேற எந்த வேலையும் எனக்கு தெரியாது. பன்னிரெண்டாவது முடிச்சிட்டு உடனே வேலைக்கு வந்துட்டேன். அப்பா கூலித்தொழிலாளி. இவ்ளோ நாளும் என்னை நம்பி குடும்பமே போய்ட்டு இருக்கு. இருக்க வீடுகூட கிடையாது.

கம்பெனி மூடுறாங்கனு கேள்விப்பட்டதும், என்ன செய்யறதுன்னே தெரியல. 8 வருஷமாக இங்கேயே ஓட்டிட்டேன். இந்த வேலைகள்தான் எனக்கு அத்துபடி. இனிமேல் நான் வேறு வேலையும் கத்துக்கமுடியாது. வேற கம்பெனிக்குக்கு போகலாமுனுப்பார்த்தா, வயசு பார் ஆயிடுச்சினுவாங்க. என் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திருங்காங்க, இதனால கல்யாணமும் தடைபடுது. வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கு, என்ன செய்யறனுன்னே தெரியல.

எட்டு வருடங்கள் கழித்து இப்பதான், சம்பளம் 2000-லிருந்து 15,000-த்துக்கு அதிகரிச்சி கொஞ்சம் நிம்மதியா இருக்காலாமுனு பார்த்தா இப்படியொரு நிலை ஆயிடுச்சி. ஒரே மனஉளைச்சலா இருக்கு. சாதாரண போராட்டம்னு ஆலைக்கு முன்னே வந்தாலே, போலீசு அரஸ்ட் பண்ண வந்திடுறாங்க. வேலையே போகப்போகுது, இப்ப போலீசு என்ன பண்ணுவானுங்கனே தெரியல. எல்லாம், கம்பெனிக்காரனுக்கு ஆதரவாதான் இருக்கானுங்க.

கம்பெனியில 200-க்கும் அதிகமான கேமராக்கள் இருக்குது. பாத்ரூம் போனாக்கூட எல்லாருக்கும் தெரியும். பெல்லு அடிக்கிறதுக்கு முன்னே வந்துடணும். டாய்லெட்டுக்கு போறதுக்கும் கணக்கு உண்டு. டூட்டியில, நாலுவாட்டி பாத்ரூம் போனா வார்னிங் எல்லார் முன்னாலயும் நடக்கும்.

ஊதிய உயர்வுக்காக போராட்டம் பண்ணப்போ வேலூர் ஜெயில 5 நாட்கள் தூக்கிப் போட்டுட்டானுங்க. 219 பேர் ஜெயிலுக்குப்போனோம். குற்றம் செய்றவனுக்குத்தான் ஜெயிலுனு நினைச்சிருந்தேன். ஆனா, தொழிலாளி உரிமைக்கேட்டு போராடுனாலும் ஜெயிலுத்தானு அப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். அதோடு மட்டுமில்லாமல், வார்னிங் லெட்டர் வேற அனுப்பிட்டாங்க. இப்படியே என் வாழ்க்கை கழிச்சிப்போச்சி. அதுக்கப்புறம், எதைக்கேட்டாலும் சஸ்பென்ட்தான்.

சாப்பாடு பத்தாம கேட்டாலும் கேவலப்படுத்துவாங்க. தரம் இல்லாத சாப்பாடுதான்.

இப்ப வேலையில்லாதது என் வாழ்க்கையையே இருட்டில் தள்ளிடிச்சு. இந்த கம்பெனியில வேலைப்பார்த்த அனுபவத்தை சொல்லி, எந்த கம்பெனிக்கு போய் நின்னாலும் வேலை கொடுக்கமாட்டேன்றாங்க. என்ன விஷயமென்றே புரியல.

கம்பெனி கட்டாய விஆர்எஸ் கொடுத்துட்டு, எக்ஸ்பீரியன்ஸ் சர்பிகேட் தரனுன்னு சொல்றாங்க. இந்த கம்பெனியில நான் கம்மி சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததுக்குக் காரணம், 58 வயசு வரைக்கும் வேலை உத்திரவாதம்னு நினைச்சுதான். என்னுடைய ஜாயினிங் ஆர்டருல இருக்கு. எனக்கு வேலைதான் வேணும். இழப்பீடு தேவையில்லை.

அரசு எங்களுக்கு பதில் சொல்லியாகணும். அவங்க சொல்ற பதிலில்தான் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை அடங்கி இருக்கு. இதுக்கு சரியான வழிகாட்டலனா அரசாங்கத்த எதிர்த்து போராட்டம் பண்ணுவோம்.

வெளிநாட்டுலருந்து வந்து இங்க ஆதிக்கம் செலுத்த கம்பெனிகாரனுக்கு உரிமை இருக்கு. இந்தியாவுலய பொறந்த எங்களுக்கு வேலூர் ஜெயிலா? விடமாட்டோம்! எதிர்த்து போராடுவோம்!

சரவணன், அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர்

சரவணன்
சரவணன்

அக்கா, தங்கை, அப்பா, அம்மா என்று அனைவரும் இந்த வேலைய நம்பித்தான் இருக்கோம். வாடகை வீடுதான். கடந்த 3 மாதங்களாக உற்பத்தி குறைவுனு காரணம் காட்டி தொழிற்சாலைய மூடப்பாக்குறாங்க. நோக்கியாவை நம்பித்தான் நாங்க வந்தோமுனு கம்பெனி சொல்றத ஏத்துக்கவே முடியாது. ஏன்னா, இங்க செல்போன் பாகங்கள் மட்டும் உற்பத்தி நடக்கல. லேப்டாப், எல்இடி டிவிக்கள் பாகங்களும் உற்பத்தி நடக்குது; ஏற்றுமதி ஆகுது.

இந்த கம்பெனியில வேலை பார்த்தவங்க வெளியப் போய் வேலைச் செய்ய முடியாது. டெம்பரவரி தொழிலாளர்களாக வெளியேற்றப்பட்டவர்கள் எல்லாம் ஏற்கனவே, வெளியில் வேலையில்லாமல், இருக்காங்க. ஆலையை மூடக்காரணம், முழுசா எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, டெம்பரவரி ஆளுங்களை வைச்சி கம்மியான சம்பளம் கொடுத்துட்டு வேலை வாங்கிக்கலாம்னு நினைக்கிறாங்க. இங்க, இருக்கற மெஷின்களை வெளியிடத்துக்கு எடுத்துச் செல்ல, இப்ப லீவுனு சொல்றானுங்க.

சீனிவாசன்

என்னை டெக்னிஷியன் கேட்டகிரியில் எடுத்தார்கள். நாங்க யூனியனிலும் சேரக்கூடாது. சம்பள உயர்வு போன்ற போராட்டங்களில் கலந்துக் கொள்ளக்கூடாது என்று முதலிலேயே சொல்லிட்டாங்க. இங்கு மோல்டிங் டீம், அசெம்பிளி டீம் என்று, 6 விதமான டிபார்ட்மெண்ட்டுகள் இருக்குது, இவை எல்லாவற்றிலும் மேனேஜர், சூப்ரவைசர்கள், டெக்னிசியன்கள் என்று தரவாரியாக பிரித்துள்ளார்கள்.

கடந்த இரண்டு வருடமாகத் தொடர்ந்து, காலையில் எச் ஆர் வருவாரு. ஒவ்வொரு யூனிட்டுல இருந்து நாலு பேரைக் கூப்பிடுவாரு. இரண்டு நிமிஷம் கண்ணீர்விட்டு ,

‘கம்பெனி புரடக்ஷன் குறைஞ்சிடுச்சி, கம்பெனி மூடுற நிலைமைக்கு வந்துடுச்சி, உங்கள மட்டும் நான் காப்பாத்திறேன். மூணு மாச சம்பளம் தர்றோம், நீங்களே வாலண்டிரா விஆர்எஸ் கொடுத்துட்டு செட்டில்மெண்ட வாங்கிக்கினு போயிடுங்க’

னு சொல்லுவாரு. உடனே,

‘எங்களுக்கு வேற வேலை கிடைச்சிட்டதால நாங்க இங்க வேலையை விட்டு விடுகிறோம’

என்று எழுதிக் கையெழுத்து வாங்கிடுவாங்க. ஐடிகார்டு, ஷூ, யூனிபார்ம் எல்லாத்தையும் வாங்கிட்டு வெளியே அனுப்பிடுவாங்க. தினமும், கூட்டமாக ஆடுகள் நிற்கும் எந்த ஆடு இன்னிக்கி வெட்டுவாங்கனு தெரியாது. 2009-ல் இருந்தே இப்படி தினமும் நடக்குது.

எனக்கும் அந்த முறை வந்தது. நான், என் குடும்ப நிலைமையைப்பற்றி சொன்னேன். உடனே,

‘நாளைக்கு நீ வேளைக்கு வரமுடியாது. வெளியத்தான் நிக்கணும்’

என்றார்கள். மறுநாள் வந்தேன். சூப்ரவைசர் உள்ள அனுமதிக்கல. நான் வெளியேற்றப்பட்டேன். மற்ற தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கத்தை அணுகுவது நல்லது என்றார்கள். நான் புஜதொமு தொழிற்சங்கத்தை அணுகினேன்.

“திடீரென்று வீட்டுக்கு அனுப்பினால், என் குடும்பம் என்னாகுறது. அதனால, நான் வேலையை விடமாட்டேன்”

என்று கம்பெனிக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். கம்பெனியிலிருந்து அதற்கு, ஒருமாதம் கழித்து லெட்டர் வருது.

‘தொடர்ந்து வேலைக்கு வராதக் காரணத்தினால் உங்களை வேலையிலருந்து ஏன் தூக்கக்கூடாது’

னு. அந்த லெட்டர எடுத்துகுனு நான் மறுநாள், கம்பெனிக்கு போனேன். என்னை, ஐஆர் (இன்ட்ரசியல் ரிலேஷன்ஷிப்) தொழிற்சாலையிலுள்ள ‘வக்கீல்’ கிட்ட அனுப்பினாங்க, அங்கு அவர்கள்,

‘கம்பெனி மூடப்போறோம். அதனால, நீ விஆர் கொடுத்துடு’

என்று மிரட்டினார்கள். உடனே, நான் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு போனேன். அங்கு, நிர்வாகம்

‘நாங்க இவரை வேலைவிட்டு எடுக்கவும்இல்ல, சஸ்பென்டும் செய்யல’

என்று அசராமல் பொய் சொல்லியது.

உதவி ஆணையர் அலுவலகத்தின் அதிகாரி தர்மசீலன், கம்பெனிக்கு உடந்தையா இருந்தாரு. திரும்பவும் என்னை என்கொயரிக்கு கம்பெனிக்கு கூப்பிடறேனு சொன்னவங்க. பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கல, கூப்பிடவும் இல்ல. இதெல்லாம் சுமார் ஒரு வருடகாலம் நடந்தது.

அதன்பிறகு,

“நான் வேலையில்லாம இருப்பதால பிழைப்பு ஊதியம் தரணும்”

னு கேட்டேன்.

‘நீ வேலைவிட்டு நின்னுட்டே, அதனால பிழைப்பு ஊதியம்தர முடியாது’

ன்னுட்டாங்க. தொடர்ந்து இம்மாதிரி பச்சைப்பொய்ய அரசு அதிகாரிங்க துணையோட நிர்வாகத்துகாரங்க தைரியமாக சொல்றாங்க. இங்க என்ன மாதிரி பர்மனெண்ட் எம்பிளாயிக்கே இந்த நிலைமைதான். பிறகு, காண்டிராக்ட், டெம்பரவரி தொழிலாளிகள் எப்படி உரிமையைப்பத்தி பேசமுடியும்.

தொழிலாளி வேலைக்கு மட்டுமில்ல உயிருக்கும் இங்க உத்திரவாதம் இல்ல. 2010-ல் கம்பெனியின் ஏசி மெஷினைகளை நீண்ட நாள் சுத்தம் பண்ணாம இருந்ததாலே, ஊழியர்கள், விஷவாயு தாக்கி 150-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அதற்கு எதிராக பணிபாதுகாப்புக்கோரி, 60 நாட்கள் போராட்டம்,இரயில் மறியல்,செய்ததற்கு போலீசு, வேலூர் ஜெயில்ல அடைச்சாங்க. பல போராட்டம் செய்தப் பிறகுத்தான் சம்பளமும் உயர்த்தினாங்க.

இப்ப வேலையே இல்லனு தைரியமா சொல்றானுங்க. அவனுக்கு இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் இருக்கும் தைரியத்தில்தான் எல்லாம் செய்யிறான்.

பாக்ஸ்கான் போராட்டடத்தில் சி.ஐ டி யு தொழிற்சங்கம் சார்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.எல்.ஏ., சட்டமன்றக் குழுத் தலைவர் திரு சௌந்தர்ராஜன் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, வினவு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

வினவு : “நோக்கியா…வழியில் பாக்ஸ்கான் செல்கிறதா?”

திரு.செளந்தர்ராஜன்

திரு சௌந்தர்ராஜன்
திரு சௌந்தர்ராஜன்

“பாக்ஸ்கான் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தை முன் கூட்டியே சொல்ல முடியாது. கம்பெனி மூடுவதைத் தடுப்போம். கம்பெனிக்காரனின் நடவடிக்கையேப் பொறுத்தே எங்கள் நடவடிக்கை இருக்கும்.

ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கி இருப்பதற்கு, மோடி அரசுதான் காரணம். தொழிலாளர்களுக்கு அரசியல் அறிவு குறைவாக உள்ளது. தொழிலாளர்களே காரியவாதமாக செயல்படுகிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் 20 ஆயிரம் பேர் கூட சங்கம்மாக்கப்படவில்லை.

இங்க, மட்டுமல்ல, படித்தவர்கள் மத்தியிலும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை. முப்பத்தைந்து வயதுக்கு மேல வேலையை விட்டு தூக்குவது வாடிக்கையா இருக்கு.

வினவு : “40ஆண்டுகளுக்கு முன்பே, ஆலை நிர்வாகத்திற்கு எதிரா,திடீர் முற்றுகை, ஆர்ப்பாட்டம் போராட்ட வடிமாக இருந்தது. இப்போது அவை கற்பனையில்தான் உள்ளது, ஏன் இந்த நிலை?”

திரு.செளந்தர்ராஜன்

“அம்மாதிரி போராட்டங்களுக்கு திரும்பணும்னா, வலுவும் பலமும் இருக்கணும், அப்படியில்லாமல் நிர்வாகத்தோட மூக்கை சொறிஞ்சிட்டு, உதை வாங்கிட்டு வரக்கூடாது.”

பாக்ஸ்கான் தொழிலாளர்களில் சிலர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வினவு : “நிர்வாகம்,தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பது சட்டவிரோதமாக்கப்படவில்லை. பிறகு, எப்படி தொழிலாளி அச்சமின்றி சங்கமாக திரள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்.”

திரு செளந்தர்ராஜன்

“முதலாளிகள் இச்சட்டத்தை இயற்றக்கூடாது என்றும் இடது சாரிகள் உள்ளே புகுந்து ஆலையைக் கொடுத்து விடுவார்கள் என்று அரசை மிரட்டுகிறார்கள்.”

வினவு : “‘சுதந்திரம்’ கிடைத்து 50 ஆண்டுகளுக்கு பிறகுமா இந்த நிலைமை ?”

திரு.செளந்தர்ராஜன்

“ஒட்டு மொத்த சமூக நிலைமைதான் இதற்கு காரணம்… இதைப்பற்றி பேசும் நேரம் அல்ல இது.”

என்று முடித்துக் கொண்டார்.

அவருடன் வந்த சி.ஐ.டி.யு சங்கத்தினர், பாக்ஸ்கான் ஆலை மூடலுக்கு எதிராக தமிழக முதலமைச்சரின் தலையீட்டை கோரும் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் திரு. சௌந்தர்ராஜனின் கோரிக்கை மனுக்களை பிரதிகள் எடுத்து தொழிலாளர்களிடம் விநியோகித்து ஆலைமூடலுக்கு எதிரான போரட்டம் ‘உயர்ந்த’ மட்டத்தில் நடப்பது போல பிரச்சாரம் செய்தனர்.

workers-reading-petitionதெருவில் வீசியெறியப்பட்ட ஸ்ரீபெருமந்தூர் பாஸ்கான் தொழிலாளர்களுக்கு இப்போரட்டக்களம் புதிதல்ல! கடந்த 2010-ம் ஆண்டுகளிலேயே பிணந்தின்னும் பன்னாட்டு பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை, ரயில் மறியல், ஆலை முற்றுகை, கைது, சிறை என்று அனைத்தையும் பார்த்தவர்கள். அதிகாரவர்க்கம், போலீசு, அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாதவர்கள்.

workers

நிர்வாகத்தின் தொடர் தாக்குதலுக்கு எதிராக இவர்கள், அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராவது திண்ணம். அதே நேரம் வழமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் மட்டும் இதை சாதித்துவிட முடியாது. ஏனெனில் தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு, அதிகார வர்க்கம், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள், ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் அனைத்தும் அணிவகுத்து நிற்கின்றன.

தமது வேலை இழப்புக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டால்தான் முதலமைச்சருக்கு மனு போன்ற அசட்டுத்தனமாக காரியங்களில் தொழிலாளிகள் ஈடுபட மாட்டார்கள். தொழிலாளிகளின் உரிமையை தீர்மானிப்பது தொழிலாளிகளின் ஒன்றுபட்ட சக்திதான். அதுவும் ஒரு துறையில்லாமல் அனைத்து துறைகளிலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த வலிமையின் மூலமே தங்களது உரிமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலையினை தொழிலாளிகள் அடைவார்கள். அது இறுதியில் இந்தியாவை இந்திய மக்கள் பாதுகாக்கும் வழியையும் கண்டறியும்.

ஃபாக்ஸ்கான் தொழிலாளிகளின் வேலை இழப்பின் பின் உள்ள கதைகளும் வலிகளும் நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அதனால் உருவாகும் சமூக குலைவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதே. எனவே இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது நமது அனைவரின் கடமை.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

– வினவு செய்தியாளர்கள்

TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பு – அழக்கூட முடியவில்லை

4

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்துவருவதை ஒரு செய்தியாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை. 25,000 என்பது வெறும் நம்பர் அல்லவே. அவர்கள் கை, கால், ரத்தம், சதை, உணர்ச்சி கொண்ட மனிதர்கள். நான் அவர்களில் சிலரை தினமும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன், அவர்கள் என் டீம் லீடர்கள் ;  சிரிப்பார்கள், கோபப்படுவார்கள், திட்டுவார்கள். ஏனோ இப்பொழுது மட்டும் உணர்ச்சியற்று நிற்கிறார்கள். ஏன்? தெரியவில்லை.

டி.சி.எஸ் அலுவலகம்எச்.ஆர் அறையிலிருந்து வெளிவரும் அவர்களை நான் எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எச்.ஆரைப் போல நானும் உணர்ச்சியில்லாமல், அடுத்த வேலை கிடைக்க “ஆல் த பெஸ்ட்” சொல்ல வேண்டுமா? இல்லை, சோகமாக சிரிக்க வேண்டுமா? மௌனமாக கடந்துவிட வேண்டுமா? அடுத்த சில வருடங்களில் நானும் எச்.ஆர் அறைக்கு அழைக்கப்படுவேன் என்பதால் இப்போதே நடைமுறைகளை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமா? என்ன செய்வது?

என்ன செய்தாலும் இந்த ஆட்குறைப்பும், வேலை நீக்கமும் இந்த ஒரு முறையோடோ, இல்லை டிசிஎஸ் நிறுவனத்தோடு மட்டுமோ முடியப்போவதில்லை. கணினியின் கோப்புகளை “கிளீன் அப்” செய்வது போல நிர்வாகம் தனது இலாபத்துக்கு இடைஞ்சலாக உணரும் போதெல்லாம் எங்களை நீக்குவார்கள். நாங்கள் ரீசைக்கிள் (Recycle) செய்ய முடியாதவர்கள் என்பதால் அதற்கான குப்பைத்தொட்டியில் விசிறியடிக்கப்படுவோம்.

இன்று ஆலோசகர் (consultant – கன்சல்டன்ட்), இணை ஆலோசகர் (Associate Consultant) என்றால் நாளை IT Analyst, Systems Engineer.. என நாங்கள் எல்லோருமே பாதிக்கப்படுவோம். தற்போதைக்கு நமக்கு பிரச்சனையில்லை என்று நிம்மதியாக கடந்து செல்ல முடியாது.

கல்லூரி மாணவராக 21 வயதில் காம்பஸ் இன்டர்வியூவில் (வளாக நேர்முகம்) தெரிவு செய்யப்பட்டு இன்டஸ்டிரியில் நுழைந்தேன். என்னைப்போலத்தான் இப்பொழுது வேலை நீக்கப்பட்டவர்களும் நுழைந்தார்கள்.

பிள்ளைக்கறி உண்பதுபோல அவர்களின் இளம்வயதில் வேலையை உறிஞ்சிவிட்டு இப்பொழுது 30-களில் வேலையைவிட்டு துரத்தப்படுகிறார்கள். இனி அவர்கள் எங்கு செல்வார்கள். நான் எனது 30-களில் இங்கே இருப்பேனா இல்லை துரத்தப்பட்டு விடுவேனா? அப்படி துரத்தப்பட்டால் என்ன ஆவேன்? அப்பொழுது இவர்களைப்போல எனக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பார்கள். வயதான நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் இருப்பார்கள். அவர்களை எப்படி பாதுகாப்பேன்? என்று பயமாக இருக்கிறது. துரத்தப்படாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? என் திறமைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டுமா? ஆர்க்கிடெக்ட் ரமேஷைவிட திறமையானவர் இருக்கமுடியுமா? அவரையே துரத்திவிட்டார்களே.

ரமேஷை எனக்கு தனிப்பட்ட முறையிலே தெரியும். நன்றாக பழகுவார். அவரைத்தான் நாங்கள் டீமின் பில்லர் (தூண்) என்று வேடிக்கையாக அழைப்போம். மிகவும் திறமையானவர். பல தொழில்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். நாங்கள் பல மணிநேரம் போராடி வழிதெரியாமல் இருக்கும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு சில விநாடிகளில் தீர்வு கண்டுபிடித்துவிடுவார். கடுமையாக உழைப்பவர். நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதும் அவர் அலுவலக கியூபிக்களில் தான் இருப்பார், காலை அலுவலகம் செல்லும்போதும் அங்குதான் இருப்பார். மனுஷன் வீட்டிற்கு போவாரா என்று சந்தேகமாக இருக்கும். ஆனால் சட்டை மட்டும் மாறியிருக்கும். சரி வீட்டிற்கு சென்றுவிட்டுதான் வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அவரும் கூட வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘ஜாவா’வை கரைத்து குடித்திருப்பது நம் வேலையை காப்பாற்ற உதவாது என்பது மட்டும் தெரிகிறது.

டி.சி.எஸ் லாபமும், ஊதியமும்
டி.சி.எஸ் லாபமும், ஊதியமும்

இரவுபகலாக வேலை செய்தால் அப்ரைசலில் நல்ல பேண்ட் கிடைக்கும் என்ற எண்ணம் சிறிது காலத்திற்கு முன்னர் தான் தகர்ந்தது. “C” தான் போட்டார்கள். எனது ரேட்டிங்கை ஏற்கவில்லை என்பதற்கான பட்டனை அழுத்தினேன். மானேஜர், சூப்பர்வைசர்கள் அழைத்து பேசினார்கள். அடுத்த முறை நல்ல ரேட்டிங் தருவதாகவும், ஆன்சைட்டிற்கு என் பெயரை பரிசீலித்து வருவதாகவும் கூறினார்கள். அவ்வளவுதான் அந்த பிராசஸ் முடிந்துவிட்டது. நமக்கு ஆத்ம திருப்தி ஏற்படவேண்டும் என்பதற்காக அந்த பட்டனைவைத்திருக்கிறார்கள். வேறு பயன் எதுவுமில்லை.

இப்பொழுது “D” பேண்ட் போட்டுவிடக்கூடாதே என்பதற்காக தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் அமெரிக்கனுக்கு 24×7 சப்போர்ட் கொடுக்கவேண்டும். அது தீபாவளியோ, பொங்கலோ, கல்யாணம், காதுகுத்தோ எதுவுவாக இருந்தாலும் சரி அது நமக்குதானே. அவனுக்கில்லையே. அந்த நாட்களில் எல்லாம் அலுவலகத்திற்கு செல்ல பழகியிருக்கிறேன். ஆரம்பத்தில் மானேஜரிடம் நல்ல பெயர் வாங்க நானாக போட்டுக்கொண்ட மண் இது. இப்போது அதுவே வாடிக்கையாகிவிட்டது. என்னை கேட்காமலேயே இது போன்ற நாட்களில் என் பெயரை தான் அறிவிக்கிறார்கள். அமெரிக்க விசா நடைமுறைகளாலும், டீம் பாலிட்டிக்ஸ்னாலும் ஆன்சைட் கூட கிடைக்காது என்றே நினைக்கிறேன்.

இதுநாள் வரை அப்ரைசல், ஆன்சைட் கேரட்டுகளைத் தொங்கவிட்டு நயமாக பேசி வேலை வாங்கினார்கள். இனி பிங்சிலிப்பை காட்டி மிரட்டுவார்கள் என்பது மட்டும் தான் என் கண்முன்னால் தெரிகிறது. அவர்கள் மிரட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நானே மிரண்டுபோய் தான் இருக்கிறேன். அப்ரைசரின் “D” பேண்ட் என்னை வேலையைவிட்டு நீக்கும் வல்லமை வாய்ந்தது என்றால் அவர் என்னை எப்படி நடத்துவார்.

ஏற்கனவே என் சுயமரியாதையை பல சந்தர்ப்பங்களில் சீண்டி பார்த்திருக்கிறார்கள். இனி அப்படி நடந்தால் குறைந்தபட்ச எதிர்ப்பை தெரிவிக்ககூட முடியாதோ? நான் எதை செய்வதாக இருந்தாலும் “D” பேண்டும் வேலை நீக்கமும் என கண்முன்னால் வந்து மறையுமே. அனிச்சை செயலாக எதிர்த்துபேசிவிட்டால்? அதையும் கூட கட்டுப்படுத்திதான் ஆகவேண்டுமா? சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்வது கூட இனி குற்றமாகிவிடுமே, என்ன செய்வது?

கிளையண்ட் சாட்டிஸ்பேக்சன், டெலிவரி, டிப்ளாய்மண்ட் என்று பல பெயர்களை கூறி இன்னும் இன்னும் வேகமாக ஓட வைப்பார்கள். இறுதியில் எப்படியும் தோற்கடிக்கப்படவிருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்டே வேகமாக ஓடும் என் நிலையை கண்டு எனக்கே பரிதாபமாக இருக்கிறது. இப்போதைக்கு தப்பிக்க வேகமாக ஓட வேண்டுமா?. அதனால் என்ன பயன்?

டி.சி.எஸ் அலுவலகம்
டி.சி.எஸ் அலுவலகம்

அமெரிக்க வாடிக்கையாளரின் தகவல் பாதுகாப்புக்கும் (Information security), நெட்ஒர்க் பாதுகாப்புக்கும் (Network security) இரவு பகலாக வேலை பார்க்கிறேன். அதை தெரிந்துகொள்ள தடித்தடியான புத்தகங்களும் இருக்கின்றன. எனது சொந்த பணிபாதுகாப்புக்கு ( Job security) என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு இதுநாள் வரை தெரிந்திருக்கவில்லை. எந்த புத்தகத்தில் அதை படிப்பது?

அனைத்தும் தெரிந்தவனாக நினைத்துக்கொண்டு ஐ.டி கண்ணாடி கிணற்றின் தவளையாகவே இருந்திருக்கிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிறுவனத்தை எவ்வளவு நம்பினேன். இத்தனை பேரின் வாழ்க்கையை அழித்து அன்பிட் (Unfit) ஆக்கிவிட்டு “Fit For Life” என்று அலுவலகத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள். ஜாப் செக்யூரிட்டி இல்லாமல் இருக்கும் எங்களிடம் “Safety first” என்று இன்றும் விளம்பரம் செய்கிறார்கள். இதை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இதை எதிர்த்து எங்களால் ஒன்று செய்ய முடியவில்லை என்பதை நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கிறது. பஸ் ஸ்டிரைக் என்று சொன்னார்கள். ஏதோ எம்பிளாயீஸ் பிராப்ளமாம். குறைந்தபட்சம் அவர்கள் பிரச்சனையை வெளியில் சொல்லமுடிகிறது அவர்களால். எங்களால் அது கூட முடியவில்லையே. கூடி அழமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்.

யார் யாருக்கு வேலை பறிக்கப்பட்டுள்ளது என்பது கூட எங்களுக்குத் தெரியாது. அந்த நபர்களைத்தாண்டி, அந்த டீமை தாண்டி யாருக்கும் தெரியாதே. ஒன்று கூடி போராட தேவையில்லை; ஒன்றுகூடி அழக்கூட எங்களால் முடியவில்லையே. வேலை போனவருக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியவில்லையே. ஏன் இப்படி தனித்தனி தீவுகளாக இருக்கிறோம்? என்று நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. ஆனால் டீம் ஒர்க் என்பதை பற்றி நாள் கணக்கில் வாய் கிழிய பேசுகிறார்கள். டீம் பில்டிங், டீம் ஸ்பிரிட், மயிறு மட்டை என்று ஃபிரெஷ்ஷர்கள் பலருக்கு நானே வகுப்பெடுக்கிறேன்.

காய்கறி விற்பவரில் ஆரம்பித்து, மூட்டை தூக்குபவர் வரை தங்கள் பிரச்சனைக்காக ஒன்று கூடி ஏதோ செய்கிறாகள். போராடுகிறார்களோ இல்லை மனு கொடுக்கிறார்களோ ஏதோ ஒன்று செய்கிறார்கள். ஏன் நாங்கள் மட்டும் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறோம்.

எங்களைப்போல மெத்த படிக்காத, சாதாரண மூட்டைதூக்கும் தொழிலாளியால் முடிவது ஏன் எங்களால் முடியவில்லை?

நீங்கள் சொல்வது போல சங்கம் வைப்பதால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது இல்லாமல் எங்கள் குரல் கூட வெளியில் கேட்காது என்பது தான் உண்மை. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும்போது இது மட்டும் தான் ஒரே வழியாக தெரிகிறது.

(ஐ.டி துறை நண்பர்களின் உண்மைக்கதைகள் இங்கே இடம்பெறுகின்றன, பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

– ரவி

(படங்களை இணையத்தில் எடுக்கப்பட்டவை)

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்

8

‘கம்யூனிஸ்ட்கள் நாத்திகர்கள்; ஆகவே மதநம்பிக்கையாளர்களான பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கு எதிரானவர்கள்’ என்ற கருத்தை மதவாதிகள் தொடர்ந்து மக்களிடையே பரப்பி வருகிறார்கள். இந்த பிரச்சாரம் மதவாதிகள் எதிர்பார்த்த அளவுக்கு பலனை அளிக்கவில்லை என்றாலும் மதத்தின் பெயரால் நடத்தும் மாபாதக செயல்களை நியாயப்படுத்த இதனை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் உண்மையோடும், உறுதியோடும் போராடும் கம்யூனிஸ்ட்கள் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் மக்கள் எக்காலத்திலும் இழக்கவில்லை. எனினும் மதம் தொடர்பாக கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன ? புரட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் மத விவகாரங்கள் எப்படி கையாளப்பட்டன? மத உணர்வாளர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் ? என்பதை மக்கள் முழுமையாக புரிந்து வைத்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது.

muslims-in-soviet-russiaஇந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக ‘சோவியத் ரஷ்யாவில் முஸ்லிம்கள்’ என்ற பெயரில் ஒரு சிறுநூலை ‘நீந்தும் மீன்கள்’ வெளியீட்டகம் கொண்டு வந்துள்ளது. சோவியத் ரஷ்யாவுடன் இணைந்திருந்த மத்திய ஆசிய நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் பெற்றிருந்த மத உரிமைகளை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த கட்டுரைகளை எழுதியவர்கள் கம்யூனிஸ்ட்களோ, மதச்சார்பற்ற கருத்தியலாளர்களோ அல்லர்; இஸ்லாமிய மதத்தலைவர்கள் என்பது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. கசகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்ஆகிய மத்திய ஆசியா நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மதத்தலைவர்களும், அறிஞர்களும் இந்த கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

இஸ்லாம் 8-ம் நூற்றாண்டின் போது மத்திய ஆசியாவில் அறிமுகமானது. கடுமையான இன்னல்களை அப்போது சந்தித்தது. பிற்பாடு மத்திய ஆசியாவில் இஸ்லாம் முழுமையாக பரவிய போதும் மக்கள் நிம்மதியை பெற்று விடவில்லை.  கான்கள் மற்றும் நிலப்பிரபுக்களால் முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். பிறகு 19-ம் நூற்றாண்டில் மத்திய ஆசியப் பகுதிகள் ஜார் மன்னனால் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன. அப்போது முஸ்லிம்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் மத உரிமைகள் கடுமையாக ஒடுக்கப்பட்டிருந்தன. ரஷ்யப் புரட்சி நடந்த 1917-க்கு பிறகு தான் மக்கள் சமூக விடுதலையையும், மத உரிமையையும் முழுக்கப் பெற்றார்கள்.

இந்த நூலின் கட்டுரைகள் சோவியத் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு மக்களுக்கு கிடைத்த சமூக உரிமையையும், மத உரிமையையும் அறிவிக்க எழுதப்பட்டவை அல்ல. பொதுவான வாழ்க்கைப் பதிவு மற்றும் புனித பயணங்கள் பற்றிய நினைவுகள் வழியாக சோவியத் ரஷ்யா பற்றிய தமது எண்ண ஓட்டங்களை பகிர்ந்துள்ளார்கள், கட்டுரையாளர்கள்.  உதாரணமாக, ‘புனித பயணங்களின் நீங்கா நினைவுகள்’ முழுக்க ஒரு பயணக்கட்டுரை. தகெஸ்தானில் வாழ்ந்த அசில்தார் ஹாஜியின் பயண அனுபவங்களின் பதிவு. சிறு வயதில் புனிதப் பயணத்தை மேற்கொள்ள விழைந்த ஆசையை குறிப்பிடுகிறார் அசில்தார். தனது தந்தை மெக்கா, மதினா சென்று திரும்பிய போது ஒரு மாவீரனை போல கிராம மக்களால் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்கிறார். பிறகு தனது காத்திருப்பையும், இறுதியில் தனது பயண அனுபவத்தையும் அறியத் தருகிறார்.

தனது பயணத்தின் போது மதினாவில் புலம் பெயர்ந்த தகெஸ்தானியர் ஒருவருடனான சந்திப்பை விளக்குகிறார். சவூதி அரேபியாவில் வாழும் அவர் கண்களில் நீர் ததும்ப அசில்தாரை கட்டி அணைக்கிறார். புரட்சி மக்களின் தேவைகளை நிறைவு செய்திருப்பதை அறிந்து உவகை கொள்கிறார். புரட்சியின் பலன்களை அனுபவிக்க அவர் அங்கு இல்லை என்பதை நினைத்து கண்ணீர் உகுக்கிறார். புதிய வாழ்க்கைக்கான காலம் புலரும் என்பதை முன்னரே அறிந்திருந்தால் தான் நாட்டை விட்டு வெளியேறி இருக்க மாட்டேன் என்று நொந்து கொள்கிறார்.

தாஜிகிஸ்தானை சேர்ந்த அப்துல்லாஜன் இபுனு அல்பேனியா நாட்டுக்கு சென்று வந்ததை ‘நண்பர்களுடன் சந்திப்பு’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அல்பேனியாவின் வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் அவர் பின்பு சிரியா செல்கிறார். சிரியாவின் தலைமை முப்தி யாசெர் அபெத்துடனான தனது சந்திப்பை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறார். சோவியத் நாட்டில் இஸ்லாமிய மக்கள் சிறப்பாக பேணப்படுவதை தான் முன்பு மேற்கொண்ட பயணத்தில் கண்டுணர்ந்ததை அப்துல்லாஜனுடன் பகிர்கிறார் யாசர் அபெத்.

மதரசாக்களில் முஸ்லிம்கள் பெருமளவுக்கு சென்று பயின்று வந்ததையும், விண்ணப்பிப்போரை சேர்த்துக் கொள்வதற்கு அங்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டதையும் மதரஸா ஆசிரியர் ஒருவரின் பதிவில் அறிய முடிகிறது. இஸ்லாமிய வாரியம் முதன்முறையாக அமைக்கப்பட்டு மக்களின் குறைகள் களையப்பட்டன. இஸ்லாமிய மதச்சங்கங்கள் அமைத்துக் கொள்ளப்பட்டன. அங்கு இஸ்லாம் பற்றிய அறிவு மிகுந்தவர்கள் குறுக்கீடின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்கள் கொண்டாடும் ரம்ஸான், மொகரம் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. ஹஜ் புனிதப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. திருக்குரான் பதிப்பித்தல், சமயக் குருமார் பேராயம் என்று அனைத்து மத நடவடிக்கைளுக்கும் அனுமதி இருந்தது.

‘மதம் தனிநபர் உரிமை’ என்ற ஜனநாயக கருத்தாக்கத்தில் ஊன்றி நின்று இந்த மத உரிமைகள் சோவியத் ரஷ்யாவில் அனுமதிக்கப்பட்டன. மக்களிடையே அமைதிக்கும், நட்புணர்வுக்கும் முதலிடம் தரப்பட்டன. அதனால் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். மோடியின் ஆட்சியில் கிறிஸ்துமஸ் கொண்டாட ஏற்படுத்தப்பட்ட சிக்கல்களை கண்ணுற்றோம். மொகரம் ஊர்வலத்துக்கு எதிராக டில்லியின் பாவனா பகுதியில் போலீசும், இந்து மதவெறியர்களும் ஏற்படுத்திய தடைகளை கண்டோம். விநாயகர் ஊர்வலத்தின் போது மசூதிகள் தாக்கப்படுவதையும் காண்கிறோம். மதவாதிகளால் சமூக நல்லிணக்கத்தை ஒருபோதும் பேண முடியாது என்பதற்கு இவை உதாரணங்கள்.

சோசலிச ஆட்சியில் மதங்கள் அரசிலிருந்தும், ஆட்சி முறையிலிருந்தும் விடுவிக்கப்பட்டு தனிநபர் உரிமையாக பற்றிக் கொள்ள அனுமதிக்கப்படும். அது ஒன்றே இந்துத்துவம், தலிபானியம் போன்ற ஆபத்துகளிலிருந்து மக்களை பாதுகாக்கும். இந்த நூல் முஸ்லிம்கள் மட்டுமல்ல மதங்களை பின்பற்றுபவர்கள் அனைவரும் படித்து தெளிவுபெற வேண்டிய ஒரு கையேடு என்பதை மறுக்கலாகாது.

– சம்புகன்

சோவியத் ரசியாவில் முஸ்லீம்கள்

மொழிபெயர்த்தவர் : சின்னத்தம்பி முருகேசன்
வெளியீடு : நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்
விலை : ரூ 90
பக்கங்கள் : 116

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

TCS : We can Combat layoff!

9

Friends,

layoff-management-3TCS is in the process of laying off 25,000 employees. All those guillotined are our colleagues. The CEOs call it jobs chopping. You might have escaped the blood bath now. Who next and when? The threat is hanging over all of us

They lift us straight from campus, and by the time we reach mid thirties we are sucked dry and are ready to be thrown out. For them this is corporate Dharma. At a time, when we look forward to a fruitful career and peaceful family life, we are forced to make a fresh start in the job market competing with kids just out of college.

Our corporate leaders know what this entails! Depressions, broken homes and suicides. Still they will ram through this round of layoff and a succession of further layoffs. They are concerned only about their quarterly profit margins.

layoff-survivorWhat is worse, we look at this corporate injustice as some sort of natural calamity, against which one can do nothing. Thousands of people leave in tears. In IBM employees are humiliated, asked to leave on the spot, their laptops confiscated by the guards. Even a meek illiterate woman would resist rape. But we don’t raise a finger in protest, when a friend’s job is chopped off in our next cubicle. This calamity unfolds in front your own eyes, yet you choose to remain silent – to save your job.

Can you? It is only a matter of time before every IT employee in his thirties is to face this situation. The only way to smash this job cutting machine is to Unionize! The Corporates unionise themselves as NASCOM and blacklist the ones who dare to speak against them. But some of us think that union is a business of workers. What is the difference between an axed TCSer and an axed FOXCONNer? The pay cheque?

As the vanguard of 21st century hi tech universe, we network in the virtual world and ensure security for systems we design, implement and maintain. It’s time we network ourselves as a union and ensure security and honour for our own lives. After years of toil, we can’t be thrown out as dirty rags.

lay-off-survivorsA collective action of workers in an industry like Hyundai would affect industrial production in a unit, and some of its ancilliaries. But a threat of collective action by IT workers, would send shivers down the spine of NASSCOM, and Europe and US would feel the tremors of our action.

But fear is the key corporates hold. The fear that one loses his job on forming an union, is not unique to IT employees. Workers who try to organize are threatened with dismissal in every industry. Only those who defy such threat, save their jobs and save their honour. If they cut your job to increase their profit, threaten them with loss. Their fear of loss could earn you your job.

25K+ TCSers in Chennai and 3 lakh+ overall. This is your collective might. You have to unionize. We understand your anxieties and hesitations. As we have successfully organized unions in various industries, we believe we could together fight this layoff.

We, NDLF together with vinavu.com have organized a meeting of trade union leaders, legal experts and IT industry people. We invite you to the meeting to get answers to your queries and share your ideas.

By
New Democratic Labour Front, Tamil Nadu.
Contact:
https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com

திருச்சி கலெக்டருக்கு வகுப்பு எடுத்த ஆட்டோ தோழர்கள்

4

அடாவடித்தனத்துடனும், அராஜகவாதிகளாவும் செயல்படும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்!

எதிர்கொண்டு போராடும் திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்!

டந்த 5.12.14 முதல் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து, ‘உடனடியாக மீட்டர் போட்டு ஆட்டோவை இயக்க வேண்டும்’ என தடாலடியாக அறிவிப்பு வெளியிட்டு அமுல்படுத்துமாறு நிர்பந்தித்தனர், அதிகாரிகள்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்இத்தகைய அவசரகதியிலான முடிவுகளுக்கெதிராக திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கம் ) சார்பாக பிரச்சார இயக்கம் முன்னெடுத்தோம். மக்களிடம் உண்மை நிலையை விளக்குவது, அனைத்து ஓட்டுனர்களை ஒருங்கிணைப்பது பிற சங்கங்களை ஒருங்கிணைக்க முயற்சி எடுப்பது என முடிவு செய்து வேலை நிறுத்தம், RTO அலுவலக முற்றுகை என நடத்தினோம். இதனைத் தொடர்ந்து 15 நாட்களாக அதிகாரிகள் தமது நடவடிக்கையை நிறுத்தி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்ஆனால் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்காமலும், சங்கங்களை அழைத்து பேசாமலும் 15 நாட்கள் வன வாசத்திற்க்கு பின் திடீரென தினசரிகளில் 48 மணி நேரம் கெடுவிதித்து அறிக்கை வெளியிடுகிறார், போலீஸ் கமிஷ்னர். ‘மீண்டும் பழைய உத்தரவின் படி மீட்டர் போட்டு வண்டி ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் முதல் நாள் அபராதம் ரூ 100 , இரண்டாவது நாள் ரூ 500, மூன்றாம் நாள் ஆட்டோக்கள் பறிமுதல், பர்மீட் ரத்து செய்யப்படும்’ என அறிவித்து நடவடிக்கையில் இறங்கினர். (நல்ல வேளை நான்காவது நாள் ஆட்டோ டிரைவருக்கு தூக்குத் தண்டனை தரப்படும் என அறிவிக்கவில்லை)

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்சும்மா இருக்கையிலேயே நம்ம ஊர் போலீசுகாரர்களுக்கு கை அறிப்பெடுக்கும். இப்படி ஒரு அறிவிப்பு வந்ததும் தெருவுக்குத் தெரு வண்டியை மடக்கி மாமூல் வேட்டையில் இறங்கினர்.

இந்த சூழலில் சங்கங்கள் எல்லாம் வாயை மூடி மௌனம் காத்துக் கிடந்தனர். சி.ஐ.டி.யு.வினர், ‘இனியும் அதிகாரிகளை எதிர்க்கொள்ள முடியாது’ எனக் கருதி தமது கிளையில் மீட்டர் போட்டு ஒட்ட வேண்டும் என அறிவிப்பு செய்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்ஆனால் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கமோ இதனை எதிர் கொண்டு அடுத்த சுற்று போராட்டத்திற்கு ஆயுத்தம் ஆனது. திருச்சி முழுவதும் உள்ள அனைத்து ஸ்டாண்டுகள், சங்கங்கள் உள்பட அனைவருக்கும் அறிவிப்பு கொடுதது ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். ஏ.ஐ.டி.யு.சி, விடுதலை சிறுத்தைகள், திமுக, அதிமுக , சி.ஐ.டி.யு வினர் சங்கத்தை சேர்ந்த கிளைகளில் உள்ளோர் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது குமுறலையும், ஆலோசனைகளையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து 22.12.2014 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்நாம் அணி திரட்ட திட்டமிட்ட நாளில் மாவட் ஆட்சியர் அணியினரும் தமது பங்குக்கு அணிதிரட்டினார். ஸ்டாண்டு இல்லாத, உதிரியாக ஓட்டும் டிரைவர்களை அழைத்து பேசி கலெக்டர் கொடியசைத்து மீட்டர் ஆட்டோவை துவக்கி வைப்பது போல ஒரு காட்சியை ஏற்படுத்த அதே நாளில் முடிவு செய்திருந்தனர். அவர்கள் அணியைச் சேர்ந்த 25 நபர்கள் ஒருபுறம் நின்றனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்நமது தலைமையிலான அணிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகம் உள்ளே வரை சென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்கொடியசைத்து அவர்கள் ஆட்டோக்களை அவசரமாக அனுப்பிய ஆட்சியர் நமது தரப்பினை அழைத்து பேச முடிவு செய்து கூப்பிட்டனர். பிற சங்க பிரதிநிதிகள் உள்பட 10 நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

நாட்டு நடப்புகள் அனைத்தும் தெரிந்தவர் என ஆட்சியர் பற்றி கருதியிருந்தோம். ஆனால் அடிப்படையான விசயங்கள் கூட தெரியவில்லை என்பதை அவர் பேச்சில் உணர முடிந்தது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“7000 ஆட்டோ டிரைவர் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இதனை அனைத்து சங்க பிரநிதிகள், அதிகாரிகள் கொண்ட கமிட்டி அமைத்து பேசாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது என்ன நியாயம்” என்ற நமது கேள்விக்கு?

“இது பற்றி எனது காதுக்கு செய்தி வரவில்லை” என்கிறார்!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்“அங்கீகாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான கால்டாக்ஸிகள் இயங்குகின்றன. இவற்றால் ஆட்டோக்களும் பாதிக்கப்படுகின்றன. ஏன் அவர்களை ஒழுங்குபடுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை” எனக் கேட்டதற்கு

“என்ன ? கால்டாக்ஸிக்கு அங்கீகாரம் இல்லையா?” என கீழ் நிலை அதிகாரியை பார்த்து கேட்கிறார்!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“ஆமாம் மேடம்” என அவர் அடக்கமாக உண்மையை உளறியதும், “சரி நடவடிக்கை எடுக்கிறேன்” என்கிறார்!

“தனியார் கம்பெனிகள் கொழுத்த லாபத்தில் தரமில்லாத மீட்டரை விற்கின்றனர். அதற்கு பதிலாக அரசே G.S.M மீட்டர் தரவேண்டும்” என்ற கோரிக்கைபற்றி பேசிய போது!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“அது என்ன G.S.M மீட்டர். அப்படி ஏதும் இல்லையே” என கீழ் அதிகாரியை பார்த்து பேச,

“இல்லம்மா இருக்கு ஆனா அது சென்னைக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என சமாளித்தார் ஆட்சியரின் கீழ் நிலை அதிகாரி.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“போலீஸார் அபராதம் என்ற பெயரில் வளைத்து வளைத்து படிக்கின்றனர். இது முறையல்ல” என்றதும் உடனே போலீஸ் கமிஷனருக்கு போன் போட்டார். ஆனால், ‘அவர் திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் உள்ளதால் டவர் கிடைக்கவில்லை வந்ததும் பேசுகிறேன்’ என்றார் ( அண்ணல் மலையை விட்டு இறஙகிவரும் வரை 7,000 ஆட்டோக்கள் மாமுல் கட்டியே ஆக வேண்டும் மறைமுகமாக அறிவித்தார்).

“இலவச மீட்டர் எங்கேயும் வழங்கவில்லை” என அறிவித்தவர் (அம்மா 110 விதி அறிவிப்பை தடாலடியாக மறந்துவிட்டாரா, அல்லது அம்மா பேச்சு வெறும் சும்மா வெத்துவேட்டு என கருதினாரோ என தெரியவில்லை) “வங்கிகளில் கடன் ஏற்பாடு செய்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“எந்த வங்கியும் கடன் தருவதில்லை. உங்கள் உத்தரவை யாரும் பின்பற்றி நடைமுறை படுத்தவில்லை” என்றதும் உடனே IOB வங்கி மாவட்ட அதிகாரிக்கு போன் செய்து, “உடனே நிபந்தனை இல்லாமல் கடன் கொடுங்க. இல்லாவிட்டால் போஸ்டர் அடிச்சு ஒட்டுவாங்க” என கூறி அவரை சம்மதிக்க வைத்தார்.

“உங்க மற்ற கோரிக்கைகளை அரசிடம் பேசுகிறேன். அனைத்து சங்கங்களையும் கூப்பிட்டு பேசி இறுதி முடிவு எடுக்கிறோம்” என்ற வாக்குறுதியின் பெயரில் முற்றுகை விலக்கி கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை சுவரொட்டியாக தயாரித்து அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டபட்டுள்ளது. மீண்டும் அமைதியாக நாட்கள் நகர்கின்றன!

இந்த கலவரங்களுக்கு மத்தியில் சி.ஐ.டி.யு வினர் சங்கங்கள் சேர்ந்து நிர்வாகிகள் 4 நபர்கள் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து அன்றைய செய்திகளில் அவர்களும் இடம் பிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

மீட்டர் ஆட்டோ இயங்க தடையாக உள்ள பிரச்சினைகள்

  1. 25 ஆண்டுகாலமாக மீட்டர் போடும முறை நடை முறையில் இல்லை
  2. பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் அறிவிப்பாக வெளியிடுவதும். அதன் பின் உள்ள பிரச்சினைகளை சரி செய்யாமல் கிடப்பில் போடுவதுமாக இருந்துள்ளனர்.
  3. இதனால் ஆட்டோ தொழிலை பல்வேறு பிரச்சினைகளும், சிரமங்களும் சூழ்ந்துள்ளன.
  4. ஆண்டுக்கு ஒரு முறை F.C எடுக்கும் முறை அமுலில் உள்ளது இதற்கு செலவு குறைந்தது ரூ 5000 ஆகும்.
  5. இன்சூரன்ஸ் ரூ 800 ஆக இருந்தது இன்று ஆண்டுக்கு ரூ 4,000 ஆக உயர்ந்துள்ளது.(பல லட்சம் கோடி இன்சூரன்ஸ் தொகை கேள்வி கேட்பாரின்றி உள்ளது. இதில் பல பன்னாட்டு நிறுவனங்கள் புகுந்து சுருட்ட துவங்கி விட்டனர்.) இந்தத் தொகையை கட்டமுடியாமல் ஆட்டோ ஓட்டுனர்கள் தவித்து வருகின்றனர்.
  6. படிப்பறிவு இல்லாதவர்கள் தான் ஆட்டோ தொழில்களில் வந்து சேர்கின்றனர். தமது அனுபவம் மூலம் கற்று தேர்கின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் உள்ளவர்களை திடீர் என மத்திய அரசு 8-ம் வகுப்பு படித்தால் தான் பேட்ஜ் வாங்க முடியும் என சட்டம் இயற்றி பிழைப்பை கெடுத்து உள்ளது. இனிமேல் எப்படி இவர்கள் படித்து சான்றிதழ் பெற முடியும்.
  7. நமது ஆட்டோ சம்மந்தமான ஆவணங்களை வங்கி, மற்றும் பைனாஸ்சியரிடம் அடமானம் வைக்கப்பட்டு தான் கடன் பெற முடிகிறது. இவை முடியும் வரை ஆவணம் பெற முடியாது. இது போன்ற சூழலில் முறையாக ஆவணங்களோடு ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயங்குவதில்லை.
  8. மக்கள் அன்றாட தேவைகளுக்கே படாதபாடு படும் சுழலில் ஆட்டோவில் பயணம் செய்வது அரிதாக உள்ளது.
  9. நாள் ஒன்றுக்கு 5,6 சவாரி கிடைத்தால் அது பெரிய விசயமாகும். இது போன்ற சூழலில் மீட்டர் போட்டு அரசே கட்டணத்தை நிர்ணயத்து இயக்கக் கோரும் போது இப்போது உள்ள வருமானத்தில் பாதி தான் ஈட்ட முடியும். அதுவும் சின்ன சிறிய நகரங்களுக்கு இந்த மீட்டர் கட்டணத்தை பொருத்தினால் மேலும் அதிக பாதிப்பு ஏற்படும்.

trichy-auto-drivers-protest-15

இவை எதைப் பற்றியும் நம்ம ஊர் அதிகாரிகள் கவலைப்படவில்லை. தனது மேலதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே அமுல்படுத்த வேண்டும் என்ற சிகப்பு நாடா முறையையே பின்பற்றுகின்றனர். ஜனநாயக பூர்வமாக விவாதித்து, நல்லது, கெட்டதை பேசி தீர்த்து முழுமையாக அமுல்படுத்துவது என்பது இவர்கள் அகராதியில் கிடையாது. எனவே புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராடுவதை தவிர வேறு வழியில்லை என்ற நோக்கத்தில் அடுத்தகட்ட போராட்டத்திற்க்கு ஆ.ஓ.பா.ச தயாராகி வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்,
(இணைப்பு) – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி)
திருச்சி.

பேச: 9791692512.