Wednesday, May 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 7

காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்! | மீள்பதிவு

இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச கும்பலின் திட்டத்தின் ஒரு அங்கமே இந்த வக்ஃப் மசோதா. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் இம்மசோதாவின் அபாயங்கள் குறித்து புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2024 இதழில், “காவி-கார்ப்பரேட் கும்பலுக்குப் படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!” என்ற கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இக்கட்டுரை செப்டம்பர் 14, 2024 அன்று வினவு தளத்தில்  பதிவிடப்பட்டிருந்தது.

தற்போது, (ஏப்ரல் 3 அதிகாலையில்) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா  எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாசிசக் கும்பல் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவைக் கொண்டு வருவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்வதாக இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

மேலும், இக்கட்டுரை வெளியிடப்பட்ட போது அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வக்ஃப் வாரிய மசோதாவிலிருந்த அபாயகரமான அம்சங்களை விட தற்போது கூடுதலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள் முன்வைத்திருந்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

***

காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!

னது இந்துராஷ்டிர கொடுங்கனவிற்காக இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் நோக்கத்துடன் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பாசிச மோடி கும்பல், அதன் ஒரு அங்கமாக ‘‘வக்ஃப் வாரிய திருத்த மசோதா 2024-ஐ’‘ கொண்டுவந்துள்ளது.

ஆகஸ்ட் 8 அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்’‘ (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என்ற பெயரில் இம்மசோதாவை தாக்கல் செய்துள்ள பா.ஜ.க. கும்பல், வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய அமைப்புகள், கல்வியாளர்கள் என யாருடனும் கலந்தாலோசிக்காமல் தனக்கே உரிய பாசிச வழிமுறையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக, சட்டத்திருத்தங்களை செய்யும்போது ஏற்கெனவே உள்ள சட்டத்தில் ஒன்று முதல் பத்து திருத்தங்கள் வரை மேற்கொள்ளப்படும் நிலையில், பாசிச மோடி அரசோ இம்மசோதாவில் 44 திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இத்திருத்தங்கள் அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத உரிமைகளை பறித்து வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையிலேயே முன்மொழியப்பட்டுள்ளன.

இதனையடுத்து இம்மசோதாவிற்கு நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்மசோதா இஸ்லாமிய மக்களின் வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையில் உள்ளதையும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 15, 25, 26, 30-களுக்கு எதிராக உள்ளதையும் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் லோக் ஜனசக்தியின் எம்.பி-க்களும் வக்ஃப் மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றனர். இதனையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான 31 பேர் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்திற்கு பின்னாலிருக்கும் பாசிஸ்ட்டுகளின் சதித் திட்டம்

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்கள் இறையருளை நாடி நன்கொடையாக வழங்கப்படும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சொத்துகளை நிர்வகிப்பதற்காக 1913-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நேரு ஆட்சியில் வக்ஃப் வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு 2013-ஆம் ஆண்டில் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதற்கு நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் உள்ளன. இவை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

2022-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள வக்ஃப் நிறுவனங்களிடம் 7.8 லட்சத்திற்கும் மேற்பட்ட அசையா சொத்துகளும் ஒன்பது லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களும் உள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் இரயில்வே துறைகளுக்கு அடுத்ததாக வக்ஃப் வாரியங்களிடமே அதிக சொத்துகள் இருக்கின்றன. இச்சொத்துகள் மூலம் கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளை இஸ்லாமிய மக்கள் பூர்த்தி செய்துகொள்வதோடு தங்களை தாங்களே சுயேட்சையாக நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இதனை சகித்துக்கொள்ள முடியாமல்தான் வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் மூலம், வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை பறித்து, பாசிசக் கும்பல் கட்டுப்படுத்தும் வகையில் அதன் நிர்வாகமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதாவில் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


படிக்க: இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!


சான்றாக, வக்ஃப் சொத்துகளின் மீது அரசு அல்லது தனிநபர் உரிமை கோரினாலோ; அரசு அல்லது தனிநபர் சொத்துகளின் மீது வக்ஃப் உரிமை கோரினாலோ, அந்த கோரிக்கைகளின் மீது இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கே உள்ளது என திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுநாள்வரை வக்ஃப் வாரியத்திடம் உள்ள இந்த உச்சபட்ச அதிகாரத்தை வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் எந்த தொடர்பும் இல்லாத மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவதன் மூலம் வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை முற்றிலுமாக பறித்து அதனை வெறுமனே அலங்கார அமைப்பாக்கத் துடிக்கிறது, பாசிசக் கும்பல். மேலும், வக்ஃப் வாரியம் உரிமை கோரும் சொத்துகளை கணக்கெடுக்கும் ஆணையருக்கு உள்ள அதிகாரத்தையும் பறித்து மாவட்ட ஆட்சியருக்கு வழங்குகிறது.

ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவு 40-இன் படி, ஒரு சொத்து வக்ஃபுக்கு சொந்தமானதா? இல்லையா? என்பதை நிர்ணயிப்பதில் “மாநில வக்ஃப் வாரியம்” தவறான தீர்ப்பு கொடுத்தால் வக்ஃப் வாரிய தீர்ப்பாணையத்திலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் எந்தவொரு நபரும் மேல்முறையீடு செய்வதற்கான வழிகள் உள்ளன. அப்படியிருக்கையில், மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குவது என்பது மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.

அதேபோல், வக்ஃப் பத்திரம் இல்லாத சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக கருத இயலாது என்ற திருத்தம் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 1900-களின் முற்பகுதியிலிருந்தே வக்ஃப் சொத்துகளை நிர்வகித்துவரும் வக்ஃப் வாரியத்திடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு முறையான சான்றிதழ்கள் இருப்பதற்கான அடிப்படையில்லை. இதனை மோப்பம் பிடித்தே அச்சொத்துகளை அபகரிப்பதற்காக இத்திருத்தத்தை முன்மொழிந்துள்ளது பாசிசக் கும்பல்.

மேலும், ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களுக்குள் இஸ்லாமியர் அல்லாத இருவரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் மசோதாவில் மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், இஸ்லாமியர் அல்லாதோர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருங்காலிகளை வக்ஃப் வாரியத்திற்குள் நியமிப்பதன் மூலம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து வக்ஃப் வாரிய சொத்துகளை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப் பார்க்கிறது, காவிக் கும்பல்.

ஒருபுறம், வக்ஃப் வாரியங்களிடம் ஏற்கெனவே உள்ள சொத்துகளை அபகரிக்க திட்டம் தீட்டும் பாசிசக் கும்பல் இன்னொருபுறம் வருங்காலங்களில் வக்ஃப் வாரியத்திற்கு சொத்து சேரவிடாமலும் ஒடுக்குகிறது. சான்றாக, எந்தவொரு நிலத்தையும் வக்ஃபுக்கு சொந்தமானது என்று அறிவிக்கும் முன், வருவாய், கிராம நிர்வாகம் போன்ற அரசுத்துறைகளுக்கு ஆட்சேபணைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே அந்த நிலங்களை வஃக்புக்கு வழங்கவேண்டும் என்ற திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், பாசிசமயமாகியுள்ள அரசுக்கட்டமைப்பை பயன்படுத்தி வருங்காலங்களில் வக்ஃபுகளுக்கு வழங்கப்படும் நிலங்களையும் அபகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே பாசிச நோக்கத்திலிருந்துதான் ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்ஃபுக்கு சொத்துகளை வழங்க முடியும் என்றும் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.

இத்தகைய இஸ்லாமிய விரோத மசோதாவை தாக்கல் செய்துவிட்டு, மறுபுறம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமிய பெண்கள் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என்ற திருத்தத்தையும் மேற்கொண்டு, இஸ்லாமிய பெண்களின் உரிமைக்காக போராடுவதாக நாடகமாடுகிறது காவிக் கும்பல். ஆனால், வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர்களாகவும் உயர் பொறுப்புகளிலும் இஸ்லாமிய பெண்கள் ஏற்கெனவே இருப்பதை சுட்டிக்காட்டி, காவிக் கும்பலின் வெறுப்பு பிரச்சாரத்தை பலரும் முறியடித்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் சிறுபான்மை மக்களாக உள்ள இஸ்லாமிய மக்களிடமுள்ள வக்ஃப் சொத்துகளை அவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் இஸ்லாமிய மக்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிப்பதுடன் அச்சொத்துக்களை கார்ப்பரேட் கும்பலுக்கு படையலாக்கவும் பாசிசக் கும்பல் திட்டமிட்டுள்ளது.

வக்ஃப் சொத்துகளை சூறையாடத் துடிக்கும் காவிகார்ப்பரேட் கும்பல்

நடைமுறையிலுள்ள வக்ஃப் வாரிய சட்டத்தின்படி, வக்ஃப் சொத்துகளை யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. மாறாக, வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோதான் கொடுக்க முடியும். ஆனால் மோடி-அமித்ஷா கும்பலானது, ‘‘வக்ஃப் திருத்த மசோதாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் வக்ஃப் சொத்துகளை வைத்திருந்தால் அவர் அந்த சொத்துக்கு உரிமையாளராக முடியும்’‘ என்ற திருத்தத்தை கொண்டுவந்துள்ளதன் மூலம் தனது நோக்கத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல், கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என பல கிரிமினல் கும்பல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. சான்றாக, அம்பானியின் அண்டிலியா வீட்டின் நிலமும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று குற்றச்சாட்டு உள்ளது.

ஆகவே, அரசு சொத்துகள் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் துணையுடன் அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.


படிக்க: பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!


இன்னொருபுறம், பல ஆண்டுகளாகவே வக்ஃப் வாரியத்தின் மீது பொய்-வெறுப்பு பிரச்சாரங்களை பரப்பிவரும் ஆர்.எஸ்.எஸ்-விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலின் பாசிச நோக்கமும் இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது. வக்ஃப் வாரியத்தால் வெறுமனே நிலங்கள் மட்டுமின்றி மசூதிகள், தர்காக்கள், மதரசாக்கள் என பல்வேறு அமைப்புகளும் நிர்வகிக்கப்படுகின்றன. ஒருவேளை வக்ஃப் வாரிய திருத்த மசோதா சட்டமானால் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும், மாவட்ட ஆட்சியரின் துணையுடனும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படுவது நடந்தேறும்.

ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம் போன்ற பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களிலும் பசுவளைய மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் சட்டவிரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி புல்டோசரால் இடிக்கப்படும் பயங்கரவாதம் தினந்தோறும் அரங்கேறிவரும் நிலையில் இச்சட்டத்தால் அது புதிய உச்சநிலைக்கு செல்லும். எனவே, பாபர் மசூதியை இடித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலானது இச்சட்டத்திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இனக்கலவரங்களை கட்டவிழ்த்துவிடும் சதித்திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த இந்துமுனைவாக்க நோக்கத்திலிருந்தே மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்திருத்தமானது, மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.

இத்தகைய பாசிச நோக்கத்துடன் கொண்டுவரப்படும் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுப்பது இந்தியாவில் உள்ள பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாகும். ஆனால், கடும் எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. இம்மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பியதனாலேயே பாசிசக் கும்பல் பயந்துவிட்டது, பணிந்துவிட்டது, சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றெல்லாம் இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும் பாசிச எதிர்ப்பாளர்கள் சிலரும் கருதுகின்றனர்.

ஆனால், கூட்டு குழுவால் மசோதாவின் மீது பரிந்துரைகள் வழங்க முடியுமே ஒழிய திருத்த முடியாது. எனவே, வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளுக்கு துளியும் ஜனநாயகம் வழங்காத நாடாளுமன்ற மரபுகளை மதிக்காத பாசிசக் கும்பலுக்கு எதிராக இஸ்லாமிய மக்களுடன் இணைந்து களத்தில் போரட்டத்தை கட்டியமைப்பதன் மூலமே நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க முடியும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜூலை, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 17 | 1989 ஜூலை 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆதிவாசி – மலைவாழ் மக்களின் போராட்டங்கள் பரவுகின்றன
  • ’இலங்கையிலிருந்து இந்திய ராணுவத்தை திரும்பப்பெறு!’ – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
  • ’பாவமன்னிப்பு’ அளிக்கும் பாசிச சன்னியாசி
  • விவசாயிகளின் விடுதலை போராட்டம் துவங்கிய மேற்கு சாம்பரானில் இன்னமும் கொத்தடிமைகள்
  • வாழும் உரிமை மறுக்கப்படும்போது…
  • ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் தேசியவெறிப் பத்திரிக்கைகள்
  • ஈழ விடுதலை திராவிடக் கட்சிகளின் பேடித்தனம்
  • மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அபாயம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஜூலை, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 16 | 1989 ஜூலை 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்திய இராணுவம் வெளியேற வேண்டும், இல்லையானால் இந்துமா கடலில் வீசி எறியப்படும்!
  • விவசாயிகளைப் பரிதவிக்கவிட்ட அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
  • பொதுத்தேர்தல் தயாரிப்புகள் – உத்திகள்: ஓட்டுக்கட்சிகளின் ஓட்டாண்டித்தனம்
  • 20 கோடி ரூபாய் மின்பாக்கி மோசடி!
  • ’அரிஜன்’ என்ற அவமானச் சின்னத்தை மதமாற்றம் அழித்துவிடுமா?
  • சுரங்கத் தொழிலாளர் வெளியேற்றம்! இயந்திரமயம் அரங்கேற்றம்!
  • டெல்லி மருத்துவர்கள் போராட்டம்! ஓட்டுக் கட்சி சார்பு தலைமையின் ஊசலாட்டம்!
  • சீன கொந்தளிப்பு; மனித உரிமைகள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்
  • நாகரிக சமூகத்துக்கு சவால்: பெருகிவரும் ரௌடி கும்பல்கள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஜூன், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 15 | 1989 ஜூன் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பத்திரிக்கைக் காகித விலையேற்றம் பேருந்துக் கட்டண உயர்வு
  • விவசாயிகள் விடுதலை முன்னணியின் புதிய கிளைகள் துவக்கவிழா!
  • ஈழம்: ஆக்கிரமிப்பாளருக்கு மூக்கறுப்பு!
  • வேலைவாய்ப்பும் வறுமை ஒழிப்பும் தேர்தல்காலத் தில்லுமுல்லுகள்
  • சீனாவில் கொந்தளிப்பு ஏன்? கம்யூனிசம் தோற்றுப்போனதா?
  • இராணுவம், போலீசு, ‘நீதி’மன்றம் யாருக்காக?
  • ’இடது’ – வலது லடாய்! போலிகளின் குடுமிபிடி சண்டை!
  • அக்னி: ஆதிக்க வெறிக்கு இன்னுமொரு ஆயுதம்!
  • அமெரிக்காவின் அடாவடித்தனமான புதிய நிர்பந்தங்கள்
  • போராடிய தொழிலாளருக்கு பட்டை நாமம்!
  • சியாசென் எல்லைத் தகராறு: முடிவுக்கு வராத ஒரு யுத்தத்தின் வரலாறு
  • நசிந்துவரும் நெசவுத் தொழில் அமெரிக்காவின் நரித்தனம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மே, 01-15 ஜூன் 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 13-14 | 1989 மே 16-31, ஜூன் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சீன மாணவர் கோருவது பூரண முதலாளித்துவம்தான்!
  • மே நாள் அணிவகுப்பு – பொதுக்கூட்டங்கள்
  • ராஜீவின் புதிய ஆட்சிக்கொள்கை: மத்தியிலே பாசிசம்! உள்ளூரிலே பஞ்சாயத்துகள்!
  • ஆயுட்கைதி சுட்டுக் கொலை! போலீசின் வெறியாட்டம்!
  • மறைக்கப்படும் விவசாய ‘விபத்து’கள்
  • சர்வமும் சந்தர்ப்பவாதம்! அரசியல் விபச்சாரிகள் இணைந்தனர்
  • சிந்தனையைத் தூண்டும் பாசிச கும்பலின் சாதனை!?
  • ’ரெக்ரூட்’ ஊழல்: தகர்ந்தது ஜப்பானியப் பிரமை!
  • இந்திய-சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    போரை நிறுத்தியது சீனா! பகையை வளர்த்தது இந்தியா!
  • வெளிநாடு சென்றும் தீரவில்லை அவலம்
  • விருந்து விபச்சாரம் லஞ்சம்: அரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 மே, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 12 | 1989 மே 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாசிஸ்டுகளின் ஆயுதமாகும் பஞ்சாயத்துக்கள்
  • ஈழம் பேச்சுவார்த்தைகள் அமைதிப்படை ஆக்கிரமிப்பு நோக்கம் அம்பலமானது
  • லஞ்ச ஊழல் ஓட்டுப்பொறுக்கிகளின் சட்டபூர்வ – மரபுவழி உரிமையாகிறது
  • முதலாளித்துவ நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்! போலி சோசலிச நாடுகளின் சிவப்புச் சாயம் வெளுக்கிறது
  • சொந்த மண்ணில் அகதிகளாக பஞ்சாப் மக்கள்
  • கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பு: “பொம்மை” ஆட்சி கவிழ்ப்பு! பொம்மையாட்சி திணிப்பு!
  • புற்றீசலாக கிளம்பும் புதிய நாஜிகள்
  • இந்திய-சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    தோல்வி தந்த பீதி: நடுநிலை நாயகனின் இழிசெயல் அமெரிக்க ராணுவத்திற்கு நேரு அழைப்பு
  • 18 வயதினருக்கும் வாக்குரிமை ஓட்டுச்சீட்டு தேவையில்லை! அதிகாரம்தான் வேண்டும்!
  • போலிகளின் புதிய குரு!
  • தீராத நோயாக குடிநீர் பிரச்சினை! தீர்க்கக் கோரி ஆர்ப்பாட்ட இயக்கம்!
  • மே நாள் சூளுரை!
  • கேரள ரயில் விபத்து: அரசின், குரூர கேலி தீர்ப்பு
  • திருச்சி காந்தி மார்க்கெட்டின் அவலங்கள்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கையூர் தியாகிகளின் 82-ஆம் ஆண்டு நினைவு நாள்!

கையூர் தியாகிகளின் 82-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களை நினைவுகூரும் வகையில் மார்ச் 29, 2018 அன்று வினவு தளத்தில் வெளியான கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் !
விவசாயிகளே விழித்தெழுங்கள் !

கையூர். கேரளத்தின் வடகோடியில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு குட்டி கிராமம். அந்தக் கிராமம் தான் விவசாயிகள் இயக்கத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.

நம்பியார், நாயனார் என்ற இரண்டு நிலப்பிரபுக்களின் இரும்புப் பிடியில் புழுக்களைப் போல வாழ்ந்து கொண்டு இருந்தனர் அந்தக் கிராமத்தின் கூலி-ஏழை விவசாயிகள்.

நிலப்பிரபுக்களிடம் அனுமதி வாங்காமல், யாரும் திருமணம் கூட செய்ய முடியாது. அனுமதியுடன் சேர்த்து திருமணச் செலவுகளுக்காக பத்து ரூபாயோ பதினைந்து ரூபாயோ கடனாகத் தருவார் நிலப்பிரபு. கடனுக்கு வட்டியாக நிலப்பிரபுக்கள் கூறும் ஏவல்களைச் செய்ய வேண்டும். மேலும், தமது தோட்டத்தில் தான் விளைவித்த நெல்லையும், காய்கறிகளையும், பழங்களையும் அவருக்கு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். பின் சில ஆண்டுகள் கழித்து வட்டிக்கும் முதலுக்கும் தமது துண்டு நிலத்தை நிலப்பிரபுக்களிடம் ஒப்படைத்து அவர்காட்டும் தாள்களில் ரேகை பதிய வேண்டும். பின் அவரிடமே பண்ணையடிமையாக காலம் கழிக்க வேண்டும். நிலப்பிரபு நல்ல மன நிலையில் இருந்தால், அவரிடமே நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கலாம். குத்தகையாக விளைச்சல் முழுவதையும் செலுத்த வேண்டும். நிலப்பிரபு பெரிய மனது வைத்து ஏதோ கொஞ்சம் நெல்லை திருப்பித் தருவார். காலில் விழுந்து அந்தக் கருணையை ஏற்க வேண்டும்.

கையூர் தியாகிகள் நினைவு தூண்

இத்தகைய சூழலில் தான் கம்யூனிஸ்டுகள் அந்த கிராமத்திற்கு அறிமுகமானார்கள். அவர்களின் வழிகாட்டலின் கீழ் சங்கம் கட்டினார்கள் கூலி-ஏழை விவசாயிகள். உழுபவனுக்கு நிலம் என முழங்கினார்கள். குத்தகை விவசாயிகள் அறுவடையைக் கைப்பற்றத் துணையாக நின்றது சங்கம். விவசாயிகள் தமது தேவைகளைத் தீர்த்துக் கொள்ள வழிகாட்டியது சங்கம்.

மடித்துக் கட்டிய வேட்டியுடன், தோளில் போட்ட துண்டுடன், காலில் செருப்பு அணிந்து நம்பியார், நாயனார் முன் நடக்க வைத்தது சங்கம். திருமணம் முதல் மரணம் வரை நிலப்பிரபுக்களிடம் கையேந்த வேண்டிய நிலையை ரத்து செய்தது சங்கம்.

நிலப்பிரபுக்களின் சுரண்டித் தின்ற வயிறு எரிந்தது. வெள்ளை எஜமானின் காலில் விழுந்து கெஞ்சினார்கள் ஜென்மிக்கள். (ஜென்மி = நிலப்பிரபு). “விவசாய சங்கம் கட்டி, பிரிட்டிஷ் சர்க்கார் ஒழிகன்னு கோஷம் போடறானுங்க” என வெள்ளையனின் கால்களை நக்கினார்கள்.

ஒரு போலீசுக்காரனை ஜென்மீக்களின் காவலாக அனுப்புகிறது பிரிட்டிஷ் அரசு. விவசாயிகளின் பேரணியை மறித்து பாலர் சங்கத் தொண்டன் ‘சூரிக்கண்டன் கிருஷ்ணன்’ என்ற சிறுவனை எட்டி உதைக்கிறான் அந்தப் போலீசு சுப்பராயன். வெகுண்டெழுந்த விவசாயிகளின் எதிர்ப்பை பார்த்து அஞ்சி ஓடி ஆற்றில் குதித்து மூழ்கிச் சாகிறான் சுப்பராயன் எனும் அந்த கைத்தடி.

போலீஸ் சுப்பராயனின் சாவுக்குப் பழிதீர்க்க கையூர் வருகிறது போலீசுப் படை. வாச்சாத்தி, ஜாலியன் வாலாபாக், தாமிரபரணி, கொடியன்குளங்கள் அரங்கேறுகின்றன. வீடுகள் கொளுத்தப் படுகின்றன, விவசாயிகளின் மண்டைகள் உடைக்கப் படுகின்றன. உயிரை விட்டவர்கள் கணக்கும், பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள் கணக்கும் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. எஞ்சியவர்களைக் கைது செய்து வழக்குப் போடுகிறது அரசு. விவசாய சங்கத்தின் தலைவர்களும் சரணடைகின்றனர்.

1) மடத்தில் அப்பு (சங்கத் தலைவர்)
2) கோயில்தட்டில் சிருகண்டன் (சங்கச் செயலாளர்)
3) பொடவரா குஞ்ஞம்பு (சங்கத் தொண்டர்)
4) பள்ளிக்கல் அபூ பக்கர் (தொண்டர் படை தலைவர்)
5) சூரிக்கண்டன் கிருஷ்ணன் (பாலர் சங்கத் தலைவர்)

ஆகிய ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கிறது நீதிமன்றம். பின்னர் சூரிக்கண்டன் கிருஷ்ணன் சிறுவர் என்பதால் அவரது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது.

மற்ற நால்வரையும் 29 மார்ச், 1943 ஆம் தேதி கண்ணூர் சிறையில் தூக்கில் ஏற்றிக் கொன்றது பிரிட்டிஷ் அரசு. தூக்குத் தண்டனைக்கு சிலநாட்கள் முன்பாக சிறையில் அவர்களைச் சந்திக்கிறார்கள் சில தோழர்கள்.


மடத்தில் அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு, அபுபக்கர்

அப்போது,”மக்களுக்காக நான் என்னவெல்லாம் செய்தேனோ, அதை எல்லாம் எனக்குக் கற்றுத் தந்தது கட்சிதான். நான் என் கடமையைச் சரியாகச் செய்ததாகக் கட்சி கருதினால், அதுவே எனக்குப் போதும்” என்கிறார் சங்கச் செயல் வீரர் தோழர் குஞ்ஞம்பு.

“நமது தியாகிகளின் வாழ்வில் இருந்து தான் நாங்கள் ஊக்கம் பெற்றோம். அவர்களோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்கும் என கனவிலும் கருதவில்லை. சாவதற்கு நாங்கள் அஞ்சவில்லை என தோழர்களிடம் கூறுங்கள். என் அம்மா மிகவும் வயதானவர். அவருக்கு ஆறுதல் கூறுங்கள். என் தம்பிகள் மிகவும் சிறியவர்கள். அவர்களை கட்சி பணி செய்யச் சொல்லிக் கொடுங்கள்”, என்கிறார் தொண்டர் படைத் தலைவர் தோழர் அபூ பக்கர்.

“கட்சி வளர்ந்து வருகிறது என்ற நல்ல செய்தியோடு வந்திருக்கிறீர்கள். கூடுதல் பலத்தோடு நாங்கள் தூக்குமேடை ஏறுவோம். நாங்கள் கட்சியில் சேர்ந்ததே இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காக உழைக்கவும் சாகவும் தானே”, என்கிறார் சங்கத் தலைவர் தோழர் அப்பு.

“நாங்கள் சாதாரண விவசாயிகளின் மகன்கள். எங்கள் நான்கு பேரைத் தூக்கில் போடலாம். ஆனால், இந்தியாவிலோ கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அழித்து விட முடியாது. அவர்களின் வாழ்விற்கும் விடுதலைக்கும் கூடுதலாக உழைக்க முடியவில்லையே என்பது தான் கவலையாக இருக்கிறது”, என்கிறார் சங்கச் செயலாளர் தோழர் சிருகண்டன்.

இந்திய விவசாயிகள் இயக்கத்தின் முதல் தியாகிகளான அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு, அபூ பக்கர் தூக்கு மேடை ஏறி, இதோ எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி டெல்டா விதர்பா, பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் என நாடெங்கிலும் வயல்வெளிகளில் விவசாயிகளின் பிணங்கள் முளைக்கின்றன. இன்றோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிகிறது. மோடி அரசின் துரோகங்களுக்கு நாம் வைக்கும் முற்றுப்புள்ளி எப்போது? கையூர் தியாகிகளின் நினைவுநாளில் உறுதி பூணுவோம்.

குறிப்பு:

  1. கையூர் போராட்டம் பற்றி கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா எழுதிய “சிரஸ்மரனே” நாவல் தமிழில் “நினைவுகள் அழிவதில்லை” என பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. என்.சி.பி.ஹெச் வெளியிட்டு உள்ளது.
  2. “மீன மாசத்திண்டே சூரியன்” கையூர் போராட்டம் பற்றிய மலையாளத் திரைப்படம். யூ டியூபில் கிடைக்கும்.
  3. “நினைவுகள் அழிவதில்லை” கையூர் போராட்டம் பற்றிய தமிழ்த் திரைப்படம், யூ டியூபில் கிடைக்கும்.


இரணியன் பால்ராஜ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 15-30 ஏப்ரல், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 11 | 1989 ஏப்ரல் 15-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நேபாளத்துக்கு எதிராக இந்தியப் பொருளாதார முற்றுகை – இன்னொரு பிராந்திய ஆதிக்க – விரிவாக்க நடவடிக்கை
  • இலங்கை: தொடரும் வெகுஜனப் படுகொலை
    திசை திருப்ப சமாதான நாடகம்
  • சாதிவெறிக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடும் கலப்புமணத் தம்பதிகளின் கதை!
  • கீழ்வெண்மணி வழியில் கரம்சேடு: ‘அரிஜன’ங்களைக் கொன்ற நிலப்பிரபு அழித்தொழிக்கப்பட்டான்!
  • இந்திய – சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    சீனா பதிலடி தந்தது; இந்தியா சீண்டியது: படைகளைப் பலியிட்டு தளபதி தப்பி ஓட்டம்!
  • ’ஐயா! என்னைக் கொல்ல சதி!’ கொலைகாரர்கள் சதிகாரர்கள் அலறல்!
  • பழிவாங்குதல், மிரட்டல், பொய் வழக்கு, கொத்தடிமைத்தனம்!
    டி.வி.எஸ். நிர்வாகத்தின் அட்டூழியம்!
  • கட்டணக் கழிப்பிட ஊழல்: பினாமிகள் மூலம் அதிகார வர்க்கம் அடிக்கும் கொள்ளை!
  • குழந்தைகளுக்கு ‘முட்டை’! அமைப்பாளருக்கு சத்துணவு!
  • மின்வெட்டு ஏன்?
  • பனிமலையில் தொடரும் இன உரிமைப் போர்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்

சூழலியல் நெருக்கடி, சூழலியல் சீர்கேடுகள் குறித்து தமிழில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும், மார்க்சியக் கண்ணோட்டத்தில் வெளிவந்துள்ள நூல்கள் மிக அரிதே .அந்த வகையில் பத்தாண்டுகளுக்கு முன்பு ,விடியல் பதிப்பகம் கொண்டுவந்த “மார்க்சும் சூழலியலும்” என்ற நூல் மிகவும் முக்கியமானது. ஏறக்குறைய அதற்குப் பிறகு சூழலியல் பிரச்சினையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் கையாளும் வகையில் வெளி வருகின்ற ஒரே நூல் “சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள்” என்ற இந்த நூலகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரையான “சூழலியல் நெருக்கடி: ஏகாதிபத்தியக் கட்டமைப்பைத் தகர்த்து சோசலிசத்தை நிறுவுவதே தீர்வு”, சூழலியல் நெருக்கடியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்குகிறது.

முதலாளித்து உற்பத்தி முறைதான் இயற்கையிலிருந்து பிரிந்த பொருளுற்பத்திக்கு அடிப்படையானதாகும். இதுதான் சூழலியல் நெருக்கடியின் ஊற்றுக்கண்ணாகும்.

அந்த வகையில், சமகால சுற்றுச்சூழல் நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் இயற்கையை பாதுகாப்பதன் மூலம் மனித குலத்தை பாதுகாக்கவுமான அடிப்படையை இக்கட்டுரை விளக்குகிறது.

இத்துடன் சூழலில் நெருக்கடி தொடர்பாக சமகால நிகழ்வுகள் சிலவற்றையொட்டி புதிய ஜனநாயகம் இதழிலும் வினவு இணையதளத்திலும் வெளிவந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக நெருக்கடிக்கு காரணமான முதலாளித்துவமும் அதன் அரசுகளும் மக்களை பாதுகாப்பதில் சிறிதும் பொறுப்பும் அக்கறையும் இன்றி இருப்பதை இந்த கட்டுரைகள் விளக்குகின்றன.

சூழலியல் நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தாமே சுமக்க வேண்டிய நிர்கதியான நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதையும் இக்கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.

சூழலியல் நெருக்கடிக்குக் காரணமான ஏகாதிபத்திய நாடுகளின் அரசுகளின் தலைமையில் நடைபெறும் சி.ஓ.பி எனப்படும் “கிளாஸ்கோ பருவநிலை மாநாடு” என்ற ஏகாதிபத்திய அரட்டை மடத்தின் உண்மை முகத்தை இந்நூல் தோலுரித்துக் காட்டுகிறது.

முதலாளித்துவத்தாலும் சூழலியல் நெருக்கடிக்குக் காரணமான ஏகாதிபத்தியங்களாலும் அவற்றின் அடிவருடி அரசுகளாலும் எந்தவகையிலும் இந்நெருக்கடிகளுக்குத் தீர்வைத் தரமுடியாது. சோசலிசத்தாலும் அதனால் வழிநடத்தப்படுகின்ற உழைக்கும் மக்கள் அரசுகளாலும்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரமுடியும் என்பதை இந்நூல் விளக்குகிறது.

சூழலியல் நெருக்கடிக்கு எதிராகவும் இயற்கையைப் பாதுகாப்பதற்காகவும் போராடுபவர்களுக்கு இந்நூல் சிறந்த தொடக்கநிலை நூலாக அமையும்.

நூலின் பெயர்: சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள்

முதற்பதிப்பு: ஜனவரி 2025

வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049

தொலைபேசி எண்: 97915 59223

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

அச்சாக்கம்: எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24

விலை: ரூ. 100

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும் | நூல்

1990-களின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற நாசகரக் கொள்கையின் விளைவாக தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வேலையின்மை வளர்ந்து, ரிசர்வ் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் பெருகியுள்ளது. நவீனமயமாக்கம், டிஜிட்டல்மயமாக்கத்தின் விளைவாக இந்தியத் தொழிலாளர்களின் ஊதிய சராசரி தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ஐ.எல்.ஓ.) டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனமும் (ஐ.ஹெச்.டி.) இணைந்து வெளியிட்டுள்ள “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை” தெரிவித்துள்ளது.

இந்த புதிய நிலைமைகளில், மேலும் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதற்கும் தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து வர இருக்கின்ற தாக்குதல்களுக்கும் பரந்த அடித்தளத்தை இந்த சட்டங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன.

2002-ஆம் ஆண்டில் பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டாவது தொழிலாளர் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றுதான் 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு அல்லது ஐந்து சட்டங்களாக சுருக்குவதாகும். அன்றைக்கு பத்தாண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரசு அரசு அதனை நிறைவேற்றுவதில் மந்தப் போக்கைக் காட்டியது; மோடி தலைமையிலான அரசுதான், இதில் தீவிரம் காட்டியிருக்கிறது என்று தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மெச்சிக்கொள்கிறது மோடி-அமித்ஷா கும்பல்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறை, கிக் வேலைமுறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அதிகரித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என ஆகப் பெரும்பான்மையினர், தங்களுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற அவலநிலையில் வாழ்கின்றனர். இந்நிலையில், தொழிலாளர் சட்டங்களால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவது இயல்பானதே. ஆனால், பழைய 44 சட்டங்களைப் போல தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்பான சட்டங்கள் அல்ல, புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்.

 

நூலின் பெயர்: 2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும்

முதற்பதிப்பு: ஜனவரி 2025

வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049

தொலைபேசி எண்: 97915 59223

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

அச்சாக்கம்: எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24

விலை: ரூ. 130

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஏப்ரல், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 10 | 1989 ஏப்ரல் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தாக்கர் கமிஷன் அறிக்கை: அரசியல் மிரட்டலுக்கான ஆயுதம்!
  • வாசகர் கடிதம்
  • கேரளத்தில் தியாகி ராஜன் சிலை உடைப்பு
  • ரஷியாவில் உணவுப் பஞ்சம்: கோர்ப்பசேவின் சீர்திருத்தங்கள் சாயம் வெளுக்கிறது!
  • சட்டமன்ற ரௌடித்தனங்கள்: அவமானமாகக் கருதவில்லை; அவசியமெனச் செய்கிறார்கள்!
  • மேலைநாகரிகத்தின் பாசாங்கு அம்பலமானது
  • ஒரு விடியலை நோக்கி…
  • இந்திய – சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    இந்திய அரசின் வெற்றிக் கனவுகள், இமாலயத் தவறுகள், ஆத்திர மூட்டல்கள்
  • கொத்தடிமைத்தனம் குழந்தை உழைப்பாளிகள்
  • ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் (IRPD): பலமுனை, பலகோடி மோசடிகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மார்ச், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 9 | 1989 மார்ச் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விசுவாசிகள் நியமனம் | கவர்ச்சி பட்ஜெட் | பஞ்சாப்: பாசாங்கு செய்யும் தீர்வுகள்
  • வை.கோ.வின் ஈழப் பயணம் மீண்டும் “ரா”வின் கைவரிசை!
  • செகந்திராபாத் சதி வழக்கு: புரட்சியாளர்கள் விடுதலை புதிய அடக்குமுறை தொடர்கிறது
  • ”அமைதிப் படை”யின் அக்கிரமங்கள்…. குமுறுகிறது யாழ் பல்கலைக்கழகம்!
  • ”சாத்தானின் கவிதைகள்” தடையும் தண்டனையும்
  • சட்டசபைக்குள் கட்டிப்புரண்டு சண்டை! கவர்னர் கெரோ செய்யப்பட்டார்! மே.வங்க சட்டமன்ற ரௌடித்தனங்கள்!
  • மேடைக்கு மார்க்சியம்! பிழைப்புக்கு வட்டித்தொழில்!
  • கோர்ட்டுகளில் நீதி கிடைக்குமா?
  • சாராய ஆறு பொங்குகிறது!
  • இந்திய – சீன எல்லை தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    இந்தியாவில் போர்க்கூச்சல்கள்! இராணுவத்துக்குள் பதவிச் சண்டைகள்!
  • சிறைக் கைதிகளின் உரிமைக்கான போராட்டம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜாகீர் உசேன் கொலை: வக்ஃப் வாரிய சொத்திற்காக அரங்கேறிய கொடூரம் | தோழர் வெற்றிவேல் செழியன்

ஜாகீர் உசேன் கொலை:
வக்ஃப் வாரிய சொத்திற்காக அரங்கேறிய கொடூரம் | தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வடமாநிலத்தவர் | தோழர் வெற்றிவேல் செழியன்

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வடமாநிலத்தவர் | தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram