1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 20-22 | 1992 செப்டம்பர் 1-31, அக்டோபர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!
பத்திரிகை செய்தி
சென்னை பல்லாவரத்திற்கு அருகில் உள்ள அனகாபுத்தூரில் தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதியில் வாழும் உழைக்கும் மக்களின் வீடுகளை புல்டோசர் இயந்திரங்களைக் கொண்டு அராஜகமாக இடித்து தள்ளி வருகிறது திமுக அரசு. இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த சில நாட்களாக தாம்பரம் மாநகர துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில் அனகாபுத்தூரில், 300க்கும் மேற்பட்ட போலீசை குவித்து சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் மூன்றாம் தெரு, காயிதேமில்லத் நகர் போன்ற பகுதிகளில் வாழும் 700க்கும் மேற்பட்ட வீடுகளையும் இடித்து 3500 க்கும் மேற்பட்ட மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி வருகிறது. மேலும் அப்பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயின்று வரும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அனகாபுத்தூரில் வாழும் மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பட்டா வைத்துள்ள மக்களின் வீடுகளையும் இடிப்பதாக அடாவடியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கிறோம் என்று கூறுகிறது தமிழ்நாடு அரசு. அதே நீதிமன்றத்தில் அதே மக்கள் தொடுத்த வழக்கு இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் அவர்கள் போட்ட மேல் முறையீடு நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு அரசோ புதிய நிறுவனத்தை CRTCL உருவாக்கி அந்த நிறுவனத்தின் மூலம் டென்டர் விடப்பட்டு பிரைவேட் கம்பெனி PRIME MERIDIAN SURVEYS PRIVATE LIMITED மூலம் சர்வே எடுத்து அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து உள்ளனர் என்று சதித்தனமாக புதிதாக ஒரு சர்வே மேப்பை தயார் செய்து அதன் மூலம் பகுதி மக்களை அப்புறப்படுத்தி வருகிறது.
புதிதாக எடுக்கப்பட்ட சர்வேயின்படி உழைக்கும் மக்கள் வாழ்கின்ற பகுதியை மட்டும்தான் நீர்வழி ஆக்கிரமிப்பு பகுதி என்று வரையறுத்து உள்ளது. ஆனால் ஆற்றை எதிர்புறத்தில் ஆக்கிரமித்துள்ள காசா கிராண்ட் நிறுவனத்துக்கு பட்டா வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு இதுக் குறித்தான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளது.
அடையார் ஆற்றை முழுமையாக புனரமைப்பு செய்வது என்று கூறுவதெல்லாம் பச்சை பொய். அது இவர்களின் நோக்கமும் இல்லை. ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.
சமூக நீதி, திராவிட மாடல் எனப் பேசும் தி.மு.க. அரசும் ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 போன்ற திட்டங்கள் மூலம் புதிய நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் காசா கிராண்ட், ஜி ஸ்கொயர், அதானி எண்டர்பிரைசஸ் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உழைக்கும் மக்கள் நிலங்களை அபகரித்து தருகின்றது. சொந்த நாட்டு மக்களை அகதியாக்கும் வேலையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இதை கண்டித்து மே 17 இயக்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் களத்தில் நின்று மக்களோடு போராடி வருகிறோம். அனகாபுத்தூரில் மக்களுக்காக அனைத்து ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது ஒன்றே தீர்வு!
தோழமையுடன்
தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
73584 82113
சுக்மா மாவட்டத்தில் துணை இராணுவப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்கள்
“நாட்டில் நக்சலிசம் 2026-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதிக்குள் ஒழிக்கப்படும் என்பதை நான் அவையில் பொறுப்புடன் கூறுகிறேன்” கடந்த மார்ச் 21-ஆம் தேதி மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய வார்த்தைகள் இவை.
நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்களையும் கனிமவளக் கொள்கைக்கு எதிராக போராடும் மாவோயிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களையும் ஈவிரக்கமின்றி, கொடூரமாக நரவேட்டையாடி வருகிறது பாசிச மோடி அரசு. சத்தீஸ்கரின் பஸ்தர், ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் மோடி அரசின் இத்தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர்.
குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 டிசம்பரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தப் பிறகு, “ஆபரேஷன் ககர்” (Operation Kagar) என்ற பாசிச திட்டத்தின் மூலம் படுகொலை செய்யப்படும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. “தெற்காசிய பயங்கரவாத போர்டல்” (South Asia Terrorism Portal) என்ற இணையதளத்தின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் 235 மாவோயிஸ்ட் தோழர்களும், 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 140 தோழர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 23 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசு நூற்றுக்கணக்கான மவோயிஸ்டுகளை கொன்று குவித்துள்ளது. உண்மையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்புள்ளி விவரங்களை விட அதிகமாகவே இருக்கும்.
அதேசமயம், மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் அப்பாவி பழங்குடியின மக்களையும் கேள்விகிடமற்ற வகையில் பாசிச மோடி அரசு கொன்று குவித்து வருகிறது. “சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து 140-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் மாவோயிஸ்டுகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்” என்று “ப்ரண்ட்லைன்” (Frontline) இதழுக்கு அளித்த பேட்டியில் காந்திய ஆர்வலரான ஹிமான்ஷு குமார் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் உள்நாட்டுப் போர்
சத்தீஸ்கர் மாநிலம் கனிம வளங்கள் நிறைந்த மாநிலமாகும். இந்தியாவின் இரும்புத் தாதுவில் 38 சதவிகிதம், அலுமினியத் தாதுவில் 20 சதவிகிதம், நிலக்கரியில் 17 சதவிகிதம் சத்தீஸ்கரில் உள்ளது. மேலும், சமீபத்தில் லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களும் சத்தீஸ்கரில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இந்த கனிமங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு அங்கு வாழும் பழங்குடி மக்களும், கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடும் மாவோயிஸ்டுகளும் தடைக்கல்லாக உள்ளனர். எனவே, இவர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தி கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே ஆபரேஷன் ககர் என்ற சதித்திட்டத்தை ஜனவரி 2024-இல் இருந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சத்தீஸ்கரில் செயல்படுத்தி வருகிறது.
ககர் திட்டத்தின்படி, சத்தீஸ்கரில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இப்படைகள் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கைக்கோள்கள் மூலம் பழங்குடி மக்களின் சிறு நடவடிக்கைகளைக் கூட கண்காணித்து அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றன. பழங்குடி மக்களை ஈவிரக்கமின்றி அழித்து வருகின்றன. பசுமையான காடுகள் பாசிச கும்பலின் நரவேட்டையால் சிவந்து போயிருக்கின்றன. துப்பாக்கி மற்றும் குண்டு வெடிச் சத்தங்கள் நாள்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இத்திட்டத்தினால், சொந்த நாட்டு பழங்குடி மக்களை கொல்லும் கூலிப்படைகளாக துணை இராணுவப் படைகள் மாற்றப்பட்டுள்ளன. வெறிபிடித்த நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை அள்ளிவீசுவதைப் போல, மாவோயிஸ்ட் தோழரையோ அல்லது ஏதேனும் ஒரு பழங்குடி நபரையோ மாவோயிஸ்ட் என்று கூறி துணை இராணுவப் படை கொன்றால், அப்படைக்கு 2 முதல் 25 லட்சம் ரூபாய் பணத்தை பா.ஜ.க. அரசு அள்ளிவீசி வருகிறது. இதன்விளைவாக, அப்பாவி பழங்குடி பெண்களை துணை இராணுவப் படைகள் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொன்றுவிட்டு மாவோயிஸ்ட் என்று கணக்கு காட்டும் கொடூரங்களும் பஸ்தரில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பழங்குடி மக்களை மலைகளில் விரட்டியடிப்பதற்கு, பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாக துணை இராணுவப் படைகள் பயன்படுத்துகின்றன.
மேலும், ககர் திட்டத்தின்கீழ் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளன. பஸ்தரில் மட்டும் 182 இடங்களில் தற்காலிக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவ முகாம்கள் நேத்ரா 3, பாரத் ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் மக்களைத் தொடர்ந்து கண்காணிக்கின்றன. மக்களின் சிறு நடவடிக்கைகளைக் கூட கண்காணித்து புகைப்படங்கள் எடுக்கின்றன. மக்களிடையேயான உரையாடல்கள், தொலைபேசி அழைப்புகள் கூட பதிவு செய்யப்படுகின்றன. அதாவது பா.ஜ.க. அரசானது எதிரி நாட்டுப் படைகளை கண்காணிப்பதைப் போல பழங்குடி மக்களை கண்காணிக்கிறது.
அதேபோல, பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேல் பயன்படுத்தும் வெடிபொருட்களை சுமந்து செல்லும் ஹெரான் என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை இப்பகுதிகளில் மோடி அரசு பயன்படுத்துகிறது. ஏப்ரல் 7, 2023 அன்று பிஜாப்பூர் மாவட்டத்தின் மோர்கெமெட்டா மலைகளில் அமைந்துள்ள நான்கு கிராமங்களில் ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இவ்வாறு, போரில் அந்நிய நாட்டு படைகள் மீது குண்டுகளை வீசுவதைப் போல, சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
மேலும், இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இராணுவ முகாம்களை ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையங்களாக (Integrated Development Centres) மாற்றும் முயற்சியிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மையங்களில் பழங்குடி மக்களுக்கான குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய இராணுவ முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்று மோடி அரசு விளம்பரம் செய்கிறது. மாவோயிஸ்ட் அபாயத்தினால் பழங்குடி மக்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை, அதனாலேயே ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையங்களை உருவாக்குவதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால், பழங்குடி மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் அடைத்து வைத்து அவர்கள் மீது நிரந்தர ஒடுக்குமுறையை செலுத்தவே மோடி அரசு இந்த மையங்களை உருவாக்கி வருகிறது.
இத்தகைய இராணுவமயமாக்க நடவடிக்கைகள் மூலம், சுரங்க நடவடிக்கைகளுக்காக பழங்குடி மக்களிடமிருந்து அவர்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு, அம்மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளிலேயே அகதிகளாக மாற்றப்படுவார்கள்.
மேலும், மோடி அரசின் பழங்குடியின மக்கள் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பா.ஜ.க. சார்பு ஊடகங்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் ஊடகங்கள் மற்றும் நடுநிலை ஊடகங்கள் என்று கூறிக்கொள்பவை கூட செய்திகளை வெளியிடுவதில்லை. இதன்மூலம், இந்த ஊடகங்கள் கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு துணைபோகின்றன. மாறாக, சமூக அக்கறையுள்ள சில ஊடகங்கள் மட்டுமே இச்செய்திகளை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.
அம்பானி – அதானிகளின் கனிம வளக் கொள்ளைக்கான போர்
சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்கள் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஹஸ்தியோ அரந்த் காடுகளில் அதானி நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் பர்சா கிழக்கு மற்றும் காந்த பாசன் நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சத்தீஸ்கர் வனத்துறை பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அளித்த அறிக்கையின்படியே, 2024-ஆம் ஆண்டில் ஹஸ்தியோ அரந்த் காடுகளில் உள்ள 81,866 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால், உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக போராடும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சுரங்க விரிவாக்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் மீது கொடிய ஒடுக்குமுறைகளை செலுத்தியே விரிவாக்க பணிகளை சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், சத்தீஸ்கரில் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்கள் விரிவடையும் வகையில் அதானி குழுமமானது பல துறைகளில் முதலீடு செய்து வருகிறது. சான்றாக, கடந்த ஜனவரி 12-ஆம் தேதி சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாயை அவரது இல்லத்தில் சந்தித்த அதானி, ராய்ப்பூர், கோர்பா, ராய்கரில் உள்ள தன்னுடைய அனல் மின்சார உற்பத்தி ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.60,000 கோடி முதலீடு செய்வதாகவும், சிமெண்ட் ஆலைகளின் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்காக ரூ.5,000 கோடி முதலீடு செய்வதாகவும் அறிவித்திருக்கிறார்.
அதேபோல, சத்தீஸ்கரில் சமீபமாக லித்தியம், சுண்ணாம்புக் கல், இரும்புத் தாது, பாக்சைட், தங்கம், நிக்கல்-குரோமியம், கிராஃபைட் உள்ளிட்ட தனிமங்கள் புதைந்திருக்கும் இடங்களைக் கண்டறிந்து ஏலம் விடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாட்டிலேயே முதல் லித்தியம் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை சத்தீஸ்கர் அரசு வழங்கியிருக்கிறது. சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கட்கோரா லித்தியம் தொகுதியில் சுரங்கம் அமைக்க கொல்கத்தாவை தளமாகக் கொண்ட மைக்கி சவுத் மைனிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இப்பகுதியில் 250 ஹெக்டேர் பரப்பளவில் லித்தியம் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கனிம வளச் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்கள், அமைப்புகள் மீது பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தியே சத்தீஸ்கர் அரசானது கனிம வளச் சுரண்டலை நிகழ்த்தி வருகிறது. ஹந்தியோ அரந்த் காடுகளை அழித்து நிலக்கரி சுரங்களை அமைப்பதற்கு எதிராக “ஹஸ்தியோ அரந்த் பச்சாவ் அந்தோலன்” என்ற அமைப்பின் தலைமையில் போராடிவரும் சல்ஹி, ஹரிஹர்பூர், காட்பரா, ஃபதேபூர் ஆகிய கிராம மக்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறைகளை செலுத்தி வருகிறது. பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் “மூலவாசி பச்சான் அபியான்” என்ற அமைப்பை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சட்டவிரோத அமைப்பு என்று தடை செய்துள்ளது.
ஆகவே, இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க. அரசானது சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது உறுதியாகிறது.
மோடி அரசே, பழங்குடிகள் மீதான போரை நிறுத்து என முழங்குவோம்!
சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீது அரசின் தாக்குதல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால், மார்ச் 28 அன்று மாவோயிஸ்ட் கட்சி, “அரசு மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், புதிய இராணுவ முகாம்களை நிறுவுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும்” கடிதம் வெளியிட்டிருந்தது. ஆனால், மாநில அரசானது மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்காமல், அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசின் மறுவாழ்வுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு சரணடைய வேண்டும் என்று தனக்கே உரிய பாசிசத் திமிருடன் பதிலளித்துள்ளது. இதன்மூலம், பழங்குடியின மக்கள் மீது உள்நாட்டுப் போரை தொடுத்து கனிம வளங்களை சூறையாட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது தெளிவாகிறது.
ஆனால், சத்தீஸ்கர் மலைகளிலிருந்து பழங்குடி மக்கள் விரட்டியடிக்கப்பட்டு கனிம வளங்கள் சூறையாடப்படுவது அம்மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. தற்போது சத்தீஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் நடக்கும் இக்கனிமவளக் கொள்ளை நாளை நாடுமுழுவதும் விரிவடையும்.
ஏற்கெனவே, கனிம வளக் கொள்ளைக்காக மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் தூண்டப்பட்ட இனக்கலவரம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட தமிழ்நாட்டின் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மக்கள் எதிர்ப்பினால் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதன் பின்னணியிலும் லித்தியம் உள்ளிட்ட அரிய வகைத் தனிமங்களை கொள்ளையடிப்பதற்கான சதித்திட்டம் உள்ளது.
ஆகவே, சத்தீஸ்கரின் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக ஆபரேஷன் ககர் என்ற பாசிச இராணுவ சர்வாதிகாரத் திட்டமானது மாவோயிச பீதியூட்டி அமல்படுத்தப்படுகிறது என்றால், நாட்டின் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில சூழலுக்கேற்ப இக்கனிம வள சூறையாடலுக்கான திட்டம் அரங்கேற்றப்படும்.
எனவே, கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் பாசிச பயங்கரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டியது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் கடமையாகும்.
அதேசமயம், பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொள்கின்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலைப் பற்றி நாடாளுமன்றத்திலோ பத்திரிகையாளர்கள் சந்திப்பிலோ கூட பேச மறுக்கின்றனர். இதன் மூலம் பழங்குடி மக்கள் மீதான பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு மறைமுகமாக துணைபோகின்றன. தங்களுடைய கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையிலிருந்தே இவ்வாறு செயல்பட்டு வருகின்றன.
ஆகவே, பாசிச மோடி அரசின் பழங்குடி மக்கள் மீதான இந்த உள்நாட்டுப் போருக்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் நாடு முழுவதும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்கள் மூலம் பழங்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மாவோயிஸ்டுகளுடன் அமைதி பேச்சுவார்த்தைக்குச் செல்ல பாசிச மோடி அரசை நிர்பந்திக்க வேண்டும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 17-19 | 1992 ஜூலை 16-30, ஆகஸ்டு 1-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க-வையும் அதன் தலைவர்களையும் அவமதித்ததை பொறுத்துகொள்ள முடியாமலேயே எடப்பாடி இம்முடிவை எடுத்ததாக அச்சமயத்தில் பலரும் பேசினர். அ.தி.மு.க. திடீரென புனிதமடைந்து விட்டதை போன்று, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி அக்கட்சிக்கு ஆதரவளித்தார்; எஸ்.டி.பி.ஐ. கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு சென்றது. ஜனநாயக சக்திகளில் ஒரு பிரிவினர் கூட இக்கூட்டணி முறிவை பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென சந்தர்ப்பவாதமாக கருத்து தெரிவித்தனர்.
ஆனால், 2023 அக்டோபர் மாத புதிய ஜனநாயகம் இதழில் “கூட்டணியை முறித்த எடப்பாடி: சுயமரியாதைத் தூண்டுதலா? எலும்புத் துண்டுக்கான சீற்றமா?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில், எடப்பாடி பழனிச்சாமியின் அடித்தளமாக உள்ள கொங்கு மண்டலத்தையும் அ.தி.மு.க-வின் கட்சி கட்டமைப்பையும் அண்ணாமலை அபகரிக்க முயல்வது மட்டுமே எடப்பாடியின் சீற்றத்திற்கு காரணம் எனவும் இது சுயமரியாதை தூண்டுதலோ, பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்தப்படக் கூடியதோ அல்ல எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அவசர அவசரமாக அண்ணாமலையை பதவி விலகச் செய்துவிட்டு அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி அமைத்திருப்பதானது புதிய ஜனநாயகத்தின் கூற்றை நிரூபித்திருக்கிறது.
புஸ்வானமாகும் மோடி-அமித்ஷா கும்பலின் வியூகங்கள்
‘வியூகம்’ என்ற பெயரில் பார்ப்பனிய சூதுகளாலும் சதிகளாலும் பல மாநிலங்களில் ஆட்சிகளை கவிழ்த்து, மாநிலக் கட்சிகளுடன் உறவாடி கெடுத்து அங்கு பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவதற்கு திட்டம் போட்டுக்கொடுக்கும் அமித்ஷாவின் வியூகமானது தமிழ்நாட்டில் எப்போதுமே புஸ்வானமாகிக் கொண்டேதான் இருக்கிறது.
“மிஷன் சவுத்” என்ற திட்டத்தின் அடிப்படையில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல அடித்தளத்தை செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் திட்டம்.
ஆனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்காமலேயே தமிழ்நாடு முழுக்க கட்சியை வளர்த்தெடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துவிடலாம் என்று அண்ணாமலை முன்வைத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணியை விட்டு தனித்து களமிறங்கியது பா.ஜ.க கும்பல்.
ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் அண்ணாமலையின் திட்டம் படுதோல்வியை தழுவியது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் மண்ணை கவ்வும் நிலை உள்ளது.
இதன் காரணமாக, தனது தோல்வியை மறைத்துக்கொண்டு அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலை அமித்ஷா-மோடி கும்பலுக்கு ஏற்பட்டது. இருப்பினும் கூட்டணி அறிவிப்பை பிரம்மாண்டமாக நிகழ்த்தி தன் மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்துவிடலாம் என்று திட்டமிட்ட அமித்ஷா, ஏப்ரல் 10 அன்று இந்தி-ஆங்கில ஊடகவியலாளர்களுடன் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். ஆனால், எடப்பாடியை சந்திக்க முடியாமல் ஒருநாள் முழுக்க அமித்ஷா அலைக்கழிக்கப்பட்டது தமிழ்நாட்டின் கடைக்கோடி ஊடகங்கள் வரை சந்தி சிரித்தது.
ஏப்ரல் 11 அன்று மாலை வரை அமித்ஷாவால் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முடியாததால், குமரி ஆனந்தனின் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பது போல தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு செல்வது; சங்கி துக்ளக் குருமூர்த்தி வீட்டிற்கு செல்வது என ஊடகவியலாளர்களிடம் இருந்து தப்பித்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை விலக்கினால் மட்டுமே கூட்டணி அறிவிப்பை வெளியிட முடியும் என்பதை உணர்ந்த அமித்ஷா அன்றைய தினமே தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தி, நயினார் நாகேந்திரனை தலைவராக்கிவிட்டு, அதற்கான அறிவிப்பையும் தானே எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதன் பிறகே எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து, கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அமித்ஷா இவ்வாறு அலைக்கழிக்கப் பட்டதானது தமிழ்நாட்டின் சங்கி கும்பலிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஒரு மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக தனது கட்சியின் மாநிலத் தலைவரையே பா.ஜ.க. மாற்றியிருப்பது பொதுவெளியில் விவாதப்பொருளாகி பா.ஜ.க-வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் அமித்ஷாவிற்கு நேர்ந்த அவமானத்தை மூடிமறைக்க “அமித்ஷாவின் வியூகம் வெற்றி” என சங்கி கும்பல் பிரச்சாரம் செய்துவந்த நிலையில், “பா.ஜ.க. உடன் கூட்டணி உள்ளதே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது” என்று எடப்பாடி பழனிச்சாமி திடீரென பல்டி அடித்தது பா.ஜ.க. கும்பலுக்கு தலைவலியாகிப் போனது.
இதற்கிடையில் பா.ஜ.க-வின் அடிவருடியான அன்புமணிக்கு பதிலாக, இனி தானே பா.ம.க. தலைவராக தொடரப்போவதாக ராமதாஸ் அறிவித்தது பா.ஜ.க. கும்பலுக்கு தலைவலியை மேலும் கூட்டியிருக்கிறது.
வெற்றி கூட்டணி அல்ல, கடத்தல் கூட்டணி
“பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை” என மேடைகள் தோறும் முழங்கிவிட்டு தற்போது எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.மு.க-வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் அண்ணாமலையை தலைவர் பதவிலிருந்து நீக்கியதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தனது வியூகத்தில் வெற்றியடைந்துவிட்டதாக அ.தி.மு.க. கும்பல் பிரச்சாரம் செய்கிறது. மறுபுறம், இரண்டு கட்சிகளுமே இக்கூட்டணியை வெற்றி கூட்டணி என்று பேசி வருகின்றன.
ஆனால், இது வெற்றி கூட்டணி அல்ல, எடப்பாடி பழனிச்சாமியை கடத்திக்கொண்டுபோய் அமைக்கப்பட்ட கடத்தல் கூட்டணி என்பதே உண்மை.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பா.ஜ.க., அ.தி.மு.க. உடன் கூட்டணியின்றி தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது என்பதை நன்குணர்ந்தது. அப்போதிலிருந்தே அ.தி.மு.க-வை தனது வழிக்கு கொண்டுவந்து கூட்டணி அமைப்பதற்கான அனைத்து அஸ்திரங்களையும் பா.ஜ.க. கையாளத் தொடங்கியது. அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது; அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது அமலாக்கத்துறை, வருவமான வரித்துறை சோதனை நடத்தியது; எடப்பாடி பழனிச்சாமி மகனின் ஊழல் விவகாரத்தை கையிலெடுத்தது; “ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வேண்டும்” என்ற கோரிக்கையை கட்சிக்குள் தீவிரமடையச் செய்து அதற்கான நகர்வுகளை மேற்கொண்டது; கட்சியை உடைப்பதற்கு எஸ்.பி. வேலுமணியுடன் ஈஷா யோகா மையத்தில் திட்டம் தீட்டியது; செங்கோட்டையன் தலைமையிலான கோஷ்டியை எடப்பாடிக்கு எதிராக தூண்டிவிட்டது என பலவகைகளில் அ.தி.மு.க. எனும் நெல்லிக்காய் மூட்டையை சிதறடிப்பதற்கான வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டது.
இதனையடுத்து, கூட்டணிக்கு செல்லாவிட்டால் கட்சியே இருக்காது என்ற நிலை உருவான காரணத்தினாலேயே அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. மொத்தத்தில், இக்கூட்டணிக்காக எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக கடத்தப்படவில்லையே தவிர பிற அத்துணை அஸ்திரங்களையும் பா.ஜ.க. கையாண்டது.
மேலும், கூட்டணி அறிவிப்பின் போது அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களில் தலையிட மட்டோம் என அமித்ஷா தெரிவித்திருந்தாலும் தேவர் சாதி மக்களின் வாக்குகளை தனதாக்கிக் கொள்வதற்காக, சசிகலா-தினகரன்-ஓ.பன்னீர்செல்வம் உள்ளடங்கிய ‘ஒருங்கிணைந்த அ.தி.மு.க.’-வை உருவாக்கும் திட்டத்தை பா.ஜ.க. நிகழ்ச்சிநிரலில் வைத்துள்ளது என்பதை சங்கி குருமூர்த்தியின் நேர்காணல்கள் நிரூபிக்கின்றன. எனவே, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன வழக்கு, அ.தி.மு.க-வினர் மீதான ஊழல் வழக்குகள் ஆகியவற்றை வைத்து மிரட்டி எடப்பாடி கும்பலை தனது நோக்கத்திற்கேற்ப பா.ஜ.க. பணிய வைக்கும் என்பதே நிதர்சனமாகும்.
கரையான் புற்றுகளை இடிக்காமல் கருநாகத்தை நசுக்க முடியாது
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டும் என எத்தனிக்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் அதற்கான முக்கிய காய்நகர்த்தலாக அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.
அ.தி.மு.க. கட்சியின் தன்மையானது இப்பாசிச கும்பல் உள்நுழைவதற்கு கனகச்சிதமாக உள்ளது. எந்தவித கொள்கை-கோட்பாடுமற்ற அடிமை கூட்டமாக எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நேரடியாக பார்ப்பன கும்பலின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு அ.தி.மு.க-விற்குள் பா.ஜ.க. நேரடியாக அதிகாரம் செலுத்தத் தொடங்கியதன் மூலம் அக்கட்சி பாசிச பா.ஜ.க. கும்பலின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. பல இடங்களில் அ.தி.மு.க. என சொல்லிக்கொள்ளும் சங்கிகள் பாசிச எதிர்ப்பு சக்திகள் மீது தாக்குதல் தொடுப்பது அக்கட்சிக்குள் நிகழ்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலையும் ஆதிக்கத்தையும் வெளிக்காட்டுகிறது.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தை பாசிஸ்டுகள் தமிழ்நாட்டில் அடித்தளமிடுவதற்கான நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். கும்பலை வளர்த்துவிட்டது; அரசு கட்டமைப்பிற்குள் சங்கிகளை புகுத்தியது; சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலை தீவிரப்படுத்தியது என பாசிச ஊடுருவல் அனைத்து மட்டங்களிலும் நடந்தேறியது. மேலும், நீட் உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்களுக்கு அடிமை அ.தி.மு.க. தமிழ்நாட்டை திறந்துவிட்டது. இந்திய அளவிலும் சி.ஏ.ஏ., காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்களுக்கு ஆதரவளித்து இஸ்லாமியர்களுக்கும் பரந்துபட்ட இந்திய மக்களுக்கும் துரோகமிழைத்தது.
எனவே, அ.தி.மு.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது என்று பேசுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம். கொங்கு மண்டலம் பறிபோனால் தனது கட்சியால் பொறுக்கித் தின்ன முடியாது என்ற ஒற்றை காரணத்தினாலேயே பா.ஜ.க-வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்தது. தற்போது துளியும் வெட்கமின்றி அண்ணாமலையை விலக்கியதாலும் ஊழல் வழக்குகளை கொண்டு மிரட்டியதாலும் பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்தவகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாசிச கும்பலின் நோக்கத்திற்கேற்ப செயல்படும் முதன்மை வாகனமாக அ.தி.மு.க. பயன்பட இருக்கிறது. எனவே, அ.தி.மு.க-வை பாசிச எதிர்ப்பில் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதமும் மக்களை பாசிச படுகுழியில் தள்ளுவதுமாகும்.
அ.தி.மு.க. மட்டுமின்றி பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்னியர் சாதிவெறி கட்சியான பா.ம.க., கொள்கை-சித்தாந்தமற்று விஜயகாந்தை வைத்து பிழைப்பு நடத்தும் தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் பாசிச கும்பலுக்கான கரையான் புற்றுகளேயாகும். மேலும், தமிழ்நாட்டில் பலமுனை போட்டி நிலவினால் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, தி.மு.க. வெற்றி பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்துள்ள பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியை தனது கூட்டணியில் இணைத்து கொள்வதற்கான பேரத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடியாக, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்காவிட்டாலும், பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கான கருத்தியல் அடியாள் வேலையைத்தான் சீமான் செய்து வருகிறார். எனவே, நா.த.க. வளர்ச்சியும் பா.ஜ.க-விற்கு துணைபுரிவதாகவே அமையும்.
அதேபோல், இந்தியாவில் பாசிசம் அரங்கேறிவரும் சூழலில் கொள்கை-சித்தாந்தம் ஏதுமின்றி கவர்ச்சிவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் மட்டுமே முன்வைத்து தொடங்கப்பட்டுள்ள விஜய்-இன் கட்சியும் பாசிஸ்டுகளுக்கான கரையான் புற்றே. எப்போது வேண்டுமானாலும், பா.ஜ.க-வால் விஜய் கட்சியை தன்வயப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நிலையில்தான் அக்கட்சி உள்ளது.
எனவே அ.தி.மு.க. உள்ளிட்டு இக்கட்சிகளிடம் ஜனநாயகம் பாராட்டுவதும் அவற்றை பயன்படுத்திக்கொள்ள எத்தனிப்பதும் பாசிச கும்பலிடத்தில் பலியாவதற்கே வழிவகுக்கும். இந்த கரையான் புற்றுகளை இடித்துத் தள்ளுவதானது தமிழ்நாட்டில் பா.ஜ.க. எனும் கருநாகத்தை நசுக்குவதில் முதன்மை கடமையாகும்.
2026 சட்டமன்றத் தேர்தல்:
உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க என்ன வழி?
கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. மூலமும் அண்ணாமலையை முன்னிறுத்தியும் கவுண்டர் சாதி வாக்குகளை அறுவடை செய்வது; வட மாவட்டங்களில் பா.ம.க. மூலம் வன்னியர் சாதி வாக்குகளை கவர்வது; தென்மாவட்டங்களில் பா.ஜ.க-வின் புதிய மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனை முன்னிறுத்தியும் தினகரன்-சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் கும்பல் மூலமும் தேவர் சாதி மக்களின் வாக்குகளை அறுவடை செய்வது; அதே பகுதியில் அடர்த்தியாக வாழும் பள்ளர் சாதி மக்களை கவர கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற கருங்காலிகளை பயன்படுத்துவது என 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டத்தை வகுத்து பாசிச கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல் மூலம் மதக்கலவரங்களையும் சாதிவெறியாட்டங்களையும் தூண்டிவிட்டு சாதி-மத முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாடு மக்களின் வாக்குகளை அபகரிக்கத் திட்டமிடுகிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில், “சிக்கந்தர் தர்காவை இடித்து தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவோம்” என இந்து முன்னணி கும்பல் மதக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி சாதியப் படுகொலைகளையும் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகிறது.
மறுபுறம், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க-வும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. கடந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வியூகங்களை வகுத்துக்கொடுத்த “ஷோ டைம்” மற்றும் “பென்” ஆகிய கர்ப்பரேட் நிறுவனங்களின் துணையுடன் 2026 தேர்தலுக்கான உத்திகளை தி.மு.க. வகுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை அறிய, கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி அதன் அடிப்படையில் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடுவது; சாதி வாக்குகளை பெறும் வகையில் கட்சியை புனரமைப்பது என தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது போராடிய மக்கள் பிரிவினருக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. காற்றில் பறக்கவிட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு நான்காண்டுகளாக கார்ப்பரேட் மாடல் ஆட்சியை நடத்தி வருகிறது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பெயரில் பரந்தூர் விமான நிலையத் திட்டம், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் என கார்ப்பரேட் திட்டங்களுக்கு துணைபோவது; தமிழ்நாடு முழுவதும் சிப்காட் பூங்காக்களை அமைக்கிறேன் என்ற பெயரிலும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரிலும் விவசாய மக்களையும் பூர்வகுடி மக்களையும் விரட்டியடிப்பது; எல்லை விரிவாக்கம் என்ற பெயரில் உள்கட்டமைப்புகளை கார்ப்பரேட்மயமாக்குவது, மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுவது; முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டை கார்ப்பரேட் சுரண்டலின் குவிமயமாக்குவது என கார்ப்பரேட் சேவைத் திட்டங்களை தி.மு.க. செவ்வனே அமல்படுத்தி வருகிறது. இக்கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை கடுமையாக ஒடுக்குகிறது. கார்ப்பரேட்-காண்ட்ராக்ட்-டிஜிட்டல்மயமாக்கத்தை தீவிரப்படுத்தி உத்தரவாதமற்ற பணி முறையையும் உதிரி தொழிலாளர்களையும் உருவாக்கி வருகிறது.
மறுபுறம் பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டே ஒன்றிய அரசின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது; முருகன் மாநாடு, ஆன்மீக அரசியல் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு கருத்தியல் அடியாள் வேலை பார்ப்பது; ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலை வேடிக்கை பார்ப்பது; புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்டு பாசிச சட்டத்திட்டங்களை எதிர்த்து களம் காணாமல் அதனை தமிழ்நாட்டு மக்களின் தலையில் சுமத்துவது; பாசிச கும்பலின் நிதி நெருக்கடிக்கு அடிபணிந்து போவது என தி.மு.க. சந்தர்ப்பவாதமாக நடந்துகொள்கிறது. தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி முடக்கம், தொகுதி மறுவரையறை, மாநில உரிமை பறிப்பு ஆகியவற்றை தனது தேர்தல் வெற்றிக்கு பயன்படும் வகையில் வரம்புக்கு உட்பட்ட அளவிலேயே எதிர்க்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனைத் தடுத்து நிறுத்தாமல் வேங்கைவயல் உள்ளிட்ட விவகாரங்களில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்குகிறது. போலீசு துணையுடன் சாதியத் தாக்குதல்களை தனிப்பட்ட மோதலாக சித்தரிக்கிறது.
மறுபுறம் தமிழ்நாட்டில் கல்குவாரி, மணல் கொள்ளை போன்றவை தீவிரமடைந்து வருகின்றன. இந்த இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்போர் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
ஆனால், ஐ.டி. விங்குகள், இணைய குண்டர் படையை வைத்துக்கொண்டு தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மூடிமறைத்து மக்களை திசை திருப்புகின்றன; தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதாக சித்தரிக்கின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. எதிர்ப்பை பயன்படுத்தி கொண்டும் பிரஷாந்த் கிஷோர் என்னும் தேர்தல் புரோக்கரின் வழிகாட்டுதலாலும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்ததை போலவே 2026 தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என தி.மு.க. கனவு காண்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் நாள்தோறும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள் என பலதரப்பட்ட மக்கள் நாள்தோறும் போராடி வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்துத்தர கோரியும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும், மாநகராட்சி விரிவாக்கத்தை நிறுத்தக் கோரியும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
ஆனால், தி.மு.க. அரசு இதுகுறித்தெல்லாம் வாய் திறப்பதில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அத்தி பூத்தாற் போன்று சில விவகாரங்களுக்கு மட்டும் அறிக்கை விடுவது, கண்டனம் தெரிவிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றன. தி.மு.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் கட்சிகள் சடங்கிற்காக கூட மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. அதேசமயம், தி.மு.க. மீதான இந்த மக்கள் எதிர்ப்பை பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்துகொள்ள வேண்டும் என பாசிச பா.ஜ.க. கும்பல் தீவிரமாக வேலை செய்துவருகிறது.
இந்நிலையில், போராடும் மக்கள் தங்களது கோரிக்கைகளை சொந்தமுறையில் போராடி நிலைநாட்டிக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்தல் சமயத்தில், ஆளும் வர்க்க கட்சிகளை போல உழைக்கும் வர்க்கமும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான பேரத்தை நடத்த வேண்டியுள்ளது. அதற்கான சரியான வடிவம் களப்போராட்டங்களே!
பாசிச எதிர்ப்பு போராட்டத்திலும் மக்கள் நலனிலும் உறுதியாக இருக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் இந்தப் போராட்டத்தில் முன்னிற்க வேண்டும். களப்போராட்டங்களுக்கு தலைமையளித்து மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க பாடுபட வேண்டும். இதுவே பா.ஜ.க. கும்பலை வீழ்த்துவதற்குமான வழியாகும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 15-16 | 1991 ஜூன் 16-30, ஜூலை 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் பாசிச பா.ஜ.க. கும்பல், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை உரிமைகள் ஏதுமற்ற இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்கான பல்வேறு பாசிச நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் உச்சமாக இஸ்லாமியர்கள் மீது இதுவரை இல்லாத வகையில் பாசிச பயங்கரவாதத் தாக்குதலை தொடுப்பதற்கு ஏதுவாக, வக்ஃப் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவில், தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவைச் சார்ந்த பா.ஜ.க. உறுப்பினர்கள் முன்வைத்த 14 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முன்பை விட மேலும் அபாயகரமானதாக இச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது.
குறுக்கு வழியில் நிறைவேற்றப்பட்ட பாசிச சட்டம்
நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாலையிலும் மாநிலங்களவையில் 4-ஆம் தேதி அதிகாலையிலும் “வக்ஃப் திருத்த மசோதா 2024”-யை எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மீறி மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. இம்மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடுத்த நாளே ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்” (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கலவர கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ள வாகனங்கள்
மக்களின் எதிர்ப்பு காரணமாக தடாலடியாக வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்ற இயலாத மோடி அரசு, கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்காக அம்மசோதாவை அனுப்பி வைத்திருந்தது. ஆனால், இவையெல்லாம் வெறும் கண்துடைப்பிற்காகத்தான் என்பது நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டபோதே அம்பலமாகிவிட்டது. பா.ஜ.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் முறையாக விவாதங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இதுவரை நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை நீக்கிவந்த மோடி அரசு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பொய் குற்றம் சாட்டி அவர்களை இடைநீக்கம் செய்தது. இதன்மூலம் நாடாளுமன்ற கூட்டுக் குழு என்ற முறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது. இறுதியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த 500-க்கும் மேற்பட்ட திருத்தங்களை நிராகரித்துவிட்டு, பா.ஜ.க. உறுப்பினர்கள் பரிந்துரைத்த 14 திருத்தங்களை மட்டும் கூட்டுக் குழு ஏற்றுக் கொண்டு மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி கூட்டத்தொடர் முடிவடையும் கடைசி இரண்டு நாட்களில் வஃக்ப் திருத்த மசோதாவை தாக்கல் செய்த மோடி அரசு, அதிகாலை வரை விவாதங்களை நடத்தி, தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்றியது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது; அதிகாலை வரை விவாதம் நடத்தியது என ஜனநாயகப் பூர்வமாக இம்மசோதா நிறைவேற்றப்பட்டதாக பா.ஜ.க. கும்பல் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. ஆனால், மூன்று குற்றவியல் சட்டங்கள், வனப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல பாசிச சட்டங்களைப் போல, வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் பெயரளவிலான ஜனநாயக வழிமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு குறுக்கு வழியிலேயே மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதன்மூலம், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தன்னுடைய பாசிச ஆட்சியை அரங்கேற்றுவதற்கு ஒத்திசைவாகவே இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பு செயல்படுகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.
இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் இறையருளை நாடி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தானமாக வழங்கும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்றழைக்கப்படுகின்றன. இச்சொத்துகளில் பள்ளிவாசல்கள், தர்காகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களும் உள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வக்ஃப் வாரியத்திடம் இந்தியா முழுவதும் சுமார் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. அவை 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளன.
வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்வதில் பல முறைகேடுகள் நடக்கின்றன, அவற்றை முறைப்படுத்துவதற்காகவும் ஏழை இஸ்லாமியர்களின் நலனுக்காகவுமே வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்திருப்பதாக மோடி அரசு கூறுகிறது. “ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்” என்ற பழமொழிக்கேற்ப உள்ளது மோடி அரசின் இந்த நாடகம். ஆட்சிக்கு வந்ததிலிருந்து சி.ஏ.ஏ., முத்தலாக் தடை சட்டம், லவ் ஜிகாத் தடை சட்டம், மத மாற்ற தடைச் சட்டம், தூக் ஜிகாத் சட்டம், பொது சிவில் சட்டம் என சட்டப்பூர்வமாகவும்; பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலாவும் காவிக் குண்டர்கள், வி.எச்.பி., பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் மூலமும் நாள்தோறும் பல்வேறு தாக்குதல்களை இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க. கும்பல் தொடுத்து வருகிறது. இஸ்லாமியர்களின் வீடுகளை அழித்து அவர்களை அகதிகளாக மாற்றுவதற்காக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுதினமும் இஸ்லாமியர்கள் மீது பாசிச தாக்குதலை தொடுத்துவரும் மோடி கும்பல் ஏழை இஸ்லாமியர்களின் நலனுக்காக வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது.
உண்மையில், சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமை, தனியுரிமை போன்றவற்றை பறிப்பதுபோல, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை பறித்து பொருளாதார ரீதியாக அவர்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் உள்ள சில அம்சங்களை பரிசீலித்தாலே, இதனை புரிந்துகொள்ள முடியும்.
2024 ஆகஸ்டில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவில், வஃக்ப் சொத்துகளை நிர்ணயிக்கும் மற்றும் கணக்கெடுக்கும் அதிகாரம் வக்ஃப் வாரியத்திடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டிருந்தது. இதன்மூலம், வக்ஃப் வாரியங்கள் அதிகாரம் பறிக்கப்படுவதுடன், அரசுக் கட்டமைப்பில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் மூலம் வக்ஃப் சொத்துகள் அபகரிக்கப்படுவதற்கான அபாயம் இருந்தது. ஆனால், தற்போது சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில், வக்ஃப் சொத்துகளை நிர்ணயம் மற்றும் கணக்கெடுப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியரை விட உயர் பதவியில் உள்ள அதிகாரிக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரோ அரசு அதிகாரியோ, யாராக இருந்தாலும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தைப் பறித்து, வக்ஃப் சொத்துகளை கொள்ளையடிக்க வேண்டும் என்ற பாசிச கும்பலின் சதித்திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை.
அடுத்ததாக, தற்போது திருத்தப்பட்டுள்ள இச்சட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் “வக்ஃப் பயனர்” (Waqf by user) என்ற விதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட சொத்துகள் வக்ஃப் சொத்துகளாகவே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து வக்ஃப்களாக உள்ள சொத்துகள் காவி-கார்ப்பரேட் கும்பலிடமிருந்து பாதுகாக்கப்படலாம் என்று தோன்றலாம். ஆனால், இங்குதான் காவிக் கும்பலின் சூட்சுமம் உள்ளது. இதில், பகுதியளவு அல்லது முழுமையாக சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்திற்கும், அல்லது அரசாங்க இடத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் அரசு சொத்தா அல்லது வக்ஃப் சொத்தா என வக்ஃப் சொத்துகளை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரம் அரசு அதிகாரிக்கு வழங்கப்பட்டிருப்பதை இணைத்துப் பார்க்க வேண்டும். இதன்மூலம் முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சொத்துகளையும் அரசு சொத்துகள் என்று கூறி காவி-கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாகவே இச்சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
அடுத்ததாக, வக்ஃப் சொத்துகளுக்கான பதிவுகள், ஆண்டுக்கணக்குகள், வழக்குகளை கையாள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்காக மையப்படுத்தப்பட்ட இணையதளப் பக்கம் (Web Portal) உருவாக்கப்பட வேண்டும் என்று வக்ஃப் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டம் இயற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள், வக்ஃப் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்குள் பதிவேற்ற முடியாத போது முத்தவல்லி (வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பவர்) விண்ணப்பிக்கும் பட்சத்தில் கால நீட்டிப்பு குறித்து வக்ஃப் தீர்ப்பாயம் முடிவு செய்யும் என்றும் இஸ்லாமியர்கள் வக்ஃப்களுக்கு தானமாக வழங்கும் சொத்துகளை இந்த இணையதளத்தின் மூலமே வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்து வருகின்றன. இவற்றின் அனைத்தின் செயல்பாடுகளையும் மோடி அரசு இனி மையப்படுத்தப்பட்ட இணையதளம் மூலம் கட்டுப்படுத்தப்போகிறது. இதன்மூலம், மாநில வக்ஃப் வாரியங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்படும். பல துறைகளில், மோடி அரசு டிஜிட்டல்மயமாக்கம் என்ற பெயரில் இவ்வாறான அதிகார பறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மத்திய, மாநில வக்ஃப் வாரியங்களில் இரண்டு இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற விதி கூட்டுக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகும் நீடிக்கிறது. அப்பட்டமாக, வக்ஃப் வாரியங்களில் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளை நியமித்து அதனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே மோடி அரசு இந்த விதியை தக்கவைத்துள்ளது. தஞ்சாவூர் மாவாட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில் ஒன்றில், அறங்காவலராக இஸ்லாமிய பெயர்கொண்ட ஒருவர் ( உண்மையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்) நியக்கமிப்பட்டதற்கே வானத்திற்கும் பூமிக்கும் குதித்தது சங்கிக் கும்பல். ஆனால், இஸ்லாமியர்களின் வக்ஃப் வாரியங்களில் மட்டும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமிக்க வேண்டுமாம். இதுதான் பாசிசக் கும்பலின் இரட்டை நீதி.
கூடுதலாக, நாட்டின் பல மாநிலங்களில் வக்ஃப் சொத்தா அல்லது அரசு, தனியார் சொத்தா என்று சர்ச்சைக்குரிய நிலங்களில் பல கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் திருச்செந்துறை, பீகாரில் கோவிந்பூர், கர்நாடகாவில் விஜயபுரா, சித்ரதுர்கா, பல்லாரி ஆகியவை அதற்கு சான்றுகளாகும். இவற்றில் சில கிராம நிலங்களை தங்களுடைய வக்ஃப் சொத்துகள் என்று வக்ஃப் வாரியங்கள் வாதிடுகின்றன. சில கிராம நிலங்கள் வக்ஃப் சொத்துகள் இல்லை என்பதை வக்ஃப் வாரியங்களே உறுதி செய்து இருக்கின்றன.
வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம்.
அவற்றின் உண்மைத் தன்மைகளை ஆராய்வதற்கு பதிலாக, வக்ஃப் திருத்தச் சட்டமானது சட்டப்பிரிவு 40-இன் படி கிராம நிலங்களை வக்ஃப் சொத்துகளாக கருத இயலாது என்று கூறுகிறது. இதன்மூலம் மோடி அரசு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வக்ஃப்களிடம் இருந்து பறிப்பதுடன், சர்ச்சைக்குரிய நிலத்தில் வாழும் மக்களை தனக்கு அடித்தளமாக திரட்டிக் கொள்ள காவிக் கும்பலுக்கு வழியேற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு மோடி அரசானது மேற்குறிப்பிட்ட ஒரு சில திருத்தங்கள் மட்டுமின்றி, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் மேற்கொண்டுள்ள அனைத்து திருத்தங்களும் இஸ்லாமியர்களிடமிருந்து வக்ஃப் சொத்துகளை அபகரித்து காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடும் வகையிலேயே உள்ளது.
காவி பயங்கரவாதத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்
வக்ஃப் சட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்கள் இந்துக்களின் சொத்துகளை அபகரிப்பதாக பல ஆண்டுகளாக நச்சுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காவிக் கும்பல், தற்போது இச்சட்டத்திருத்தத்திற்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீது பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கியிருக்கிறது.
“வக்ஃப் சட்டப்பிரிவு 40-யைப் பயன்படுத்தி இந்துக்களின் சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக அறிவித்துக் கொள்ள முடியும்”, “இந்தியாவில் உள்ள வக்ஃப் சொத்துகளின் மொத்த பரப்பளவு பாகிஸ்தானின் பரப்பளவை விட அதிகம்”, “இந்தியாவிற்குள் இன்னொரு பாகிஸ்தான் உருவாகி வருகிறது” என்று பல பொய், வெறுப்புப் பிரச்சாரங்கள் நம்முடைய கற்பனைக்கெட்டாத வகையில் பரப்பப்பட்டு வருகின்றன. வக்ஃப் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்கள் இந்துகளின் நிலங்களை அபகரித்துக் கொள்ளும் “நில ஜிகாத்” நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற வெறுப்புப் பிரச்சாரம் காவிக் கும்பலால் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவிக்கும்பல், மறுபுறம் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீது கலவரங்களை கட்டவிழ்த்துவிடுவதற்கும் ஆயுத்தமாகி வருகிறது.
மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம் இதன் தொடக்கமே. மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதியில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது காவிக் கும்பல் தாக்குதல் தொடுத்து போராட்டத்தை கலவரமாக்கியது. இந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டவிழ்த்துவிட்ட காவி கும்பல், இம்மாநிலத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.
இதேபோல், தமிழ்நாட்டில் வேலூர் காட்டுக்கொல்லை கிராமத்தில் 60 குடும்பங்கள், 5 ஏக்கர் வக்ஃப் நிலத்தில் வசிப்பதாக மசூதி நோட்டீசு அனுப்பியிருந்த நிலையில், இந்த விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பல் இந்து மக்களின் நிலங்களை தர்கா அபகரிப்பதாக மதவெறுப்பு பிரச்சாரம் செய்துவருகிறது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் திருச்செந்துறை பகுதியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் உட்பட அக்கிராம மக்கள் வசிக்கும் பல ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று பொய் பிரச்சாரத்தில் காவி கும்பல் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்து தனக்கான பாசிச அடித்தளத்தை உருவாக்கியதுபோல, நாடுமுழுவதும் பல இடங்களில் சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்துகளை குறிவைத்து கலவரங்களைத் தூண்டுவதற்கான பாசிச கும்பலின் சதித்திட்டமும் இச்சட்டத்திருத்தத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கிறது. ஏற்கெனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக காவி கும்பல் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் பாசிச கும்பலுக்கு உள்ளது.
அதேபோல், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் சொத்துகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசரால் இடிக்கப்பட்டுவரும் நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் சொத்துகள் மீது புல்டோசர் பயங்கரவாதம் ஏவப்படும் அபாயமும் உள்ளது. அதாவது சட்டவிரோதமாக உள்ள புல்டோசர் பயங்கரவாதம் சட்டப்பூர்வமாக்கப்படும்.
யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு ஹிட்லர் ‘கெட்டோமயமாக்கல்” (Ghettoisation) என்ற முறையை கையாண்டான். யூதர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவர்களின் குடியிருப்புகளை அழித்து, பொருளாதார ரீதியில் ஒடுக்கி ‘கெட்டோ’களில் (குறிப்பிட்ட இன/சமய மக்கள் நெருக்கமாக தனித்து வாழும் சேரிப்பகுதி) அடைத்து இனப்படுகொலை செய்தான். இந்தியாவில் காவிக் கும்பல், இஸ்லாமியர்களை இராண்டாந்தர குடிமக்களாக்குவதற்கு பின்பற்றி வழிமுறையும் ஹிட்லரின் கெட்டோமயமாக்கலை ஒத்ததாகவே உள்ளது.
ஆகவே, இந்தியாவில் வக்ஃப் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை, மோடி அரசின் கடந்த பத்தாண்டுகால பாசிச ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காவி பயங்கரவாதத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் வக்ஃப் திருத்தச் சட்டத்தை தடுத்து நிறுத்த முடியுமா?
வக்ஃப் திருத்தச் சட்டம் மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட பிறகும், அதற்கு முன்னரும் அதனை எதிர்த்து 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகளாலும் இஸ்லாமிய அமைப்பை சார்ந்தவர்களாலும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்களை ஏப்ரல் 16, 17 தேதிகளில் விசாரித்த உச்சநீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடையை விதித்து அடுத்த விசாரணையை மே 5-ஆம் தேதி தள்ளி வைத்திருக்கிறது.
உச்சநீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்திருக்கின்றன. இத்தடையை தங்களுடைய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து கொள்கின்றன. ஆனால், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரந்த அளவில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்களால்தான் உச்சநீதிமன்றம் வக்ஃப் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
மேலும், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், அடுத்தடுத்த விசாரணைகளில் நிரந்தர தடை விதித்துவிடும் என்று நாம் கருதிக்கொண்டு இருக்க முடியாது. ஏனென்றால், கடந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பல்வேறு பாசிச நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் உடந்தையாகவே இருந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், பாபர் மசூதி இடிப்பு, தேர்தல் பத்திரங்கள் உள்ளிட்ட பல வழக்குகளை அதற்கு சான்றுகளாக நாம் கூற முடியும். இவ்வழக்குகளில் பாசிச கும்பலின், நடவடிக்கைகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்த போதிலும் பாசிச கும்பலுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கிலும், வக்ஃப் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 25, 26, 20, 246 ஆகிய பிரிவுகளுக்கு எதிராக உள்ளதை பல வழக்கறிஞர்களும் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆனால், “வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நேர்மறையான விஷயங்கள் உள்ளன” என்று கூறி நரகலில் நல்லரிசி தேடும் வேலையை செய்கிறது உச்சநீதிமன்றம்.
ஒருவேளை, வக்ஃப் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கிறதென்றால், அதை பாசிஸ்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சான்றாக, டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதற்கு முதல்வருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கிய போது அதனை முறியடிக்கும் விதமாக மோடி அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தப் பிறகு உச்சநீதிமன்றத்தை “ஷரியா கோர்ட் ஆப் இந்தியா” என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கலவரத்தை தூண்டுகிறார் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கத் தொடங்கியிருக்கிறது காவி கும்பல்.
ஆகவே, சட்டப்போராட்டம் என்பதற்குள் மட்டும் தங்களை வரம்பிட்டுக் கொள்வது எந்தவகையிலும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை பின்வாங்க வைக்காது. மாறாக, அது காவிக் கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை செய்வதாகவே அமையும்.
நாட்டை ஷாகின்பாக்களாக்குவோம்!
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதென்பது இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வக்ஃப் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கான நடவடிக்கை மட்டுமல்ல. கிறித்துவம், சீக்கியம், ஜைனம் உள்ளிட்ட பிற மத நிறுவனங்களின் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கு அடித்தளமிடும் நடவடிக்கையாகும். குறிப்பாக, இந்து மத நிறுவனங்களின் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கு அடித்தளமிடும் நடவடிக்கையும் ஆகும்.
பாசிச கும்பலின் இச்சதித்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-இன் ஊதுகுழலான “ஆர்கனைசர்” தளத்தில், “இந்தியாவில் யாருக்கு நிலம் அதிகம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை எதிர் வக்ஃப் வாரியம்” என்று தலைப்பில் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியான கட்டுரை அம்பலப்படுத்தியது. நாடு முழுவதும் கத்தோலிக்க திருச்சபை சுமார் 17.29 கோடி ஏக்கர் நிலங்களை சொந்தமாகக் கொண்டுள்ளது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதன் நிலம் பெரும்பான்மையாக பிரிட்டிஷ் ஆட்சியின் போது கையகப்படுத்தப்பட்டது என்று அவதூறை அள்ளிவீசியிருந்தது. இக்கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு பாசிச கும்பலின் சதித்திட்டத்தை எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தத் தொடங்கியவுடன் அத்தளத்தில் இருந்து கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது.
அதேபோல், தமிழ்நாட்டில் கோயில்களை நிர்வாகம் செய்துவரும் இந்து அறநிலையத்துறையைக் கலைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்து முன்னணியைச் சார்ந்த குண்டர்களும் கார்ப்பரேட் சாமியாரன ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டவர்களும் குரல் கொடுத்து வருவதன் பின்னணியில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கமே ஒளிந்துள்ளது.
எனவே, வக்ஃப் திருத்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி, இந்து, கிறித்துவம் உள்ளிட்ட மதங்களைச் சார்ந்த நாட்டின் கோடானுகோடி உழைக்கும் மக்களின் கடமையாகும். மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து மோடி அரசை பின்வாங்க வைத்திருப்பது விடாப்பிடியான, உறுதியான, போர்க்குணமிக்க களப் போராட்டங்களே ஆகும்.
குறிப்பாக, 2019 ஆம் ஆண்டில் மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம் முன்னுதாரணமாக அமைந்தது. நாட்டின் பல பகுதிகளில் ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்கள் பற்றிக்கொள்ளத் தொடங்கின. காவிக் குண்டர்கள் மற்றும் போலீசு படையினரின் கடும் அடக்குமுறைகளைத் தாங்கி மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்த ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக பின்வாங்க வைத்தது.
களப் போராட்டங்கள் மூலமே மோடி அரசை வக்ஃப் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுத்த நிறுத்த முடியும் என்பதை இஸ்லாமிய அமைப்புகளும் மக்களும் உணர்ந்திருக்கின்றனர். அதன்விளைவாகத்தான், உச்சநீதிமன்றம் வக்ஃப் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த போதும், அச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து வருகின்றன. ஆகவே, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை வக்ஃப் திருத்த சட்டத்தை பின்வாங்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 13-14 | 1991 மே 16-31, ஜூன் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 10-11-12 | 1991 ஏப்ரல் 1-31, மே 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 9 | 1991 மார்ச் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 7-8 | 1991 பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 4-5-6 | 1991 ஜனவரி 1-31, பிப்ரவரி 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 2-3 | 1991 டிசம்பர் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பள்ளிக்கல்லூரி மாணவர்களிடையே சாதிவெறி போதையும் அரிவாள் கலாச்சாரமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. நாங்குநேரியில் நன்றாக படித்த காரணத்திற்காக பள்ளி மாணவன் சின்னதுரை மீது ஆதிக்கச் சாதிவெறிப்பிடித்த சக மாணவர்கள் அரிவாளைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது; தூத்துக்குடியில் கபடி போட்டியில் வெற்றி பெற்றதற்காக தேவேந்திர ராஜா என்ற மாணவன் அரிவாளால் வெட்டப்பட்டது; தூத்துக்குடியில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் எட்டாம் வகுப்பு மாணவனான ரஹ்மத்துல்லாஹ் அரிவாள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது ஆகிய சம்பவங்கள் தென்மாவட்டங்களில் மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரம் தீவிரமடைந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இவ்வாறு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சக மாணவர்களாலேயே அரிவாளால் தாக்கப்படுவது தமிழ்நாட்டில் புதிய-அபாயகர போக்காக வளர்ந்து வருகிறது. மேற்குறிப்பிட்ட தாக்குதல்களில் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் தீவிரமடைந்துவரும் சாதித் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் 18 வயதுக்குட்பட்ட, அதிலும் 17 வயதுடைய சிறுவர்களே கூலிப்படையைப் போல பயன்படுத்தப்படுகின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டில் கொலைக் குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சிறுவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை மூளைச்சலவை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி, இது சாதிப் பிரச்சினை அல்ல, ஊடகங்கள் அவ்வாறு உருவகப்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை இல்லை. குறிப்பாக திருநெல்வேலியில் இல்லவே இல்லை. தனிப்பட்ட பிரச்சினை சாதிப் பிரச்சினையாக பெரிதுப்படுத்தப்படுகிறது” என அவர் அப்பட்டமாக பொய்யுரைத்தது ஜனநாயக சக்திகளிடையே எதிர்ப்பை கிளப்பியது.
அப்பாவு மட்டுமின்றி தி.மு.க. அரசு-அதிகார வர்க்கம், அதன் ஊடகங்கள் என அனைவரும் தென்மாவட்டங்களில் சிறுவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி மற்றும் அரிவாள் கலாச்சாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் அதனை மூடிமறைப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றன. ஆனால், தென்மாவட்டங்களில் நடந்துகொண்டிருக்கும் சாதியத் தாக்குதல்களும் படுகொலைகளும் தென்மாவட்டங்கள் சாதித் தாக்குதலின் குவிமயமாக மாறிக்கொண்டிருக்கிறது என்கிற யதார்த்தத்தை நம் முகத்தில் அறைகின்றன.
சாதிவெறியூட்டும் ஆதிக்கச் சாதி சங்கங்கள்!
மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரமும் சாதியத் தாக்குதல்களும் அதிகரிப்பதை ‘சிறுவர்களுக்கு இடையிலான சாதாரண மோதல்’ என்றே தி.மு.க. அரசும் அதன் ஊடகங்களும் சித்தரிக்கின்றன. ஆனால், அரிவாள் கொண்டு தாக்குவது என்கிற அளவிற்கு வீரியம் பெற்றுள்ள தாக்குதல்களை பற்றி சற்று சிந்தித்தாலே மாணவர்களை பின்னாலிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்கிற உண்மையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உண்மையில், ஆதிக்கச் சாதி சங்கங்களே மாணவர்கள்-இளைஞர்கள் மத்தியில் சாதிவெறியை கட்டவிழ்த்துவிடுவதில் முதன்மை பங்காற்றுகின்றன.
தமிழ்நாட்டிலேயே அதிகளவிலான சாதி சங்கங்கள் தென்மாவட்டங்களில்தான் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் இயங்கும் தேவர் (முக்குலத்தோர்) மற்றும் நாடார் சாதி சங்கங்கள் சாதிவெறியூட்டும் வேலைகளை அனைத்து வழிகளிலும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
கே.என். இசக்கிராஜா தேவர், ஏ. மூர்த்தி தேவர், ஸ்ரீவை சுரேஷ் தேவர் போன்ற சாதிவெறியர்கள் தேவர் சாதி மக்களிடையேயும், சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா, ஹரி நாடார், பந்தல் ராஜா போன்ற சாதிவெறியர்கள் நாடார் மற்றும் வெள்ளாளர் சமூகத்தினரிடையேயும் சாதிய சங்கங்களின் மூலமாக வெளிப்படையாக ஆதிக்கச் சாதிவெறியை ஊட்டுகின்றனர். இவர்கள் அனைவரும் பிற சாதி மக்களுக்கு எதிராக, குறிப்பாக பட்டியலின மக்களுக்கு எதிராக, வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டு, வன்முறையை தங்களது சாதியின் வரலாற்று அடையாளமாக சித்தரித்து சாதிக் கலவரத்தை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர். பள்ளிக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களிடையே பரவிவரும் அரிவாள் கலாச்சாரத்திற்கு அடித்தளமிடுபவர்களும் பட்டியலின மாணவர்களை வெட்டுவதற்கு தைரியமூட்டுபவர்களும் இதுபோன்ற ஆதிக்கச் சாதி சங்கங்களின் தலைவர்களே ஆவர்.
சான்றாக, சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் ஆதிக்கச் சாதிவெறியர்கள் வேகமாக கார் ஓட்டிச் சென்றதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக பாலிடெக்னிக் மாணவர் மனோஜ் ஆதிக்கச் சாதிவெறியர்களால் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து ஆதிக்கச் சாதியினரின் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, “இங்குள்ளவர்கள் பட்டியல் சாதி மக்களுடன் சாதி பார்க்காமல்தான் பழகி வந்தோம். ஆனால், சாதி சங்கங்களால் எங்களிடம் ஆதிக்கச் சாதிவெறி மனப்பான்மை வளர்த்துவிடப்படுகிறது. எங்கள் ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். சாதி ரீதியான பேனர்கள் வைப்பது, சாதிவெறியூட்டும் பாடல்களை வேண்டுமென்றே ஒலிப்பது, பிற சாதியினரைப் பற்றி பொய்-வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்று எல்லா வகைகளிலும் ஆதிக்கச் சாதி மனப்பான்மையை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்று ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள்- இளைஞர்களே வெளிப்படுத்தினர்.
இந்த ஆதிக்கச் சாதி சங்கங்கள் மாணவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களை சாதிய வலைக்குள் கவர்ந்திழுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, சாதிவெறியர்களை தலைவராக பாவித்து சாதிப் பாடல்களுக்கு ரீல்ஸ்-வீடியோ போடும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதில் எந்தவித பேதமுமின்றி அனைத்து சாதியைச் சேர்ந்த ஆண்-பெண் என இருபாலரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். “வீர பரம்பர டா வீறு கொண்ட வம்சமடா… பகைச்சா பதற வைக்கும் பரம்பரைக்கு சொந்தமடா”, “எங்க அக்குளுக்குள்ள எந்நாளும் வீச்சருவா இருக்கும்”, “வேலுக்கம்பு வீச்சருவா எங்க சாமிடா” போன்ற சாதிவெறியூட்டும் பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுவது ஆதிக்கச் சாதி மாணவர்களிடம் சாதிவெறியையூட்டி அரிவாளை கையிலெடுக்கவே ஊக்குவிக்கின்றன.
ஆதிக்கச் சாதி வெறியர்களால் கொண்டாடப்படும் கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளி யுவராஜ்
கவுண்டம்பாளையம், திரௌபதி, திலகர், சண்டியர் போன்ற ஆதிக்கச் சாதிவெறியூட்டும் திரைப்படங்கள், அதன் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் வன்மத்தை கொட்டும் பேச்சுகள் ஆகியவை ஏற்கெனவே சாதிய வலைக்குள் சிக்கியுள்ள இளைஞர்களிடையே சாதிய வன்மத்தை தீவிரப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் படுகொலையின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் சமீபத்தில் பெயிலில் வெளிவந்தபோது, அவன் தியாகியைப் போல் கொண்டாடப்பட்டதும் அதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்ததும் ஆதிக்கச் சாதிவெறி வன்மத்திற்கு தீனிப்போட்டன.
அதேபோல், முத்துராமலிங்கத் தேவர் போன்ற சாதிவெறித் தலைவர்களின் சிலைகளை நிறுவி பாதுகாத்து சாதிப் பெருமையைப் பேசுவதும், சமூகத்திற்காக தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., இமானுவேல் சேகரன் போன்ற தலைவர்களை சாதியத் தலைவர்களாக சித்தரித்துக் கொண்டாடும் அவலமும் தொடர்கிறது. இவ்வாறு பண்பாட்டு ரீதியாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் சாதிவெறியைத் தூண்டும் வேலைகளையே சாதிவெறி சங்கங்கள் செய்துவருகின்றன. இவற்றின் மூலம் எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் ஒருவன் சாதிய சிந்தனையிலேயே இருத்தி வைக்கப்படுகிறான்.
இவையன்றி, பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற வன்முறையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள் மாணவர்களிடத்தில் வன்முறையை ஊக்குவிக்கின்றன. அதேபோல், மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படும் சாதிவெறி மிருகத்தனத்தை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கேற்ப தென்மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கூல்-லிப் போன்ற போதைப்பொருள் கலாச்சாரம் இயல்பாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளிலேயே மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் சரளமாக வலம்வருகின்றன. இதனை பரப்பும் போதைப்பொருள் மாஃபியா கும்பலால் போலீசின் துணையின்றி இத்துணை சுதந்திரமாக செயல்பட முடியாது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இது தென்மாவட்டங்களில் மாணவர்கள் மத்தியில் சாதிவெறி ஊட்டப்படுவது, ஆதிக்கச் சாதி சங்கங்கள்-போதைபொருள் மாஃபியா கும்பல்-போலீசு ஆகியவற்றின் ஒற்றுமையுடன் மிகவும் நிறுவனமயமாக நடக்கிறது என்பதை உணர்த்துகிறது.
தீர்ப்பு எழுதும் தமிழ்நாடு போலீசு!
தமிழ்நாட்டில் தீவிரமடைந்துவரும் சாதித் தாக்குதல்களை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிப்பதை தி.மு.க. அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இதனை தமிழ்நாடு போலீசு முன்னின்று செய்கிறது. இதற்கு சில சமீபத்திய சான்றுகளை சுட்டிக்காட்ட முடியும்.
கபடி போட்டியில் வென்றதற்காக தேவேந்திரராஜா வெட்டப்பட்ட சாதியக் கொடூரத்தை இளைஞர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு மோதலாகவே போலீசு சித்தரித்தது. மேலும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த லட்சுமணனின் தங்கையை தேவேந்திரராஜா காதலித்து வந்ததாகவும் அதன் காரணமாக தேவேந்திரராஜா மீது லட்சுமணன் தாக்குதல் நடத்தியதாகவும் அப்பட்டமான பொய்யைப் பரப்பி போலீசு கீழ்த்தரமாக நடந்துகொண்டது. இதன்மூலம் இச்சம்பவத்தை சாதிவெறிச் செயல் என்ற கோணத்திலிருந்து திசைத்திருப்பி இளைஞர்களுக்கு இடையிலான முன்விரோத மோதல் என்ற வட்டத்திற்குள் சுருக்க முயன்றது. ஆனால், தேவேந்திரராஜாவிற்கு நடந்தது அப்பட்டமான சாதியத் தாக்குதலே, முன்விரோதம் போன்ற வேறெதுவும் காரணமல்ல என்பதை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
எட்டாம் வகுப்பு மாணவனான ரஹ்மத்துல்லாஹ் தாக்கப்பட்டபோது, இரு மாணவர்களுக்கிடையில் பென்சில் பிரச்சினை கடந்த ஒரு மாத காலமாகவே இருந்து வந்ததாகவும் அந்த மோதலில் ரஹ்மத்துல்லாஹ் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும் பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஒரு பென்சில் பிரச்சினைக்காக 13 வயதேயான சிறுவன் புத்தகப்பையில் அரிவாளை எடுத்துவந்து சக மாணவனை வெட்டுவான் என்பதை குழந்தை கூட நம்பாது. ஆனால், போலீசுதுறையோ இது மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினை மட்டுமே, இதில் சாதி ரீதியிலான நோக்கம் எதுவுமில்லை என்று தயங்காமல் பொய்கூறுகிறது.
அதேபோல், நாங்குநேரி மாணவன் சின்னதுரை கடந்த மாதத்தில் மீண்டும் தாக்கப்பட்டபோது, “சின்னதுரை மீதான முந்தைய சாதித் தாக்குதலுக்கும் தற்போதைய தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை. இது தனிப்பட்ட விவகாரம்” என்றார் போலீசு துணை ஆணையர் சந்தோஷ். “சின்னதுரையை வெட்டியது ஒரு பிக்-பாக்கெட் கும்பல். அவரிடம் காசு இல்லை என்பதால் அவரை வெட்டியுள்ளது” என்று தமிழ்நாடு போலீசு டி.ஐ.ஜி. தெரிவித்தார். சின்னதுரைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று போலீசிடம் சொல்லிவிட்டுச் சென்றபோதே இத்தாக்குதல் நடந்ததாகவும் கூறி சின்னதுரைக்கு உரிய பாதுகாப்பு வழங்காமலிருந்த தனது தவறை மறைத்து சின்னதுரை மீது பொய்குற்றம் சுமத்தியது தமிழ்நாடு போலீசு. மேலும் கிரண்டர் (Grindr) என்ற எல்.ஜி.பி.டி.க்யூ. (LGBTQ+) சமூகத்தினருக்கான செயலியை சின்னதுரை பயன்படுத்தி வந்ததாகவும் அதில் அறிமுகமானவரை சந்திக்க சென்றபோதே இத்தாக்குதல் நடந்ததாகவும் சில போலீசு அதிகாரிகள் பொய்யைப் பரப்பியதையடுத்து சமூகவலைத்தளம், ஊடகங்களில் சின்னதுரை அவமானப்படுத்தப்பட்டார்.
இதன்மூலம் சாதியத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் வேலையை போலீசு செய்து வருகிறது. சாதித் தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அதனை மூடிமறைப்பதற்கான வேலைகளில் போலீசு ஈடுபடுவதுடன் எந்தவித முறையான விசாரணையும் இன்றி வழக்குகளில் தீர்பெழுதும் பணியையும் தானே ஏற்று செய்கிறது.
உண்மையில், மாணவர்களை சாதிவெறியர்களாக மாற்றும் சாதிவெறித் தலைவர்களை சிறையிலடைப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு 24 மணிநேரமும் உயர்மட்ட பாதுகாப்பளிக்கும் பணியைதான் போலீசு மேற்கொண்டு வருகிறது. போலீசின் துணையுடனேயே சாதி சங்கங்களின் தலைவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
ஆதிக்கச் சாதித் தலைவர்கள் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் தலையிடுவதற்கும் சாதி ரீதியாக மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கும் இந்துத்துவ வர்ணாசிரம-சனாதன கருத்துக்குப் பலியாகியுள்ள போலீசு துறை உதவிபுரிகிறது என்பதே களநிலவரம். “அவன நீ என்கவுண்டரில் போட்டு தள்ளு. முடியலன்னா எங்ககிட்ட விட்டுவிடு. நாங்க பார்த்துக்கிறோம்” என்று சாதிவெறியர்கள் போலீசுக்கு உத்தரவிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதிவெறியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த போலீசு துறையிலும் பலர் ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு அவ்வமைப்பின் மறைமுக கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். சாதித் தாக்குதல்கள் தடுத்துநிறுத்தப்படாமல் அது தீவிரமடைந்து வருவதற்கு இதுவும் மிகமுக்கியமான காரணமாகும். அதேபோல், சாதிக் கொடுமைகளை அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல அடக்குமுறைகளையும் மீறி குற்றவாளிகள் மீது புகாரளிக்க முன்வந்தால், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக சித்தரித்து அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கிறது போலீசு. இதனை எதிர்த்து போராடினால் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொலை செய்யவும் துணிகிறது.
தமிழ்நாட்டில் வேர்பரப்பும் பாசிச சக்திகள் கள்ளமௌனம் காக்கும் தி.மு.க. அரசு!
2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றினாலும், பாசிச கும்பலுக்கு தமிழ்நாடு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. பிற மாநிலங்களில் மதக்கலவரத்தையும் இனவெறியையும் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. மதவெறிக் கும்பல் எவ்வளவு முயற்சித்தும் தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த முடியவில்லை. எனவே தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் சாதிவெறியைத் தூண்டிவிட்டு சாதிக் கலவரத்தை உருவாக்கி அதன்மூலம் தமிழ்நாட்டில் காலூன்றிவிடலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாகவே அனைத்து சாதி சங்கங்களிலும் ஊடுருவி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடத்தில் சாதி வெறியூட்டும் வேலையை செய்து வருகிறது.
குறிப்பாக, தென்மாவட்டங்களில் உள்ள சாதி சங்கங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல் முன்னெப்போதையும் விட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் அதிகரித்துவரும் சாதித் தாக்குதல்களும் படுகொலைகளும். சாதி சங்கத் தலைவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு நைச்சியமாக அடியாள் வேலை பார்க்கின்றனர் என்பதே உண்மையாகும்.
அந்தவகையில், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்புணர்வின் காரணமாக நேரடியாக இந்துத்துவ அரசியலை மேற்கொள்ள முடியாத பாசிச கும்பல் சாதி சங்கத் தலைவர்கள் மற்றும் சாதி ரீதியாக அரசியல் செய்பவர்கள் மூலம் தனது இந்துத்துவக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.-வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவலை தீவிரப்படுத்தி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் சாதிக் கலவரங்களை இன்னும் வீரியமாக கட்டவிழ்த்து விடுவதற்கான சதித்திட்டமே ஆகும்.
கபடி போட்டியில் வென்றதற்காக ஆதிக்கச் சாதி வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன் தேவேந்திர ராஜா
இதன் காரணமாக, வடமாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மீது கும்பல் படுகொலைகள் நடப்பது போல தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி கொடுமைகள் அரங்கேறும். சாதிய சங்கங்களில் ஊடுருவி அந்தந்த சாதி மக்களை பாசிஸ்டுகள் தங்களுடைய அடித்தளமாக மாற்றிக்கொள்வார்கள். பாசிசத்திற்கு எதிராக வீரியமாகக் களமாடக் கூடிய மாணவர்களும் இளைஞர்களும் பாசிஸ்டுகளின் அடித்தளமாக மாற்றப்படுகின்றனர் என்பது மிகப்பெரும் ஆபத்தாகும்.
இவற்றின் விளைவாக, தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு மிகப்பெரும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், தனது ஆட்சியை சமூக நீதி ஆட்சி என்றும் பாசிசத்திற்கு எதிரான ஆட்சி என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடிய தி.மு.க. இப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க கூட தயாராக இல்லை.
சாதியக் கட்டமைப்பை எதிர்ப்பதாக கூறிக் கொண்டாலும் வெறும் சீர்திருத்தங்களை மட்டுமே கொண்டுவந்து தங்களின் ஓட்டு அரசியலுக்காக இந்த வர்ணாசிரம கட்டமைப்பை தக்கவைக்கவே முயற்சிக்கிறது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக குற்றவாளிகளை பாதுகாத்துவந்த தி.மு.க. அரசு, தற்போது பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருப்பது அதன் சாதியத் தன்மையை வெளிக்காட்டுகிறது.
அதேபோல், 2023-இல் மாணவன் சின்னதுரை வெட்டப்பட்ட சம்பவத்தின் போது, மாணவர்களிடம் குடிகொண்டுள்ள சாதிவெறியை ஒழிப்பதற்கும் சாதியத் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் பரிந்துரைகளை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது தி.மு.க. அரசு. ஆய்வுகள் முடித்து 2024-இல் கல்வித்துறை அமைச்சரிடம் அவ்வறிக்கை ஒப்படைக்கப்பட்டாலும் தற்போது வரை அதன் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது தி.மு.க. அரசு.
16 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், வருகை பதிவேட்டில் மாணவர்கள் குறித்த சாதி விவரங்கள் இடம்பெறக்கூடாது; உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறையில் தெரிவிக்கக் கூடாது; சாதியைக் குறிக்கும் வகையில் பொட்டுகள் இடுவதையும் கயிறுகள் கட்டுவதையும் தடை செய்ய வேண்டும் உட்பட 20 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சமூகப் பணிகளில் கள நடவடிக்கைகளில் இறங்கும்போது மட்டுமே ஜனநாயகப்படுத்தப்படுவார்கள்; இதனை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் எல்லா சாதி மாணவர்களையும் ஒருங்கிணைத்து “சமூக நீதி மாணவர் படை” என்ற மாணவர் அமைப்பை தொடங்க வேண்டும் என்பது போன்ற முக்கிய பரிந்துரைகளை கொடுத்துள்ள அவ்வறிக்கையை அமல்படுத்தினால் ஆதிக்கச் சாதியினரிடத்தில் எதிர்ப்பு கிளம்பும் என்பதற்காகவே தி.மு.க. அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, நம் களப்போராட்டங்களின் மூலமே சாதி வெறியாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
அனைத்து சாதி மக்களுக்கு இருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்துத்துவக் கட்டமைப்பை நீடிக்கச்செய்யவே ஆதிக்கச் சாதியினரிடையே தலித்துக்கள் எதிரிகளாக முன்னிறுத்தப்படுகின்றனர். நம் கண்முன்னே இளைய தலைமுறை திசைமாறிச் செல்வதைப் பார்த்துக்கொண்டு இனியும் அமைதி காக்கப் போகிறோமா? அல்லது இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறோமா?
தமிழ்நாடு அரசே!
மக்களை மத, சாதிரீயாகப் பிளவுபடுத்தும் பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலை தடை செய்! ஆதிக்கச் சாதி சங்கங்களைத் தடை செய்
சாதிவெறியை தூண்டும் திரைப்படங்கள், பாடல்களை தடை செய்! நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உடனே நடைமுறைப்படுத்து!
என முழங்குவோம். அதிகரித்துவரும் தலித் மாணவர்கள் மீதான சாதியத் தாக்குதல்களுக்கு எதிராக களப் போராட்டங்களைக் கட்டியமைக்க அமைப்பாய் திரள்வோம்!