உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வடமாநிலத்தவர் | தோழர் வெற்றிவேல் செழியன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர் தேவேந்திரராஜா-வை மார்ச் 10 ஆம் தேதி ஆதிக்கச் சாதி வெறியர்கள் கொடூரமாக வெட்டிய நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மார்ச் 24 அன்று அவரை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாகவும் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாகவும் பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் சந்திக்கச் சென்றிருந்தோம்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அனைத்து தோழர்களையும் அனுமதிக்காத நிலையில் நானும் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல துணை செயலாளர் தோழர் தமிழ்வேந்தன் அவர்களும் தேவேந்திர ராஜாவை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம்.
மேலும் தேவேந்திரராஜாவின் தந்தையைச் சந்தித்தும் ஆறுதல் கூறினோம்.
தேவேந்திர ராஜாவின் தலையில் ஆறு இடத்தில் வெட்டி இருக்கிறார்கள் இரண்டு கைகளிலும் வெட்டி இருக்கிறார்கள் அதில் ஒரு கையில் மூன்று விரல்கள் மற்றும் கட்டை விரல் இல்லாமல் இருக்கிறது. தேவேந்திரராஜா சாதி வெறியர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசே! இன்னும் எத்தனை காலம் மௌனம் சாதிக்கப் போகிறீர்கள்? இப்படிப்பட்ட கொடூரங்களை அனுமதித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்?
சாதிய தாக்குதல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களைத் தடை செய்!
மேலும் வழக்கறிஞர் மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைகளை உடனடியாக பள்ளிகளில் நடைமுறை படுத்திடு!
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடவேண்டும் என்று அக்கிராம மக்கள் 2021 ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறார்கள்.
ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகிறது தமிழ்நாடு அரசு. மேலும் போராடும் மக்களுக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது.
இந்நிலையில் மார்ச் 23 அன்று நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி ”2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு சார்பாக கலந்துகொண்டு பாடல் பாடினோம்.
இந்நிகழ்வை முடித்துவிட்டு இரவு தூத்துக்குடியில் தங்கிவிட்டோம்.
மார்ச் 24 காலை மீன் கழிவு நிறுவனத்தை மூட வேண்டும் என்று போராடி வருகின்ற பொட்டலூரணி மக்களைச் சந்திக்கச் சென்றோம்.
அப்பொழுது மீன் கழிவு எதிர்ப்பு போராட்டக் குழு தோழர்களைச் சந்தித்தோம்.
அவர்கள் இந்த மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட போராட்டங்களையும் அதில் அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும் அவற்றை கிராம மக்கள் எதிர்கொண்டதையும் விரிவாக விளக்கினார்கள்.
உண்மையில் அதைக் கேட்கும் போது வியப்பாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் அவ்வளவு ஒற்றுமையாக நின்று துணிச்சலாக எதிர்த்திருக்கிறார்கள். பிரச்சினையைப் பக்குவமாகக் கையாண்டிருக்கிறார்கள்.
இவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆளும் வர்க்கங்கள் பணம் கொடுத்து அம்மக்களை விலைக்கு வாங்க பல்வேறு முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் முறியடித்து மக்கள் வென்றிருக்கிறார்கள்; அவர்கள் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறார்கள்.
உண்மையில் பொட்டலூரணி கிராம மக்கள் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்தில் உறுதியாக நின்று அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அதை எங்களால் நன்கு உணர முடிந்தது.
குறிப்பாக பொட்டலூரணி மக்கள் மற்றும் தோழர்கள் நாங்கள் சென்றிருந்த போது அன்பாக அரவணைத்தார்கள். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் என் அப்பா வயது கொண்டவர்கள்; அதைவிடவும் வயது முதிர்ந்தவர்கள்தான்.
நாங்கள் கல்லூரி படிக்கும் மாணவர்கள் என்று தெரிந்த பின்பும் அவ்வளவு மரியாதையுடனும் அன்புடனும் தோழர்கள் என்றே பேசினார்கள்.
இன்னொரு முக்கியமான விசயம் மாணவர்கள் படிப்பதற்காக படிப்பகம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பார்வையிட்டோம்; வாழ்த்துக்களையும் தெரிவித்தோம்.
தொகுப்பாகச் சொல்லப்போனால் பொட்டலூரணி மக்களிடமிருந்து புதிய விஷயங்களை நிறைய கற்றுக்கொண்டோம். நல்ல அனுபவத்தைப் பெற்றுக்கொண்டோம்.
மீன் கழிவு நிறுவனத்தை மூட வேண்டும் என்ற பொட்டலூரணி மக்களின் போராட்டம் வெல்லட்டும்!
போராட்டக் களத்தில் மக்களோடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 7-8 | 1989 பிப்ரவரி 15-28, மார்ச் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மார்ச் 17 ஆம் தேதி அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பதும் பைஜாமாவை கழற்றுவதும் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியாகாது என்று மிகவும் மோசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி அன்று உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு அம்மாவும் மகளும் தங்களது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் இடைமறித்த அவர்களது கிராமத்தைச் சேர்ந்த பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் மகளை தாங்கள் வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். அம்மாவும் தனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையில் தன் மகளை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் இரண்டு இளைஞர்களும் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தியுள்ளனர். பின்னர் பவன் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொள்ள ஆகாஷ் சிறுமியின் மார்பகங்களைப் பிடித்தும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்தும் அருகிலிருந்த பாலத்திற்கு அடியில் இழுத்துச் சென்றுள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியே டிராக்டரில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் ஓடி வந்துள்ளனர். உடனே இரண்டு இளைஞர்களும் துப்பாக்கியைக் காட்டி இருவரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இளைஞர்கள் ஒருவனின் தந்தை போலீசில் புகார் அளித்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். மறுநாள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜனவரி 2022 இல் காஸ்கஞ்ச் போக்சோ நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். அதில் தனது மகளுக்கு நடந்த கொடூர நிகழ்வைக் குறிப்பிட்டு மூன்று பேரின் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டலுக்காக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடும்படி கோரியுள்ளார். அவரின் விண்ணப்பத்தைப் புகாராகப் பதிவு செய்த நீதிமன்றம் மார்ச் 21, 2022 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப் போலீசுக்கு உத்தரவிட்டது.
படிக்க: கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்
நீதிமன்றம் 15 மாதங்கள் கழித்து 2023 ஆண்டு ஜூன் மாதத்தில் விசாரணைக்காக இரண்டு இளைஞர்களை ஆஜராகும்படி இ.பி.கோ பிரிவுகள் 376 (பாலியல் வன்புணர்வு) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18 (குற்றம் செய்ய முயற்சித்தல்) ஆகியவற்றின் கீழ் சம்மன் அனுப்பியது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் தந்தைக்கு இ.பி.கோ பிரிவுகள் 504 (அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து மூன்று குற்றவாளிகளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி அன்று நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பகை காரணமாக பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தனிப்பட்ட குடும்ப தகராறு போன்று மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
பின்னர் பேசிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை ஊகிக்க இந்த தரவுகள் போதுமானதாக இல்லை” என்று கூறினார்.
பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து, அவரது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது. ஆடையைக் கழற்றும் நோக்கத்துடன் தாக்குதல் என்ற பிரிவின் கீழ் வரும் என்று பெண்கள் மீதான தன்னுடைய ’சட்ட வியாக்கியானத்தை’ கூறியுள்ளார்.
மேலும் ”பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான சட்டப்பூர்வ வரம்பை இந்த வழக்கு பூர்த்தி செய்யவில்லை. தயாரிப்புக்கும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கான உண்மையான முயற்சிக்கும் இடையில் அதிக அளவிலான வேறுபாடு உள்ளது” என்று குற்றவாளிகளுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குற்றவாளிகள் பவன் மற்றும் ஆகாஷ் மீதான முந்தைய விசாரணை நீதிமன்றத்தின் சம்மனை நீக்கி இ.பி.கோ பிரிவு 354 (ஆடையைக் கழற்றும் நோக்கத்துடன் தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10 (மோசமான பாலியல் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
படிக்க: இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை
இந்த உத்தரவு பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில மணி நேரங்களுக்குப் பின்பு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா, நீதிபதியை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு கடிதம் எழுதினார்.
கடிதத்தில் “இந்தியாவின் பெண்கள் என்ற அமைப்பின் சார்பாக மிகுந்த வேதனையுடனும் கவலையுடனும் எழுதுகிறேன். நீதிபதியின் விளக்கம் மிகவும் தவறானது” என்று வழக்கறிஞர் குப்தா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ”இந்த விஷயத்தில் நீதிபதியின் அணுகுமுறை உணர்ச்சியற்றது, பொறுப்பற்றது. அனைத்து வயது பெண்களுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமூகத்திற்கு மிகவும் மோசமான செய்தியை அனுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் 21 அன்று மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, “இந்த முடிவை நான் ஆதரிக்கவில்லை. மேலும் உச்ச நீதிமன்றமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் இது ஒரு சிவில் சமூகத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் ”இத்தீர்ப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தீர்ப்பில் கூறப்பட்ட கருத்துகளால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது மிகவும் வெட்கக்கேடான சூழ்நிலை. அந்த ஆண்கள் செய்த செயலை எப்படி பாலியல் வன்கொடுமைக்குச் சமமான செயலாகக் கருத முடியாது? மார்பைப் பிடிப்பதும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்க்க முயல்வதும் பாலியல் வன்கொடுமை குற்றமல்ல என்ற கூற்று மிகவும் உணர்ச்சியற்றது; சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்” என்று நீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
”நாட்டில் பெண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுவது மிகவும் அருவருப்பானது. இதை நாம் போக்க வேண்டும்,” என்று திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் மாலியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமணத்திற்குப் பின்பு மனைவியின் விருப்பமின்றி கட்டாய பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றமாகாது என்கிற மோசமான தீர்ப்பை வழங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது என்று பெண்களுக்கு எதிரான மிகவும் மோசமான தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை அங்கீகரிக்கும் விதத்தில் சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் அமைவதானது நீதித்துறையில் பாசிச சித்தாந்தம் ஆதிக்கம் பெறுவதைக் காட்டுகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 6 | 1989 பிப்ரவரி 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 4-5 | 1989 ஜனவரி 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பெருமுதலாளிகளுக்கான வங்கிக் கடன் ரத்து, வங்கி காலிப் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்டவற்றை கண்டித்து அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நாடு தழுவிய மாபெரும் வங்கி ஊழியர்களின் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும்; வாரத்திற்கு 5 நாட்கள் வேலைத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்; பணித்திறன் ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊதியத்தொகை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்திற்கு அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 13 ஆம் தேதி அன்று அழைப்பு விடுத்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி அன்று 9 வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மன்றம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி மார்ச் 23 ஆம் தேதி நள்ளிரவு முதல் 25 ஆம் தேதி நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (UFBU United Forum Bank Of Unions) பொதுச் செயலாளர் VSR சேகர் “பொதுத்துறை நிறுவனமான வங்கிகளில் ஊழியர்களின் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவைகளை வழங்க முடியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வங்கிகளில் போதுமான அளவில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஊழியர்களுக்கு அதிக அளவில் பணிச்சுமை ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) மேகாலயா மாநில ஒருங்கிணைப்பாளர் மவ்ரோ “வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்றன. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வங்கிகளில் போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால் வங்கிகளில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை உள்ளது” என்று கூறினார்.
படிக்க: வங்கிச் சட்டம்: மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கான மாபெரும் தயாரிப்பு
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி கடந்த 11 ஆண்டுகளில் 1,53,895 ஊழியர் பணிகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆண்டில் 3,98,891 ஆக இருந்த எழுத்தர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 2,46,965 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2013 ஆம் ஆண்டில் 1,53,628 ஆக இருந்த துணை ஊழியர் பணிகள் 2024 ஆம் ஆண்டில் 94,358 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியில் 2013 ஆம் ஆண்டில் 8,86,490 ஆக இருந்த ஊழியர் பணிகளில் 1,39,811 பணிகள் குறைக்கப்பட்டு 7,46,679 பணிகள் மட்டுமே தற்போது உள்ளது. ஆனால் தனியார்த் துறை வங்கிகளில் 2013 ஆம் ஆண்டில் 2,29,124 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 6,17,406 அதிகரித்து 2024 ஆம் ஆண்டில் 8,46,530 ஆக உள்ளது. வங்கிகள் திட்டமிட்டு தனியார்மயமாக்கப்பட்டு வருவதை இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது முதல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. விமான துறை தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது.. அடுத்ததாக கல்வித்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வரிசையில் கடந்த 10 ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக வங்கி சட்டங்களைத் திருத்துவது, திட்டமிட்டு வங்கி ஊழியர்களை நியமிக்காமல் இருப்பது, போன்றவற்றின் மூலம் அரசு வங்கிகள் இயங்குவதற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது, அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வங்கிகள் சட்டத்திருத்த மசோதாவை (The Banking Laws Amendment Bill, 2024) நிறைவேற்றியது. பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதைத் தீவிரப்படுத்தவே இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி, அம்பானிகளுக்காக நாட்டையே கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கும் பாசிச கும்பலின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராக, மாற்று சமூக பொருளாதார திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டியது ஜனநாயக சக்திகளாகிய நம்முடைய கடமையாகும். வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 3 | 1988 டிசம்பர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நடந்துமுடிந்த டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க, நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றினாலும், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. இதனால், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு குடைச்சல் கொடுத்து, அதன் அதிகாரங்களைப் பறித்து நிழல் ஆட்சியை நடத்திவந்த பா.ஜ.க. தற்போது நேரடியாகவே டெல்லியின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
மறுபுறம், கடந்த பத்தாண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்துவந்த ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில் 40 தொகுதிகளை பா.ஜ.க-விடம் பறிகொடுத்து தோல்வியடைந்துள்ளது. 2012-இல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி குறுகிய காலத்திற்குள் டெல்லியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், கட்சி கட்டமைப்பை பிற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தி தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெற்றது. ஆனால், தற்போது கட்சி தொடங்கப்பட்ட டெல்லியிலேயே ஆட்சி அதிகாரத்திலிருந்து ஆம் ஆத்மி அகற்றப்பட்டிருப்பது, டெல்லி மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் அதன் கட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும் மாநில தலைமைகள் மீதான கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதேசமயம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு நெருக்கடிகளையும் இழப்புகளையும் சந்தித்து தனிப்பெரும்பான்மையை கூட பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி என அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று வருகிறது. இத்தொடர் வெற்றிகளானது பா.ஜ.க-விற்கு தான் இழந்த மக்கள் அடித்தளத்தையும் செல்வாக்கையும் மீட்டமைப்பதற்கான வாய்ப்புகளாக அமைந்துள்ளன. மேலும், இந்த வெற்றிகளானது ஒரே நாடு-ஒரே கட்சி என்ற பாசிச சர்வாதிகார பாதையில் பயணித்து கொண்டிருக்கும் பா.ஜ.க., பிற கட்சிகளை ஒழித்துக்கட்டி வருவதையும், பாசிச எதிர்ப்பு சித்தாந்தம்-கொள்கை-திட்டமற்ற கட்சிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகி வருவதையும் துலக்கமாக காட்டுகிறது.
டெல்லியின் சூழலும் ஆம் ஆத்மியின் கவர்ச்சிவாத அரசியலும்
டெல்லி இந்தியாவின் தலைநகரமாக இருந்தாலும், கூர்மையான வர்க்க-சாதி-சூழலியல் முரண்பாடுகளைக் தன்னகத்தே கொண்ட ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நகரமாகும்.
அரசியல் கட்சி தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் ஆடம்பரமான வீட்டு வளாகங்கள் நிறைந்திருக்கும் டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள் குடிசைகளிலும் சாலையோரங்களிலும் நாள்தோறும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மொத்தமாக 3.4 கோடி மக்கள் வாழும் டெல்லியில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், குறைந்தபட்ச அடிப்படை வசதி, சுகாதாரம், பாதுகாப்பின்றி குடிசைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். டெல்லியின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் சுமார் பத்து சதவிகிதத்தினர் இவ்வாறு குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களே.
அதேபோல், டெல்லி முழுவதும் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் தங்குமிடங்களின்றி சாலையோரங்களில் வசிக்கின்றனர். வறுமை, வேலையின்மை, குடும்பப் பிரச்சினைகள், வீடுகள் இடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலையோரங்களுக்கு துரத்தியடிக்கப்படும் இம்மக்களுக்கு தங்குமிடங்களை ஏற்படுத்தி தருவதற்கோ மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கோ அரசு சார்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இம்மக்களுக்கு தங்குமிடங்களை ஏற்பாடு செய்து கொடுத்தாலும் மொத்த தேவையுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சொற்பமாகவே உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு, வெப்ப அலை, கடுங்குளிர், பனிப்பொழிவு, அதிக மழைப்பொழிவு, வெள்ளம் என டெல்லி எதிர்கொள்ளும் மோசமான சூழலியல் பேரழிவுகளுக்கு பலியாகி இம்மக்கள் நூற்றுக்கணக்கில் செத்து மடிகின்றனர். தற்போது கூட டெல்லியில் நிலவும் கடுங்குளிரால் 56 நட்களில் மட்டும் 474 மக்கள் இறந்துள்ளனர்.
அதேபோல், டெல்லியின் மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள் 12 சதவிகிதமாகவும் தலித் மக்கள் 16 சதவிகிதமாகவும் உள்ளனர். டெல்லியில் வேர்பரப்பியுள்ள சங்கப் பரிவார கும்பல் இஸ்லாமிய மற்றும் தலித் மக்களுக்கு எதிராக கலவரங்களையும் வன்முறை வெறியாட்டங்களையும் கட்டவிழ்த்துவிடுவது என்பது தொடர்கதையாகியுள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது டெல்லியின் மொத்த மக்கள்தொகையில் 45 சதவிகிதத்தினர் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகவும் டெல்லியின் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடியவர்களாகவும் உள்ளனர். இந்தியாவின் தலைநகரம் என்பதால் கணிசமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களும் உள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பலதரப்பட்ட மக்கள் கடந்த காலங்களில் காங்கிரசின் வாக்குவங்கியாக இருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் உருவாக்கத்திற்கு பின்னர் அக்கட்சியின் வாக்குவங்கியாக மாறினர். குறிப்பாக, தன்னை ஒரு சாதாரண அரசு அதிகாரியாகவும் எளிய நடுத்தர வர்க்க பிரதிநிதியாகவும் ‘ஊழல் எதிர்ப்பு’ போராளியாகவும் முன்னிறுத்திகொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் தேர்தல் அரசியலில் தீர்மானகரமான சக்தியாக உள்ள நடுத்தர வர்க்க மக்களை ஆம் ஆத்மியின் அடித்தளமாக மாற்றினார்.
ஆனால், டெல்லியில் ஆட்சியைப் பிடித்த குறுகிய காலத்திலேயே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு சாயங்கள் கரையத் தொடங்கின. தனது போராளி அரிதாரத்தையெல்லாம் கலைத்துவிட்டு அப்பட்டமான கார்ப்பரேட் சேவையில் இறங்கினார். அதை மூடிமறைப்பதற்கு கவர்ச்சிவாதத் திட்டங்களை அமல்படுத்தி தலித் மக்கள், இஸ்லாமியர்கள், அடித்தட்டு மக்களை தனது வாக்குவங்கியாக மாற்றிகொண்டார்.
அதேசமயத்தில் இந்து மக்களின் வாக்கு பா.ஜ.க-வை நோக்கி சென்றுவிடக் கூடாது என்பதற்காக மிதவாத இந்துத்துவ அரசியலையும் ஆதிக்கச் சாதி மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக சாதிய அரசியலையும் முன்னெடுத்தார். இஸ்லாமிய மக்களை சங்கப் பரிவார கும்பல் வேட்டையாடுவதை வேடிக்கை பார்த்ததுடன் ஆம் ஆத்மி அதற்கு துணைபோனது. மக்கள் பிரச்சினைகளை மூடிமறைக்க கவர்ச்சிவாத அரசியலை தனது முதன்மை ஆயுதமாக கையிலெடுத்தது.
ஆனால், கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் இவையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாறியதோடு, ஆம் ஆத்மியின் மக்கள் விரோதமான செயல்பாடுகள் மக்களிடம் அதிருப்தியையும் கோவத்தையும் அதிகரித்தன. இதனை முதலீடாக கொண்டே பா.ஜ.க. தற்போது டெல்லியில் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆம் ஆத்மிக்கு எதிரான பா.ஜ.க-வின் அஸ்திரங்கள்
இத்தேர்தலில், ஆம் ஆத்மியை வீழ்த்துவதற்காக “ஆம் ஆத்மி ஊழல்மயமாகிவிட்டது”, “டெல்லியில் வளர்ச்சி இல்லை” ஆகிய பிரச்சாரங்களை பா.ஜ.க. கையிலெடுத்தது.
இப்பிரச்சாரத்தை முன்னின்று தொடங்கிவைத்த மோடி, ஆம் ஆத்மி டெல்லிக்கு பேரழிவானது என்று பொருள்படும் “ஆப்-டா” (AAP-Da) என்ற வார்த்தையால் அக்கட்சியை அழைத்தார். கெஜ்ரிவாலை “கட்டார் இமாந்தர்” (மிகவும் நேர்மையானவர்) என்று அக்கட்சியினர் பரவலாக அழைக்கும் நிலையில், இனியும் கெஜ்ரிவாலை அவ்வாறு அழைப்பதற்கு முகாந்திரமில்லை என பா.ஜ.க-வினர் பிரச்சாரம் செய்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மகால் எனப்படும் வீட்டை சீரமைக்கும் பணி நடந்துவந்த நிலையில், 40 கோடி செலவில் பிரம்மாண்டமாக வீடு கட்டப்படுவதாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. வெளிநாடுகளிலுள்ள ஆடம்பரமான வீடுகளின் புகைப்படங்களை ஷீஷ் மகால் என்ற பெயரில் இணையத்தில் பரப்பியது. ஆம் ஆத்மி கட்சியினர் மீது பா.ஜ.க. அரசு பதிந்த ஊழல் வழக்குகள் ஏற்கெனவே நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்பிரச்சாரங்கள் அதனை மேலும் தீவிரப்படுத்தின.
இந்த அதிருப்தியை தனது வாக்குகளாக மாற்றி கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று 2025-26 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பா.ஜ.க. அறிவித்தது. முன்னதாக, டெல்லியில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள அரசு ஊழியர்களையும் ஓய்வூதியம் பெறுபவர்களையும் குறிவைத்து எட்டாவது ஊதியக் குழு அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இவையெல்லாம் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் பெரும் தாக்கம் புரிந்தன. மேலும், பா.ஜ.க. அரசால் ஊழல் புகார் சுமத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியோ உள்ளிட்டு ஆம் ஆத்மியின் பல முக்கிய தலைவர்கள் இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருப்பது பா.ஜ.க-வின் தந்திரங்கள் மக்களிடம் செல்லுபடியாகி இருப்பதையே காட்டுகிறது.
அடுத்ததாக, அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாக்குவங்கியில் பிளவை ஏற்படுத்துவதற்காக மோசமான சாலைவசதி, வாகன நெரிசல், பராமரிப்பற்ற குப்பைக் கிடங்குகள், சீரற்ற கழிவுநீர் வடிகால், குடிநீர் பற்றாக்குறை, மாசுபாடு உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகளை பா.ஜ.க. கையிலெடுத்தது. டெல்லியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள யமுனை நதி சீர்கேட்டை, சூற்றுச்சூழல் சீர்கேடு-மக்கள் பாதிப்பு என்ற கோணத்தில் அல்லாமல், அதன் புனிதத்தன்மை பறிபோவதாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. மக்கள் பிரச்சினைகளையும் இந்துத்துவமயப்படுத்தி பிரச்சாரம் செய்தது.
மேலும், ஆம் ஆத்மியின் அடித்தளமாக உள்ள குடிசைப்பகுதி மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு கவர்ச்சிவாதத் திட்டங்களை வாரியிறைத்ததுடன், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் ஆம் ஆத்மியின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. 2024 நாடளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே “ஜக்கி விஸ்தாரக் யோஜனா” என்ற திட்டத்தை அறிவித்து குடிசைப் பகுதிகளின் நிலைமையை மேம்படுத்தப் போவதாக பிரச்சாரம் செய்தது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் அசோக் விகார் என்ற குடிசைப் பகுதியில் மோடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை திறந்து வைத்ததும் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டியதும் குடிசைப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் தாக்கம் புரிந்தன. அமித்ஷா நேரடியாக குடிசைப் பகுதிகளுக்கே சென்று வாக்குகளை சேகரித்தார். ஆர்.எஸ்.எஸ். சார்பாக குடிசைப் பகுதிகளுக்கென அப்பகுதி மக்களையும் உள்ளடக்கிய தனி பிரச்சார அமைப்பே உருவாக்கப்பட்டிருந்தது.
2023-ஆம் ஆண்டு ஜி-20 மாநாட்டின்போது ஓக்லா, சுந்தர் நாகரி, துக்ளகாபாத் உள்ளிட்ட குடிசைப் பகுதிகள் பாசிச பா.ஜ.க. கும்பலால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசால் இம்மக்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. ஆனால், இத்தேர்தலில் குடிசைப்பகுதி தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருப்பதும், அதன் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பதும் பா.ஜ.க-வின் பிரச்சாரங்கள் இம்மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்ற வேதனைக்குரிய உண்மையை எடுத்துக்காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளாக டெல்லியை ஆட்சிசெய்த ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகமிழைத்தது; பா.ஜ.க-விற்கு இணையாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இம்மக்களின் பிரச்சினைகளை வெறும் வாக்குகளாக மட்டுமே அணுகியது போன்றவையே இதற்கு காரணமாகும்.
அதேபோல், இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் ஏழு தொகுதிகளிலும் கடந்தமுறை ஆம் ஆத்மி வெற்றிபெற்ற நிலையில் இம்முறை முஸ்தபாபாத் தொகுதியில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. அத்தொகுதியில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர் வாக்குகளை பிரித்தது இதற்கு ஒரு காரணம் எனினும், மொத்தமாகவே ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கும் இஸ்லாமிய மக்களின் வாக்கு சதவிகிதம் இத்தேர்தலில் சரிந்துள்ளது. காஷ்மீர் சிறப்புரிமை இரத்து உள்ளிட்டு இஸ்லாமிய மக்கள் மீது பாசிசக் கும்பல் தொடுத்த தாக்குதல்களுக்கும் கலவரங்களுக்கும் ஆம் ஆத்மி மறைமுகமாக துணைநின்று இஸ்லாமிய மக்களுக்கு துரோகமிழைத்ததே இதற்கு முக்கிய காராணமாகும். இத்தேர்தலின்போது இஸ்லாமிய மக்களின் பகுதிகளில் ஆம் ஆத்மி பெரியளவில் பிரச்சாரம் செய்யாமல் புறக்கணித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பா.ஜ.க. நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளை டெல்லியில் இறக்கி வேலை செய்துள்ளது. இத்தேர்தலையொட்டி ஏறக்குறைய 50 ஆயிரம் சிறியளவிலான சந்திப்புகள், கூட்டங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ். நான்கு லட்சம் மக்களைச் சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலைத் தொடர்ந்து தற்போதைய டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. மீதான ஆர்.எஸ்.எஸ்-இன் பிடி இறுகி வருவதை இது வெளிக்காட்டியது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பல்வேறு தேர்தல் முறைகேடுகளிலும் பா.ஜ.க. ஈடுபட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான நான்கு ஆண்டுகளில் டெல்லியில் நான்கு லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கைகள் அதிகரித்திருந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான ஏழு மாதங்களில் மட்டும் நான்கு லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இணைந்துதான் ஆம் ஆத்மியை வீழ்த்தி பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.
நிர்பந்தித்து ஏற்கச் செய்யும் பார்ப்பனிய நரித்தனம்:
ஆம் ஆத்மி முதல் பலி மட்டுமே!
டெல்லியில் இவ்வெற்றியை சாதிப்பதற்காக பா.ஜ.க. கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீவிரமாக முயற்சி செய்து வந்தது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., நீதிமன்றம், போலீசு என ஒட்டுமொத்த அதிகாரக் கட்டமைப்பின் துணையுடன் ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்டுவது, அதன் அதிகாரத்தைப் பறிப்பது என தொடர்ந்து காய்களை நகர்த்தி வந்தது.
குறிப்பாக, 2020-ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவிய பிறகு “டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசாங்கத்தின் (திருத்தம்) சட்டம், 2023”-ஐ பா.ஜ.க. நிறைவேற்றியது. இதன்மூலம் டெல்லியில் அதிகாரிகளை பணியமர்த்துவது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் ஆம் ஆத்மி அரசாங்கத்திடமிருந்து பறிக்கப்பட்டு ஆளுநர் கரங்களில் குவிக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தை அணுகியதையடுத்து, அச்சட்டத்திற்குத் தடைவிதித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, டெல்லியின் நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரங்கள் அரசாங்கத்தினுடையது என்று உறுதி செய்தது.
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதித்த பா.ஜ.க. உடனடியாக அவசர சட்டம் இயற்றி சட்டத்தை நிறைவேற்றியது. அதன்பிறகு தற்போதுவரை இச்சட்டத்தின் மீதான விசாரணையும், ஆம் ஆத்மி தாக்கல் செய்த இன்ன பிற மனுக்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இச்சட்டத் திருத்தத்திற்கு பிறகு டெல்லி ஆம் ஆத்மி அரசால் தனது அரசாங்கத்திற்கென ஒரு உதவியாளரை கூட நியமித்துகொள்ள முடியவில்லை. அரசு ஊழியர்கள் மீது கட்டுப்பாடு, முடிவெடுக்கும் அதிகாரமற்ற முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மாற்றப்பட்டார். சிறிய திட்டங்களைக் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை என ஆம் ஆத்மி வெளிப்படையாகவே தெரிவித்தது. முன்னர், முக்கியமான கொள்கை முடிவெடுக்கும் விவகாரங்களுக்கு மட்டுமே துணைநிலை ஆளுநரின் ஒப்புதல்கள் தேவைப்பட்ட நிலையில், இச்சட்டத் திருத்தத்திற்கு பிறகு அன்றாட நிகழ்வுகளுக்குக் கூட ஆளுநரின் ஒப்புதலை நாட வேண்டிய சூழல் உருவானது. ஆம் ஆத்மி அரசுக்கு குடைச்சல் கொடுப்பதற்கேற்ப குஜராத் பா.ஜ.க. தலைவரான வினய் குமார் சக்சேனா டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் டெல்லி அரசாங்கத்தின் செயல்பாடுகளே முடக்கப்பட்டன. மொஹல்லா மருத்துவகத்தின் (கிளினிக்) மருந்துப்பொருள் கொள்முதலில் ஊழல் நடந்ததாகக் கூறி, டெல்லியின் சுகாதாரத்துறை, மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வாங்குவதற்கான நிதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது இதற்கு சான்றாகும்.
முன்னதாக, 2022-ஆம் ஆண்டு நகராட்சி தேர்தலில் பல இடங்களில் பா.ஜ.க-வை தோற்கடித்து ஆம் ஆத்மி வெற்றிபெற்றதையடுத்து, “டெல்லி நகராட்சி திருத்த மசோதா 2022-ஐ” நிறைவேற்றி டெல்லியின் நகராட்சிகளையும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் பா.ஜ.க. கொண்டுவந்தது.
இதன் உச்சக்கட்டமாக, ஆம் ஆத்மி கட்சியையும் ஆட்சியையும் ஒட்டுமொத்தமாக முடக்கும் விதமாக அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர குமார் என முக்கியமான 17 தலைவர்களை சிறையிலடைத்தது. இந்தியாவில் பதவியிலிருக்கும் முதலமைச்சர் ஒருவரை கைது செய்தது இதுவே முதன்முறையாகும். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகுவது போன்ற முயற்சிகளை எடுத்தாலும் பா.ஜ.க-வின் தீவிரமான பிரச்சாரத்திற்கு முன் அவை செல்லுபடியாகவில்லை.
இவையெல்லாம் மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மீதான அதிருப்தியை அதிகரித்தன. ஆம் ஆத்மி அரசால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பதையும் மக்கள் உணர்ந்து கொண்டனர். ஆனால், டெல்லி அரசு முடக்கப்படுவதை மக்கள் மத்தியில் கொண்டுசென்று பிரச்சாரம் செய்து போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக சட்டப்போராட்டங்களிடத்தில் ஆம் ஆத்மி சரணடைந்தது. இவையெல்லாம் பா.ஜ.க-விற்கே சாதகமாக அமைந்தன.
டெல்லி தேர்தல் முடிவு மீதான விவாதத்தில் இதுவே முக்கியமான பரிசீலனைக்குரியது. டெல்லி அரசாங்கத்தை முடமாக்கி வெற்றிபெற்ற பா.ஜ.க-வின் இந்த உத்தி டெல்லிக்கு மட்டும் உரித்தானதல்ல. டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதனாலோ, ஆம் ஆத்மி தேசிய கட்சியாக வளர்கிறது என்பதாலோ மட்டுமே பா.ஜ.க. ஆம் ஆத்மி அரசை முடக்கவில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் இந்தநிலை ஏற்படும், அவை ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்பதே கவனத்திற்குரிய விசயம்.
சான்றாக, தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டிலிருந்து வசூலிக்கப்படும் வரியில் சொற்பத் தொகையை மட்டுமே நிதியாக திருப்பியளிக்கிறது மோடி அரசு. அதையும் முறையாக கொடுக்காமல் இழுத்தடிப்பது; சொத்துவரி, மின்கட்டணம் போன்றவற்றை உயர்த்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்று மிரட்டி நிர்பந்திப்பது என சொந்த நாட்டிற்குள்ளேயே ஐ.எம்.எஃப்-வை போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளிடம் அடாவடி செய்கிறது. கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்தாலும் பேரிடர் நிதியென ஒரு பைசா கூட தரப்படுவதில்லை. தற்போது கூட புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் ஐந்தாயிரம் கோடி நிதியை விடுவிக்க முடியாது என்று பாசிச மோடி அரசு மிரட்டுகிறது.
டெல்லி, தமிழ்நாடு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநில அரசுகளுக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், இக்கட்சிகள் இதற்கெதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் அதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் பாசிச கும்பலின் இந்துராஷ்டிர பொருளாதாரக் கட்டமைப்பிற்குள்ளேயே உழல்கின்றன.
துணைநிலை ஆளுநரை கொண்டு சட்டமன்றத்தை முடக்குவது, நிதியை வழங்க மறுப்பது, நிர்பந்தங்களை விதிப்பது போன்றவையெல்லாம் பா.ஜ.க-வின் தொந்தரவுகளாகவும் ஜனநாயகமற்ற தன்மையாகவுமே எதிர்க்கட்சிகள் பார்க்கின்றனவே ஒழிய, அவையெல்லாம் பெயரளவிலான மாநில உரிமை, கூட்டாட்சி போன்றவற்றையெல்லாம் இல்லாதொழிக்கும் பா.ஜ.க-வின் கட்டமைப்பு மாற்றங்கள் என புரிந்துகொண்டு எதிர்ப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் இக்கட்சிகளிடம் மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டம் இல்லை என்பதே ஆகும்.
ஆனால், இந்தியாவில் பாசிச சர்வாதிகாரம் அரங்கேறிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பு மாற்று திட்டமில்லாமல், வெறுமனே கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஆட்சியில் தொடர முடியாது என்பதையே டெல்லி தேர்தல் முடிவு உணர்த்துகிறது.
சித்தாந்தமற்ற கட்சிகளின் அந்திமகாலம்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலை போலவே டெல்லி தேர்தலிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இரு கட்சிகளும் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடாமல் தனித்து நின்றே போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் தலைவர்களும் மேற்கொண்ட பிரச்சாரங்கள் பா.ஜ.க-வின் பிரச்சாரப் பணியை எளிதாக்குவதாக அமைந்தன.
தேர்தல் முடிவில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லையெனினும் எட்டு சதவிகித வாக்குகளை பெற்று பல தொகுதிகளில் ஆம் ஆத்மியின் வாக்குகளை பிரித்துள்ளது. காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து போட்டியிட்டிருந்தால் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியுமென்றும், பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையாக பெற்றதை தடுத்திருக்க முடியுமென்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இத்தேர்தல் முடிவு குறித்த காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகள் இத்தேர்தல் முடிவின் மீதும் காங்கிரஸ் கட்சி எவ்வித பரிசீலனையையும் மேற்கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. டெல்லி காங்கிரசின் தலைவர் தேவேந்திர யாதவ், இம்முறை காங்கிரசு பெற்ற பூஜ்ஜியம் (தொகுதி) கடந்த தேர்தலில் பெற்ற பூஜ்ஜியத்திலிருந்து வேறுபட்டது என்றும் ஆம் ஆத்மி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருப்பதால், டெல்லியில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரசின் மூத்த தலைவர்களும் இத்தகைய கருத்துகளையே வெளிப்படுத்தினர். ஆம் ஆத்மியின் இத்தோல்வி டெல்லியில் மட்டுமின்றி கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரசின் கட்சி அடித்தளத்தை பலப்படுத்துவதற்கு உதவும் என்று காங்கிரசு பூரிப்படைகிறது.
பா.ஜ.க. போன்றதொரு பாசிச கட்சி ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது பிற கட்சிகளின் கட்சி கட்டமைப்பு திட்டமிட்டு செல்லரிக்கப்படும்; பாசிசத்தை எதிர்க்கும் கட்சிகள் தன்னுணர்வுடன் கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது பாசிச எதிர்ப்பில் முக்கியத்துவமுடையதாகும். மறுபுறத்தில், பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பாக உள்ள மக்கள் அடித்தளத்தை சரித்து மாற்று சித்தாந்தம்-மாற்றுத் திட்டத்தின் கீழ் பாசிச எதிர்ப்பு முகாமில் திரட்டுவதும் அவசியமாகும். ஆனால், பாசிஸ்டுகளின் அடித்தளத்தை சரிப்பதற்கு நம்பிக்கையற்று போயுள்ள காங்கிரசு, தன்னுடைய கூட்டணி கட்சிகளின் மக்கள் அடித்தளத்தை சரித்து தன்பக்கம் இழுத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறது.
காங்கிரசின் இந்த அணுகுமுறையை வெளிப்படையாக கண்டிக்கும் பத்திரிகையாளர்கள், தமிழ்நாடு, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் வேறு வழியில்லாமல் கூட்டணி கட்சிகளை முழுமையாக சார்ந்துள்ள காங்கிரசு, பிற மாநிலங்களில் இழந்த தனது செல்வாக்கை அடைவதற்கு கூட்டணி கட்சிகளை பலிகொடுக்கிறது என்று விமர்சித்துள்ளனர். சொல்லப்போனால், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தியதில் பா.ஜ.க-விற்கு நேரடி பாத்திரம் உள்ளதெனில் காங்கிரசிற்கு மறைமுக பாத்திரம் உள்ளது. மேலும், உண்மையான பாசிச எதிர்ப்பிலிருந்து பா.ஜ.க-வை எதிர்கொள்ளாத காங்கிரசின் நடவடிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.க-விற்கு துணைசெய்வதாகவே உள்ளது.
மறூபுறம், 1990-களிலிருந்தே டெல்லியில் ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பா.ஜ.க மேற்கொண்டுவரும் நிலையில், இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதனை கையிலெடுத்தது. ரோஹிங்கியா இஸ்லாமியர்களை பா.ஜ.க-வே டெல்லியில் தங்கவைத்துவிட்டு அதனை வைத்து அரசியல் செய்வதாக பிரச்சாரம் செய்தது. ரோஹிங்கியா இஸ்லாமியர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவதால் டெல்லி மக்களின் குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறி அக்குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்ற அயோக்கியத்தனமான உத்தரவை முதல்வர் அதிஷி பிறப்பித்தார்.
மேலும், பா.ஜ.க, மோடியை எதிர்ப்பதாக சொல்லும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ்-யும் இந்துத்துவத்தையும் ஒருநாளும் எதிர்த்ததில்லை. பா.ஜ.க-வை போன்றே ஆம் ஆத்மியும் பனியா போன்ற கார்ப்பரேட் கும்பலை தனது பின்புலமாக கொண்டிருக்கிறது. பா.ஜ.க-விற்கு மாற்றான ஆர்.எஸ்.எஸ்-க்கு ஏற்ற ஒரு ஸ்டெப்னியாகவே அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியை முன்னிறுத்தி வருகிறார். இத்தேர்தல் நேரத்தில், பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுகள் வைத்து ஆர்.எஸ்.எஸ்-க்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியதே அதற்கு சான்று.
ஆனால், டெல்லியில் தொடர்ச்சியாக மூன்றுமுறை ஆட்சியைக் கைப்பற்றிவந்த காங்கிரசை ஒழிக்கட்டுவதற்கான ஆயுதமாகவே ஆம் ஆத்மியை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அந்த ‘கடமை’யை ஆம் ஆத்மி நிறைவேற்றிவிட்ட நிலையில் ஆம் ஆத்மியையும் தூக்கியெறிந்துவிட்டு நேரடியாக பா.ஜ.க-வை அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சங்கப் பரிவாரங்கள், அம்பானி-அதானி…போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் என பாசிச சக்திகளின் எந்த அங்கத்துடனும் இணைந்து எதிர்க்கட்சிகளால் சமாதான சகவாழ்வு வாழ முடியாது என்பதையும் பாசிஸ்டுகளின் பாதையில் பங்குபோட முடியாது என்பதையும் மீண்டும் நிரூபிக்கிறது.
மேலும், ஒடிசா, மகாராஷ்டிரா வரிசையில் டெல்லியிலும் ஆம் ஆத்மியை வீழ்த்தி பா.ஜ.க. வெற்றிபெற்றிருப்பது, பா.ஜ.க-வால் காங்கிரசு ஆளும் மாநிலங்களை மட்டுமே கைப்பற்ற முடிகிறது, பிராந்திய கட்சிகளை தோற்கடிக்க முடிவதில்லை என்ற நிலையை மாற்றிள்ளது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’-க்கு மாற்று ‘ஜெய் ஜெகன்நாத்’ இல்லை என்பதை ஒடிசா தேர்தல் காட்டியது; பா.ஜ.க-வின் இந்து-இந்தி தேசவெறிக்கும் முன்னாள் மராத்திய தேசியவெறி செல்லுபடியாகாது என்பதை மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் வீழ்ச்சியும்; பா.ஜ.க-வின் இந்துத்துவ பாசிச திட்டத்தின் முன் ஹனுமன் சலிச்சாவும் கவர்ச்சிவாதமும் நிற்காது என்பதை டெல்லி தேர்தல் முடிவும் காட்டியுள்ளன.
பா.ஜ.க. தேர்தல் கட்டமைப்பையே பாசிச தன்மையாக மாற்றியிருக்கும் நிலையில், மாற்றுத் திட்டமோ சித்தாந்தமோ இல்லாமல் எதிர்க்கட்சிகள் தேர்தலை அணுகுவது பாசிசமயப்படுத்தப்படும் இத்தேர்தல் கட்டமைப்பில் தங்களுக்கும் ஓர் இடம் கேட்பதாகவே உள்ளன. ஆனால், பா.ஜ.க-வோ ஒவ்வொரு கட்சியாக சிதைத்து ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் மாற்று அரசியல்-பொருளாதார திட்டமும் பாசிச எதிர்ப்பு சித்தாந்தமுமின்றி பாசிஸ்டுகளை வீழ்த்த முடியாது என்பதையே மீண்டும் நிரூபிக்கின்றன.
துலிபா
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 2 | 1988 டிசம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
20.03.2025
நாக்பூர்: இசுலாமியர்களை ஒழித்துக் கட்ட
மகாராஷ்டிரா அரசு + ஆர்.எஸ்.எஸ் + இந்து மத வெறி கும்பல் நடத்தும் சதி!
ஆர்.எஸ்.எஸ், மார்வாடி கும்பலை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றுவோம்!
பத்திரிகை செய்தி
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் முகலாய அரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை தகர்ப்போம் என்ற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் பாசிச கும்பல் கலவரத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதை ஒட்டி நாக்பூரில் பல இடங்களில் திட்டமிட்டு இந்து மத வெறி பாசிசக் கும்பலால் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகள் தாக்கப்பட்டு பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பாஜியைக் கொன்றவர்; இந்து மக்களை சித்திரவதை செய்தவர் என்று முகலாய மன்னர் அவுரங்கசீப்-இன் மீது பல அவதூறுகள் திட்டமிட்டு இந்து மத வெறி பாசிச கும்பலால் பரப்பப்பட்டு, மேற்கண்ட அவதூறுகளை மட்டுமே உள்ளடக்கிய அளவில் சவ்வா என்ற திரைப்படம் வெளியானது. இதற்குப் பிறகு ஒரு இந்து மதவெறி சாமியார் ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.
இவ்வாறு திட்டமிட்ட பொய் மற்றும் அவதூறுகளால் கலவரங்கள், ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை ஒட்டி கட்டமைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், “எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள். அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறுவதன் மூலம் மகாராஷ்டிர அரசால் திட்டமிட்டு இந்த கலவரம் நடத்தப்படுவதை அறிய முடியும்.
1707ஆம் ஆண்டு இறந்த அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்போம் என்று இப்பொழுது உள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது உலகத்தில் எங்கேயும் நடக்காத ஒன்றாகும்.
இதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு புரட்சிகர சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். இந்த நாட்டில் இருந்து ஆர்.எஸ்.எஸ், இந்து மத வெறி பாசிச கும்பலை விரட்டியடிப்பதற்கான திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
நாக்பூரில் நடைபெற்று வரும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரத்தை நிறுத்தாவிட்டால் இப்படிப்பட்ட கலவரங்களை தமிழ்நாட்டிலும் அவர்கள் உருவாக்குவதற்கான வழி எளிதாகும்.
இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலும் மார்வாடி கும்பலும் தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும்.
பிராமணாள் கஃபே, பிராமணாள் ஹோட்டல் பெயர் அழிப்புப் போராட்ட வரலாற்றை மீண்டும் நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்து மத வெறி, ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான பண்பாட்டை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 1 | 1988 நவம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram