Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 823

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

________________________________________

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு மாபெரும் அறிஞர், கணித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்றெல்லாம் அறியப்படுபவர். பாடநூல்களில் அவரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவருடைய நூல்கள் இன்றும் உலகெங்கிலும் விற்பனையாகின்றன. அப்பேர்ப்பட்ட அறிஞர் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் உளவாளியாக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை.

பிரிட்டிஷ் உளவுத்துறையே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. “ஒரு அறிஞர் என்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் எழுத வேண்டும்; தமக்கு அறிமுகமாகின்ற நண்பர்களில் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்பதை போலீசுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த முக்கியமான பணிகளுக்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுத்தோம்” என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். ரஸ்ஸல் மட்டுமல்ல, ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகிய நான்கு பிரபல அறிவாளிகள் உண்மையில் கம்யூனிச எதிர்ப்பு உளவாளிகள் என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். அறிவுலகத்தினரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்செய்தி 1996 ஜூலையில் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ஃபிரான்டியர் (ஜூலை 2531, 1999) வார இதழ் வெளியிட்டுள்ள ஓர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

_____________________________________________

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

ரஸ்ஸல் இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பாட்டனார் பிரிட்டிஷ் பிரதமர். இளமைக்காலத்திலிருந்தே ரஸ்ஸல் இடதுசாரியாக இருந்தாலும் “கம்யூனிஸ்டு அல்லாத இடதுசாரியாக இருக்க வேண்டும்” என்பதில் வெகு கவனமாக இருந்தவர். எனவே ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே அதை எதிர்த்தார். பிறகு 1920இல் ரசியா சென்று வந்தவுடன் “போல்ஷ்விக் கோட்பாடும் நடைமுறையும்” என்ற நூலின் மூலம் தனது மார்க்சிய எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்தார். மார்க்சிய தத்துவம், பொருளாதாரம் இரண்டையுமே அவர் நிராகரித்தார். ஒரு குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டம், அதன் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்து கொள்வது, புதிய சமுதாயத்தை அமைக்கப் போராடுவது என்பதெல்லாம் தவறு என்று அவர் கருதினார்.

ஒரு கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் வன்முறையிலும் கொலை வெறியாட்டத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த வகையில் மதம், நாசிசம், கம்யூனிசம் ஆகியவை அனைத்தும் ஒன்றே என்பதும் அவர் கருத்து. ஐயவாதமும் அறியொணாவாதமும் ‘சித்தாந்தம்’ என்ற ஒன்று இல்லாதிருப்பதும்தான் சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் அடிப்படையானது என்று அவர் கருதினார். ஆனால், இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடனே ரஸ்ஸல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அனைவரையும் துணுக்குறச் செய்தது. அளப்பரிய தியாகங்கள் செய்து நாஜி ஜெர்மனியை முறியடித்திருந்தார்கள் ரசிய மக்கள். உலக மக்களும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் கம்யூனிசத்தை நோக்கியும், ரசியாவை நோக்கியும் ஈர்க்கப்பட்டனர். கம்யூனிசக் கொள்கை காட்டுத் தீயாய்ப் பரவிய காலமது. அப்போது ரஸ்ஸல் அறிவித்தார்: “ரசியா மேலை நாடுகளிடம் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். இல்லையேல் அதனை அணுகுண்டு வீசி அழித்துவிட வேண்டும்.” ஒரு கொள்கைக்காகத்தான் என்றாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பேசிய அகிம்சாவாதி, கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆறில் ஒரு பங்கு மனித இனத்தையே அழிக்கக் கோரியதை என்னவென்பது?

ஆனால், 60களில் ரஸ்ஸல் மீண்டும் ‘ஜனநாயகவாதி’ ஆகிவிட்டார். அணு ஆயுத எதிர்ப்பியக்கத்தை முன் நின்று நடத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் சமாதானத்தில் நாட்டமா, அல்லது ரசியாவும் அணுகுண்டு தயாரித்துவிட்டது என்ற அச்சமா எனும் கேள்வி எழுகிறது. அதேபோல அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இயக்கம் நடத்தினார் ரஸ்ஸல். அந்த காலகட்டத்தில் உளவு நிறுவனத்துடன் அவருக்கிருந்த உறவு அறுபட்டதால் இந்த ‘ஜனநாயக உணர்வு’ தோன்றியதா, அல்லது உலகு தழுவிய அமெரிக்க எதிர்ப்பு கம்யூனிச ஆதரவாக மாறிவிடாமல் தடுக்க பிரிட்டிஷ் உளவுத்துறை தீட்டிய திட்டத்தின் அங்கம்தான் ரஸ்ஸலின் அமெரிக்க எதிர்ப்பா என்ற கேள்வியும் எழுகிறது.

________________________________________________________

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?
ஜார்ஜ் ஆர்வெல்

ஜார்ஜ் ஆர்வெல் இந்தியாவில் பிறந்து பர்மாவில் சிறிது காலம் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர். பிறகு அவர் ஒரு ‘சுதந்திர’ இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டார். 1943இல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கெதிராக ரசிய மக்கள் போராடிக் கொண்டிருந்தபோதுதான் கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் ‘விலங்குப் பண்ணை’ எனும் நாவலை எழுதினார் ஆர்வெல். இரண்டாவது உலகப்போர் முடிந்த பின் ரசியாவுக்கெதிரான பனிப்போரை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கின. அந்தத் தருணத்தில்தான் வெளிவந்தது ஆர்வெல்லின் ‘1984′ எனும் நாவல். ஆர்வெல்லின் இந்த இரண்டு கம்யூனிச எதிர்ப்பு நாவல்களையும் பிரபலப்படுத்தி விற்பனை செய்யுமாறு மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தனது தூதரகங்களுக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் அரசு. குறிப்பாக முஸ்லீம்கள் பன்றிகளையும், நாய்களையும் வெறுப்பவர்களாதலால், ‘‘விலங்குப் பண்ணை நாவலில் வரும் பன்றி, நாய் ஆகிய பாத்திரங்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் குறிக்கின்றன” என்று இசுலாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்யுமாறும் தனது தூதரகங்களுக்கு வழிகாட்டியது.

பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்த செலியா என்ற பெண் 1996இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

“1949இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாகச் சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாததால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிக்கைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள்காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.”

சமுதாயம் முழுவதையும் எப்போதும் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அரசுதான் சோசலிச அரசு என்று சித்தரிப்பதற்காக ‘1984′ எனும் நாவலில் ஆர்வெல் உருவாக்கியதுதான் “பெரியண்ணன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்!” (Big Brother is watching you!) என்ற பிரபலச் சொற்றொடர். ஆனால், இந்தச் சொற்றொடரை உருவாக்கிய ‘மேதை’யோ ஒரு போலீசு உளவாளி.

________________________________________________________

ஸ்டீபன் ஸ்பென்டர்
ஸ்டீபன் ஸ்பென்டர்

ஸ்டீபன் ஸ்பென்டர் 1930களில் பிரிட்டனில் இருந்த பிரபல இடதுசாரி கவிஞர்களில் ஒருவர். பின்னர் அவர் ஒரு வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பாளராக மாறினார். பனிப்போர் காலகட்டத்தில் விதவிதமான கம்யூனிச எதிர்ப்புப் பத்திரிக்கைகள் மேற்குலகிலிருந்து வெளியாயின. ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ போன்றவை அத்தகைய சனரஞ்சகப் பத்திரிக்கைகள். “என்கவுண்டர்’ (Encounter) (சந்திப்பு அல்லது மோதல் என்று பொருள்) என்ற பத்திரிக்கை ‘அறிவுத்தரம்’ கொண்ட ரகத்தைச் சேர்ந்தது.

ஸ்பென்டர் இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். “பண்பாட்டுச் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்” என்ற அமைப்பு இந்தப் பத்திரிக்கைக்கு நிதி கொடுத்து வந்தது.இந்தப் பத்திரிக்கை அமெரிக்க உளவு நிறுவனத்தால் (சி.ஐ.ஏ) நடத்தப்படுகிறது என்ற ரகசியத்தை கனார் க்யூரி ஓ ப்ரியன் என்ற ஐரிஷ்ராசதந்திரி அறுபதுகளின் மத்தியில் வெளியிட்டார். உடனே ஸ்பென்டரும் அவருடன் சேர்ந்த அறிவாளி/ உளவாளிகளும் இதை மறுத்தனர். ஆனால், என்ன துரதிருஷ்டம்! “நாங்கள் தான் பணம் கொடுக்கிறோம்” என்ற உண்மையை அமெரிக்க உளவு நிறுவனமே ஒப்புக் கொண்டது. உடனே கவிஞர் ஸ்பென்டர் பல்டியடித்தார். தனக்கு எதுவுமே தெரியாதென்றும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் புலம்பினார். ஆசிரியர் பதவியையும் உடனே ராஜினாமா செய்தார்.

ஆனால், இந்த ‘அப்பாவி முற்போக்குக் கவிஞர்’ பிரிட்டிஷ் உளவாளியாகவும் இருந்திருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. தனது பத்திரிக்கைக்கு யார் பணம் தருகிறார்கள், என்ன நோக்கத்துக்காகப் பணம் தருகிறார்கள் என்பதெல்லாம் கவிஞர் ஸ்பென்டருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ராஜினாமா நாடகமெல்லாம் “சுதந்திரமான முற்போக்குக் கவிஞர்” என்ற தன்னைப் பற்றிய கருத்துருவைப் பாதுகாத்துக் கொள்ளும் கீழ்த்தரமான மோசடியே. உளவாளி என்று ஊர் சிரித்துப் போனபின்னரும் ‘அறிவாளி’யின் ஆன்மா தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை தந்திரங்கள் செய்கிறது!

_________________________________________________________

ஆர்தர் கீஸ்லர்
ஆர்தர் கீஸ்லர்

கீஸ்லர் பிரிட்டிஷ்காரரல்ல. ஹங்கேரி நாட்டுக்காரர். பிறப்பால் யூதர். 30களில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். சோவியத் யூனியனுக்கும் சென்று வந்தார். ஸ்பெயினில் நடந்த பாசிச எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டார். பிறகு சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அந்தப் போரில் அவர் பாசிச எதிர்ப்புப் பத்திரிகையாளராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்போதே அவர் உளவாளியாகவும் இருந்தாரா எனத் தெரியவில்லை. கீஸ்லரின் பிரபலமான (பிரபலம் ஆக்கப்பட்ட) நூல் ‘பகலில் இருள்’. தோழர் ஸ்டாலினைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கும் நூல் இது.

சோவியத் அரசுக்கெதிராகச் சதி செய்ததற்காக புகாரின், ஜினோவியேவ் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் மீது அப்போது நீதிமன்ற விசாரணை நடந்தது. பகிரங்கமாக நடைபெற்ற இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டனர். சோவியத் ஆட்சியை ஒழிப்பதற்கு அப்படியொரு சதியை மேலை ஏகாதிபத்தியங்கள் செய்தன என்பதும் பலவிதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்த விசாரணை தொடர்பாக கீஸ்லர் எழுப்பும் கேள்வி முக்கியமானது. “அவர்கள் ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்?” என்று கேட்கிறார் கீஸ்லர். உலகப் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாக விசாரணை நடைபெற்றதால் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டார்கள் என்றும் கீஸ்லரால் சொல்ல முடியவில்லை. “அவர்கள் இத்தனைக் காலம் பொருள் முதல்வாதிகளாக இருந்தார்கள்; எனவே மார்க்சியம்தான் அவர்களுடைய எதிர்ப்புணர்வையே உறிஞ்சி விட்டது” என்கிறார் கீஸ்லர். இந்தக் கூற்று கோமாளித்தனமானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் ‘கோமாளித்தனத்தின்’ தத்துவ ஞானம் எது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கம்யூனிசக் கோட்பாட்டிற்கு எதிரான கீஸ்லரின் மையமான வாதத்தில் அது வெளிப்படுகிறது. “நாம் முரணற்றவர்கள் அல்ல; முரணற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்கான முயற்சி நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் தெரியுமா? அதோ கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்!” என்கிறார் கீஸ்லர். முரண்பாட்டை ‘உறிஞ்சும்’ மார்க்சியத்தின் முயற்சி, எதிர்ப்பு உணர்வை உறிஞ்சும் நடவடிக்கையாகக் கீஸ்லருக்குப்படுகிறது. ‘தவறிழைத்தவன் தன்னுடைய தவறை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்’ என்பதுதான் கீஸ்லரின் கேள்வி. எனவே சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு மார்க்சியம் மேற்கொள்ளும் முயற்சி அவருக்குத் தீயொழுக்கமாகவும், மோசடியாகவும் படுகிறது. முரண்பாடுகளுடன் வாழ்வதை ஏற்றுக் கொள்வதும், அதை அங்கீகரிப்பதுமே நல்லொழுக்கமாகவும், நேர்மையாகவும் அவருக்குத் தெரிகிறது. எனவே ஏற்றத்தாழ்வு, சுரண்டல், கொடுமைகள் ஆகிய அனைத்து முரண்பாடுகளும் நிறைந்த முதலாளித்துவம், அதன் முரண்பட்ட நிலையின் காரணமாகவே ஒழுக்கமானதாகவும், எனவே சுதந்திரமானதாகவும் அவருக்குத் தோன்றுகிறது.

நாஜிகளும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளும் ஒரே ரகம்தான் என்று ரஸ்ஸல் கூறியதைப் போலவே கீஸ்லரும் கூறுகிறார். “ஸ்பெயின் நாட்டின் பாசிச சர்வாதிகாரமும் சோவியத்தின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றுதான். பிராங்கோ தனது சர்வாதிகாரத்தை ஸ்பெயினுடன் நிறுத்திக் கொள்கிறான்; ரசியாவோ அதை உலகெங்கும் பரப்ப முயல்கிறது.” கீஸ்லரின் கவலை கம்யூனிச அபாயம் பற்றித்தான். மெக்கார்த்தியிசம் என்ற வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அமெரிக்க அரசால் அமல்படுத்தப்பட்டு கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டபோது, அவர் மெக்கார்த்தியிசத்தை ஆதரித்தார்.

“மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பாசிசத்திற்கெதிராக சோவியத் யூனியனுடன் ஐக்கிய முன்னணி அமைத்ததைப் போல, இன்று கம்யூனிசத்திற்கெதிராக ஜனநாயகவாதிகளாகிய நாம் மெக்கார்த்தியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்” என்றார் கீஸ்லர். “முதலாளித்துவச் சர்வாதிகாரமும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றே” என்று சொல்லி இரண்டையும் எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் அறிஞர்கள், தீர்மானகரமான தருணங்களில் முதலாளித்துவத்தின் வெறிபிடித்த ஏவல் நாயாகத்தான் மாறுவார்கள் என்பதற்கு இது இன்னுமோர் சான்று.

__________________________________________________________

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

இந்த நூற்றாண்டின் மாபெரும் ஜேம்ஸ்பாண்டுகள்! இந்த அறிவாளிகள் ஏன் உளவாளிகள் ஆனார்கள் என்ற கேள்வியைக் காட்டிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறை இந்த அறிவாளிகளை ஏன் உளவாளிகளாகத் தேர்ந்தெடுத்தது என்பதுதான் விடை காண வேண்டிய முக்கியமான கேள்வி. இவர்கள் நான்கு பேருமே இடதுசாரிகளாக அறியப்பட்டவர்கள்.

சோசலிசத்தை ‘விலங்குப் பண்ணை’ எனத் தூற்றி நூல் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு நச்சுப் பாம்பான ஜார்ஜ் ஆர்வெல், கம்யூனிச எதிர்ப்பு நஞ்சைக் கக்கும் ஒவ்வொரு முறையும் “தான் சோசலிச எதிர்ப்பாளன் அல்ல” என்று கூறிக் கொள்ளத் தவறியதே இல்லை. கீஸ்லரோ முன்னாள் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்; ஸ்பென்டர் இடதுசாரி முற்போக்குக் கவிஞர்; ரஸ்ஸலோ ‘மாபெரும்’ முற்போக்காளர்.

“பாருங்கள், சோசலிசத்தைப் பற்றி நாங்கள் (அதாவது முதலாளிகளாகிய நாங்கள்) குறை சொல்லவில்லை. அப்பேர்ப்பட்ட ரஸ்ஸலும், ஆர்வெலும், கீஸ்லரும் ரசியாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பாருங்கள்! அப்பேர்ப்பட்ட முற்போக்காளர்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும்? யோசித்துப் பாருங்கள்!” இதுதான் இவர்களைப் பயன்படுத்திய முதலாளித்துவத்தின் ஒரே வாதம். முன்னாள் கம்யூனிஸ்டுகள், அல்லது இடதுசாரிகள் என்ற பட்டம்தான் இவர்களது பொய்களும் பித்தலாட்டங்களும் புனிதத்தன்மை பெறுவதற்குப் பயன்பட்ட ஒரே தகுதி. ஏகாதிபத்தியப் போலீசின் மோப்ப நாய்களான இந்த அறிவாளிகளுக்கு, செத்தபிறகும் இடதுசாரி ஒளிவட்டத்தை விட்டுவிட மனமில்லை. ஆர்வெல் ஒரு உளவாளி என்ற செய்தியை 1996இல் வெளியிட்ட பிரிட்டிஷ் உளவு நிறுவன அதிகாரி செலியா மறக்காமல் அதற்கு ஒரு பின்குறிப்பு தருகிறார். “ஆர்வெல் சோசலிசத்துக்குத் துரோகம் செய்யவில்லை. அவர் கம்யூனிசத்தைத்தான் எதிர்த்தார். மக்கள் இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.”

நாங்கள் கட்சியைத்தான் எதிர்க்கிறோம் கம்யூனிசத்தை அல்ல என்பதும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தான் எதிர்க்கிறோம் சோசலிசத்தை அல்ல என்பதும், யூரோ கம்யூனிசம், பிராங்ஃபர்ட் மார்க்சியம், கட்சி சாராத மார்க்சியம், புதிய இடது ஆகியவையும், கம்யூனிசத்தின் மீதான இடதுசாரி விமர்சனம் ஆகியவையும் ஆர்வெல் செலியாவின் சந்ததிகளே! ஆனால் அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ரசியப் புரட்சியின் வெற்றியும், இரண்டாம் உலகப் போரில் பாசிசத்திற்கு எதிரான சோசலிசத்தின் வெற்றியும் உலகெங்கும் கம்யூனிச ஆதரவு எழுச்சியை உருவாக்கியிருந்தன. உலகெங்கும் அறிவுத்துறையினர் மார்க்சியத்தின்பால் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர். மார்க்சியத்திற்கு மாற்றாக வேறு எந்த ‘இயமும்’ இல்லை.

இன்றோ சோசலிசம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காலம். கறுப்பியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம் என ஒன்றையொன்று ஊடறுக்கும் பல்வேறு இயங்களையும், எந்த இயமும் வேண்டாமெனும் பின் நவீனத்துவத்தையும் ஏகாதிபத்தியங்கள் சீராட்டி வளர்க்கின்றன. அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இந்த ‘கலகக் கோட்பாடுகள்’, பல்கலைக்கழகங்களாலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல; உளவு என்ற ‘அநாகரிகமான’ சொல் நீக்கப்பட்டு அது ‘தொண்டு’ “ஆய்வு’ என்பதாகக் கவுரவமாக அழைக்கப்படுகிறது, தனியார்மயமாக்கலுக்கு ‘சீர்திருத்தம்’ என்று பெயர் சூட்டியிருப்பது போல! இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்கு (உளவு நிறுவனம்) இப்போது வாலன்டரி ஏஜென்சி (தன்னார்வத் தொண்டு நிறுவனம்) என்று பெயர். ஆர்வெல்லை செலியா ரகசியமாகச் சந்தித்ததைப் போன்ற துன்பமோ, என்கவுன்டர் பத்திரிக்கைக்கு சி.ஐ.ஏ. விடம் காசு வாங்கிய கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டரின் ‘தர்ம’ சங்கடமோ இப்போது தேவையில்லை.

எந்தவிதச் சங்கடமும் இல்லாமல் சி.ஐ.ஏ.வின் தருமத்தை அறிவாளிகள் பெற்றுக் கொள்ளலாம். பலவிதமான காலனியாக்க வேலைகளுக்கும் கம்யூனிச எதிர்ப்பு வேலைகளுக்கும் உளவாளி தேவை என்று ஆங்கில ஏடுகளில் விளம்பரம் தருகிறார்கள். கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அறிவாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆய்வாளர், பணியாளர், திட்ட இயக்குனர், ஒருங்கிணைப்பாளர் என்பனவெல்லாம் உளவாளிகளுக்கு அவர்கள் வழங்கியுள்ள சங்கதேப் பெயர்கள். வறுமை, சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய அனைத்துக் கொடுமைகளையும் ‘ஒழிக்க’ அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை விவரங்கள். தமிழகத்தில் தலித் சாதிகள் எத்தனை, தீண்டாமையின் வடிவங்கள் என்ன, சாதி முரண்பாடுகளின் வரலாறு என்ன, அரசியல் கட்சிகளின் பாத்திரம் என்ன போன்ற பல விவரங்கள். புரட்சிகர இயக்கங்களையும், போராளி அமைப்புகளையும் தன்னுடைய உளவுத் துறையால் சரியாக வேவு பார்த்து விவரம் திரட்ட முடிவதில்லை என்பதால் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோரை குறிப்பிட்ட வேலைக்கான (Piece rate) உளவாளிகளாக நம்மூர் காவல்துறை நியமித்துக் கொள்கிறது. இதே வேலைக்கு அறிவாளிகளை நியமிக்கின்றன அந்நிய ஏகாதிபத்தியங்கள்.

தம்முடைய பிழைப்பு நாயினும் இழிந்தது என்பதை இந்தப் போலீசு உளவாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். அறிவாளிகளோ கூச்சமின்றி கம்பீரமாக உளவு வேலை பார்க்கிறார்கள். ஊனமுற்றவர்கள் என்பதால் ஏற்படும் அனுதாபம் மேற்படி போலீசு உளவாளிகளின் தகுதி. முன்னாள் கம்யூனிஸ்டுகள் என்பதால் கிடைக்கும் அனுதாபம் அறிவாளி / உளவாளிகளின் தகுதி. ஆந்திராவிலும், காஷ்மீரிலும் போலீசுக்கு ஆள்காட்டும் முன்னாள் போராளிகள் முகத்தை மூடிக் கொள்கிறார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமில்லை, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும்தான். ரஸ்ஸல், ஆர்வெல் போன்றவர்கள் இப்படி முகத்தை மூடிக் கொள்ள முயன்ற உளவாளிகள்.

“சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு கம்யூனிஸ்டுகள் செய்யும் முயற்சி என்பது ஒரு மோசடி” என்று அவர்கள் கூறியபோதும் இரட்டை வேடம்தான் மனிதத்தன்மை என்ற கருத்தியல் ரீதியாக அவர்கள் பிரகடனம் செய்த போதிலும், தங்கள் இரட்டை வேடத்தை கம்பீரமாகப் பிரகடனம் செய்து கொள்ளும் ‘தைரியம்’ அவர்களுக்கு அன்று இல்லை. எனவேதான் முக்காடு போட்டுக் கொண்டார்கள். இன்றோ அந்த ஜேம்ஸ்பாண்டுகளின் தத்துவம் பின்நவீனத்துவமாக முற்றிக் கனிந்திருக்கிறது. அதுவா, இதுவா என்று கேட்டால் அதுவும் இதுவும்தான் என்று தத்துவஞான ரீதியில் ‘தெளிவாக’ப் பதில் சொல்லும் பின் நவீனத்துவ அறிஞர்கள், ‘நீங்கள் அறிவாளியா உளவாளியா’ என்று கேட்டால் “”அறிவாளியும் உளவாளியும்தான்” என்று தைரியமாகக் கூறலாம்.

“கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டும்” என்பது அறிவுலகத்தினர் வலியுறுத்தும் அறிவொழுக்கக் கோட்பாடு. “ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்க நலனும் ஒரு பொருளாயத சக்தியும் உள்ளது” என்பது மார்க்சியக் கொள்கை. அந்தப் பொருளாயத சக்தி போலீசாகவும் இருக்கக் கூடும் என்பதுதான் ரஸ்ஸல் வகையறாவின் அனுபவம் தெரிவிக்கின்ற படிப்பினை. அறிவாளியின் கருத்தைக் கருத்தால் சந்திக்கலாம்; உளவாளியின் கருத்தை எதைக் கொண்டு சந்திப்பது?

இந்தக் கருத்து இன்ன வர்க்கத்தின் கருத்து என்று கூறினாலே முத்திரை குத்தாதீர்கள் என்று அலறுகிறார்கள் அறிவாளிகள். உளவாளி எனும் முத்திரையை மறைத்துக் கொண்டு உலவியிருக்கிறார்களே இந்த அறிவாளிகள், இனி என்ன செய்வது? இனி ‘பேரறிஞர்’ ரஸ்ஸலின் எழுத்துக்களை எப்படி வாசிப்பது? கம்யூனிசத்தின் மீதான அவரது விமரிசனங்களை ஒரு அறிவாளியின் கருத்துக்கள் என்று கருதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விவாதிப்பதா? அல்லது ஒரு உளவாளியின் அவதூறுகள் என்ற முறையில் ‘மறுவாசிப்பு’ செய்வதா?

“இடப்புறம் தர்க்கவியல், வலப்புறம் படிமங்கள், உணர்ச்சி எனப் பிரிந்தும், ஒன்றோடொன்று உள்ள உறவில் இணைந்தும் இயங்குகிறது மூளை” என்கிறது நரம்பியல் ஆய்வு. தர்க்கத்துக்கும் உணர்ச்சிக்குமிடையிலான உறவை எழுத்தில் இனம் பிரித்துப் புரிந்துணரலாம். ரஸ்ஸலின் எழுத்துக்களில் அறிவுக்கும் உளவுக்கும் உள்ள உறவைப் பிரித்தறிவது எப்படி? கட்டிடத்தைச் சுரண்டிப் பார்த்து சிமெண்டில் கலந்த மணலை வைத்தே அமைச்சரின் ஊழலைக் கண்டுபிடித்து விடலாம் என்றால், அறிவாளிகளின் எழுத்தைச் சுரண்டிப் பார்த்து, இதோ டாலர் பேசுகிறது, பவுண்டு ஸ்டர்லிங் பேசுகிறது, டாயிஷ் மார்க் பேசுகிறது என்று கூறுவதில் என்ன தவறு? அமைச்சருக்கு ஒரு நீதி, அறிவாளிக்கு ஒரு நீதியா?

‘இன்டெலிஜென்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவு, உளவு என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டென்பது ஒரு குரூரமான நகைச்சுவை! இனி மார்க்சியத்திற்கு எதிராகப் பலான இயங்களை முன்வைத்து அறிஞர் பெருமக்கள் எழுதும்போது “ஐயா / அம்மணி! தாங்கள் அறிவாளி என்ற முறையில் எழுதியிருக்கிறீர்களா, உளவாளி என்ற முறையில் தயார் செய்திருக்கிறீர்களா?” என்று நாம் கேட்டறிந்து கொள்ளலாம். இவ்வாறு கேட்பது பிற்காலத்தில் மறுவாசிப்பு செய்யும் வேலையை நாம் மிச்சப்படுத்திக் கொள்வதற்குத்தானே ஒழிய, அறிவாளிகளை இழிவுபடுத்துவதற்கல்ல.·

____________________________________________

பாலன், புதிய கலாச்சாரம், (செப்டம்பர், 1999)
நினைவின் குட்டை கனவுநதி, சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தில் உறையும் அற்பவாத இதயம்! – (வெளியீடு) 2006
____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நினைவின் குட்டை கனவுநதி, சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தில் உறையும் அற்பவாத இதயம்! – வெளியீடு 2006

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின்-ஸ்டாலின்-மாவோதொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது.

இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் நாம் அறிந்த சமீபத்திய உதாரணம் நோக்கியா நிறுவனத்தால் படுகொலை செய்யப்பட்ட அம்பிகா.

இது போன்ற எண்ணற்ற கொலைகளும் தற்கொலைகளும் முதலாளித்துவ லாபவெறியின் காரணமாக ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேயிருக்கிறது. பாபிலோன் நாகரீகத்தை உருவாக்கிய ஈராக்கின் புதல்வர்கள் நாகரீகமற்ற ஏகாதிபத்தியவாதிகளால் நம் காலத்தில், நம் கண்களுக்கு முன்பாகவே அடிமைகளாக்கப்பட்டு குரூரமாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

நமது நாட்டிலுள்ள கனிம வளங்களை எல்லாம் ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்காக மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை போல தமது தாய் நிலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்படுகிறார்கள்.

ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கம் காரணமாக இதுவரை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை முதலாளித்துவத்தின் லாபவெறி பிணங்களாக்கியிருக்கிறது, உயிரோடு உள்ளவர்களை நடை பிணங்களாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் கொல்லும் என்பதற்கும்  கம்யூனிசமே வெல்லும் என்பதற்கும் மேற்கூறிய உதாரணங்களும் நேபாளமுமே இன்றைய சான்றுகள்.

லாபத்திற்காக மக்களை கொல்லும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் தான் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள். ”கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரம் தான், வீட்டில் துவங்கி ஆடு, மாடு, கோழி என்று அனைத்தையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். நாலு மாடுகளை வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிற ஒரு விவசாயியிடம் இதை சொன்னால் என்ன ஆகும் ?

அதை உண்மை என்று பயந்து போய் முதலாளித்துவ பொய்ப் பிரச்சாரத்தையே அவரும் தனக்கு தெரிந்த நான்கு பேரிடம் சொல்லிக்கொண்டிருப்பார். நம்முடைய நாட்டில் கம்யூனிசம் பற்றிய முதலாளித்துவ அவதூறுகள் இவ்வாறும் இன்னும் பல வழிகளிலும் பரப்பிவிடப்படுகிறது.

உண்மையில் கம்யூனிசம் தோற்றுவிட்டதா ? இல்லை, சோவியத் குடியரசு உடைபட்டு விட்டதாலேயே கம்யூனிசம் தோற்று விட்டது என்று கூறுவது ஒரு பந்தலுக்கு கீழே நின்று கொண்டு சூரியனை காணோம் என்று கூறுவதற்கு சமமானது. எனினும், கம்யூனிசம் எப்படி அறிவியல் பூர்வமானது, சரியானது என்பதை நிறுவுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல, மாறாக கம்யூனிசத்தை பற்றியும், சோசலிச நாடுகளை பற்றியும் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்துள்ள பொய்களையும், அவதூறுகளையும் உண்மை என்று நம்புபவர்களுக்கு திரையை விலக்கி காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சோவியத் நாட்டில் நிலவிய ஆட்சி முறையையும்,மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டால் மட்டுமே கம்யூனிசம் குறித்த முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும். இதற்கு நாம் சோவியத் நாட்டின் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் இருந்து எந்த தரவுகளையும், மேற்கோளையும் இங்கே கொடுக்கப் போவதில்லை. அனைத்தும் இந்த நாட்டிலிருந்து இரசியாவிற்கு சென்று வந்தவர்கள் கூறியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

பிழைப்புவாத சாக்கடைக்குள் முக்குளிக்க்கும் நமது சமூகத்தில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனை என்றால் தன் வீட்டுக் கதவை சாத்திக் கொள்ள பயிற்றுவிக்கப்பட்டுள்ள மனிதனின் மனநிலைக்கும், சோவியத்தில் ஒரு கூட்டுப் பண்ணையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் பற்றிக் கொண்ட தீயினால் முழு பண்ணையும் எரிந்து நாசமாகி விடக்கூடாதே என்றெண்ணி அடுத்த நொடியே எரிந்து கொண்டிருந்த டிராக்டரில் ஏறி அதை வயலுக்கு வெளியில் ஓட்டிக் கொண்டு வந்து விட்டு விட்டு தனது உயிரையும் விட்ட, அப்போது தான் புதிதாக திருமணம் ஆன 28 வயது சோசலிச இளைஞனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாமும் அவனும் மனிதன் என்கிற வகையில் நாம் உரசிப் பார்த்துக்கொள்வதற்கும் இந்த உண்மைகள் நமக்கு உதவும்.

லெனின்-நவம்பர்-புரட்சி

இரசியா: ஐரோப்பிய பிற்போக்கின் கோட்டையை பிளந்தது மார்க்சிய லெனினியம்

இரசியா, ஐரோப்பாவில் பாதி ஆசியாவில் பாதியை கொண்டிருந்த நாடு. அங்கே இல்லாத கொடுமையில்லை தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும். ஒருமுறை தொழிலாளர்கள் முதலாளிகளின் கொடுமைகளை தாங்க முடியாமல் ஜார் மன்னனிடம் மனு அளிப்பது என்று முடிவெடுத்து சில இலட்சம் பேர் அணி திரண்டு அரண்மனையை நோக்கிச் சென்றனர். ஜார் மன்னனுக்கு இந்த முதலாளிகள் செய்யும் கொடுமைகள் தெரியவில்லை, எனவே அதை தெரியப்படுத்துவதோடு சில கோரிக்கைகளையும் மனுவாக கொண்டு சென்றிருந்தனர். காலம் 1905.

அரசன் வெளியே வருவான் என்று கூட்டம் வாயிலை நோக்கி நெருங்க, நெருங்க சுற்றி வளைத்தது ஜாரின் குதிரைப்படை. அடுத்த நொடி துப்பாக்கிகள் சரமாரியாக தோட்டாக்களைப் பொழிந்தன. சற்று நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுட்டுப் பொசுக்கப்பட்டனர். அந்த நாளை இன்றும் இரத்த ஞாயிறு என்றே இரசியர்கள் அழைக்கிறார்கள். இது தான் 1917க்கு முன்பு இரசியாவில் இருந்த அரசியல் நிலைமை.

1917 அக்டோபர் 25 (இரஷ்ய காலன்டரின் படி இருந்த இந்த நாள் பின்பு மேற்கத்திய காலன்டர் படி நவம்பர் 7 என மாற்றப்பட்டது.) அன்று தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் கீழ் அணி திரண்ட லட்சக்கணக்கான இரசிய மக்கள் பிற்போக்கு ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு உலகிலேயே முதல் முறையாக உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

பூவுலகில் ஒரு சொர்க்கத்தை படைத்த இரசிய மக்கள் :

சோவியத்தில் மக்களாட்சிஅரசதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ’உழுபவனுக்கே நிலம்’ என்கிற முழக்கத்தின் அடிப்படையில் கொடுங்கோலர்களான நிலப்பிரபுக்களிடமிருந்தும், மத பீடங்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என்கிற சோவியத் அரசின் முதல் அரசாணையை தோழர் லெனின் வெளியிட்டார்.

அடுத்தபடியாக நாட்டின் உற்பத்தியை பெருக்குவதற்கும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குமான திட்டங்கள் கால இலக்குகளுடன் துரிதமாக தீட்டப்பட்டன. அவை திட்டமிட்டிருந்த காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டன. அதில் முதன்மையானது மொத்த நாட்டையும் மின்சாரமயமாக்குவது! எந்த நாட்டை ? உலகில் ஆறில் ஒரு பங்கான இரசியாவை! எந்த ஆண்டில்? தொன்னூற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் 1917ல்! எவ்வளவு நாட்களில் ? வெறும் ஐந்தே ஆண்டுகளில்!

மன்மோகன் சிங் போன்ற உலகவங்கியின் குமாஸ்தாவின் ஆட்சியின் கீழே வாழும் நமக்கு இவையெல்லாம் அதிசயமாகத் தான் இருக்கும், ஆனால் சோவியத் மக்கள் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார்கள், கால இலக்கான ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே மொத்த இலக்கையும் எட்டினார்கள். உலகின் மிகப்பெரிய நாட்டை மின்சாரமயமாக்கினார்கள்.

அடிப்படையான சில விசயங்கள் சோவியத்தில் கட்டாய சட்டமாக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்டலாம். அவை, அனைவருக்கும் இலவச கல்வி, கல்வி கற்று முடித்த பின்னர் அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு (1917 க்கு முன்பு மாஸ்கோவின் மொத்த மக்கள் தொகை பதினெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர். இவர்களில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் மரக் கொட்டடிகளில் அறைக்கு 15 பேர் வீதம் வசித்து வந்தார்கள்)

அனைத்து வகையான இலவச மருத்துவ உதவிகளையும் பெறும் உரிமை (சோவியத் சட்டத்தின்படி சோவியத் குடிமக்கள் மட்டுமின்றி சோவியத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது) முதியவர்களுக்கான ஓய்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தவற்றுள் ஒரு சில மட்டுமே, இன்னும் பல்வேறு அடிப்படை உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும், இந்த உரிமைகளை மக்களிடமிருந்து பிறர் பறிக்க முடியாதவாறும், அப்படி பறிக்க எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனைகளையும் சோவியத் சட்டங்கள் உறுதி செய்தன.

உழைப்பில் ஈடுபடும் நேரமும் அடிப்படை சட்டமாக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் அனைவருக்கும் வேலை நேரம் எட்டு மணி நேரம் மட்டுமே. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை ஒரு நாள் விடுமுறை. இவை எல்லாம் எப்படி சாத்தியமானது ?

அங்கே, மக்களின் உழைப்பையும், நாட்டின் கனிமவளங்களையும் மன்மோகன் சிங், ப.சி கும்பல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தூக்கி கொடுப்பதைப் போல கொடுக்காமல் நாட்டின் உற்பத்தியை பெருக்க மக்களிடம் லெனின் ஒரு கோரிக்கையை வைத்தார். அதாவது, விடுமுறை நாட்களில் நாட்டுக்காக இலவசமாக உழைக்க வேண்டும் என்று கோரினார். இது சட்டமல்ல. “விருப்பம் இருந்தால் வேலை செய்யலாம் இல்லையெனில் வேண்டாம்” என்று அறிவிக்கப்பட்டது.

முதலில் சில ஆயிரக்கணக்கானவர்கள் மட்டும் தான் முன் வந்தார்கள். பின்னர் தொடர்ந்து வந்த மாதங்களில் அவ்வெண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்தது. உபரியாக சேர்க்கப்பட்ட உற்பத்தியில் பெறப்பட்ட செல்வங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்கே பல்வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டது. இந்த உழைப்புக்கு பெயர் ‘சப்போத்னிக்’.

தோழர் லெனினுடைய மறைவிற்கு பின் தோழர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார். புரட்சிக்கு முன்பிருந்த இரசியா என்பது அனைத்து துறைகளிலும் மிக, மிக கீழான நிலையில் இருந்தது. உணவுப்பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடியது. நோய்கள் மற்றொரு பக்கம் மக்களை அள்ளிக் கொண்டு போனது. இந்நிலையில் மந்திரத்தின் மூலமா நாட்டை முன்னேற்ற முடியும்? மக்களின் துணையின்றி வேறு வழி ஏது ?

உழைக்கும் மக்களின் தலைவரான தோழர் ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் மக்கள் அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தினார்கள். அப்போது உலகப் பொருளாதாரத்தில் சோவியத் யூனியன் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. ஆம், தோழர் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ’சர்வாதிகார ஆட்சி’ தான் மாபெரும் சோசலிசத்தின் சாதனைகளை படைத்தது !

 

சோவியத்-கூட்டுப்-பண்ணை
சோவியத் கூட்டுப் பண்ணையில்....

கூட்டுப் பண்ணைகள்

புரட்சிக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் சோவியத் உணவு உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்தது. பஞ்சம் தலைவிரித்தாடியது. விவசாயத் துறையில் தன்னிறைவு பெற சோவியத் அரசாங்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், அணை கட்டுதல், கால்வாய் வெட்டுதல் போன்ற அடிக்கட்டுமான வேலைகளை எல்லாம் மின்னல் வேகத்தில் செய்து முடித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களே இணைந்து நடத்தும் கூட்டுப் பண்ணைகளை அமைத்தது.

இக்கூட்டுப்பண்ணைகள் மிகப்பிரம்மாண்டமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருக்கும். அவற்றில் பணி புரியும் விவசாயிகளுக்கான வீடுகளையும் அவர்களுக்கு சொந்தமாக சிறு தோட்டங்களையும் கூட்டுப்பண்ணைக்குள்ளேயே தனி ஒரு இடத்தில் அரசாங்கமே அமைத்துக் கொடுக்கும். கூட்டுப்பண்ணை உற்பத்தி என்பது குழு குழுவாக போட்டி போட்டுக் கொண்டு நடக்கும் உற்பத்தியாக இருக்கும். எந்தக் கூட்டுப் பண்ணையில் யார் அதிக மகசூல் எடுக்கிறார்கள் என்கிற போட்டி விவசாயிகளிடமிருக்கும். தமது பண்ணை தான் நாட்டிற்கு அதிகமாக உற்பத்தி செய்து தர வேண்டும் என்று ஒவ்வொரு பண்ணையும் போட்டி போட்டுக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடும். உற்பத்தி இலக்கை தாண்டும் பண்ணைகளை அரசு நாடு முழுவதும் மக்களிடம் அறிவித்து கவுரவிக்கும். அந்த பண்ணையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பரிசுகளளிக்கப்படும்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேர் வானூர்தியை அருகில் நின்று பார்த்திருப்பீர்கள். எத்தனை பேர் அதில் பயணம் செய்திருப்பீர்கள்? சோவியத்தில் ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் சொந்தமாக சில பத்து குட்டி விமானங்கள் இருந்தன என்று கூறினால் நம்புவீர்களா ? ஆம், அவர்கள் தமது பண்ணைகளில் விளைந்த தானியங்களை நகரத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காக அரசு அவர்களுக்கு குட்டி விமானங்களை வழங்கியிருந்தது. ஆனால் இந்திய விவசாயிகளுக்கு மன்மோகன் சிங் பாலிடால் பாட்டில்களை நீட்டுகிறார். அவர்களும் லட்சக்கணக்கில் மரணத்திற்கு பின்னர் வானில் பறக்கிறார்கள்!

எங்காவது பாலைவனத்தில் பருத்தி பயிரிட முடியுமா ?. சோவியத்தில் மக்கள் அதையும் சாதித்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் உஸ்பெகிஸ்தான் குடியரசிலுள்ள பாலைவனத்திற்கு அருகில் சில மைல்களுக்கு அப்பால் எதற்கும் பயன்படாமல் சதுப்பு நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும். அங்கேயிருக்கும் தண்ணீரை இந்தப் பாலைவனப்பகுதிக்கு வரவழைத்து பயிரிட திட்டமிட்டார்கள். அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கால்வாய் வெட்டும் பணியில் இறங்கி அதை துரித கதியிலும் முடித்து பாலைவனத்தில் பருத்தி கூட்டுப்பண்ணையையும் சாத்தியமாக்கினார்கள்.

அதே உஸ்பெகிஸ்தான் பகுதியிலுள்ள வேறு ஒரு கூட்டுப்பண்ணைக்கு சென்றிருந்த எழுத்தாளர் அகிலன் அதைப் பற்றி கூறியது.

“பருத்திச் செடிகள் அங்கே ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அளவில் இவ்வளவு பெரிய பருத்தியை இதற்கு முன் நான் கண்டதில்லை. எனவே, உள்ளே புகுந்து ஒன்றை பறிக்க முனைந்தேன். உடனே ஏதோ கத்திக்கொண்டு வேகமாக என்னைத் தடுத்தார் ஒரு உழவர். அவர் என்ன சொல்கிறார் என்று உடன் வந்த சோவியத் எழுத்தாள நண்பரிடம் கேட்டேன்.

‘பருத்திக்காய் இன்னும் முதிரவில்லையாம், பறித்து வீணாக்கிவிடாதீர்கள் என்று சொல்ல வந்தார்’ என்றார்.

நான் திகைத்து போனேன். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெரிய தோட்டம் அது. நான் பறிக்கப்போனதோ ஒரே ஒரு பருத்தி. அதுவோ கூட்டுப்பண்ணையை சேர்ந்தது. கூட்டுப்பண்ணையைத் தம் சொந்தப் பண்ணையாக ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் எப்படி அவ்வாறு பதறி இருக்க முடியும்? நாட்டின் சொத்தை தனது சொந்த சொத்தைப்போல் மதித்து பாதுகாக்கும் பண்பை ஒரு சாதாரண கிராமவாசியிடம் அங்கே கண்டதை என்னால் மறக்க முடியவில்லை” (சோவியத் நாட்டில்: பயண நூல், அகிலன்,பக்கம் 52)

 

சோவியத் ஆட்சி
ஆட்சி அதிகாரத்தில் அனைவருக்கம் வாய்ப்பு

சோவியத் ஆட்சி முறை

கம்யூனிச ஆட்சி என்பதே மக்கள் மீதான சர்வாதிகாரம் என்றும். கம்யூனிச ஆட்சியில் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது என்றும் இன்னும் இது போன்ற விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பிவைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள் என்பதை இந்த தலைப்பின் கீழ் காணலாம்.

1917ல் புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு இரசிய மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.

“உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்”  (லெனின் நூல் திரட்டு, ஆங்கிலம், தொகுதி26 ப்பக்கம் 297)

சோவியத்தில் ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளாட்சி துறை, மற்றும் சுப்ரீம் சோவியத் தேர்தலில் போட்டியிடலாம். தகுதியானவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களே மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்றனர். இவர்கள் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளியாகவோ அல்லது மாட்டுப் பண்ணையில் பால் கறப்பவர்களாகவோ கூட இருந்தார்கள்.

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை போல ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களை திருப்பியழைக்கும் உரிமையும் உடனடியாக வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்த மக்களுக்கு இருந்தது. இது வெறுமனே ஏட்டில் எழுதி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அவ்வாறு தவறிழைத்தவர்கள் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள். சோவியத் வரலாற்றில் அவ்வாறு சில ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளையும் சில நூறு சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகளையும் மக்கள் திருப்பியழைத்திருக்கின்றனர்.

எல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு  ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்கு காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.

ஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.

நான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ பாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.

ஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என்று புரிந்து கொண்டார்கள். (சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா,பக்கம் 33)

அதே போல சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்ட்த்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாத்த்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

விவாதம் நடைபெற்ற் மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல் படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா ? அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா ?

கூட்டுப்-பண்ணைகள்-நவம்பர்-புரட்சி
கூட்டுப்பண்ணைகள் முதல் தொழிலகம் வரை பெண்களுக்கு முழு உரிமை

பெண்களின் நிலை, குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி

காலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு  சோவியத் இரசியா மட்டும்தான். ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்தார்கள். உடல் உழைப்பு மூளை உழைப்பு இரண்டிலும் ஈடுபட்டார்கள். வேலைகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.

பெண்களை இழிவு படுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது. அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியோ அல்லது ஆபாசமாகவோ சித்தரித்தால் அதற்கு சட்டப்படி கடும் தண்டனை உண்டு. நமது வீட்டுப் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களையும், நாடகங்களையும் நாம் அனுமதிக்க முடியுமா ? முடியாதல்லவா ? அதே போலத் தான் சோவியத் அரசாங்கம் தனது நாட்டு பெண்கள் எந்த விதத்திலும் ஆபாசப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ சித்தரிக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. அங்கே பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. வறுமையையும், தற்குறித்தனத்தையும் ஒழித்துக்கட்டியதைப் போலவே விபச்சாரத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரே நாடு சோசலிச இரசியா மட்டும் தான்.

பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர். சமூகத்தில் சோவியத் பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை என்பதை அகிலனின் கீழ்கண்ட சித்திரம் எடுப்பாக உணர்த்துகிறது.

ஆல்மா ஆட்டாவில் ஓட்டல் ஆல்மா ஆட்டா வின் எட்டாவது மாடியில் இருந்த என் அறையில் நின்றபடி தெருவில் பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தேன். காலை நேரத்தில் இளம்வெயில் அடித்தபின் திடீரென பெருமழை பிடித்துக்கொண்ட்து. தெருவில் தண்ணீர் ஓடியது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு லாரி வந்து தெருவில் நின்றது. அதிலிருந்து மழைக்கோட்டும் குல்லாயும் கால்களில் நீண்ட்தொரு பூட்சும் அணிந்த ஒரு பெண்மணி குதித்தார். கையில் நீண்ட ஒரு கம்பி.

தெருவிலிருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தின் இரும்பு மூடியைத் திறக்கத் தம் கடப்பாறையால் போராடி நெம்பினார். மூடியை நகர்த்தியவுடன் நீஇர் உள்ளே பாய்ந்த்து. பிறகு மூடியை முன் போல் இணைத்து விட்டு, கடப்பாறையை லாரியில் போட்டார். அவர் ஏறிக்கொண்டவுடன் லாரி நகர்ந்த்து. (அகிலனின் மேற்கூறிய நூல், பக்கம் 69)

சோவியத்தில் பெண்கள் வேலை செய்யாத துறை என்று ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கு மேற்கூறிய ஒன்றே போதுமானது.

சோவியத்-குழந்தைகள்-காப்பகம்
மாஸ்கோவில் ஒரு குழந்தைகள் காப்பகம்

அப்படியானால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது? என்கிற கேள்விக்கு விடை தான் ”யாஸ்லிகள்” . இந்த யாஸ்லிகள் என்பது குழந்தைகளை வளர்க்கும் நம்ம ஊர் பாலவாடிகள் போன்றது (ஆனால், நம்ம ஊர் பாலவாடிகளை போன்று கேவலமாக இருக்காது) இவை அரசாங்கத்தால் நடத்தப்படுபவை. பெற்றோர்கள் வேலைக்கு செல்கையில் இந்த யாஸ்லிகளில் தமது குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். யாஸ்லிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதை போலவே அக்கரையோடு வளர்க்க பல தாதியர்கள் யாஸ்லிகளில் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளைத் தாலாட்டி தூங்க வைப்பதிலிருந்து குளிப்பாட்டி, உணவூட்டி, விளையாட்டுப் பொருள்களை கொடுத்து அவர்களோடு விளையாடுவது வரை இன்முகத்துடன் செய்கின்றனர்.

அங்கு தவறாது குழந்தைகளுக்கும் சரிவிகித உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு யாஸ்லிகளிலும் பல மருத்துவர்கள் இருப்பார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து அவர்களில் ஏதேனும் நோயுற்ற குழந்தை இருந்தால் அக்குழந்தையை மட்டும் தனியே வைத்து மருத்துவம் செய்கிறார்கள். அந்த குழந்தையின் உடல் நிலை முழுமையாக சரியான பிறகு தான் மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதிப்பர்.

எல்லாம் சரி தான். தாயைப் போல் அன்பு செலுத்தலாம். அக்கறை காட்டலாம், ஆனால் தாய்ப்பால் ? அதையும் திட்டமிட்டுத்தான் இந்த யாஸ்லிகள் அனைத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளில் அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை குழந்தைகளுக்கு பால் கொடுக்க சென்று வர அனுமதிக்கப்படுகிறது. ஒரு வேளைக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு போய் வரும் 1 மணி நேரமும் அவர்களுடைய வேலை நேரத்தில் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.

முதல் மூன்றாண்டுகள் இந்தக் குழந்தைகள் யாஸ்லிகளில் வளர்க்கப்படுகிறார்கள். இந்தப் பொழுதில் குழந்தைகளுக்கு தெளிவாக பேசுதல், எந்த வேலையையும் சீராகச் செய்தல் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த யாஸ்லி முறை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கூட்டுணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய மனதில் கூட்டுறவு சிந்தனை முறையையும், கூட்டுறவு வேலை பாணியையும் கற்றுத்தருகிறது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு குழந்தையின் ஏழாம் வயது வரை இக்குழந்தைகள் தோட்டப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தோட்டப் பள்ளிகளில் குழந்தைகளை யாரும் படி.. படி.. என்று கொடுமைப்படுத்தி மொக்கைகளைப் போல புத்தகப் புழுக்களாக வளர்ப்பதில்லை! குழந்தைகளுக்கு விருப்பமான கலைகளில் அவர்கள் சிறந்து வளர உதவப்படுகிறது. மாதமொரு முறை காடு, மலை, அருவி போன்ற பகுதிகளுக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு நேரடியாக இயற்கையை பற்றிய அறிவு ஊட்டப்படுகிறது. இங்கு கூட்டாக சுத்தம் செய்தல், தாம் சாப்பிட்ட பாத்திரங்களைத் தாமே கழுவுதல் போன்ற வேலைகளைக் குழந்தைகளையே செய்யச் சொல்லி சுய ஒழுங்கு கற்றுத்தறப்படுகிறது. எந்தத் தொழிலும் இழிந்தது அல்ல என்ற உணர்வு குழந்தை பருவத்திலேயே ஊட்டப்படுகிறது.

தோட்டப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு அவர்களது தாய்மொழி, ரஸ்ய மொழி, மற்றுமொரு கட்டாய அயல்நாட்டு மொழி சொல்லித்தரப் படுகிறது. இது தவிர அறிவியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்கள் நேரடியான பல சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டு பயிற்றுவிக்கப் படுகிறது.

இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்கள் சாதாரண ஆட்களாக இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பரீட்சை உண்டு. அவர்கள் அங்கு தேர்ச்சியடைந்தால் தான் குழந்தைகளுக்கு ஆசிரியராக நீடிக்க முடியும். மாணவர்கள் படிக்கும் போதே பகுதி நேரமாக தொழிற்கூடங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் படிக்கையில் அந்த அந்தப் பாடத்தில் உள்ளவற்றை நடைமுறையோடு பொருத்தி தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. இங்கு கல்வி அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இலவசமாக சொல்லித் தரப்படுகிறது. இதன் காரணமாக சோசலிச இரசியாவில் இரு பத்தாண்டுக்குள்ளாகவே படிக்காதவர்கள் இல்லை என்னும் நிலை உருவானது. முதியவர்களும் கூட இரவு நேர கல்விக் கூடங்களில் கற்றனர்.

இத்தகைய அறிவியல் பூர்வமான கல்வியைப் கற்று வளர்ந்த மாணவர்கள் தான் அறிவியல் விஞ்ஞானத் துறையில் சோவியத் நாடு தலை சிறந்து விளங்க காரணமானவர்கள்.

சோவியத்தில்-அனைவருக்கம்-வீடு
சோவியத்தில் அனைவருக்கம் வீடு

அனைவருக்கும் வீடு:

சோவியத் நாட்டில் அனைவருக்கும் அரசாங்கம் வீட்டு வசதி செய்து தந்தது. வீட்டிற்கு வாடகை எவ்வளவு தெரியுமா ? அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களுடைய சம்பளத்தில் வெறும் 4சதவீதம் மட்டுமே வாடகை. அதாவது, 4000 ரூபாய் வாங்கினால் 160 ரூபாய் வீட்டு வாடகை. சோவியத்தில் சொந்த வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று கூறி பலர் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் அங்கு கூட்டு மாடி வீடுகளை (apartments) கட்டிக் கொள்ள அரசாங்கமே 60சதவீத தொகையை கடனாகக் கொடுக்கிறது. அந்த கடனை 10 முதல் 15 வருடங்களில் திருப்பி செலுத்தினால் போதுமானது. ஆனால், ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே உரிமையாக இருக்க முடியும்.

இந்த வீடு பிரச்சினை குறித்தும் அகிலன் எழுதியுள்ளார். அவர் கூறுவதாவது,

”உறைவிடத்தைப் பொறுத்த வரையில் நான் அங்கு கண்டது இதுவே, வீடில்லாமல் எந்த குடிமகனும் எந்த நகரத்திலும் கிராமத்திலும் நடுத்தெருவில் திரிந்து அலையவில்லை. வசதியான வீடு இன்னும் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் எல்லோருக்குமே அங்கு உணவும், உடையும் கிடைத்துள்ளதை போல உறைவிடமும் கிடைத்துள்ளது என்பது தான் முக்கியமானது.” (அதே நூல், பக்கம் 61)

மேலும் சில விசயங்கள்..

உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்இரசிய மக்கள் என்றுமே தங்கள் தாய்நாட்டை எதற்காகவும் விட்டுத்தராதவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு நாடு என்றால் மனிதர்களும் சேர்ந்ததே ஒழிய அவர்கள் வரைபட தேசபக்தர்கள் அல்ல. இங்கோ எரியும் இந்தியக் கொடியை அணைப்பவனே மிகப் பெரிய தேசபக்தன். அங்கு ஒவ்வொருவனும் தேசப் பற்றாளன் தான். சோசலிச சமுதாயத்தை அவர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்தார்கள். உதாரணத்திற்கு பல நிகழ்வுகளைக் கூறலாம்.

ஒருமுறை என்.எஸ்.கிருஸ்ணனும் அவருடைய நண்பரும் சோவியத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதனை ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தார். என்.எஸ்.கேயின் நண்பர் “எங்கள் நாட்டின் காந்தியமும் உங்கள் நாட்டின் சோசலிசமும் ஒன்று தான்” என்று கூறினார். மொழிபெயர்ப்பாளர் இதனை மொழிபெயர்க்க மறுத்து விட்டார். பொய் சொல்கிறார்கள் என்று கூறி மொழிபெயர்க்க முடியாது என்றும் கூறிவிட்டார். இதிலிருந்து தெரியவில்லையா அவர்கள் சோசலிசத்தை எவ்வளவு நேசித்தார்கள் என்று.

அங்கு இரயில்களில் செக்கிங் கிடையாது. சோவியத் இரசியாவில் பூட்டு தயாரிக்கப்படுவதில்லை! ஏனெனில், வீடுகளில் பூட்டை மாட்ட கொண்டியே இருக்காது. ஏனெனில் அது திருட்டே இல்லாத நாடு! மக்கள் யாரும் யாரையும் ஏமாற்றுபவர்களாக இல்லை. பஸ்ஸில் ஏறும் போதும் டிக்கெட்டை நாமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை இங்கிருந்து சென்ற காங்கிரஸ் தலைவர் காமராஜர் டிக்கெட்டை எடுக்காமல் பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அருகில் இருந்த சோவியத்தை சேர்ந்த தோழர் இவரையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஒன்றிரண்டு நிறுத்தங்கள் வரைப் பார்த்தவர் மூன்றாவது நிறுத்தம் தாண்டிய பிறகும் காமராஜர் பயணச்சீட்டு வாங்காததால் நேராக அவரே எழுந்துச் சென்று தனது பணத்தை போட்டு பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் வரைக்கும் டிக்கெட்டை எடுத்து வந்து அதை அவருடைய கையில் கொடுத்து விட்டு அமர்ந்தார். அங்கே யாராவது தவறு செய்ய நினைத்தாலும் அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்த மக்களின் தேசப் பற்று என்பது இதுதான்.

கவிஞர் கண்ணதாசன், அங்கு சென்று தனது கோணல் புத்திக்கு ஏற்றவாறு, ஒரு ஹோட்டல் பணிப் பெண்ணிடம் கேட்டாராம் “ உங்கள் நாட்டில் விலைமாதுக்கள் உண்டா?” என்று. அந்தப் பெண் ’இல்லை’ என்று பதிலளித்திருக்கிறார். ”நான் உன்னை இங்கு பலவந்தப்படுத்தினால் என்ன செய்வாய்?” என்றாராம். பதிலுக்கு “எனது துப்பாக்கிக்கு வேலை வரும். அவ்வளவு தான்” என்று கூறிச் சென்றாளாம் அந்தப் பெண்.

சோவியத்தின் விஞ்ஞான வளர்ச்சி பற்றி யாரும் தனியே சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வான்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு முன்னதாக சாதித்துக் காட்டியது இரசியா தான். மருத்துவத் துறையில் மிகச்சிறப்பான பல சாதனைகளை செய்ததும் இரசியா தான். விளையாட்டில் அது அள்ளிச் சென்ற பதக்கங்கள் தான் எத்தனை ? எத்தனை ? இவ்வாறு அறிவியல்துறையிலும், மருத்துவத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் பல சாதனைகளை எவ்வாறு ரசியாவால் சாதிக்க முடிந்தது ?

அங்கே கல்வி தனியாரிடம் இல்லை. கல்வி காசுக்காக நடைபெறும் வியாபாரமாக இல்லை. அங்கு அனைவருக்கும் விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை இலவசமாக கிடைக்கப்பெற்றன. அனைவரும் தனது நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பணியாற்ற,  பயிற்சி எடுக்க சிறந்த சோதனைச் சாலைகளும் விளையாட்டரங்குகளும் இருந்தன. இவையெல்லாம் எப்படி வந்தன ? கல்வியை வியாபாரமாக்கி கடை நடத்தும் ஓட்டுப்பொறுக்கிகள் அங்கே இல்லை.

ஒரு ரூபாய்க்கு அரிசியும், கலர் டிவியில் மானாட மயிலாடவை போட்டுவிட்டு கோவணத்தை உருவும் கொள்ளைக்காரர்கள் அங்கு இல்லை, மொத்தத்தில் நாட்டை முன்னேற்றுகிறேன், நாட்டை முன்ன்னேற்றுகிறேன்னு நாட்டை காட்டி கொடுக்கிற கைக்கூலி ஆட்சியாளர்கள் அங்கு இல்லை, எனவே தான் சோவியத் அந்த சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. அது நம்மாலும் முடியும். ஆம், இரசியாவை போலவே சாதனை நிகழ்த்திய சீன மக்களின் உதாரணம் ஒன்று கீழே.

ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் ’தி டைம்ஸ்’ என்கிற பத்திரிகைக்கு 1970ல் பீகிங்கிலிருந்து அனுப்பிய பத்திரிகை செய்தி.

பீகிங்கிலிருந்து பன்னிரெண்டே மைல் தொலைவில் ஒரு லட்சம் சீனர்கள் இரவு பகல் பாராமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு நதியின் போக்கை மாற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருவிகளாக அவர்களிடம் உள்ளவை தள்ளுவண்டிகள், மண்வெட்டிகள், கொந்தளங்களும் மா சே துங்கின் சிந்தனைகளும் தான்.

தலை நகருக்கு தென் கிழக்கே உள்ள விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிற அயல் நாட்டுத்தூதுவர் யாராக இருந்தாலும் சரி அனைவருமே வென் யு நதியின் மீதுள்ள பாலத்தைத் தாண்டும் பொழுது தங்கள் கார்களின் வேகத்தை குறைத்துக்கொண்டு அடிவானம் வரை கருந்திட்ட்டாய் விரிந்து, எறும்புக் கூட்டம் போல் இயங்கும் மனிதர்களையும், அவர்களிடையே புள்ளிகளாய் செறிந்து கிடக்கும் எண்ணற்ற செங்கொடிகளையும் பேராச்சரியத்துடன் உற்றுப்பார்க்கிறார்கள்.

விடியும் காலை ஒளியில் இக்காட்சி மேலும் வசீகரமாய் தெரிகிறது. இதை காணும் எவரும், சீன நடப்பு இது தான் என அயல் நாட்டினருக்கு காட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வழக்கமான மாதிரிக்காட்சிகளில் இதுவும் ஒன்றோ என்று எண்ணத் தூண்டப்படலாம்.

வென் யு நதி வளர்ச்சித் திட்டமானது வட கிழக்கு சீனாவில், ஹாய் நதி பாயும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே என்று அதிகாரிகள் விளக்குகிறார்கள். ஹாய் நதியின் வரலாற்றில் வெள்ளங்களும், வறட்சியும் ஏராளம், ஏராளம்.

ஹாய் நதியை ’பணிய’ வைக்குமாறு 1963 ல் மாவோ அறைகூவல் விடுத்த போது, பல நூறாயிரம் உழவர்கள் அதற்கு செவி மடுத்தனர் என சீனப் பத்திரிகைகள் கூறுகின்றன. அன்று தொட்டு உலகைச் சுற்றி 37முறை – 3அடி உயரமும் அதே அளவு அகலமும் கொண்ட தடுப்புச் சுவரொன்றை எழுப்புவதற்குத் தேவைப்படும் மண் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹாய் நதியில் இணையும் 19 முதன்மையான துணை நதிகளுக்கு, வடிகால்களும், 900மைல்கள் நீள மண் கரைகளும் எழுப்பியதால் நதியின் முக்கியமான வடிகால் பகுதியான சியண்ட்சினில் வினாடிக்கு 9000 கன அடிகளாக இருந்த நீர்ப்பாய்வு, வினாடிக்கு 1,27,000 கன அடிகளாக உயர்ந்து விட்ட்து. இதனால் 8,25,000 ஏக்கர் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தால் ஏற்படும் தேசங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டன.

ஹாய் நதியின் துணை நதியான வென் யு வில் 34 மைல் பரப்பில் வேலை செய்ய, அக்டோபர் மாத இறுதியில் ஹோபெய் மாநில உழவர்கள், படை வீரர்கள், துணைப் படை வீரர்கள், மற்றும் பீகிங் நகர மக்கள் ஆகியோரை அதிகாரிகள் ஒன்று திரட்டினர்.

நான்கு மாதங்கள் எடுத்திருக்க வேண்டிய இப்பணியில் ஏற்கெனவே ஐந்தில் நான்கு பங்கு முடிந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அண்மையில் நான் வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு எந்திரங்களின் இரைச்சல் ஏதும் இருக்கவில்லை,கொந்தாளங்களை ஓங்கிப் போடும் மனிதர்களின் மூச்சொலிகள், மட்டக் குதிரைகளின் கனைப்புகள், வண்டியோட்டிகளின் கூச்சல்கள், தொழிலாளர்களின் முழக்கங்கள் ஒலி பெருக்கிக் கருவிகளில் இசைக்கப்பட்ட புரட்சிக் கீதங்களின் இன்னிசை ஆகியவை மட்டுமே வெளியை நிரப்பிக்கொண்டிருந்தன.

ஆற்றுப்படுகையில் மண் தோண்டி எடுக்க, மூடிக்கிடக்கும் பணி பாளத்தை எடுப்பது அவசியம். இருந்த போதும் தன் கொந்தாளத்தை  வீசுவதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, இடுப்புவரை திறந்த மேனியுடன் நிற்கும் ஒரு அறுபது வயது மனிதர் வேலை செய்து கொண்டிருப்ப்பதைக் கண்டேன்.

இரவும், பகலும், இடைவிடாது, எட்டெட்டு மணி நேர வேலைகளில் சில சமயம் உறை நிலைக்கும் கீழாகி போன கடும் குளிரிலும், அடுத்தடுத்து பணியாற்றும் அணியினர் ஆற்றுப்படுகையை ஆழப்படுத்துகின்றார்கள், மண் கரைகள் எழுப்புகிறார்கள், ஆற்றுக்கு ஒரு புது படுகையை உருவாக்குவதற்காக பல துணை நதியை அழித்து வருகிறார்கள்.

மாவோவின் அறைகூவலுக்கு செவி சாய்ப்பதில் எத்தகைய வேலை முறைகளும் தொழிலாளிகளுக்கு ஏற்புடையனவாகிவிடுகின்றன. அவர்கள் தம் உடல் பாரத்தைக் கொண்டே வேரோடு மரங்களைச் சாய்த்து விடுகிறார்கள்.

இவர்கள் குடிசைகளிலோ அல்லது பணிக்காற்றைத் தடுப்பதற்காக சிறிய மண் சுவர்களாலும் வைக்கோலாலும் சூழப்பட்ட பெரிய கூடாரங்களிலோ வசிக்கிறார்கள். பெரிய பெரிய பானைகளில் ஆவி பறக்கும் உணவு, வேலை நடக்கும் இட்த்திற்கே கொண்டு வரப்படுகிறது

(மார்க்ஸ் முதல் மாவோ வரை, பக்கம் 193)

தோழர் ஸ்டாலின்ரசியாவிலும், சீனாவிலும் சோசலிச மக்கள் படைத்திட்ட சாதனைகள் தான் எவ்வளவு அருமையானது, லாபவெறி பிடித்தலையும் முதலாளித்துவவாதிகளின் சுரண்டலை ஒழித்துக்கட்டி, அடிமைகளாக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும், அனைத்து மகிழ்ச்சியையும் வழங்கி நல்வாழ்வளித்த நவம்பர் புரட்சி தான் எவ்வளவு மகத்தானது!!. இரண்டரை கோடி மக்களை பலி கொடுத்து பாசிஸ்ட் இட்லரிடமிருந்து இந்த உலகை காப்பாற்றிய சோவியத் மக்களின் தியாகம் எவ்வளவு உயர்ந்தது. அந்த சோவியத்தையும், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் சர்வாதிகாரம் என்றும், அதன் தலைவர்களை கொலைகாரர்கள் என்றும் அவதூறு செய்பவர்கள் யார் ? உழைக்கும் மக்களா ? இல்லை, கம்யூனிசத்தின் எதிரிகள் யாரோ அவர்கள் தான் இத்தகைய அவதூறுகளை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் செலவு செய்து பரப்பி வருகிறார்கள்.

ஏனெனில், கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் ஓட்டைக் குடிசையிலும், குப்பைத் தொட்டிகளிலும் வாழ்ந்து வரும் பல கோடி மக்கள் முதலாளிகள் மீது அதிகாரம் செலுத்துவார்கள். அப்போது அம்பானி என்கிற இரத்தக்காட்டேரி 5000 கோடி ரூபாய்க்கு மாளிகை கட்ட முடியாதல்லவா? உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்க முடியாதல்லவா? எனவே தான் கம்யூனிசம் குறித்த பொய்களையும், புளுகுகளையும் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தையும் மேற்கண்ட உண்மைகள் அம்பலமாக்கியிருக்கின்றன.

கம்யூனிசம் தோற்றுப்போய் விட்டதென்றால் சின்னஞ்சிறிய நாடான நேபாளத்தைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுவது ஏன்? வல்லரசாகப்போகிற இந்தியா அஞ்சுவது ஏன்? ஏனெனில், கம்யூனிசம் தோற்கவில்லை என்பது அதன் கையால் புதைகுழிகளுக்குள் தள்ளப்படப்போகிற இவர்களுக்கு நன்றாக தெரியும்.

முதலாளித்துவம் யாரைக்கண்டு அஞ்சி நடுங்குகிறதோ அந்த பூதம், கம்யூனிசம் என்கிற அந்த கோடிக்கால் பூதம் வந்தே தீரும், அது இவர்களுடைய அனைத்து அநீதிகளுக்கும் தீர்ப்புகளை வழங்கியே தீரும்!

கோடிக்கணக்கான மக்களுக்கான சொர்க்கத்தையும், சுரண்டல் கூட்டத்தின் மீதான ’சர்வாதிகாரத்தை’ யும் நமது நாட்டிலும் ஏற்படுத்த நக்சல்பாரி பாதையில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் இந்த நவம்பர் புரட்சி நாளில்.

அனைவருக்கும் நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள் !

___________________________

–    சர்வதேசியவாதிகள்
___________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

நவம்பர் புரட்சி! மகிழ்ச்சி!
சரி…. நாம் என்ன செய்யப் போகிறோம்?

தொழிலாளர் வர்க்கத்தின் துயரங்களுக்காக
அழாத விழிகள்….
தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றிக்காக
சிரிக்காத உதடுகள்…
தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக
இயங்காத இதயங்கள்…
இருந்தாலும் இறந்தனவே!

பிறப்பின் உருவத்தை
உன் கருப்பை தீர்மானிக்கலாம்
பிறப்பின் உணர்ச்சியை… இலட்சியத்தை
உன் கருத்துதான் தீர்மானிக்கிறது…
மனிதனாக வேண்டுமா? வா!
பாட்டாளி வர்க்க பக்கம்!

புரட்சியின் மகிழ்ச்சியை
துய்த்திட வேண்டுமெனில்,
புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும்!
புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்!

நீரலை எதிர்த்து… ஓர் இலைப்பற்றி
தன்னந்தனியாய் போராடிப் போராடி
கரைசேரும் சிற்றெறும்பின்
விடாப்பிடி வேண்டும்!

இடையில் ஆயிரம் இன்னல்கள் தாண்டி…
இல்லற முரண்களின் சுயநலம் தாண்டி…
உடன்வரும் தோழர்கள் அன்பினில் தோய்ந்து
முரண்படும் தோழமை இயங்கியல் அறிந்து
முற்றிலும் புரட்சியே சரியென உணர்ந்து
பற்றிடும் உணர்ச்சியில் பாதம் அழுந்து!
புரட்சியின் வேகத்திற்கு நீ பொருந்து! பொருந்து!
பார்! புரட்சியின் இனிமை புரியும் உனக்கு.

என்வேலை… என் சூழல்…
இனிய காதலி… மனைவி, மக்கள்
என தன்நிலை பார்த்து
வேலை செய்வதல்ல புரட்சி,
மக்கள் நிலையைப் பார்த்து
இப்போதே மாறவேண்டும் சமூகம் என
தன்னிரக்கம் தகர்த்து
வேலை செய்வதே புரட்சி!

அய்வகை நிலமும், செய்தொழில் அனைத்தும்
உன் கண்ணெதிரே அழிகிறது!
அந்நிய மூலதனத்தின் நச்சுச்சூழலில்
நம் அன்னையின் மார்பில் சுரக்கிறது,
குரோமியமும், காரியமும்.
மான்சான்டோ மலட்டு விதைகளால்
இந்தியத் தாய்களின் கருப்பையும்
இனி தரிசாக…
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்…. வெண்டைக்காய்…
மன்மோகன்சிங்…. ப.சிதம்பரம்…
இந்த வரிசையில் உன்னையும் சேர்க்க சம்மதமா?

நவம்பர் புரட்சியோடு அடையாளப்படுத்திக்கொள்ளும்
உன்னையே நம்புகிறது ஊர், உலகம்.
உறியப்பட்ட இயற்கை வளங்களின்
அரசியல் புரியாமல்…
ஒரு வாய் தண்ணீருக்காக
உன் வாசல் வந்து கத்துகிறது மாடு!

ஓசையற்ற தறிக்கட்டைகளின்
உள்சோகம் நீ உணராவிட்டால்,
கடைசியில் உன் இதயமும்
செல்லரித்துப் போகலாம்!

கயர்லாஞ்சியிலோ… கடலூர் பக்கத்திலோ
சிதைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின்
‍போராட்ட உணர்ச்சியோடு பொருந்தாதவருக்கு
நவம்பர் புரட்சியின் நல்லிசை சொந்தமில்லை!

குறுஞ்செய்தி… பரிமாற்றம்…. மகிழ்ச்சி…
விழா இரைச்சலுக்கிடையே… விட்டுவிடாதே!
‘நோக்கியா கட்டிங் மிசினில்’ பணிக்கொலையான
தொழிலாளி அம்பிகாவின் துடிதுடித்த குரல்
உனக்கு கேட்கிறதா?
நச்சரிக்கும் அந்தத் தோழியின் குரல்
இந்த நவம்பர் புரட்சியில் உன்னிடம் வேண்டுவது,
முதலாளித்துவக் கொலைக்களங்களுக்கு எதிராக
ஏதாவது செய் என்பதல்ல…
புரட்சிக்குக் குறைவாக
வேறெதுவும் வேண்டாம் என்பதே!

விழா மகிழ்ச்சியில்…
இந்த வேண்டுகோளை விட்டுவிடாதே,
செய்… வேலை நிறைய இருக்கிறது…
புரிந்துகொள்!
புரட்சியின் பணிச்சுமை ஏற்பவர் எவரோ?
புரட்சியின் மகிழ்ச்சிக்கு
உரியவர் அவரே!

—துரை.சண்முகம்

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !

44
மதுரவாயல் ரவுடி யோசுவாவை எதிர்த்து...
மதுரவாயல் ரவுடி யோசுவாவை எதிர்த்து...

சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் கட்டாய நன்கொடையை எதிர்த்தும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் எனும் பெயரில் பகுஜன் சமாஜ் கட்சி ரவுடி யோசுவா நடத்தும் ஆதிக்கத்தை எதிர்த்தும் பு.மா.இ.மு போராடி வருகிறது. இது குறித்து முன்னர் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இதன் காரணமாக பள்ளி மாணவர்களும், பு.மா.இ.மு தோழர்களுமான மணி, சதாம் இருவரையும் பள்ளிக்கூட நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியது. சாதரணமாக ஈவ் டீசிங், ராகிங், முதலான பிரச்சினைகளுக்குத்தான் மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு இரு மாணவர்கள் ரவுடியை எதிர்த்ததற்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அநீதியை எதிர்த்து மாணவர்களிடமும், பகுதி மக்களிடமும் பிரச்சாரம் செய்த தோழர்கள் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ரவுடி யோசுவா மீதான கிரிமனல் வழக்குகள் குறித்த ஆதாரங்களும் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.

இப்படி ஒரு வழக்கை நீதிமன்றம் சந்தித்திருக்காது என்பது நிச்சயம். அரசு தரப்பு வழக்குரைஞர் மாணவர்களை நீக்கியது செல்லும் என்று வைத்த வாதங்களை நீதிபதி ஏற்கவில்லை. மேலும் “கட்டாய நன்கொடை ஏன் வாங்கப்பட்டது?, அதை எதிர்த்துக் கேட்ட பள்ளி மாணவர்களை எப்படி நீக்க முடியும்?, இப்படி செய்வதற்கு தலைமை ஆசிரியருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?, கிரிமினல் வழக்குள்ள யோசுவா பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் எப்படி இருக்க முடியும்? “ என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார் அந்த நீதிபதி.

அதற்கு அரசு தரப்பு எந்த விளக்கத்தையும் நியாயமாக அளிக்க முடியவில்லை. எனவே இப்படி அநீதியாக பள்ளி மாணவர்களை நீக்கிய தலைமை ஆசிரியர் மீது பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளார் நீதிபதி.

நீதிமன்ற உத்தரவை காண்பித்து நீக்கப்பட்ட பள்ளிமாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர். பொதுவில் மாணவர்களை நீக்குவதும், மிரட்டுவதும் என்று சர்வாதிகாரம் நடக்கும் பள்ளிகளில் இரு மாணவர்கள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது பலருக்கும் அதிசயமாக இருந்தது.

ஒருபுறம் ரவுடி யோசுவாவின் ஆதிக்கம். மறுபுறம் அதற்கு ஒத்தூதும் பள்ளி நிர்வாகம். இப்படி இரண்டையுமே பு.மா.இ.மு தோழர்கள் மக்களையும், மாணவர்களையும் அணிதிரட்டி வென்றிருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று எகத்தாளம் பேசும் அறிஞர் பெருமக்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. மகத்தான மக்கள் மருத்துவர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ் நூற்றாண்டு விழா
  2. புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம்
  3. அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!
  4. திருச்சி ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் காமவெறி பாதிரி ராஜரத்தினம்
  5. காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!
  6. அரசு மருத்துவமனையா? மரண வாசலா?
  7. கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்! தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம் !!
  8. மணமேல்குடியில் நடந்த சீர்திருத்த திருமணம்: விளக்கமும் சுயவிமர்சனமும்
  9. மணற்கொள்ளை: பேரழிவுக்குள் தள்ளப்படும் தமிழகம்!
  10. பள்ளி மாணவன் பாரத் கொலை: நீதி கேட்பது போலீசுக்கு அநீதியாம்!
  11. சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும்! மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி!!
  12. தேசிய அடையாள அட்டை: மக்கள் நலனுக்கான திட்டமா? மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?
  13. வட்டாட்சியர் அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா?
  14. டாடா குழுமத்தின் கோரமுகம்
  15. ராஜஸ்தான் மாநில அரசு – மான்சாண்டோ கூட்டு ஒப்பந்தம்: சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட ஈ
  16. அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்
  17. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்! அரசு பயங்கரவாதத்தின் கேடயம்!!
  18. காஷ்மீர் சலுகைத் திட்டம்: மீண்டுமொரு மோசடி நாடகம்!
  19. ரவுடியின் கொட்டத்தை ஒடுக்கிய பள்ளி மாணவர்களின் போராட்டம்
  20. பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!

38
தொ.மு.ச
கொலைகார நோக்கியா
நோக்கியா வளாகம்

நோக்கியாவின் நூறு மில்லியன் இலாபவெறிக்காக கொல்லப்பட்ட தொழிலாளி அம்பிகாவின் உடல் நேற்று(1.11.2010) மாலை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.  அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டார்கள். இன்று(2.11.2010) மாலை இன்னும் சற்று நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை வளாகம் முழுவதும் தொழிலாளிகள் நிரம்பி வழிந்தார்கள். அம்பிகாவோடு பணியாற்றிய சில பெண் தொழிலாளிகளும் அங்கிருந்தார்கள். அம்பிகாவின் தாயார் இடிந்து போன நிலையில் தரையில் கதறிக் கொண்டிருந்தார்.

எமது தோழர்கள் தொழிலாளிகளிடம் பேசினார்கள். இதற்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவதின் அவசியத்தை எடுத்துரைத்தார்கள். ஆனாலும் நமது எதிர்பார்ப்புக்கிணங்க அங்கு அற்புதம் ஏதும் நடைபெறாது என்பதே யதார்த்தம். தொழிலாளிகளை வழிநடத்தும் தொழிற்சங்கமோ, முன்னணியாளர்களோ இல்லாமல் இருக்கும் தொழிலாளிகள் ஒட்டு மொத்தமாக ஒரு கையறு நிலையில் இருந்தார்கள்.

அவர்களிடம் கோபம் இருந்தது என்று சொல்வதை விட விரக்தியே அந்த வளாகத்தை ஆக்கிரமித்திருந்தது என்று சொல்லலாம். தி.மு.க சார்பில் குப்புசாமி, சி.பி.எம் சார்பில் எம்.எல்.ஏ மகேந்திரன், மற்றும் சில அ.தி.மு.க பிரமுகர்கள் மருத்துவமனையில் வைத்து நோக்கியா நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நிவாரணம், குடும்பத்தினருக்கு வேலை என்ற வழமையான சடங்கு சம்பிரதாயங்கள் பேசப்பட்டன. அதிலும் கூட நோக்கியா தரப்பு எட்டாம் தேதி பதில் சொல்வதாக அறிவித்துவிட்டது.

கொலைகார நோக்கியா
குப்புசாமி (தொ.மு.ச )

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாட்படையாக செயல்படும் தி.மு.வின் தொ.மு.சதான் அதிகாரப்பூர்வமான தொழிற்சங்கம். அந்த சங்கத்தை மயிரளவிற்கு கூட தொழிலாளிகள் மதிப்பதில்லை. தி.மு.க பிரமுகர்களும் மேல்மட்ட அளவில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பொறுக்கி தின்பதோடு தொழிலாளர்களையும் நாட்டாமை செய்யும் உள்ளூர் தாதாக்களாக வலம் வருகிறார்கள். சி.பி.எம் கட்சியோ இதை தகர்க்க முடியாமல் தொழிலாளர்களை போர்க்குணத்தோடு திரட்ட முடியாமல், அரசியல் உணர்வை ஊட்டாமல் சம்பிரதாயமான தொழிற்சங்கவாத்த்தில் மூழ்கி இப்போது அதையும் செய்ய இயலாத அவல நிலையில் இருக்கிறது.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை கட்டியதற்காக சி.ஐ.டி.யு தலைவர்கள் உட்பட பல தொழிலாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போதும் ஒரகடம் பி.ஒய்.டி எனும் நோக்கியாவிற்கு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளிகள் சி.ஐ.டி.யு தலைமையில் போராடுகிறார்கள். அந்த போராட்டத்தை முடக்க நினைத்த நிர்வாகம் கதவடைப்பு செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கும் முயன்று வருகிறது.

தமிழ்நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனைத்திலும் இதுதான் நிலைமை. இங்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் அரசுடன் செய்யும் ஒப்பந்தத்திலேயே தொழிலாளர்களின் உரிமையை பலிகொடுக்கும் விதிகள் பட்டவர்த்தனமாய் இடம் பெறுகின்றன. தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது.

கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த பின்னணியும் சூழலுமே காரணங்கள்.

கொலைகார நோக்கியா
அம்பிகாவின் தாய்

நோக்கியா தொழிற்சாலை முழுவதும் சி.சி.டி.வி காமராக்கள் இருக்கின்றன. தொழிலாளிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதில் பதிவாகின்றன. இந்த கண்காணிப்பை வைத்து தொழிலாளிகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அருகாமை தொழிலாளியிடம் பேசினால் கூட இங்கு குற்றம் என்பது சட்டம். எனில் அம்பிகா கொலை செய்யப்பட்ட காட்சி கூட அந்த காமராக்களில் பதிவாகியிருக்கும். இது சாதாரண விபத்து என்று ஊடகங்களின் உதவியுடன் ஊளையிடும் நோக்கியா நிர்வாகம் அந்த படப்பதிவை வெளியிடட்டுமே? உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா?

அம்பிகாவை ஒரு ரோபோ தாக்கியதால் பலியானார் என்றுதான் அநேக ஊடகங்கள் ஒரே மாதிரியாக பேசுகின்றன. அதுவும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போகிற போக்கில் நாளிதழின் மூலையில் தெரிவிக்கப்படுகின்றன. எந்திரத்தை உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம் என்று இன்னமும் பல தொழிலாளிகள் பேசுகின்றனர். ஆனால் இந்த உண்மையை நிர்வாகம் வதந்தி என்கிறது.

பழுதடைந்த அந்த எந்திரத்தை அப்புறப்படுத்திவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் புதிய எந்திரத்தை அங்கே வைத்துவிட்டதாக தொழிலாளிகள் கூறினார்கள். ஏதாவது கண்துடைப்பு விசாரணை வந்தால் கூட எந்திரத்தில் பாதிப்பு இல்லை என்று சொல்லிவிடலாம் அல்லவா? எதிர்பார்த்தது போல தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை வைத்து ஒரு விசாரணையை நடத்தப் போகிறதாம்.

நோக்கியா வளாகத்தில் இருக்கும் ஒரு அறை மருத்துவமனை என்ற பெயரில் இயங்குகிறது. ஒரு செவிலியர் அங்கு வரும் தொழிலாளிகளுக்கு ஒரு வெள்ளை மாத்திரை கொடுத்து சர்வ நோய்களையும் குணமாக்கிவருகிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் இருக்கும் தொழிற்சாலையில் குறைந்த பட்ச வசதிகள் கொண்ட மருத்துவமனையோ, அவசர சிகிச்சைக்கான வசதிகளோ இல்லை எனும் போது அரசு எதை விசாரிக்க போகிறது?

நோக்கியாவின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் எல்லா பத்திரிகைகளையும் தொடர்பு கொண்டு தாங்கள் அளித்த, அளிக்க போகின்ற விளம்பரங்களை நினைவுபடுத்தி இந்த கொலையை மறைக்க வேலை செய்கிறார்கள். அதன் விளைவயும் ஊடகங்களில் பார்க்கிறோம்.

கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதை அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் வெளியிட்டன. பொது மக்களிடம் எழும் மனிதாபிமானத்தை மாபெரும் பொது நடவடிக்கையாக மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அதே ஊடகங்கள் நோக்கியாவின் கொலையை பார்க்க மறுப்பதற்கு என்ன காரணம்?

அரசியலற்ற மனிதாபிமானம்தான் அவர்களுக்கு தேவை. கோவையில் இரு குழந்தைகளை கொன்ற அந்த கயவனை கைது செய்து விட்டார்கள். கொலை எப்படி நடந்த்து என்று கண்டு பிடித்துவிட்டார்கள். இனி துரித கதியில் விசாரணை நடந்து அவனுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும்.

ஆனால் அம்பிகாவின் மரணத்திற்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இருக்கட்டும், யார்மேலும் எந்த புகாரும் இல்லையே? இது தற்செயலா, இல்லை திட்டமிட்ட தந்திரமா?

காஞ்சிபுரம் கலவைக்கு அருகே உள்ள கிராமத்தில் இந்நேரம் அம்பிகாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டுவிடும். சில நூறு தொழிலாளர்களை தவிர அங்கு வேறு யாருமில்லை. இன்றைக்கு கூட நோக்கியாவில் உற்பத்தி நடக்கிறது. விடுமுறை இல்லை. தொழிலாளிகள் அதை புறக்கணித்துவிட்டு அம்பிகாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருக்கிறார்கள். தூரம் காரணமாக நிறைய பெண்தொழிலாளிகள் வரவில்லை.

தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அந்த இரண்டு கோடி மதிப்புள்ள எந்திரத்தை உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். மதிப்பிட முடியாத நாட்டை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை தமது வர்க்க கோபத்தால் தொழிலாளிகள் உடைத்தால் இனி வரும் அம்பிகா போன்ற தொழிலாளிகளை காப்பாற்றலாம். இறந்து போன அம்பிகாவுக்கான நீதியையும் பெறலாம்.

___________________________________________________________________________________________

–          வினவு செய்தியாளர்கள், நோக்கியா ஆலை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…..
___________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!

82
nokia-kills

nokia-kills

காஞ்சிபுரம் அருகே உள்ள கலவை எனும் ஊரைச் சேர்ந்தவர் அம்பிகா. வயது 23 இருக்கலாம். பெற்றோருக்கு மூத்த பிள்ளை, ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள். வரும் ஜனவரி 8 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. சுங்குவார் சத்திரத்தில் இருக்கும் நோக்கியா ஆலையில் கடந்த முன்று வருடங்களாக அம்பிகா வேலை செய்கிறார். நேற்று இரவு அவர்,ஆலையில் கொடுரமாக இறந்து போயிருக்கிறார். எனினும் இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.

இந்தியா, சீனா இரண்டு நாடுகளில் இருக்கும் எல்லா நோக்கியா ஆலைகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் செல்போன்களை உற்பத்தி செய்து முடிப்பதற்கு வேலை செய்து வருகின்றன. இந்த இலக்கை அடைவதற்கு தொழிலாளிகள் இரக்கமின்றி ஒரு எந்திரம் போல வேலை செய்ய வேண்டும். செய்கிறார்கள்.

சென்னை நோக்கியா ஆலையில் ஏ,பி,சி எனும் மூன்று ஷிப்ட்டுகளிலும் தலா ஒன்று முதல் இரண்டு இலட்சம் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு அங்காடி தெரு திரைப்படத்தில் வரும் கொடூரமான சூபர்வைசர் அண்ணாச்சியை விட கொடூரமான மேலாள நிர்வாகிகள் அங்கு இருக்கின்றனர்.

நேற்று இரவு (31.10.2010) பி ஷிப்ட்டில் தொழிலாளி அம்பிகா வேலை செய்கிறார். அவரது யூனிட்டின் பெயர் “இன்ஜின் ஆபரேஷன் ஃபைனல் அசம்பிளி” என்று சொல்கிறார்கள். இங்கு “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். வேலையின் போது சில பீஸ் போர்டுகள் எந்திரத்தில் விழுந்தால் தொழிலாளிகள் அதை கைவிட்டு எடுப்பார்கள். அவர்கள் கை நுழைந்த உடனேயே அந்த எந்திரத்தில் உள்ள ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் இயங்கி அறுப்பதை நிறுத்தி வைக்கும்.

ஆனால் இந்த ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் வேலை செய்தால் அதனால் பத்து, பதினைந்து நிமிடம் உற்பத்தி தாமதாமாகிவிடும் என்பதால் இதை மூடியே வைத்திருப்பார்கள். அதாவது தொழிலாளி தன் உயிரை பணயம் வைத்து சில விநாடிகளுக்கும் விழுந்துவிட்ட ஃபோர்டுகளை எடுக்க வேண்டும். இது பச்சையான படுகொலை இல்லையா?

எந்திரத்தில் சில ஃபோர்டுகள் விழுந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனெனில் அறுக்கப்படும் எல்லா போர்டுகளுக்கும் தொழிலாளிகள் சரியான கணக்கு கொடுக்க வேண்டும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் ஏழுமணிக்கு அப்படி விழுந்துவிட்ட ஃபோர்டை எடுப்பதற்கு அம்பிகா முயன்றிருக்கிறார். எனினும் அப்போது அந்த எந்திரத்தின் சென்சார் வேலை செய்யும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அதன் செயல்பாடு நிறுத்தப் பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. அதன்படி அம்பிகா கழுத்தின் பின்புறமாக அந்த எந்திரம் அறுக்கத் தொடங்கியிருக்கிறது.

கழுத்து அறுபட அறுபட இரத்தம் ஏராளமாக வழிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கம்பி கழுத்தில் ஆழமாக சென்றுவிட்டதால் இரத்தம் உடலுக்குள்ளேயே ஏராளமாக கசிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு நான்கைந்து முறை மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால் வெளியே யாருக்கும் இது தெரியவில்லை. சில பெண் தொழிலாளிகள் இதைப் பார்த்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். சில ஆண் தொழிலாளிகள் உடனே எந்திரத்தை உடைத்து அம்பிகாவை காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்.

ஆனால் அங்கிருந்த சூபர்வைசர் வெற்றி தேவராஜ் மேலிடத்தில் பேசிவிட்டு மிஷனை உடைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அந்த எந்திரம் இரண்டு கோடி ரூபாய் விலை உள்ளது என்றும் அதை பொறுமையாக டூல்சை கொண்டு படிப்படியாக கழட்டலாம் என்று அவர் சொல்லிவிட்டு எந்திரத்தை உடைக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பாக செக்யூரிட்டிகளை நிறுத்தியிருக்கிறார். டூல்சை கொண்டு கழட்டலாம் என்றால் அங்கே டூல்ஸ் பாக்சும் இல்லை.

இதற்குள் 10 நிமிடங்கள் கழிந்துவிட்டன. ஏராளமான இரத்தம் வழிந்துவிட்டது. கழுத்தை அறுத்த அந்த எந்திரத்தில் இருந்து அம்பிகா மீட்கப்படவில்லை. இறுதியில் வேறுவழியின்றி தொழிலாளிகள் நிர்வாகத்துடன் சண்டை போட்டு எந்திரத்தின் கட்டரை உடைத்து அம்பிகாவை மீட்கின்றனர். இப்போது மொத்தம் 20 அல்லது 25 நிமிடங்கள் முடிந்துவிட்டன்.

ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார். அதற்குள் அவர் உயிர் பிரிகிறது. பின்னர் அவரை கே.எம்.சி, அப்பல்லோ என்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். தொழிலாளிகளின் கூற்றுப்படி அம்பிகா அதற்கு முன்னரே இறந்து போயிருக்கிறார்.

ஆலைக்குள் வரும் தொழிலாளிகள் எவரும் தமது செல்பேசிகளை பணியிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்பதால் அம்பிகாவின் மரணம் அவர்களுக்கு உடனேயே தெரியவில்லை. “அசம்பிள் டூ ஆர்டர் செக்ஷன்” எனும் பிரிவின் சூபர்வைசர் ஜே.புருஷோத்தமன் அம்பிகாவின் மரணத்தை மறைத்து தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்ற பணித்திருக்கிறான். அம்பிகாவுக்கு ஒன்றுமில்லை, இரத்தம் ஏற்றுகிறார்கள், எல்லாரும் வேலையை தொடருங்கள் என்றும் கூறியிருக்கிறான். இவன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதே.

பின்னர் மருத்துவமனையின் நர்ஸ் வழியாக அம்பிகாவின் மரணச் செய்தி தொழிலாளிகளுக்கு கிடைக்கிறது. அதன் பின்னர் இரவு 12 மணிக்குத்தான் உற்பத்தியை நிறுத்துகிறார்கள். அதுவும் கூட தொழிலாளிகளின் கோபத்தால் நடந்ததே அன்றி நிர்வாகத்தால் அல்ல. அம்பிகாவின் மரணம் இரகசிய செய்தியாக கசிந்த பிறகே நிர்வாகம் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. எப்படியும் உற்பத்தியை நிறுத்தக்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பம்.

மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை தந்துவிட்டால் தங்களது மகளின் உயிர் திரும்ப கிடைக்குமா என்றும் அவர்கள் ஆவேசப்படுகிறார்கள்.

ஏற்கனவே சிலமாதங்களுக்கு முன்னர் நோக்கியாவில் தொழிற்சங்கத்தின் மூலம் நிர்வாகத்தின் சுரண்டலை எதிர்த்து போராட்டம் நடந்திருக்கிறது. அதையெல்லாம் ஈவிரக்கமின்றி ஒடுக்கிய நிர்வாகம் 100 மில்லியன் இலக்கு வெறிக்காக கொடுரமான வேலை முறையை கையாண்டிருக்கிறது.

கட்டிங் மிஷினுக்குள் விழுந்துவிடும் ஃபோர்டுகளை எடுக்க வேண்டியதில்லை என்று தொழிலாளிகளுக்கு அறிவித்திருந்தால் அம்பிகா கொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் 100 மில்லியன் இலக்கை அடையமுடியாமல் போயிருக்குமே?

எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இரண்டு கோடி நட்டமாயிருக்குமே, அதற்கு என்ன செய்ய முடியும்? கட்டிங் இயந்திரத்தின் சென்சார் போர்டை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்தால் அம்பிகா இறந்திருக்க மாட்டார். ஆனால் நிறுத்தப்படும் ஒவ்வொருமுறையும் உற்பத்தி தடங்கலுக்குள்ளாயிருக்குமே, அதற்கு என்ன செய்வது?

100 மில்லியன் இலக்கை அடைய வேண்டுமென்றால் இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில்தான் நோக்கியா தொழிலாளிகள் வேலை செய்ய வேண்டும். அப்படித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்ததினால்தான் இன்று அம்பிகா கொல்லப்பட்டிருக்கிறார்.

சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6S) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். அந்த பாதுகாப்பு இலட்சணத்திற்கு ரத்த சாட்சியம்தான் அம்பிகா.

கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், அறிவித்தாலும் அபயாத்தோடு கையை விட்டு விழும் போர்டுகளை எடுப்பது என்று பின்னர் இயந்திரத்தை உடைக்க கூடாது என்று தடை போட்டு, இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அம்பிகா கொடுரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்.

சன் டி.வியில் ஒரு ஒற்றை வரி செய்தியோடு இந்த படுகொலை முடிந்து விட்டது. நோக்கியா ஆலைக்கு சென்ற வினவு செய்தியாளர்களைத் தவிர அங்கு எந்த ஊடக நபர்களும் இல்லை. எல்லா ஊடகங்களிலும் நோக்கியா விளம்பரம் கல்லா கட்டுகிறது என்ற உண்மை காரணமாக அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தொழிலாளிகளிடையே பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக போலீசு பெருமளவில் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது.

அம்பிகாவின் கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் முயல்கிறார்கள். போராட தொழிற்சங்க தலைமை இல்லாத காரணத்தால் தொழிலாளிகள் என்ன செய்வதென்று திகைத்திருக்கிறார்கள். அம்பிகாவின் உடல் அப்பல்லோவின் சவக்கிடங்கில் இருக்கிறது.

அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச்சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சிலாகிப்பார்கள்.

அவர்கள் பருகுவது சாராயமல்ல, அம்பிகாவைப் போன்ற தொழிலாளிகளின் இரத்தம் என்பதை நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். பழி தீர்ப்போம்.

___________________________________________________________________________________________

–          வினவு செய்தியாளர்கள், நோக்கியா ஆலை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…..
___________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!

19

தமிழகத்தின் வீரஞ்செறிந்த மாணவர் போராட்ட வரலாறு!

இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள்

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் அறுபதுகளில் தமிழகத் தெருக்களில் அக்கினிச் சுவாலைகளை உண்டாக்கி விட்டிருந்தது, இந்திய ஆளும்வர்க்கத்தின் இந்தித் திணிப்புக் கொள்கைகள். இந்தியின் முன் மற்ற மாநிலங்கள் மண்டியிட்டிருந்த போதிலும் தமிழகம் போர்குணத்தோடு தலை நிமிர்ந்து நின்றது.

பெரியாரின் தலைமையில் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் போராட்டம் நடந்திருந்தது. இந்திக்கு எதிரான இறுதி யுத்தம் போன்ற அறுபதுகளின் இந்தி எதிர்ப்புப் போர் முந்தைய எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து வேறுபட்டவொன்று. இதில் இளைமைத் துடிப்பு இருந்தது. கட்டுக்கடங்காத காட்டாறின் வேகமும் துள்ளலும் இருந்தது – துரைத்தனங்களின் மீது காறியுமிழும் திமிர் இருந்தது. ஆம்…. இம்முறை போராட்டக் களத்தில் மாணவர்கள் இறங்கினர்.

ஐம்பதாயிரம் பேர் கொண்ட மாணவர் படை 1965 ஜனவரி 26ம் தேதி சென்னை நேப்பியர் பூங்காவிலிருந்து ஜார்ஜ் கோட்டைக்குச் சென்ற ஊர்வலத்தின் போர் குணத்தைக் கண்டு அஞ்சிய காங்கிரஸின் பக்தவத்சலம் கோட்டையினுள் பதுங்கிக் கொண்டு வெளியே தலைகாட்ட மறுத்தார். மதுரையில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் பேரணியில் புகுந்த காங்கிரஸ் காலிகள் மாணவர்கள் ஏழு பேரைத் தாக்கிக் காயப்படுத்துகிறார்கள். வெகுண்டெழுந்த மாணவர்களின் கோபக் கணலில் எரிந்து சாம்பலான காங்கிரசைப் புதைத்த இடத்தில் இன்று புல் முளைத்து விட்டது. தமிழகத்தில் கல்லரைக்குப் போன காங்கிரசு தன்னோடு சேர்த்து இந்தியையும் அழைத்துச் சென்று விட்டது. அன்றைக்கு நடந்த அந்தப் போராட்டங்கள் மாணவர் சமுதாயம் எழுதிய மகத்தான வீர காவியம்.

பின்னர் எண்பதுகளின் ஈழத்தில் நடந்த இனவொழிப்புப் போர் மீண்டும் மாணவர்களை வீதிக்கு அழைத்து வந்தது. எரிமலைகள் எப்போதும் உறக்கத்திலேயே ஆழ்ந்து விடுவதில்லை என்பதை அதிகார வர்க்கத்தின் உச்சந்தலையில் சம்மட்டியால் அடித்து உணர வைத்தார்கள் மாணவர்கள். அன்று மொழியைக் காக்க நெருப்பில் இறங்கிய மாணவர்கள் இன்று தன் இனத்தை இனவெறி நெருப்பிலிருந்து காக்க தெருவில் இறங்கினர். தமிழகத்தின் அன்றைய கொந்தளிப்பான சூழல் முள்ளிவாய்க்காலை இரண்டு தசாப்தங்களுக்குத் தள்ளிப் போனதற்கு ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

உலகெங்கும் ஜனநாயகத்துக்கும் விடுதலைக்கும் நடந்த போராட்டங்களின் முக்கிய ஆயுதமாக – ஆயுத முனையாக அச்சமின்றிக் களத்தில் முன்நின்றது மாணவர் சமூகம்தான். தன்னலம் வெறுத்த அந்த தியாகமும் வீரமும் களத்தில் பெற்றுத் தந்த வெற்றிகள் இன்று வரலாற்றின் பக்கங்களுக்குள் புதையுண்டு போயின. அச்சம் என்பதையே அறிந்திராத அந்த இளம் சிங்கங்களின் மீள்வருகைக்காக இன்றைய போராட்டக்களங்கள் ஏங்கி நிற்கின்றன. அதிகார வர்க்கங்கள் அஞ்சி நடுநடுங்க – ரத்தநாளங்களை அதிரச் செய்த அந்தச் சாகசக் கதைகள் இன்று பழங்கதைகளாய்ப் போயின. இன்றும் சாலையோரங்களில் “வாழ்க தமிழ்” என்று சொல்லி நிற்கும் பதாகைகளுக்குக் கண்கள் இருந்திருந்தால் ‘ஹான்ஸ்’ வாசனையோடு கடந்து செல்லும் மாணவனைக் கண்டு கண்ணீர் சிந்தும்.

அரசியல் உணர்வில் முன்னணி வகிப்பது, பொறியியல் கல்லூரிகளா, கலைக் கல்லூரிகளா?

இன்றைய தேதியில் தமிழகத்தில் சுமார் ஐநூறு பொறியியல் கல்லூரிகளும் ஆயிரத்து நூறு கலை அறிவியல் கல்லூரிகளும் இரண்டாயிரத்தி ஐநூறு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு 63 கல்லூரிகளை நடத்துகிறது – 150 கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகளாக உள்ளன. மற்றவை தனியார் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுபவை.

இவற்றில் பொறியியல் போன்ற தொழில்சார் கல்லூரிகளின் மாணவர்கள் சாதாரணமாக ஒரு பொதுப் பிரச்சினைக்குக் குரல் கொடுப்பதோ அரசியல் ஈடுபாடு காட்டுவதோ இல்லை. எப்படியாவது படித்து முடித்து அரியர்ஸ் இல்லாமல் வெளியே வந்து ஏதாவது ஒரு வேலையில் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வழக்கமான கல்யாணம் – வரதட்சிணை – குடும்பம் – குழந்தை – ஹூன்டாய் சான்ட்ரோ – தொப்பை – வழுக்கை – சாவு என்கிற சுழலுக்குள் மூழ்குவதற்காக படிக்கும் காலத்திலேயே தயாராகி விடுகிறார்கள். கேரியரிசம் எனப்படும் காரியவாத சுயநலத்தால் ‘இன்டர்னல்’ மார்க் போய் விடுமோ – பிராஜக்ட் மார்க் போய் விடுமோ என்கிற பயத்திலேயே கல்லூரி நாட்களைக் கடத்த வேண்டியதாகிறது.

கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் தான் இயல்பிலேயே பொதுவான பிரச்சினைகளில் கூட அச்சமின்றிக் களமிறங்கும் மனத் துணிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர். தொண்ணூறுகளுக்குப் பிறகு பொதுவான அரசியல் ஈடுபாடும் அரசியல் போராட்டங்களில் இறங்குவதும் குறைந்து கொண்டே வந்தாலும் அவ்வப்போது தமது வர்க்கக் கோரிக்கைக்கான போராட்டங்களும் ஸ்டிரைக்குகளும் நடந்து தான் வந்தன.

இந்த நிலையும் கூட இரண்டாயித்துக்குப் பின்  முற்றிலுமாக மாறியது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இது மிகவும் எடுப்பாகத் தெரிகிறது. மூன்று வருடங்கள் படித்து பட்டம் பெற்றாலும் வேலை என்பது நிச்சயமில்லாத ஒரு நிலை மாணவர்களை விட்டேத்தியான ஒரு மனப்போக்கிற்கு ஆளாக்கியுள்ளது. போதைப் பழக்கம், சினிமா மோகம், ஓட்டுக்கட்சிகளின் கூட்டத்திற்கு காசு வாங்கிக் கொண்டு போவது, குழுச்சண்டைகள் என்கிற சீரழிவுப் போக்கு பரவலாக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் நிலவுகிறது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் சமூக நிலைமை!

இதன் வகை மாதிரியான சென்னை பச்சையப்பன் கல்லூரியைப் பற்றியும் அதன் மாணவர்களை சீரழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுத்து அவர்களின் சக்தியை அவர்களுக்கே உணர்த்தும் வகையில் போராடி வரும் பு.மா.இ.மு (RSYF – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ) தோழர்களின் அனுபவத்தையும் பார்ப்போம்.

அரசு உதவி பெற்று நடத்தப்பட்டு வரும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சுமார் 7,000 மாணவர்கள் படிக்கிறார்கள். இன்றைய சந்தையில் பொறியியல் படித்த குமாஸ்தாக்களுக்குத்தான் ஓரளவுக்காவது மதிப்பு என்பதால் பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கடனை உடனை வாங்கியோ இல்லை நகை நட்டுகளை அடமானம் வைத்தோ லட்சக்கணக்கான ரூபாய்களை தண்டமாகக் கட்டி, பிள்ளைகளை ஏதாவது பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். இதற்கு வாய்ப்பில்லாத கீழ்நடுத்தர, உழைக்கு வர்க்கத்து ஏழை மாணவர்களின் ஒரே போக்கிடம் அரசுக் கல்லூரிகளோ அல்லது பச்சையப்பன் போன்ற அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள் தான்.

எப்படிப் படித்தாலும் மூன்று வருடம் கழித்து வேலை என்று ஏதும் கிடைக்கப் போவதில்லை – ஆனாலும் ஏதாவது ஒரு டிகிரியைப் போட்டு வைப்போமே என்று தான் கல்லூரியில் இம்மாணவர்கள் சேருகிறார்கள். ஏதோ மூன்று வருடங்கள் நண்பர்களோடு சுற்றினோமா – ஜாலியாக நேரத்தைப் போக்கினோமா என்று இருந்து விட்டுப் போவோம் என்பதாகத் தான் பெரும்பாலான மாணவர்களின் மனப் போக்கு உள்ளது.

இதில் இரண்டாயிரத்திற்குப் பின் உருவெடுத்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் வகை வகையான செல்போன்களையும் தினுசு தினுசான உடை வகைகளையும் மாணவர்கள் கண்முன்னே அணிவகுக்கச் செய்கிறது. வீட்டில் கேட்டால் காசு கிடைக்காது என்கிற நிலையில் அதைத் தாமே சம்பாதித்துக் கொள்ள தவறான பாதைகளில் இறங்குகிறார்கள்.

சென்னை மாணவர்களிடம் நிலவும் “ரூட்” கலாச்சாரம்! விட்டேத்தி ஹீரோயிச குழுச் சண்டைகளின் உறைவிடம்!!

பச்சையப்பா கல்லூரிக்குச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்தில் வரும் மாணவர்கள் அதன் வழித்தடத்தை மைய்யமாகக் கொண்டு குழுக்களாகப் பிரிகிறார்கள். இதை ‘ரூட்டுகள்’ என்கிறார்கள். உதாரணமாக பூந்தமல்லி வழித்தடத்தில் இருந்து வெவ்வேறு பேருந்துகளில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ‘பூந்தமல்லி ரூட்டு’ கேங். ஒரே வழித்தடத்தில் வரும் வெவ்வேறு பேருந்துகளில் வரும் மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும் முன் ஒரு பொதுவான இடத்தில் கூட அந்த ரூட்டு ‘தல’யின் தலைமையில் கல்லூரிக்குள் நுழைவார்கள்.

பச்சையப்பா கல்லூரி வாசலில் நின்று பார்க்கும் எவருக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் அப்படி கல்லூரிக்குள் நுழைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் – ஆனால், நீங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தால் – அவர்கள் அப்படியே நேராக உள்ளே நுழைந்து, வகுப்பறைகளைத் தாண்டி நேராக மைதானத்துக்குச் சென்று விடுவார்கள்.

ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அதில் பத்து மாணவர்கள் தான் வகுப்பில் இருப்பார்கள். மீதமுள்ள மாணவர்கள் ரூட்டு மீட்டிங்கில் ‘பிஸியாக’ இருப்பார். இந்த ரூட்டுக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் கூடும் இடத்திற்குப் பெயர் ‘அட்டி’. இந்த அட்டியில் தான் இவர்கள் தமது ரூட்டு மாணவர்களின் பிரச்சினைகளைப் பற்றி ‘அலசி’ ஆராய்வார்களாம். ஆமாம்… இந்த ரூட்டு மாணவர்களுக்கு என்ன பிரச்சினைகள் வரும்?

பெரிதாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்… எல்லாம் யார் எந்த ‘பிகரைக்’ கரெக்ட் செய்வது, நம்ம ரூட்டுக்குள் தனது ‘டாவோடு’ கிராஸ் செய்யும் அடுத்த ரூட்டுக்காரனை டீல் செய்வது எப்படி, தண்ணியடிக்க காசு தேத்துவது எப்படி, சினிமாவுக்கு கட்-அவுட் வைப்பதைப் பற்றி ஆலோசிப்பது போன்றவை தான் ரூட்டுத் தலைகளின் தலைகளைக் குடையும் முக்கியமான பிரச்சினைகள்.

தமது ஊதாரித்தனங்களுக்கு காசு சேர்க்க சக மாணவனையே அடித்துப் பறிப்பது, பக்கத்துக் கல்லூரி மாணவனிடம் வழிப்பறி செய்வது, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குச் சென்று பிரியாணியும், பாட்டிலும் கொஞ்சம் காசும் தேத்திக் கொள்வது என்று ரூட்டுத் தலைகள் தமது அடிப் பொடிகளுக்கு வழிகாட்டுவார்கள். பச்சையப்பன் கல்லூரியில் மட்டும் சுமார் ஏழு ரூட்டுகள் இயங்குகின்றது.

இந்த ரூட்டுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஓட்டுக் கட்சிகளின் கை இருக்கும். இதில் படித்து முடித்து விட்ட சீனியர் ரூட்டுத் தலைகள்தான் அரசியல் கட்சிகளுக்கும் தற்போதைய ரூட்டுகளுக்கும் தொடர்பாக செயல்படுகிறார்கள். இதில் பி.ஏ படித்து விட்டு ரூட்டு போதையை விடமுடியாமல் மீண்டும் ஏதாவது ஒரு பிரிவில் பி.ஏ சேரும் சீனியர் ரூட்டு தலைகளும் இருக்கிறார்கள். மாணவப் பருவத்தின் ஹீரோயிசக் கனவுகளுக்கு இந்த ரூட்டுக் கலாச்சாரம் தவறான வகையில் தீனி போடுவதாய் இருக்கிறது.

ரூட்டில் முன்னணியாக இருக்கும் ‘கைகளுக்கு’ ஏதோ தம்மால்தான் இந்த ரூட்டில் பயணிக்கும் ‘புள்ளீங்கோ’ பாதுகாப்பாக கல்லூரிக்கு வந்து செல்வது போலக் கருதிக் கொள்கிறார்கள். இதில் வேறு ரூட்டுகளோடு வரும் மோதல்களைத் தீர்க்கும் விதம் பற்றி முன்பு ஒரு ரூட்டின் தலையாக இயங்கி, தற்போது பு.ம.இ.மு தோழர்களால் வென்றெடுக்கப்பட்ட தோழர் விவரித்தது ஆச்சர்யமாக இருந்தது.

சம்பந்தப்பட்ட ரூட்டு தலைகளும் அவர்களின் முக்கியமான ‘கை’களும் ஏதாவது ஒரு இடத்தில் சந்திப்பார்களாம். அப்போது சினிமாக்களில் காட்டப்படுவது போல் இரண்டு தரப்பும் எதிரெதிரே வரிசையாக நிற்பார்களாம். பின் அவரவர் கொண்டு சென்ற ‘பொருள்களை'(ஆயுதங்களை)  கீழே வைப்பார்களாம். அடுத்து உட்கார்ந்து பஞ்சாயத்து பேசித் தீர்ப்பார்களாம். இந்தப் பஞ்சாயத்தில் ‘கட்டிங்’ போட்டதில் (வழிப்பறி) ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து ‘ஃபிகர்’ பிரச்சினை வரை பேசித் தீர்ப்பார்களாம்.

“ரூட்” கலாச்சாரத்தை வைத்து போலீசு, மாணவர்களை அடக்கியாளுதல்!

சமயத்தில் ரூட்டுகளுக்கு இடையில் நடக்கும் மோதல் கத்திக் குத்து வரை சென்று செய்தித்தாள்களிலும் கூட வந்ததுண்டு. இப்படி மாணவர்களின் குழுக்களிடையே எழும் மோதல்களை சாக்கிட்டு அடிக்கடி போலீசு கல்லூரிக்குள் நுழைவது – மற்ற மாணவர்கள் முன்னிலையில் அடித்து இழுத்துச் செல்வது போன்ற சம்பவங்களும் கடந்த ஐந்தாண்டுகளாக அதிகரித்துள்ளது.

பொதுவாக கல்லூரிக்குள் போலீசு நுழைந்தால் என்ன கதியாகும் என்பதை நாம் அறிவோம். பத்து வருடங்களுக்கு முன் நான் கல்லூரியில் படித்த காலத்திலெல்லாம் மாணவன் ஒருவன் மேல் போலீசு கைவைப்பது என்பதெல்லாம் நடக்கவே நடக்காத காரியம். அப்படியும் மீறி கல்லூரிக்குள் நுழையும் போலீசு வெளியே செல்வதற்கு முன் தண்ணி குடிக்க வேண்டியதாகி விடும்.

இதன் சரி / தவறுக்குள் செல்லாமல் விலகி நின்று கவனித்தால், இதன் பின் மாணவ சமுதாயத்தின் அந்த அச்சமற்ற தன்மையைக் காணலாம். ஆனால், மாணவர்கள் தமக்குள் ஒன்றுபடாமல் மோதிக்கொள்வதும், அதில் போலீசு உள்ளே நுழைந்து ஒருவனை அடித்து இழுத்துச் செல்வதும் ஓரளவுக்காவது மாணவர்கள் மத்தியில் இருந்த தைரியத்தைக் குலைத்து விட்டது.

ஒரு காலத்தில் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் அதிகார வர்க்கத்தை துச்சமாக நினைத்து நெஞ்சு நிமிர்த்தி நின்ற மாணவர்கள், இதன் பின் போலீசு என்றாலே அலறி ஓடும் ஒரு நிலைக்கு வந்துள்ளனர். ரூட்டுகளுக்கு இடையிலான ஒரு தகராறை ஒட்டி 2009ஆம் ஆண்டு டிசம்பரில் போலீசு பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை அடித்துள்ளது.

மாணவர்களை ஊழல்படுத்தும் ஓட்டுக் கட்சிகளின் பொறுக்கி அரசியல்!

ஆளும் வர்க்கத்துக்கும் போலீசுக்கும் மாணவர்கள் இப்படி அற்பக் குழுக்களாக பிளவுண்டு கிடப்பது ஒரு சாதகமான நிலை. தமது கோரிக்கைகளுக்காகக் கூட போராடும் வலிமையை மாணவர்கள் இழந்து விட்ட நிலையில், அரசியல் கோரிக்கைகளுக்காக அவர்கள் இனிமேலும் அணி திரள மாட்டார்கள் என்பது ஆளும் வர்க்கத்துக்கு மகிழ்ச்சியான செய்தி.

ஒன்றியம், நகரம், வட்டம், சதுரம் என்று ஏதாவது ஒரு ஓட்டுக் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு அவ்வப்போது தனது தலைவன் நடத்தும் கூட்டத்துக்கு ஆள் திரட்டியனுப்புவது ஒன்றையே அரசியல் திட்டமாக வைத்துக் கொண்டிருக்கும் லோக்கல் தலைவர்களுக்கு மாணவர்களின் இந்த ஒற்றுமையின்மை ஒரு வரப்பிரசாதம்.

ஐம்பது ரூபாய் பிரியாணி, ஐம்பது ரூபாய் பாட்டில், கையில் ஐம்பது ரூபாயும் கொடுத்தால் சல்லிசாக ‘உருப்படிகள்’ கிடைக்கும். பதிலுக்கு, ரூட்டு பிரச்சினையில் யாராவது மாணவனை போலீசு பிடித்துச் செல்லும் போது ஸ்டேசனுக்குப் போய் ‘தவுலத்து’ காட்டி அவனை மீட்டுக் கொடுத்து விட்டால் போதும் – காலாகாலத்துக்கும் அடிமைகள் மாட்டினார்கள்..!

இதுவொரு போதையான சுழல். பேருந்தில் சப்தமாக தாளம் போட்டு கானா பாடுவது, பயணிகளோடு வம்பிழுப்பது, பாக்கெட் அடிப்பது, பெண்களை உரசுவது, விதவிதமான போதைப் பழக்கங்கள் என்று இளமையின் முக்கியமான கட்டத்தில் வரும் ஒரு மூன்று ஆண்டுகளை வீணடிக்கிறார்கள். இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்தாது என்றாலும் பொதுவில் மாணவர்களின் தற்போதைய ஆளுமையாக இந்த “ரூட்” கலாச்சாரம் இருக்கிறது.

தவறான பாதையில் எதேச்சையாக நுழைந்து விட்டவர்கள் அல்ல இவர்கள்; அதையே ரசித்துச் செய்து பழக்கப்பட்டு விட்டார்கள். அதிலும் இம்மாணவர்கள் போதை ஏற்றிக் கொள்ள பயன்படுத்தும் அபாயகரமான முறைகளை நண்பர் ஒருவர் நமக்கு விளக்கினார்.  இங்கே விவரிக்கவே முடியாது – ஒருவேளை அப்படியான பழக்கங்கள் இல்லாத மாணவர் எவரும் இக்கட்டுரையைப் படித்தால் அவருக்கு அது ஒரு அறிமுகமாகிவிடக்கூடும் என்பதால் அதை இங்கே தவிர்க்கிறோம்.

இந்த ரூட்டுக் கலாச்சாரத்தை எதிர்த்து பு.மா.இ.மு தோழர்கள் ஒட்டிய போஸ்ட்டர் கிழிக்கப்பட்டிருக்கிறது – ரூட்டில் இருக்கும் மாணவன் என்று தவறாக நினைக்க வேண்டாம்… அத்தனை பொறுப்புணர்வோடு அந்தக் கடமையை நிறைவேற்றியது காவல்துறை தான்..!

பு.மா.இ.மு போராட்டத்தால் புடம்போடப்பட்டு ஜோலிக்கும் காட்டு ரோஜாக்கள்!

இப்படியொரு சவாலான சூழலில் தான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக பச்சையப்பா கல்லூரி மாணவர்களிடையே பணியாற்றி பல மாணவர்களை அரசியல் சமூக உணர்வோடு வென்றெடுத்ததுடன், மாணவர்களுக்கு இடையிலான ஒற்றுமையையும்; மாணவர் – ஆசிரியர் ஒற்றுமையையும் சாதித்திருக்கிறார்கள்.

அழகிய தோட்டங்களில், நன்றாக பதப்படுத்தப்பட்ட மண்ணில், பாத்தியெடுத்து – நீர்பாய்ச்சி, உரம் போட்ட நிலத்தில் வளரும் ரோஜாச் செடியில் மலரும் ரோஜா மலரை விட – எங்கோ ஒரு வனாந்திரத்தின் இடையே கடும் பாறை முகட்டின் மேல் பருந்தின் எச்சத்திலிருந்து உயிர் பெற்றெழும் ஆலமர விதை வேறூன்றி வளர்ந்து, அந்தப் பாறையைச் சாய்த்து சமமாக்கி நிமிர்ந்து நிற்பது அழகானதல்லவா?

ஆம்… புரட்சியாளர்களின் சாதனைகள் கொல்லையில் பாதுகாப்பாய் வளரும் வீட்டுத் தோட்டத்தைப் போன்றதொரு உயிரற்ற அழகல்ல – அது கடும் வனாந்திரத்தினுள்ளே யாருக்கும் வளையாமல், தனது இருப்புக்காக தானே போராடும் ஒரு காட்டு மரத்தின் உயிரோட்டமான கம்பீரமான அழகு.

நீங்கள் அதைக் காண இன்று பச்சையப்பன் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். பிரியாணிக்கும் பாட்டிலுக்கும் ஓட்டுக் கட்சிகளின் பின்னே சென்ற நிலை மாறி – தம்மைத் தேடி வந்து ‘பொறுப்புகள் தருகிறோம் இளைஞர் காங்கிரஸில் சேருங்கள்’ என்று கேட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு லும்பன் அரசியல்வாதியை தமது பாணியில் ‘கலாய்த்து’ அனுப்பும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையையும் பெற்றுள்ளார்கள் அந்த கல்லூரி மாணவர்கள்.

வாருங்கள்… ஒரு போராட்டத்தின் கதையைக் கேளுங்கள்… போராட்டக்களத்தில் புடம் போடப்பட்டு ஜொலிக்கும் காட்டு ரோஜாக்களின் அழகைப் பாருங்கள்…

சென்னையின் பல பகுதிகளில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்குக் கிளைகள் உண்டு. 2003ம் ஆண்டிலிருந்து பச்சையப்பா கல்லூரியில் இருந்த சில தோழர்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வேலை செய்து வந்த பு.ம.இ.மு, கடந்த இரண்டாண்டுகளாக அங்கே ஒரு கிளையைக் கட்டி, மாணவர்களை ஒரு வர்க்கமாக இணைத்து, அவர்களிடையே புரட்சிகர ஜனநாயகப் பண்பை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக கல்லூரிகளில் செயல்படும் மாணவர் சங்கங்களில் போலி கம்யூனிஸ்டு சங்கங்கள் வலுவாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும், அவர்கள் ஒரு லெட்டர் பேடு கட்சியைப் போன்று தான் செயல்படுகிறார்கள். கல்லூரிக்கு ஓரிரண்டு மாணவர்களைக் கொண்டிருக்கும் இவர்கள் மைய்யமாக எடுக்கும் போராட்டங்களுக்கு போஸ்ட்டர் ஒட்டுவதோடு தமது அரசியல் ‘கடமையை’ முடித்துக் கொள்கிறார்கள். மாணவர்களிடையே உள்ள குழுச் சண்டைகளில் (Gang war) தவறியும் கூட தலையிட்டு நிறுத்துவதில்லை.

ஈழத் தமிழரை அழிக்கும் சிங்கள இனவெறி, இந்திய அரசுக்கெதிராக பு.மா.இ.முவுடன் கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

மாணவ சமுதாயத்தின் மேல் கவிந்து கிடந்த அபாயகரமான மௌனத்தின் மேல் இடியாய் இறங்கியது ஈழத்தில் நடந்த இனவொழிப்புப் போர். தமிழகமெங்கும் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் படுகொலைகளை எதிர்த்து வீதியில் இறங்கினர். சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஆளும்வர்க்கத்தின் தூக்கத்தைக் கெடுத்தது.

2009ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பு.மா.இ.மு தலைமையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் இறங்கினர். தங்களுக்குள் அடித்துக் கொண்டும் மோதிக்கொண்டும் இருந்த இம்மாணவர்கள் இப்படி ஒன்று பட்டு ஒரே குரலாய் தெருவில் இறங்குவார்கள் என்பதை நிர்வாகமும் எதிர்பார்க்கவில்லை – காவல் துறையும் எதிர்பார்க்கவில்லை.

“கும்தலக்கடி கும்மாவா பச்சையப்பாஸ்னா சும்மாவா” “பன மரத்துல வவ்வாலா – பச்சையப்பாஸ்க்கே சவாலா” என்று வெட்டித்தனமாய்க் கூச்சலிட்டுக் கொண்டிருந்த வாய்களிலிருந்து கவிதையாய்க் கிளம்பின புரட்சிகர அரசியல் முழக்கங்கள்…!

அந்தப் போராட்ட காலத்தில் பு.மா.இ.மு தோழர்கள் அச்சமின்றி காவல் துறையினரைக் கையாண்ட விதத்தையும், அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் களத்திலேயே நேரடியாக முதன் முறையாகக் காண்கிறார்கள் மாணவர்கள். மாணவர்களை திரட்டிய ‘குற்றத்திற்காக’ சில பு.மா.இ.மு தோழர்கள் போலீசால் அடித்து நொறுக்கப்பட்டார்கள். எனினும் நொறுக்க முடியாத அவர்களது உறுதியை மாணவர்கள் கவனிக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தளவில் அரசியல் கட்சியென்றால் பதவி – தேர்தல் – கூட்டம் – பிரியாணி – பாட்டில். ஆனால் இங்கே ஒரு அரசியல் அமைப்பு தேர்தல் வேண்டாம், பதவி வேண்டாம் என்கிறார்கள் – நெருக்கடியான ஒரு தருணத்தில் பிற ஓட்டுக் கட்சிகள் சந்தர்ப்பவாதமாய் முடங்கிக் கிடக்கும் நிலையில் ஒரு நேர்மையான அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார்கள் – மிக முக்கியமாக அதிகாரத்தின் உருட்டுக்கட்டையான போலீசையே துச்சமாய் மதிக்கிறார்கள் என்பது அவர்கள் அதுவரையில் காணாத காட்சி.

ஒரு காட்டாறு தனக்கான சரியான பாதையைக் கண்டடைந்த நிகழ்வு அது. ஹீரோயிசம் என்பதன் உண்மையான அர்த்தத்தை மாணவர்கள் அன்று முதன் முதலாக கற்றுணர்கிறார்கள்.

அதன் பின் மெல்ல மெல்ல தோழர்களை நெருங்கி வருகிறார்கள் மாணவர்கள். மாணவர்களிடையேயான ‘ரூட்டு’ பிரச்சினையை நன்கு உணர்ந்திருந்த தோழர்கள் அதையும் மீறி அவர்களிடையேயான நல்லுறவை வளர்த்து வந்த நிலையில் தான் செல்லம்மாள் மகளிர் கல்லூரி பிரச்சினை வெடிக்கிறது.

சென்னை மாணவர்களை ஒன்றுபடுத்திய செல்லம்மாள் கல்லூரி போராட்டம்!

செல்லம்மாள் கல்லூரு மாணவிகள் போராட்டம்

செல்லம்மாள் கல்லூரி முதல்வர் ரமா ராணி கல்லூரியில் வசூலிக்கும் தொகையை செங்கல் சிமெண்ட் போன்ற பொருட்களாக வசூலித்து தனக்கு வீடு கட்டிக் கொள்ள பயன்படுத்தி வந்துள்ளார். இந்த ஊழலை அம்பலப்படுத்தி எதிர்த்துப் போராடிய செல்லம்மாள் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஐம்பது பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் செல்கிறார்கள். இதில் இரண்டு மாணவர்களை போலீசு கைது செய்து அழைத்துச் சென்று விடுகிறது.

இதனால் கொதித்தெழும் செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் 400 பேர் மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களை மீட்கிறார்கள். அதைத் தொடர்ந்து மெமோரியல் ஹாலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு 800 செல்லம்மாள் கல்லூரி மாணவிகளும் பச்சையப்பன், கந்தசாமி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுமாக சேர்ந்து ஆயிரத்து ஐநூறு மாணவர்கள் திரளுகிறார்கள். மாணவ சமுதாயத்தின் கோரிக்கை ஒன்றிற்காக சமீப காலத்தில் கூடிய கூட்டங்களிலேயே இதில் தான் அதிகளவு மாணவர்கள் கூடியுள்ளனர்.

இந்தப் போராட்டங்கள் மொத்தத்தையும் முன்நின்று வழிநடத்திய பு.மா.இ.மு தோழர்களின் அர்ப்பணிப்புணர்வும் தலைமைப் பண்பும் பச்சையப்பா கல்லூரி மாணவர்களைக் கவர்கிறது.

ரூட்டுகளுக்கு இடையிலான பிரச்சினைகளைக் கூட அதன் தலைகள் தோழர்களிடம் பேசி தீர்த்து வைக்கச் சொல்லும் நிலை ஏற்படுகிறது. தோழர்கள் மாணவர்களிடையேயான முரண்பாடுகளைத் தீர்த்து அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றியையும் சாதித்து வந்த நிலையில் தான் மாணவர்களை இன்னமும் தமக்குள் நெருங்கி வரச் செய்யும் முகமாக பஸ் பாஸ் பிரச்சினையைத் தோழர்கள் கையிலெடுக்கிறார்கள்.

இலவச பஸ் பாஸ் போராட்டத்தால் பின்னுக்குப் போன ரூட் கலாச்சாரம்!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு உதவி பெற்று நடத்தப்பட்டு வரும் 150 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கோ இந்த வசதி இல்லை. ஒப்பீட்டளவில், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் அரசு உதவி பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் ஒரே விதமான வர்க்கப் பின்னணியில் இருந்து வருபவர்கள் தான்.

உழைக்கும் ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த இம்மாணவர்கள் இருபதில் இருந்து நாற்பது ரூபாய்கள் வரை ஒவ்வொரு நாளும் போக்குவரத்திற்காக செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும் என்று கோரி முதன் முதலாக பச்சையப்பா கல்லூரி பு.ம.இ.மு கிளைத் தோழர்கள் தலைமையில் சுவரொட்டி இயக்கம் எடுக்கிறார்கள் மாணவர்கள்.

கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களும் தாங்க முடியாத ஆச்சரியம். அவர்களைப் பொருத்தளவில் தமக்குள் ரூட்டுப் பிரச்சினைகளுக்காக அடித்துக் கொண்டு திரியும் உருப்படாத மாணவர்கள் என்று கருதியவர்கள் முதன் முதலாக ஒன்றுபட்டு தமக்கான ஒரு கோரிக்கைக்காக போராடுகிறார்கள். தோழர்களைச் சந்தித்த சில பேராசிரியர்கள், அவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவைத் தாம் அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இன்னும் சில பேராசிரியர்கள் “இத்தனை நாட்களாக எங்கேயிருந்தீர்கள்; இப்போதாவது இங்கே வந்தீர்களே… இந்த மாணவர்களை உங்களால் மட்டும் தான் நெறிப்படுத்த முடியும்” என்று மனதார பாராட்டி வாழ்த்தியுள்ளனர். மட்டுமல்லாமல், கண்டிப்பான துறைத்தலைவர்கள் என்று அறியப்பட்ட பேராசிரியர்களே வகுப்பு நேரத்தில் பஸ்பாஸ் பிரச்சினைக்காக மாணவர்களிடம் பேசி ஆதரவு திரட்ட வரும் தோழர்களை ஆதரித்து மாணவர்கள் முன் வகுப்பறையிலேயே பேச அனுமதியளித்துள்ளனர்.

தோழர்களின் தலைமையில் சென்ற ஜூலை 15ம் தேதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்திற்காக தோழர்கள் கவனமாக திட்டமிட்டு ஒவ்வொரு ரூட்டுத் தலையாக பேசி வென்றெடுத்து – சம்மதிக்க வைத்துள்ளனர். இவையனைத்துக்கும் சிகரமாக, பச்சையப்பன் மாணவர்கள் ஒரு பத்து பேர் கூடினாலே பஸ் கண்ணாடியை உடைத்து விடுவார்கள் என்ற ஒரு பொதுக்கருத்தை மாற்றியுள்ளனர். கட்டுப்பாடு என்றால் என்னவென்றே அறியாத மாணவர்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து மிக அமைதியாக ஒருமித்த வகையில் சாலையில் அமர வைத்துள்ளனர்.

சாலை மறிக்கப்பட்டு பேருந்துகள் நிற்கிறது… இறங்கி வந்து விசாரிக்கும் பொதுமக்களுக்கோ அது அதிசயமான சம்பவமாக உள்ளது. அவர்கள் அதுவரை கண்ட பச்சையப்பா கல்லூரி மாணவன் வேறு – அன்று கண் முன்னே காணும் பச்சையப்பா மாணவன் வேறு. மாணவர்கள் கோரிக்கையை விசாரித்தறியும் பொதுமக்கள் பலர் அன்று மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் வெல்ல வாழ்த்திச் சென்றுள்ளனர்.

இத்தனை நாட்களாக பச்சையப்பன் மாணவன் என்றாலே முகத்தைச் சுழித்துச் செல்லும் சமூகத்தின் பார்வையில் முதன் முறையாக தமது மதிப்பு உயர்வதை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அன்று பார்க்கிறார்கள். சாதாரணமாக கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து அடிக்கும் போலீசு அன்று மாணவர்கள் முன்னே பவ்வியமாய் நின்று பேச்சுவார்த்தை நடத்திய அதிசயம் அவர்கள் அதுவரை காணாதவொன்று.

அதைத் தொடர்ந்து பஸ் பாஸ் பிரச்சினைக்காக கையெழுத்து இயக்கம் எடுக்கும் பு.ம.இ.மு ஜூலை 20ம் தேதியன்று தலைமைச் செயலகம் சென்று கல்வி துறை செயலரைச் சந்தித்து மனு அளிப்பது என்று முடிவெடுக்கிறார்கள். மாணவர்களின் ஒற்றுமையையும் போராட்ட உறுதியையும் கண்டு பாராட்டும் தலைமையாசிரியரும் பேராசிரியர்களும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவளிக்கிறார்கள்.

ஜூலை 20ஆம் தேதி சில தோழர்கள் மட்டும் தலைமைச் செயலகம் சென்று செயலரைச் சந்திப்பதாகத்தான் முதலில் முடிவெடுத்திருந்தனர். ஏனெனில் பழைய தலைமைச் செயலகம் அருகே இருக்கும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு எப்போதும் ஒத்துக் கொண்டதேயில்லை. இவர்கள் கூட்டமாக அங்கே செல்லும் போது ஏதாவது கோஷம் போட்டு அதனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது மோதல் ஏற்பட்டுவிடுமோவென்று தோழர்கள் தயங்கியிருக்கிறார்கள். ஆனால், தோழர்களே ஆச்சர்யப்படும் விதத்தில் மாணவர்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடித்துள்ளனர். சுமார் ஐநூறு மாணவர்கள் ஆறு பேருந்தில் பச்சையப்பா கல்லூரியில் இருந்து தலைமைச் செயலகம் சென்றுள்ளனர். வழியில் போலீசிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தையும் கூட பொறுமையாக அவர்களே பேசித் தீர்த்துள்ளனர்.

இந்த ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கண்ட சீனியர் மாணவர்கள் சிலர் தோழர்களைத் தனியாக சந்தித்து “ஏன் நாங்கள் படித்த காலத்திலேயே நீங்கள் வராமல் போனீர்கள்” என்று குரல் தழுதழுக்கக் கேட்டுள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை பார்த்து பு.மா.இ.மு தோழர்களின் முயற்சியால் கந்தசாமி நாயுடு கல்லூரியிலும் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடக்கிறது. அங்கும் பச்சையப்பனில் பார்த்த அதே காட்சிகள் அரங்கேறுகின்றன. மாணவர்கள் தமது கோரிக்கைக்காக கட்டுப்பாடுடன் போராடும் அழகை அங்கிருக்கும் ஆசிரியர்களும் பாராட்டுகின்றனர்.

pachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-struggle

மாணவர் புரட்சி படையிடம் புறமுதுகு காட்டி ஓடும் ஓட்டு கட்சி பொறுக்கி படை!

சென்ற வாரத்தில் காங்கிரசின் மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது மகனை இளைஞர் காங்கிரசில் பொறுப்புக்கு கொண்டு வருவதற்காக மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்க 600 உறுப்பினர் படிவங்களை தூக்கிக் கொண்டு வந்து மாணவர்களைப் பார்த்திருக்கிறார். கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகவும், ஏதாவது போலீசு பிரச்சினை என்றால் தானே பார்த்து முடித்துத் தருவதாகவும் சொல்லி நூறு விசிட்டிங் கார்டும் கொடுத்துள்ளார்.

அவர் நிச்சயம் பழைய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை நினைத்து வந்திருக்க வேண்டும். இன்றைக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் புரட்சியாளர்களால் களத்தில் புடம் போடப்பட்டு ஜொலிக்கும் வைரங்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை பாவம்.

மாணவர்கள் இது பு.மா.இ.மு கோட்டை என்றும் இங்கே உங்கள் பப்பு வேகாது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர், “பு.மா.இ.முவா…? யார் அது..?” என்று கேட்டிருக்கிறார்.

மாணவர்கள் பு.மா.இ.மு என்பது ம.க.இ.கவின் தோழமை அமைப்பு என்று சொன்னதும் அவர் அப்படியே பம்மி விட்டாராம். சென்ற மாதத்திலும் கூட காங்கிரசு மாணவர் அமைப்பைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இதே போன்று 300 உறுப்பினர் சேர்ப்பு படிவத்தைக் கொண்டு வந்து கொடுத்து முகத்தில் கரியோடு திரும்பியுள்ளனர். பகத் சிங் பிறந்த நாளன்று மாணவர்களே தமது முன்முயற்சியில் தமக்குள் காசு வசூலித்து ஒரு பிளக்ஸ் பேணர் வைத்துள்ளனர்.

பொதுவாக மாணவர்களுக்குள் காசு கேட்டால் அத்தனை சீக்கிரம் கிடைத்து விடாது – அவர்கள் கொண்டு வரும் பணமும் போக்குவரத்துச் செலவுக்கே சரியாக இருக்கும். பகத் சிங்கிற்கு பேனர் வைக்க வேண்டும் என்று சொன்னதும் தம்மிடம் இருந்ததையெல்லாம் அள்ளிக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் போபால் துயரத்தையும் அரசின் மோசடித்தனத்தையும் விளக்கி வாயிற் கூட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு திரளான மாணவர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர்.

RSYF
மதுரவாயல் ரவுடி யோசுவாவை எதிர்த்து...

வினவு வாசகர்கள் மதுரவாயல் ரவுடி யோசுவாவை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த சம்பவத்தின் போது கல்லூரித் தேர்வு நேரம்.. விஷயத்தைக் கேள்விப்பட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் தேர்வை முடித்ததும் சாரி சாரியாக மதுரவாயல் காவல் நிலையத்தின் முன் குவிந்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறு பேருந்துகளில் வந்திறங்கிய மாணவப் படையைக் கண்டு கதிகலங்கிய மதுரவாயல் போலீசு அதன் பின்தான் யோசுவாவை வேறு இடத்தில் கைது செய்து வைத்திருப்பதாக உறுதி கொடுத்துள்ளனர்.

இதில், அதே பகுதியைச் சேர்ந்த யோசுவாவின் உறவினர்களான பச்சையப்பன் மாணவர்களிடம் யோசுவா “நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மாணவர்களைக் கொண்டு வந்து இறக்குங்கள் – பு.மா.இ.முவை ஒரு கை பார்க்கலாம்” என்று சொன்னானாம். அதற்கு அவர்கள், இப்போது கல்லூரி பு.மா.இ.முவின் கோட்டை என்றும் மாணவர்கள் இது போன்ற ரவுடிகளின் பின்னெல்லாம் செல்ல மாட்டார்கள் என்றும் சொன்னதோடு அவனை ஆதரிக்காமல் பிரச்சினையில் இருந்து தாமும் ஒதுங்கி நின்றுள்ளனர்.

நாட்டு மக்களின் போராட்டங்கள் மாணவர்களுக்காக காத்து கிடக்கின்றன!

எதிர்வரும் காலங்கள் கடும் சவாலானவை. நாடு மொத்தமும் அடகு போய்க் கொண்டிருக்கும் நிலையில் போராட்டக்களங்களில் புரட்சியாளர்கள் நாட்டையாளும் தேச விரோதிகளை எதிர்த்து நிற்கிறார்கள். ஆப்ரிக்காவைக் காட்டிலும் வறுமையான மக்களை அதிகம் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தான் காமென்வெல்த் போட்டிகள் போன்ற ஆடம்பரங்களை மக்கள் பணத்தில் செய்து அதில் கொள்ளையும் அடிக்கிறார்கள் ஆளும் வர்க்க பாசிஸ்ட்டுகள்.

இன்னொரு முனையில் பார்ப்பன இந்துமதவெறி பாசிச பயங்கரவாதிகள் பாய்ந்து குதறும் வாய்ப்பு ஒன்றுக்காக காத்துக் கிடக்கிறார்கள். மாணவர்களின் உலகம் கல்லூரியையும் கடந்தவொன்று என்று உணரும் தருணம் வந்து விட்டது. அச்சமற்றவர்களை எதிர்பார்த்து போராட்டக் களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

நெருப்பில் இறங்கத் துணியும் மாணவர்களின் பங்கு இல்லாமல் நாட்டின் போராட்டங்கள் ஏதோ ஒரு சோர்விலும் அவலத்திலும் துவண்டு கிடக்கின்றன. மாணவனின் கை பட்ட பிறகே அவை சுயமரியாதையோடு எழுந்து நின்று போராடும்.

அத்தகைய சுய உணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் காட்டுப் பாறையில் ரோஜாவை வளர்க்கும் கடினமான பணிதான். எனினும் அந்த பாதையில் பு.மா.இ.மு தோழர்கள் பயணிக்கிறார்கள், போராடுகிறார்கள். பச்சையப்பா கல்லூரி அனுபவம் அந்த நம்பிக்கையை தருகிறது. இது மற்ற கல்லூரிகளுக்கும் பரவ வேண்டும். பரவும், பரப்புவோம் என்கிறார்கள் பு.மா.இ.மு தோழர்கள்.

வினவு செய்தியாளர், சென்னையிலிருந்து
_________________________________________

பு.மா.இ.முவின் வலைப்பூ : http://rsyf.wordpress.com/
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?

உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?

தென்னாப்பிரிக்காவின்  கிரிக்கெட் அணித்தலைவரான ஹான்சி குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். குரோனியே தன் குற்றத்தைச் சட்டப்படி ஒத்துக் கொண்டார்; தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது நம்மூர் அற்பவாதிகளின் இலக்கியம்.

நான் தேசத்தை நேசிக்கிறேன். பணத்தையும் நேசிக்கிறேன்” என்று விசாரணை நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஹன்சி குரோனியே. “நாட்டை நேசிக்கிறேன் நோட்டையும் நேசிக்கிறேன்.” அடடா, இது ஒரு கவிதை! லட்சோப லட்சம் மனச்சாட்சிகள் குரோனியேவின் இந்தக் கவிதை மூலம் பேசுகின்றன. “நான் மனைவியை நேசிக்கிறேன், காதலியையும் நேசிக்கிறேன்.”, “நேர்மையை நேசிக்கிறேன், லஞ்சத்தையும் நேசிக்கிறேன்.”, “புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.”, “சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்” என்று பலவாறாக நம் காதில் ஒலிக்கிறது இந்தக் கவிதை!

போவோர் வருவோரெல்லாம் குரோனியேவைக் காறித்துப்புகிறார்கள். எப்போதுமே கூட்டத்தோடு கூட்டமாக தரும அடி போடுவது மிகச் சுலபமான காரியம். இப்படித்தான் ஒரு விலை மாதுவுக்கு தரும அடி போட்டுக் கொண்டிருந்த கூட்டத்தாரிடம் ஏசு சொன்னார், “உங்களில் பாவம் செய்யாதவர்கள் அவள் மீது கல் எறியுங்கள்.” உடனே அந்த யோக்கியர்கள் அனைவரும் கல்லைக் கீழே போட்டு விட்டார்கள். தானும் பாவிதான் என்றால், கல்லை தன்மீதே எறிந்து கொள்ளலாமே என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை? “அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது” என்றார் மாவோ. நெருப்பு மேலே பட்டால் சுடும் என்பது இரண்டாவது பிரச்சினைதான். அந்த நெருப்பை எடுப்பதற்கே நமக்குக் கை வருவதில்லையே, அதுதான் மூல முதல் பிரச்சினை.

குரோனியே நிறவெறி பிடித்த தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஆட்டக்காரன். விளையாட்டையே ஒரு பணம் கறக்கும் தொழிலாகக் கொண்டவர்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். இத்தகைய பேர் வழிகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும் பரிசீலனை செய்வதும் நியாயம்தானா என்று சிலர் கருதக் கூடும். நேர்மை, தியாகம், உழைப்பு போன்ற சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு உன்னதமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கற்பது சரியென்றால், இழிந்த பண்புகளைக் களைந்து கொள்வதற்கு இழிந்தவர்கள் எனப்படுவோர் அந்நிலையை எங்ஙனம் அடைந்தனர் என்று அறிந்து கொள்வதும் சரியானதுதான். எனவே, குரோனியே மீதான விசாரணையின் ஊடாக நம்மை நாமே குறுக்கு விசாரணையும் செய்து பார்த்துக் கொள்வோம்.

ஒரு இளைஞனாக தென் ஆப்பிரிக்க அணியில் சேர்ந்தபோது இப்போது கூறுவதைப்போல தேசத்தை, ஆட்டத்தை, அணியை குரோனியே நேசித்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? நேசித்திருப்பார். அன்று ஒருவேளை யாரேனும் ஒரு சூதாட்டத் தரகன் தோற்பதற்காகக் காசு கொடுக்க முன் வந்திருந்தால் அதை அவன் முகத்தில் எறிந்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? எறிந்திருப்பார். இன்றோ, அவருடைய பணத்தாசை கூண்டில் ஏற்றப்பட்டவுடன் அவருக்குத் தனது அன்றைய நாட்டுப் பற்று நினைவுக்கு வருகிறது.

கருணாநிதிக்கு அந்த நாளில் அரைக்கால் சட்டையுடன் திருவாரூரில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய காட்சிகள் நினைவுக்கு வருவதைப் போல. காங்கிரசுக்குத் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் போன்றோருக்கு விடுதலைப் போராட்ட காலத்தில் அனுபவித்த போலீசு சித்திரவதைகள் நினைவுக்கு வருவதைப் போல. ஒரு மாதிரியாக ஓய்வு பெற்று உறங்கும் முன்னாள் புரட்சிக்காரர்களுக்குத் தாங்கள் ஓய்வு உறக்கமின்றிப் பாடுபட்ட நாட்கள் கனவில் வருவது போல.

தான் இன்னமும் தேசத்தை நேசிப்பதாகத்தான் கருதுகிறார் குரோனியே. “பணத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகி” என்று தன்னைத்தானே அவரால் மதிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. “சூதாடியிடம் கை நீட்டிய அந்தத் தருணம் என்பது கம்பீரமான வாழ்க்கையில் நேர்ந்த ஒரு எதிர்பாராத சறுக்கல். நீண்ட தெளிந்த நீரோடையில் கலந்த சிறு கசடு” என்று அவர் தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார். தவறிழைத்தவர்கள் பலரும், “அது தனக்கே தெரியாமல் தன்னில் நிகழ்ந்த விபத்து” என்றே நிரூபிக்க முயல்கிறார்கள். தன்னுடைய இயல்புக்கே முரணான இந்த இழிசெயலை எப்படிச் செய்தேன் என்று தனக்கே புரியவில்லை என்கிறார்கள். இப்படியொரு பதிலால் திகைத்துத் தடுமாறும் மனைவிமார்கள் “எம் புருசன் சொக்கத் தங்கமாச்சே. அந்தச் சிறுக்கி என்ன மருந்து வைத்து மயக்கினாளோ” என்று மந்திரவாதியிடம் ஓடுகிறார்கள். நாம் மந்திரவாதியிடம் ஓடத் தேவையில்லை. அதைவிட சூதாட்டத் தரகனிடம் கை நீட்டிக் காசு வாங்கும்போது குரோனியே எப்படிச் செயல்பட்டிருப்பார் என ஆய்வது பயன் தரும்.

ஒரு ஊழல் சிந்தனை செயல் வடிவம் பெறும்போதுதான் சம்பந்தப்பட்ட மனிதனின் ஆகக் கீழ்த்தரமான குணாதிசயங்கள் அனைத்தும் ஆகத்துல்லியமான விழிப்புணர்வுடன் இயங்குகின்றன. அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ, பொதுநலவாதியாகவோ, மக்களிடையே நற்பெயரெடுத்த தலைவனாகவோ இருக்கும் பட்சத்தில். அவன் தனது நடைமுறைத் தந்திரத்தில் நரியை விஞ்சி விடுகிறான். குரோனியே ஒரு தூய கிறித்தவ நல்லொழுக்க சீலர். கிரிக்கெட் அணிக்குள்ளேயே இருந்த பைபிள் குழுவின் தலைவர். எனவே அணியில், தான் மட்டும்தான் சபல புத்திக்காரனா, தனக்கு ‘தோழர்கள்’ இருக்கிறார்களா என்று அவர் அறிய விரும்புகிறார். “இந்த ஆட்டத்தில் தோற்றால் இத்தனை ஆயிரம் டாலர் கிடைக்கும் என்ன சொல்கிறீர்கள்” என்று போகிற போக்கில் ஒரு நகைச்சுவை போல சக வீரர்களிடம் எடுத்து விடுகிறார். இவன் கிண்டல் செய்கிறானா ஆழம் பார்க்கிறானா என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதை சிரித்து ஒதுக்குகிறார்கள், புரிந்தவர்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.

இப்போது குரோனியே தனி ஆள் இல்லை. அணிக்குள் ஒரு ஊழல் அணி இருக்கிறது. ஊழல் அமைப்பு ரீதியாகத் திரண்டு விட்டது. இனி அது தன்னுடைய தரும நியாயங்களைப் பேச வேண்டும். “நான் காசு வாங்கியது உண்மை. ஆனால், அதற்காக எந்த ஒரு ஆட்டத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளிக்கிறார் குரோனியே. அதனால்தான் “தேசத்தை நேசிக்கிறேன் பணத்தையும் நேசிக்கிறேன்” என்று கவிதை சொல்கிறார்.

ஒரு போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு நிர்வாகம் ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறது. ஒரு விசேடச் சலுகையாகத்தான் நிர்வாகம் அதைச் செய்கிறது. ஆனால், அதற்காகத் தொழிலாளர்களின் கோரிக்கை எதையும் அவர் விட்டுக் கொடுத்ததாக நிரூபிக்க முடியாது. விட்டுக் கொடுக்கவில்லை என்றே கொள்வோம். அவ்வாறு விட்டுத் தரவில்லை என்பதே அவர் பெற்ற சலுகையை நியாயமாக்கி விடுமா? மற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்காத அந்தச் சலுகை தனக்கு அளிக்கப்படுவது குறித்து அவர் கூச்சப்படவில்லை; அதைப் பெறுவதற்காக அவர் வெட்கித் தலைகுனியவுமில்லை. தொழிலாளர் கோரிக்கையை விட்டுத் தரவில்லை எனும்போது இந்தச் சலுகையைப் பெறுவதில் தவறென்ன என்று கேட்கிறார். அனைவருக்கும் வேலை என்பதுதானே கட்சியின் முழக்கம், அதில் என் மகன் மட்டும் கிடையாதா என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறார். இப்படிப் பேசுவதற்காக அவர் கடுகளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் அவருடைய தரத்துக்குச் சான்று. ஒரு வரியில் சொன்னால், குரோனியே கூறுவதைப் போல, இவர் சேவையையும் நேசிக்கிறார், சன்மானத்தையும் நேசிக்கிறார். திருவாரூரில் புறப்பட்ட கழகத் தொண்டர் சன் டிவி அதிபரான கதையும் இதுவேதான்.

தி.மு.க. ஆட்சியைப் பற்றி ஒரு அடிமட்ட கட்சித் தொண்டனிடம் கேளுங்கள். எல்லாவற்றையும் தலைவர்களே சுருட்டிக் கொள்கிறார்களென்றும் தன்னைப் போன்ற தொண்டனுக்கு ஆட்சியால் பயனில்லை என்றும் அலுத்துக் கொள்வான். “ஒரு வேலைவாய்ப்பு, ஒரு புறம்போக்கு நிலம், ஒரு காண்டிராக்டு… எதுவுமே இல்லையென்றால் எதற்காகத்தான் பாடுபட்டோம்?” என்று மிக யதார்த்தமாகக் கேட்பான். “தம்பி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதல்லவா உன் லட்சியம்” என்று கேட்டால், “நானும் ஏழைதான்; என்னுடைய சிரிப்பில் இறைவனைப் பார்த்துக் கொள்” என்பான். பதவியை மேல்துண்டு என்றும், கொள்கையை வேட்டியென்றும் உவமானம் சொன்னவர்கள் இன்று ஊரறிய அம்மணமாக நிற்கும்போதும் தங்கள் இடுப்பில் வேட்டி இருப்பதாகத்தான் விளக்கம் சொல்கிறார்கள்.

தெலுங்கானா உழவர் போராட்டத்தைச் சித்தரிக்கும் ‘மாபூமி‘ என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நிலமற்ற ஏழை விவசாயியின் மகனான கதாநாயகன், விவசாயிகளுக்கு நிலத்தைப் பிரித்து விநியோகம் செய்கிறான். தனக்கும் நிலம் ஒதுக்குமாறு மகனிடம் கெஞ்சுகிறான் தந்தை. ஊருக்கெல்லாம் கொடுத்து முடித்தபின் எஞ்சியிருக்கும் ஒரு துண்டு நிலத்தைத் தந்தைக்குக் காட்டுகிறான் மகன். முதலில் தந்தைக்கு நிலத்தை ஒதுக்கி விட்டு, “நான் தந்தையை நேசிக்கிறேன் மக்களையும் நேசிக்கிறேன்” என்று அவன் கவிதை சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் அந்தக் கவிதை அவனை வில்லனாக்கியிருக்கும். குரோனியேவைப் போல. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குரோனியே பணத்துக்காக நாட்டுக்கும் அணிக்கும் துரோகம் செய்து விட்டதாக இந்தக் கணம் வரை ஒப்புக் கொள்ளவில்லை. அதுவும் இதுவும்தான் என்கிறார்.

காசுக்குப் பாய் விரிப்பவள் காதலி அல்ல, சன்மானத்திற்கு எதிர்பார்த்து செய்யும் வேலை சேவை அல்ல என்று தெரிந்தும் ‘அதுவும் இதுவும்தான்’ என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள். அதுவும் இதுவும் என்ன இன்னும் பலதும் சேர்ந்ததாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை. இவற்றில் அதுவா இதுவா என்று தெரிவு செய்ய வேண்டிய தருணங்கள் பல வருகின்றன. பல நேரங்களில் அந்தத் தெரிவு வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது. சிறியதொரு சறுக்கல் என்று நீங்கள் கருதுவது உங்களைத் திரும்ப முடியாத அதல பாதாளத்திலும் கூடத் தள்ளி விடுகிறது. நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல.

உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் அறுந்து விழும்போதுதான் உலகம் நிமிர்ந்து பார்க்கிறது. ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வின் சோதனைச் சாலை சமூகம். நீங்களோ நோயாளி அல்ல குற்றவாளி.

உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள். ‘அதுவும் இதுவும் தான்’ என்று குரோனியே சொன்னதைப் போல நீங்களும் ஒரு புதிய கவிதை சொல்லக் கூடும்.


சூரியன், புதிய கலாச்சாரம், ஜூலை, 2000

நினைவின் குட்டை கனவுநதி, சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தில் உறையும் அற்பவாத இதயம்! – வெளியீடு 2006


வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப்   போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.  உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும்  அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான்.  “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங்.  “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார்.  “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது.  இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?”  இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் கதையைப் பிறகு பார்ப்போம்.  ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது.  “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான்,  வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

எவ்வளவு டன் உணவு கெட்டுப் போயிருக்கக்கூடும் என்ற வாதப்பிரதிவாதம் ஒருபுறமிருக்கட்டும்.  யானையை வாங்கியவன் அதனை அடக்க அங்குசத்தை வாங்க மறந்துவிட்ட கதையாக, 6   கோடி டன் அளவிற்குக் கொள்முதலை நடத்தியிருக்கும் அரசு, அதனைச் சேமித்து வைக்க இந்திய உணவுக் கழகத்திடம் கிடங்குகள் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  இப்பொழுது இதற்குத் தீர்வாக, இந்த அபரிதமான கையிருப்பைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கத் தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கப் போவதாக மைய அரசு கூறியிருக்கிறது.

உணவு மானியத்தைக் குறைப்பதற்காக, தானியக் கொள்முதல் செய்வதிலிருந்தும் கிடங்குகளைக் கட்டுவதிலிருந்தும் அரசு விலகிக் கொள்வது; அரசுக்குப் பதிலாக இந்நடவடிக்கைகளில் தனியாரை அனுமதிப்பது என உலக வங்கி இந்தியாவில் தனியார்மயம் புகுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கட்டளையிட்டு வருகிறது.  ஓட்டுப் பொறுக்கும் அரசியல் காரணங்களுக்காகத் தானியக் கொள்முதலை முழுவதும் கைவிடாத அரசு, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதைக் கைவிட்டதோடு, அதனைத் தனியாரிடமும் ஒப்படைத்தது.  இன்று 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுதவற்கு இந்த உலக வங்கியின் கட்டளையும், அதனைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திய ஆளும் கும்பலும்தான் காரணம்.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்!

இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங்    தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்?  இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்லும் இத்தருணத்தில், மன்மோகன் சிங் தன்னிடம் உள்ள கையிருப்பை ரேசன் கடைகளின் மூலமோ அல்லது வெளிச் சந்தையின் மூலமோ புழக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தால், விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும்.  ஆனால், அரசு இப்படி சந்தையில் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதை மன்மோகன் சிங் விரும்புவதில்லை.  தமக்கு ஓட்டுப் போட்ட ஏழை மக்கள் இவ்விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்களே என்பது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல், விலைவாசி உயர்வு அவசியமானது என்றுதான் திமிர்த்தனமாக அறிக்கை விட்டுவருகிறார், அவர்.

அரசு சந்தையில் தலையிட்டால், மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் நுழைந்துள்ள ரிலையன்ஸ், பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் நிறுவனங்கள் விலைவாசி உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு அடித்துவரும் கொள்ளை இலாபம் படுத்துவிடும் என்பதாலேயே, அவரது அரசு சந்தையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.  உச்ச நீதிமன்றம் உத்தரவை அவர் புறக்கணிப்பதற்கும் இதுதான் காரணம்.  விலைவாசியை உயர்த்துவதற்காக வியாபாரிகள் சட்டவிரோதமான பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், மன்மோகன் சிங் அரசோ உணவுக் கொள்முதல்/சேமிப்பு என்ற பெயரில் சட்டபூர்வமாகப் பதுக்கலை நடத்தி, வர்த்தகச் சூதாடிகளுக்கு உதவி வருகிறது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவில், “வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என முத்திரை குத்தப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; அல்லது அவற்றின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் வண்ணம் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.  வெளித் தோற்றத்தில் பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசுவது போலத் தெரியும் இந்த உத்தரவு, உண்மையில் உணவு வழங்கல் கொள்கையில் உலக வங்கியின் கட்டளைகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஆலோசனையே சாட்சி.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலுள்ள இந்த ஆலோசனையை டாக்டர் மன்மோகன் சிங் புறக்கணிக்க மாட்டார் என்று அடித்துக் கூறலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேலே என்ற முத்திரை குத்தப்பட்ட குடும்ப அட்டைகள் டாடா, அம்பானி குடும்பங்களுக்கா கொடுக்கப்பட்டுள்ளது?  இந்தியாவிலேயே மிகப் பெரிய நகர்ப்புறச் சேரியான மும்பையில் உள்ள தாராவியில்  விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்கள் தவிர, அங்கே வசித்து வரும் பிற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.  குடும்ப அட்டைகளை இப்படிப் பிரிப்பது ஏழைகளைக் காவு கொள்ளும் திட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

திட்ட கமிசனும் தேசிய ஆலோசனை கவுன்சிலும் இணைந்து சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், “வறுமைக் கோட்டுக்குக் கீழே/மேலே என்ற பிரிவினையின்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு ஆண்டுதோறும் 1,40,000 கோடி ரூபாய் உணவு மானியமாகச் செலவாகும்; அதனால், அது நடைமுறை சாத்தியமற்றது.  மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்குக்கூட மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமையைத் தவிர, வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதையும் வழங்க முடியாது” எனத் திட்ட கமிசன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

அதாவது, அரசு தனது கையிருப்பிலுள்ள தேவைக்கும் அதிகமான உணவு தானியத்தை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்காது என்பது உறுதியாகிவிட்டது.   பூதம் புதையலைக் காத்த கதையாக மன்மோகன் சிங் இந்தக் கையிருப்பைப் பாதுகாத்துக் கொண்டிருக்கப் போகிறாரா அல்லது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, அவரது ஆட்சியில் மக்கள் பட்டினி கிடந்த போதும் 2.8 கோடி டன் உணவுப் பொருட்களை ஐரோப்பிய மாடுகள் தின்பதற்காக ஏற்றமதி செய்தாரே, அதைப் போலச் செய்வாரா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லக்கூடும்.

ஏழைகள் பட்டினி கிடக்கும்பொழுது அரசு அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்ற அறநெறியெல்லாம் மன்மோகன் சிங்கிடம் கிஞ்சித்தும் கிடையாது.  இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையே அலட்சியப்படுத்தி வரும் அவர், ஏழைகள் பட்டினி கிடப்பதையா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்?

2010-11 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உணவு மானியத்தில் 450 கோடி ரூபாயை வெட்டிய அவரது அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 5,00,000 கோடி ரூபாயை வரிச் சலுகையாக வாரி வழங்கியது.  இது பாமரனுக்கு ஓரவஞ்சனையாகத் தெரியலாம்.  ஆனால், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் அலுவாலியா – ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை, இந்தப் பாதையில் சென்றால்தான் இந்தியா உலகத் தரத்தை அடைய முடியும் என்று கருதுகிறார்கள்.

அவர்கள் தமக்கு வாக்களித்த கோடிக்கணக்கான ஏழை – எளிய மற்றும் நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தவில்லை.  பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், புதுப் பணக்கார மேட்டுக்குடிக் கும்பலின் பிரதிநிதியாகத்தான் மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்தக் கும்பலின் நலனை முன்னிறுத்தித்தான் போடப்படுகின்றன.  அவ்‘வளர்ச்சி’த் திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வை மேலும் மேலும் நாசப்படுத்தி வருவதை யாரேனும் கண்டித்தால், எதிர்த்துப் போராடினால், அவர்கள் அனைவரையும் “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’, “மாவோயிசத் தீவிரவாதிகள்” என முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறார், மன்மோகன் சிங்.  இப்படிப்பட்ட கும்பலிடம் உணவு மானியத்தை வெட்டக்கூடாது, ஏழை மக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என ஆலோசனை கூறுவதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்!

________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?
ராஜீவ் காந்தி

1984 நச்சு வாயுப் படுகொலைகள் வழக்கில் போபால் வழக்குமன்றத் தீர்ப்பு வந்தவுடன் நாடே கொந்தளித்துப் போனது. அக்கோரச் சம்பவம் நடந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. அன்று போபாலில் என்ன நடந்தது; எப்படி நடந்தது; எவ்வளவு பேரழிவும் துயரமும் நிகழ்ந்தது என்று இன்று கேள்விப்படும் புதிய தலைமுறையினரின் நெஞ்சிலே எழும் முதற்கேள்விகள் இவைதாம்: இத்தனைக்கும் காரணமான குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?

இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னரும் எந்தவிதத் தண்டனையும் விதிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் மீதான வழக்கில் விசாரணையே இதுவரை நடைபெறவில்லை. போபால் ஆட்கொல்லி ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியவன்; செய்யப்பட்டிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் லாபவெறி காரணமாக முடக்கிப் போட்டவன்; நேரம் குறித்து வெடிக்கும் குண்டு வைப்பதைப் போல பழைய – காலாவதியான தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் கொண்டு வந்து நிறுவியவன். அவனா இதற்குக் காரணம் என்று கேட்கலாம்.

ஆம்! ஆலை லாபகரமாக ஓடினால் மட்டும் எல்லாம் என் அறிவுத் திறமையினால்தான் என்று சம்பளத்தை வாரிக் கொள்பவன்தானே அதன் பேரழிவுச் செயலுக்கும் பொறுப்பேற்க வேண்டும்!

அப்பேரழிவு நிகழ்ந்த ஓரிரு நாட்களில் போபால் வந்திறங்கிய வாரன் ஆண்டர்சனை மக்களின் ஆத்திரத்தில் இருந்து பாதுகாப்பதற்காக, கைது என்ற பெயரில் அரசு சொகுசு மாளிகையில் காவலில் வைத்தார்கள். உடனடியாகவே பிணையில் விடுவித்து, அரசு விமானத்திலேயே புதுதில்லி அழைத்துப் போ, அரசு அதிகாரிகளுடன் விருந்தளித்து அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தார்கள்.

இதைச் செய்தது யார்? இதற்கு யார் பொறுப்பு? கட்டபொம்மனின் வாரிசுகள் தமது மூதாதையரின் செயலுக்கு உரிமை பாராட்டிக் கொள்ள முடியும்! எட்டப்பனின் சந்ததியினர் அவனது காரியத்துக்கு பரம்பரை உரிமை பாராட்டிக் கொள்ள முடியுமா? அப்படித்தான் நடக்கிறது.

ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு தாம் காரணமில்லை என்று கை விரிக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசு ஆட்சி. புதுதில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி. போபாலில் முதல்வர் அர்ஜுன் சிங். ஆண்டர்சனை அரசு சொகுசு மாளிகை காவலில் வைத்து, தனது அரசு விமானத்தில் வழியனுப்பி வைத்தவர் அர்ஜுன் சிங். அதை அவர் இன்றும் பெருமையுடன் ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவரை விடுதலை செய்யுமளவுக்குத் தமக்கு அதிகாரம் இல்லை; மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசி மூலம் வலியுறுத்தப்படுவதாக தலைமைச் செயலர் சொன்னார்; அதனால்தான் புதுதில்லிக்கு ஆண்டர்சனை அனுப்பி வைத்தேன் என்றார், அர்ஜுன் சிங்.

புதுதில்லியிலிருந்து வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக அர்ஜுன் சிங் அனுப்பி வைத்திருக்கவும் முடியாது. அப்படி யாரும் இன்று வரை கூறவும் இல்லை. அப்படிச் செய்ய அவருக்கு அதிகாரமும் இல்லை. ஆனால், “ஆண்டர்சன் கைது, விடுதலை மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது – இவை எதிலும், எவ்விதப் பங்கும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கிடையாது. நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்காக பிரச்சாரப் பயணத்தில் இருந்த அவருக்கு நடந்தவை எதுவும் தெரியாது” என்று காங்கிரசுக்காரர்கள் எல்லாம் முதலில் ஒருசேர அடியோடு மறுத்து வந்தார்கள்.

நாட்டில் இவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்திருக்கிறது! இதற்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியைக் கைது செய்து, பின்னர் விடுதலை செய்து, பாதுகாப்பாக நாட்டைவிட்டுத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இவை எதுவும் பிரதமர் ராஜீவுக்குத் தெரியாது என்றால், இவை எதுவும் தெரியாத ஒருவருக்கு இந்த நாட்டை ஆளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? பிரதமராக இருப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவ்வளவுதான் மக்கள் மீதும், நாட்டின் மீதும் அவருக்கிருந்த அக்கறையா? அல்லது இவையெதுவும் ராஜீவுக்கு தெரியாது என்பது பச்சைப் பொய்யா?

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?
வாரன் ஆண்டர்சன்

வாரன் ஆண்டர்சனின் விவகாரத்தை அன்று புதுதில்லியில் கையாண்டவர்கள் இரண்டு அதிகாரிகள்: ஒருவர் ராஜீவ்காந்தி அரசில் பொறுப்பேற்றிருந்த வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ரஸ்கோத்ரா. மற்றவர் ராஜீவ்காந்தியின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். “ஆண்டர்சன் இந்தியா வரலாம், வந்தால் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமெரிக்கத் துணைத் தூதர் மூலம் உறுதியளிக்கப்பட்டது. அவ்வாறே நடந்தது. நடப்பவை பற்றி ராஜீவ்காந்திக்கு சொல்லப்பட்டது. அவர் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை” என்கிறார் ரஸ்கோத்ரா.

“(இந்திய) அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துப் பேசித்தான் எல்லாம் முடிவு செய்யப்பட்டன. அக்கூட்டத்தில் ராஜீவும் கலந்து கொண்டார்” என்கிறார், அவரின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். ரஸ்கோத்ராவின் கூற்றுக்கு மறுப்புச் சொல்லாத காங்கிரசார், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக நின்ற அலெக்சாண்டர் கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

மன்மோகன், சோனியா, ராகுல் ஆகிய அதிகார பீடாதிபதிகள் போபால் விவகாரம் குறித்து இன்றும் வாயை இறுக மூடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளும், செய்தி ஊடகங்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்திய பிறகு, அர்ஜுன் சிங்கிற்கு அரசியல் மறுவாழ்வளிப்பது என்ற ஒப்பந்தத்தின் பேரில் திடீரென்று ஒருநாள் நாடாளுமன்றத்தில் அவர் வாய் திறந்தார்.

“போபால் நச்சு வாயு துயரம் நடந்த கொஞ்ச நேரத்தில் ராஜீவ் காந்தி தங்கியிருந்த ஹர்தாவுக்கு போ நான் அவரிடம் அதுபற்றி விளக்கிச் சொன்னேன். அவர் எந்தப் பதிலும் பேசாது நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். ஆண்டர்சனுக்கு ஆதரவாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவரது பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முயலவில்லை. ராஜீவைப் போன்று உயர்நிலையிலும் உயர் தரத்திலும் உள்ள ஒருவரைக் குறை கூறுவது வெறும் கற்பனையாகும்… ஆண்டர்சனை விடுவிக்கும்படி உள்துறை அமைச்சகத்திலிருந்து இடைவிடாமல் தொலைபேசியில் வலியுறுத்தப்பட்டது” என்றார், அர்ஜுன்சிங்.

அர்ஜுன் சிங்கின் இந்தக் கூற்றை காங்கிரசார் மறுக்கவில்லை. என்றாலும் அவர்கள் விரும்புவதைப் போல இந்த பிரச்சினைக்கு அது முடிவு கட்டவில்லை. ஆனால், தவிர்க்கவே முடியாத சில கேள்விகள் மனிதச் சிந்தனை உள்ளவர்களிடையே எழும்புகிறது. ஒரு அந்நியக் கம்பெனியின் நாசகாரச் செயலால் சொந்த நாட்டு மக்கள் – குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அப்பாவி மக்கள் – ஆயிரக்கணக்கானோர் சில நிமிடங்களில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் ஊனமுற்று மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள். இவற்றைக் கேள்விப்படும் எந்த மனிதரும் எப்படி வெறுமனே கேட்டுக் கொண்டிருக்க முடியும்? ஏதோ நடந்துவிட்டுப் போகட்டும் என்று தன் வேலையைப் பார்க்கப் போவிட மாட்டார்கள். உணர்ச்சியுள்ள எந்த மனிதருக்கும் நெஞ்சம் பதைபதைக்கும். ஆனால், நடந்த சம்பவங்களை முதன் மந்திரி பிரதமரிடம் விளக்குகிறார். இவரோ எவ்வித எதிர்வினையும் தெரிவிக்காமல் கேட்டுக் கொள்கிறார். இக்கோர நிகழ்வுகளுக்காகத் துயரப்படவில்லை, மனம் இரங்கவும் இல்லை. காரணமானவர்கள் மீது ஆத்திரமும் வரவில்லை. இவர் மனிதப் பிறவிதானா? இல்லை, உணர்ச்சியே இல்லாத மனிதப் பிண்டமா?

இந்தக் கேள்விகள் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் உட்பட எந்த ஓட்டுக்கட்சிக்கும் எழவில்லை. செய்தி ஊடகங்களுக்கோ, அரசியல் விமர்சகர்களுக்கோ எழவில்லை. ஏன்? அதற்குமேல் அவர்கள் போக விரும்பவில்லை. இறந்து போனவர்களை விமர்சிக்கக் கூடாது; ஒரு வரம்புக்கு மேல் எந்த ஒரு அரசியல் கட்சியையும், அதன் தலைவர்களையும் அரசியல் அமைப்பையும், சட்டத்தையும் கேள்வி கேட்கக் கூடாது என்று இவர்களாகவே வரம்பிட்டுக் கொள்கிறார்கள். “தேசியத் தலைவர்கள்” என்ற பிம்பத்தை உருவாக்கி, கேள்விக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்ட தலைவர்கள், நிறுவனங்கள் என்று சிலரையும், சிலதையும் வைத்து பாதுகாப்பு அரண்களை எழுப்பிக் கொண்டார்கள். அதனால்தான் போபால் விவகாரத்திலேயே துரோகத்தனமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தை யாருமே தட்டிக் கேட்க வில்லை. இதை அடிப்படையாகக் கொண்டுதான் ராஜீவ் ஒரு உயர்ந்த தலைவர்; அவரைக் களங்கப்படுத்தும் வகையில் எதுவும் பேசக் கூடாது என்று காங்கிரசு வாதிடுகிறது.

அர்ஜுன் சிங் நாடாளுமன்றத்தில் பேசிய அடுத்த நாளே, போபால் – ராஜீவ் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக எண்ணிப் பாசிச பயங்கரவாதி சிதம்பரம் பேசினார். ஆனால், அதுவே அவரது அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. “போபால் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சி புரிந்த எல்லா அரசாங்கங்களும் கைவிட்டு விட்டன; அதற்காக வருந்துகிறேன்” என்று முதலைக் கண்ணீர் வடித்தார், சிதம்பரம். எல்லோரும்தான் தவறு செய்தோம் என்று முதலாம் துரோகி மற்ற துரோகிகளைச் சேர்த்துச் சொல்வதன் மூலம் இதற்கு மேல் யாரும் யாரையும் குற்றஞ் சாட்டாதீர்கள் என்று எச்சரிக்கிறாரா? சமரசம் பேசுகிறாரா? எல்லோரும்தான் தவறு செய்திருக்கிறோம் என்று தவறை ஒப்புக் கொள்வதுபோல பாசாங்கு செய்து தம் மீதான குற்றச்சாட்டின் கூர்முனையை மழுங்கடிக்க எத்தணிக்கிறாரா?

“போபால் சம்பந்தமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. ஆண்டர்சன் வந்து போனதாகக் கூட அரசு ஆவணங்களில் ஆதாரம் இல்லை. அக்காலத்திய பத்திரிக்கைச் செய்திகளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போதைய இந்து நாளேட்டின் செய்திப்படி, ஆண்டர்சன் நாட்டை விட்டுப் போன பிறகுதான் நடந்தவை ராஜீவுக்குத் தெரிந்தன” என்றார், பாசிச புளுகுணி சிதம்பரம். ஆண்டர்சன் வெளியேறுவதற்கு முன்பாக ராஜீவுக்கு சொல்லப்பட்டது என்றுதான் அக்காலத்திய இந்து நாளேடு செய்தி கூறியது. இதை இந்து நாளேடு செய்தியாளரே ஆதாரத்துடன் கேட்டபோது, அது இந்து நாளேட்டின் கருத்து என்று மீண்டும் புளுவிவிட்டு ஓடிப்போனார் சிதம்பரம்.

ஆக, ஆண்டர்சன் வருகை முதல் பாதுகாப்பாக நாடு திரும்பியவரை எல்லாம் ராஜீவுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. இதற்கு இந்து நாளேடு செய்தி, ரஸ்கோத்ரா, அலெக்ஸாண்டர், அர்ஜுன் சிங் ஆகிய சாட்சியங்கள் உள்ளன.  ஆண்டர்சன் திருப்பி அனுப்பப்பட்டதில் ராஜீவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று காங்கிரசார் வாதிட்டாலும், அதுபற்றி அவருக்குச் சொல்லப்பட்டபோது ராஜீவ் மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். இதற்கும் மேலாக, ராஜீவ் அரசாங்கம்தான் ஆண்டர்சனை அனுப்பி வைக்கும் முடிவு செய்ததாக சி.ஐ.ஏ. ஆவணமும் ஆண்டர்சனைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவிடம் தொலைபேசியில் வலியுறுத்தினார் என்ற ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.

மன்னர் ஆட்சிக் காலத்தில் நீண்டநெடிய மதிற்சுவர்களுக்குப் பின்னே அரசியல் சதிகள் தீட்டப்பட்டன, இரகசியமாக நிறைவேற்றப்பட்டன. வெளியே தெரிந்தாலும், அரசின் இரகசியங்களை அறிந்தவர்கள் அனைவரும் அரசருக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாகச் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். இந்தக் காலத்தில் கருப்புப் பூனைப் படைகளின் பாதுகாப்போடு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு, அடாவடியாக நிறைவேற்றப்படுகின்றன. பிற விவகாரங்களில் கேள்வி கேட்பவர்களைத் தேசவிரோத சக்திகள் என்று குற்றஞ்சாட்டி ஒடுக்குவதைப் போல, ஆண்டர்சன் விடுதலை போன்ற விவகாரங்களில் அப்படிச் செய்ய முடியாது. எனவே, நடந்தவை பற்றிய ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன; அல்லது காணாமல் போகும்படி செய்யப்படுகின்றன.

ஆனால், நடந்தவை எல்லாம் ராஜீவ் தலைமையிலான அரசின் திட்டமிட்ட முன்னேற்பாடுகள், சதிச் செயல்கள் தாம். தன் பங்கு பற்றி வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அர்ஜுன் சிங் போன்ற அல்லக்கைகள் – எடுபிடிகளை வைத்து நிறைவேற்றப்பட்டவைதாம்.

மக்களுடைய கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளாவோம் என்று அஞ்சும் விவகாரங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் தமது அல்லக்கைகளை வைத்து காரியங்களைச் செய்வதும், தாம் ஏதும் அறியாதவர்களைப் போல வாய்மூடிக் கொண்டிருப்பதும் புதிதல்ல. ஈழ விவகாரத்தில் கூட பிரணாப் முகர்ஜி, சிவசங்கர மேனன், நாராயணன் போன்றவர்களே முன்நிறுத்தப்பட்டார்கள். மன்மோகனும் சோனியாவும் வாயே திறக்கவில்லை.

அதைப் போல ஆண்டர்சன் தப்புவிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜீவ் அரசால் முன்னிறுத்தப்பட்டவர்களைத் தான் கை காட்டுகிறார்கள். ராஜீவ்காந்தியின் பங்கு பற்றிய உண்மை தெரியக்கூடாது என்பதற்காக அரசு ஆவணங்கள், ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. அப்போது நடந்தவை பற்றிய ஆதாரம் எதுவுமில்லை என்கிறார் சிதம்பரம். அக்காலத்திய பிரதமர் அலுவலகத் தொலைபேசி உரையாடல் பற்றிய விவகாரங்களை தரும்படி தகவல் அறியும் சட்டப்படி கேட்டவருக்கு, அதுபற்றிய விவரம் எதுவும் தம்மிடம் இல்லை என்று அடியோடு மறுக்கிறது அரசு. ராஜீவின் தாய் நடத்திய அவசர கால ஆட்சி (1975-76) பற்றிய தகவல் – விவரம் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் இந்த அரசு கூறுகிறது என்பது வேறொரு விசயம்சி.

ராஜீவ் காந்தியின் ஆட்சியே இப்படிப்பட்டதுதான். அர்ஜுன்சிங் முன்னின்று போடப்பட்ட ராஜீவ் – லோங்கோவால் பஞ்சாப் ஒப்பந்தம், ராஜீவ் – அசாம் கன பரிசத் ஒப்பந்தம், ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போன்ற இரகசிய ஒப்பந்தங்களும், சதித்தனமான வேலைகளும் நிறைந்ததுதாம். ராஜீவ் அரசியல் வாழ்வே போபார்ஸ் ஊழல், டில்லி சீக்கியர் படுகொலை, ஏன், ராஜீவ் கொலையே கூட தீர்வு காணப்படாத மர்மங்கள் நிறைந்தவைதாம்!

________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ராகுல் காந்தி: பழங்குடி அவதார்!

ராகுல் காந்தி : பழங்குடி அவதார்!

நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன் ஒன்றையே தனது நலனாகக் கருதுகின்ற, ஏகாதிபத்தியத்தின் கையாள்தான் நாம் அறிந்த காங்கிரசு.

‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ என்ற பெயரில் பன்னாட்டு, தரகு முதலாளிகளின் குட்டி சமஸ்தானங்களை ஏற்படுத்தியது முதல், உள்நாட்டுச் சிறுவணிகர்களைக் காவுவாங்கும் வகையில் சிறுதொழில் முதல் சில்லறை விற்பனை வரை அனைத்திலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது வரை; போபால் படுகொலைக் குற்றவாளி ஆன்டர்சனைப் பாதுகாத்து வருவது முதல், எதிர்காலத்தில் அப்படியொரு படுகொலை நடந்தாலும் முதலாளிகள் யாரும் குற்றவாளிகள் ஆக்கப்படாத வகையில் ‘அணுசக்தி பாதுகாப்பு மசோதா’வை நிறைவேற்றியது வரை- அனைத்திலும் தரகு முதலாளிகளின் நலனை விட்டுக் கொடுக்காத கட்சியே நாம் அறிந்த காங்கிரசு.

இருப்பினும், காங்கிரசுக் கட்சியின் அடுத்த தலைவராகவும், எதிர்கால இந்தியாவின் ‘பிரதமராகவும்’ முன்னிறுத்தப்படும் ‘ராகுல் காந்தி’யை ஏழை எளியோரின் பாதுகாவலனாகவும், அவர்களுடைய நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியைத் தருபவராகவும் சித்தரிக்கும் நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான அவரது குரல் காங்கிரசு கட்சிக்குள்ளே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது போலவும், தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் கட்சிக்குள்ளேயே பெரியதொரு முரண்பாடு எழுந்துள்ளது போன்றும் ஊடகங்கள் காட்டுகின்றன. தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கிற மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா போன்றவர்கள் ஒரு பிரிவாகவும் சோனியா, ராகுல் போன்றவர்கள் மற்றொரு பிரிவாகவும் இருப்பது போலச் சித்தரிக்கப்படுகின்றனர்.

இது உண்மைதானோ என்று மக்கள் எண்ணும் வகையில் வேறு சில காட்சிகளும் அரங்கேறுகின்றன. நியம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் தோண்டவிருக்கும் பாக்சைட் சுரங்கத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மும்பை விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் முகேஷ் அம்பானிக்கு எடுபிடியாக செயல்படும் மகாராட்டிர அரசிடம்,  சதுப்புநிலக் காடுகளுக்காக வாதாடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், ஏழை நாட்டுக்கு காமன்வெல்த் போட்டி தேவையா என்று சாடுகிறார்.

சுதந்திரக் கொண்டாட்டங்களிலிருந்து விலகி நின்ற ‘மகாத்மா’ காந்தியைப் போல, இந்தக் களேபரங்களிலிருந்து ஒதுங்கியிருப்பவர் போலவும், ஏழைகளின் முன்னேற்றம் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் முகச்சவரம் செய்யக்கூட மறந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இளவரசர் ராகுல்காந்தி தலித் வீடுகளில் தங்குகிறார்; ரோட்டோரத்தில் டீ குடிக்கிறார்; “பொருளாதார முன்னேற்றம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும்” என்று தத்துவம் உதிர்க்கிறார். ஒரிசாவின் நியம்கிரிக்கு தனி விமானத்தில் சென்று இறங்கி, அங்குள்ள மலைவாழ் பழங்குடியினரிடம், “நான் தில்லியில் உங்களுக்காக வேலை செய்யும் சிப்பாய்” என்று வசனம் பேசுகிறார்.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார் - வேதாந்தா - பழங்குடியினர்

தில்லியில் பழங்குடி மக்களுக்காகவே வேலை செய்யும் சிப்பாய் இதைப் பேசி முடிப்பதற்குள், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்காகவே காங்கிரசு கட்சியால் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த சிப்பாய் மன்மோகன் சிங், “சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் என்று பேசிக்கொண்டு, வறுமை ஒழிப்பு இலட்சியத்தை நாம் கைவிட்டு விட முடியாது” என்கிறார். வறுமையை ஒழிக்க வேண்டுமென்றால் பழங்குடி மக்களின் காடுகளையும் நிலங்களையும்  பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்கள்-தரகு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது மூத்த சிப்பாயின் கொள்கை. மூத்த சிப்பாய் பேசுவதைப் பற்றி இளைய சிப்பாய் பேச மறுக்கிறார்.

ராகுல் காந்தி ஒரிசாவின் பழங்குடி மக்களுடன் டான்ஸ் ஆடிய புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து ஓய்வதற்குள்ளாகவே, மன்மோகன் சிங் டில்லியிலிருந்து  உறுமுகிறார். கிடங்குகளில் பாழாகும் உணவு தானியங்களை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றத்திடம், “அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடாதே” என்று எச்சரிக்கிறார். மக்கி மண்ணாகிக் கொண்டிருக்கும் உணவு தானியத்தை இலவசமாக வழங்குவதில் அரசுக்கு இருக்கும் சிக்கல், நிதிப் பற்றாக்குறை அல்ல. கொள்ளை லாபமடிக்கும் உணவு தானியக் கழகங்கள், பெருவியாபாரிகளின் கொள்ளைக்கு பங்கம் வந்துவிடுமோ என்பதுதான் மன்மோகனின் கவலை. ஏழைகளுக்குச் சோறு கிடைப்பதை விட முதலாளிகளுக்கு சுதந்திரம் (கொள்ளையடிக்கும் சந்தை சுதந்திரம்) கிடைப்பது முக்கியம் என்பதுதான் அரசின் கொள்கை. இது, ஏழை எளியவர்களின் காவலனான ராகுல் காந்திக்குத் தெரியாதா?

சிரிப்பாய் சிரித்து நாறிக் கொண்டிருக்கும் காமன்வெல்த் ஊழலைப் பற்றி உத்தமபுத்திரன் ராகுல் என்ன சொல்கிறார்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் உச்சநீதிமன்றம் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதே, இதைப்பற்றி இளவரசரின் கருத்து என்ன? டாடாவின் நிலப்பறிமுதலுக்கு எதிராகப் போராடிய கலிங்கா நகர்ப் பழங்குடியினர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனரே அப்போது இவர் எங்கே சென்றிருந்தார்? இவையெல்லாம் கிடக்கட்டும். இதே ஒரிசாவில் சுற்றுச்சூழல் வனத்துறை விதிகளுக்கு எதிராகவும், மக்களுடைய எதிர்ப்பை மீறியும் போஸ்கோ ஆலைக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டிருக்கும் நவின் பட்நாயக்கிடம், “பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று பகிரங்கமாக தைரியம் சொல்கிறார் மன்மோகன் சிங். அதுவும் நியம்கிரியில் ராகுல் காந்தி வீர உரை ஆற்றிய அதே நாட்களில்! இதைப் பற்றி இந்த பழங்குடிகளின் சிப்பாய் மூச்சுவிடாதது ஏன்?

ஏனென்றால், இது ஒரு நாடகம். நியம்கிரியை வேதாந்தா நிறுவனம் விழுங்குவதற்கு எதிரான போராட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநராக ப.சிதம்பரம் இருந்ததையும், அந்த நிறுவனத்துக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கும் உள்ள கள்ளக் கூட்டையும், “நான் ஸ்டெர்லைட்டின் பங்குதாரர்” என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு நியம்கிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையையும் அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் சந்தி சிரித்திருக்கிறது இப்பிரச்சினை. அப்போதெல்லாம் நியம்கிரியின் சிப்பாய் எந்த நட்சத்திர விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்தார்?

ராகுல் காந்தி : பழங்குடி அவதார்

ராகுல் காந்தி மட்டுமல்ல, இன்று வேதாந்தாவுக்கு எதிராகப் பேசும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும், அதன் அமைச்சரான ஜெய்ராம் ரமேசும், உண்மையில் கடந்த காலங்களில் வேதாந்தாவை ஆதரித்தவர்களே. வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்தைத் தடை செய்ததற்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது இரண்டு காரணங்களைச் சொல்லியுள்ளது. ஒன்று, பாக்சைட் சுரங்கம் அமைக்க அனுமதிப்பது, ஒரு தனியார் நிறுவனத்தின் இலாபத்திற்காக டோங்கிரியா மற்றும் குடியா கோந்த் ஆகிய இரு பழங்குடியின மக்களுக்கு, சுரங்கம் அமைக்கப்படவிருக்கும் இடத்தின் மீது உள்ள பாரம்பரிய வாழ்விட  உரிமையைப் பறிப்பதாகும். மேலும், இது சட்டத்தின் ஆட்சி மீதான அவர்களது நம்பிக்கையை உடைக்கும் செயலாகும். இரண்டாவது காரணம், வேதாந்தா (ஸ்டெர்லைட்) நிறுவனம், சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்புக்கான சட்டங்கள் பலவற்றைத் தொடர்ந்து மீறியுள்ளது. ஒரிசா மாநில அதிகாரிகளின் கள்ளக் கூட்டுடன் வனப் பாதுகாப்புச் சட்டம் வன உரிமைச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், மற்றும் ஒரிசா வனச் சட்டம் ஆகிய சட்டங்களை மீறி வேதாந்தா நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வேதாந்தாவின் சுரங்கத்தைத் தடை செய்ய காங்கிரசு அரசு என்ன காரணங்களைக் கூறுகிறதோ, அதே காரணங்களை மற்றவர்கள் கூறியபோது அவற்றை அலட்சியமாக நிராகரித்து, வேதாந்தாவுக்கு ஆதரவாக காங்கிரசு அரசு நடந்து கொண்டிருக்கிறது. வேதாந்தாவின் நியம்கிரி அலுமினியத் திட்டம்,  பாக்சைட் சுரங்கம்- அலுமினிய சுத்திகரிப்பு நிலையம்-அலுமினிய உருக்காலை என மூன்று பகுதிகளைக் கொண்டது. இதில் தற்போது பாக்சைட் சுரங்கம் அமைக்கும் பணிக்குத்தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வேதாந்தாவின் அலுமினியச் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. ஆனால், அவற்றில் மிகப் பெரிய அளவில் விதிமுறை மீறல்கள் இருந்ததைச் சுட்டிக் காட்டி சிறீதர், பிரபுல் சமன்தரா போன்ற தனிநபர்களும், ஒரிசா காட்டுயிரிச் சங்கம் போன்ற அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் மத்திய மேலாண்மைக் கழகத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த அந்த அமைப்பும் வேதாந்தாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தது. ஆனால், இன்று வேதாந்தாவைத் தடைசெய்திருக்கும் இதே மத்திய அமைச்சகம் அன்று உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தாவின் சார்பில் வாதிட்டு, அதற்குச் சாதகமான தீர்ப்பை வாங்கித் தந்தது.

வேதாந்தாவின்  உருக்காலை தொடங்கப்பட்டபோது நடந்ததும் இதுதான். உருக்காலை அமைக்க முறையான அனுமதி பெறுவதற்கு முன்னரே இயங்க ஆரம்பித்துவிட்ட அந்த ஆலையைத் திறந்து வைத்தவர் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக். இதனை எதிர்த்து பிரபுல் சமன்தரா என்பவர் தேசிய சுற்றுச்சூழல் முறையீட்டு ஆணையத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் வேதாந்தாவிற்கு எதிராக இடைக்காலத் தீர்ப்பளித்த தில்லி உயர் நீதிமன்றம், அந்நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. ஆனால் 2009-ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வேதாந்தாவை ஆதரித்து அதன் சார்பாக வாதாடியதால் இறுதித் தீர்ப்பு வேதாந்தாவின் பக்கம் வந்தது.

தற்போது இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்த அனுமதிகூட 2009-ஆம் ஆண்டு இதே மத்திய அமைச்சகத்தால் வழங்கப்பட்டதுதான். அப்போதும் இதே காரணங்கள் இருந்தன. இதுகுறித்துப் பேசியவர்களுக்கு எதிராகவும், வேதாந்தாவிற்கு ஆதரவாகவும் இதே அமைச்சகம்தான் இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில், பல்வேறு வழக்குகளில் வாதாடியது.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார் - வேதாந்தா

வேதாந்தாவுக்கு எதிரான வழக்கில் ஒரு மனுதாரராக சேர்ந்துகொள்வதற்குக் கூட அந்த மண்ணின் மைந்தர்களான பழங்குடியினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறி பழங்குடி மக்களை அந்த வழக்கிலிருந்தே வெளியேற்றினார் உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். அப்போது பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்விட உரிமை அரசியல் சட்டத்திலிருந்து எங்கே காணாமல் போயிருந்தது? இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா, நியம்கிரியின் கோண்டு இன மக்களை, புல்லைத் தின்னும் பழங்குடிகள் என்று திமிர்த்தனமாக ஒரு கூட்டத்தில் பேசியபோதும், “நான் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரர்” என்று நீதிமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த போதும், பழங்குடி மக்களுக்காக டில்லியில் வேலை செய்யும் இந்தச் சிப்பாய், என்ன செய்து கொண்டிருந்தார்?

வேதாந்தாவும், அதன் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனமும், விதிமீறல்களுக்கும், வரி ஏப்புக்கும், லஞ்ச லாவண்யங்களுக்கும் பெயர் போனவை. 750 கோடி ரூபாய் கலால் வரி ஏப்பு வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தூத்துக்குடியில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏப்பு செய்ததாக அந்நிறுவனத்தின் மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான நிறுவனம் என்று அம்னெஸ்டி இன்டர்நேசனல், சர்வைவல் இன்டர்நேசனல் போன்ற அமைப்புகள் வேதாந்தா நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்கின்றன. நியம்கிரி மலையில் வேதாந்தா செய்துள்ள அனைத்து விதிமுறை மீறல்களையும் ஆதாரப்பூர்வமாகப் பலர் அம்பலப்படுத்தியுள்ளனர். வேதாந்தாவின் கிரிமினல் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்ற நிலையில்தான் நார்வே அரசு அந்நிறுவனத்தில் போட்டிருந்த தனது முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளது. இதே காரணத்தினால்தான், வேதாந்தாவின் எல்லா முறைகேடுகளுக்கும் துணை நின்ற காங்கிரசு அரசிலிருந்து தன்னை மட்டும் விலக்கிக் கொண்டு ஏழைகளின் தோழனாக நடிக்கிறார் ராகுல்.

நியம்கிரியைக் காட்டிலும் அதிகமான பழங்குடி மக்களை வெளியேற்றக்கூடியதும், அதனினும் அதிகமாக சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடியதுமான போலாவரம் அணைக்கட்டுத் திட்டம், எதிர்ப்புகளையெல்லாம் மீறி ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதே ஒரிசாவில் போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையா நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளிக்கிறார் மன்மோகன்சிங். காங்கிரசின் மறுகாலனியாக்க கொள்கைகள் எதுவும் மாறிவிடவில்லை. அவற்றை அமல்படுத்தும் வெறித்தனமும் குறைந்து விடவில்லை.

மூடி மறைக்க முடியாத அளவிற்கு வேதாந்தாவின் மோசடிகளும், காங்கிரசு அரசின் முறைகேடுகளும் அம்பலமாகிவிட்டன. வேதாந்தாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் யோக்கியதையே சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு வேதாந்தா நிறுவனம் ‘கேன்ஸ்’ என்னும் எரிசக்தித் துறை பன்னாட்டு நிறுவனத்தை வாங்கி, இந்தியாவின் எரிசக்தித் துறையையே தனது ஏகபோகத்தின் கீழ் கொண்டுவர விரும்பும் முகேஷ் அம்பானியோடு உரசியிருப்பதால், காங்கிரசு அமைச்சரவையில் நிறைந்திருக்கும் அம்பானி பக்தர்களுக்கும் நியம்கிரியின் பழங்குடி மக்கள் மீது அபிமானம் பிறந்து விட்டது. அனைத்துக்கும் மேலாக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளுக்காக சிதம்பரம் நடத்திவரும்  காட்டுவேட்டை, பழங்குடி மக்களை மென்மேலும் மாவோயிஸ்டுகளின் பக்கம் தள்ளிவிடுமோ என்ற அச்சமும் ஆளும் வர்க்கத்தைப் பிடித்தாட்டுகிறது.

வேதாந்தாவின் பாக்சைட் கொள்ளையைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டவுடனே, அத்தகைய தடையினால் கிடைக்கக் கூடிய நற்பெயரைக் கொள்ளையடிக்கும் உரிமை பட்டத்துக்கு வரக் காத்திருக்கும் இளவரசருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் வளங்களையும் இந்திய மக்களையும் கொள்ளையடித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, இந்தியத் துணை இராணுவத்தின் சிப்பாய்கள் பழங்குடி மக்களை வேட்டையாடிக் கொண்டிருக்க, அதனை எதிர்த்துப் போராடும் பழங்குடி மக்களுக்கும் நானே சிப்பாய் என்று தன்னைத் தானே நியமனம் செய்து கொண்டுவிட்டார் ராகுல்.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார் - ஜெய்ராம் ரமேஷ்

ஆளும் கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கிக் கொள்ளும் இந்தத் தந்திரத்தை ஆளும் வர்க்க ஊடகங்கள் அம்பலப்படுத்துவதில்லை. மாறாக, ஆமோதிப்புடன் புன்னகைக்கின்றன. காங்கிரசின் வலது, இடது பிரிவினருக்கு இடையில் கொள்கைப் போர் கொழுந்து விட்டு எரிவதைப் போலவும் சித்தரிக்கின்றன. வலது புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், முரளி தியோரா இன்னபிறர். இடது புறத்தில் ராகுல் காந்தி, திக்விஜய்சிங், மணிசங்கர் ஐயர், ஜெய்ராம் ரமேஷ். நடுவில் அன்னை சோனியா.

மக்கள் காறி உமிழ்ந்து காங்கிரசை வெளியேற்றிய மாநிலங்களுக்கெல்லாம் விஜயம் செய்கிறார் ராகுல். கொட்டை போட்ட கொள்ளையர்களும், பிடிபட்ட திருடர்களுமான தந்தையர்களை ஒதுக்கி வைத்து விட்டு, காங்கிரசு குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுடைய குலக்கொழுந்துகளை ஒன்றுதிரட்டி காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதம் செய்கிறார், ராகுல். மாநிலக் கட்சிகளின் வெளிப்படையாகத் தெரியும் அதிகார முறைகேடுகளை  எதிர்த்துப் பேட்டி கொடுக்கிறார். வெற்றிப் பேரணி நடத்துகிறார். டில்லி காங்கிரசு அரசை எதிர்த்துப் போராடி நியம்கிரி பழங்குடிகள் பெற்ற வெற்றியின் மகுடத்தையும் இந்த டில்லி சிப்பாயே சூடிக்கொள்கிறார்.

நகைக்கத்தக்க இந்தக் கேலிக்கூத்தை அல்லது அப்பட்டமான இந்த அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த முடியாமல் புழுங்குகிறார்கள், மார்க்சிஸ்டுகள். முன்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் போலி கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பாத்திரத்தை (அரசாங்கத்தின் மனச்சாட்சி அல்லது மனித முகம்) அவர்களிடமிருந்து ராகுல் கைப்பற்றிவிட்டதால், அந்தக் கதாபாத்திரத்தையோ அதன் வசனத்தையோ விமரிசிக்க முடியாமல் தவிக்கிறார்கள், மார்க்சிஸ்டுகள். ராகுலைக் காட்டிலும் மேலும் சிறிது இடது புறம் நோக்கித் தமது அரசியலை நகர்த்தலாம் என்று அவர்கள் விரும்பினாலும், அப்படி ஒரு இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபோன்ற நாடகங்களும், அவதாரங்களும் காங்கிரசுக்குப் புதியவையல்ல. காந்தியின் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான பகத்சிங்கின் அரசியல், இளைஞர்களைப் பற்றிக் கொண்டபோது சோசலிச அவதாரம் எடுத்தார், நேரு. மொரார்ஜி உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு எதிராக ‘இடதுசாரி’ அவதாரம் எடுத்தார், இந்திராகாந்தி. 13 நாள் ஆட்சி, 13 மாத ஆட்சி என்று இரண்டு முறை பதவியை இழந்த பின்னரே எதிர்ப்பை நிறுவனப்படுத்தும் காங்கிரசின் தந்திரத்தை பாரதிய ஜனதா புரிந்து கொண்டது. அத்வானியின் தலைமையிலான சங்கப் பரிவாரத்தின் தீவிரவாதத்துக்கு எதிராக மிதவாதியாக அவதரித்தார் வாஜ்பாயி.

தனியார்மயம், தாராளமயம் என்ற முதலாளித்துவ கடுங்கோட்பாட்டுவாதத்தை அமல்படுத்துவதில் மன்மோகன் சிங் தீவிரவாதி. ராகுல் காந்தி மிதவாதி!

________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010
________________________________

படிக்க

நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் – 2

நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!-பாகம் 1

இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்களில் ஒன்றான ‘இந்தியத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry) ‘2025-இல் தமிழகம்’ -(Tamilnadu Vision 2025) என்றொரு அறிக்கையை 2008-இல் வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (Price Water Coopers) என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.

1973 முதல் அமல்படுத்தப்பட்ட ‘தீவிர சோசலிச’க் கொள்கைகள், 1990-களின் துவக்கத்தில் விதைக்கப்பட்ட தாராளமயக் கொள்கைகள் ஆகியவற்றைக் கடந்து, ஒரு புரட்சிகரமான காலக் கட்டத்தின் வாயிலில் தமிழகம் நின்று கொண்டிருப்பதாகக் கூறுகிறது, அந்த அறிக்கை. அதிவேக நகரமயமாக்கம், கல்வி, ஒப்பீட்டளவில் செயல்திறன் வாய்ந்த உள்கட்டுமானங்கள் ஆகியவையே தமிழகப் பொருளாதாரத்தின் வலிமைகள் என்று கூறும் அந்த அறிக்கை, தமிழக மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கு, படிப்படியான மெதுவான மாற்றம் என்கிற நமது கடந்த கால  அணுகுமுறை பொருத்தமற்றது என்பதை வலியுறுத்துகிறது.

அடுத்த 20 ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் மாற்றங்களின் வீச்சும், அவற்றின் வேகமும் நாம் முன்னெப்போதும் கண்டிராததாக இருக்கப் போகின்றன என்று கூறும் இந்த அறிக்கை, 2025-இல் நாம் அடைய வேண்டிய இலக்குகளைத் துறை வாரியாகப் பட்டியலிட்டுக் கூறுகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுருக்கித் தருகிறோம்.

“தற்போதைய சென்னை மாநகரத்தைச் சுற்றிலும் ஒரு மீப்பெருநகரப் பிராந்தியம் (Mega Urban Region) உருவாக்கப்பட வேண்டும். சுமார் 5000 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகவும், மரக்காணம்,அரக்கோணம், புலிகாட் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதுமாக அது அமையவேண்டும். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பெருநகரங்கள் தற்போதைய சென்னைக்கு இணையான மாநகரங்களாக மாற்றப்பட வேண்டும். தமிழகத்தின் 24 முக்கிய நகரங்களின் தரமும் உயர்த்தப்பட்டு, அவற்றுடன் தாலுகா தலைநகரங்கள் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்படவேண்டும். இந்த 24 நகரங்களும் நான்கு பெருநகரங்களுடன் ஆறு வழி மற்றும் எட்டு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்பட வேண்டும்.

சுருங்கக் கூறின், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 13 மணி நேரமாக இருக்கும் தற்போதைய பயணநேரத்தை, 7 மணி நேரமாகக் குறைக்கும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப் படவேண்டும். சைக்கிள் சக்கரத்தின் (ஸ்போக்ஸ்) கம்பிகள் அதன் மையத்துடன் (ஹப்) இணைக்கப்பட்டிருப்பதைப் போல கிராமப்புறங்களும், சிறுநகரங்களும் பெருநகரங்களுடன் இணைக்கப்படவேண்டும்.விமானப்போக்குவரத்து தற்போது உள்ளதைப் போல ஏழு மடங்கும், மின் உற்பத்தி பதினோரு மடங்கும் அதிகரிக்கப்படவேண்டும்.”

“தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product) சேவைத்துறை மற்றும் தொழில்துறையின் பங்கு  93% ஆக உயர்த்தப்படவேண்டும்.  தற்போது (2008) 50 சதவீதமாக இருக்கும் நகர்ப்புற மக்கள் தொகை, 2025 இல் 75% ஆக உயர்த்தப்படவேண்டும். 2025-ஆம் ஆண்டில் விவசாயத்தை சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25% ஆகக் குறைக்க வேண்டுமானால், நகரமயமாவதை தற்போதுள்ளதைக் காட்டிலும்  18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்.”

“2025-இல் தானியங்கி, தோல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, பிற ஆலை உற்பத்தித் தொழில்கள், கட்டுமானத்துறை, ஐ.டி. மற்றும் பிற சேவைத்துறைகளே வேலை வாய்ப்பை வழங்கும் முதன்மையான துறைகளாக இருக்கும். நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில் ஆகியவற்றை மையப்படுத்தித் தொழில்துறை வளர்க்கப்படவேண்டும். கால்நடை வளர்ப்பு, காய்-கனி-பூ ஆகியவற்றை மையப்படுத்திய தோட்டத்தொழில் போன்ற அதிகம் தண்ணீர் தேவைப்படாத உற்பத்திகளை நோக்கியும், மதிப்புக் கூட்டும் விவசாயத்தை நோக்கியும் (Value Added Agriculture)  விவசாய உற்பத்தி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நகர்ப்புறத்தில் சில்லறை வணிக நிறுவனங்கள் காணவிருக்கும் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு (அதற்குப் பொருத்தமான விதத்தில்) அரசின் விவசாயக் கொள்கை அமையவேண்டும். (இதனை ஒட்டி)  ஒப்பந்த விவசாயத்தின் நிறை-குறைகள் பற்றிய ஆவு  மேற்கொள்ளப்படவேண்டும்.”

“கல்வித்துறையைப் பொருத்தமட்டில், வெற்றி பெற்ற முதலாளிகளின் கதைகளும் அனுபவங்களும் (உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் வரலாறு) மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதுடன், தொழில் முனைவராவது குறித்த (முதலாளியாவது குறித்த) தனி பட்டப்படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தச்சுவேலை, குழா ரிப்பேர் போன்ற செயல்முறைக் கல்விக்கான பாடத்திட்டங்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் படவேண்டும். ஆண்டொன்றுக்கு 10,000 (தற்போது 3000) மருத்துவர்களை உருவாக்கும் வகையில் 120 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இதன் பொருட்டு மருத்துவப் படிப்பு மற்றும் செவிலியர் படிப்பிற்கான தனியார் கல்லூரிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.”

“தற்போது  ஒரு புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள், உரிமங்கள், தடையில்லாச் சான்றிதழ்கள் போன்றவற்றைப் பல்வேறு துறைகளிடமிருந்து பெற்று ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்குச் சராசரியாக 41 நாட்கள் ஆகின்றன. ஒரு சொத்தைப் பதிவு செய்வதற்கு 61 நாட்கள் ஆகின்றன. இவற்றை முறையே இரண்டு நாட்களாகவும், ஒரு நாளாகவும் குறைப்பதன் மூலம் அந்நிய மூலதனங்களை ஈர்க்கும் ஆசியாவின் 5 முக்கிய மையங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்ற முடியும்.”

“அரசு நிர்வாகத்தின் செயல்திறனை இவ்வாறு அதிகரிக்க வேண்டுமானால், அரசு நிர்வாகப் பணிகளில் அவுட் சோர்சிங் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளிலும், உள்கட்டுமானத் துறையிலும் தனியார் துறையுடன் கூட்டு அமைத்துக் கொண்டால் மட்டுமே இந்தக் கட்டுமானங்களை உருவாக்குவதற்கான மூலதனத்தை அரசாங்கத்தால் பெறமுடியும்” என்றும் வலியுறுத்துகிறது, அந்த அறிக்கை.

‘உலகத்தமிழர் ஒற்றுமை’யின் அவசியம் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது. தமிழ்ப் பண்பாடு மூலமாக வெளிநாட்டில் குடியேறியிருக்கும் 40 இலட்சம் தமிழர்களை ஒன்றிணைக்க ‘உலகத் தமிழ் மையம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும், இணையத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், உலகத் தமிழர்களின் சாதனைகளை அங்கீகரித்து, அவர்களைத் தமிழகத்தின் வளர்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வழங்குகின்ற பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் போன்ற பட்டங்களுக்கு இணையான ‘தமிழ் விருதுகளை’ உருவாக்கி, இத்தகைய சாதனைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை. சென்னை சங்கமம் போன்ற விழாக்களை மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் நடத்த வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை தனது செயல்திட்டமாக முன்வைக்கிறது.

‘திராவிட ஒற்றுமையை’யும் இவ்வறிக்கை விட்டு வைக்கவில்லை.  பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சென்னை ராஜதானி, தென்னிந்தியா முழுவதன் தலைநகரமாக இருந்ததையும், தென் மாநிலங்களின் வரலாறு அதனுடன் பிணைந்திருப்பதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாநில முதலாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதன் மூலம் அவர்களை ஈர்க்க வேண்டும் என்றும், கேரளத்தின் எல்லையில் இருக்கும் கோவை, கர்நாடக எல்லையில் இருக்கும் ஒசூர், ஆந்திர எல்லையில் இருக்கும் சென்னை ஆகிய நகரங்களை முக்கியமான வர்த்தக மையங்களாக உருவாக்குவதன் மூலம் தென்னிந்தியாவின் மையமாகத் தமிழகத்தை மாற்றவேண்டும் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை.

*****

நகரமயமாக்கத்திற்கும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கும் இடையிலான உறவை, அதாவது, தமிழகத்தில் நாம் காணும் நகரமயமாக்கம் என்பது தனியார்மய, தாராளமயக் கொள்கைகளுடைய அமலாக்கத்தின் விளைவே என்பதை இந்த அறிக்கையின் வாயிலாகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.  இந்த அறிக்கை முன்வைக்கும் இலக்குகளும், மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்த அது பரிந்துரைக்கும் வேகமும் சாத்தியமானவைதானா என்ற பரிசீலனையைக் காட்டிலும், இதுதான் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தரகு முதலாளி வர்க்கத்தின் உள்ளக்கிடக்கை என்பதை நாம் புரிந்து கொள்வதே முக்கியமானது.

உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள், தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தளிப்பதற்கு பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ், மெக்கின்சி போன்ற சர்வதேச ஆலோசனை நிறுவனங்களைத்தான் அமர்த்திக் கொள்கின்றன. அவர்களது ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், பின்தங்கிய நாடுகளில் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் அனைத்தும் செயல்வடிவம் பெறுகின்றன. அத்துடன் கட்டுமான மறுசீரமைப்புக் கொள்கைகளின் கீழ், இத்தகைய சர்வதேச ஆலோசனை நிறுவனங்களும், சி.ஐ.ஐ போன்ற தரகு முதலாளிகளின் சங்கங்களும் தற்போது அரசு அதிகாரத்தின் அங்கங்களாகவே மாறியிருக்கின்றன. எனவே, 2025-ஆம் ஆண்டுவரை தமிழகத்தை ஆளக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், தமிழகத்தின் செல்வழி இதுவாகத்தான் இருக்கும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் நகரமயமாக்கம் என்பது தன்னியல்பானதொரு நிகழ்ச்சிப்போக்கோ, விவசாயத்தின் வளர்ச்சியில் அரசு உரிய கவனம் செலுத்தாததன் தவிர்க்கவியலாத பின்விளைவோ அல்ல. அவ்வாறு கருதும் சில அறிஞர்கள்தான், அரசுக்கு புத்திமதி கூறி நாளேடுகளில் கட்டுரை எழுதுகிறார்கள். விவசாயத்தையும் நீர்ப்பாசனத்தையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துகின்ற அதே நேரத்தில், விவசாயத்தையும் காப்பாற்றும் வகையில் திட்டம் வகுக்க முடியும் என்ற கற்பனைகளை விதைக்கிறார்கள். மாறாக, நகரமயமாக்கமும் விவசாயத்தின் அழிவும் மறுகாலனியாக்கக் கொள்கையினால் திட்டமிட்டே முன்தள்ளப்படுபவையாகும். கிராமப்புற மக்கட்தொகையை 25% ஆகக் குறைக்கவேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 93% நகரம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தரகு முதலாளி வர்க்கம் முன்வைத்திருக்கும் இலக்குகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளுக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பைத் தேர்தலில் அறுவடை செய்வதற்காக ஓட்டுக்கட்சிகள் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் எதுவும் இந்தச் செல்வழியை மாற்றிவிடப் போவதில்லை. ஸ்ரீபெரும்புதூர் விமானநிலைய விரிவாக்கம், மதுரவாயல் சாலைத் திட்டம் போன்றவற்றுக்கு விவசாயிகளும்  குடிசைவாழ் மக்களும்  எதிர்ப்பு தெரிவிப்பதனால், அவை தொடர்பாக தி.மு.க. அரசை எதிர்த்த ஆர்ப்பாட்டங்களை அ.தி.மு.க. நடத்தியிருக்கிறது.

தி.மு.க. வும் கூட, ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துக்கு ஜெயலலிதா அரசு வழங்கிய சலுகைகளை முன்னர்  அம்பலப்படுத்தியது. ஆட்சிக்கு வந்த பின்னர் அதை விட அதிகமான சலுகைகளை ஹூண்டா, மகிந்திரா உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் தி.மு.க. அரசு வழங்கியது. தற்போது அ.தி.மு.க. காட்டி வரும் எதிர்ப்பும் அத்தகையதே.

அ.தி.மு.க., தி.மு.க. என 1990-களிலிருந்து மாறி மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் இக்கட்சிகளிடைய இருக்கும் ஒற்றுமையைத்தான் தமிழகத்தின் சாதகமான அம்சமாக தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மதிப்பிடுகின்றனர். இவ்விரு கட்சிகளில் தி.மு.க., குறிப்பாக கருணாநிதியின் குடும்பம் ஆளும் வர்க்கத்தின் அங்கமாகவே வளர்ச்சியடைந்திருப்பதால், சி.ஐ.ஐ முன்வைத்திருக்கும் இந்த அறிக்கையை, கழகம் தனது சொந்தக் கொள்கை அறிக்கையாகவே கருதும் என்பதில் ஐயமில்லை. மாறிவிட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக, ‘உலகத்தமிழின ஒற்றுமை’, ‘தமிழ்ப் பண்பாடு’, ‘திராவிட ஒற்றுமை’ போன்ற  கழகத்தின் மூல முழக்கங்களைக் கைவிடத் தேவையில்லையென்றும், புதிய உள்ளடக்கத்தைப் புகுத்துவதன் மூலம் அவற்றைப் புளி போட்டு விளக்கி மீண்டும் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் தி.மு.க.வுக்குச் சூசகமாகத் தெரிவித்திருக்கிறது, சி.ஐ.ஐ யின் இந்த அறிக்கை.

2008-இல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறும் திசையில்தான் தி.மு.க. அரசு தமிழகத்தைக் கொண்டு செல்கிறதா? ஒரு ரூபாய் அரிசியும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிடலாம். ஆனால், முதலாளிகளிடம் அப்படிச் சான்றிதழ் பெற்றுவிட முடியாது. இந்தியத் தரகுமுதலாளிகள் சங்கத்தின் தமிழகக் கிளை 2010- இல் வழங்கியுள்ள ‘சாதகமான தமிழகம்’ என்ற சான்றிதழ், 2025-ஆம் ஆண்டுக்கு அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்குகளை நோக்கித்தான் தமிழகம் துரத்தப்படுகிறது என்பதற்கு நிரூபணமாக இருக்கிறது.

(தொடரும்)

_______________________________________________

மருதையன், புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!

இரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து   ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? நினைத்துப் பார்ப்பதென்ன? நேரிலேயே பார்க்க முடியும், சென்னை, மதுரவாயில் பகுதிக்கு வந்தால்; காரணம் வேறொன்றுமில்லை, அவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் இருப்பவர்கள் என்பதுதான்.

தமிழகத்திலேயே தரங்கெட்ட பள்ளிகளைப் பட்டியலிட்டால், அதில் முதலிடம் பிடிப்பது மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியாகத்தான் இருக்கும். வகுப்பறை, கழிப்பறை, ஆசிரியர் எல்லோமே பிரச்சனைதான். பதின்வயது மாணவர்களைப் பண்பாட்டுச் சீரழிவின் உச்சகட்டத்தில் ஆழ்த்தியிருப்பதும் இங்குதான். இந்த லட்சணத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், கட்டாய நன்கொடையாக பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர். இவை எல்லாவற்றிற்கும் தலைமை தாங்கி நடத்தி வந்த “மகாத்மா” பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரும், உள்ளுர் ரவுடியுமான டி.பி. யோசுவா.

மதுரவாயல், பிள்ளையார் கோவில் பகுதியை மையமாகக் கொண்டு, சுற்றுப் பகுதிகளில் இயங்கிவரும் பு.மா.இ.மு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களையும், பகுதி மக்களையும் திரட்டி, பள்ளியை முற்றுகையிட்டு, கட்டாய நன்கொடையை ஒழித்துக்கட்டியது, மேலும் யோசுவா உள்ளிட்டோரின் சாதி அரசியலை முறியடிக்கும் விதமாக, பகுதி இளைஞகளைத் தன் கீழ் அணி திரட்டவும் தொடங்கியது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவராக இருந்து கொள்ளை அடித்து வந்த யோசுவா, வருமானமும் இல்லாமல் அரசியல் அடித்தளமும் ஆட்டம் காணத் தொடங்கியதால் எப்படியேனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், வஞ்சம் தீர்க்கவும் துடித்து கொண்டிருந்த சமயத்தில், அவனுக்கு வாய்ப்பாக அமைந்தது, கடந்த 13ஆம் தேதி பள்ளியில் நடந்த சம்பவம்

13ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வழக்கம் போல, ஆசிரியர் ஒருவர், 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை தரக்குறைவாகப் பேசி, அடித்திருக்கிறார், இந்த சம்பவம் பற்றி பள்ளியில் உள்ள பு.மா.இ.மு தோழர்களுக்கு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அசிரியரிடம் சென்று தட்டிக் கேட்டனர். அவரோ மீண்டும் தனது பாணியில்  ஏளனமாகப் பேசவே, சக மாணவர்களை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் முறையிட, அவரும் முதலில், மதிக்காமல், திட்டியிருக்கிறார். பின்னர் முறையீடு, முற்றுகையாக மாறியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரளவே தலைமை ஆசிரியர் சமாதானம் பேச இறங்கியிருக்கிறார்

மாணவர்களோ, “சம்பந்தபட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும், இனி இது போல நடக்காமலிருக்க உறுதி கூற வேண்டும்” என்று ஜனநாயக முறையில் கோரிக்கையை முன்வைத்தனர். ஆசிரியர்களின் “பாரம்பரிய உரிமையைப்” பறிக்கும் இந்த கோரிக்கையையும், மேலும் மேலும் ஒன்று சேரும் மாணவர்களையும், கண்ட, யோசுவாவின் விசுவாசிகளான சில ஆசிரியர்கள், யோசுவாவிற்கு தகவல் தந்தனர்.

தலைமையாசிரியர் முன்னிலையில், மாணவனை அடித்த ஆசிரியர் மன்னிப்பு கேட்பதாக கூறினார். பிரச்சினை முடிவுக்கு வரும் நேரத்தில், யோசுவா தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே நுழைந்து, எதுவும் பேசாமல் கண்மூடித்தனமாக குழுமியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கியது. பு.மா.இ.முவைச் சேர்ந்த ஆனந்தன், யோசுவாவிடம், “உனக்கும், இந்த பள்ளிக்கும் என்ன தொடர்பு? எந்த அடிப்படையில் எங்களை அடிக்கிறாய்?” என்று கேட்டதுதான் தாமதம், “என்னையே கேள்வி கேட்கிறாயா? நான் யார் தெரியுமா?” என வசனம் பேசிய யோசுவா, கையில் கிடைத்த கட்டை, கம்பி, செங்கல்,செருப்பு என எடுத்து வீசினான். தடுக்க வந்த தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்களுக்கும் அடிவிழுந்தது, தனது வெறி தீர அடித்த பின்பு எல்லோரையும் மிரட்டி விட்டுச் சென்றான் யோசுவா.

தகவல் அறிந்து உடனடியாகப் பள்ளிக்கு வந்த, மதுரவாயல் பகுதி பு.மா.இ.மு செயலாளர் தோழர் செந்திலிடம், தலைமையாசிரியர் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்து, தங்களையும் மீறி இச்சம்பவம் நடந்து விட்டது, இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். மேலும் பள்ளி நேரத்தில் வெளியே நின்ற மாணவர்கள், தோழர் செந்தில் சொன்னவுடன் வகுப்பறைக்கு அமைதியாக சென்றது கண்டு ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டனர்.

தலைமையாசிரியர், மாணவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். ஆனால் யோசுவாவிற்கோ, தன்னை எதிர்து ஒரு சிறுவன் கேள்வி கேட்டுவிட்டானே, என்று உறுத்தத் தொடங்கியது. தன்னை ஒரு ரவுடியாக நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட யோசுவா, தனது மகன் சாந்த குமார் தலைமையில், உள்ளூர் பொறுக்கிகள் 30 பேரை திரட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்தான்.

யோசுவாவின், அல்லக்கைகள் எல்லோருமே அவனை’அப்பா’ என்றுதான் கூப்பிடுவார்கள். ‘அப்பாவையே எதிர்த்து ஒருவன் அதுவும் ஒரு பள்ளி மாணவன் பேசிட்டானா? என்று ஆத்திரம் பொங்கியது அவர்களுக்கு.

மாலை 3 மணிக்கு பள்ளி இடைவெளியின்போது ஆனந்தனிடம் சக வகுப்பு மாணவன், வா வெளியே சென்று பேசலாம் என அழைக்க, கூடவே மணியும் உடன் சென்றார். காம்பவுண்டு சுவரை எட்டிப் பார்த்ததும், யோசுவாவின் ஆட்கள், இருவரையும் வெளியே இழுத்துக் கொண்டனர். பள்ளிக்குப் பின்புறம் உள்ள யோசுவா வீட்டருகே இழுத்துச் சென்று அடிக்கத் தொடங்கினர். பரமபிதாவின் தூதர் பெயரைக் கொண்டவனும் மாயாவதி கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவனான யோசுவா, இருபள்ளி மாணவர்களை உருட்டுக்கட்டையால் அடிபடுவதைக் கண்டு பரமானந்தம் கொண்டான். மயங்கி விழுந்தவர்களைத் தட்டியெழுப்பி , “இனிமேல் ஏதாவது பேசினால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டி, மீட்க வந்த ஆசிரியர்களுடன் அனுப்பினான்.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது யோசுவாவிற்கு பாரதூரமாகப் பொருந்தி விட்டது. 3 மணிக்கு, ஆள் வைத்து அடித்து , தன்னை ரவுடியாக நிலைநாட்டிக் கொண்டதாக நினைத்தவனின் சந்தோசத்தில் மண்ணள்ளிப்போட , பு.மா. இ.மு தோழர்கள் சற்று நேரத்தில் வந்து விட்டனர்.

தலைமை ஆசிரியர்,தனது பழைய பல்லவியை மீண்டும் பாட,தோழர்கள், இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என, அடிப்பட்டவர்களை உடனடியாக முதலுதவிக்கு அழைத்துச் சென்று , பின்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர்.

சென்னைப் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டனர் .

அன்று மாலையே பள்ளி மாணவர்கள் சுமார் நூறுபேர் , காவல் நிலையம் வந்து , தோழர்களைச் சந்தித்து, யோசுவாவை உதைக்காமல் விடக்கூடாது என வலியுறுத்தத் தொடங்கினர். பகுதி முழுவதும் பரபரப்பாகி விட , வழக்கைப் பதிவு செய்த போலிசு, பொறுக்கி யோசுவாவிற்கு பு.மா.இ.மு.வின் அரசியலைப் போதனை செய்திருக்கிறது. அதனால் உஷாரான மாநிலத்தலைவரும் , மகனும் மாயமாகிவிட்டார்கள்.

தோழர்களுக்கு யார் யாரோ போன் போட்டு , “சமாதானமாகப் போகலாம்/ வழக்கை வாபஸ் பெறுங்கள்” என்று , பேச”எதை , எப்படிச் செய்வதென எங்களுக்குத் தெரியும்” என்றார்கள் தோழர்கள். வேறு வழியின்றி , யோசுவாவின் அடியாட்கள் இரண்டுபேரை உடனடியாகக் கைது செய்தது போலிசு. பு.மா.இ.மு பற்றி யோசுவாவுக்கு தெரியுமோ இல்லையோ மதுரவாயல் போலீசுக்கு நன்றாகவே தெரியும். அடுத்து என்ன செய்யப் போகிறிர்கள்? என நச்சரிக்கத் தொடங்கினர்.

15 ம் தேதி காலையில் , பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் , பகுதி இளைஞர்களும் என 500 க்கும் மேற்பட்டோர் பு.மா.இ.மு தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு , கொலைகார ரவுடி யோசுவாவையும் , அவன் மகனையும் கைது சிறையிலடைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.

கூட்டத்தை கலைக்க வந்த அதிரடிப்படை போலீசை மதுரவாயல் போலீசார் திருப்பி அனுப்பினார். யோசுவாவை கைது செய்து, துணைக் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்திருப்பதாகக் கூறி , தோழர்களை அழைத்துச்சென்று நேரில் காட்டி , விரைவில் அவன் மகனையும் பிடித்து விடுவதாகவும் , போராட்டத்தைக் கைவிடுமாறும் கூறினர். நமக்கு போலீசை பற்றியும் தெரியும். ஆனால் மதுரவாயலில் எல்லாரையும் பயமுறுத்தி வந்த , உள்ளுர் பொறுக்கிகளால் சிங்கம் போல சித்தரிக்கப்பட்ட ஒரு ரவுடி இப்போதும் பயந்து போய் போலீசிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான். என்பது தான் முக்கியம். இப்போது யோசுவாவிற்கு வேண்டப்பட்டவர்களே, பள்ளி மாணவர்களை அடித்தது கண்டு காறித்துப்புகிறார்கள். அல்லக்கைகளே பயத்தில் கிலியாகி பதுங்கி கொண்டிருக்கிறார்கள்.

இப்போது யோசுவாவிற்கு ஆதரவாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்க போவதாய் தகவல் வந்திருக்கிறது. இதுவரை தமக்குள் அடித்துக் கொண்ட ஓட்டுப் பொறுக்கிகள், இப்போது ஒன்று சேர்கிறார்கள். அதற்கு உறுதுணையாய் நிற்கப் போவது அரசுதான் என்பது சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிராக நிற்பது வெறும் பள்ளி மாணவர்கள் அல்ல, பு.மா.இ.மு வால் புடம் போடப்பட்ட பகத்சிங்கின் வாரிசுகள்.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொண்டு உள்ளூர் அரசு நிறுவனங்கள், பள்ளிகள், ரியல் எஸ்டேட் என்று மோசடி செய்து சம்பாதிக்கும் இத்தகைய ரவுடிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த பகுதியின் எந்த பிரச்சினையும் இவர்களது கட்டப்பஞ்சாயத்தில்தான் அபராதத்துடன் தீர்க்கப்படும். சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக பெருத்து நிற்கும் இத்தகைய கழிவுகளை மக்கள் சக்தியைத் திரட்டினால் நிச்சயம் வீழ்த்த முடியும் என்பதற்கு மதுரவாயில் மாணவர்கள் பு.மா.இ.மு தலைமையில் வழிகாட்டியிருக்கின்றனர்.

__________________________________________________________
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !!

இந்து முண்ணனி குண்டர்களால் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன்
இந்து முண்ணனி ரவுடிகள் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன், மருத்துவமனையில்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விடுவோம் என கருணாநிதியால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்வேறு சாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகம விதிகள், பூஜைகள் போன்ற கோயில் விதிகளில் பயிற்சியளிக்க 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.

அப்போதே மதுரையைச் சேர்ந்த சில பார்ப்பன அர்ச்சகர்களும், பட்டர்களும் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த தம்மைத் தவிர வேறு யாரும் சிலைகளைத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்ய தகுதி இல்லையென்றும், அப்படிச் செய்வதால் சிலை தீட்டுப் பட்டுப்போகும் என்றும் மீறி அப்படிச் செய்வதால் சிலையை விட்டும் கோயிலை விட்டும் சாமி வெளியேறி விடுவார் என்றும், என்னதான் மந்திரங்களையும், ஆகம விதிகளையும் படித்து இருந்தாலும் கருவறைக்குள் நின்று சிலையைத் தொடும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் சொல்லி ஒரு தடையாணையைப் பெற்றனர்.

சமூகநீதியின் ஒரே அத்தாரிட்டி தாம் தான் என்று வெளியே சூரத்தனம் காட்டும் கருணாநிதி அரசு, பார்ப்பன அர்ச்சகர்களை வழக்குமன்றத்தில் முறியடிக்கும் உத்வேகம் இல்லாமல் வெறும் ஒப்புக்குச்சப்பாணி போல எதிர்வழக்காடி வருவகிறது.

மட்டுமல்லாமல், மேற்கண்ட பயிற்சிக் கல்லூரிகளில் படித்துத் தேறிய மாணவர்களுக்கு இன்று வரையில் பணிநியமன ஆணையை வழங்காமல் உள்ளது. கல்லூரியில் படித்துத் தேறிய மாணவர்களுக்கான சான்றிதழையும் ம.உ.பா மையம்(HRPC) தலையிட்டு மாணவர்களை சங்கமாகத் திரட்டிப் போராடிய பின் தான் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி உச்சிக்குடுமிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததை சாக்காக வைத்துக் கொண்டு தி.மு.க அரசு எல்லா பயிற்சி பாடசாலைகளையும் மூடிவிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தமிழக அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் பராசரன்தான் இப்போது தமிழக அரசை எதிர்த்து மதுரை பார்ப்பன பட்டர்களுக்காக வழக்காடுகிறார்.

இது வெறுமனே வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லையென்பதாலும், பார்ப்பனத் திமிர் உறைந்து கெட்டிப்பட்டுக் கிடக்கும் கருவறையை கழுவிச் சுத்தப்படுத்த சூத்திரர்களுக்குக் கிடத்துள்ள பொன்னான ஒரு வாய்ப்பு என்பதை அறிந்திருந்ததாலும், மாணவர்கள் சங்கம் சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தரப்பினராகச் சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இவ்வழக்கின் தன்மை என்பது வெறும் சட்டவாத சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் உள்ள வளைவு சுழிவுகளால் மட்டுமே தீர்க்கக் கூடிய ஒன்றல்ல. கொலைகார காஞ்சி ஜெயேந்திரனும், காமவெறிபிடித்த பார்ப்பன அர்ச்சகனான தேவநாதன் போன்றவர்களுக்கும் சிலைகளைத் தொட்டு பூஜைகள் செய்ய தடையேதும் இல்லாத போது, மந்திரங்களையும் பூஜாவிதிகளையும் முறையாகப் படித்தாலும் பிறப்பைக் கொண்டு இம்மாணவர்களை ஒதுக்குவதானது கருவறைத் தீண்டாமையாகும்.

இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெரியாரின் பிறந்த நாள் அன்று அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை ரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் ம.உ.பா மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பகுதி பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்
பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்

இது பற்றிய செய்தி முதலில் வினவிலும் பின்னர் விகடனிலும் விரிவாக வெளியானது. முக்கியமாக தந்தை பெரியார் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களது கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியார் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து அதை நிறைவேறப் போராடியவர் பெரியார். அவர் நாத்திகரே ஆனாலும் சூத்திர ஆத்திகர்கள் மீதுள்ள தீண்டாமையை ஒழிக்க போராடினார். அதனால் அவருக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை சூட்டியது நிச்சயமாக பொருத்தமானதுதான். இதுதான் இந்து முன்னணிக்கு பிடிக்கவில்லை.

இப்படி இந்து பார்ப்பன தீண்டாமை வெறியாட்டம் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்து முண்ணனியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அன்று இரவே அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதனையும் ம.உ.ப மையத் தோழர்களையும் மறித்து ‘ஏன் இவ்வாறு போராடுகிறீர்கள்?’ என்று கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு, ‘இப்பவே கூட்டிப் போய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை வாங்கித் தந்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்’ என்று பதில் சொல்லியுள்ளார்கள் தோழர்கள். அதில் மூக்குடைபட்டுப்போன அவர், ‘அண்ணாமலையார் கோயிலிலெல்லாம் முடியாது. வேணும்னா ஏதாவது ரோட்டோர கோயில்ல பூசாரி வேலை வாங்கித் தருவோம்’ என்று திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

‘எல்லாரும் இந்துக்கள் தான்’ என்று ஊர் ஊருக்கு சொல்லிக் கொண்டு அலையும் இராம கோபாலன் பிராண்டு சமத்துவத்தின் யோக்கியதை இதுதான். பார்ப்பனர்களுக்கு உசந்த சாமி; கீழ் சாதிக்காரர்களுக்கு ரோட்டோர சாமியாம். பார்ப்பனர்களுக்கு நன்றாக கலெக்ஷன் கட்டும் மதுரை மீனாட்சி – சூத்திரனுக்கு ரோட்டோரத்தில் அம்போவெனக்கிடக்கும் பட்டத்தரசி. இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பார்ப்பன தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தளவில் சாமியோ ஆசாமியோ எல்லாவற்றிலும் மேன்மையானவைகளை மட்டும் குடுமிக்குள் முடிந்து வைத்துக் கொள்வார்கள்.

ஊடகங்களில் விவகாரம் நாறத் துவங்கியதும் இந்து முண்ணனியின் மாவட்டச் செயலாளர் ரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பது, அக்கம் பக்கத்தில் விசாரிப்பது என்று ரங்கநாதனின் உறுதியைக் குலைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட முயல்கிறார். இது போன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்வதை அடுத்து, அக்டோபர் 15ம் தேதி ரங்கநாதனும் ம.உ.பா மையத் தோழர்களும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து ரங்கநாதனின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி மனு கொடுக்கிறார்கள்.

அவர் அந்த மனுவை டி.எஸ்.பியை விட்டு விசாரிக்கச் சொல்வதாகவும் அன்று மாலை அவரைச் சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார். அன்று மாலையே டி.எஸ்.பி அலுவலகத்திற்கு ரங்கநாதன் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடிகள், அவரை பலமாகத் தாக்குகிறார்கள். சுதாரித்துக் கொண்ட ரங்கநாதன் தன்னைத் தாக்கியவர்களை செல்போன் கேமராவில் படம் பிடித்து விடுகிறார். போட்டோ ஆதாரத்துடன் காவல் துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

முதலில் மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களின் சங்கத்தைப் பிளந்து வழக்கை நீர்த்துப் போய்விடச் செய்து விடலாம் என்று பார்ப்பனர்கள் தரப்பில் முயன்றுள்ளனர். அந்தத் திட்டங்கள் மண்ணைக் கவ்வியதால், அடுத்து சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘உனக்கு என்ன வேண்டும், ஏதாவது சின்னக் கோயிலைத் உன் பொறுப்பில் தருகிறோமே. இல்லை நீ ஏதாவது கம்ப்யூடர் படி -நாங்கள் செலவைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் பலவாறு ஆசை காட்டி அவர்கள் வழக்கை திரும்பப் பெற வைக்க முயன்றனர். அதுவும் மண்ணைக் கவ்வியது.

இப்போது பார்ப்பனர்களின் வழக்கமான உத்தியான ‘ஆனமட்டும் காலைப் பிடி ஆனபின்பு கழுத்தைப் பிடி’ என்கிற கதையாக தமிழகத்தில் பார்ப்பனர்களின் உருட்டுக் கட்டையாக விளங்கும் இந்து முண்ணனியைச் சேர்ந்த ரவுடிகளை ஏவி விட்டுள்ளனர்.

ஆனால், எத்தனை முறை எப்படியெல்லாம் ஆசை காட்டினாலும் சரி – மிரட்டினாலும் சரி – ஏன் உயிரே போவதானாலும் சரி; பார்ப்பனர்களிடம் சரணடைவதில்லை என்பதில் ரங்கநாதன் மிகத் தெளிவாய் இருக்கிறார். தொட்டால் தீட்டு என்று தெருவில் சொன்னால் அது குற்றம் என்பதற்கு சட்டம் இருக்கிறது – அதையே கருவறைக்குள் நின்று சொன்னால் சட்டம் செருப்பை வாசலிலேயே கழட்டி விட்டுவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பவ்வியமாய் நிற்கிறது. இதை எதிர்த்து தீண்டாமையின் கோட்டையாக விளங்கும் கருவறையிலேயே அதற்கு சமாதி கட்டும் தோழர்களின் போராட்ட உறுதியின் முன் பார்ப்பன இந்துமதவெறியர்களின் சதிகள் நிச்சயமாய் தோற்றுப் போகும்.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்