வினவு
டெங்கு குற்றத்தைக் கண்டித்தால் சுறுசுறுப்பாக வழக்கு போடுமாம் செயலற்ற அரசு !
தமிழகத்தில் முழுமையாக செயலற்றுப் போன அரசு போராடுபவர்களை குறிவைத்து வழக்கு போடுவது அவர்களின் போராட்டங்களை முடக்குவது ஆகியவற்றை மட்டும் செய்கிறது.
புதுச்சேரி : மேரி பிஸ்கெட் தொழிலாளிகளுக்கு பட்டினிதான் ஊதியமா ?
இந்த ஆர்ப்பாட்டம் நிர்வாகத்தின் சட்டவிரோத, சட்டத்தை மதிக்காத தன்மையை, துலக்கமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது. நிர்வாகம், திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாயை மூடி மௌனம் காத்தது.
லாரி போக்குவரத்தை ஒழிக்கும் மோடி அரசு ! நேர்காணல்
கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நாங்கள் எப்பொழுதும் சந்தித்ததேயில்லை.
பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !
இந்த சாதி - தீண்டாமை இழிவை சகித்துக் கொண்டும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் மன்றாடிக் கொண்டும் நாம் இருக்கமுடியாது. சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்த சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்த சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது.
டெங்கு மரணங்களுக்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு
தமிழகமெங்கும் பல்வேறு மருத்துவமனைகளில் மரணச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவல நிலை? காரணம் யார்?
டெங்கு மரணங்கள் : எடப்பாடி அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் !
மக்கள் ஓட்டுப்போட மட்டும் உயிரோடு இருந்தால் போதும். மற்றபடி செத்துத் தொலையட்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்தோடு, இரக்கமே இல்லாத அரசை, அதிகார வர்க்கத்தை ஒழிக்காமல் டெங்குவை ஒழிக்க முடியாது.
நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல, தமிழக மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் அபகரிப்பதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம்.
டெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு ! PRPC
தமிழக மாணவர்களும், மக்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொள்கிறது.
கருப்புப் பணத்தின் ஷா- இன் – ஷா : அமித் ஷா மற்றும் ஜெய் ஷா
கருப்புப் பணத்தை கைப்பற்றுவதாக வீரவசனம் பேசிய பாஜக கும்பல், பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பிருந்தே இதுபோன்ற டுபாக்கூர் லெட்டர்பேடு கம்பெனிகளின் மூலம், கொடுக்கல் வாங்கலில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி கொடுத்து வந்துள்ளனர் என்பது இதுவரை பார்த்த நிகழ்வுகளில் தெளிவாகத் தெரிகிறது.
மக்கள் அதிகாரம் தோழர் ராஜுவிடம் ‘செருப்படி’ பட்ட அர்ஜூன் சம்பத் !
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்று ஒரு பெரும் போராட்டம் வந்தால் ஒழிய இங்கிருக்கும் அரசு அனைத்து சாதியனரையும் அர்ச்சகராக்காது என்றார் தோழர் ராஜு.
மதுரை காமராசர் பல்கலை – தில்லு முல்லுக்களை அம்பலப்படுத்தும் மு.ராமசாமி
‘ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்’ எனும் இந்த நூல், ஒருவகையில், தவறுக்குத் துணை போகாத மு.ராமசாமி அவர்களின் விளக்கமாயும், இன்னொருவகையில், கூட்டுநர் முனைவர் முருகதாஸின் அறக்கேடான பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதுமாக அமைந்திருக்கிறது.
மோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்
கேள்விகளில் எந்த வகையிலும் பக்கச்சார்பு வெளிப்பட்டு விடக்கூடாது என்பற்காகவே விடைகளில் மோடி பக்தர்கள் தெரிவு செய்யக்கூடுமெனக் கருதி அதற்கான வாய்ப்புகளையும் வைத்திருந்தோம்.
டெங்கு : சாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியுமா ?
இதுவரை 400 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதகாவும், நாளொன்றுக்கு 10 பேர் டெங்குவால் இறப்பதாக செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது.
தமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் !
மாநிலக் கட்சிகள்ல இருக்குற கோஷ்டிகளை மோதவிட்டு தனக்கு சாதகமா வளைக்கிற தெல்லாம் பழைய காலத்து காங்கிரசு டெக்னிக்! டிடிவி ஃபார்முலா, அழகிரி ஃபார்முலா மாதிரி, நமக்கு மோடி ஃபார்முலானு புதுசா ஒண்ணுகூட இல்லையேக்கா!
நூறு இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 31 இலட்சம் கோடி ரூபாய் !
இந்தியாவின் பெரும் கடனாளியான முகேஷ் அம்பானி வங்கிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய மொத்த கடன் 1.96 இலட்சம் கோடி. 2016-ம் ஆண்டு முடிவில் சுமார் 1.5 இலட்சம் கொடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 ஆயிரம் கோடிக்கும் மேல் அதிகரித்து வந்துள்ளது.