காவிரி உரிமைக்கான நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தவிருந்த நடைபயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளது போலீசு. பத்திரிகையாளர் சந்திப்பு.

பத்திரிகைச் செய்தி

நாள் : 14.04.2018

14.04.18 முதல் வரை 29.04.2018 வரை கல்லணையில் தொடங்கி பூம்புகாரில் முடியும் வண்ணம் காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாங்கள் நடத்த இருந்த பிரச்சார நடைபயனத்துக்கு ஒருநாள் முன்னதாக 13.04.2018 அன்று இறுதி நேரத்தில் காவல் துறை தடை விதித்துள்ளது.

திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர்நடத்திய தபால் நிலைய முற்றுகை போராட்டம் (கோப்புப் படம்)

அதேபோல சென்ற மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்திய தபால் நிலைய முற்றுகை போராட்டத்தின்போது பாடிய ஒரு பாடல் பிரதமரையும் முதல்வரையும் தாக்குவதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டி நேற்று ம.க.இ.க.வின் பாடகர் கோவனை திருச்சி நகர காவல் துறை மிருகத்தனமான முறையில் கைது செய்து இழுத்துச் சென்றது.

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விட மறுக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுக்கிறது என்று சொன்னால் எடப்பாடி அரசின் அடக்குமுறை இவற்றை விட கொடியதாக இருக்கிறது. நாம் பிறந்து வளர்ந்த காவிரிக் கரை ஓரமாக நடந்து செல்வதே குற்றம் என்று அதற்கும் தடை விதிக்கின்றது இந்த அரசு.

காவிரி உரிமைக்கான தமிழக மக்களுடைய போராட்டங்களை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுகின்றது இந்த பினாமி அரசு.

காவிரி உரிமைக்கான தமிழக மக்களுடைய போராட்டங்களை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுகின்றது இந்த பினாமி அரசு. குறிப்பாக மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமே எழுந்து நின்று நடத்திய கறுப்புக் கொடி போராட்டத்திற்குப் பின் மோடி, எடப்பாடி அரசின் அடக்குமுறை வெறி அதிகரித்துள்ளது.

எமது அமைப்பினர் மீது டெல்டா மாவட்டங்களில் பல வழக்குகள் இருப்பதால் நடை பயணத்துக்கு தடை விதிப்பதாக தனது தடை உத்தரவில் காவல் துறை குறிப்பிட்டுள்ளது. அவை எல்லாம் காவிரி உரிமைக்கான போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளே அன்றி கொலை வழக்குகளோ பாலியல் வல்லுறவு வழக்குகளோ அல்லது ஊழல் வழக்குகளோ அல்ல. மேற்படி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் நடத்தப்படும் மத்திய மாநில அரசுகள் எங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பது நகைப்புக்கு உரியது.

இந்த சட்ட விரோத உத்தரவை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம். எங்களுடைய காவிரி மண்ணில் நாங்கள் நடை பயணம் செல்வதை யாரும் தடுக்க முடியாது. தடைகளை மீறி மீண்டும் நடைபயணம் செல்வோம்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க ஆட்சியில் கூட நடை பயணத்துக்கு தடை விதிக்கும் இத்தகைய அக்கிரமம் நடந்ததில்லை. இதனை முறியடிப்போம். கோவன் தொடர்ந்து பாடுவார். தொடர்ந்து போராடுவோம் – காவிரி உரிமையை மீட்கும் வரை.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றோர்:
வழக்கறிஞர் சி.ராஜூ, மக்கள் அதிகாரம்.
தோழர் கோவன், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தோழர் காளியப்பன், மக்கள் அதிகாரம்.
தோழர் வெற்றிவேல் செழியன், மக்கள் அதிகாரம்.
தோழர் கற்பகவிநாயகம், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு, தொடர்புக்கு – 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க