நண்பர்களே…

பொ. வேல்சாமி
தந்தைப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை கவிஞர் கருணானந்தம் 1979 இல் சிறப்பாக எழுதியுள்ளார். 903 பக்கங்கள் கொண்ட இந்நூலை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். இந்நூலை தரவிறக்கம் செய்து கொள்ள பெரியார் பிறந்த தினமான (17-09-18) இன்று இணைப்பைத் தந்துள்ளேன்.

 

கோப்பை தரவிறக்க இங்கே சொடுக்கி, Free Download பட்டனை அழுத்தவும் : தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு

1926 இல் நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கும் பட்டியலைப் பாருங்கள்
– தந்தைப் பெரியார்.

நண்பர்களே….

“ஓட்டு”க்கு ரூபாய் நோட்டை மக்கள் மானமற்று வாங்குவது நேற்றைக்கு இன்றைக்கும் நடந்ததாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் 1926 ஆண்டு குடியரசு இதழ் தொகுதி 3, பக்.322 இல் சித்திரகுப்தன் என்ற பெயரில் பெரியார் கொடுத்துள்ள தகவல்கள் நம் புருவத்தை உயர்த்தவைக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் அன்றைய காங்கிரஸ் கட்சிகாரர்கள் இந்த தொகைகளை ஓட்டுக்காக வழங்கியுள்ளார்கள். இந்த தகவல்கள் காந்திக்கும் தெரியும்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்