மீப காலமாக நாடு முழுவதும் தண்ணீரை ஏ.டி.எம் மூலம் விற்க முயற்சிக்கும்  வேலையும், மேலும் மழை நீரைகூட சேமிக்க தடை வரும் சூழலும் நெருங்கி வருகிற நேரத்தில், தற்போது அதற்கான திட்டத்தை மறைமுகமாக  நிறைவேற்ற வருகின்றன கார்ப்பரேட் கம்பெனிகள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூரில் இயங்கி வருகிறது அசோக் லேலண்டு கம்பெனி. இது பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் போன்ற மலை கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அசோக் லேலண்டு கம்பெனி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் கொடுத்து சேவை போல் செய்து வந்தது. இதனை அமல்படுத்தியதன் மூலம் மக்களின் நலனுக்காக தான் இருப்பதாக காட்டிக்கொண்டது அசோக் லேலண்டு. ஆனால் தான் ஒரு பசு தோல் போர்த்திய புலிதான் என்பதை தற்போது வெளிப்படுத்தி அம்பலபட்டு போனது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ”பள்ளிக்கான பாதை” என்ற சேவையை அறிமுகப்படுத்தும் அசோக் லேலண்ட் அதிகாரிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைக் கிராமங்கள் அதிகமாக நிறைந்த பகுதி, தேன்கனி கோட்டை வட்டத்தை சார்ந்த மலை கிராமங்களாகும். இங்கு மழை காலங்களில் சிறப்பாக விவசாயம் நடக்கும், குறைந்த அளவு தண்ணீர் இருந்தால்கூட காய்கறிகள் விளைவிக்கப்பட்டு நாடு முழுவதும் சென்றடைகிறது. எப்போதும் செல்வ செழிப்பாக இருக்கும் இந்த மலைப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறுஞ்ச முயற்சித்து வருகிறது அசோக் லேலண்டு. அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மலை கிராமங்களுக்கு புளோரைடு இல்லாமல் நீரை உறுஞ்சி சுத்திகரிப்பு நீரை வழங்குகிறோம் என்று கிராமங்களில் ஆள் பிடித்தனர். இதற்காக ரூ. 250 பெற்று உறுப்பினர் கூட சேர்த்துள்ளனர்.

அதன்பிறகு நாட்றாம்பாளையம் பகுதியில் இது குறித்து கடந்த 13/10/2018 அன்று அனைத்து கிராம மக்களையும் இனைத்து ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட உள்ளூர் புரோக்கர்களை கொண்டு சுமார் 100 பேரை திரட்டி கூட்டம் தொடங்கியது. இதில் டெல்லியில் இருந்து  அசோக் லேலண்டு கம்பெனி மூலமாக ஒரு பெண் அவருடன் 4 ஆண்கள் என சொகுசு காரில் வந்திறங்கினர். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் போல் காட்டிக்கொண்டனர். ஆனால் அவர்கள் விளக்கிய பிறகே அசோக் லேலண்டு கம்பெனியின் அயோக்கியத்தனம் வெளிப்பட்டது.

படிக்க:
அசோக் லேலாண்டு என்பது நவீன நரகம்
அசோக் லேலாண்டில் தோழர். பரசுராமன் பணி இடைநீக்கம் !

உங்கள் கிராமம் மூலம் 5 ஏக்கர் நிலம் கொடுங்கள் நாங்கள் கம்பெனி சார்பாக நிலத்தடி நீரை எடுத்து புளோரைடு இல்லாமல் தண்ணீர் கொடுக்கிறோம் என்றனர். இதனால் முதலில் மகிழ்ச்சியோடு வரவேற்றனர் மக்கள். அடுத்த கணமே இந்த சுத்தமான தண்ணீரை நீங்கள் பெற ஒவ்வொரு கிராமத்திற்கும் ஏ.டி.எம். வைக்கிறோம். அதில் நீங்கள் லிட்டர் 20 பைசா வீதம் காசு கொடுத்து பிடிக்க வேண்டும். முறையாக தண்ணீரை நாங்கள் வழங்குகிறோம் என்றவுடன் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ”சுத்தமான தண்ணீர் வேண்டுமானால் காசு கொடுத்துதானே ஆக வேண்டும்” என்றனர்.

இந்த கூட்டத்தில் பங்குபெற்ற மக்கள் அதிகாரம் தோழர்கள், நாங்கள் நிலம் தரவேண்டும், நீங்கள் எங்களுக்கு குடிநீரை காசுக்கு விற்பனை செய்வீர்களா? என்று கேட்டதற்கு ”சுத்தமான நீர் கொடுப்பது நல்லதுதானே” என்றனர். ”தண்ணீரை விற்பது எப்படி நல்லதாகும்?. தண்ணீரை காசுக்கு விற்று கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூட்டத்தில் அம்பலப்படுத்தி பேசினர்.

அடிக்கும் கொள்ளையை மறைக்க சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் மூலம் மக்களுக்கு உதவுவது போன்று மக்களைக் கொள்ளையடிக்க படையெடுக்கும் கார்ப்பரேட்டுகள் .

கோவையில் வெளிநாட்டு கம்பெனிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய அனுமதி கொடுத்தது போல் மலை கிராம நீரை உறுஞ்சி கொள்ளையடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்பதை அம்பலப்படுத்தியவுடன், உங்களுக்கு வேண்டாம் என்றால் விடுங்கள் மற்றவர்கள் கருத்து சொல்லுங்கள் என நைச்சியமாக அணுகினர். ”சேவை என்றால் இலவசமாகத்தான் செய்ய வேண்டும் ஏன் காசுக்கு விற்பனை செய்யறீங்க? அப்ப உங்க நோக்கம் என்னவென்று விளக்குங்கள்” என்றவுடன் திருதிருவென அங்குமிங்கும் பார்த்தனர்.

”தண்ணீரை காசுக்கு ஏன் விற்க வேண்டும்? என்பது தொடர்பான எந்த கேள்விக்கும் பதிலே வரவில்லை. உங்களை ஊருக்குள் அனுமதித்ததே தவறு உடனே வெளியேறுங்கள் இல்லையெனில் பிரச்சினை பெரியதாகும் என்று எச்சரித்தவுடன் கூட்டத்தை கலைத்து விட்டு ஓட்டம் பிடித்தனர். ”மக்களுக்கு சுகாதாரமான குடிநீர்” என்ற ஆசை வார்த்தை கூறி நமது வளங்களை கொள்ளையடித்து நமது நீரை உறிஞ்சி நாடு முழுவதும் விற்று கொள்ளையடிப்பதற்கான முயற்சி இது என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அசோக் லேலண்டு போன்ற நிறுவனங்கள் தனது ஆலையில் பணியாற்றும் ஆலைத் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைக் காக்க சங்கம் அமைத்ததற்காக தொழிலாளர்களை பழிவாங்கியிருக்கின்றன; வேலையை விட்டுத் துரத்தியிருக்கின்றன. இவ்வாறு, ஆலைத் தொழிலாளர்களிடமிருந்து சுரண்டி சேர்த்த பணத்திலிருந்து சிறு தொகையை ”கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) ” என்ற பெயரில் ‘சமூக சேவை’ யாற்றுவதாகக் கணக்குக் காட்டி மக்களைச் சுரண்டுகின்றன. கொள்ளையடிக்கும் பணத்திலிருந்து அற்பக் காசை போட்டு ‘சேவை’  என்ற பெயரில் அதை மற்றுமோர் முதலீடாகத்தான் பார்க்கின்றன என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

தருமபுரி மண்டலம்,
தொடர்புக்கு : 80565 00891.

2 மறுமொழிகள்

  1. //ஆனால் தான் ஒரு பசு தோல் போர்த்திய புலிதான்…//

    புலியோடு இவர்களை ஒப்பிட்டு புளியை அசிங்க படுத்த வேண்டாம் , பசுத்தோல் போர்த்திய நரி இல்லை ஓநாய் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. மக்கள் அதிகாரம் தோழர்கள் பணி சிறப்பானது , தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள் …

  2. //புலியோடு இவர்களை ஒப்பிட்டு புளியை…//

    சிறு தட்டச்சு பிழை, புலியை என் புரிந்து கொள்ளவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க