மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் தங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகின்றனர்.

உருக்குலைந்த வீடுகளையும், சரிந்து விழுந்த மரங்களையும் அப்புறப்படுத்தும் பணியை பிரதானமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அனுப்பிவைக்கப்படும் நிவாரணப் பொருட்களை சேகரித்து, மக்களின் தேவையறிந்து சீராக விநியோகித்து வருகின்றனர்.

சீரமைப்புப் பணி

வேதாரண்யம் பகுதியில் சேதமடைந்த வீடுகளையும் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் தோழர்கள்.

வேதாரண்யம், ஆயற்குளம் கைகாட்டி பகுதியில் சீரமைப்புப் பணியில் ஈடுபடும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள்.

This slideshow requires JavaScript.

மீட்புப் பணியில் மாணவர்கள், இளைஞர்கள் களமிறங்குவோம்!
தேர்வுகளை தள்ளிவை! பு.மா.இ.மு. கோரிக்கை!!

நிவாரணப் பொருட்கள் விநியோகம்

சேகரித்த பொருட்களை தேவைக்கேற்ப கொடுப்பதற்காக வகை பிரிக்கும் பணியில் தோழர்கள்.

பட்டுக்கோட்டை வட்டார கிராமங்களில் விநியோகம்.

நிவாரண பொருட்கள் சேகரிப்பு

திருச்சியில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு
விருத்தாசலம்

மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் சார்பாக அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள்.

சுல்தான் பாய் அன்பாய் கொடுத்த 140 பாய்கள்

ஞ்சையில் கஜா புயலால் துயறுரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். நேற்று இரவு வேதாரண்யத்திலிருந்து தோழர் தனியரசு, உடனடியாக மக்கள் படுக்க கோரைப்பாய்கள் வேண்டுமெனக் கேட்டார். எனவே பாய் மொத்த வியாபாரம் செய்யும் சுல்தான் பாயை அணுகினோம்.

இவர் முன்னரே மிகச்சிறிய குறையுள்ள 40 புதிய பிளாஸ்டிக் பாய்களை இலவசமாகவே கொடுத்திருந்தார். ஒரு பாய் ரூ.100 என முடிவாயிற்று. எவ்வளவு தேவையெனக்கேட்டார். “தேவை நிறைய, ஆனால் இப்போது எங்களிடம் இருக்கும் பணத்திற்கேற்ப பாய்களைக் கொடுங்கள்” என தோழர் காளியப்பன் கூறிவிட்டு உதவிகள் கோரியும் நிவாரணப் பணிகள் குறித்தும், தொடர்ந்து பலருடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

படிக்க:
கஜா : ஆமை வேகத்தில் நிவாரணப் பணிகள் !
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

இதை கவனித்துக்கொண்டிருந்த சுல்தான்பாய் தோழர் காளியப்பனிடம் வந்து 100 பாய்களை இலவசமாகவே தந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டு பாய்கட்டுகளை வெளியே எடுத்துவைத்துவிட்டு அதற்கு விளக்கம் சொன்னார்.

“வங்கியொன்றில் எனது மகளுக்காக பணம் சேமித்தேன். அதற்கு வட்டியாக ரூ. 10000 சேர்ந்திருக்கிறது. நாங்கள் வட்டி வாங்கமாட்டோம். அதனால் வங்கிக்கணக்கில் சேரும் வட்டியை பொதுக்காரியங்களுக்குச் செலவிடுவோமேயன்றி சொந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தமாட்டோம்” எனக் கூறிவிட்டு ”கஜா புயலுக்கு உதவியதாகக் கணக்கெழுதிக்கொள்ளட்டுமா?” என மிகுந்த தயக்கத்துடன் கேட்டார்.

“உண்மையைத்தானே எழுதப்போகிறீர்கள், அதற்கென்ன தயக்கம்?” எனச் சொல்லிவிட்டு நன்றியுடன் விடைபெற்றோம்.

உதவ விரும்புவோர் எமது தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம், சென்னை – 9176 801656
மக்கள் அதிகாரம், திருவாரூர் – 9962 366321, 9626 352829
பு.மா.இ.மு., வேதாரண்யம் – 6383 461270
தகவல்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க