புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டத்திற்கு கேட்கப்பட்டிருந்த அனுமதியை திடீரென ரத்து செய்தது அரசு. எனினும் திட்டமிட்டபடி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் திருச்சி மண்டலம் சார்பாக ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் இன்று (13.12.18) காலை 11.15 மணியளவில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கொடி, பேனர், பதாகைகளை உயர்த்திக் கொண்டு முழக்கமிட்டு ஊர்வலமாக வந்து ஆர்பாட்டம் செய்தோம். இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் மற்றும் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னதுரை மற்றும் ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டது.

சிறது நேரம் கூட பேசவிடாமல் போலிசு மைக்கை பிடிங்கியது. அதைத் தொடர்ந்து தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தோழர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போலிசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.

புயல் பாதித்த மக்களை பாதுகாக்காத அரசு, அவர்களின் கோரிக்கையை கூட பேசக் கூடாது என தடுக்கிறது. நம்மை தடுக்கும் இந்த அரசுதான் கார்ப்பரேட்டுக்கு வளத்தை கொள்ளையடிக்க கொடுக்கிறது. தோற்றுப்போன இந்த அரசு அமைப்பை வீழ்த்தாமல் நாம் இயற்கை பேரிடர்களை எதிர் கொள்வது எப்படி?

தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம்.
9445475157.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க