கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் திருச்சி மாநாட்டு அறைகூவலை விளக்கும் விதமாக கடந்த 08.04.2019 அன்று லால்குடியில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

தலைமையுரையாற்றிய தோழர் செழியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பேசுகையில்; “கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை வாழவிடாமல் மக்கள் மீது கொடுரமான முறையில் தாக்குதலை நடத்துகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசு நடத்திய படுகொலை, நாடு முழுவதும் RSS – BJP-யின் தாக்குதலை முறியடிக்க நாம் ஒண்றிணைய வேண்டும். தேர்தலில் ஓட்டு போடுவது மூலம் இதற்கு  தீர்வுகாண முடியாது. மக்களை திரட்டி போராடி வீழ்த்த வேண்டும்…” என்று தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ஞா. ராஜா, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  பேசுகையில்; “பிராச்சாரத்தின் போது கிடைத்த மக்களின் பாதிப்புகளை, அனுபவங்களை தொகுத்து கூறினார். சிறுவணிகர்கள் GST -யின் பாதிப்புகளையும், மாதம் மாத கணக்கு வழக்கு முடிக்க ஏற்படும் சிரமங்களை எடுத்து விளக்கினார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவசாய மக்களின் கடுகு டப்பா சேமிப்பையும் பறித்துவிட்டது, விவசாயத்தை அழிவு நிலைக்கு கொண்டு சென்று விட்டார். பல இடங்களில் மக்கள் இந்த மோடி ஆட்சி ஒழிய வேண்டும்.” என மக்களின் உணர்வுகளை கோவமாக எடுத்துரைத்தார்.

அதன் பின் செம்பரை மக்கள் அதிகாரம் தோழர்  மணியரசு பேசுகையில்; “மக்கள் அதிகாரம் தொண்டர்கள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றுகின்றனர்.எங்கள் பகுதியில் வாய்க்கல் தூர்வாரியது, ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்து போராடியது. மேலும் விவசாயிகளுக்கு பக்க பலமாக உள்ள ஒரே அமைப்பு என்று கூறினார். மக்கள் அதிகாரம் தேர்தல் இயக்கம் அல்ல, அது மக்களுக்கானது இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்

அவரைத் தொடர்ந்து வி.சி.க லால்குடி சட்டமன்ற ஒன்றிய செயலாளர் தோழர் மரிய கமல் அவரது உரையில்; “மோடி அரசு மக்களை சாதிரீதியாகவும், இனரீதியாகவும், மொழிரீதியாகவும் நம்மை பிரித்து ஆளுகிறது. இதனை முறியடிக்க மக்களிடம் நாம் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். பணமதிப்பு நீக்கம்  நள்ளிரவில் யாரையும் கேட்காமல் சர்வாதிகாரமாக செயல்படுத்துகிறார். இதுவே அவரது பாசிச நடவடிக்கைக்கு சான்று. மீண்டும் நாம் ஒரு சுதந்திர போரை தொடங்க நேரம் வந்துவிட்டது” என்றார்.

அதன் பின் பேசிய திராவிடர் கழகம் தலைமை நிலைய சொற்பொழிவாளர் புவாளூர்  தோழர் பூவை புலிகேசி தனது உரையில்; “நமது மக்களின் மூளையில் RSS சித்தாந்தம் புகுத்தப்பட்டுள்ளது. பரிவார சிந்தனைகளை நாம் மக்கள் மூளைகளில் இருந்து நாம் அகற்ற வேண்டும். மோடி ஒருகால் தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் நாம் தேர்தலில் பங்கேற்கவே முடியாது. நீட்-குலக்கல்வி முறை கொண்டு வந்து திணிக்கிறார்கள்.இதனை முறியடிக்க இணைந்து பணியாற்றுவோம்” என்று எழுச்சி உரையாற்றினார்.

அதன் பின் CPI மாநில குழு உறுப்பினர் தோழர் அயிலை சிவசூரியன் அவரது உரையில்; “RSS கொள்கையை அமுல்படுத்துவதற்கும், கார்ப்பரேட் நலனை தூக்கி பிடிப்பதே இந்த பாசிச கோமாளியின் ஆட்சி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய வருமானம் இரட்டிப்பு, கட்டுபடியான விலை, வறட்சியை தடுப்போம் என்று அறிவித்தார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

மாறாக காவிரியில் துரோகம், விவசாயிகள் தற்கொலை விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை” என்று விவசாயிகளின் அவலங்களை எடுத்துரைத்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்  சி.ராஜூ தனது உரையில்;

“நாடு முழுக்க தேர்தலில் ஓட்டு போடுங்கள் என்று பிராச்சாரம் செய்கின்றனர். ஒரு விரல் புரட்சி செய்தால் பெட்ரோல் விலை, கல்விகட்டனம் குறைந்து விடுமா? என்ன மாற்றம் நடந்துவிடும் என்று என்னை ஓட்டு போடச் சொல்கிறாய். திறந்த வெளி சிறைசாலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எந்தவித உத்திரவாதமற்ற வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். நம்மை ஓட்டு போடு என்று சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நமது பிரச்சனையை இந்த அரசு தீர்க்காது, இந்த கட்டமைப்புக்குள் பாலியல் பிரச்சனை, வேலையின்மை, ஸ்டெர்லைட் ஆலை, ஹட்ரோகார்பன், மீத்தேன் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது. இவ்வனைத்து பிரச்சனையையும் அரசே முன்னின்று செய்கிறது. மாற்று அமைப்பு முறையை உறுவாக்குவதே தீர்வு” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அதன் பின்னர் ம.க.இ.க  கலைக் குழு தோழர்கள்  எழுச்சிகரமான புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்தினர். கூட்டத்தின் இறுதியில் அரசியல் ஆர்வலர்கள், பல்வேறு இயக்கத் தோழர்கள் நிகழ்ச்சியை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். விவசாய மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டும் இந்த நிகழ்வு அமைந்தது. இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் திருநாவுக்கரசு நன்றி உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


மக்கள் அதிகாரம்,
திருச்சி,
தொடர்புக்கு: 94454 75157.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் – கோவன் பாடல்

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க