திருச்சி லால்குடி சந்தைப்பேட்டை பகுதி பெண்களிடம் அடாவடித்தனமாக நுண் கடன் வசூல் செய்யும் பந்தன், கூபா, ஆசீர்வாதம்,  சங்கமம், ஐடிஎப்சி  நிறுவன ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும்; புகார் கொடுக்க சென்ற பெண்கள் மற்றும் பொதுநல அமைப்பினரை ஒருமையில் பேசிய, திருச்சி லால்குடி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் 24.07.2020 அன்று காலை லால்குடி பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் பெண்கள் இக்கோரிக்கை அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம், ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி, அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, போன்ற அமைப்பின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் சென்று பெண்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டும்போது உடனிருந்தனர். இதை அந்த பகுதி மக்களிடம் ஒரு பிரச்சாரமாக செய்ய முற்பட்டபோது லால்குடி காவல் ஆய்வாளர் அழகிரி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் “நீங்கள் சட்டவிரோதமாக கூடி உள்ளீர்கள், பத்து பேர் சேர்ந்து அடாவடி செய்கின்றீர்கள்.. உங்களை நான் கைது செய்கிறேன்.” என கூறினார்.

பெண்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் நாங்கள் கொடுத்த புகார் மனுவை ஏற்று நிறுவன ஊழியர்களை கைதுசெய்யவில்லை, தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு கலெக்டர் உத்தரவை அமல்படுத்தாமல் அடாவடி செய்யும் நுண்கடன், சுய உதவி குழு நிறுவன ஊழியர்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு கேள்வி கேட்ட பெண்களையும், பொதுநல அமைப்பினரையும் ஒருமையில் பேசுவது என அவர் தான் அடாவடியாக நடந்து கொண்டார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவர் மீது நடவடிக்கை இல்லை, ஆனால் எங்களுடைய கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த பிரச்சனைக்கு நாங்கள் போஸ்டர் ஒட்டுகிறோம். நாங்கள் கொடுத்த புகாருக்கு போலீசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என பேசினர். ஆனால் காவல்துறை சட்டரிதியாக நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என நம்மிடம் திருப்பி பேசியது. புகார் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையே நான் ஒன்றும் செய்ய முடியாது ‘சட்டத்தின் படி’ பார்த்துக் கொள்ளுங்கள் என திமிராக பேசியது. அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் போராடக் கூடிய அமைப்பினர் ஆகியோரை மிரட்டும் தொனியில் போலிசு பேசியது.

இதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் அமைப்பினர் போலிசாரை கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் பொதுநல அமைப்பினர் இந்த விவகாரத்தை சுற்றியிருந்த கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் விளக்கி பேசத்துவங்கினர். இதை பார்த்து பயந்து பின்வாங்கியது போலிசு.

படிக்க:
முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை
நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

பின்னர் மீண்டும் சுவரொட்டி ஒட்டும் போராட்டத்தை பெண்கள், பொதுநல அமைப்பினர் தொடங்கினர். லால்குடி ரவுண்டானா, கடைவீதி, தாசில்தார் அலுவலக வாயில் நீதிமன்றம் என பல இடங்களில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

போஸ்டரை படித்த மக்கள் : “இவங்களோட(நுண்கட நிறுவனங்கள்) தொல்ல தாங்க முடியல, நம்ம கிட்ட பணம் இருக்கிற மாதிரி கடனை கேட்டு டார்ச்சர் பண்றாங்க…” எனவும். “நெருக்கடி தரும் நபர்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.” எனவும் அப்பகுதி பெண்கள் கடைவீதியில் அவேசப்பட்டனர். சுவரொட்டியை படித்த  பலரும் இது அநியாயம் என்று அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்டித்தனர். லால்குடி தாசில்தார் போஸ்டர் ஓட்டுவதை நின்று கவனித்து படித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார்.

இந்நிகழ்ச்சி லால்குடி பகுதி கடைவீதியில் உள்ள வியாபாரிகளுக்கும் அங்கு வந்த பெண்கள் மத்தியிலும், இப்படிப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்தால் மட்டுமே பிரச்சினைக்கு வழி பிறக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்கள் எங்கள் தெருவிற்கு குழு வசூல் செய்யும் நபர்கள் வந்தால் நாங்கள் அவர்களை விரட்டி அடிப்போம் என்ற உறுதியுடனும் சென்றனர்.

போராடிய பெண்கள் மற்றும் அமைப்புக்கள், காவல்துறை நடவடிக்கை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கையை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு நடவடிக்கைக்கு  போராடுவது என ஆயத்தமாகி வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க