விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2017 – 18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு அரசு அறிவித்த லேப்டாப் இன்னும் வழங்கப்படவில்லை. நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டு ஆகியும் லேப்டாப் வழங்கப்படவில்லை.

இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, “உடனே லேப்டாப் வழங்கு !” என்ற கோரிக்கையை முன்வைத்து 200 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு. அதன் பின் மனு அளிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்காக மாணவர்கள் கூடியிருந்த நிலையில், விழுப்புரம் நகர போலீசு மீகவும் கீழ்தரமாக செயல்பட்டது. மாணவர்களின் கோரிக்கை என்ன என்று கூட தயாராக இல்லாத போலீசு; மாணவர்கள் வந்திருந்த வாகனங்களைத் தேடித் தேடி பஞ்சர் செய்துள்ளது.

அது மட்டுமல்லாது மாணவர் சரவணன் மற்றும் இன்னும் இரண்டு மாணவர்களை தாக்கவும் செய்துள்ளது. சட்டத்தின் காவலாளிகள் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் போலிசு சட்ட விரோதமாக ரவுடி கும்பல் போல் செயல்படுகிறது. விழுப்புரம் நகர ‘காவல்துறை’-யின் இத்தகைய செயல்பாடுகளை பு.மா.இ.மு வன்மையாக் கண்டிக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம், தொடர்புக்கு : 91593 51158.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க