சேலத்தில் எட்டு வழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :
எடப்பாடி பழனிச்சாமி கடந்த வியாழனன்று, மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் எட்டுவழிச்சாலை ஒரு அபிவிருத்தி திட்டம் என்றும், மேலும் நிலங்களை கையகப்படுத்துவதற்காக மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதைக் கண்டித்து விவசாயிகள் சேலத்தில் பாரப்பட்டி மற்றும் புலாவரியில் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினர்.
பலகட்டப் போராட்டத்திற்குப் பிறகும், இந்த அரசு எங்கள் குறைகளை கேட்க தயாராக இல்லை, இது ஒரு மேம்பாட்டுத் திட்டம் இல்லை, இத்திட்டத்தால் நீர்நிலைகள், உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். மேலும் தேர்தலில் மத்திய அரசு தமிழகப் பாராளுமன்ற தொகுதிகளில் தோற்றுப் போனதால் , விவசாயிகளை பழிவாங்குவதைப் போல உணர்வதாகவும் கூறுகிறார்கள்.
♦ ♦ ♦
புதுச்சேரியில் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :
விவசாயிகள் சார்பில் ஜுலை 9-ம் தேதியன்று பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
போராடிய விவசாயிகள், இத்திட்டம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்தத் திட்டம் என்றும், வளமான நிலங்களை அழிக்க வந்த இந்தத் திட்டம், சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்றும் இந்த திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஒரு போதும் சீர் செய்ய முடியாது என்றும் கூறுகின்றனர்.
♦ ♦ ♦
கோபிசெட்டிபாளையத்தில் கொடிவேரி ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டம் தொடங்கும் பகுதிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :
கொடிவேரி அணைக்கட்டின் நீர் பரவல் பகுதியின் வளையத்தில் உள்ள கிணற்றிலிருந்து, பெருந்துறை மற்றும் ஊத்துக்குளிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய பாசன நீர்வரத்துக்கு பங்கம் ஏற்படும்; இந்த திட்டம் தற்போது செயல்படுத்தும் பகுதியிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு விவசாயிகள் திரண்டனர். இதற்காக கோபிச்செட்டிப் பாளையத்தில் கடைகளும் அடைக்கப்பட்டன.
படிக்க:
♦ மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
♦ ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019
♦ ♦ ♦
கர்நாடக – ஹாசன் மாவட்ட விவசாயிகள் போராட்டம் :
கர்நாடக ஹாசன் மாவட்ட விவசாயிகள் நீர்ப்பாசனத் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், விவசாய கடன்களிலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
ஹேமாவதி சிலையிலிருந்து அவர்கள் ஊர்வலமாக துணை ஆட்சியர் அலுவலகம் வரை சென்றனர். வறட்சியின் காரணமாக உருளை, மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கப் போவதில்லை என்றும், நீர்ப்பாசனத் திட்டங்களை உரிய காலத்தில் அரசு முடிக்க தவறிவிட்டது என்றும் அவர்கள் போராடினர்.
♦ ♦ ♦
கர்நாடக மைசூரு விவசாயிகள் போராட்டம் :
மைசூரு துணை ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாநில விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தங்கள் கோரிக்கை மனு அளிப்பிற்குப் பிறகு போரட்டம் நடத்தப்பட்டது.
அதில் அவர்கள் வறட்சியின் காரணமாக கரும்புகளை உடனே சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்ய வழி வகுக்க வேண்டும் என்றும்; விவசாயிகள் தங்கள் நிலங்களை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவது விவசாயிகளுக்கு அதிக அலைச்சல் தருவதாகவும், பணச் செலவு அதிகரிப்பதாகவும் உள்ளது. இதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடிய விவசாயிகள் கூறுகின்றனர்.
♦ ♦ ♦
சிவகரியில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :
திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காக தங்களுடைய நிலங்கள் கையகப்படுத்துவதற்காக எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஜுலை 5-ம் தேதி சிவகிரி தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அதிலிருந்து விவசாயிகள் வெளியேறி போராட்டத்தில் பங்கேற்றனர்.
♦ ♦ ♦
ஒடிசா பால் விவசாயிகள் இரண்டாயிரம் லிட்டர் பாலை வீதியில் கொட்டி போராட்டம் :
ஒடிசா அரசு நிறுவனமான ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் பால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த பாலை கலப்படம் என்று கூறி நிராகரித்ததால் தங்களுடைய இரண்டாயிரம் லிட்டர் பாலை விவசாயிகள் வீதிகளில் கொட்டி போராடினர்.
தாங்கள் தினந்தோறும் கொண்டுவரும் பாலுக்கு எந்த ஒரு தரக் கட்டுப்பாடும் இல்லாத போதும், அதை தரக் கட்டுப்பாடு என்று வேண்டுமென்றே கூட்டமைப்பு நிராகரிப்பதாகவும், தங்களுடைய பாலை வீதியில் கொட்டுவதற்கு அது நிர்ப்பந்திப்பதாகவும் கூறுகிறார்கள்.
செய்தி ஆதாரங்கள்:
♦ Anti-green corridor farmers stage protest in Salem-The Hindu 13,2019
♦ Farmers protest against hydrocarbon project-The Hindu July 10,2019
♦ Farmers condemn resumption of water scheme works- The Hindu July 13, 2019
♦ Raitha sangha for quick completion of projects- July 09, The Hindu
♦ DC to hold meet to discuss farmers’ issues on July 15 –The Hindu July 10 2019
♦ Farmers stage protest ag ainst land acquisition- The Hindu July 08,2019
♦ Odisha dairy farmers spill milk on streets after state cooperative cites ‘adulteration- Hindustan times July 13 -2019
Where is Mr.IYYAKANNU(Nirvana Vivasaee),
Is he the pocket of Mastan MODI