பாஜக-வில் இணையுங்கள், ‘ஒரு மிஸ்டுகால்’ கொடுங்கள் என தொலைக்காட்சி, வானொலி என எங்கு பார்த்தாலும் தற்போது பாஜக-விற்கு ஆள் சேர்க்கும் படலம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியிலும் ஆள் சேர்க்க முயன்று வருகிறது காவிக் கும்பல்.

அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி.-யை எதிர்த்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 01.08.2019 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படிக்க:
♦ பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
♦ உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

இதில் பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமை பறிக்கும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணுக்கழிவு, எட்டு வழிச்சாலை போன்ற அபாயகரமான திட்டத்தைக் கொண்டு வரக்கூடிய பிஜேபியை கேள்வி எழுப்புவோம் ! தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மாணவர் அமைப்பினரின் இந்தப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர்களை நின்று கவனித்துக் கேட்கச் செய்தது.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி.
கடலூர், தொடர்புக்கு : 97888 08110.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க