‘தமிழகத்தை நாசமாக்காதே’ என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 6, 2019 அன்று உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில், மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இப்பொதுக்கூட்டதிற்கு மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார்.

♦ திரு. மூவேந்திரன், உசிலை தி.மு.கழகப் பேச்சாளர்
♦ தோழர் வழக்கறிஞர் ராஜன், உசிலை சி.பி.எம்
♦ திரு. தென்னரசு, (வி.சி.க, விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணை செயலாளர்)
♦ திரு. பச்சைச்துண்டு பெருமாள், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம்
♦ தோழர்.சினேகா, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மதுரை
♦ தோழர்.ஆசை, ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், உசிலை

– ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இக்கூட்டத்தில் தமிழகத்தை நாசமாக்கிவரும் அழிவுத் திட்டங்களான ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, 8 வழிச்சாலை மற்றும் நியூட்ரினோ திட்டங்களைப் பற்றியும், புதிய கல்விக் கொள்கை 2019 பற்றியும் அவற்றால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் விளக்கிப் பேசப்பட்டது.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

படிக்க:
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
♦ டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

இக்கூட்டத்தில், சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே காவி பாசிஸ்டுகள் திட்டமிட்டு நாசகர திட்டங்களை அமல்படுத்தி வருவதையும், காஷ்மீரின் மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பின் காரணமும் கார்ப்பரேட் நலனுக்கானதே என்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும், ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பும் நிலைகுலைந்துள்ளதை சுட்டிக்காட்டி, இதை சமாளிக்க முடியாமல் கார்ப்பரேட்-காவி கும்பல் பாசிசத்தை, நாட்டு மக்கள் மேல் ஏவுவதையும் அம்பலப் படுத்தினார்.  இந்தக் காவி-கார்பரேட் பாசிஸ்டுகளை மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்கள் மூலம் முறியடிக்க வேண்டுமென அறைகூவினார்.

திரளான மக்கள் இறுதிவரை கலையாமல் நின்று கூட்டத்தை கவனித்தனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
உசிலம்பட்டி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க