ந்தியா நிர்வகித்த காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை அளித்த சட்டப்பிரிவை நீக்கும் முன், அம்மாநிலத்தை முடக்கி சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் படைகளால் நிரப்பியது.

அதன் பின், 15 நாட்கள் கழிந்த பின்னும் காஷ்மீரின் நிலைமை சீராகவில்லை. இந்திய அரசும் ஊடகங்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறதென சொல்லிவந்தாலும், ஆயிரக்கணக்கான படையினர் வீதிகள் தோறும் நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டபோது, ஒரு மாணவர்கள்கூட பெரும்பாலான பள்ளிகளுக்கு வரவில்லை என செய்திகள் சொல்கின்றன.

Barbed wire is seen laid on a deserted road during restrictions in Srinagar, August 5, 2019. REUTERS/Danish Ismail TPX IMAGES OF THE DAY பத்து நாட்களாக கேபிள் டிவி இணைப்புகள், தொலைபேசி, இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. இன்னமும் பல பகுதிகளில் தடை தொடரவே செய்கிறது.

நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு, போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க தெருக்களில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளும்கூட மூடியே உள்ளன.

1989-ம் ஆண்டு முதல் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அந்த பிராந்தியம் சுதந்திரம் பெற வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என போராடி வருகின்றனர். காஷ்மீர் பிரச்சினையை உற்றுநோக்கி வரும் குழுக்கள், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான, பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷாரிடமிருந்து 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் ‘சுதந்திரம்’ பெற்றது முதல், இருநாடுகளுக்கும் இடையே காஷ்மீரை முன்வைத்து மூன்று யுத்தங்கள் நடந்திருக்கின்றன.

Residents cross a street during restrictions in Srinagar, August 5, 2019. REUTERS/Danish Ismail இந்தியாவின் நடவடிக்கை முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த பிராந்தியத்தில் பதட்டத்தை மேலும் தூண்டும் என்றும் பாகிஸ்தானுடன் உராய்வை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Indian security personnel stop people during restrictions in Srinagarஸ்ரீநகரில் தடை செய்யப்பட்ட பகுதியில் மக்களை நிறுத்தும் இந்தியப் படையினர்.

View of a deserted road during restrictions in Srinagarஅனைத்து தொலைபேசிகளும் இணைய இணைப்புகள் மற்றும் கேபிள் தொடர்புகளும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு முன்னரே நிறுத்தப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில் இது பிரச்சினையை உண்டாக்கும் எனக் கருதி, இந்தியாவுக்கு ஆதரவான தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.

Indian security personnel stand guard on a deserted road during restrictions in Srinagarஇந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஸ்ரீநகரின் ஆள் அரவம் இல்லா சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர்.

INDIA-PAKISTAN-KASHMIR-UNRESTமுள்வேலியால் தடுக்கப்பட்டிருக்கும் ஜம்முவின் ஒரு பகுதியில், இந்தியப் படையைச் சேர்ந்தவர் நிற்கிறார்.

Indian security personnel patrol on deserted road during restrictions in Srinagarபாகிஸ்தான் எல்லையோரமும், பள்ளத்தாக்கு முழுவதும் சுமார் 7,00,000 படைவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். உலகின் இராணுமயமாக்கப்பட்ட பகுதிகளில் காஷ்மீரும் ஒன்று.

India Kashmirமத்திய ஸ்ரீநகரில் ஊரடங்கின்போது, சாலையை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய போலீசின் கவச வாகனம்

India Kashmirஇடதுசாரி போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசின் முடிவை எதிர்த்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.

Pakistan India Kashmirபாகிஸ்தானின் லாகூரில் இந்தியாவுக்கு எதிராக நடத்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானியர்… தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக அமைதியான வழியில் போராடும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றனர்.


அனிதா
நன்றி
: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க