ணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்காதே !” என்ற தலைப்பில் கடந்த 30/8/2019 அன்று மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம் சார்பாக, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் அவர்கள் முதலில் தலைமை உரையாற்றினார். அவர் பேசுகையில் “அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்கதே என்ற தலைப்பில் தெருமுனைக்கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கேட்டு மனுக் கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து பேருந்துகள்ம் கடைகள் மற்றும் கிராமங்கள் என பல்வேறு வகைகளில் பிரச்சாரம் மேற்கொண்டோம். ஆனால் போலீசோ எங்களை பேருந்துகளிலும், கடைவீதிகளிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தொடர்ந்து மிரட்டினார்கள்.

என்ன ஆனாலும் சரி நாங்கள் பிரச்சாரம் செய்வோம், கைது செய்தால் செய்துகொள்ளட்டும் என்று தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டோம். இறுதியாக பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என மறுத்துவிட்டனர். எனவே அதே தலைப்பில் கருத்தரங்கமாக நடத்திக்கொண்டு இருக்கிறோம். இன்று மக்கள் அதிகாரம் என்றாலே நோட்டிஸ் கொடுக்கவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ எதற்கும் அனுமதி இல்லை. மாற்று அமைப்பினர் நடத்தும் கூட்டங்களில் கூட மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசக்கூடாது என அவர்களை மிரட்டுகின்றனர்” என போலீசின் இந்த ஜனநாயக விரோத போக்குக்கு கண்டனம் தெரிவித்து பேசி முடித்தார்.

படிக்க :
♦ தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

வழக்குரைஞர் தோழர் தமிழ்குமரன் அவர்கள், “ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களை ஒடுக்கவே இன்று பல்வேறு ஒடுக்குமுறை சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. கர்ப்பரேட்டுகளின் பிடியில் நம் நாடு சிக்கி உள்ளது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

அடுத்து ஹைட்ரோகார்பன்-சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் கு.பாலசுப்ரமணியன் அவர்கள் பேசுகையில், “இன்று நமது நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழலிலும் நம்மைப் பாதுகாப்பது விவசாயம்தான். ஆனால் அந்த விவசாயத்தைப் பாதுகாக்க எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. மாறாக விவசாயத்தை அழிப்பதற்காகவே பல்வேறு திட்டங்கள் கொண்டுவரபடுகிறது. விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யக்கோரி தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும்போது, அரசோ அம்பானி, அதானிகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து முதலாளிகளுக்கு சேவைசெய்து கொண்டிருக்கிறது. அதேவேளையில் மக்கள் அதிகாரம் தான் தொடர்ச்சியாக விவசாயிகளுக்காக போராடி வருகிறது” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அடுத்ததாக பேசிய மருதம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவிகார்த்திகேயன் அவர்கள் தனது உரையில், “ஆற்று மணல் கொள்ளை மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருவதையும், மேலும் இது போன்று அழிவு திட்டங்களால் மிக கடுமையான குடிநீர் மற்றும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும் பேசினார்.

விழுப்புரம் பகுதி பு.மா.இ.மு அமைப்பாளர்  தோழர் ஞானவேல் அவர்கள் பேசுகையில், “இன்று மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நாசகார திட்டங்களை தமிழத்தில் கொண்டுவருவது மட்டுமல்லால், ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீதும் புதிய, புதிய கொள்கைகளையும், தங்களது அடக்குமுறைச் சட்டங்களையும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகின்றனர்” என்றார். மேலும் தற்போது கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கை பற்றியும் அதில் உள்ள அபாயங்களைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.

படிக்க :
♦ கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !
♦ ஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை – ஆனால் பீஃப் கூடாது !

சிறப்புரையாக பத்திரிகையாளர் தோழர் அய்யநாதன் அவர்கள் தான் எழுதி வெளியிட்டுள்ள “ஹைட்ரோகார்பன் அபாயம்” என்ற புத்தகத்தில் உள்ளவற்றை மேற்கோள்காட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட இருக்கும் அபாயங்களை தெளிவாக விளக்கினர். மேலும் ஊடக விவாதங்களில் இந்த அழிவு திட்டங்களை ஆதரிப்பவர்கள், தங்களைப் போன்றவர்களை இந்த திட்டங்களால் ஏற்பட உள்ள  பாதிப்புகள் பற்றி மக்களிடம் விளக்குவதற்குகூட விடாமல் வேண்டுமென்றே குறுக்கீடு செய்வதையும் சுட்டிக்காட்டினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகையில், “இன்று நமது நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்தும், கடுமையான அடக்குமுறை சட்டங்கள் பற்றியும், தமிழகத்தின் மீது திணிக்கப்படும் நாசகார திட்டங்கள் பற்றியும் மக்கள் அதிகாரம் எங்கேயும் பேசி மக்களை விழிப்படைய செய்துவிட கூடாது என்பதற்காகவே நமக்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கபடுகிறது. மேலும் மக்கள் ஆகிய நாம் போலீசின் அடக்குமுறைக்கோ, கைது சிறைக்கோ அஞ்சாமல் எதிர்த்து நின்று போராட வேண்டும்” என்று பேசினார்.

நிகழ்ச்சியின் இடையிடையேயும், நிகழ்ச்சியின் இறுதியிலும் பாடப்பட்ட மகஇக-வின் புரட்சிகர பாடல்கள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும், போராட அறைகூவும் வகையிலும் இருந்தது.


 மக்கள் அதிகாரம்
விழுப்புரம் மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க