இந்தி தேசிய மொழி ; அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! மொழி, கல்வி, பண்பாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலை முறியடிக்க தமிழகம் கிளர்ந்தெழட்டும் !!

பத்திரிகைச் செய்தி

நாள் : 14.09.2019

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி நாளை’யொட்டி, இந்திதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவல்ல தகுதி இந்திக்குத்தான் உள்ளது. எனவே இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தற்போதைய கூட்டாட்சி முறைமீது மட்டுமல்லாது, பல்வேறு தேசிய இன மொழி, பண்பாட்டு உரிமைகளின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும் . ஆர்.எஸ்.எஸ்–ன் இந்து ராஷ்டிரத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையே இது. இந்த மக்கள் விரோத, தேச விரோத அறிவிப்பை மக்கள் அதிகாரம் மிக வன்மையாக கண்டிக்கிறது. அமித்ஷா தனது கருத்தை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

hindi-amitshaபாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ரயில்வே, அஞ்சல் துறை போன்ற மத்திய அரசின் துறைகளுக்கான தேர்வுகளில் மாநில மொழிகளை அகற்றியதற்கே கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் அமித்ஷாவின் இந்த அறிவிப்பு மிகவும் ஆபத்தானது. இந்தியைப் பொது மொழியாக்குவது என்பது சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்குவதன் முதற்படியே. இந்தி என்பது மொழி மட்டுமல்ல, அது இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துத்துவத்தின் அடிப்படையுமாகும்.

படிக்க:
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
♦ ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !

அமித்ஷாவின் அறிவிப்பு பிற மொழிகளின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மதச் சிறுபான்மையினரின் மீதான தாக்குதலுமாகும். இந்து பாசிச சர்வாதிகாரத்தைக் கட்டியமைக்க முனையும் பாஜக – ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த ஒடுக்குமுறையை தமிழகம் ஒருக்காலும் ஏற்காது.

தமிழகத்தில் உள்ள பாஜகவின் அடிமை அரசு , புதிய கல்விக்கொள்கையை உடனே அமல்படுத்தும்விதமாக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை அறிவித்துள்ளது. எனவே மொழி, கல்வி, பண்பாடு மீது அடுத்தடுத்து தொடுக்கப்படும் தாக்குதலை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம்.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர்

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க