ட்டுமொத்த காஷ்மீரும் ஒரு மாத காலமாக முடக்கப்பட்டு, கொத்துக் கொத்தாக மக்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதுமன்றி, பொருளாதாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு காஷ்மீர் மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது இந்திய ஆளும் வர்க்கமும், இராணுவமும்.

இந்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் காஷ்மீருக்கான சிறப்பு சட்ட அங்கீகாரப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு மாத காலமாக அங்கு நிலவி வரும் கொடுமைகளைச் சொல்லி மாளாது. அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிப்பு, இந்திய அரசை இன்னமும் நம்பி நிற்கும் அப்பாவி காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டு கொடூர முறையில் சித்திரவதை செய்யப்படும் நிலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Kashmir-Life-Siege
இந்தியாவில் முசுலீம்கள் மெஜாரிட்டியாக வசித்துவரும் ஒரே மாநிலமான காஷ்மீரில், சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பின்னர் ஏற்கெனவே நிலவி வந்த கொஞ்ச நஞ்ச அமைதி நிலையும் சீர்குலைந்து, போராட்டக்களமாய் மாறி, மக்கள் பொதுவெளியில் கூட வரமுடியாமல் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவரும் இந்திய இராணுவம்.

உலகிலேயே அதிக அளவிலான இராணுவம் குவிக்கப்பட்ட பகுதிகளில் காஷ்மீரமும் ஒன்று. அப்படியிருந்தும் எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து போராடி விடுவார்களோ என்ற பயத்தில் மேலும் ஆயிரக்கணக்கில் படைவீரர்களைக் குவித்துள்ளது இந்திய அரசு.

படிக்க:
தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

இணைய சேவை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இராணுவத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் காஷ்மீர் மக்களின் அவல நிலைகளைப் பாருங்கள்.

Kashmir-Life-Siege 2சுதந்திரம் வேண்டும் என்று கூறி வெள்ளியன்று நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனைக்குப் பிறகு போராடும் காஷ்மீர் பெண்கள். இடம் – சிறீநகர்

Kashmir-Life-Siegeஸ்ரீநகரின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், பெல்லட் குண்டுகளால் தாக்கியும் கலைக்கும் இந்திய இராணுவமும், போலீசும்.

Kashmir-Life-Siegeரகுமான் தர் தன்னுடைய மகனின் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். கல்லெறிந்தார் என்ற பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக 4000-க்கும் மேற்பட்டோர் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கின்றன ஊடக செய்திகள்.

Kashmir-Life-Siegeஆகஸ்டு 6-ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் ஃபிர்தூஸ் அகமது – வயது 22 ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) மற்றும் 12 கிராமத்தினரைக் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது போலீசு. தடிகளாலும், வயர்களாலும் தாக்கப்பட்ட ஃபிர்தூஸின் பின்னந்தொடை, முழங்கால் பகுதிகள் முழுவதும் கறுப்பு நிறமாகியுள்ளது. போலீசார் தன்னைக் குறைந்தபட்சம் 100 முறையாவது அறைந்திருப்பர் என்கிறார் ஃபிர்தூஸ்.

Kashmir-Life-Siegeசிறீநகரில் உள்ள மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆறு வயது சிறுமி முனிஃபா நசீர். தன்னுடைய மாமாவுடன் பண்டிகை தினத்தன்று வெளியே சென்ற சிறுமி இராணுவத்தால் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய வலது கண்ணால் பார்க்கும் திறனை இழந்துவருகிறார் என்கிறார் இவரைக் கவனித்துக்கொள்ளும் உறவினர் ஒருவர்.

Kashmir-Life-Siegeதங்களுடைய சொந்த பந்தங்களுடன் தொலைபேசியில் பேசுவதற்காக வரிசையில் காத்திருக்கும் காஷ்மீர் மக்கள். தனி நபர் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாஸ்மீன் என்ற தன்னார்வலரால் தொடங்கப்பட்ட இலவச தொலைத்தொடர்பு சேவை வசதியை தினமும் 400 பேர் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

Kashmir-Life-Siegeமுகம்மது அயூப் (ஆட்டோ ஓட்டுனர்) தன் வீட்டிற்கு வெளியே பெட்ரோல் விற்பனை செய்துவரும் காட்சி. ஆட்டோ ஓட்டும்போது தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான பணம் கிடைத்ததாகவும், தற்போதைய நிலவிவரும் சூழலில் இப்போது பெட்ரோல் விற்று மட்டுமே குடும்பத்தைக் காக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காஷ்மீரில் இதுவரை நான் பார்த்த நெருக்கடி நிலைமைகளில் மிகவும் மோசமானது இதுதான் என்கிறார் முகம்மது அயூப்.

Kashmir-Life-Siegeதுப்பாக்கி மற்றும் அதி நவீன ஆயுதங்கள் ஏந்தி வலம் வரும் இராணுவத்தை வெறும் கம்புகளுடன் எதிர்நோக்கி நிற்கும் காஷ்மீரின் வீரப்பெண்கள். இடம்- அஞ்சார், சிறீநகர். இராணுவத்தின் இரவு நேர அத்துமீறல் கைதுகளைத் தடுப்பதற்காக இப்பகுதி இளைஞர்கள் இரவு முழுவதும் கண்விழித்து ரோந்துப் பணியில் ஈடுபடுவதால், தாய்மார்கள் பகல் நேரங்களில் இராணுவத்தை எதிர்கொள்கின்றனர். காஷ்மீரின் வீரம் நிறைந்த போராட்டக்களங்களில் இதுவும் ஒன்று.

Kashmir-Life-Siegeபத்திரிக்கையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இணைய சேவை மையத்தில் காத்து நிற்கும் காட்சி. வெறும் 5 கணிணிகளே ஒதுக்கப்பட்டுள்ளதால், தரவுகளை அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.


தமிழாக்கம் : வரதன்
நன்றி : aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க