ந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு 17.09.2019 அன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். கலைக்குழு பாடகர் தோழர் கோவன் அவர்கள் பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். பெரியாரின் புகழை உயர்த்தியும் இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையில் இந்தியா முழுவதும் பாசிசத்தை கட்டவிழ்த்து விடும் மோடி, பா.ஜ.க, RSS கும்பல்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் வழக்கறிஞர் ஆதி தலைமையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ரெங்கநாதன் மற்றும் பாலகுரு ஆகிய இருவரையும் அழைத்து தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர்.

பின்னர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருவரும் பெரியார் உருவச்சிலை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி படித்த நாங்கள் அர்ச்சகராக முடியாமல் திட்டமிட்டே அ.தி.மு.க அரசால் பழிவாங்கப்பட்டோம்.

படிக்க:
கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !
♦ வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

அன்றிலிருந்து இன்றுவரை கோயில்களில் அர்ச்சகராவதற்கு பல்வேறு வழக்குகள் நடத்தி வருகின்றோம். எங்களுக்கு அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்கவில்லை. அதை கண்டித்துதான் நாங்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் என்று கூறினார்கள். இம்மாணவர்களுக்கு ஆதரவாக ம.க.இ.க அதன் தோழமை அமைப்புகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்தோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வு அங்கு தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை போட வந்திருந்த பல்வேறு கட்சிகள் அமைப்புகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

***

தஞ்சையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தோழர்கள் !

செப்டமபர் 17, தஞ்சையில் அதிமுக, பிஜேபி தவிர எந்த அமைப்பிற்கும் கூட்டம் போட அனுமதி கிடையாது. அப்படியே கிடைத்தாலும் வழக்கு உறுதி. அதனால் கூட்டங்கள், ஆர்பாட்டங்களை சமீபகாலமாக தஞ்சையில் அதிகம் பார்க்க முடிவதில்லை. இரயிலடியில் காவல்துறையின் பாதுகாப்பில் இருபத்தைந்து பேர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்ததை பார்த்தபடி மக்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

கருப்பு சட்டை அணிந்தவர்கள் பழைய பேருந்து நிலையம் நோக்கி நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று கொண்டிருந்தனர். பெரியார் சிலையை சுற்றி நூற்றுக்கணக்கில் கருஞ்சட்டைகள் மற்றும் மக்கள் கூட்டம். அந்நிகழ்வில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கேற்பு மகிழ்சியூட்டியது.

மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், தஞ்சை ஒருஙகிணைப்பாளர் தோழர் தேவா, மக்கள் கலை இலக்கியக் கழக தஞ்சை கிளைச்செயலர் தோழர் இராவணன் உள்ளிட்ட தோழர்களோடு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பார்பன மதவெறி பாசிசத்திற்கெதிராக விண்ணதிர முழக்கமிட்டபடி வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பிஜேபி -யினர் நீங்கலாக காங்கிரஸ் கடசியினர் உட்பட அனைத்துக் கட்சியினர், அமைப்பினர் என அணிஅணியாக திரண்டுவந்து பெரியாருக்கு மாலை அணிவித்து பெரியாரைப் போற்றி முழக்கமிட்டனர். இன்றைய நிகழ்ச்சிகள் தஞ்சையின் நிறம் அவ்வளவு எளிதாக காவியாக மாறிவிடாது என்ற நம்பிக்கையை பறைசாற்றியது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

படிக்க:
மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

***

அம்பேத்கர் பெரியாரைப் படிப்போம் ! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் !

தந்தை பெரியாரின் 141-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பெரியாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதோடு மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கக் கூடிய வகையில் நீட் தேர்வு மற்றும் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என கல்வியில் இருந்து பெரும்பான்மை மாணவர்களை விரட்டவும்; மீண்டும் குலக்கல்வியை திணிக்கும் காவி கும்பலுக்கு எதிராக அம்பேத்கர் பெரியார் பற்றி படிப்போம் என உறுதியேற்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110

***

சாதி ஒழிக்க சபதமேற்போம் ! மதுரையில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா !

பெரியாரின் 141-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அம்பேத்கர் சிலையில் இருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள், சாதியை ஒழிக்க, சமத்துவம் காக்க, மதவெறி மாய்க்க, மடமை மாய்க்க, பகுத்தறிவு வளர்க்க, பெண்ணடிமை தீர, மொழி உரிமை காக்க, மனுநீதி ஒழிக்க பெரியார் வேண்டும்! என முழக்கமிட்டபடி பெரியார் சிலைக்கு வந்தடைந்து பெரியாருக்கு மாலை இட்டு, இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளை முறியடிக்க சபதம் ஏற்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க