ண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் தத்துவ பாடம் என்ற பெயரில் கீதையை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதிக்கு எதிராக, காவல்துறையின் தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்திய மதுரை ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்த காவல்துறை, நேற்று (29.09.2019) இரவு திடீரென அனுமதியை இரத்து செய்து அறிவித்தது. இதனால் தடையை மீறி இன்று (30.09.2019) காலை 11 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

படிக்க:
பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்
♦ மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !

தோழர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை, தன்னை ஆர்.எஸ்.எஸ் இன் இளைய பங்காளி என அடையாளம் காட்டிக் கொண்டது. அதே நேரம் தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் அங்கு சுற்றுப் பகுதியில் இருந்த மக்களை கவனிக்கச் செய்தது. அம்முழக்கங்கள் காவி கும்பலை மக்களிடம் அம்பலப்படுத்திக் காட்டியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கஙகள் :

திணிக்காதே! திணிக்காதே!
பொறியியல் படிப்பிலே
சமஸ்கிருதத்தை திணிக்காதே!

கீதை என்ற பெயரிலே
பார்ப்பன புராண புரட்டுகளை
மாணவர் மண்டையில் திணிக்காதே!

உழைக்கும் மக்களை சாதிகளாக
பிளவு படுத்தும் கீதையை,
அம்பேத்காரும் பெரியாரும்
காரித் துப்பிய கீதையை,
பொறியியல் கல்வியில் சேர்க்காதே!

சூத்திரன் படிக்கக் கூடாது
என்று சொல்லும் கீதையை
பாடத்திலே சேர்க்காதே!
பொறியியல் மாணவரை
பார்ப்பன அடிமை ஆக்காதே!

நட்டும், போல்ட்டும், மின்னணுவும்
கீதை தந்த தத்துவமா?
‘எல்லாம் மாயை’ என்னும் கீதையை
படித்தால் பல்பு எரியுமா?

ஹவ்டி மோடி! ஹவ்டி மோடி!
பதில் சொல்! பதில் சொல்!

கிருஷ்ணன் என்ன இஞ்சீனீயரா?
கீதை என்ன அறிவியலா?
பதில் சொல்! பதில் சொல்!

படித்தவர்கள் வேலை கேட்டால்
பக்கோடாவை விற்கச் சொன்ன
காவிக் கேடி மோடியே
பக்கோடாவை விற்பதற்கு
கீதை என்ன சமையல் குறிப்பா?

ஆலை எல்லாம் மூடுறான்,
வேலையை விட்டு தொறத்துறான்!
கீதையை படித்து விட்டால்
வேலை வெட்டி கிடைக்குமா?

‘கொண்டு வந்தது எதுவும் இல்லை
கொண்டு போவது எதுவும் இல்லை’
என்று சொல்லும் கீதையை
அம்பானிக்கு கொடுத்து விட்டு
அம்பானியின் திருட்டுச் சொத்தை
பறிமுதல் செய்! பறிமுதல் செய்!

கார்ப்பரேட்டுக்கு அள்ளிக் கொடுக்கும்
காவி மாமா மோடியே!
கார்ப்பரேட்டுக்கு கீதை கொடுத்து
திருட்டுச் சொத்தை பறிமுதல் செய்!

சூரப்பா! சூரப்பா!
பொறியியல் படித்தாயா?
பஜனை மடத்தில் படித்தாயா?
அண்ணா பொறியியல் பல்கலையா?
ஆர்.எஸ்.எஸ் பஜனை மடமா?

‘அதுவும், இதுவும், எதுவும் நானே’
என்று சொல்லும் கீதையை படித்து
கர்ப்பக்கிருகத்தில் கக்கூஸ் கட்டினால்
ஆர்.எஸ்.எஸ் கும்பலே!
டீலா? நோ டீலா?

தத்துவ ஞான கீதை படித்து
இஸ்ரோ செல்லும் விஞ்ஞானிக்கு
நிலவில் லேண்டரை கண்டுபிடிக்க
பகவான் உதவி செய்வாரா?

பொறியியல் கல்வி என்பது
மக்கள் வாழ்க்கைக்காகத் தான்!
கீதை காட்டும் வழி எல்லாம்
சொந்த மக்களை கொல்வது தான்!
அறிவியல் படித்து வாழவா?
கீதை படித்து சாகவா?

பார்ப்பன புராண புரட்டுகளை
கல்வித் துறையில் திணிக்கின்ற
ஆர்.எஸ்.எஸ் இன் சதித் திட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இந்து பாசிச சித்தாந்தத்தை
மாணவர் மீது திணிக்கின்ற
காவிக் கேடி மோடியின்
முகத்திரையை கிழித்தெறிவோம்!

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை.

1 மறுமொழி

  1. Evangelist கைக்கூலிகள் தமிழகத்தின் வரலாற்றை அழிப்பவர்கள் இவர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க