யூப்ரடிஸ் ஆற்றின் கிழக்குப் பகுதியில் நுழைந்த துருக்கிய படைகள், வடகிழக்கு சிரியாவில் தரைப்படை நடவடிக்கைகளை தொடங்கின என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலின் இரண்டாம் நாளில், தன் படைகள் குறிப்பிட்ட இலக்குகளை கைப்பற்றியுள்ளன என்று துருக்கி அறிவித்துள்ளது, இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டதும், எட்டு ஆண்டு கால மோதலானது ஒரு ஆபத்தான புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

யூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

அங்கு வசிக்கும் மக்கள் தல் அபியத்துக்கு தப்பியோடி வருகின்றனர்.
அவர்களில் சிலர் டி.பி.ஏ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இன்னும் நகருக்குள் இருக்கும் குடிமக்களை வெளியேற விடாமல் குர்திஷ் போராளிகள்
தடுத்துவைத்துள்ளனர் என்றனர்.

துருக்கியின் தாக்குதலுக்கு இலக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் “பெரும் ஆபத்தில்” உள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவைக் குழு எச்சரித்துள்ளது.

சிரியா நிலவரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழு வியாழக்கிழமை கூடுகிறது.

வடகிழக்கு எல்லைப்புற நகரங்கள் மீது துருக்கியர்களின் குண்டுவீச்சுத் தாக்குதலை அடுத்து, சிரிய, அரபு மற்றும் குர்திஸ் குடிமக்கள் சிரியாவின் வடமேற்கு ஹஸகாஹ் மாகாணத்தில் உள்ள டால் டம்ஹர் என்ற நகரத்திற்கு வந்துள்ளனர்.

சிரிய, அரேபிய, குர்திஷ் குடிமக்கள் துருக்கிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் வடகிழக்கு நகரமான ரஸ் – அல் – ஐயின் மீது துருக்கியக் குண்டுவீச்சிற்கு இடையே தப்பியோடுகிறார்கள்.

சிரியாவின் ரஸ் – அல் – அய்ன் கிராமப்புறங்களில் உள்ள டெல் அரகம் கிராமத்தில் இருந்து புகை கிளம்பியது.

துருக்கி எல்லையில், துருக்கி ஆதரவு பெற்ற சிரிய எதிர்த்தரப்பாளர்கள், சிரியாவின் சாலிஜுஃபா மகாணத்தில் உள்ள அக்காகேளிலிருந்து, டால் அபேட் என்ற இடத்தை நோக்கி விரைகின்றனர்.

படிக்க:
HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !
வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

துருக்கி எல்லையில், சிரியா பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தங்கள் வீட்டை தாக்கியதையடுத்து சாலிஜுஃபா மகாணத்தின், அக்காகேளிலுள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் குடிமக்கள்.

கடந்த வியாழனன்று ரஸ் – அல் – அய்ன் என்ற இடத்தில் துருக்கியப் படைகள் தங்கள் இலக்குகளை தாக்கியழித்தனர். இதற்கு எஸ்.டி.எஃப். போராட்டப் படையினரும் பதிலடி கொடுத்தனர் என்று அந்தப் பகுதியை சேர்ந்தவர் தெரிவிக்கிறார்.

துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய எதிர்ப்பு போராளிகள், சிரியாவின் அல் அகடேல் என்னும்  நகரத்தில் இருந்து, துருக்கியின் சாலிஜுஃபா மாகாணத்தில் உள்ள அக்கோலே பகுதியை நோக்கி செல்லும் போது, ஒரு நபர் கையசைக்கிறார்.

சிரியாவின் ஹஸகாஹ் மாகாணத்தில் உள்ள, வடகிழக்கு நகரமான ரஸ் அல் – ஐயினில், துருக்கிய குண்டுவீச்சிற்கு இடையே ஒரு சிரிய பெண்மணி தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடுகிறார்.

துருக்கி – சிரிய எல்லை அருகேயுள்ள அக்கோலே என்ற இடத்தில், துப்பாக்கி ஏந்திய துருக்கி படையினர் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர்.

வடகிழக்கு சிரியாவில் உள்ள ரஸ் அல் – ஐயினில், துருக்கிப் படைகள் நடத்திய தாக்குதலால், சிதறியோடும் சிரியர்கள்.


தமிழாக்கம் : மூர்த்தி
நன்றி :aljazeera


படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க