லக கந்துவட்டிக் கும்பலின் தலைமை நிறுவனமான சர்வதேசிய நாணய நிதியத்திற்கு எதிராக தென்னமெரிக்க நாடுகளில் கிளர்ச்சித் தீ பரவத்தொடங்கியுள்ளது. ஈகுவடார், பொலிவியா ஆகிய நாடுகளில் எழுந்த கிளர்ச்சித் தீ சிலி நாட்டில் உக்கிரமடைந்துள்ள நிலையில் இப்போது அர்ஜெண்டினியர்களும் ஐ.எம்.எஃப்-க்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

Mauricio Macri
அர்ஜெண்டினாவின் அதிபர் மொரிசியோ மேக்ரி.

உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார நிலைமை இன்று அதல பாதாளத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆதரவின் பின்புலத்தோடு இயங்கிவரும் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் அதிபர் மொரிசியோ மேக்ரி எப்படி இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து நாட்டை நெருக்கடிக்குள் தள்ளினார் என்பதையும் இந்தக் காணொளி விவரிக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு அர்ஜெண்டீனியர்கள் வறுமையால் வாடிவருகின்றனர். உயிர்வாழ உணவும், வேலையும் தா..! எனக் கோரி இப்போது அதிபருக்கெதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஐ.எம்.எஃப் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர் சில போராட்டக்காரர்களிடம் கேட்கும்போது ‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’ என்றும் ‘ஐ.எம்.எஃப் ஒரு திருட்டுக் கும்பல்’ எனவும் மக்கள் ஆக்ரோஷமாகப் பதிலளிக்கின்றனர். எதிர்காலமே இருள்மயமாகிவிட்டதாகவும்,  அரசாங்கத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், ஆளத்தகுதியற்றுப் போய்விட்டதாகவும் மக்கள் கூறுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

படிக்க :
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
♦ ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !

விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன் எரிவாயு, புவிசார் குறியீடான மேற்குத்தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ, இன்னொரு புறம் சந்திராயன் 2 என்ற பெயரில் இலட்சம் கோடி ரூபாய் வீணடிப்பு, ஆனால் மக்களின் நிலைமையோ மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது என்ற எதார்த்த நிலை நம் நாட்டிலும் நிலவி வரும் இந்தச் சூழலில் ஆள அருகதையற்று நிற்கும் அரசுகளைத் தூக்கியெறிவதைத் தவிர உழைக்கும் வர்க்கத்துக்கு வேறுவழியில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த ஆவணப்படம்.


– வரதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க