பிரேசிலின் ரொண்டோனியா, போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் காடுகளில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. காடுகளை சோயா வயல்களாகவும், கால்நடை மேய்ச்சலாகவும் மாற்றும் நில அபகரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்களால் தான் பெரும்பாலான தீ விபத்து ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (INPE) படி, 2018 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமேசான் காட்டுத் தீ எண்ணிக்கை 84 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரொண்டோனியாவின் மேற்குப் பகுதி அதிகமான காடுகள் அழிக்கப்பட்ட இடமாகத் தோன்றுகிறது, நிலத்தை சுரண்டுவதே இதற்கான முக்கியக் காரணம்.

ஆகஸ்டில், ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ, எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், அங்கு களத்தில் சேவையாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான் இந்த காட்டுத்தீக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமேசானிய நில அபகரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்கள், அரசாங்கத்தின் சொல்லாட்சியின் ஆதரவுடன், காடுகளுக்கு தீ வைத்ததற்கும், நிலத்தை சுரண்டுவதற்கும் எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

பெருவாரியான நிலத்தில் ஒற்றைப்பயிரான சோயா அல்லது கால்நடைகளுக்கான தீவனங்களே பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன. சோயா வணிகம், உணவாகவும், தீவிர கால்நடை விலங்குகளின் தீவனமாகவும், ஒரு சில பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பது மட்டுமல்லாமல் இது உலகில் மிகவும் இலாபகரமான ஒன்றாக மாறியுள்ளது.

“வளர்ச்சியின் பெயரில், அமேசானின் நிலங்களை சுரண்டுவதில் குறைவான கட்டுப்பாடான கொள்கைகளை அமல்படுத்துகிறது, இதனால் காடழிப்பு அதிகரிப்பதை நியாயப்படுத்துகிறது,” என்று சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ரொன்டோனியாவில் உள்ள பூர்வீகக் குழுக்களுடன் இணைந்து  செயல்படும் கனிண்டே என்ற அமைப்பை நடத்தி வரும் நெய்டின்ஹா கூறினார்.

படிக்க:
பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !
பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?

கரிட்டியானா மற்றும் உரு-யூ-வாவ்-பழங்குடியினரின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, பூர்வீக பிரதேசங்களுக்குள் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன.

ஜமாரி கிராமத்தின் தலைவரான ஜூரிப் கூறுகையில், செப்டம்பர் மாதம், தங்கள்  நிலத்தை அபகரிப்பவர்கள் சிலர் காட்டில் தீ வைத்தபோது ஒரு குழுவால் அடையாளம் காணப்பட்டு கைதும் செய்யப்பட்டனர்.

“பூர்வீக பழங்குடியினர் மட்டுமே இயற்கை இருப்புக்களில் வாழ முடிகிறது என்றாலும், காடுகளின் சுரண்டலால் இலாபம் ஈட்டுவதற்காக மரங்களை கடத்துபவர்கள் மற்றும் நில அபகரிப்பாளர்கள் தொடர்ந்து எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்” என்று ஜூரிப் கூறினார்.

உரு-யூ-வாவ்-வாவ் இனத்தைச் சேர்ந்த 45 வயதான புருவா, தனது கோத்திரத்தின் இருப்புக்குள் நில அபகரிப்பாளர்களின் குடிசைக்கு தீ வைத்தார். செப்டம்பர் 2019 இல், நிலப்பரப்பைக் கைப்பற்ற காடுகளுக்கு தீ வைக்கும் ஒரு குழு, ஃபனாய்-யால் (பழங்குடியின மக்களைப் பாதுகாப்பதற்கான அரசு நிறுவனம்) தடுத்துநிறுத்தப்பட்டு, உரு-யூ-வாவ்-வாவ் இருப்புக்குள்ளேயே போலீசாரால் கைதும் செய்யப்பட்டது. புருவாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்குத் திரும்பி அவர்கள் திரும்பி வராமல் இருக்க சட்டவிரோத குடிசைக்கு தீ வைத்தது.

ஆல்டியா ஜமாரேவின் கிராமத் தலைவரான ஜூரிப், நிலத்தை அபகரித்தவர்களால் அழிக்கப்பட்ட காட்டில் நடந்து, பூர்வீகப் பகுதியை எரித்த நிலத்தை உரிமை கோரி அதை சாகுபடி செய்யச் செய்தார். செப்டம்பர் 26 அன்று, ஜூரிப், நில அபகரிப்பாளர்களுக்காக காடுகளுக்கு தீ வைக்கும் கும்பல் வசிக்கும்  சட்டவிரோத குடிசைகளை அழிக்கும் ஒரு திட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தினார்.

போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் அண்டை காட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் எரிந்த தனது கசவா வயலுக்கு முன்னால் ஜெல்சன் நிற்கிறார்.

கரிஷியானா பழங்குடியினரின் சென்ட்ரல் ஆல்டியா, ரொண்டோனியாவின் பூர்வீக பிரதேசத்தில் ஜியோவால்டோவுக்கு சொந்தமான ஒரு வீட்டின் எச்சங்கள். பக்கத்து காட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் இவரது வீடும் தீப்பிடித்தது. பூர்வீக நிலப்பரப்பைச் சுற்றியுள்ள தனியார் பண்ணைகள் கரிட்டியர்களையும் காடுகளையும் அச்சுறுத்துகின்றன.

போர்டோ வெல்ஹோவில் மடிரா ஆற்றைக் கடக்கும் பாலத்தின் கீழ் மீனவர்கள். பின்புறம் உள்ள சாலோஸில் உள்ள குழிகள், உலகின் அதிக சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றான சோயாவை சேமிக்க பயன்படுத்தப்படுகின்றன.

போர்டோ வெல்ஹோவிற்கு அருகில் கால்நடை மேய்ச்சலாக மாறிய வனப்பகுதி. மாட்டிறைச்சி வர்த்தகம் நாட்டின் மிகவும் இலாபகரமான வணிகங்களில் ஒன்றாகும். மேலும் மேய்ச்சல் நிலத்தின் தேவை காடழிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சட்டவிரோத விற்பனைக்கு சிறந்த மரத்தை திருடுவதன் மூலம் இந்த செயல்முறை தொடங்குகிறது. பின்னர் நிலங்களும் தொடர்ச்சியாக தீ வைக்கப்படுகிறது. நிலம் அகற்றப்பட்டதும், கால்நடைகளை மேய்ச்சலுக்காகவும், பின்னர் சோயாவை வளர்க்கவும் காடு பயன்படுத்தப்படுகிறது.

ரொண்டோனியாவின் போர்டோ வெல்ஹோவில் உள்ள ஃப்ரிகோ 10 இறைச்சிக் கூடத்தில் மேலாளர் மற்றும் கால்நடை மருத்துவர். மாட்டிறைச்சி வர்த்தகம் நாட்டின் மிகவும் இலாபகரமான வணிகங்களில் ஒன்றாகும்.

ரோண்டோனியாவில் உள்ள பூர்வீக பிரதேசத்தின் மத்திய ஆல்டியாவில் உள்ள கரிஷிய பழங்குடி மக்கள். பூர்வீக நிலப்பரப்பைச் சுற்றியுள்ள தனியார் பண்ணைகள் கரிஷியர்களையும் அந்தக் காடுகளையும் அச்சுறுத்துகின்றன.

அமேசான் ரிசர்வ் பகுதியில் உள்ள உரு-யூ-வாவ்-வாவ் பழங்குடியினத்தைச் சேர்ந்த மேட் (32), புருவா (45), மற்றும் அலெஸாண்ட்ரா (27)
செப்டம்பர் 26 அன்று, மூவரும் அண்டை காடுகளுக்கு தீ வைத்த நில அபகரிப்பாளர்களால் ஒரு தளமாக பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டவிரோத குடிசையை நோக்கிச் சென்ற பணியில் பங்கேற்றனர்.

பிரேசிலின் ரொண்டோனியா, போர்டோ வெல்ஹோ அருகே ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து புகை எழுகிறது.

ரொண்டோனியா பிராந்தியத்தில் ஜாசி பரணா அருகே தொழிலாளர்கள். அமேசானிய மரங்களை திருடுதல் மற்றும் சட்டவிரோதக் கடத்தல் உலக சந்தையில் 30 சதவீதத்தைப் பிடித்திருகிறது. காடழிப்பு செயல்பாட்டில், காட்டை தீ வைப்பதற்கு முன்பு, நில அபகரிப்பாளர்கள் கறுப்பு சந்தையில் விற்க மிகச்சிறந்த மரங்களை வெட்டுவர்.

அமேசானின் மிகவும் காடழிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பிரேசிலின் ரொண்டோனியாவில் உள்ள போர்டோ வெல்ஹோ மாகாணத்தில் ஏற்பட்ட தீ.

ரொண்டோனியாவிலுள்ள போர்டோ வெல்ஹோவில் ஏற்பட்ட தீ.


தமிழாக்கம் : மூர்த்தி
நன்றி : aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க