மீபத்தில் உயர் கல்வி கற்கும் நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை முன்பை விட அடிக்கடி செய்திகளில் வருகின்றது. பலியானவர்களில் பெரும்பாலானோர் குறிப்பாக தலித்துகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சிலர் கல்விச் சூழல் தரும் அழுத்தங்களால் தற்கொலை செய்துள்ளனர்.

ரோஹித் வெமுலா மரணத்தைப் பொருத்தவரை, சாதிய பாகுபாடுதான் முக்கியக் காரணமாக இருந்துள்ளது. மேலும், அவர் முன்னெடுத்த சமூக நடவடிக்கைகள் அனைத்தும் தேச விரோத செயல்கள் என முத்திரை குத்தப்பட்டது. மற்ற இரண்டும், மகளிர் மருத்துவ நிபுணரான பாயல் தாத்வி மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸில் முதுகலைப் பட்டம் பெற்ற ஃபாத்திமா லத்தீஃப் ஆகியோரின் வழக்குகள். தாத்வி ஒரு பில் முஸ்லீம், டாக்டர் சல்மான் தாத்வியின் மனைவி. அவர் மருத்துவக் கல்வி நிலையத்தில் தனது சீனியர்களால் அன்றாட வாழ்வில் துன்புறுத்தப்பட்டார்.

பாத்திமா ஒரு திறமையான இளம் மாணவி. அவர் பெரும்பாலான தேர்வுகளில் முதலிடம் வகித்தார். ஐ.ஐ.டி.எம்-மில் சேர்ந்த பிறகு, அவரை முன்தீர்ப்பால் செய்வதறியாமல் திகைத்தார், அவருக்கு திறமை இருந்தபோதிலும் அவருக்கு ‘உள் மதிப்பீட்டில்’ மோசமான மதிப்பெண் வழங்கப்பட்டது. தன்னை அவதூறு செய்ததாக தனது ஆசிரியர்களில் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு, தன் தந்தைக்கு “அப்பா, என் பெயரே ஒரு பிரச்சினை” என்று எழுதினார்.

சாதியை அடிப்படையாகக் கொண்டு, பழங்குடியினராக இருப்பது அல்லது திருநங்கைகளாக இருப்பது போன்ற பிற வகையான அவமானங்கள் பெருகினாலும், பாயல் மற்றும் பாத்திமாவின் இந்த இரண்டு வழக்குகளும் முஸ்லிம் சமூகத்தின் மீதான நுட்பமான மற்றும் வெளிப்படையான வெறுப்பின் ஒரு பகுதியாகும். இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டுமல்ல,  9/11, 2001 -க்குப் பிறகு, அமெரிக்க ஊடகங்கள் “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற சொற்றொடரை உருவாக்கி பிரபலப்படுத்திய பிறகு உலகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது.

படிக்க:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !
♦ ஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் !

ஆனால், பயங்கரவாதம் என்பது பல மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஈடுபட்டுள்ள ஒரு பரவலான நிகழ்வு ஆகும். ஐரிஷ் குடியரசுப் படையினர், இலங்கை புத்த பிக்குகள் எனப் பலரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்புவரை ஒருபோதும் பயங்கரவாதத்துடன் மதம் தொடர்புபடுத்தப்படவில்லை. இந்த தாக்குதல் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெவ்வேறு மதங்களிலிருந்தும் கிட்டத்தட்ட மூவாயிரம் அப்பாவி மக்களைக் கொன்றது.

இதற்கு ஒசாமா பின்லேடன் – அல்கொய்தா மீது குற்றம் சுமத்தப்பட்டது. அல்கொய்தா அமைப்பு வளர அமெரிக்கா பெருமளவில் நிதியளிப்பதன் மூலம் உதவி புரிந்தது என்பது வேறொரு விஷயம்,  (எட்டாயிரம் மில்லியன் டாலர்கள் மற்றும் ஏழு ஆயிரம் டன் ஆயுதங்கள்).  அறிஞர் மஹ்மூத் மம்தானி தனது ‘நல்ல முஸ்லீம் கெட்ட முஸ்லீம்’ புத்தகம், சிஐஏ ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, அல் கொய்தாவை முடுக்கிவிட அமெரிக்கா செயல்பட்ட பொறிமுறையின் விவரங்கள் மற்றும், வாஷிங்டனில் அதன் நடைமுறைக்கான திட்டம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களைத் தருகிறது.

மேற்கு ஆசியாவில் அமெரிக்க கொள்கைகள், மேற்கு ஆசியாவின் எண்ணெய் செல்வத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள், அதையொட்டி ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஐ.எஸ் உருவாக்கம், முதலியன அல்கொய்தாவின் ஆபத்தான வீழ்ச்சிகளுக்கு வழிவகுத்தன. அமெரிக்காவின் துணைத் தலைவர் ஹிலாரி கிளிண்டன் ஒரு வெள்ளை அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அல்கொய்தாவை அமெரிக்கா எவ்வாறு முடுக்கிவிட்டது என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டி ஒப்புக் கொண்டார்.

அவர் கூறுகிறார், “இங்கே நினைவில் கொள்வோம்… இன்று நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்  நபர்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாம் நிதியளித்தோம்.” “… இந்த முஜாஹிதீன்களை பணிக்கமர்த்துவோம். வஹாபி பிராண்டான இஸ்லாத்தை இறக்குமதி செய்வதால் சோவியத் யூனியனை வெல்ல முடியும்.”

உலகளாவிய இஸ்லாமிய ‘அச்சுறுத்தலின்’ வேர்கள் அமெரிக்க சூழ்ச்சிகளில் உள்ளன. இந்தியாவில் இது முஸ்லிம்களுக்கு எதிராக நிலவும் தப்பெண்ணங்களுக்கு ஒரு கூடுதல் அம்சமாக வந்தது. ‘சமூக பொது அறிவு’-ன் இந்த தப்பெண்ணங்கள் பிரிட்டிஷ் அறிமுகப்படுத்திய வகுப்புவாத வரலாற்றில் அதன் வேர்களைக் கொண்டுள்ளன. இந்த முஸ்லீம் விரோத உணர்வுகளின் வேர்கள் பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களில் உள்ளன. இதன் பெருக்கம் பல்வேறு வழிமுறைகள் மூலம் நடந்தது, இதன் வேர்கள் வகுப்புவாத அமைப்புகளே, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., முஸ்லீம்களை ஆட்சியாளர்களாக முன்வைத்த வரலாற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் முஸ்லீம் லீக் தனது சொந்த பங்களிப்பை வழங்கியது.

ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் இந்து கோவில்களை அழிப்பதிலும், இஸ்லாத்தை வாள் முனையில் பரப்புவதிலும் முஸ்லிம் மன்னர்களின் செயல்கள் மற்றும்  அவ்ரங்கசீப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இளம் மனதைத் தூண்டுவதற்கான தளத்தை உருவாக்குகின்றன. இது சர்ஸ்வதி ஷிஷு மந்திர்கள் மற்றும் பல அமைப்புகளின் செயல்பாடுகள் இதற்கு மெருகூட்டின. இந்துக்களை பெருமைப்படுத்துவதற்கும் முஸ்லிம்களை அரக்கர்களாக்குவதற்கும் இவற்றோடு சேர்ந்த பல அமைப்புகள் முற்பட்டன.

படிக்க:
காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !
♦ இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்

இந்த இசுலாமிய வெறுப்பு 1980-களின் தசாப்தத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக தொடங்கப்பட்ட ரத யாத்திரைகள் மூலம் ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றது. ராம் பிறந்த இடத்தில் இருந்த ராமர் கோயிலை பாபரின் ஜெனரல் மிர் பாகி அழித்துவிட்டார் என்பது பிரச்சாரம். பாப்ரி மசூதி தொடர்பான சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் நல்ல பகுதி என்னவென்றால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியே மசூதிக்கு கீழே ஒரு ‘இஸ்லாமிய கட்டுமானமில்லாத வேறொரமைப்பு’ இருந்தது என்பதே. ஏ.எஸ்.ஐ அறிக்கையின்படி, இது ஒரு கோவில் அல்லது அது அழிக்கப்பட்டது அல்லது அது ராமர் பிறந்த இடம் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.

இந்த உண்மை அனைத்தும் வெளிவருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது, ஏனெனில் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பரவும் பொய்கள் சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்களைப் புரிந்துகொள்வதில் முக்கிய பகுதியாகும். எனவே இந்த வழியில் பாத்திமாவின் ஆசிரியர் அல்லது பாயல் தாத்வியின் சீனியர்களுக்கு தங்கள் முஸ்லீம் மாணவர்கள் அல்லது இளைய முஸ்லீம்-பழங்குடி சக ஊழியர்களைப் பிடிக்காமல் போனது பற்றிய நுட்பமான சமிக்ஞைகள் ஒரு விதத்திலும் விதிவிலக்கல்ல.

மக்களின் உணர்வை வடிவமைப்பதில் ஊடகத்தின் சக்தி எல்லையற்றது. காலனியாதிக்கத்திலிருந்து வியட்நாமை விடுவிக்கிறோம் என்ற போலிக் காரணத்தை கூறிக்கொண்டு  அமெரிக்கா வியட்நாமைத் தாக்கத் தொடங்கியபோது ஊடகங்களின் சக்தியின் தீவிரம் காணப்பட்டது, இது சுதந்திர உலகின் மீதான தாக்குதல். அமெரிக்காவின் ஏகாதிபத்திய அபிலாஷைகளுக்கு அமெரிக்க ஊடகங்கள் ‘சம்மதத்தைத் தயாரிக்கிறது’ என்று நோம் சாம்ஸ்கி சரியாகக் கூறுகிறார்.

இன்று உலகளாவிய இஸ்லாமியப் போபியாவைப் பரப்புவதில் அமெரிக்க ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவில் ஊடகங்கள் – அமெரிக்க ஊடகங்கள் – பரவி வருவதை மட்டுமல்லாமல்,  ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட சமூக ரீதியாகப் பிளவுபடுத்தும் பிரச்சாரங்களையும் பின்பற்றுவதில் கடந்த பல தசாப்தங்களாக பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளன.

பாத்திமா மற்றும் பாயல் ஆகியோரை அவமானங்களிலிருந்தும், அவர்களது சகாக்களாலேயே அவமதிக்கப்படுவதிலிருந்தும், தற்கொலைக்குத் தூண்டுப்படுவதிலிருந்தும், நாம் காக்க முடியுமா?  பாயல் மற்றும் பாத்திமா மரணம், பனிப்பாறையின் ஒரு முனையாக மட்டுமே இன்று தெரிகிறது! உலகளவில் ஊடகங்களின் நெறியை பாதிக்கும் வகையில் அமெரிக்க ஊடகங்கள் மேற்கொண்ட வெறுக்கத்தக்க பிரச்சாரங்களையும், இங்கே இந்து தேசியவாதிகளின் சூழ்ச்சிகளையும், எதிர்த்து இங்கே பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை.

இத்தகைய தப்பெண்ணங்கள் மற்றும் தவறான கருத்துக்களால் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ள வேண்டிய பாதிப்பு எல்லையற்றது. சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளுக்கு எதிராக, எங்கெங்கும் வளர்ந்துவரும் இத்தகைய பொய்யான வேட்கைகளை, எதிர்த்து முறியடிக்க நாம் நம்மை உயர்த்திக் கொள்வோமா?


மூர்த்தி
நன்றி : சப்ரங் இந்தியா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க