க்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று தருமபுரியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை வழக்கறிஞர் ஜானகிராமன் தலைமை தாங்கி நடத்தினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் வழக்கறிஞர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மேலும் வழக்கறிஞர் பொன் சேகர், விரிவாக கருத்துரையாற்றினார். இதில் மனித உரிமை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதில் வழக்கறிஞர் முரளி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை பற்றி விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய  பு.மா.இ.மு. தோழர் அன்பு, மாணவர்களின் உரிமைகளை பற்றி விளக்கிப் பேசினார்.

படிக்க:
♦ மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
♦ பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி

இறுதியாக கருத்துரையாற்றிய வழக்கறிஞர் பொன் சேகர் நாம் பெற்ற உரிமைகளின் வரலாற்று வழி வகைப்பட்ட வளர்ச்சி போக்கினையும், இன்றைய இந்திய சமுதாயத்தில் அதன் வளர்ச்சிப் போக்கு மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் தனது பேச்சில் விளக்கினார். மேலும் இன்றைய கட்டத்தில் பாசிசம் அதனுடைய அபாயப் போக்கு, உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கான தேவை, சட்டபூர்வமான உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பற்றியும் உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தருமபுரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க