ந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த மோடி அமித்ஷா கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக,  டெல்லி ஜாமியா மிலியா பல்கலை  தொடங்கி சென்னை பல்கலை வரையில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

டெல்லி ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலையில் போராடிய மாணவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதலை போலீசு கட்டவிழ்த்துவிட்டிருந்த நிலையிலும் இப்போராட்டங்கள் தொடர்கின்றன என்பது இங்கே கவனிக்கத்தக்கது. சென்னை பல்கலையில் இரண்டு நாட்களுக்கு மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாக பல்கலைக்கு ஜன-2 வரை விடுமுறை அறிவித்திருப்பதோடு, விடுதி மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : டிவிட்டரில் திடீர் முசுலீமாக மாறிய காவிகள் !
சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் !

சமூக அக்கறையின்றி வாட்சப் – பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.

கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக தங்களது கல்லூரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

முதல்நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் :

”ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய போலீஸ், ராணுவத்தை கண்டித்தும்; ஈழத்தமிழர்களை, இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்”  என்ற கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக முன்வைத்துள்ளனர்.

♦ ♦ ♦

”குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரிப்போம்” என்ற அறைகூவல் விடுத்து டிச-19 அன்று முதல் கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மற்றும் கோவை பகுதிகள்.

♦ ♦ ♦

மோடி அரசின் CAB-ஐ எதிர்த்து விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!

ந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் தேசிய குடியுரிமை சட்டம் கொண்டுவந்த மோடி அமித்ஷா அரசுக்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலைக்கழகம் என நாடு முழுக்க போராடக்கூடிய மாணவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய போலீஸ், ராணுவத்தை கண்டித்தும்.

ஈழத்தமிழர்களை, இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எனவும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று (19.12.2019) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CAB சட்டத்தை மோடி அரசு வாபஸ் பெறாவிட்டால் போராட்டங்களை மாணவர்கள் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என, மோடி எடப்பாடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

♦ ♦ ♦

திண்டிவனம்  அரசு கலைக் கல்லூரியில்  19.12.19 தேதி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், ஜாமியா, அலிகார் மற்றும் ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும். மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 


தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம் : 91593 51158.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க