பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து ’பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம்’ கட்டமைக்கப்பட்டு அதன் தலைமையில் “குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ரத்து செய்!” என்ற தலைப்பில் 28.12.2019 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரம் அம்பேத்கர் சிலையிலிருந்து பேருந்து நிறுத்தம்வரை பேரணியும் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த பேரணியை வி.சி.க.-வின் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொறியாளர் கருப்பண்ணன் துவங்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துகுமார் தலைமைதாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் எழில், சிபிஎம் கட்சியின் பென்னாகரம் நகர செயலாளர் தோழர் வெள்ளியங்கிரி, விசிக தோழர் கருப்பண்ணன், மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜானகிராமன், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் திரு முகமது அலி முதலியோர் இந்நிகழ்வில் கண்டன உரையாற்றினர்.

படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
♦ “என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் என சுமார் 600 பேர் கலந்துகொண்டனர்.

முதலில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு போலிசு பாதுகாப்பு தரமுடியாது, 30(2) சட்டம் நடைமுறையில் உள்ளது என்ற காரணத்தை கூறி அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதை அறிந்ததும் போலிசு; பேரணியை கைவிட்டு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திக்கொள்ளுங்கள் அனுமதி தருகிறோம் என்று கேட்டுக்கொண்டது. எனினும் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கதினர் தடையை மீறி பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்டதில் போராட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியதும், இதில் திரளான அளவில் முஸ்லீம் சமூக மக்கள் கலந்துகொண்டதும் பென்னாகரம் மக்களை கவர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என்று கூட்டியக்கம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க