ந்த ரூபத்தில் இனிப்பு சுவை எடுத்தாலும், உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள்
கூடும் … கூடும் … கூடும் …

நாட்டு சர்க்கரை டீ வாங்கி பருகினால் சர்க்கரை ஏறாது என்று நம்பிக்கொண்டிருக்காமல் இனிப்பு ஏதுமில்லாமல் டீ/ காபி அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நான் கடந்த நான்கு ஆண்டுகளாக டீ / காபியில் சீனி/ சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி/ தேன் / பனங்கற்கண்டு எதுவும் போடாமல் பருகிவருகிறேன். என்னால் முடிந்தது, உங்களாலும் முடியும்.

Hba1c எனும் மூன்று மாத சர்க்கரை அளவுகளை அதன் கட்டுக்குள் வைத்திருக்க இது போன்ற எளிய நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. சில மாத்திரைகள் ஏ1சி அளவுகளை மூன்று மாதங்களில் 0.5 முதல் 1 கிராம் அளவு குறைக்கின்றன
என்று ஆய்வு செய்யப்பட்டு சந்தைக்கு வருகின்றன.

ஆனால் அதே 1கிராம் A1c ஐ நம்மால் இந்த எளிய சிறு நடவடிக்கை மாற்றம் மூலம் செய்ய முடியும். இன்று முதல் டீ/ காபிக்கு சீனி முதலிய எந்த இனிப்பையும் போடுவதில்லை என்று முடிவு செய்து பின்பற்றுவோம்.

நீரிழிவு / ரத்த கொதிப்பு உள்ள நோயர்கள் அடிக்கடி பால் டீ/ காபி அருந்துவதை தவிர்ப்பது சிறந்தது. காரணம் பாலில் உள்ள லேக்டோஸ் எனும் மாவுச்சத்து
நமது ஜீரண மண்டலத்தால் க்ளூகோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைக்கப்படும் Lactose in milk = galactose + glucose இந்த க்ளூகோஸ் ரத்தத்தில் கலந்ததும்
நமது கணையம் இன்சுலினை வெளியிட்டாக வேண்டும்.

டைப் டூ / டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள், ரத்த கொதிப்பு நோயாளிகள் (hypertension) மெடபாலிக் சிண்ட்ரோம் (syndrome X) இருப்பவர்கள் உடல் பருமனாக (obesity) இருப்பவர்கள் PCOD (polycystic ovarian disease) கருமுட்டை நீர்க்கட்டி நோய் மேற்சொன்ன அனைவருக்கும் கீழ் உள்ள முதல் அல்லது இரண்டு அல்லது இரண்டும் சேர்ந்த குறைபாடு இருக்கும்.

படிக்க :
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

ஒன்று, க்ளூகோஸ் உள்ளே வந்தால் கணையம் சுரக்க வேண்டிய இன்சுலினை முறையாக சுரக்காமல் போவது.. ஒன்று தேவைக்கு மீறி சுரப்பது அல்லது தேவைக்கும் குறைவாக சுரப்பது.

இரண்டு, சுரக்கப்பட்ட இன்சுலின் நமது செல்களில், தசைகளில், கல்லீரலில் முறையாக தனது பணியை செய்யாமல் போவது. இதை Insulin resistance என்கிறோம்.

இத்தகைய பிரச்சினைகளை நமது ரத்தத்தில் க்ளூகோஸ் கலக்கும் போதெல்லாம் நமது உடல் சந்திக்கும். எனவே, பால் பருகுவதை மேற்சொன்ன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. முடியாதபட்சத்தில் ஒருநாளைய ஒட்டுமொத்த பால் கொள்முதலை 200 மில்லி என்ற அளவில் நிர்ணயம் செய்து அதையும் ஒரே வேளையில் எடுப்பது சிறந்தது.

பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது. அதிலும் அரைச்சீனி / கால் சீனி / முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும் என்பதை பதிவு செய்கிறேன்.

முடிவுரை: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க இரண்டு வழிகள் உள்ளன.

முதலாவது பாதை – மருந்துகளின் மூலம் குறைப்பது. இந்த வழியில் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப மருந்துகள் கூடும்.

இரண்டாவது பாதை – உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் குறைப்பது. இதில் பேலியோ உணவு முறை சிறந்தது. இந்த வழியில் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப மருந்துகள் குறையும்.

இரண்டில் எந்தப்பாதையில் நாம் இருக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம். உலகத்தில் நம்மீது துளி இரக்கம் காட்ட விரும்பாத எதிரி கூட ஏதோ ஒரு நொடியில் நமக்காக இரக்கம் காட்டக்கூடும்.

ஆனால், இரக்கம் என்பதே சிறிதும் அறியாத இரு நோய்கள் உள்ளன. அவை
நீரிழிவும், ரத்த கொதிப்பும். இவை இரண்டையும் மருந்து மூலமாகவும் உணவுக் கட்டுப்பாட்டு மூலமாகவும் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்..

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.