எம்புள்ளைய விரட்டிட்டீங்களே !

டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது துர்கா. இப்போ அஞ்சாவது படிக்குது. ஆனா ஆறாவது படிச்சிருக்கணும். மொத வகுப்பு சேர்ந்ததிலிருந்தே டிசம்பர் கடைசியில துர்காவோட அப்பா அம்மா அத கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய்டுவாங்க வீட்ல பாத்துக்க ஆளில்லாததால.”நம்ம பள்ளி விடுதியோடு இணைஞ்சது, இங்கயே விட்டுட்டுப் போங்க”னு சொல்லி எவ்ளோ கூப்பாடு போட்டாலும் அவுங்கக் கேட்டதேயில்ல.

டிசம்பர் மாசம் கடைசியில போய் ஏப்ரல் மாசம் யுகாதி சமயம் வருவாங்க. கேரளாவுல இருந்து வந்ததும் அதுவே பள்ளிக்கூடத்துக்கு வந்துடும்… இல்லேனா போய்ட்டுக் கூப்டு வந்துருவேன். நாலாவது படிக்கும்போது (போனவருசம்) என்னனு தெர்ல… அவுங்க அப்பா அம்மா கூட கேரளாவிக்கு மிளகு எடுக்கப் போகல அது. ரொம்ப ஷாக்கிங்காதான் இருந்தது. “ஏன் மா இந்த வருசம் போகாமவிட்டுட்ட”னு கேட்டதுக்கு “படிக்கணும் மிஸ்”னு சொன்னிச்சி. அவ்ளோ சந்தோசமா இருந்துச்சி.

இந்தக் கல்வியாண்டின் அரையாண்டு லீவுக்குக்கூட நான் வீட்டுக்குப் போகல. காரணம் பள்ளியில கொஞ்சம் வேல பாக்கி இருந்துச்சி & எலெக்ஷன் டியூட்டி. 24-ம் தேதி பள்ளிக்கூடத்துக்கு வந்து என்கூடவே இருந்துச்சி. துர்கா மட்டுமில்ல… டேஸ்காலர்ஸ்(13) எல்லாருமே!

படிக்க :
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்
♦ வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது !

“மிஸ்….காலையில 6-மணி பஸ்க்கு துர்கா அவங்க அப்பாம்மா கூட கேரளா போயிடிச்சி”னு மத்த புள்ளைக அடுத்தநாள் (25-ம் தேதி) சொல்றாங்க.
“போனவருசம் போகலியே.. இந்த வருசம் ஏன் திடீர்னு கிளம்பிப் போச்சி? நேத்துக் கூட வந்துச்சி… ஒரு வார்த்தக் கூட சொல்லலியே”னு கேட்டதுக்கு.

“மிஸ்… இந்த வருசம் அஞ்சாவதுக்கு பப்ளிக் எக்ஸாம் வைக்கிறாங்கல்ல… அதுக்கு பயமா இருக்குதாம்… அதான் போயிடிச்சாம்”னு மத்த புள்ளைக சொன்னபோது… “ஐயோ…..துர்கா” எனக்கத்தி வாய்விட்டுக் கதறி அழத் தோனிச்சி.

“எதுக்கும் பயப்படாதீங்கமா… அதெல்லாம் சும்மா… சாதாரண டெஸ்ட் மாதிரிதான்”னு நான் சொல்லியும் நீங்க அரசாணை போட்டு, டிவிலயும், பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியர் மூலமும், மத்த ஆசிரியர்கள் மூலமும் தெரியப்படுத்திய பொதுத்தேர்வு என்ற வார்த்தை, எம்புள்ளைக்குப் பயத்தைக்கூட்டி, பள்ளியைவிட்டுக் கேரளாவுக்குத் தொரத்தியிருக்கு.

துர்கா மட்டுமில்ல… ஆனந்தன், சிவா, அஜீத் இவங்க எல்லோருமே கேரளாவுக்குப் போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குத் திரும்ப வராம நின்னுபோனவங்க.
அவங்கள தொரத்தி, தொரத்திப் புடிச்சிப் பார்த்தும் தோத்துப் போய் நிக்குறேன். இதுல துர்கா மட்டும்தான் வந்துகிட்டிருந்துச்சி. இப்போ அந்தப் புள்ளைய நான் என்ன சொல்லி வரவைக்கிறதுனு தெர்லியே…

“வாழ்வாதாரம் தேடி நாலஞ்சு மாசத்துக்குக் கேரளாவுக்குப் போற பெத்தவங்க தம்புள்ளைகளையும் சேர்த்தே கூப்பிட்டுட்டுப் போயிட்றாங்க. அதனால அவுங்களுக்கு இங்கயே எதாவது ஒரு நிரந்தரமான வேல வேணும்; அதுக்காக ஒரு மினி தொழிற்சாலை (இந்த மலையில் பருவகாலத்திற்கேற்ப விளையும் பயிர்களை அடிப்படையாகக் கொண்டு) ஒன்ன உருவாக்கினா… அவுக இங்கேயே இருப்பாங்க… புள்ளைகளோட படிப்பும் கெடாது”னும்…. இல்லேனா… “கேரள அரசுக்கிட்ட பேசி, பெரிய பெரிய மிளகுத் தோட்டத்துக்கு மிளகு எடுக்க வர்றவங்க யாரும் 6-14 வயசு இருக்கிற குழந்தைகளைக் கூட்டிட்டு வரக்கூடாது; அப்படி வந்தா இங்க வேல கிடையாதுனு சொல்லச்சொல்லுங்க”னும் State Planing Commission, UNICEF,  Child Rights Commission and Collectorate வரை கத்திட்டேன் 2015-லிருந்து. ஆனா இதுநாள் வரை அதுக்கான எந்த நடவடிக்கையும் யாருமே எடுக்கல. இந்த மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கபபடும் நிதி கொஞ்ச நஞ்சமல்ல… அதெல்லாம் இறுதியில் என்ன ஆகிறது என்று கூடத் தெரிவதில்லை.

இந்த மலையிலுள்ள 372-க்கும் (தி.மலை) மேற்பட்ட வாழ்விடப்பகுதிகளிலுள்ள 100 பள்ளிகளிலிருந்தும் ஒவ்வோராண்டும் குழந்தைகள் கேரளாவுக்குப் போய்க்கிட்டேதான் இருக்காங்க. இதைத் தடுப்பதற்கான வழியை இந்த அரசு ஒருபோதும் சொல்லாது… இவர்களே நிரந்தர கேரள மிளகெடுப்பவர்களாக மாற்றும் முயற்சியைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது.

வாழ்த்துகள் தமிழக அரசே!

குறிப்பு: துர்காவின் ஃபோட்டோ இதில்தான் தெளிவாக இருந்தது.

நன்றி : ஃபேஸ்புக்கில் மகாலெட்சுமி

இதையும் பாருங்கள் :

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க