“செபாஸ்டியன் அன் சன்ஸ் : மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கடந்த 02.02.2020 அன்று ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நூலின் ஆசிரியர் டி.எம். கிருஷ்ணா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தொல். திருமாவளவன் மற்றும் திரு. ராஜ்மோகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வின் வீடியோக்கள்.
மிருதங்கம் படைப்போரின் சமூக வரலாறு !
“செபாஸ்டியன் அன் சன்ஸ்: மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு” என்பது டி.எம்.கிருஷ்ணாவின் புதிய நூல். கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக பயன்படுத்தப்படும் தாளக்கருவி மிருதங்கம். அதைத் தயாரிப்பவர்களின் வரலாற்றையும், அவர்களுக்கும் மிருதங்கம் வாசிப்போருக்கும் இடையிலான உறவையும் சமூக – வரலாற்றுப் பின்னணியுடன் உணர்த்தும் இந்த நூலின் வெளியீட்டு விழாவின் சுருக்கப்பட்ட காணொளி பதிவு !
படிக்க:
♦ கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா
♦ எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை
மிருதங்கத்திற்கே இந்த நிலை என்றால் பறைக்கு ?
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தொல் திருமாவளவன் அவர்கள் பேசுகையில், நூல் ஆசிரியர் டி.எம். கிருஷ்ணா அவர்களின் முயற்சியைப் பாராட்டியும். இசைக் கலைஞருக்கும், இசைக் கருவியை உருவாக்கித் தருபவர்களுக்கும் இடையிலான சமூக இடைவெளியைப் பேசும் இந்நூல், ஒரு சமூக வரலாற்றையும் சேர்த்தே பேசுகிறது. என்றும்.
மேலும் இன்றளவும் பறை என்பது இழிவாகப் பார்க்கப்படும் சமூக அவலத்தையும் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார் தொல். திருமாவளவன்.
திருமாவளவனை ஏன் அழைத்தீர்கள் ? | கேள்வி பதில்
“செபாஸ்டியன் அண்டு சன்ஸ்” நூல் வெளியீட்டு விழா ஏற்கனவே கலாக்ஷேத்ராவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்து பத்திரிக்கையில் இந்நிகழ்வு குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து. கலாக்ஷேத்ரா அனுமதியை இரத்து செய்தது. அதற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அழைக்கப்பட்டது தான் என பேசப்பட்டது.
அது குறித்து, கேள்வி – பதில் நிக்ழச்சியை ஒருங்கிணைத்த கவிதா முரளிதரன் அவர்களின் கேள்விகளுக்கு தொல். திருமாவளவன் பதில் அளித்துள்ளார் !
அனைத்து காணொளிகளையும் பகிருங்கள் !
தொகுப்பு: